நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கோட்டாவைத் துரத்தும் பழைய கணக்கு Published By: VISHNU 02 JUL, 2023 | 06:01 PM (சுபத்ரா) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறது. இது பழைய கணக்குத் தான், என்றாலும், புதிதாக திறக்கப்பட்டு, அவருக்கு எதிராக திரும்புகின்ற நிலை உருவாகியிருக்கிறது. ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒடுக்கும் நடவடிக்கையின் போது, மாத்தளை மாவட்டத்தில் இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் இராணுவ இணைப்பதிகாரியாகவும் இருந்தவர் லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ. கஜபா ரெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிர…
-
- 0 replies
- 398 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றானதும் ஒழுக்கமும் தெய்வீக ஐதீகமும் கொண்டதுமான அருகிவரும் விளையாட்டுமான போர்த்தேங்காய் (எறி தேங்காய்) அடித்தல் வைபவம் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நேற்று (18) மாலை நடைபெற்றது. ஒருவர் தனது கையிலே தேங்காய் வைத்திருக்க இருபது மீற்றர் தூரத்திலுள்ள இன்னொருவர் தனது கையிலுள்ள தேங்காயை மற்றவரின் கையிலுள்ள தேங்காயை நோக்கி வீசுவார். அந்த சந்தர்ப்பத்தில் மற்றையவர் தனது கையிலுள்ள தேங்காயினால் எதிரே வரும் தேங்காயை தடுத்து உடைக்கும் அல்லது அடிக்கும் நிகழ்வு “போர்த்தேங்காய் அடித்தல்” என அழைக்கப்படுகிறது. சித்திரை வருடபிறப்பினை தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த தேங்காய் அடித்தல் வைபவம் நடைபெறும். தேங்காய் …
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி Jun 16, 20190 நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு …
-
- 1 reply
- 471 views
-
-
கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஒருவர், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன; இலங்கை இராணுவத்தின் அதிசிறப்பு படைப்பிரிவு எனக் கருதப்படும், 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிக்கட்டப் போரில் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி, இராணுவத்தின் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த செப்டெம்பர் ஐந்தாம் திகதி தான் ஓய்வு பெற்றார். “நந்திக்கடலுக்கான பாதை” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 780 பக்…
-
- 0 replies
- 321 views
-
-
-
- 2 replies
- 517 views
-
-
கோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்! – சி.சிவேந்திரன்- September 15, 2019 மனித இனத்தின் அறிவுக்கண்ணைத் திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக பாடசாலையே காணப்படுகின்றது. ஒரு மனிதனுக்கு அறிவு, திறன் ஆகியவற்றை வழங்கி அவனது மனப்பாங்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அவனை மனிதனாக்கி வாழ வைப்பதற்குரிய முக்கிய பணியை பாடசலைகளே ஆற்றுகின்றன. இதனால்தான் பாடசாலைகள் இறைவழிபாட்டுத் தலங்களை விட மேலானவையாகப் போற்றப்படுகின்றன. அறிவுக்கண்ணைத் திறந்து மனிதனை மனிதனாக்கி மனிதனாக வாழவைக்கும் மிகமுக்கிய பணியைச் ஆற்றும் பாடசாலைக்குத் தீ வைத்து எரித்தல் என்பது மனிதன் தனக்குத் தானே தீ மூட்டி தன்னை எரித்துக்கொள்வதுடன் தனது இனத்தையே எரித்து …
-
- 1 reply
- 411 views
-
-
கோத்தபாய கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் கிளம்பும் பல கேள்விகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து தவிர்க்கப்பட்ட கடவுச்சீட்டொன்றை கடந்த மே மாதம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் கேள்விகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. தான் இலங்கைச் சட்டத்தின் கீழ் இப்போது ஒரு இரட்டைப் பிரஜையல்ல என்பதற்கு இந்தக் கடவுச்சீட்டு சான்று என்று கடந்தவாரம் ராஜபக் ஷ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் கள் வழமையாக இலங்கைக் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு விரும்பினால் குடியுரிமைச் சட்…
-
- 0 replies
- 903 views
-
-
கோத்தாவுடன் எனக்கு எந்த தொடர்புமில்லை : இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் (ஆர்.யசி ) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்ததில்லை. அவர்கள் எனக்கு சம்பளம் கொடுக்கவும் இல்லை. என்னைக் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைக்க வேண்டும் என்ற தேவை சிலருக்கு உள்ளது என இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்காக அழைக்…
-
- 0 replies
- 256 views
-
-
கோத்தாவின் உள்ளக எதிரிகள்: ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் சூடு பிடிக்கும் மோதல்கள்..! 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், துணிச்சலுடன் மஹிந்தவை எதிர்த்தனர். ராஜபக் ஷ குடும்பத்தின் சர்வாதிகாரத்தனம் குறித்து விமர்சனங்களைச் செய்தனர். அவர்களில் சிலர் பின்னர் மஹிந்தவிடமே போய் சரணடையவும் தவறவில்லை. அவ்வாறு மஹிந்தவின் பின்னால் இருந்தவர்கள் மத்தியிலிருந்து, இப்போது, மீண்டும் எதிர்க்குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு குமார வெல்கமவைக் குறிப்பிடலாம். பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பெரும்பாலும் உ…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 2020-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Narendra Modi ✔ @narendramodi புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @GotabayaR அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன். -…
-
- 1 reply
- 799 views
-
-
கோத்தபயவுக்கு தஞ்சம் கொடுக்க மறுத்த மோடி: பின்னணி என்ன? Jul 16, 2022 09:54AM IST கடந்த ஜூலை 9ஆம் தேதி முதல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் மக்கள் திரள் நுழைந்ததிலிருந்து, சொந்த நாட்டிலேயே மூன்று நாட்கள் அதிபர் அகதியாக ஓடியலைந்த அவர், ஜூலை 13 ஆம் தேதி மாலத்தீவு வழியாகச் சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வளைகுடா நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நிதியுதவி என எல்லா உதவிகளும் செய்த இந்தியா அதாவது நமது பிரதமர் மோடி தஞ்சம் கொடுக்கும் விஷயத்தில் மட்டும் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு கோத்தபய இந்திய மண்ணில் இறங்குவதைத் தவி…
-
- 0 replies
- 277 views
-
-
பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் அவசியம் என்பதால் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். காலப்போக்கில் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையை இழுப்பதற்கு பைடன் நிர்வாகம் முயற்சிக்கக்கூடும் என்றும…
-
- 0 replies
- 533 views
-
-
கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் - செய்தி. . திரு கோத்த பாய அவர்களே, ”சிறையில்தான் ஜெயபாலனின் மீதி வாழ்வு முடியும்” என்ற தீர்மானத்தோடு 2013 நவம்பரில் என்னைக் கைது செய்தீர்கள். தேசிய சர்வதேச அழுத்தத்தால் என்னை விடுதலை செய்தபோதும் என் கடவுச் சீட்டில் கரும்புள்ளி வைக்க உத்தரவிட்டீர்கள். மீண்டும் எனது மண்ணுக்கு வர உங்கள் ஆட்ச்சி கவிழும்வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. . இப்ப நீங்க தேர்தலில் நிற்க்கப்போகும் செய்தி வந்திருக்கு. நீங்க வெற்றி பெற்றால் நான் இலங்கைக்கு வரமுடியுமா? என்னை மீண்டும் கைது செய்வீர்களா? . சென்றமுறை “ஜெயபாலன் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை ஆனால் உங்களுக்கு தமிழரையும் முஸ்ல…
-
- 5 replies
- 935 views
-
-
கோத்தா வளர்த்த மத தீவிரவாதம் தௌஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களும், பொது பல சேனா உறுப்பினர்கள் பலரும், கோத்தாவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் payroll ல் இருந்தார்கள் என்கிறார் அமைச்சர் ராஜித. The Minister also claimed that one of the terror organisations identified as responsible for Easter Sunday attacks NTJ along with number of other groups such as Bodu Bala Sena were initially funded by a “secret account of the Defence Ministry” during the previous government, under the Defence Ministry secretary Gotabaya Rajapaksa. He also made claims that 26 members of the National Thawheed Jama’ath were on the Defence Ministry pay roll. Senaratne also cl…
-
- 2 replies
- 1.2k views
-
-
கோத்தா வென்றதும் மஹிந்த பிரதமராக நியமிக்கப்படுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் - அமரவீர (செ.தேன்மொழி ) தற்போதைய அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு எந்தவித நலனும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அரச ஊழியர்கள் தொடர்பில் எந்தவிதமான சிறந்த வேலைத்திட்டமும் உள்ளடக்கப்பட வில்லை. ஆனால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களுக்கு பல சிறந்த கொள்கைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கோத்தாப…
-
- 0 replies
- 209 views
-
-
கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கும் தேசியவாதிகளிற்கும் புத்துயிர் அளித்துள்ளது- அவர் ஆட்சிக்கு வந்தால் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்.- சந்தியா எக்னலிகொட ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர் செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழில் - அ. ரஜீபன் 1 இலங்கையில் …
-
- 0 replies
- 306 views
-
-
கோத்தாபயவின் அடுத்த இலக்கு வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் படைத்தளங்களாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கூட படிப்படியாகவும், கொஞ்சம் கொஞ்சமாகவும், இத்தகைய குடியேற்றங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், 2020ம் ஆண்டில் வடக்கில் இராணுவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற கருத்தரங்கு கடந்தவாரம் 62வது டிவிசன் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டிருக்கிறது. அதில், 2020ம் ஆண்டில் இலங்கையின் அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம் குறித்தும், வடக்கின் அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் இராணுவப் படைகளின் வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்கில் வளவாளராகப் பங்கேற்றவர்களில் ஒருவர் சட்டத்தரணி கோமின் தயாசிறி.இவர் ஒரு தீவிர சிங்களத் தேசியவா…
-
- 0 replies
- 641 views
-
-
கோத்தாபயவின் மூன்று முகம்! கர்னல் ஆர் ஹரிஹரன் இலங்கையில் ஆகஸ்ட் 5 இல் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. முதல் காரணம் கொரோனா தாக்கத்தால் தேர்தல் திகதி ஏற்கனவே இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு வாக்குப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மா…
-
- 0 replies
- 493 views
-
-
கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்! - எம்.ஏ சுமந்திரன் February 2, 2019 எம்.ஏ சுமந்திரன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அரசியல் பயணம், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த வீரகேசரிப் பத்…
-
- 1 reply
- 458 views
-
-
கோத்தாவின் ஆட்சியில் மலையகத்துக்கு சுபீட்சம் - ஆறுமுகன் தொண்டமான் செவ்வி நாங்கள் 32 அம்ச கோரிக்கைகளை கோத்தபாயவிடம் முன்வைத்தோம். அவை மலையக மக்களுக்கு மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கான தேவையான விடயங்களை கொண்டுள்ளன. அவற்றை கோத்தாபய ராஜபக்ஷ முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவரும் சில யோசனைகளை எம்மிடம் வழங்கினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். தாமரை மொட்டு அரசாங்கத்தில் 18 ஆம் திகதிக்கு பின்னர் சுபீட்சமான வாழ்க்கையில் நல்ல வீடுகள் கிடைக்கும். புதிய கிராமங்கள் கிடைக்கும். எல்லாமே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு …
-
- 0 replies
- 239 views
-
-
தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோத்தபாயவிற்கு நெருக்கமான அதிகாரியான அனுர சேனநாயக்க, கோத்தபாயவின் கட்டளைகளுக்கு இணங்கச் செயற்பட்டார் என்பதில் எவ்வித இரகசியமுமில்லை. அனுராவின் கைதானது கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான சரியான நேரத்திற்காக ஊழல் மற்றும் மோசடிக்கான இயக்குனர் டில்ருக்சி காத்திருப்பதை வெளிக்காட்டும் சுவரொட்டிகள் கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. கடந்த 4ஆம் நாள், இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வேளையில், சிறிலங்கா …
-
- 0 replies
- 210 views
-
-
கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார் அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க - கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கி…
-
- 1 reply
- 326 views
-
-
கோத்தாவை போத்தாவாக மாற்றுதல் 000000000 மறுசீரமைப்புத் திட்டத்திற்கான கதவுகளைத் திறக்க முடிந்தால், அதைஅமுல்படுத்த தென்னாப்பிரிக்காவைப் போன்று ஒருதுணைச் சட்டத்தை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய சமூக நெருக்கடிநிலைமையில் கோத்தாவை போத் தாவாக மாற்றினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் 0000000 ”தென்னாபிரிக்காவில்இடம்பெற்றிருந்த இந்த வரலாற்றுரீதியான பரி சோதனையிலி ருந்து இலங்கையில் நாங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் எதிர்கொள்ளும் தடைகளை வழக்கமான மற்றும் பழக்கமான முறைகளால் கடக்க முடியாத தருணங்கள் இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் மாற்றத்தை தோற்றுவிக்கும் திட்டத்திற்காக முதலில் மண்டேலா…
-
- 3 replies
- 904 views
-
-
இனி தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்க்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும், அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது! தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம்... நாடெங்கும்-உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள்& கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன. தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள், காட்டிக் கொடுக்கும் கயவாளி மக்கள், இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் & புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் ப…
-
- 0 replies
- 656 views
-