Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. “நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை” 07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது. சைக்கிளை எடுத்துக் கொண்டு வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன். அங்கே ஒரு கூட்டம் அமர்க்களமாக நின்றது. இரண்டாவது தடவையும் வெடியைக் கொழுத்தினார…

  2. இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்? சுஹாஸினி ஹைதர் நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வ…

  3. FOR THE ATTENTION OF INTERNATIONAL COMMUNITY ரணிலை காப்பாற்றும்படி கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் அழுத்தம்தரும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு. . * 1, தமிழர் பிரச்சினை தொடர்பாக எழுத்து மூலமான வாக்குறுதிகளைப் பெறாமல் யாரையும் ஆதரிக்க கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் மக்கள் ஆணை இல்லை. 2. இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேன மற்றும் மகிந்த தரப்பில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தெளிவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன. 3. ஏன் இதுவரை ரணில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறார் என்பது புரியவில்லை. தயவுசெய்து ரணிலுக்கும் அழுத்தங்கொடுங்கள். 4. தமிழர்களின் குறைந்த பட்சக் கோரிக்கையான அரசியல் கைதிகளின் விடுதலையைத் தன்னும் உற…

    • 6 replies
    • 1.1k views
  4. தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது லோ. விஜயநாதன் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழையான முடிவாக காட்டுவதற்கு சிலர் முனைகின்றனர். இந்த தேர்தல் முடிவை சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது போலவும் சிலர் காட்ட முற்பட்டுள்ளனர். ஆனால் இவை தவறான அர்த்தப்படுத்தல்கள். சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சி நிலையை மையப்படுத்தி தேர்தல் முடிவுகளை ஆராயாமல் தமிழ் தேசிய நிலையிலிருந்து தேர்தல் முடிவுகளை நோக்கும்போது தமிழ் மக்கள் மிகவும் சரியான முடிவையே எடுத்திருந்தனர் என்பதை உணர முடியும். நடந்து முடிந்த தேர்தல் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரு …

  5. யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர் சொன்னது என்ன? – நிலாந்தன். சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து போன சில நாட்களின் பின், கடந்த வாரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.கடந்த சில ஆண்டுகளில் இது இரண்டாவது வருகை. இங்கே அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்றார். சீனாவில் உள்ள ஒரு பௌத்த அறக்கட்டளையின் பெயரால் நலிவுற்றோருக்கு உதவிப் பொதிகளை வழங்கினார். யாழ் ஜெட்விங் சுற்றுலா விடுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 10 பேர்களைச் சந…

  6. உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற ஒருநாட்டில், அபிவிருத்தி மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நாட்டை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா என பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டு மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய ச.வி. கிருபாகரன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எழுதியுள்ள பகிரங்க மடலில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் பகிரங்க மடலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கட்கு, வணக்கம்! உங்களுக்கு என்னைபற்றிய அறிமுகம் தேவையில்லையென நம்புகிறேன்! சுருக்கமாக, எது எப்படியானலும் இன்று இக் கடிதத்தை உங்களுக்கு எழுதகூடிய நிலையில் உள்ளேன்! ஸ்ரீலங்காவின் நிறைவேற்று ஜனாதிபதியாக நீங்கள் அண்மையில் பெற்ற வெற்றிக்கு, எனது உணர்வு உ…

    • 1 reply
    • 1.1k views
  7. ரணிலின் ஒப்பரேசன் II நிர்மானுசன் பாலசுந்தரம் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சிறிலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் சனவரி 8ம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001ல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமான முறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். சர்வதேச பாதுகாப்பு வலை திட்டத்தின் ஊடாக புலிகளை உலகளாவிய ரீதியில் பலவீனப்படுத்திய ரணில், கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை தனது வலையில் சிக்கவைத்ததனூடாக புலிகளை உள்நாட்டில் பலவீனப்படுத்தினார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்…

  8. Courtesy: திபாகரன் சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதம் அறிஞர் கட்டமைப்பை உருவாக்குவதிலிருந்து எழுச்சி பெறத் தொடங்கியது. இத்தகைய அறிவியல் எழுச்சிக்கான தொடக்கத்தை 1880களில் இருந்து தெளிவான அடையாளம் காணலாம். இதில் அநகாரிக தர்மபால முதன்மையானவர். இத்தகைய அறிவியல் பாரம்பரியத்தின் உச்சமாக ராஜபக்சக்கள் "வியதமக" என்கின்ற ஓர் அறிவியல் மற்றும் நிபுணத்துவ குழாம் ஒன்றை 2015ஆம் ஆண்டின் பின் உருவாக்கி இருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தொடர்ந்து இனவாதத்தை மறுகட்டமைப்பு செய்து அதன்மூலம் தம்மைத் தக்கவைத்து தமிழ் இன அழிப்பை முழு அளவில் முன்னெடுப்பதற்காக இவ்வாறு "வியத்மக" என்கின்ற ஒரு சிந்தனையாளர் குழாத்தை உருவாக்கியிரு…

  9. நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் நித்தியபாரதிJun 19, 2018 by in கட்டுரைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. ‘நான் எனது குடும்பத்தாருக்கு பாரமாக இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு தடவையும்…

  10. ட்ரம்பின் சிரிய மீளப்பெறும் உத்தரவு வாஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பை தூண்டியுள்ளது By Bill Van Auken சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து 2,000 அமெரிக்கத் துருப்புக்களையும் அடுத்த 60 முதல் 100 நாட்களில் மீளப்பெறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள ஒரு தெளிவான உத்தரவு, பென்டகனிலும், Capitol Hill இல் உள்ள உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமும், அத்துடன் வாஷிங்டனின் நேட்டோ நட்பு நாடுகளிலும் அதிர்ச்சியையும் கூர்மையான எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. நிர்வாக மற்றும் இராணுவ மூத்த அதிகாரிகள் மூலம் ஊடகங்களுக்கு கசிந்த இந்த மீளப்பெறும் உத்திரவு வெளிப்படையாக தெரிவிப்பதை புதனன்று ட்ரம்ப் அறிவித்த பின்வரும் ஒரு சுருக்க…

    • 0 replies
    • 1.1k views
  11. சர்வதேச அரங்கிலும் உள்நாட்டு மீடியாக்களிலும் அதிகம் பேசப்படாத தொடர்ச்சியான உள்நாட்டுப் போர் இந்திய நாட்டில் நடக்கிறது. நக்சலைற்றுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் இடதுசாரிகள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரை நடத்துகின்றனர். மேற்கு வங்காள நக்சல்பாரி கிராமத்தில் நடந்த கிளர்ச்சி காரணமாக நக்சல், நக்சலைற், நக்சல்வாதி என்ற பெயருடன் நிலமற்றோர், சாதிக் கொடுமைக்கு ஆளானோர், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறையால் பாதிக்கப்பட்டோர், வேலையற்றோர் போன்றவர்களின் கூட்டு நடவடிக்கையாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. நக்சல்பாரி கிராமத்தில் 1967ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்னும் ஒயவில்லை. ஏனென்றால் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்கள் களையப்படவில்லை. அவை கூடுகின்றன ஒழியக் குறையவில்லை. இந…

  12. போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்…

  13. கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்… April 4, 2020 கொரோனாவைரஸ் ஓர் உலகப் பொதுஆபத்தாக மாறிய போது நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஓர் அறிவிப்பைவெளியிட்டார. உலகம் முழுவதிலும் போரில் ஈடுபடும் தரப்புகள் தங்களுக்கிடையே யுத்த நிறுத்தத்துக்குப் போக வேண்டும் என்று அந்த அறிவிப்பு கேட்டிருந்தது. ஆனால் உலகப் பேரரசான ஐக்கிய அமெரிக்கா ஏற்கெனவே ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்களின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை போரில் ஈடுபடும் தரப்புக்கள் பெருமளவுக்கு பொருட்பட…

    • 1 reply
    • 1.1k views
  14. துருக்கி ஜனாதிபதியின் துடுக்கும் நாணயத்தின் வீழ்ச்சியும் வேல் தர்மா 2018ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இருந்து 2018.-08-.10ஆம் திகதி வரை துருக்­கிய நாண­ய­மான லிராவின் பெறு­மதி 40 வீதத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அதில் மோச­மான வீழ்ச்­சி­யாக 25 வீதம் வீழ்ச்சி 2018-.08-.06ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஏற்­பட்­டது. அந்த ஆடிக் கடைசி வெள்­ளியை லிரா ஆடிய வெள்ளி என அழைக்­கலாம். லிராவின் பெறு­மதி வீழ்ச்­சிக்­கான காரணம் அமெ­ரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்­பிற்கும் துருக்­கிய ஜனாதிபதி ரெசெப் எர்­டோ­கா­னுக்கும் இடையில் ஏற்­பட்ட முறுகல் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால் அமெ­ரிக்­கா­வுடன் முறுகல் இல்­லாத பல நாடு­களின் நாண­யங்­கள் (சீனா, இந்­தியா, ஆ…

  15. கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா? Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:29 Comments - 0 -இலட்சுமணன் திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல! இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே…

  16. -கே.சஞ்சயன் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு வந்த நாட்டில், நீதித்துறை இப்போது செல்லாக்காசு போன்று மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வாசம் அனுபவித்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் உள்ள அவரது அமைச்சரவை சகாக்களே, பகிரங்கமாக நீதிமன்றங்களை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கின்ற நிலை காணப்படுகிறது. அதுவும், உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கருத்துகள் எல்லாம் கண்டபடி விமர்சிக்கப்படுகின்றன. அரச ஊடகங்களிலேயே, இத்தகைய விமர்சனங்கள் தாராளமாக வெளியாகின்றன. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக முக்கிய அரசியல்வாதி ஒ…

  17. ‘வாங்கோ ராசா வாங்கோ’ காரை துர்க்கா / 2020 ஜனவரி 21 ஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின் தொடர்ச்சியான காலகட்டங்களில், தமிழ் இளைஞர்கள் அடைக்கலம் தேடி, தாய் மண்ணைத் துறந்து, அந்நிய தேசங்களுக்குச் சென்றனர். தமிழ், சிங்கள முரண்பாடுகள், ஆயுதப் போராக தோற்றம் பெற்ற அக்காலப்பகுதியில், ‘சுவர் இருந்தால் மட்டுமே, சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மு…

  18. துர்நாற்றமடிக்கும் உலக அரசியற்களம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா 'முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை நிலைமை என்னவெனில், 'கடும்போக்குவாதமென்பது, அரசியலில் மிகப்பெரிய அனுகூலமாகும்' என்பது தான். உலகத்தின் பல பகுதிகளிலும், கடும்போக்குவாதக் கொள்கைகளுக்கு ஆதரவும் பின்தொடர்வோரும் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கடும்போக்குவாதங்கள், முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற…

  19. சங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ் - நிலாந்தன் கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத் திரும்புவது குறித்தும் உரையாடத் தொடங்கியுள்ளோம். குறிப்பாக சமூகத்தின் அன்றாடங் காய்சிகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் பாரபட்சமற்ற விநியோகத்தை மேற்கொள்வதற்கு கூட்டுறவுச் சங்கங்களை புதுப்பிக்க வேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.. உண்மைதான். யுத்த காலங்களில் சங்கக் கடை மைய வாழ்க்கை ஒன்று இருந்தது. அந்நாட்களில் கூப்பன் கார்ட்டும் அடையாள அட்டையும் தொலைக்க முடியாத ஆவணங்களாக காணப்பட்டன. குடும்ப அட்டை என்பது நிவாரண அட்டையாகவும் நீட்சி பெற்றிருந்தது. குடும்ப …

  20. இந்தியாவும் கஜேந்திரகுமாரும் கே. சஞ்சயன் / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:23 Comments - 0 குண்டுவெடிப்புகள், அதனைச் சார்ந்த அரசியல் பரபரப்புகளுக்குள், அமுங்கிப் போய்க் கிடந்த வடக்கு, கிழக்கு அரசியல் விவகாரங்கள், தேர்தல்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ளதால், மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய செயற்குழுக் கூட்டத்தில், பேசிய அதன் இணைத் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், “மாற்று அணி ஒன்றை வலுப்படுத்துவதற்கான, அவசியமும் சூழலும் எழுந்துள்ளது. அதற்குத் தமிழ் மக்கள் பேரவை, காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தமது…

  21. விக்னேஸ்வரனின் வெறுங்கால் ஓட்டம் -விரான்ஸ்கி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் தமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படம், ஈழத்து இணைய வெளிகளிலும் செய்தித் தளங்கள், ‘வட்ஸ் - அப்’ குழுமங்களிலும் ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு இணையான பரபரப்புடன் பலராலும் பகிரப்பட்டது. படத்தைப் பார்த்து, “இருபெரும் ஆளுமைகள்” என்று விக்னேஸ்வரனின் விசுவாசிகள் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். “ஆன்மீக அரசியல் பேசுகிறார்கள்” என்று, சில நக்கலான விமர்சனங்களை இன்னும் சிலர் சொல்லிக் கொண்டார…

  22. சனி 19-08-2006 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் என்றும் இல்லாத அளவுக்கு பணப்புளக்க நெருக்கடி. யாழ்ப்பாண குடாநாட்டில், என்றும் இல்லாத வகையில் மோசமான பண புளக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரச வங்கிகள் மூடப்பட்ட நிலையில் உள்ள அதே வேளை சில தனியார் வங்கிகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக மட்டுமே பண கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் 20 ஆயிரம் ரூபா வரை பண கொடுப்பனவுகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக பெற கூடிய வசதி இருந்த பொழுதிலும், 10 ஆயிரம் ரூபாவாகவும், பின்னர் 3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டிருந்தது. அந்த தொகை இன்று முதல் 900 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்…

    • 0 replies
    • 1.1k views
  23. பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். இன்னும் தமிழ் நாட்…

    • 3 replies
    • 1.1k views
  24. தமிழ் - முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:50 பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடக்கின்ற எல்லா விடயங்களும், இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளாக உருவேற்றப்படுவதையும் சிறிய சம்பவங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுவதையும் வெளிப்படையாகவே காணமுடிகின்றது. தேச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.