அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன் கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில் மோதிப் படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமல்ல, கோமாநிலைக்கு சென்றவர்களும் உண்டு என்று போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தின் சிறிய ஒழுங்கைகளில் கட்டாக்காலி நாய்கள் பெருகிவிட்டன. காலை வேளைகளில் எல்லாச் சிறிய தெருக்களிலும் நாயின் கழிவுகளைக் காணலாம். எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை திருநெல்வேலி பகுதியி…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
மகிந்த சிந்தனை வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் இராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. * அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் மோசடிக்கு இடம் ஏற்படும் * மாகாணசபை முறையை இந்தியா திணிக்கவில்லை *பண்டாரநாயக்க காலத்திலிருந்து விவாதிக்கப்பட்ட விடயம் அதிகாரப் பகிர்வு * மாகாண சபையை ஒழிப்பதால் சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கும் தவறான செய்தியாகிவிடும் * மகிந்த சிந்தனையில் அளித்த வாக்குதியை நிறைவேற்றுகஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் மக்களின் இறைமையின் செயற்பாடானது பிரிக்கப்பட்டுவிட்டது. அது நாடாளுமன்றத்துக்…
-
- 1 reply
- 570 views
-
-
யாழ்பாண அரசாங்க அதிபர், யாழ்பாணத்திற்கு உடனடித் தேவையாக, 5,500 மெற்றிக்தொன் உணவு மற்றும், அத்தியவசிய தேவைகள் தேவைப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார்! ஆனால், மகிந்த அரசு, மிகவும் அதைத் தாமதித்து, 4,5 நாட்கள் கழிந்த பின்னர், ஒரு கப்பலில், பொருட்களை அனுப்புவதாக வேண்டா,வெறுப்பாகச் செய்தது. அதுவும், சாமான் ஏத்துவதற்கு முன், மகிந்த தொடங்கி, அடிமட்ட, டக்ளஸ் வரைக்கும் படம் எடுப்பதற்காக 2 நாட்கள் தாமதம் செய்து தான் பொருட்கள் அனுப்பப்பட்டன! அந்தப் கப்பலில், 3500 தொன், அனுப்புவதாக கிட்டத்தட்ட, அமீர்அலி பிபிசிக்குச் சொன்னார். "அரசாங்க அதிபர் சொன்னதில் 85 அனுப்புகின்றேன் என்று!.அது சுத்தப் பொய்! அதில் கப்பலில் வெறும், 1500 தொன் வரை தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ? யதீந்திரா தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால் மகிந்த தரப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. கிடைக்கும் தகவல்களின்படி அது இலகுவான ஒன்றல்ல ஆனால் மகிந்த தரப்பு தனது முழு ஆற்றலையும் வளங்களையும் பயன்படுத்தி, தங்களின் வெற்றியை எந்தளவிற்கு பெருப்பிக்க முடியுமோ அந்தளவிற்கு பெருப்பிக்கவே முயற்சிக்கும். பொதுவாக ஒன்றின் பலம் என்பது பிறிதொன்றின் பலவீனத்தில்தான் தங்கியிருக்கின்றது. அரசியலில் ஒவ்வொரு விடயத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். மகிந்தவின் வெற…
-
- 0 replies
- 391 views
-
-
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன் 07/13/2015 இனியொரு இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி தலைகீழாக மாறிப் போனது. யாருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கையகப்படுத்தினாரோ அவரையே பிரதம மந்திரியாக்க மைத்திரி முன் நிற்கிறார். மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகப் பதவிவகித்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் புற்றுக்குள்ளிருந்து கிளம்பிய மைத்திரிபால சிரிசேன இப்போது 180 பாகையில் திரும்பி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையு ம் பாதுகாத்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு பச்சைகொடி காட்டியுள்ளார். இலங்கையை ஒட்டச் சுரண்டிய மகிந்த ராஜபக்சவுக்கும் அ…
-
- 0 replies
- 294 views
-
-
மகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஏன் போனது? உலகிலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற – அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம் தான்…” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இலங்கைத் தீவில் இப்பொழுது நாடாளுமன்றம் இல்லை. மாகாணசபைகள் இல்லை. இருப்பதெல்லாம் உள்ளூராட்சி சபைகள் தான். ஆனால் அவற்றுக்கு கோவிட்- 19 இற்குக் கீழான புதிய நிலைமைகளை கையாள்வதற்கு வேண்டிய அதிகாரங்கள் இல்லை. குறைந்தபட்சம் ஒரு அவசரகால நடவடிக்கையாக நிவாரண பொறிமுறை ஒன்றை உருவாக்க கூட அதிகாரம் இல்லை. நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி உண்டு. அவர…
-
- 1 reply
- 476 views
-
-
மகிந்த ராஜபக்ஷவும் அவர் வெளிக் கிளப்பும் வெள்ளை யானைகளும் - - வி.ஏ.கே.ஹரேந்திரன் 30 மார்ச் 2013 சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் சொந்த கிராமமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மத்தல பிரதேசத்தில் சீனாவின் நிதியுதவியுடன் பன்னாட்டு விமான நிலையமொன்று திறக்கப்பட்ட செய்தியே கடந்த வாரத்தில் இலங்கை நாளிதழ்களில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. இந்த விமான நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ஷ, சர்வதேசத்திற்கு மற்றுமொரு கதவு திறக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். எனினும், இந்த விமான நிலையத்தின் ஊடாக குறைந்தது அடுத்த 20 வருடங்களுக்கேனும் வருமானம் ஈட்ட முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கடிந்துகொண்டுள்ளனர். ஐ.நா., சர்வதேச அழுத்தம் எனக் கூறி இனவாதத்திலும் அபிவி…
-
- 1 reply
- 670 views
-
-
மகிந்த ராஜபக்ஸவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்... 30 செப்டம்பர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸ்வரி... வடமாகாண சபைக்கான போனஸ் ஆசன இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பின்புதான் இந்த மகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று மன்னாரில் போட்டியிட்ட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு என்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி முடிவாகி உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதே. மன்னாரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அயூப் அஸ்மிக்கு இந்த ஆசனம் கிடைத்துள்ளது. இனத்துவ முரண்பாடுகள் நிலவும் நாடுகளில் முதலாவது பெரும்பான்மைத் தேசிய இன ஆட்சியாளர்கள் இரண்டாவத…
-
- 1 reply
- 780 views
-
-
மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!! பதிவேற்றிய காலம்: Apr 11, 2019 கூட்டமைப்பு அரசைப் பாதுகாப்பதாகவும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதையுமே செய்வதில்லையெனவும் முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ச. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார்? என்பதை அவர் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. தமிழர்களுக்கு எதையும் வழங்கி விடக்கூடாது என்பதில் மகிந்த தீவிரமாக உள்ளார். புதிய அரசமைப்பின் உருவாக்கம் அடிப்பட்டுப் போனதற்கும் இவரே முதன்மைக் காரணம். இத்தகைய ஒருவர் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்த வழியில் தான் கோத்தாவின் பயணம்!! மகிந்த வழியில் தான் கோத்தாவின் பயணம்!! சமீப நாள்களாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும், அரச தலைவர் பதவியையும் இணைத்து செய்திகள் வௌிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்த அரச தலைவருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோத்தபாயவும் இந்தத் தகவல்களை மறுக்கவில்லை…
-
- 0 replies
- 483 views
-
-
மகிந்தருக்கு தமிழீழம் குடுக்கத்தான் விருப்பம்? கையிலிருந்த நாளிதழை வாசிக்கத் தொடங்கினான் சின்னத்தம்பி. 13ஐ கடக்க கூடாது என்று மகிந்தர் சொல்லியிருக்கிறார் பாத்தியளே புதினத்தை என்றபடி இரத்தினத்தாரின் முக்கத்தைப் பார்த்தான் சின்னத்தம்பி. உது என்னடா புதினம்? மகிந்தர் எதைக் குடுக்கச் சொன்னவர் எண்டு பார் அதுதான் புதினம் என்றார் கந்தையா. எதும் குடுக்கச் சொன்னவரோ என்றபடி உற்றுப் பார்த்தது ஆலமரம். உவர்தானே 13 பிளஸ் எண்டு கதைச்சுக் கொண்டு எல்லாத்தையும் செய்தவர். பிறகென்ன 13ஐ கடக்கக்கூடாது எண்டுறார் என்றார் இரத்தினத்தார். உவரின்டை பிளான் ஒண்டையும் குடுக்கக்கூடாது எண்டதுதான். சும்மா பதின்மூன்று பதின்று பிளஸ் பிளஸ் எண்டு எங்கடை சனங்களை இனப்படுகொலை செய்…
-
- 0 replies
- 743 views
-
-
-
மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா? முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது. சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதி…
-
- 0 replies
- 475 views
-
-
மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழுOCT 25, 2015 பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை: http://groundviews.org/wp-content/uploads/2015/10/14-August-final-version-edited-on-30.9.15.pdf முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம். உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை, மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே கையளிக்கப்பட்டது. இதுவரை அது வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பரணகம ஆணைக்குழுவின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று…
-
- 0 replies
- 992 views
-
-
மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும்! – பனங்காட்டான் October 4, 2020 பனங்காட்டான் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை முழுமையாக பகிஷ்கரித்த சுமந்திரன், இதனை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இல்லையென்று கூறி அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் தமிழர் தேசத்தில் ‘சுமந்திரன் நீக்க அரசியல்’ மேலோங்கி வருகிறது. ————————————- இந்த வாரமென்பது இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் பரந்துபட்ட பல விடயங்களைக் கொண்டதாக அமைந்திருந…
-
- 0 replies
- 450 views
-
-
மகிந்தவின் பொறிக்குள் தமிழ் தலைவர்களும் விக்னேஸ்வரனும் சிக்குவார்களா? 10 அக்டோபர் 2013 ராஜதந்திரத்தில் வெல்வார்களா? பாவம் மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸவரி இலட்சக்கணக்கான தமிழ் மக்களினதும், ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களினும் ஒன்றுமே இல்லாத மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி என்பது தமிழரசுக் கட்சியின் தனித்த வெற்றியோ, இரா சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியோ, சீ.வீ விக்னேஸ்வரன் என்ற முன்னாள் நீதியரசரின் நீதிக்கு 132000 விருப்பு வாக்குகளுடன் கிடைத்த வெற்றியோ அல்லது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தனிப்பட்ட கட்சிகளின் அவர்களின் தலைவர்களின் செல்வாக்கிற்கோ கிடைத…
-
- 0 replies
- 744 views
-
-
மகிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா? யதீந்திரா ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்றுநோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பான அச்சுறுத்தலிலிருந்து புதிய அரசாங்கத்தால் எந்த வகையிலும் விடுபட முடியவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாதவொரு சூழல் தெற்கின் அரசியல் அரங்கில் வெளிப்படையாகவே தெரிகிறது. மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்றபோதும் அவரது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை. கட்சியின் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவுடனேயே இருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தி…
-
- 0 replies
- 549 views
-
-
மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றத் துடிக்கும் அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு மட்டும் கொடிகட்டி பறக்கும்: பாவம் மக்கள்.. - நடராஜா குருபரன்- 13 டிசம்பர் 2014 “முதலில் சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் வேண்டும் விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏன் ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கும் அது அவசியம்” என வடக்கு ஊடகவியலாளர்களை அண்மையில் கொழும்பில் சந்தித்த ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இங்கே அவரை உதாரணத்திற்கு எடுப்பதனால் அவர் உத்தமர் என அர்த்தப்படாது... அவர் சொன்ன கருத்தை இங்கு குறிப்பிட்டேன்... இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னிருந்து கடந்த 67 ஆண்டு கால வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களோ, அல்லது ஆட்சி அமைத்த ஆளும் கூட்டணிகளோ, …
-
- 0 replies
- 775 views
-
-
மகிந்தவை எதிர்த்த... அம்மாக்களும், அன்னை பூபதியும்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன தமிழ் அரசியலில் அம்முதிய அம்மாக்களுக்கு முன்னோடியாகக் கருத்தத்தக்கவர் அன்னை பூபதியாகும். முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அன்னை பூபதி சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஈழப்போர் வரலாற்றில் அவருக்கென்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. அவர் ஒரு ஆயுதப் போராளி இல்லை. எனினும் தன் உயிரைத் துறக்கத் தயாராகி சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருந்த முதல் ஈழத்தமி…
-
- 0 replies
- 610 views
-
-
-
- 0 replies
- 572 views
-
-
கொமன்வெல்த் அமைப்பின் தலைவரால், கொமன்வெல்த் நாள் நிகழ்விலோ, கொமன்வெல்த் போட்டிகளிலோ பங்கேற்க முடியாது போனது இதுவே முதல்முறை என்று - சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் கார்வண்ணன். ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதம், இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. சிறிலங்கா அதிபருக்கு எதிரான, புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்க, பிரித்தானிய அரசாங்கம் தவிறிவிட்டதாக, அதில் காரணம் கூறப்பட்டிருந்…
-
- 0 replies
- 652 views
-
-
அன்புள்ள மகிந்தா மாமாவுக்கு, நான் கடிக்க மிளகாய் எழுதிக்கொள்வது, அவசர அலுவலாக வெளியூர் சென்றிருந்தததால் சில மாதங்களாக அரசியல் அலசல்களில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் தற்போதைய உங்களின் நிலை குறித்து வேதனையடைந்த நான் சில ஆலோசனைகளை கூறிவிடலாம் என நினைக்கின்றேன். எனது ஆலோசனை என்பது உங்களை சுற்றி இருப்பவர்கள் கூறுவதுபோல குரங்குவால் போல் நீண்டு செல்லாது. இந்த பத்தியின் முடிவில் ஒரு வரியில் எனது ஆலோசனை இருக்கும். அதனை பார்த்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையால் நீங்களும், உங்களை சுற்றியுள்ளவர்களும் வெகுவாக ஆடிப்போய்விட்டிர்கள் என்பதை உங்களின் நடவடிக்கைகளில் இருந்து அறிந்…
-
- 2 replies
- 1.7k views
-
-
மகிந்தாவாதிகளின் இடைக்கால அரசாங்க இடைச்செருகல் ஏன்? Prem இலங்கைஅரசியல்வாதிகளிடம் இருந்து தினசரி ஏதாவது செய்திகள் கிட்டத்தான் செய்கின்றன. அந்தவரிசையில் இடைக்காலஅரசாங்கத்தை அமைக்கும்முயற்சி என்ற புதிய செய்தி கிட்டியிருக்கிறது. மகிந்தாவாதிகளின் முக்கியமுகமும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்காதான் இந்தஇடைக்கால அரசாங்கம் என்ற இடைச்செருகலை நேற்று செய்திருந்தார். கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு தோரணமாம் தோரணத்தில் ஒரு தொங்கட்டானாம் என்ற பாணியில் அவரது பட்டியல்கள் போடப்பட்டன. அரசாங்கம் சமர்ப்பிக்கும் வரவு - செலவுத்திட்டம் எனப்படும் பாதீட்டை தோற்கடிப்பது. அதன்பின்னர் தமது அணியின் தலைமையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உதவியுடன் இடைக்காலஅரச…
-
- 0 replies
- 525 views
-
-
-
- 1 reply
- 823 views
-
-
மகிந்தாவுக்காக பேசும் மகாசங்கம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-11
-
- 1 reply
- 335 views
-