Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை அட்டூழியம்

Featured Replies

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர் சுட்டுக்கொலை

இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அவர்கள் மீனவர்களை 3 மணி நேரம் கடலில் தத்தளிக்க விட்டனர். நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களின் 60 படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீன வர்கள் 6 பேர் ஒருவிசை படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அருணாச்சலம் என்பவருக்குக்கு சொந்தமான `அம்மை என்ற படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கலியபெருமாள் (வயது55), அஜீஸ்குமார் (19), ரமணன், ராமலிங்கம், செல்வமணி, காரைக்காலை சேர்ந்த அன்பழகன் ஆகி யோர் கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங் கை கடற்படையினர் துப்பாக் கியால் சுட ஆரம்பித்தனர்.

இதைக் கண்டதும் உயிருக்கு பயந்த மீனவர்கள் 6 பேரும் கையை மேலே உயர்த்தியபடி நின்றனர். இருந்த போதி லும் கடற்படையினர் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர்.

அப்போது அவர்கள் சுட்ட குண்டு ஒன்று மீனவர் கலியபெருமாளின் மார்பில் பாய்ந்தது. இதனால்அவர் அந்த இடத்திலேயே படகில் சாய்ந்து விழுந்தார்.

மற்றொரு குண்டு மீனவர் அஜீஸ்குமாரின் காலில் பாய்ந்தது.

காயம் அடைந்த 2 மீன வர்களையும் பார்த்தமற்ற மீனவர்கள் படகை உடனடியாக கரையை நோக்கி திருப்பினர். மீனவர்கள் 6 பேரும் இன்று காலை 7 மணி அளவில் கரைதிரும்பினர்.

துப்பாக்கி சூடுகுறித்து மீனவர்கள் கரைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் கரையில் ஆம்புலன்ஸ் வண்டி தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

மீனவர்கள் கரையை அடைந்ததும் காயம் அடைந்த 2 மீனவர்களையும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மீனவர் கலிய பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் காயம் அடைந்த அஜீஸ்குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் நாகை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மற்றும் மீனவர்கள் குவிந்தனர்.

இலங்கை கடற்படையினர்களின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் அவர்கள் கோஷம் எழுப் பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் அதிக்கப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் அருள்தாஸ் என்ற மீனவர் காயம் அடைந்தார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்வியோடு தமிழக மீனவர்கள் உள்ளனர்.

மேலும் இதற்கு பயந்து கடலுக்குச் செல்லாமல் இருந்தால் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்றும் மீனவர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

இந்தியாவுக்கும் தமிழக தலைவருக்கும் எதிரி யார் நண்பன் யார் எண்டு தெரியாது என்ன செய்ய

  • தொடங்கியவர்

சில ஈழத்துத் தமிழர்களே புரிஞ்சுக்கல இந்தியாவா புரிஞ்சிக்கப் போகுது...?

நாகப்பட்டனம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் பலியானார். 5 மீனவர்கள் காயமடைந்தனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அருணாச்சலம் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் கலியபெருமாள், அஜீஸ் குமார், செல்வமணி, ராமலிங்கம், ரமணன், காரைக்காலைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக சுட ஆரம்பித்தனர். பயந்து போன மீனவர்கள் கைகளை மேலே தூக்கியபடி கதறினர். இதில் கலியபெருமாள் மார்பில் குண்டு பாய்ந்து படகில் சுருண்டு விழுந்தார்.

அஜீஸ்குமாரின் காலில் குண்டு துளைத்துக் கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பினர். மீனவர்கள் கரைக்குத் திரும்புவது குறித்து மீனவர்களிடையே தகவல் ஏற்கனவே பரவி விட்டது.

இதனால் கரையில் பெரும் கூட்டமாக மீனவர்கள் திரண்டிருந்தனர். கலியபெருமாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற மீனவர் குண்டுக் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/26/lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்க கடற்படை சுட்டதில் தமிழக மீனவர் பலி!

நாகப்பட்டினத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அத்துமீறி சுட்டதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமுற்றுள்ளார்!

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு அத்து மீறி நுழைந்த சிறிலங்க கடற்படையினர் தங்களை நோக்கி சரமாரியாக சுட்டதாகவும், இதில் 55 வயதான கலியபெருமாள் என்ற மீனவருக்கு மார்பிலும், தலையிலும் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்திய கடற்பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கள் மீது எவ்வித காரணமும் இன்றி சிறிலங்க கடற்படையினர் சுட்டதாகவும், அதில் 19 வயதான அஜீத்குமார் என்பவருக்கு காலில் குண்டு பாய்ந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்த மற்ற 4 மீனவர்களும் தமிழக அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அஜீத்குமாரின் உடல் நிலை தேறிவருவதாக கவால் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை கடற்பகுதியில் உள்ள நெடுந்தீவு என்ற பகுதிக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அத்துமீறி சுட்டதில் 55 வயதான அருள்தாஸ் என்ற மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வெப் உலகம்

ஆயுதக் கடத்தல்களை தடுக்கப்போகின்றோம் என்று சொல்லிப் படங்காட்டிக் கொண்டு இருந்த நேரம், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்போது அவர்களிற்கு இந்தியக் கரையோரக் காவல்படை சிறீ லங்கா கடற்படையிடமிருந்து பாதுகாத்து காவல் புரிந்திருக்குமாயின் 04 அப்பாவி உயிர்களையாவது காப்பாற்றி இருக்க முடியும்! பிரச்சனை எங்கோ இருக்கிறது. இந்திய அரசாங்கம் விடையை வேறு எங்கோ தேடுகின்றது. பாரத் மாதாவுக்கு ஜெய்!

கப்பல் கொடுத்து தமிழக மீனவரை கொலை செய்ய சொல்கிரதா இந்தியா :o :P :P

  • தொடங்கியவர்

ஈழவன் இதுதான் பொல்லை கொடுத்து அடி வாங்கிற கதை........ :P :P :o:lol::o:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.