அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
விரைவான தீர்வுதான் தமிழர்களின் தேவை இனப் பிரச்சினைக்கு நடப்பு ஆண்டுக்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளமை தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கொழும்பு அரசு மற்றும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகத்திடம் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத் தக்கது. கூட்டரசிடம் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாகவே இழக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகளாகக் கருதப…
-
- 0 replies
- 397 views
-
-
அண்டை நாடுமுதல், சர்வதேச சமூகம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்துவருவது அதிகரித்து வருகின்றது. அதற்காக இலங்கைஅரசு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, தமிழ்மக்களை விட அதிகமாக உழைத்துவருவதையே இத்தடைகள் காட்டுகின்றது. இத்தடை, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஒரு பெரும்பின்னடைவாக பெரும்பாலான "மாற்றுக்கருத்தை" கொண்டவர்கள் பிதற்றிவருகின்றனர். இதைப்பற்றி நாம் வேறுஒரு கட்டத்தில் பார்ப்போம். இப்படிப்பட்ட ஒரு சுழ்நிலையில், தனித்தமிழ்நாட்டுக்கோரிக்கை சாத்தியமா? சர்வதேச சட்டங்களின் படி இவ்வகை தனிநாட்டுக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால் அதெற்கென ஒரு நடைமுறைகள் இருக்கின்றன. இங்கே இரண்டுவகையான சுதந்திரப்பிரகடனம் இருக்கின்றது. 1. இருபகுதியினர் சம்மதத்துடன் பிரிந்து தனிந…
-
- 11 replies
- 3.1k views
-
-
விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தீர்வு வரலாம், வராமலும் போகலாம்” என்று கூறுகின்ற நிலைக்கு இப்போது வந்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கையில் தான், அவர் அந்தக் காலக்கெடுவை முன்வைத்திருந்தார். ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்துத்தான், அந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. ஆனாலும் கூட, இரா.…
-
- 0 replies
- 353 views
-
-
விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி? கே. சஞ்சயன் / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:20 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தைப் பிற்போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்த போது, ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தார், இந்தியா சென்றுவிட்டு அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோதே, அந்தத் தாக்குதல்கள் நடந்திருந்தன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதையடுத்து இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நாடு திரும்ப…
-
- 2 replies
- 778 views
-
-
விலகிவரும் புறச்சூழல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப்பெறும் நேரமும் காலமும் நெருங்கியுள்ளதாக கனவு காணப்படுகிறது. ஆனால் அதற்கான அகச்சூழ்நிலையும் புறச்சூழ்நிலையும் நாளுக்கு நாள் விலத்திக்கொண்டு போவதைப்போன்ற ஒரு பிரமையே இப்பொழுது முன்நிற்கின்றது. ஒற்றையாட்சியென்ற நிலையிலிருந்து அரசாங்கம் மாறக்கூடாது, என்று கூறும் கடும் போக்காளர்களின் பிடி இறுகிக்கொண்டிருக்கிறது. இன்னுமொரு புறம், வட– கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறும் இன்னுமொரு தரப்பினர். இதற்கு நடுவில் இடைக்கால அறிக்கை அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் இடைக்கால அறிக்கை தொடர் பில் தமிழ் மக…
-
- 0 replies
- 595 views
-
-
விலகுமா கூட்டமைப்பு? - கே.சஞ்சயன் மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல் இருந்தால்தான், அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம். அத்தகைய குழப்பங்களையும் தாண்டி, சில ஆக்கபூர்வமான விடயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு தருணத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தெளிவானதும் தீர்க்கமானதுமான முடிவுகளை எ…
-
- 0 replies
- 527 views
-
-
வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் - முகம்மது தம்பி மரைக்கார் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது. முப்படையினர் ஊடாகவும் பொதுமக்களின் காணிகளை அரசு அபகரித்துக் கொள்கிறது. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்தானை எனும் இடத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் விவசாயக் காணிகளை, தொல்பொருளியல் திணைக்களம் வளைத்துப் போட்டது. இந்த நிலையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துக் கொண…
-
- 0 replies
- 414 views
-
-
வில்பத்து விவகாரம்: சர்ச்சையே அரசாங்கத்துக்கு சாதகம் வில்பத்து பிரதேசத்தில் வில்பத்து தேசிய வனத்துக்கு வடக்கே நான்கு பிரதேசங்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதிகாரிகளும் எவ்வளவு அவசரப்பட்டார்கள் என்றால், ஜனாதிபதியின் அண்மைய ரஷ்ய விஜயத்தின் போது, மொஸ்கோ நகரத்தில் வைத்துத்தான் அதற்குரிய வர்த்தமானிஅறிவித்தலில் கையொப்பமிட்டார். ஜனாதிபதி நாடு திரும்பும் வரையாவது அதற்காக அவர்களுக்கு பொறுத்திருக்க முடியவில்லை. இந்த வர்த்தமானியைக் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதிக்கும் அதிகாரிகளுக்கும் இவ்வளவு அவசரம் இருந்தது ஏன்? ஜனாதிபதி ரஷ்யாவில் குடியேறப் போகவில்லையே? அவர் நாடு திரும்பும் வரை காத்திருக்க ஏன் முடிய…
-
- 0 replies
- 527 views
-
-
பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்டோர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடக்கிறது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
- 1 reply
- 459 views
- 1 follower
-
-
விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்? Getty Images விளாதிமிர் புதின் ``புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.'' ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கை ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், மேலும் இரண்டு முறை தலா ஆறாண்டு காலம் பதவி வகிக்கும் வகையிலான சட்ட திருத்தத்திற்கான நாடுதழுவிய கருத்தறியும் வாக்கெடுப்பில் அது வெளிப்படும் என்று தெரிகிறது. …
-
- 1 reply
- 771 views
-
-
விளையாட்டு வீரனும் ஒரு கலைஞனும்-பா.உதயன் துன்பமும் துயரமும் நிறைந்த ஒரு மக்களின் வாழ்வை புரிந்துகொள்ளாதவன் ஒரு கலைஞனாக இருக்க முடியுமா என்ற கோள்வி எழுவது நியாயமே. ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தில் வாழும் ஒரு சிறு பான்மை இனத் தாய்மார்கள் தொலைந்துபோன தம் பிள்ளைகளை தேடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஓர் தாயின் அவலத்தை புரிந்து கொள்ளாதவன் மானிடத்தின் மதிப்பை உணராதவனாக ஒரு கலைஞனாக இருக்க முடியுமா.கலைஞன் என்பவன் யார் ஒரு மானிடத்தின் விடுதலையை பேசுபவன் எழுதுபவன் படிப்பவன்.அந்த மக்களின் வாழ்வை பிரதிபலிப்பவன்.அந்த மக்களால் வாழ வைக்கப்படுபவன்.ஒரு அரசியல் சமூக கலாச்சார மாற்றத்தை உருவாக்க கூடியவன். ஒரு சமூக வாழ்வின் அரசியலோடும் பொருளாதாரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந…
-
- 3 replies
- 905 views
-
-
காட்டாற்றை தடுக்கவென அதன் குறுக்கே வீழ்ந்ததாம் ஒரு மரம். ஆனாலும் அதனையும் அடித்துதள்ளிக்கொண்டே எதுவுமே நிகழாதது போல தன் பாதையில் வேகமெடுத்துப் பாய்ந்துகொண்டேயிருந்தது அந்தக்காட்டாறு. ஊடகங்களும் காட்டாறு போன்றவைதான். அவை சவால்களையும், தடைகளையும், வலிகளையும் சந்தித்தாலும் கூட தம் பயணத்தில் தடம் மாறுவதில்லை. (சூழ்நிலையின் மாறுதல்களுக்கேற்ப தம் குரல்களின் தொனியையும் மாற்றும் பச்சோந்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் அவற்றை ஊடகங்கள் என்று அடையாளப்படுத்துவது, நேர்மையான ஊடகங்களை அவமானப்படுத்துவது போலாகிவிடும். வேண்டுமானால் ஊது குழல்கள் என்று சொல்லலாம்.) இலங்கையில் அதிக வன்முறைகளை எதிர்கொண்ட ஊடகமான உதயன் மீது இன்னொரு கோழைத்தனமான தாக்குதல் வடமராட்சியில் அரங்க…
-
- 0 replies
- 585 views
-
-
விழலுக்கு இறைத்த நீராகும் வடக்கு மக்களின் நம்பிக்கை - செல்வரட்னம் சிறிதரன் 07 டிசம்பர் 2013 அதிகாரப் பரவலாக்கலா அல்லது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதா, எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற சேவைகளைச் செய்ய வேண்டிய தேவை முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத் தேவையும் இருக்கின்றது. அதே நேரம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் குறிப்பாக அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியதும், முக்கியமாகும். ஏனெனில், போருக்குப் பின்னரான காலப்பகுதிய…
-
- 0 replies
- 576 views
-
-
விழிப்படைத்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது அபிலாசைகள் தேர்தல் நோக்கிய அரசியலில் தங்கியிருக்கின்றது. கடந்த எட்டரை ஆண்டுகளாக அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களது ஆணை பெற்ற கட்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அண்மைக் காலமாக மாற்றுத் தலைமை, புதிய தலைமை என்கின்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை சாத்தியமா...?, அதற்கேற்ற நகர்வுகள் மக்கள் நம்பும் படியாக நடக்கின்றதா என்ற கேள்விகள் மீண்டும் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியிருக் கின்றன. தமிழ்…
-
- 0 replies
- 469 views
-
-
விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும் – மு.திருநாவுக்கரசு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — சீனா — பாகிஸ…
-
- 0 replies
- 367 views
-
-
அடுத்த மாதம் 5-ஆம் தேதியன்று விழுப்புரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்ட ‘தமிழ் ஈழ ஆதரவு (டெசோ)’ மாநாட்டை அடுத்த மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடத்த தி.மு.க. தலைவர் கலைஞர் முடிவு செய்து பல அறிக்கைகளையும் தொடர்ந்தும் விட்டுக்கொண்டு இருக்கிறார். பிற நாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் பலர் கலந்து கொள்ள இருப்பதனால், சென்னையை தெரிவு செய்துள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா கொங்குநாட்டில் ஓய்வெடுக்கும் காரணத்தினால் சென்னை வசதியாக இருக்குமென்று தி.மு.க. கருதியுள்ளது போலும். இன்னொரு நாட்டுக்கு எதிராக போராட்டங்கள் செய்யும் போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்றினாலே …
-
- 0 replies
- 564 views
-
-
விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:54 Comments - 0 தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார். அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார். வடக்கில் இராணுவக் கட்…
-
- 0 replies
- 500 views
-
-
விவாதங்களும் விமர்சனங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் விமர்சனங்கள் வேறு வேறு நோக்குகள் கொண்டவை. கருத்துரீதியானவை, ஆத்திரமூட்டுபவை, பொறாமையினல் விளைந்தவை எனப் பற்பலப் பண்புகள் வாய்ந்தவை. முதல் வாசிப்பிலேயே இதனை எந்த வாசகரும் இனம் கண்டுவிட முடியும். கருத்துரீதியிலாக எழுதப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், அது குறித்த உடனடியாக ஒற்றை வார்த்தையில் ‘அவதூறு’ என்று அறம்பாடிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள ‘ஆதாரப் பிழைகளை’ - காலம், இடம் சார்ந்த பிழைகள் - முன்வைத்து கட்டுரையின் ‘கருத்தை’ எதிர்கொண்டுவிட்டதாகக் கோரிக்கொள்வார்கள். கட்டுரையில் ஆதாரங்கள் முக்கியமானவை என்பதில் மறு கருத்திற்கு இடமி…
-
- 8 replies
- 1.4k views
-
-
விவாதம்: இனஅழிப்பும் இனச்சுத்திகரிப்பும் ராகவன் இலங்கையில் 2009 இறுதி யுத்தத்தின்போது நிகழ்ந்தது இனஅழிப்பா அல்லது யுத்தக் குற்றமா என்று வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. சமீபத்தில் சுமந்திரன் பா.உ., சர்வதேசச் சட்ட வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலையை நிரூபிப்பது கடினம் எனக் கூறியதைத் தொடர்ந்து, அவரைத் துரோகியென்றும் இனப்படுகொலையை நிராகரிப்பவர் என்றும் இலங்கை அரசின் ஏவலாள் என்றும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதன் உச்சகட்டமாக லண்டனில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் கூச்சலிட்டுக் கூட்டத்தைக் குழப்ப முயன்றனர். இவ்வாறு பாரிஸிலும் சுவிஸிலும்கூட நடந்தது. அத்துடன் சமீபத்தில் முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர், அதற் காகத்…
-
- 0 replies
- 845 views
-
-
விஸ்வரூபமெடுத்த உண்ணாவிரதம் ! இரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள்? சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை. ஆயினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய கடினமானதோர் அரசியல் நிலைமையை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நிலையில் சாகும் வரையிலான வவுனியா உண்ணாவிரதம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக நடந்தேறியிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வீதிகள…
-
- 0 replies
- 366 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் ஜனாதிபதி ரொபட் அன்டனி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு திகதியொன்றை குறித்துக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினர் குறிப்பிட்டிருந்தனர். எனினும் சுதந்திரக் கட்சி சார்பாக தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 23 பேர் கொண்ட அணியினர் ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லையென தெரிவித்திருந்தனர்.இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சியின் இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் கடும் போட்டியும் முரண்பாகளும் நிலவின. இதனால் ஜனாதிபதி அ…
-
- 0 replies
- 547 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் வில்பத்து - மொஹமட் பாதுஷா இலங்கையில் வியாபித்திருந்த யுத்தமும் அதன்வழிவந்த இடம்பெயர்வும் பல குக்கிராமங்களை அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைத்திருக்கின்றன. முசலி மற்றும் வில்பத்து சரணாலயத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களும் இதேபோலதான் ஆகிப்போனது என்றால் மிகையில்லை.முன்னொரு காலத்தில் ஆயுதம் தரித்தோரால் விரட்டப்பட்டவர்களை, இன்று இனவாதமும் சட்டமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. காரணிகள் மாறினாலும் விளைவுத் தாக்கங்களில் பெரிய மாறுதல்களைக் காண முடியவில்லை. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரை, வனவளங்களுக்கும் அதன் பாதுகாப்புப் பற்றிக் கவலைப்படுவோருக்கும் வேண்டுமென்றால…
-
- 1 reply
- 513 views
-
-
வீ(கூ)ட்டை சிதைக்க "பிரித்தாளும் சூழ்ச்சி' "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?', "வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்கலாமா?' இந்த இரண்டு பழமொழிகளுக்குமான அர்த்தத்தை தற்போதைய அரசியல் சூழலில் கேட்கக்கூடிய மிகச்சிறந்த தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் இருக்கும். அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்றுவருகின்றது. இன்றைய தினம் (08112017) இறுதிநாள் விவாதம் நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் ஒற்றுமையாக இருந்து அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் வடக்கு, கிழக்குத…
-
- 1 reply
- 906 views
-
-
வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர் நூற்றுக்கணக்கான பொலிஸார், ஆயுதந்தரித்த இராணுவத்தினர், சாதித்திமிர் பிடித்த ஒரு கூட்டம், ஒரு பிணத்துடன் ஒருபக்கம். இழப்பதற்கு எதுவுமற்ற சாதாரண மக்கள், கூலி உழைப்பாளர்கள், பெண்கள் மறுபக்கம். இவை கடந்த வாரம் இலங்கையின் வடபுலத்தில் ஒரு கிராமத்தில் அரங்கேறிய காட்சி. புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் இன்னொருமுறை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு நடுவே பிணத்தை எரித்தே தீருவது என்று சிலர் முடிவெடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் ஊர்மக்களின் தளராத தீரமான போராட்டத்தின் விளைவால் தடுக்கப்பட்டுள்ளத…
-
- 12 replies
- 1.1k views
-
-
வீட்டுக்குப் போ! தோல்வியடைந்த ஜனாதிபதி வீட்டுக்கு செல்வாரா? Chandana Sirimalwatte "கோதா வீட்டுக்குப் போ" என்ற பிரபலமான முழக்கம் ஒரே இரவில் தோன்றியதல்ல. 27 மாதங்களாக அவர் அரச தலைவராக இருந்து நாட்டு மக்களிற்கு செய்ய வேண்டியதை தவறியதற்கு எதிரான பொதுமக்கள் குரல் தான் இது ஆனால் கோத்தபாய தனது இயலாமையை அங்கீகரித்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவாரா? 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, வழக்குகளுக்கு பொய் காரணங்களை கூறியதன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்தவர். அவர் ஒரு 'தேசபக்தர்களின் தேசபக்தர்' அவர் ஜனாதிபதிக்கான வேட்புமனுவை அவரது சகோதரர் மஹிந்த அங்கீகரிக்கும் வரை அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. 2019 ஆம் ஆ…
-
- 0 replies
- 447 views
-