Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தா கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்கிறது - ஐ.தே.க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தா கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்கிறது - ஐ.தே.க.

1/18/2008 10:04:52 PM

வீரகேசரி இணையம் - கிளிநொச்சி கனகபுரத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே இலங்கை விமானப்படை (முன்தினம்) குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது என்றகுற்றச்சாட்டிற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியகட்சி கோரியுள்ளது.

புத்தள தாக்குதல் உள்ளிட்ட புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சகல மனித படுகொலைகளையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து ஐ.தே.கவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

யுத்தம் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் சாதாரண பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை சீர்குலையாமல் இருப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்துடையது இந்நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதளுக்கான முழுபொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அவதானத்தை செலுத்திவருகின்றது.

கிளிநொச்சி, கனகபுரத்தில் விமானப் படையினரது குண்டு வீச்சு விமானங்கள் முன்தினம் காலை மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் குறித்தும் ஐக்கிய தேசியக்கட்சி கவனத்தை செலுத்தியுள்ளது. கனகபுரம் மகாவித்தியாலயத்தில் 790 மாணவர்கள் 22 ஆசிரியர்கள் இருந்த வேளையிலேயே இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பாடசாலையிலிருந்து 100 மீற்றர் தூரத்திற்கு அப்பால் குண்டு விழுந்த வெடித்தமையினால் அப்பாவி பொதுமகன் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகளை தாக்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற யுத்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கவிலலை என்பதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் அப்பாவி மக்களை இலக்குவைத்து அரசாங்கம் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்ற சர்வதேச சமூகத்தின் முன்கொண்டு செல்லப்படுகின்ற பிரசாரத்திற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டிடும் .

எல்லாமே அரக்கத்தனம் மிகுந்த அரசியல்வாதிகள். யாருக்கு யார் பதிலளிப்பது. கிடைக்கப் போகின்ற பதிலால் தமிழருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்போகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகள் மீது தாக்குதலே நடத்தாத ஜ.தே.க கேள்வி கேக்கிது யாராவது பதில் சொல்லுங்கோ.என்னதான் எதிர் கட்சியாய் இருந்தாலும் இப்பிடி அனியாயமான கேள்வியெல்லாம் கேக்க கூடாது :mellow::huh::D

ம்ம்ம்... ஆடு நனையுதாம், இன்னொரு ஓநாய் ஓஓஓஓஓஒ எண்டுதாம்!!

பக்கத்து பக்கத்து கசாப்பு கடைக்காரங்கள் தான் சிறிலங்காவின் கட்சிகளெல்லாம்! அது ஐதேக என்றால் என்ன, சுக என்றால் என்ன, இல்லை 19ம் நூற்றாண்டின் குப்பையான கம்யூனிஸ்டிகள் என்றால் என்ன!!!!

உதே ஐதேகவும் நடத்திய இனவழிப்புகள் மறக்கக் கூடியதா??????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ஓம் என்று சொன்னா இவங்க என்ன செய்ய போறாங்க? :(

மகிந்த ஓம் என்று சொன்னா இவங்க என்ன செய்ய போறாங்க? :(

இவங்க சாந்தி, சாந்தி எண்டுதான் சொல்ல வேணும். இல்லாட்டி அம்மணமா திரிய வேண்டி வருமெல்லே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.