Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய யாழ்ப்பாணக் குறிப்பேடு--எப்பிடியிருந்த யாழ்பாணம் இப்படி???

Featured Replies

இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக் குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால் காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம் முகப்பில் வெளியான ‘ஆனந்த விகட’னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுதான் ஈழத்தின் இன்றைய நிலவரம்.

அநாமதேயன்

குறிப்பு (1)

மட்டக்களப்பிலிருந்து சலீம் தொலைபேசியில் கதைத்தான். ஜூலை 2008 காலச்சுவடு பற்றிய பேச்சு வந்தது. சலனி, நவாஸ் சௌபி ஆகியோரது கவிதைகளும் 1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதியும் அதற்கேற்ற முகப்புப் படமும் தாங்கி அவ்விதழ் வெளிவந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அது இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையில் பலதடவைகள் விசாரித்தும் வரவில்லையென்று சொன்னார்கள். சிற்றிதழ்களுடன் பரிச்சயமுள்ள நண்பன் ஒருவனிடம் இது பற்றிக் கேட்டேன். 1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதி அவ்விதழில் இடம்பெற்றுள்ளதால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவ்விதழை எடுத்துவர இராணுவம் தடைவிதித்துள்ளதாகச் சொன்னான். இதேபோல் செப்ரெம்பர் 2006 காலச்சுவடு இதழின் முகப்பில் ‘சுதந்திர இலங்கை’க்குள் இராணுவ ‘வீரன்’ ஒருவன் நின்றுகொண்டு ‘Stop’ எனக் காட்டும் (ஏ-9 வீதி மூடப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும்) படம் இடம்பெற்றதால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட அவ்விதழின் எல்லாப் பிரதிகளினதும் முகப்புக் கிழிக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்து ‘ஒக்கமே மஹிந்த சிந்தனையாக்’ (எல்லாம் மகிந்த சிந்தனை) எனச் சிரித்தான்.

குறிப்பு (2)

இப்போது நான் செய்தித்தாள்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவருகிறேன். ‘புதுக்குடியிருப்பில் எறிகணை வீச்சு’, ‘நூற்றுக்கு மேற்பட்டோர் உடல் சிதறிப் பலி’, ‘ஐம்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம்’, ‘வீதியெங்கும் சடலங்கள்’ எனத் தலைப்பிட்டு ஒவ்வொரு நாளும் கண்டு சகிக்க முடியாத படங்களுடன் யாழ்ப்பாணத்துச் செய்தித் தாள்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று தினங்கள் இவற்றைத் தொடர்ந்து வாசித்ததில் சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை. கனவில்கூடப் படுக்கை விரிப்புகளிலும் சாக்குகளிலும் கூழாகிப்போன பிரேதங்கள் அள்ளப்படும் காட்சிகளே தொடர்ந்து வருகின்றன. அலென்ரனேயின் ஹிரோஸிமா மொர் அமோர் திரைப்படந்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. இணையதளத்துடன் பரிச்சயமுள்ள நண்பனொருவன் வீட்டிற்கு வந்திருந்தபோது இணையதளமொன்றில் ‘மனதைரியமுள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்’ என்ற தலைப்பில் சில படங்களைப் பார்க்க நேர்ந்ததாகவும் எறிகுண்டு வீசப்பட்டுக் கருகிப்போன நிலையில் பற்கள் வெளித்தள்ளிய நிலையில் குவியல் குவியல்களாகச் சடலங்கள், தலை சிதறிய முண்டங்கள் அப்படங்களில் நிரம்பியிருந்ததாகவும் ஐந்தாறு படங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லையென்றும் சொன்னான்.

குறிப்பு (3)

அண்மையில் யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியில் வசிக்கும் தேவராஜா சாளினி (வயது 18) சுருக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டதாகத் தகவல் வந்தது. இப்பெண் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தேற்றி 2AB என்ற பெறுபேற்றைப் பெற்றிருந்தும் ‘Z’ முறைத் தரப்படுத்தலின் காரணமாக யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட உள்நுழைவுக்கான அனுமதியைப் பெற முடியாத நிலையில் மனவிரக்தியுற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகவே கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. சம்பவம் நடைபெற்ற தினத்தில் இப்பெண் வீட்டில் தனித்திருந்துள்ளார். இவரது வீட்டிற்கருகில் இராணுவக் காவலரண் அமைந்துள்ளது. அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வீட்டினுள் புகுந்து சாளினியை வல்லுறவுக்குட்படுத்திக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய சாளினியின் தொடைப் பகுதியிலிருந்து இரத்தம் கசிந்திருந்தது. படையினர் சாளினியை வல்லுறவுக்குட்படுத்தியமைக்

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

இதனை படித்தபோது அண்மையில் ஒரு நண்பர் சொன்னார், இங்கு வாழும் தமிழர்களிடம் உள்ள விடுதலை உணர்வை தன்னால் யாழில் காணமுடியவில்லையென்று........ அதனை நான் நம்பவில்லை. இப்போ நம்பாமலும்..............

குறிப்பு 7, மூன்றாவது மாடி....... இவளவு வக்கிரத்தனமாகிச் சாக்கடையாக அந்த அழகிய கலாச்சார மையத்தின் தலைமுறை தவறிய தலைமுறையாக...... மனங்கள் ரணமாகியது சிங்களவனது கொடுமையால்! மனங்கள் பிணமாகியது இதனைப்படித்த போது !

  • தொடங்கியவர்

என்னிடமும் ஒரு நண்பர் சொன்ன போது வெட்கி தலைகுனிந்தேன்,அதே போல் இச் செய்தியை இருட்டடிப்பு செய்ய நான் முயலவில்லை ஏனெனில் உண்மை உலகுக்கு தெரிய வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.