Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத ஒழிப்புத் தந்திரோபாயத்தில் ஒன்றிணைய சார்க் நாடுகளுக்கு அழைப்பு பொதுவான நாணயத்தை அறிமுகப்படுத்தவும் ஜனாதிபதி மஹிந்த யோசனை

Featured Replies

[Wednesday April 04 2007 07:59:52 AM GMT] [uthayan.com]

பிராந்தியம் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில், கூட்டாகச்செயற்பட முன்வருமாறு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய சார்க் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார்.

புதுடில்லியில் இருதினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் எட்டாவது நாடாக சார்க் அமைப்பில் சேர்ந்து கொண்ட ஆப்கானிஸ்தானின் அதிபரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாநாட்டில் ஆற்றிய உரையில், சார்க் நாடுகளிடையே பொதுவான நாணயம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனையையும் வெளியிட்டார்.

பயங்கரவாதம் தொடர்பாக ஜனாதிபதி தனது உரையில் கூறியதாவது:

தனது பாதுகாப்பைப் பேணாமல் எந்த நாடும் தன்னைத் தானே தாக்குப்பிடித்துக் கொள்ளவோ செழிப்படையவோ முடியாது. தேசியப் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதை ஒட்டி, பயங்கரவாதத்தை அகற்றும் தமது உறுதிப்பாட்டை எந்த நாடும் மட்டுப்படுத்திவிட முடியாது.

பயங்கரவாதம் எங்கும் பயங்கரவாதம்தான். அது பூகோளத்தையே அச்சுறுத்தும் விடயம்.

எமது இந்தப் பிராந்தியங்கள் அனைத்தும் இது விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்படாவிட்டால் எல்லை கடந்த பயங்கரவாதக் குழுக்கள் இந்தப் பிராந்தியத்தின் மற்றைய பகுதிகளை தங்களது சுவர்க்க பூமியாக்கிக் கொள்ளும்.

நவீன பயங்கரவாதம் பல்முனைப் பரிமாணத்தில் செயற்படுகின்றது. அவர்கள் அரசியல் ரீதியாக, இராணுவ ரீதியாக, நீதி ரீதியாக, கொள்கை ரீதியாக பல முனைகளில் செயற்படுகின்றார்கள்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புலிகளின் வான்தாக்குதல்

ஆகவே, இந்த அச்சுறுத்தலை அகற்றும் நமது முயற்சியும் பல்முனைப்புக் கொண்டதாக, தாக்குப்பிடிப்பதாக, அவர்களின் மூல வளத்தை இலக்குவைத்து எட்டுவதாக அமையவேண்டும்.

பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச உடன்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்துவதில் முழு ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் நாம் செயலாற்ற வேண்டும்.

கட்டுநாயக்கா மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அண்மையில் நடத்திய வான் தாக்குதல் எங்கள் அனைவரது கவனத்தை ஈர்ப்பதாக அமைவதோடு, கொடூரமான பயங்கரவாதக் குழுக்களினால் எமது பிராந்தியம் முழுவதுமே பாதுகாப்பற்றதாகி உள்ளது என்ற உண்மையையும் அது உணர்த்துவதாக உள்ளது.

எனவே, பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் வகையில் பங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில் கூட்டாகச் செயற்பட முன்வருமாறு மேன்மைமிக்க இந்த அமைப்பை நான் கோருகின்றேன்.

பயங்கரவாதத்தை ஒழித்து, எமது மக்களுக்கு மிகப்பாதுகாப்பான இடமாக இலங்கையை உருவாக்குவதற்கு எனது அரசு மிகுந்த அழுத்தம் கொடுத்து செயற்படுகின்றது. பயங்கரவாதத்தை ஒடுக்கும் அதேசமயம், அது அரசியல் மேடை ரீதியாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நன்றி : Tamilwin.com

அரசபயங்கரவாத அண்ணண் தம்பிகளின் கூட்டம். சாக்கிலும் மூக்குடைபட்ட மகிந்த சிந்தனை??

மகிந்தன் றால் போட்டு சுறா பிடிக்க முயற்சி செய்கிறான்.

மாநாட்டைச் சாக்காக வைத்து பயங்கர வாதத்தை படம் போட்டு காட்டி அண்டை நாட்டை அழைப்பதுபோல இனப் பிரச்சினையைத் தீர்க்க ஏதாவது நாடு ஆலோசனை வழங்குமா என்றும் மகிந்தன் கேட்டவனோ?

பேசாமை சால்வையை தூக்கி தலையிலை போட்டுக்கொண்டு திரும்பி வாப்பா!

பிச்சைக் கார நாடுகளுக்கு ஒரு பொதுவான நாணயம் இருந்தால் பிச்சையெடுப்பதில் அதிக சிக்கல்கள் இருக்காது போலும்.

உலக பயங்கரவாதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிடம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று மகிந்தா கேட்டது வேடிக்கைக்குரிய செயல்.

Edited by lisa01

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சாக்கன்கள் எல்லாரும் சேர்ந்து ஆண்டிமடம் கட்டுவான்கள் ஒண்டும் உருப்படியான பிரயோசனத்தைத் தராது. கிட்டத்தட்ட அறுபது வருசமா சுதந்திரம் கிடைச்சதில இருந்து உந்த நாடுகளை ஆளுறவங்கள் தங்கட நாட்டுச் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி அனியாயம் பண்ணிக்கொண்டு மேற்கு நாடுகளில பிச்சையெடுத்துத் திரிஞ்சவன்கள். உந்த நாடுகளில் ஆட்சிபண்ணுறவன்கள் எல்லாரும் காவாலியும் கடப்பழியும்தான். நக்குவாரம் பண்ணித் திரியத்தான் உவங்கள் லாயக்கு. சிறீலங்காவுல தமிழனுக்கெதிரா நடக்கிற அனியாயங்களையும், ராமேஸ்வரம் தமிழருக்கு எதிரா சிறீலங்காவுட சிங்கள நேவி செய்யுற அட்டூழியங்களையும்; பார்த்துக்கொண்டு வக்கத்துப் போய் ஏதாவது பொய்யைச்சொல்லித் தமிழீழ மக்களுக்கு எதிராக வஞ்சகத்தனம் பண்ணுறதத் தவிர உவங்களுக்கு வேற வழியில்ல. உவங்கட ராஜதந்திரமெல்லாம் நாறிக்கொண்டிருக்குது. சும்மா உவங்களப் பற்றிக் கதைச்சு என்னபயன். உவங்கள் எல்லாரும் கடை கெட்ட சாக்கன்கள். சீ தூ!

ஓகோ... யூரோ நாணயம் போல், சாக்கு நாணயம் ஒன்றையும் வெளியிடலாம் என்று மகிந்து சொல்லுதோ? இந்த சாக்கு நாணயத்தை வைத்து என்ன செய்வது? மகிந்துவினதும், அவனது அமைச்சர்களினதும், மற்றும் மற்றைய சிங்கிளப் பேரினவாதிகளினதும் அரைஞாண் கொடியில் கட்டி தூக்கிவிடலாமா?

மேலும், தமிழீழம் விரைவில் அங்கீகரிக்கப்பட்டபின் சார்க்கில் ஏழுடன் எட்டாவதாக இன்னொரு புதிய நாடும் உறுப்புரிமை பெற இருக்கின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை அவர்களே உங்கட கருத்தை வாசிச்சு ஒரே சிரிப்புத்தான். :lol: !!

சாத்தான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்!!!! அப்படித்தான் நடக்குது கதை!.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மனுசன் ரொம்ப நொந்து போயிருக்கு?

ஏதோ புதிதாய் சிநேகிதர் மாதிரியும் புதிதாய் உதவி கேட்பது போலும் ஏதோ எல்லோரும் சேர்ந்து குரைக்கின்றனர்.

இதற்கும்சேர்த்து அவர் எங்க போடப்போறாரோ????

தன்ற கோவணத்தையே ஒழுங்கா கட்ட முடியல அதுக்குள்ள பொதுவா எல்லாருக்கும் கட்டிவிடபோகிறாராம் மகிந்த அப்படி இருக்கு இந்த கோமாளியின் பேச்சு.ஒப்பீட்டு அளவில் இலங்கை நாணயம் பெறுமதி குறைந்தது தன் நாட்டின் பண வீழ்சியை பொருளாதார பிரச்சினைகளையும் பொதுப்பிரச்சினையாக்க பார்கிறார்.பொறுங்க தமிழீழம் உருவாகட்டும் அதுக்கு பிறகு தமிழீழம் இந்த பிராந்திய பொருளாதாரத்தை உயர்த்தி தரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.