நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
அரசியல் சூது விளையாட்டே புதிய அரசியலமைப்பை - விஜித்த ஹேரத் புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தினை வைத்து தற்போது ஓர்அரசியல் சூது விளையாட்டே நடைபெறுகின்றது. கூட்டமைப்பினர் தமிழ் மக்களையும், ராஜபக் ஷ, மைத்திரி தரப்பினர் சிங்கள மக்களையும், ஐ.தே.க.வினர் மேற்குலகத்தினையும் ஏமாற்றுகின்றார்கள் என்பதே யதார்த்தம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத், வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில் ஜே.வி.பி தற்போதும் இருக…
-
- 0 replies
- 762 views
-
-
அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019 அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல்,…
-
- 0 replies
- 400 views
-
-
அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான துணைவேந்தர் யாழ் பல்கலைக்கு தெரிவாகுவாரா? 08 Dec, 2025 | 12:14 PM தம்பு லோவி அண்மைய மாதங்களில் பல்கலைக்கழகங்கள் பற்றிய பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் வெளியாகியிருந்தன. இவற்றுள் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தல் ( Times Higher Education World University Rankings) முக்கியமானது. இதன்படி, தொடர்ந்து 10 ஆவது வருடமாக இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் மஸ்ஸாச்சுட்டஸ் இன்ஸ்டிடியூட், மூன்றாம் இடத்தை ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவையும் பெற்றுள்ளன. முதல் 40 இடங்களில் சீனாவின் 5 பல…
-
- 0 replies
- 119 views
-
-
யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை. வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைக்கதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார். திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை உடைத்து காளி கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக மேதானந்த தேரர் கூற முற்படலாம். இம் மாதத்தோடு முள்ளிவாய்க்கால் இன அழி…
-
- 0 replies
- 551 views
-
-
கடந்த சில தினங்களாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்க அரசாங்கம் வகுத்திருந்த திட்டமொன்றிலிருந்து எதிர்;க்கட்சிகள், தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டு இருப்பதாகவே கூற வேண்டும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முன்வந்தால், திஸ்ஸ அத்தநாயக்க மூலம் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டு இருந்ததா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சராகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்ப…
-
- 0 replies
- 577 views
-
-
அரசியல் பாலபாடம்: தமிழ்மாறன் புங்குடுதீவுக்கு போன கதை! ‘வாழ்க்கையில் சில விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.’ - இப்படி தேவையில்லாத நேரத்தில் எல்லாம் தெளிவாக யோசிக்கலாம். ஆனால் தேவையான நேரத்தில் மிகத் தெளிவாகச் சொதப்பிவைப்பது என் வழமை. எவ்வளவு யோசித்து, திட்டமிட்டு - அநேகமாக அப்படி நாங்களே நினைத்துக்கொண்டு ராஜதந்திரத்துடன் செயற்பட்டாலும் அதற்கும் மேலாக எதிர்பார்க்காத கோணத்தில் வரும் பாருங்கள் ஆப்பு. சந்தர்ப்பம் எப்படி, எங்கே ஆப்படிக்கும் என்பது யாருக்குமே தெரியாது. கடந்த சிலநாட்களாக அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றி யோசித்தபோது பயங்கரமாக இருந்தது. அதன் விளைவாகவோ என்னவோ நேற்று நண்பனுடன் பேசும்போது ஒரு ஃப்ளோவில் இப்படி வந்தது, …
-
- 15 replies
- 1.9k views
-
-
அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் May 7, 2022 — கருணாகரன் — ராஜபக்ஸக்களின் அரசாங்கத்துக்கு எதிராக தெற்கிலும் மேற்கிலும் நடக்கும் “மக்கள் போராட்டங்கள்” பற்றிய தமிழ்த்தரப்பினரின் அபிப்பிராயம் என்ன? பங்கேற்பு என்ன? இந்தக் கேள்வியின் ஆழம் வரலாற்று ரீதியாகப் பெரியது. ஏனென்றால், என்னதான் வெவ்வேறு அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய காலச் சூழலில் இந்தப் போராட்டங்கள் மிக முக்கியமானவை. அதுவும் பெருந்திரள் தமிழ்ச்சமூகத்தின் நோக்கு நிலையில். ஏனென்றால், பெருந்திரள் தமிழ்ச்சமூகம் ராஜபக்ஸக்களை அதிகாரத்திலிருந்து அகற்ற விரும்புகிறது. போர்க்குற்றம் உட்பட அவர்களுடைய ஆட்சித் தவறுகள் வரையானவற்றுக்க…
-
- 1 reply
- 246 views
-
-
அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்.. 11/14/2018 இனியொரு... இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது. மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்க…
-
- 0 replies
- 949 views
-
-
அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’ மொஹமட் பாதுஷா ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள், பொதுவெளியிலும் திரைமறைவிலும் குற்றங்களை இழைப்பவர்களாக, சமூகவிரோதிகளாக, ஊழல் பெருச்சாளிகளாக, ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்கின்ற நாட்டில், சட்டத்தையும் மக்களையும் நெறிப்படுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை. ‘கள்வனைப் பிடித்து விதானைக்கு வைத்தல்’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழியை சொல்வார்கள். அதாவது, குற்றமிழைப்பவனை ஒரு பதவிக்கு நியமித்தல் என இது…
-
- 0 replies
- 199 views
-
-
அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள்!! -சிறிமதன் June 21, 2019 என்றோ ஒருநாள் விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் இவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் கம்பிகளுக்கு பின்னால் இன்றும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பவர்களே நாம் வழமை போன்று அரசியல் கைதிகள் என்று ஒற்றை வார்த்தையில் கூறுபவர்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர அரசாங்கத்தை எச்சரித்திரு…
-
- 0 replies
- 240 views
-
-
இலங்கையில் மக்கள் மத்தியில் அரசு குறித்து இன்னமும் நம்பிக்கையின்மையே காணப்படுகின்றது. வடக்கில் சந்தேக மனப்பான்மையை நான் நேரடியாகப் பார்த்தேன் என இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ஜெவ்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பிய அதிகாரி ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கத்துடனும், அதிகாரிகளுடனும் இடம்பெற்ற பேச்சுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றவைகளைவிட வித்தியாசமானவையாக காணப்பட்டன. இதன் காரணமாகப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதே…
-
- 0 replies
- 689 views
-
-
அரசுக்குத் தொடர்ந்தும் – ஆதரவை வழங்க வேண்டுமா கூட்டமைப்பு? கூட்டரசுக்குத் தொடர்ந்தும் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண் டுமா? என்ற கேள்வி தமிழ் மக் கள் மத்தியில் தற்போது தோன்றியுள்ளது. தாம் பல வகைகளிலும் இந்த அரசால் ஏமாற்றப்பட்டு, நடுத்தெருவில் நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். அது அரசின் மீதான கூட்டமைப்பின் வெறுப்பைத் துலாம்பாரமாகவே எடுத்துக்காட்டிவிட்டது. மாவை சேனாதிராஜாவின் கருத்தில் நியாயம் இல்லாமலில்லை. இறுதியாக இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ததில் கூட்டமை…
-
- 0 replies
- 276 views
-
-
முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடு…
-
- 0 replies
- 380 views
-
-
இன்று அராலித்துறை பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும். அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிறிலாங்கா இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான தீவு பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது. வழமை போல தீவுபகுதியினை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1987.10.22 அன்றும் யாழ் நகரம் நோக்கி பதினைந்து இயந்திரப் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். நண்பகல் அராலித்துறையினை வந்தடைந்த பொதுமக்கள் மீது திடீரென இந்தி…
-
- 6 replies
- 452 views
-
-
அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும். அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் அதன் உள்ளடக்கம் வீரியம் அனைத்தையும் இழந்து நடு வீதிக்கு வந்தது. அதுவரைக்கும் விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் தேசிய அரசியல் ந…
-
- 0 replies
- 484 views
-
-
இந்தியாவைத் தென்முனையில் பலவீனப்படுத்த, இதுவரை இலங்கையை மறைமுகமாகப் பயன்படுத்தி வந்தது சீனா. தற்போதோ இந்தியாவின் எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவுக்குள்ளாகவே ‘காற்றாலை மின் திட்டம்’ என்ற பெயரில் கால் பதிக்கிறது. இலங்கையின் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோசர் - இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான். இந்தத் திட்டத்தின் மதிப்பு …
-
- 1 reply
- 438 views
-
-
‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல சிந்தனையாளரும், ஆற்றல் மிக்க எழுத்தாளருமான அருந்ததிராய் வெளியிட்ட கருத்தில், எந்தக் குற்றமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. அருந்ததிராய் மீது தேச துரோகக் குற்றச்சாட்டை ‘தேச பக்தர்கள்’ வீசுகிறார்கள். வழக்குத் தொடருவதற்கு இந்திய ஆட்சி ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், பார்ப்பன ஏடுகள் கூக்குரலிடுகின்றன. காஷ்மீர் மக்கள் மீது ராணுவ ஆட்சியைத் திணித்து, அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை துப்பாக்கி முனையில் பறித்து வைப்பதற்குப் பெயர்தான் தேச பக்தியா என்று கேட்க விரும்புகிறோம். தேச பக்தர்களுக்கு சில கேள்விகளை முன் …
-
- 0 replies
- 800 views
-
-
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இருப்பது போன்று நாடாளுமன்றத்தின் இன்னொரு சபையாக மாநிலங்களவையை (செனற் சபை) அமைப்பதே இதுகாறும் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக தான் கூறிவந்ததன் அர்த்தம் என்று கடந்த வாரம் இந்து நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாண்டு நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் போன்று அடுத்த ஆண்டு செப்ரம்பர் மாதமளவில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் மகிந்தர் அறிவித்துள்ளார். எமது கடந்த பத்தியில் குறிப்பிட்டது போன்று வடக்குக் கிழக்கு மாகாண சபைகளுக்கு உயிரூட்டுவதைத் தவிர இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வேறு எந்…
-
- 1 reply
- 1k views
-
-
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்! தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல் என்பது தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவின் குறிகாட்டியாக மாறி வருகிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்க்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் தமிழ் முகநூல் வாசிகளின் பண்பாட்டுச் சீரழிவைக் காட்டுகின்றன. இவ்வாறு எழுதப்படும் கேவலமான, கீழ்த்தரமான, வன்மம் மிகுந்த, மற்றவர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க முயற்சிக்கின்ற பதிவுகளைத் தொகுத்துப் பார்த்தல், அந்த ந…
-
- 0 replies
- 132 views
-
-
May17 Movement இன் புகைப்படம் ஒன்றை Kabilan Sivapathamபகிர்ந்துள்ளார். இப்படிப்பட்ட சிறப்பு மிக்க ஆவணப்படத்தை எடுத்து எங்களுக்கெல்லாம் கொடுத்த தோழர் வெற்றிவேலுக்கு நன்றி அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் தோழர் திருமுருகன் உரை : அனைவருக்கும் வணக்கம் தமிழ் சமூகத்திலே எப்போதுமே இருக்கின்ற ஒரு சிக்கல் - நாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் களவுகொள்ளப்பட்டு அது வேறொரு கையில் இந்திய அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு ஆட்சியை கைப்பற்ற பயன்பட்டது என்பதை நாம் பல்வேறு ஆவணங்களின் ஊடாகத்தான் தெரிந்துகொள்ள முடிந்தது.ஒரு போராட்டத்தை ஆவணமாக மாற்றும்பொழுது அதில் வரலாற்ற்ரை திரித்து பொருள்பட கூடிய…
-
- 0 replies
- 326 views
-
-
அறவழி புரியாத மடமைச்சமூகம் November 27, 2023 — கருணாகரன் — “வகுப்பறையில் மாணவர்கள் கேட்கின்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது. அந்தளவுக்கு மேலிருந்து கீழ் வரையில் சகல அடுக்குகளிலும் தவறுகளும் பிழைகளும் தாராளமாகி விட்டன. பிழை செய்தாலும் பெரிய ஆட்கள், செல்வாக்குள்ளவர்கள் என்றால் அவர்களுக்குத் தண்டனையே இல்லை. சட்டம் கூட அவர்களைக் கட்டுப்படுத்தாது. நிர்வாகத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது பகிரங்கமான உண்மை. பிள்ளைகளுக்கே (மாணவர்களுக்கே) இது நன்றாகத் தெரியும். சில பாடசாலை அதிபர்களே மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் எப்படி நாம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்? அவர்கள் எதை முன்னுதாரணமா…
-
- 0 replies
- 536 views
-
-
அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்! திகதி: 01.04.2010 // தமிழீழம் கருணாநிதிக்கு "அண்ணா விருது" வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம். அன்புள்ள தம்பி, செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்றஎண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை. தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. வடக்கு வாழ்கி…
-
- 0 replies
- 2.2k views
-
-
கொரோனா வைரஸ் ஆபத்தானதாக இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்ைககள் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள் தும்மும் போதும், இருமும் போதும் உடலிலிருந்து ‘கொரோனா’ வைரஸ் வெளியேறுவதால், ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். அதன் மூலம் ‘கொரோனா’ வைரஸ் உடலிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியும். அதேவேளையில், ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். ஏற்கனவே ‘கொரோனா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொள்பவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய பக…
-
- 0 replies
- 802 views
-
-
•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை சிறிலங்கா மக்கள் பெற்றிருக்கிறார்கள்? இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார். வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் ஜனாதிபதி அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் ஜனாதிபதி அறிந்திருக்கிறார். இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அறுபது மணி நேரப் பட்டறிவு 3 hours ago "நாரதர் கலகம் நன்மையில் முடியும்' என்பார்கள். அப்படித்தான் முடிந்திருக்கின்றது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக ஆரம்பித்து வைத்த கலகமும் என்று தோன்றுகின்றது. உச்சத்தில் இருந்து ஒரே நாளில் வில்லன் ஸ்தானத்துக்கு வீழ்ந்த யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, மீண்டும் ஒரே இரவில் தன்னை கதாநாயகன் அந்தஸ்துக்கு துணிச்சலுடன் தூக்கி நிறுத்தி, தான் அலங்கரிக்கும் பதவி நிலையின் தனித்துவச் சிறப்பை உலகுக்கு எடுத்தியம்பி நிற்கின்றார். எந்தப் பத்தியில் அவரை வைதோமோ அந்தப் பத்தியில் அவரைப் பாராட்டி மெச்சும் கைங்கரியத்தை ஓரிரு தினங்களுக்குள் ஆற்றச் செய்யும் அதிசயத்தை அவர் புரிந்திருக்கின்றார். இத்தகைய ஓர் இக…
-
- 0 replies
- 910 views
-