Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. “தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன? அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கேட்டார். அரசியல் உரையாடலை நிகழ்த்த விரும்பி அந்த நண்பர் இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்பினார். “தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாகப் பலவீனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம் என்பது அதற்கிருக்குமா என்பதே கேள்விதான். ஏனென்றால், பலவீனங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கும் எதுவும் பலமாகவோ, உறுதியாகவோ, தொடர்ச்சியாகவே இருக்க முடியாது. பலவீனமாக இருக்கும் எதுவும் வெற்றியை நோக்கி நகரவும் இயலாது. ஆகவே, தமிழ்த்தேசியம் என்பதற்கு அடுத்த கட்டம் என்ற ஒன்றிருக்குமா? என்பதே கேள்விதான். தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவது எதிர்த்தரப்பாகிய ச…

  2. இலங்கையின் வெளியுறவுத்துறையும் அது சார்ந்த அமைப்புகளும் அண்மை காலங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கொள்கை ஆய்வாளர்களையும் சந்திக்கும் வெளியுறவு அதிகாரிகள் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதை கூறுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக அதிகார பரவலாக்கம் குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கும் பொழுது இலங்கை ஒரு சிறிய தேசம் இந்தச் சிறியதேசத்தில் ஒன்பது அதிகார சபைகளை அமைப்பதுவும் ஒன்பது பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவதுவும் ஒன்பது காணி அதிகார சபைகளை உருவாக்குவதுவும் மிகவும் கடினம், செலவும் அதிகம் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்துக்களின் பின்னணியில் தமிழ் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க முடியாது என்ற விடயமே உள்ளடங்கி உள்ளது. அதேவேளை இந்திய தென்பி…

  3. போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் கேப்­பாப்­பு­லவு மக்கள் அப­க­ரிக்கப்­பட்ட தமது காணி­களை மீளப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யுறுத்தி போராட்­டங்­களை நடத்திவரு­கின்­ற­ போ­திலும் அர­சாங்கம் அது தொடர்பில் அக்­கறை கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. குறிப்­பாக இந்த மக்கள் தமது நிலங்­களை மீட்­டுத்­த­ரு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற ­போதும் அது தொடர்பில் அரசாங்கம் பாரிய கவ­னத்தை செலுத்­து­வதைக் காண­மு­டி­ய­வில்லை. மக்கள் தொடர்ச்­சி­யாக இரவு – பகல் பாராது வெயி­லிலும் பனி­யிலும் தவித்­துக்­கொண்டு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­போ­திலும் பிரச்­சி­னையைத் தீர்க்­க­வேண்­டிய அர­சாங்கம் அதனைக் கவ­ன…

  4. அமெரிக்காவில் பசில்ராஜபக்ச... என்ன நடக்கிறது?

    • 0 replies
    • 557 views
  5. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் – சூ.யோ. பற்றிமாகரன் 48 Views புலம்பெயர் தமிழர், வடக்கு கிழக்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தடை மனிதாய உதவிகள் கூட மறுக்கப்பட்ட, நலிவுற்ற மக்களாக ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஆட்புல ஒருமைப்பாட்டுடனும் கொண்டு விளங்கும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதார்த்தத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக உலகெங்கும் அதிகரித்து வருகிறன. இதற்கு உதாரணமாக அமெரிக்க காங்கிரசில் ஈழத் தமிழர்களின் வாழ்விடமாக வடக்கு கிழக்கை உறுதிப்படுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்டமை வி…

    • 1 reply
    • 732 views
  6. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அவநம்பிக்கையுடனும், அச்சத்துடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அணுகப்பட்ட வடக்கு மாகாணசபை தேர்தலில், அவர்களே எதிர்பார்க்காத அறுதிப்பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் வடக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். தேர்தலுக்கு முன்னான சில நாட்களிலும், தேர்தல் தினத்தன்றிலும் கூட தமது வெற்றி குறித்த அச்ச உணர்வுடனேயே வேட்பாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்திருந்தனர். அவ்வாறானதொரு புறநிலை ஆளும் தரப்பால் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது. மட்டுமில்லாமல், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிகழ்ந்த உள்வீட்டு பிரச்சனைகளும் இச் அச்சத்திற்கு ஒரு காரணியாக இருந்தது. இவற்றை எல்லாம் …

  7. வன்னியில் தமிழீழத் தேசியத் தலைவர் வசித்ததாக கருதப்படுகின்ற நிலக்கீழ் மாளிகை வீடு ஒன்று சிறீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டிருக்கின்றது. புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த வீடு மிகவும் ஆச்சரியம் மிக்க கட்டுமானமாக அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளைத் தவிர இளநிலைத் தளபதிகளால் கூட கால்பதிக்க முடியாத இடமாக இருந்த இந்த வீடு, இன்று இடித்தழிக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழ் மக்களிடையே பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. போரியல் ரீதியில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத் தேசியத் தலைவரும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இந்த நிலக்கீழ் மாளிகை வீடு எடுத்துக்காட…

  8. கடற்கரை மாசும் எமது மௌனமும் உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்பட…

  9. காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி உண்மை, நீதி, இழப்­பீடு, மீள­நி­க­ழா­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்ப், இலங்­கையில் இரண்டு வார­கால உண்மை கண்­ட­றியும் பய­ணத்தை முடித்துக் கொண்டு திரும்­பி­யி­ருக்­கிறார். அவர் கொழும்பில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு சில மணி­நேரம் முன்­ன­தாக,- கடந்த 23ஆம் திகதி- ஐ.நாவின் இலங்­கைக்­கான பணி­ய­கத்தில் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். அந்தச் சந்­திப்பில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்கள், நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்­துக்கு உவப்­பான ஒன்­றாக இருக்­காது. ஆனாலும் ஐ.நா. நிபு­ணரின் கருத்து வெளி­யாகி பல நாட்­க­ளாகி விட்ட பின்­னரும், அர­சாங்கத…

  10. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு Veeragathy Thanabalasingham on August 8, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய நீண்ட கொள்கை விளக்கவுரை இதுகாலரையிலான அவரின் உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உரை என்ற வகையில் அத…

  11. தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சி திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் தமிழ் மக்­க­ளு­டைய அடை­யா­ளங்­க­ளையும் இந்து பூர்­வீ­கங்­க­ளையும் அழிப்­ப­திலும் இல்­லாமல் ஆக்­கு­வ­திலும் தொல்­பொருள் திணைக்­க­ளமும் பௌத்த விஹா­ரா­தி­பதிகளும் காட்­டி­வ­ரு­கின்ற அட்­டூ­ழி­யங்­களின் ஒரு­வெளிப்­பா­டுதான் அண்­மையில் மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட சூடைக்­குடா (மத்­த­ள­மலை) திருக்­கு­மரன் ஆல­யத்தில் இடம்­பெற்ற சம்­ப­வ­மாகும். போர் மற்றும் சுனாமி கார­ண­மா­க சூடைக்­குடா கிரா­மத்தை விட்டு வெளியே­றிய மக்கள் மீள் குடி­யே­றிய நிலையில் தங்கள் வர­லாற்­றுப்­புகழ் கொண்ட ஆல­யத்தை புன­ர­மைக்­கவும் அருகில் குடி­நீர்­கி­ கி­ண­ றொன்றை நிர்மாணிக்­கவும் ஆலய பரி­…

  12. றாஜீவ் கந்தியின் கொலை தப்பா? … இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களூம் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள். எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம்…

  13. சீர்திருத்த முடியாத ஒரு சட்டத்தை நீக்க வேண்டிய உடனடித் தேவை Photo, Tamilguardian ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒன்றின் மூலம் ஏற்பட முடியும் எனக் கருதப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு தற்காலிக சட்டமாக அது கருதப்பட்டது. ஆனால், அச்சட்டம் இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு மேல் அமுலில் இருந்து வந்துள்ளது. எதிரி தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அது தொடர்ந்து நிலைத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் பல வருட காலம், பல தசாப்தகாலம் கூட சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்; பயங்கரவாதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பலர் வழக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் அல்லது சித்திரவதைக்கு ஊடாக பலவந்தமாக பெற்றுக்…

  14. ஈரானின் அணு சக்தி வளர்ச்சி அமெரிக்காவை அச்சுறுத்துகிறதா ? ஐங்கரன் ************* (ரஷ்யாவுடன் வலுவாக கைகோர்க்கும் ஈரானின் ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தியால் ஐரோப்பிய – உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாதோ என்று அமெரிக்கா அஞ்சுகிற வேளையில், ஈரானின் அணு சக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணு ஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படும் என வாஷிங்டன் ஐயமுறுகிறதோ என்பது பற்றிய ஆய்கிறது இக்கட்டுரை) *************************************************************************************** 2000 களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெ…

    • 0 replies
    • 702 views
  15. உள் முற்றம்: இலங்கையில் சாதி,நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல்: ஜயதேவ உயங்கொட அறிமுகம் சமூக சீர்திருத்தத்தை நோக்கிய சமூக அல்லது அரசியல் முயற்சி பற்றிய பிரக்ஞை இன்மை இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தின் ஆவலைக் கிளறும் ஒரு முக்கிய அம்சமாகும். 1999ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் சம வாய்ப்பு பற்றிய பொதுக்கொள்கைச் சட்டம் ஒன்றுக்காக சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை கைவிட்ட போது இலங்கையின் சமகால அரசியலிற் காணப்படும் இத்தனியியல்பு பலரதும் தீவிரமான கவனத்தை ஈர்த்தது. அரசாங்கத்தின் சம வாய்ப்புச் சட்டமூல வரைவு, அகில இலங்கைப் பௌத்த காங்கிரஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்பன போன்ற சிங்களத் தேசியவாதச் சக்திகளினால் எதிர்க்கப்பட்டது. அ…

    • 2 replies
    • 1.9k views
  16. தமிழ் புலம்பெயர் சமூகம் (டயஸ்போறா) என்ன செய்யலாம்? - யதீந்திரா தமிழர் அரசியலில் புலம்பெயர் சமூகம் பிரிக்க முடியாதவொரு அங்கம். இதனை எவராலும் சீர்குலைக்க முடியாது. சீர்குலைக்கவும் அனுமதிக்கக் கூடாது. 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலில் பிரதான குரலானது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக மாறியது. எனினும் புலம்பெயர் சமூகத்தின் உழைப்பு எதிர்பார்த்த பலனை தரவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள், சில தனிநபர்கள் மீதான அமெரிக்க தடைகள், தற்போது முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சக்கள் மீதான கனடாவின் தடை – இவற்றை தவிர குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் எவையும் கடந்த 13 வர…

  17. வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள் ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது. அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த பல விளக்கங்கள் இருந்துள்ளன. அவையும் ஒருமனதானதாக இருந்ததில்லை. இன்று ஜனநாயகம் பற்றி எழுப்பப்படும் கேள்விகள், வெறுமனே ஜனநாயகத்தை மட்டும் விளக்குவனவல்ல. நாம் வாழும் சூழலையும் அதன் அரசியல் போக்கையும் நோக்கையும் கூட விளக்குகின்றன. இதனால், ஜனநாயகம் குறித்த வினாக்களும் விடைகளும், நாம் வாழும் உலகின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தை விளங்க உதவும்…

  18. Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் வைத்து புதன்கிழமை (12.4.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள…

  19. விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை, பி.ப. 12:23Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கா…

  20. இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல் கார்த்திக் வேலு இன்று இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் விழும் குண்டுகள், பல நூறாண்டுகளுக்குப் முன்னரே எங்கிருந்தோ ஏவப்பட்டுவிட்டன என்பதே உண்மை. இஸ்ரேலை அறிய முதலில் யூத மதம் உருவாகிவந்த விதம் குறித்து அறிவது உதவியாக இருக்கும். வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கையில் மக்கள் - மதம் - தேசம் என்ற மூன்றும் எப்படி ஒன்றை ஒன்றைச் சார்ந்து வளர்ந்தன என்ற சித்திரமும் பிடிபடும். யூத மதம், யூதர்கள், யூதர்களுக்கான நாடு மூன்றுமே படிப்படியாக பரிணாமம் கொண்ட விஷயங்கள். யூத மதத்தின் பின்னணி யூத மதம் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான வேர்களைக் கொண்டது. அதேசமயம், வரலாற்றுப் பரிணாமத்தில் புறச்சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவம…

  21. 40,000 தமிழ் பொது மக்கள், 18 பில்லியன் டொலர், போர்க்குற்றம், சிறைவாசம், 200-300 பவுத்தர் அல்லாதோரின் உயிர் On 7 May 2015, Foreign Minister Mangala Samaraweera received intelligence reports from four foreign nations that involved in tracing the billions of Dollars stashed aboard, stating that the Rajapaksa family holds $18 Billion (approximate Rs. 237,933,000,000) worth of assets in foreign countries. நீங்கள் ஒரு பத்து வருட இடைவெளிக்குள் , மனச்சாட்சியின் உறுத்தல் எதுவுமேயில்லாமல் 40,000 தமிழ் பொதுமக்களை கொன்று குவித்துவிட்டு சேர்த்துக்கொண்ட 18 பில்லியன் டொலர் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களை வைத்துக்கொண்டு 70 வயதுக்கு மேல் உடம்பில் இன்னம…

  22. ஐ.நா தீர்மானமும் ஆறிப்போன ரீயும் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ ஜெனீவாக்களை நாம் கண்டுள்ளோம். அந்த வரிசையில் இப்போது இன்னொரு ஜெனீவா, அவ்வளவேதான்! இதை நாம் புரிந்து கொள்ளாமல், நம்பிக்கை வளர்ப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை, எதையும் சாதிக்காது என்பது கொஞ்சம் பகுத்தறிவுள்ள எந்தவொரு மனிதனுக்கும் விளங்கியிருக்கும். ஆனால், அதை வைத்து நடக்கும் அரசியல் ஆட்டம் இன்னமும் தொடர்கிறது. இலங்கை அரசாங்கம், தானே முன்வந்து ஒத்துழைத்த பிரேரணையில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்த முன்னைய இலங்கை அரசாங்கமே, அந்தப் பிரேரணையில் உள்ளவற்றை இலங்கையில் ச…

  23. கோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும் – நிலவன்.. April 12, 2020 கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். உலகநாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென நாட்ட…

  24. நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது. அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒ…

    • 0 replies
    • 71 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.