Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்காக மட்டுமே நகர்ந்து கொண்டிருப்பது எவளவு பரிதாபத்திற்குரியதாகும்.

மேலும் அறிய இங்கே......

http://sriravana.com/index.php?option=com_frontpage&Itemid=1

Siha udana Foundation

Founded specially to back up Sinhalese who is suffering from poverty, racism and heresy. We aid in many ways to Sinhala underage children to carry out their education enriched with patriotic thoughts.

We align our future generation to match with the fast developing world with new innovative ideas, researching attitudes, and exemplary characteristics.

Our Vision

“To develop ourselves to be the strongest nation in the world and make the whole world more beautiful place”

Projects

We are carrying out our projects based on three main criteria.

1. Strengthening the temple education with research attributes

2. Enrich nation with patriotic feelings and thoughts through “ Devaala” concept.

3. Strethening our people economically and rewarding achievers.

யாழ்க்கள உறவுகள் இதிலுள்ள விடயங்கள் தொடர்பாக புலமைசார்ந்து எழுதுவார்கள். அதனூடாகவேணும் உண்மைகள் வெளிவரட்டும். இவர்களது நோக்கமென்ன என்பதை புலப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

பாவம் மொக்கு மக்கள். புத்தரே தன்னை கடவுள் இல்லை என்றார். ஆனால் அவரது அடிபொடிகள் நோகாமல் பிச்சை எடுத்து தின்பதற்கும், பதவிகளில் இருந்து இலவசமாக காசு பார்பதற்கும் அவரை கடவுளாக்கி விட்டார்கள். ஒவ்வொரு புத்தர் சிலை அமைக்கும் போதும் இவர்கள் புத்தரின் வார்த்தையையே மீறும் சீடர் ஆகிறார்கள்.

Edited by KuLavi

இத் தலைப்பை இணைத்தவர் உண்மையான விபரங்களை தரவில்லை. எனினும் இதன் பின்னணி சுவாரஸ்யமானது.

6 வருடங்களின் முன் (2003-2005) சீகிரிய பகுதியை நவீன விஞ்ஞான முறைகள் (கார்பன் திகதிக் கணிப்பீடு, வெப்ப ஒளிர்வு திகதிக் கணிப்பீடு) முறைகளில் சிங்கள தொல்லியலாளர்கள் ஆய்வு செய்தனர். மீண்டும் மீண்டும் செய்த ஆய்வுகளில் ஓர் விபரீதமான முடிவு கிடைத்தது. சீகிரிய மேல்பகுதி கேணி அமைப்பு, செங்கல் படியமைப்பு, சுமார் 6000 வருடங்கள் (சரியான ஆண்டுகளை எங்கோ குறித்து வைத்துளேன்) பழமையானது என்பதுதான் அது.

இதில் என்ன விபரீதம்?

சிங்களவனால் புனையப்பட்ட மகாவம்சம் (மகா பொய் வம்சம்) சீகிரியாவை காசியப்பனுடன் தொடர்புபடுத்தி கி.பி. 477 - 495 காலத்தில் கட்டப்பட்டதாக மிக தெளிவாக பதியப்பட்டுள்ளது. (http://www.mysrilanka.com/travel/history/seegiriya.htm) இப்ப விஞ்ஞானம் உறுதியாக "மகா வம்சத்தை" "மகா பொய்வம்சம்" என நிரூபித்தது தான் அந்த விபரீதம்.

குழம்பிப்போன சிங்களவன் உடனடியாக அது காலத்தால் முற்பட்ட புத்த துறவிகளின் பயிற்சிக்கூடம் என பல கட்டுரைகளை 2008 ம் ஆண்டுகளில் இலங்கை பத்திரிகைகளில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதித்தள்ளினான். 6000 வருடங்களின் முன் புத்தரை கொண்டு போக முடியாது என உணர்ந்ததும், அடக்கி வாசிக்க தொடக்கிவிட்டார்கள். (http://discover.lankanest.com/index.php?option=com_content&task=view&id=104&Itemid=77).

http://sigiriya.org/damsels.htm

2007-2008 இல் இருந்து சிகிரியாவை ராவணனுடன் தொடர்புபடுத்தி, ராவணனை சிங்களவனாக காட்டும் முயற்சியில் தற்போது மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் புதிய பொய்வம்சத்தை தயாரித்து பல ஆண்டுகளின் பின்னர் அவற்றை உண்மை போல் காட்டுவதில் சிங்களவன் வெற்றியடைந்துவிடுவானா?

துரதிஸ்டவசமாக தமிழ் தொல்லியலாளர்கள் (யாழ், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்) ஒன்றிணைந்து உறுதியான தமிழ் வரலாற்றை படைக்காமல், தனித்தனியாக முரண்பாடான கருத்துக்களை சுயலாபம் கருதி புத்தகங்களாக வெளியிட்டு - தமிழ் வரலாற்றை கேலிக்கூத்தாக மாற்றிவருகின்றனர்.

இன்னுமொரு அடக்கி வாசிக்கப்பட்ட வரலாற்று திரிபு:

UNESCO நிதி உதவியுடன் அனுராதபுரம் ஜெடவனராமைய விகாரை புணரமைப்பின் போது 18 அடி ஆழத்தில் கிடைத்த நடராஜர், நந்தி சிலைகளும், கோமுகி அமைப்புக்களும். இதுபற்றிய செய்தி 2004 daily news பத்திரிகையில் படங்களுடன் வெளிவந்தது. பின்னர் அவை மறைக்கப்பட்டு, சிலைகள் கொழும்பு நூதனசாலைக்கு எடுத்துச் சென்று மறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் பார்க்கவும்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68643

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

:D:lol::)

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

அய்யா, தமிழ், சைவ வரலாறு பல மதங்களாலும், இனத்தவராலும் திரிக்கப்பட்டு விட்டது.

சைவம் இலங்கயில் இருந்த காலப்பகுதி பெளத்த மததிற்கு முற்பட்டது.

விஜயன் இலங்கைக்கு வந்தபோதே சைவம் இருந்தது, அதிலும் அவனும் சைவனே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.