Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தினமுரசு பத்திரிகையினை கட்டாயப்படுத்தி விற்பனைசெய்யும் ஈ.பி.டி.பி!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் அண்மையில் சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி தனது கட்சிப் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை விற்பனையை செய்யும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி ஈடுபட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படக்கூடாது என்று சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள ஈ.பி.டி.பி கட்சி தமது பிரச்சாரப் பத்திரிகையை மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர்களைக் கொண்டு எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

இந்தச் செயற்பாடானது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடாகவே கருதப்பட வேண்டும். அரசில் அங்கம் வகிக்கும் தேசவிரோத கட்சியாகிய ஈ.பி.டி.பி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளமைக்கு எதிராக தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் மாவட்டச் செயலகங்களிலும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனும் ஈ.பி.டி.பி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது ஆதரவாளர்களுக்கு இந்த நியமனங்களை வழங்கியிருந்தனர்.

யாழ்.குடாநாட்டில் திறமையான நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் எந்தவித வேலை வாய்ப்பும் இன்றி கஸ்டப்படுகின்ற நிலையில் மேற்படி ஒட்டுக்குழுக்களின் அரசியல்வாதிகள் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று உயர்தரத்திற்கே தகைமை பெறாத பலருக்கு இந்த சமுர்த்தி நியமனங்களை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஈ.பி.டி.பி யால் நியமனம் வழங்கப்பட்டவர்கள் தற்போது அந்தக் கட்சியின் பிரச்சாரப் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தினமும் அவர்கள் பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி அலுவலகங்களுக்கு செல்லும் போது ஒரு தொகை பத்திரிகைகளையும் தங்களுடன் எடுத்துச் சென்று பிரதேச செயலக மற்றும் சமுர்த்திச் சங்கம் போன்றவற்றில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் வெளியில் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு ஈ.பி.டி.பி அவர்களைக் கட்டாயப்படுத்தி இந்த தனது பிரச்சாரப் பத்திரிகைகளை விற்பனை செய்து வருகின்றனர். 

அரசாங்க உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றுள்ள இவர்கள் கட்சியின் பிரச்சாரப் பத்திரிகையை விற்பனை செய்கின்றமை தொடர்பில் இதுவரை உயரதிகாரிகள் பாராமுகமாக இருக்கின்றமை குறித்து ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை மேற்படி தினமுரசு பத்திரிகையை ஈ.பி.டி.பி மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்ற போதிலும் அதனை குடாநாட்டிலுள்ள யாரும் வாங்குவதில்லை. இதனால், குடாநாட்டிலுள்ள சனசமூக நிலையங்களுக்கு இலவசமாக இந்தப் பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/32108/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்க  ஐனநாயகம்...........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகளோடு நின்று கொண்டு துக்ளக்கை இலவசமாகவே மக்களிடம் திணித்தார்கள்.. மக்களோ தூக்கி வீசிவிட்டுப் போனார்கள்.. இப்ப இது. டக்கிளஸ் ஒரு முடிவோடதான் இருக்கிறார். சாகும் வரை திருந்தப் போறதில்லை என்ற முடிவு அது..! :icon_idea:

மத்தியில கூட்டு வன்முறை!
மாநிலத்தில் சுயமா வன்முறை!!!
- கேடி டக்ளசின் அரசியல் நோக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகளோடு நின்று கொண்டு துக்ளக்கை இலவசமாகவே மக்களிடம் திணித்தார்கள்.. மக்களோ தூக்கி வீசிவிட்டுப் போனார்கள்.. இப்ப இது. டக்கிளஸ் ஒரு முடிவோடதான் இருக்கிறார். சாகும் வரை திருந்தப் போறதில்லை என்ற முடிவு அது..! :icon_idea:

 

1979,80 களிலும் இந்த உறுப்பினர்கள் துக்ளக்கின் ...."முகமது பின் துக்ளக்" என்ற ஒரு ஒலிநாடவை வைச்சுக்கொண்டு எல்லோரும் போட்டு கேளுங்கோ என நச்சரித்துகொண்டிருந்தார்கள்....அப்படி என்னதான் இந்த துக்ளக் சொல்லுறான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கொஞ்சம் பழைய ட்ரென்டு தான். தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பங்களில் ஈபிடிபி இப்படிச் செய்தது உண்டு. 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போதெல்லாம் யாழ்ப்பாணம், வடமராட்சி,தென்மராட்சி எங்கும் இப்படி இராணுவப் பாதுகாப்புடன் வீதியால் போறவாற ஆக்களை எல்லாம் மறித்து வலுக்கட்டாயமாக விற்றவர்கள். வாங்காதவர்களுக்கு அடித்ததோடு வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்களும் பல பதிவாகியுள்ளது. எதுக்கு அடி வாங்குவான் என்று நானும் பல தடவை வாங்கியுள்ளேன். யாழ் பிரதான பேருந்து நிலையத்தில் வாங்கினால் பிறகு ஸ்ரான்லி ரோட்,ஆரியகுளம் சந்தியில் நிற்பார்கள் பிறகு அச்சுவேலியிலை, நெல்லியடி சந்தியிலை, மந்திகையிலை பிறகு பருத்தித்துறை என்று போகும் இடமெல்லாம் நீட்டுவார்கள்.

நான் வாங்கிவிட்டேன் , வாங்கி விட்டேன் என்று ஒவ்வொரு இடத்திலும் காட்டுறது.

புத்தகம் கொண்டுபோறமோ இல்லையோ தினமுரசு கொண்டுதிரிய வேண்டி இருந்தது. மறுபடியும் இப்ப....... :( :(

  • தொடங்கியவர்

1979,80 களிலும் இந்த உறுப்பினர்கள் துக்ளக்கின் ...."முகமது பின் துக்ளக்" என்ற ஒரு ஒலிநாடவை வைச்சுக்கொண்டு எல்லோரும் போட்டு கேளுங்கோ என நச்சரித்துகொண்டிருந்தார்கள்....அப்படி என்னதான் இந்த துக்ளக் சொல்லுறான்...

உண்மையில் இந்த முகமதுவின் பின் துக்ளக் நல்ல ஒரு திரைப்படம். அதை நான் 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஜாபகம் .  தற்போதைய இந்திய அரசியலை அப்பிடியே  படம் பிடித்துக் காட்டி இருக்கு. நான் நினைக்கிறேன் துக்ளக் சோ பயித்தியமாக முன்னர் எடுத்த படமா இருக்க வேண்டும் கருப்பு வெள்ளை காலப் படம்.  இப்ப எடுத்தால் ஒரே புலிவாந்தியும் சிங்கள புகழுமா இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.