Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

பேசாம கந்தபுவை தமிழீழ சுற்றுலா ஆலோசகரா போட சொல்லி கேட்கலாம் போல இருக்கு ;)

அரவிந்தன்...நீங்கள் சொன்னது எல்லாம் பார்த்து ஆசையாக இருந்தது...ஆட்களை சாப்பிடுவாங்க என்னும் போது தான்....

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2ம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவத்தினர் பற்றி விளக்கம் அளித்த இடத்துக்கு அருகில் (Taniliou Havana Harbor ) சுற்றுலாப்பயணிகள் உபயோகிப்பதற்காக இருந்த மலசலகூடத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம். இம்மலசலகூடம் மக்கள் வாழும் குடியிருப்புக்களில் அமைந்திருக்கிறது. இங்கு சென்ற எங்களுடன் வந்த வெள்ளைக்காரர்கள் நிரம்ப அவதிப்பட்டார்கள்.

p3050087xu9.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அருகில் உள்ள வீடுகளில் பார்த்தால் பெரும்பாலோர் மர நிழலில் இருந்து கதைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தார்கள். இவர்கள் எல்லா நேரமும் வேலைக்கு போவதில்லை. சில மணித்தியாலங்கள் வேலைக்குப் போய்விட்டு (தோட்டவேலை அல்லது மீன்பிடிப்பு) அதில் கிடைக்கும் உணவுகளினை உண்டு மிகுதி நேரங்களில் ஒய்வெடுத்து பொழுதைப் போக்கி வாழ்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஆடம்பரமாக இங்கு வாழ்வதில்லை. தேவைக்கு மேல் ஆசைப்படுவதுமில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாரதர் குறிப்பிட்டது போல உலகில் மிகவும் சந்தோசமாக வாழும் மக்களாக வனு-அற்று மக்களை பி.பி.ஸி கருத்துக்கணிப்பில் தெரிவு செய்துள்ளார்கள்.

p3050088ad7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

p3050091rl1.jpg

p3050093oy0.jpg

p3050095ul1.jpg

  • தொடங்கியவர்

இங்குள்ள மக்கள் அதிகமானோர் வீடுகளில் பன்றிகளை வளர்க்கிறார்கள்.இலங்கையில் திருமணத்தின் போது பெண்வீட்டாரினால் மாப்பிள்ளைக்கு சீதனம் வழங்குவது போல வனு-அற்றில் பெண்வீட்டார்கள், மணமகனுக்கு தந்தமுள்ள மிகவும் பெரிய பன்றியினைத் திருமணத்தின் போது சீதனமாகக் கொடுப்பார்கள்.

p3050092ef4.jpg

Edited by Aravinthan

அரவிந்தன் என்ன இந்த ஊரைப்பற்றி நிறைய ரீசேச் செய்து இருக்கிறீங்கள் போல. பல அறியாத தகவல்களும் அழகான படங்களும் தந்தமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்

வாசித்துக்கருத்துக்கள் பதிந்த தூயாவுக்கும், ரசிகைக்கும் நன்றிகள்.

ஆட்களைச் சாப்பிடுவார்கள் என்று பயப்படவேண்டாம் தூயா. முன்பு தான் மனிதர்களினை இன்னாட்டில் சிலர் சாப்பிட்டார்கள். பிறகு மனிதர்களைச் சாப்பிடுவது படிப்படையாகக் குறைந்து இப்பொழுது சாப்பிடுவதில்லை.(கடைசியாக 1969ம் ஆண்டில் தான் சாப்பிட்டார்கள்). இன்னாட்டில் வாழ்பவர்கள் மிகவும் நல்லவர்கள். குற்றச்செயல்கள் இன்னாட்டில் மிகவும் குறைவு.ஏற்கனவே இது பற்றி இங்குள்ள சிறைச்சாலைகள் பற்றிய குறிப்பில் விளக்கம் தந்திருக்கிறேன்.

நான் பெரிதாக இன்னாட்டினைப்பற்றி ஆராட்சி எதுவும் செய்யவில்லை ரசிகை. இன்னாட்டுக்கு சென்றபோது வனு-அற்று மக்களுடன் கதைத்தபோது கிடைத்த தகவல்களும், அங்கு வனு-அற்று பற்றி வாசித்த தகவல்களும் வைத்தே இங்கே பதிந்துள்ளேன். இங்கே இணைத்த 95 வீதமான படங்கள் எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்டவை.

நன்றி அரவந்தன், your presentation style is very nice, the way you organised your article is really really nice. Thank you keep it up...

அரவிந்தன் அண்ணா அங்கு வினைக்கெடுவதைப்பார்த்தால் அதுவே அவருடைய புகுந்த நாடு போல் படுகிறது உண்மையாகவா?

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் அன்னியன்.

மதுக்கா,ஈழத்தில் பிறந்த எனக்கு அவுஸ்திரெலியா தான் புகுந்த நாடு. வனு-அற்று நான் சுற்றுலா சென்ற நாடுகளில் ஒன்று.

நன்றி அரவிந்தன் நன்ராக எழுதுகிறீர்கள் உங்கள் தொழில்சார் தேர்ச்சி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா

நீங்கள் விரும்பினால் கூறுங்கள்

  • தொடங்கியவர்

நன்றி அரவிந்தன் நன்ராக எழுதுகிறீர்கள் உங்கள் தொழில்சார் தேர்ச்சி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா

நீங்கள் விரும்பினால் கூறுங்கள்

பொறியியல் துறையில் கல்விகற்று அதன் பிறகு கணணித்துறையில் கல்விகற்று கணணித்துறையில் வேலை பார்க்கிறேன். லண்டனில் இருக்கும் போது ஜேர்ஸி தீவுக்கு எனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றேன். ஜேர்ஸி தீவு, பிரான்ஸிற்கு மிகவும் அருகில் உள்ள தீவு. ஆனால் பிரித்தானியா நாட்டுக்கு சொந்தமானது. இது தான் எனது முதல் சுற்றுலா. அதன் பிறகு இங்கிலாந்தில் சுற்றுலா செல்வது, தெரிந்தவர்கள் வேறு நாட்டில் இருந்து வரும்போது அவர்களுக்கு இடம் காட்டுவதும் வழக்கம். இதனால் இணையத்தளங்களிலும், சுற்றுலாத்தகவல் நிலையங்களுக்கும் சென்று புதிய இடங்கள் பற்றி அறிந்து, நான் போகாத இடங்களுக்கு அவர்களைக்கூட்டிக் கொண்டு போவது வழக்கம். சிட்னிக்கு புலம் பெயர்ந்தபின்பும், வேறு நாடுகளில் இருந்து வரும் எனது நண்பர்கள், உறவினர்களுக்கு நான் போன இடங்களில் சில வற்றுடன், போகாத புதிய இடங்களுக்கும் கூட்டிச் செல்வேன்.இதில் பெற்ற அனுபவங்கள் தான் வனு-அற்றுக்கு நான் சென்றதும், யாழில் எழுத எனக்குத் தூண்டியதும் காரணங்கள்

அரவிந்தன்..சிட்னியிலும்..சிட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அரவிந்தன்..சிட்னியிலும்..சிட்

ஊர் நன்றாகத்தான் இருக்கின்றது அரவிந்தன்

தொடர்ந்து படங்களுடன் கூடிய தகவல்களை தாருங்கள்.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட ரமாவுக்கு நன்றிகள்

அரவிந்தன்..சிட்னியிலும்..சிட்
  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணத்தின் போது 2ம் உலகப்போரில் அமெரிக்காப்படைகளினால் குளிப்பதற்கு கட்டப்பட்ட, தற்பொழுது ஒருவரும் பாவிக்கமுடியாத நிலையில் பழுதடைந்துள்ள கேணி ஒன்றினைக் காட்டினார்கள்.

அதனைப்பார்த்துவிட்டு சில நிமிடங்கள் பயணம் செய்ய 'VETETAP FIREWALK' என்ற இடத்தினை அடைந்தோம். அங்கே செம்பரத்தம் பூவினை ஒரு கூடையில் வைத்திருந்த பெண் ஒருவர் எங்களுக்கு காதில் சூடுவதற்கு செம்பரத்தம் பூக்களைத் தந்தார். நாங்கள் ஒரு கொட்டில் இருக்க அதற்கு முன்னால் உள்ள எரிமலைக்கற்களின் மேல் விறகுகள் இட்டு, நெருப்பினை மூட்டினார்கள். நன்றாக எரிந்ததும் சாம்பலினை அகற்ற ஒருவர் அவ்விடத்தினை நோக்கிவந்தார்.

p3050097yg2.jpg

p3050098yr5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மேலாடை அணியாமல், ஒலைகளினால் வேயப்பட்ட ஆடையினை அணிந்து, தென்னம் பொச்சினைத் தலையில் அணிந்து நடந்து வந்தவர், எரிமலைக்கற்களின் மேல் நடந்தார்.

p3050099ov1.jpg

பெரும்பாலான சுற்றுலாக்களை வனு-அற்று நாட்டைச் சேர்ந்தவர்களே நடாத்துகிறார்கள். ஆனால் நான் சென்ற ஈவெட் தீவைச்சுற்றி வரும் இச்சுற்றுலாவினை அவுச்திரெலியா நாட்டவர்(படத்தில் பின்னுக்கு நிற்பவர்) வனு-அற்று மக்களைக்கொண்டு நடாத்துகிறார்.

p3050100gv5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அந்த அவுஸ்திரெலியா நாட்டைச்சேர்ந்தவர் 1 முறை இந்த எரிமலைக்கற்களில் நடந்ததாகவும் சொன்னார். அதற்கு மனதினைத் தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். எங்களுடன் வந்திருந்த ஒருவருக்கும் அதில் நடக்கிற எண்ணம் இருக்கவில்லை. நான் கொஞ்சம் முயற்சி செய்யலாம் என நினைத்து மெதுவாக எரிமலைக்கற்களில் காலை வைத்தேன். சாடையாகச் சுட ஒரே ஒட்டமாக எரிமலைக்கற்களினூடாக ஓடினேன். ஒரே கைதட்டல் கிடைத்தது. பிறகு அங்கிருந்து மீண்டும் திரும்பி எரிமலைக்கற்களில் ஊடாக வேகமாக ஒடி வந்தேன். சாடையாகத்தான் காலில் சூடு ஏற்பட்டது. அவர்கள் சொல்வது போல பயங்கர சூடு அல்ல. எதோ நெருப்புக்குள் நடந்து சாதனை படைத்து விட்டு திரும்பிவிட்டேன் என்று என்னுடன் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் சொல்லிப் பாராட்டினார்கள்.

p3050101vt0.jpg

தைரியசாலி தான்.. அடுத்த முறை போகும் நாடு..வனு அற்று தான் :) முடிவே செய்தாயிற்று..

(தகவல்களுக்கு நன்றி...நீங்கள் சொன்ன இடங்கள் எல்லாம்...பிறந்ததில் இருந்து நிறைய தடவை போய் உள்ளேன்..வேறு சொல்லுங்கள்..நன்றி)

நானும்தான் துயா அரவிந்தனண்னாவை காதில செவ்வரத்தம் பூவிடன் பார்க்கையில் சைவப்பழம் மாதிரி தெரியுது:)

  • தொடங்கியவர்

தொடர்ந்து வாசித்துக்கருத்துக்கள் பகிர்ந்த தூயா, ஈழவனுக்கு நன்றிகள்.

நானும்தான் துயா அரவிந்தனண்னாவை காதில செவ்வரத்தம் பூவிடன் பார்க்கையில் சைவப்பழம் மாதிரி தெரியுது:lol:

அவ்விடத்தில் வந்த எல்லோருக்கும் செம்பரத்தம் பூ ஒரு குடையில் இருந்து தந்தார்கள். வெள்ளைக்காரர்களும் காதில் பூவுடன் தான் அழைந்தார்கள்.அவர்களோடு எடுத்த படங்கள் என்னிடம் இருக்கிறது. ஆனால் நான், எனது முகம் தெரியும் படங்கள் இணைக்க விருப்பமில்லாதமையினால் இங்கு இணைக்கவில்லை.

அந்த அவுஸ்திரெலியா நாட்டைச்சேர்ந்தவர் 1 முறை இந்த எரிமலைக்கற்களில் நடந்ததாகவும் சொன்னார். அதற்கு மனதினைத் தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். எங்களுடன் வந்திருந்த ஒருவருக்கும் அதில் நடக்கிற எண்ணம் இருக்கவில்லை. நான் கொஞ்சம் முயற்சி செய்யலாம் என நினைத்து மெதுவாக எரிமலைக்கற்களில் காலை வைத்தேன். சாடையாகச் சுட ஒரே ஒட்டமாக எரிமலைக்கற்களினூடாக ஓடினேன். ஒரே கைதட்டல் கிடைத்தது. பிறகு அங்கிருந்து மீண்டும் திரும்பி எரிமலைக்கற்களில் ஊடாக வேகமாக ஒடி வந்தேன். சாடையாகத்தான் காலில் சூடு ஏற்பட்டது. அவர்கள் சொல்வது போல பயங்கர சூடு அல்ல. எதோ நெருப்புக்குள் நடந்து சாதனை படைத்து விட்டு திரும்பிவிட்டேன் என்று என்னுடன் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் சொல்லிப் பாராட்டினார்கள்.  

p3050101vt0.jpg

தம்பீ அரவிந்தன் நீர் ஓடித்தான் வந்தனீர் அடுத்த முறை துயா பிரதட்டை பண்ணிக்காட்டுவா எரிமலைக்கற்களினூடாக

அதுவும் நீர் செய்ததை விட 3 மடங்கு சூட்டுடன் கூடிய கற்க்களின் ஊடாக

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

என்ன சின்னப்பு துயாமீது இவ்வளவு கோபம் துயாவின் வெங்காயப்பகோடா வயிர்றுக்கு வேலையை காட்டிட்டுதோ அதுதான் பழிக்கு பழிவாங்க இப்படி வதந்தியை கிழப்புகிறீர்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கோவில் திருவிழாக்களுக்கு உந்த வெள்ளைக்காரர்களைக்கூட்டிச் சென்று காட்டவேண்டும். தீ மிதித்து நடப்பதினைப்பார்த்து விசில் அடிப்பார்கள். வரப்போகும் தமிழீழச்சுற்றுலாவிலையும் கோவில் திருவிழாக்களினைக்காட்டலாம் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.