Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புளியங்குள பொதுமக்கள் நுழைவுச்சாவடி எறிகணைவீச்சால் சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 19-07-2007 13:51 மணி தமிழீழம் [மோகன்]

புளியங்குள பொதுமக்கள் நுழைவுச்சாவடி எறிகணைவீச்சால் சேதம்

ஏ-9 பாதையில் புளியங்குளப் பகுதியில் அமைந்திருந்த நுழையும் பகுதிகள் புதன்கிழமை இரவு பல்குழல் எறிகணை மற்றும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டதில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசியல் தலைவர் எஸ்.ஞானம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்கள் யாவும் பொதுமக்கள் உபயோகிக்கும் நுழைவுச்சாவக்குள் நிகழ்ந்ததாகவும் பொதுமக்களின் போக்கு வரத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆகியவற்றை பொதுமக்கள் உபயோகப்படுத்தும் நுழைவுப்பகுதிகளின் சேதங்களை பார்வையிட அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷெல் தாக்குதலில் புலிகளின் சோதனைச்சாவடி எரிந்து நாசம்

வீரகேசரி நாளேடு

வவுனியா மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களை நோக்கி தொடர்ந்து நடத்தப்படும் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்கள் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் சோதனைச்சாவடி கொட்டில்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இராணுவத்தினரின் இத்தகைய எறிகணை தாக்குதல்களினால் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும் இடையிலான ஏ 9 வீதி ஊடான போக்குவரத்துக்கள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை இராணுவம் உருவாக்கியுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.ஞானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றுக்காலை புளியங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற முக்கிய சந்திப்பின்போது இது குறித்து விடுதலைப் புலிகள் விரிவாக எடுத்துக் கூறி பொது மக்களின் போக்குவரத்து நன்மையைக் கருத்திற் கொண்டு எறிகணை தாக்குதல்களை இப்பகுதியில் நடத்துவதை இராணுவம் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை இரவு இராணுவத்தினர் புளியங்குளம் பிரதேசத்தை நோக்கி நடத்திய கடுமையான எறிகணை தாக்குதல்கள் காரணமாக புளியங்குளம் அரசினர் வைத்தியசாலையும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தில் இருந்த வீடுகள் பாடசாலை என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எஸ்.ஞானம் பொதுமக்களின் போக்குவரத்து நன்மையைக் கருத்திற் கொண்டு இப்பகுதியில் தாக்குதல்களை நடத்துவதில்லை என்ற உடன்பாட்டைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதற்கு இராணுவத்தினரிடம் வலியுறுத்த வேண்டும் என போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஆகியோருடனான நேற்றைய சந்திப்பில் கோரியுள்ளார்.

புளியங்குளம் பகுதிக்குச் சென்ற போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் எறிகணை வீச்சுக்களினால் விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடிகள் எரிந்து அழிந்துள்ளதையும் மற்றும் ஏனைய சேதங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தில் இருந்து

பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் சோதனை நிலையம் மற்றும் சூனியப்பிரதேசப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு கொண்டு வந்த இணக்குத்துக்கு மாறாக படையினர், விடுதலைப் புலிகளின் புளியங்குளம் சோதனை நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி http://www.yarl.com/forum3/index.php?showtopic=26281

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.