Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதி அளித்தவாறு ஆயுதக்குழுக்களை மஹிந்தா நிராயுதபாணிகள் ஆக்கவில்லை அதனாலேயே புலிகளும் அரசும் மோதத் தொடங்கினவாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதி அளித்தவாறு ஆயுதக்குழுக்களை மஹிந்தா நிராயுதபாணிகள் ஆக்கவில்லை அதனாலேயே புலிகளும் அரசும் மோதத் தொடங்கினவாம்

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தேர் தலுக்கு முன்னர் பலகோடி ரூபாக்கள் அர சினால் புலிகளுக்கு கொடுக்கப்பட் டன. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அரசு புலிகளுக்குக் கூறியது போன்று கருணா குழுவினரையும் ஏனைய ஆயு தம் தாங்கிய குழுக்களையும் நிராயுத பாணிகளாக்கவில்லை. இதனால் ஆத் திரம் கொண்ட புலிகளுக்கும் அரசுக் கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

புலிகளுக்கு அரசு நிதி வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்துவது கூடாது.

இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

நேற்று ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஜெனிவாவில் அரசுக்கும் புலிகளுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சின்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பயங்கரவாதத்துடன் அரசு ஒருபோதும் கைகோர்க்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். பின்னர் அப்பேச்சில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ புலி களின் இரண்டு கோரிக்கைகளுக்கு இணங்கினார்.

கருணா குழுவினரையும் ஏனைய ஆயுதம் தாங்கிய குழுக்களையும் நிராயுத பாணிகளாக்குவதற்கும் புலிகளுக்கு நிதி கொடுப்பதற்கும் அவர் இணங்கினார் என்று முன்னாள் பிரதி அமைச்சர் சிறிபதி சூரியாராய்ச்சி நாடாளுமன்றில் தெரிவித்தார்.

புலிகளின் கோபத்தை தணிக்க

மிகுதிப் பணம்

பின்னர் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி புலிகள் மாவிலாறு பகுதியில் தங்களது யுத்த நடவடிக்கை களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதே வேளை, கிளிநொச்சிப் பகுதியில் 1,200 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு 750 மில்லியன் ரூபா செலவிடுவதற் கான அமைச்சரவைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் புலிகளின் கோபத்தைத் தணிக்க மிகுதிப்பணம் கொடுக்கப்பட்டது.

பெருந்தொகையான பணம் கிளி நொச்சியில் இருக்கும் புலிகளின் பிரதி நிதியான எமில் காந்தனுக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. எமில் காந்தன் அரச இராணு வத் தினரால் தேடப்ப டும் புலி உறுப்பி னர் என்பது தெரிந் ததே.

அரசு புலி களுக்குப் பணம் கொடுத் துள்ளது என்பதற்கு சாட்சி இருந்தால் நாடாளுமன்றில் தெரிவுக் குழுவை அமைக்க நாம் இணங்குவோம் என்றார் அமைச் சர் ஜெயராஜ் பெர் னாண்டோபுள்ளே. சாட்சிகள் எம்மிடம் உள்ளன. உடனடி யாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்க வேண்டும். அப்போது ஆதா ரங்களுடன் நாம் அதனை நிரூபிப்போம்.

ஊடகவியலாளர்களை முடக்கும் குற்றவியல் அவதூறு சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு வருகிறது. அரசின் மோசடிகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதற்கு தடை ஏற்படுத்துவ தற்கே இதனை அரசு மேற்கொள்கிறது என்றார்.

-உதயன்

Edited by கந்தப்பு

என்ன குழந்தையின் கையில பால் போச்சியை புடுங்கிறது போல அல்லா இவனின் கதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.