Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக த‌மிழ‌ர்களை ஏமா‌ற்று‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Featured Replies

சனி, 17 நவம்பர் 2007(13:30)

அமை‌தி பேர‌ணி நட‌த்‌திய எ‌ங்களை அட‌க்குமுறை மூல‌ம் கைது செ‌ய்து ‌வி‌ட்டு சுப.த‌மி‌ழ்‌ச்செ‌ல்வனு‌க்கா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி ஏமாற்றுறார்.??? அது சரி ஜெயலலிதா என்ன செய்யிறார்???

மொத்தத்தில் ஏமாற்றப் பட போகிறவர்கள் ஈழ தமிழர் தான் . அதிலும் புலம் பெயர் தமிழர்கள் தான்.

  • தொடங்கியவர்

பேசிப் பேசியே இப்படிப் பேசியே...... எதற்கு வீண் வம்பு. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, கட்சி சார்பின்றி, அரசியல் ஆதாயங்கள் எதையும் எதிர்பார்க்காமல், ஈழத்தமி்ழர்களின் நல் வாழ்வுக்கு வழிகாண தமி்ழக அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான், மத்திய அரசை நிர்பந்தித்து, தமி்ழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்கு கொண்டுவர முடியும். இதை உணராமல் சும்மா வீதியில் வந்து போராடுவதாலோ, அல்லது சிறை செல்வதாலோ எந்த முன்னேற்றமும் ஏற்பட போவது இல்லை.

திரு. வைகோ அவர்கள் ஈழத்தமி்ழர்களுக்காக இதை முன்னெடுத்து செய்தால், உலகத் தமி்ழர்கள் அனைவரும் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பார்கள். அரசியல் பிரதிபலன் எதையும் எதிர்பாராது இதை செய்வாரா வைகோ ?

ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, கட்சி சார்பின்றி, அரசியல் ஆதாயங்கள் எதையும் எதிர்பார்க்காமல், ஈழத்தமி்ழர்களின் நல் வாழ்வுக்கு வழிகாண தமி்ழக அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான், மத்திய அரசை நிர்பந்தித்து, தமி்ழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்கு கொண்டுவர முடியும். இதை உணராமல் சும்மா வீதியில் வந்து போராடுவதாலோ, அல்லது சிறை செல்வதாலோ எந்த முன்னேற்றமும் ஏற்பட போவது இல்லை.

திரு. வைகோ அவர்கள் ஈழத்தமி்ழர்களுக்காக இதை முன்னெடுத்து செய்தால், உலகத் தமி்ழர்கள் அனைவரும் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பார்கள். அரசியல் பிரதிபலன் எதையும் எதிர்பாராது இதை செய்வாரா வைகோ ?

அதற்கு வைகோவின் கட்சியை உடைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு அ.தி.மு.க.வை இரண்டாக உடைக்க தமிழகத்தின் அரசியல் சாணக்கியர் எனப்படும் கலைஞர் முயற்சிக்க வேண்டும். 90 களில் முன்பு ஒரு தடவை, முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை மீண்டும் ஜெயா அணிக்கு வழங்க தூண்டுகோலாயிருந்து, திருநாவுக்கரசர் (தற்போது BJP உடன் இணைந்து விட்ட, MGR அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்) தலைமையில் அ.தி.மு.க வை உடைத்து அம்மையாரை அரசியல் அநாதை ஆக்க கிடைத்த வாய்ப்பை, வீணடித்தவரே இந்த கலைஞர் தான்.

இது போல் கலைஞரின் அரசியல் கணக்கு தவறுகளையும் சறுக்கல்களையும் பட்டியலிட்டால் மிக நீண்டு விடும். இந்த அம்மையார் அரசியலில் இவ்வளவு காலூன்றி இன்று இத்தனை ஆட்டம் போட்டு கொண்டிருப்பதற்கு காரணமே கலைஞரின் கணக்கு பிழைகள் தான். எல்லாம் தமிழனின் தலைவிதி!

இந்த இருபெரும் திராவிட கட்சிகளுடன் ஒப்பிடும் போது வைகோவின் அரசியல் பலம் மிகவும் வரையறுக்கப்பட்டது. மொத்த தமிழக வாக்காளர் தொகையில் வைகோ அவர்களின் கட்சியின் ஆதரவு கிட்டத்தட்ட 5% மட்டுமே.

வைகோ என்றொருவர் அரசியலில் பலிக்கடா ஆகிவிடாமல் தப்பி பிழைத்திருந்தால் தானே ஈழத்தமிழர்களுக்காக அவர் கொடுக்கும் குரலுக்கு கொஞ்சமாவது மதிப்பிருக்கும். கட்சியை அப்படியே விழுங்கி வைகோவையே காணாமல் போகச்செய்யும் கலைஞரின் சதிவேலையிலிருந்து தப்பிக்க அன்று அம்மையாருடன் கூட்டணி அமைப்பதை தவிர வைகோவிற்கு வேறு வழி இருக்கவில்லை. தமிழக அரசியலின் போக்கும், குளறுபடிகளும், இங்கு யாழ்களத்திலே வைகோ போன்றவர்களோடு சலித்துக் கொள்ளும் கள நண்பர்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

உலக தமிழினத் தலைவராக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் கலைஞர் அவர்கள் வைகோவை அரசியல் அநாதை ஆக்க வரைந்த சதிவேலைகள் நிறைவேறி இருந்தால் வைகோவின் அரசியல் குரலோசை அடங்கி தற்போது சில வருடங்கள் ஆகி இருக்கும். ஈழத்தமிழருக்காக கடந்த இருபது வருடங்களாக ஓயாமல் ஒலிக்கும் வைகோவின் குரலை அடக்க நினைக்கும் றோ வின் வேலையும் எளிதாகி இருக்கும்.

"ASK NOT WHAT VAIKO DID FOR YOUR COUNTRY

ASK WHAT YOU DID FOR YOUR COUNTRY"

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல் நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.

வைகோ தனதுக்குள்ள அரசியல் சூழலுக்கு ஏற்பத்தான் செயற்பட முடியும். அவர் எத்தனையோ சவால்களை சந்தித்து அவற்றை வெற்றி கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் சில புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களோ.. ஒரே இரவில் தமிழகம் தங்களுக்காக கடல் தாண்டி ஈழத்துக்கு ஆதரவா வரணும் என்று நினைக்கின்றனர். ஆனால் இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களே அதற்குத் தயாரில்லை..!

அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளரை பேட்டி காணும் இந்திய ஊடகங்கள் அவரின் வாயால், தமிழக அரசியல் சார்ந்து ஈழம் தொடர்பாக அங்குள்ள தலைவர்கள் விடும் அறிக்கைகள் குறித்து கருத்துக் கேட்டு புலிகளின் பக்கச்சார்பு எது என்று காட்ட விளைகின்ற போதும் நடேசன் மிகச்சாதுரியமாக நடுநிலைத்தன்மையோடு பதிலளித்து வருவதை அவதானிக்கலாம். அவர் எவரையும் இதில் குறை சொல்லவோ நிறை சொல்லவோ முற்படவில்லை. எழும் ஆதரவை இரு கரங்கொண்டு தாழ்மையோடு வரவேற்கிறார். இன்னும் ஒன்றுபட்டு எழுச்சி பெற்று ஆதரவு வழங்கக் கோருகிறார்.

ஈழ தமிழர் ஆதரவில் தமிழகம் தமிழர்கள் என்று இன ரீதியில் ஒன்றுபட்டு நிற்கும் நிலை வரணும். சிலர் இதற்குள்ளேயே பெரியார் ஆதரவாளர்களின் ஆதரவு.. பிராமணர்களின் எதிர்ப்பு என்று பிரிவினைகளை காட்டவும் முயற்சிக்கின்றனர்..! இது இந்திய சமூக அடிப்படையில் ஈழ ஆதரவை பிளவுபடுத்தும் செயலே அன்றி வேறில்லை.. அது ஈழத்துக்கு ஒவ்வாதது. ஈ வெ ராமசாமியை விமர்சிப்பது என்பது வேறு அரசியல் இராஜதந்திரம் என்பது வேறு..! அது பல புலம்பெயர்ந்த தமிழர்களுக்குப் புரிவதில்லை. குறிப்பாக ஈ வெ ராமசாமி புகழ்பாடிக் கூட்டத்தினருக்கு..!

இந்திய அரசியலையும் ஈழ ஆதரவையும் ஈ வெ ராமசாமியின் கொள்கைப் பரப்புரையையும் ஒன்றாகக் கலந்தடிக்கும் வேலையை எனி புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருந்து எவ்வகையில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு வரினும் அதை தாழ்மையோடு ஏற்று மதிப்பளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடையே இந்திய அரசியல் மட்டத்தில் வேறுபாடுகள் இருப்பினும் ஈழத்தமிழர் ஆதரவு என்ற ஒன்று அவர்களை ஒற்றுமைப்படுத்த நாம் அவர்களை ஓரணிக்குள் வைத்து இனங்காட்ட வேண்டும்..! அங்கு ஈ வெ ராமசாமி கொள்கை.. பிராமண எதிர்ப்பு... தெலுக்கு கர்நாடகா.. என்ற வேற்றுமைகள்.. எமக்கு அவசியமில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.