நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
-
- 1 reply
- 587 views
-
-
கரோனா காலத்தை ஏன் கிளாசிக்ஸ் வாசிப்புக்குச் செலவிட வேண்டும்? நாம் வெகுகாலத்துக்குப் பிறகு வீடுகளுக்குள் நீண்ட நாட்கள் வெளியே செல்ல முடியாமல் அடைகாக்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும்பாலான மனிதர்கள் தொலைத்த அவகாசத்தின் கருவூலம் நம் முன்னர் இப்போது திறந்து கிடக்கிறது. துரத்தும் நோய் பயம், பொருளாதார நிச்சயமின்மை, துயரங்களுக்கு மத்தியில் இந்த அவகாசம் நம்மை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சற்றுக் கூர்ந்து பார்த்தால் இங்கே நமக்குக் கற்பதற்கான, படிப்பினைக்கான, சுயபரிசீலனைக்கான இடம் இருக்கிறது. ஏனெனில், ஒரு தனிமனிதனும் சரி, ஒரு சமூகமும் சரி, ஒரு நெருக்கடியில்தான் தன்னைத் திரும்பிப் பார்த்து ஆழமாகப் பரிசீலிக்கிறது. எளிமையானதும் சௌகரியமானத…
-
- 0 replies
- 713 views
-
-
பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்…
-
- 0 replies
- 586 views
-
-
ஆளுமைகளின் பங்களிப்பு …… எமது வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே பலவகையான ஆளுமைகள் தங்களின் செல்வாக்கை பலவிதங்களிலும் செலுத்தி எங்களின் சொந்த ஆளுமை வடிவமைப்பை ஆக்குவித்திருந்திருப்பார்கள். பெற்றோர் , உடன் பிறந்தோர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , ஊரார் , முன்னர் இருந்த பிரபலங்கள், சம கால பிரபலங்கள் என்று ஒரு நீண்ட நிரல் . யாழ் திண்ணை வாசிகள் தங்களின் ஆளுமை வளர்ச்சியில் மற்றையவர்கள் செல்வாக்கும் பங்களிப்பும் எவ்வாறு இருந்தது என்பதனை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மீட்டலாகவும், மற்றயவர்களுக்கு உதவியாகவும் சுவாரசியமாகவும் இருக்கக்கூடுமே. தொடக்கமாக எனது தந்தையாரின் பங்களிப்பைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு. குழப்படி செய்து பிடி பட்டால் அம்மா பிரம்பை தூக்க…
-
- 0 replies
- 449 views
-
-
25.12.08 கவர் ஸ்டோரி பெங்களூரு ரங்கநாத். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேர…
-
- 0 replies
- 3.8k views
-
-
சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்? பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை ‘அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள் நினைவுபடுத்தியதன் காரணத்தினாலேயே அவ்வாறு சுவிஸ் மக்கள் அக்காலப்பகுதியில் அழைக்கப்பட்டார்கள். கல்வி கற்ற ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில் சுவிஸ் மக்கள் கிட்டத்தட்ட பழங்குடி மக்களைப் போல் வாழ்ந்ததாகவே அவர்கள் கருதினார்கள். சுவிஸ் நாட்டவர்களோ, தங்களைப் பற்றிய இந்த உண்மைக்குப் புறம்பான சித்தரிப்பை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று உணவுப் பொருட்களுக்கான விளம்பரமோ அல்லது உல்லாசப் பயணத்து…
-
- 0 replies
- 365 views
-
-
அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்! April 13, 2021 — தெய்வீகன் — தமிழர்களுக்கு இனிப் பிரச்சினையே இருக்காது என்று, விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றியை அறைகூவிய சிங்கள அரசுக்கு, தமிழர்களது ஆயுதப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்ட பின்னரும்கூட, தமிழ் தேசிய அரசியலின் வழியாக மாதமொரு தலையிடி இருந்துகொண்டுதானிருக்கிறது. அதற்கு எதிராக கோத்தபாய அரசு திமிறிக்கொண்ட மிகப்பிந்திய உதாரணம், யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைதும் அதற்கு சர்வ உலகமும் வெளிக்காண்பித்த எதிர்ப்பும் ஆகும். தனக்கு எதிராக அழுத்தங்கள் வருமென்று எதிர்பார்க்காமல், முன்னர் மொக்குத்தனமாக நடந்துகொண்டு அடிவாங்கிய சிங்கள…
-
- 0 replies
- 494 views
-
-
என் தலைவனும் நானும் இதை எழுதவேண்டும்போல் உள்ளது எங்கேயாவது கொட்டவேண்டும் இல்லையென்றால் நான் உயிர்வாழ்வது கடினம் எனக்கு சில உண்மைகள் தெரிந்தாகணும் சில கேள்விகளுக்கு பதில்வேண்டும் இங்கு எழுதுபவர்களாயினும்சரி அறிக்கை விடுபவர்களாயினும் சரி உள்ளக புறஅக உளவுத்துறையினராக இருந்தாலும்சரி பதில் தெரிந்தால் எழுதுங்கள் ஊகங்கள் தேவையில்லை தங்களது மூளையை உபயோகிக்கவேண்டாம் நெஞ்சையும் தொட்டுசொல்லவேண்டாம் கண்ணால் கண்ட சாட்சி மட்டும் இருந்தால் அல்லது அவர்கள் யாரையாவது நீங்கள் கண்டிருந்தால்..... மட்டும் இதற்கு பதில் தாருங்கள் அதிலும் என் தலைவன் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் பதில் தாருங்கள் நான் அதை ஏற்கவேண்டுமாயின்.…
-
- 43 replies
- 7.2k views
-
-
வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி ஹாவா ‘ஆவா’வானதா அல்லது ஆவாயன் ‘ஆவா’வானதா? கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார், மூவரைக் கைது செய்திருந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , ‘ஆவா’ குழுவில் இருந்து சிலர் பிரிந்து, ‘லீ’ குழுவை ஆரம்பித்து உள்ளனர் எனவும் அந்தக் குழுவுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றியமையால் தான் ‘லீ’ குழுவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு , பாடல் உருவாக்கிய கலையகத்தையும் (ஸ்டூடியோ) தீயிட்டு கொளுத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட…
-
- 0 replies
- 424 views
-
-
1999 ற்கும் – 2009ற்கும் இடைப்பட்ட காலத்தில் EPDP குறித்த விமர்சனங்களுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளருமான முருகேசு சந்திரகுமார் வழங்கிய நேர்காணல்.
-
- 0 replies
- 333 views
-
-
தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். தலாய் லாமா இலங்கைக்கு வருகைத்தருவாராயின் அது இங்கு வாழும் பௌத்த மக்களுக்கு பெரும்பேறாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாதிரமன்றி, உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் பௌத்த கலாசார நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுமென்று பௌத்தமதத் தலைவர்கள் சில கருத்துக்களைத் தெர…
-
- 1 reply
- 360 views
-
-
தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?… அகரன்June 26, 2018 in: முகநூல் இன்று முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பித்து தமிழை வளர்ப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக இருந்தது அச்செய்தி பெருமைக்குறிய அந் நிகழ்வின் நோக்கம் 30 லட்சம் டொலர்களை சேகரிப்பது ( அண்ணளவாக 400 கோடி இலங்கை ரூபா ) அதற்கான முதல்நாள் நிகழ்விலேயே தமிழை நேசிக்கும் கனடா வாழ் பரோபகாரிகள் 700,000 டொலர்களை தமிழை காப்பாற்றவென வாரி வளங்கிவிட்டனர் இதில் கனடியத் தமிழர் பேரவை மாத்திரம் 50,000 கனடிய டொலரை வழங்கியதாம் கடந்த ஆண்டு கனடாவுக்கு பக்கத்து நாடான அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்க…
-
- 2 replies
- 788 views
-
-
வடக்கு மாகாண கல்வித் துறையில் கவனம் கொடுக்கவேண்டிய துறையும் கவனிப்பாரற்ற நிலையும் இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு புதிய சிந்தனைகளில் வழி அண்மைக்காலத்தில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயமாக மாறியிருப்பது பாடசாலைகளில் அமைந்துள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகு (Counselling and Guidance Unit ) ஆகும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறிவரும் உலகின் இயல்புக்கும், சவாலுக்கும் ஏற்ற விதத்தில் நமது மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக நடவடிக்கை வேண்டி பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட் சபையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் (Bob Brown) இந்த பிரேரணையை சமர்பித்துள்ளார். . அவுஸ்திரேலிய செனட் சபையின் எதிர் தரப்பின் ஆதரவுடன் குறித்தப் பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . இதேவேளை, செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் தனது பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. My link
-
- 2 replies
- 984 views
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன. ஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்…
-
- 0 replies
- 495 views
-
-
குறைந்த வாக்குகள் வாங்கிய பகுதிகளில் அடுத்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம். அவர்கள் மக்களை நோக்கிச் செல்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலும் அவர்களுக்குக் கிளை இருக்கிறது. தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. இரண்டாவது முறையாக மோடி, வரும் 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்குசதவிகித…
-
- 0 replies
- 699 views
-
-
ரத்தன தேரரின் ‘முயல்’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:09Comments - 0 முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவாதிகளும், அவர்களுக்குத் துணைபோகும் ஊடகங்களும் நீண்ட காலமாகவே, எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதிகளுடன் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்புகள் இர…
-
- 0 replies
- 691 views
-
-
அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் ‘இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி கஸ்தூரி னிவாசன் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆய்வரங்கத்தில், இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்து ஃபிரன்ட்லைன் முதுநிலை துணை ஆசிரியர் ஆர்.கே.ராதா கிருஷ்ணன் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோச கரும், மேற்கு வங்க மாநில முன் னாள் ஆளுநருமான எம்.கே.நாராய ணன், ஈழ அகதிகள் மறுவாழ்வு நிறுவன பொருளாளர் எஸ்.சி.சந்திர ஹாசன், ‘இந்து’ என்.ராம் ஆகியோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
-
- 1 reply
- 336 views
-
-
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்பதை ஆட்சியாளர்களும் சிங்கள பேரினவாதி களும் ஒருபோதும் விரும்பவில்லை என்பது தெள்ளத் தெளிவு. இதற்கு துணைக் காரணங்கள் பல இருந்தாலும் பிரதான காரணங்கள் இரண்டு. அதில் ஒன்று நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை எடுத்துக் கொண்டால், அவரை ஏமாற்றவோ அல்லது சலுகைகளைக் காட்டி தம்பக்கம் வாலாசப்படுத்தவோ முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்குதெரியும். இதனால் அவரை அவர்கள் விரும்ப வில்லை. இரண்டாவது காரணம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து பேசுவாராயின் அதற்கு சர்வதேச சமூகம் நிச்சயம் செவி சாய்க்கும் மதிப்பளிக்கும். அதிலும் குறிப…
-
- 0 replies
- 332 views
-
-
வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், "கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார். வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகி…
-
- 1 reply
- 322 views
-
-
தமிழரசுக் கட்சியின் தான்தோன்றிதனமான செயல்பாட்டினால் இன்று பாரிய பின்னடைவான நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றது. January 4, 20211:49 pm (வேங்கையன்) தந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை சிலவற்றை தெளிபடுத்துகின்றோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையானது யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களின் இணைப்பில் இருந்து வேட்பாளர் இணைப்புவரை தவறு செய்கின்றன. கடந்த தேர்தல் காலங்களில் இருந்து இன்றுவரை தொடர் தோல்வியை சந்திக்கும் வேட்பாளர்களையும் மக்களால் அ…
-
- 0 replies
- 340 views
-
-
உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும்! நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது. இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவரா…
-
- 6 replies
- 784 views
-
-
இந்தியாவிற்காகவும் புலம்பெயர் தமிழர்களுக்காகவும் அமைந்த உரை!! 2007 நவம்பர் 27 மாலை 5.25 மணி முழங்காவில் துயிலும் இல்லத்தின் வெண்மணற் பரப்பில் கால்களை பதைத்தபடி எதையோ எதிர்பார்த்துகாத்திருந்தேன். வரிசை வரிசையாக நீழும் விதைக்கப்பட்ட புனிதங்கள் அமைதியாய்படுத்திருந்தன. ஒவ்வொரு புனிதங்களுக்கு முன்னாலும் அளவுகளில் சாதனைபடைக்கும் மாலைகளும், வர்ணப்பூக்களும், உணவுப்பண்டங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அதனையும், ஏற்றப்படாத தீபத்தட்டையும் காத்தபடி உறவினர்கள் நின்றனர். தமது பிள்ளைகளை, தமது சகோதரர்களை நினைந்து உருகாத உறவினர்களைக்காணவே முடியவில்லை. மூக்கிழுக்கும் சத்தங்கள் மட்டுமே புனிதவெளியின் அமைதியை சீரழித்தன. இவை எதுவுமே அற்ற அநாதைப் புனிதங்களும் சில பூக்களையும், ஏற்றப்படாத த…
-
- 0 replies
- 273 views
-
-
வானில் பறக்கும் புலம் பெயர் தமிழரும் பறந்து போன கடந்த காலமும் March 19, 2010 கோடை விடுமுறைக்கு யாழ். பயணங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.. எயார் லங்கா விமானங்கள் புலம் பெயர் தமிழரால் நிறைந்து வழிகிறது.. சாட்டட் விமானத்தில் பயணிக்கப் போகிறார்கள் மேலும் பலர்.. வரும் கோடை விடுமுறைக்கு சிறீலங்காவிற்கு பயணிப்பதற்கு பெருந்தொகையான தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். ஏயார்லங்கா உட்பட சகல விமானங்களும் ஆசனங்கள் இன்றி நிறைந்து வழிகின்றன. இதுவரை தமிழ்நாடு சென்னைக்கு நிறைந்த உல்லாசப்பயணங்கள் மறுபடியும் இலங்கை நோக்கி திரும்புகின்றன. இந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்து சமூக ஆர்வலர் மு.இராஜலிங்கம் எழுதியுள்ள ஆதங்கம் நிறைந்த கட்டுரை. தழிழர்களாகிய நாம் கடந்தகாலப் புகழ்ப்பேச்சும் எத…
-
- 5 replies
- 897 views
-
-
தமிழில்: ஜெயந்திரன் பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு விரோதமானவை என்பதுடன் மனிதாபிமானம் அற்றவை என்று கூறி பிரித்தானிய எதிர்க்கட்சி, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றவர்களிடமிருந்து அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது மிகவும் மோசமானது என்று முடிக்குரிய பிரித்தானிய இளவரசரான சாள்சும் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சக் கோரிக்கையாளரை மேற்குற…
-
- 0 replies
- 225 views
-