Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறிவிட்டது: உலகத் தலைவர்கள் அமைப்பு

Featured Replies

போர் முடிவடைந்து ஒரு வருடம் சென்றுவிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை நிலை நாட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட க்ளோபல் ஸ்டேட்ஸ்மன் அமைப்பு இவ்வாறு இலங்கை அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் சிவில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடகாலம் பூர்த்தியாகியுள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங் கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கொபி அனான், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் மற்றும் தென்னாபிரிக்க பேராயர் டெஸ்ட்மன் டுட்டு உள்ளிட்ட பலர் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

8 ஆயிரம் விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர காலச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்தத்திற்கு காரணமான சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இது வரையில் தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வில்லை என குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் விசார ணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய நாடுகள் மெளனம் சாதித்து வரு கின்றமை அதிருப்தி அளிப்பதாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச்செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசு மனித உரிமைகளைப் புறந்தள்ளும் மனோபாவத்தையும் உள் நாட் டிலிருக்கும் விமர்சகர்களையும் மாற்றுக் கருத்துக் கொண்டோர்களையும் அடக்கி ஒடுக் கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதை பற்றி சர்வதேச சமுதாயம் மேலும் கடுமை யான பதில் நடவடிக்கைளை எடுக்க வேண் டும். போருக்குப் பிந்திய இலங்கையில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கின்றன. வடக்கில் மேலும் அதிகரித்த அளவில் பொருளாதார நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன. சுமார் 26 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தத்தம் இடங்களுக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த முன்னேற்ற கரமான விடயங்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் அம்சங்களாக கருத்து மாறுபடுவோர்க ளைச் சகித்துக் கொள்ளாமல் ஒடுக்குவது, அரசுக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பது போன்றவை நிகழ்கின்றன. சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா, சீனா, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை அரசு அமுலில் வைத்திருக்கும் அவசர காலச் சட்டங்களை விலக்கிக் கொண்டு இனச் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களதும் மனிதஉரிமை களையும் பாதுகாக்க வெளிப்படையான உறுதிமொழியை வழங்க வைக்க வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களைச் சந்திக்க செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனு மதி வழங்குதல், நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளு தல், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ இயக்கங்கள் இலங்கையில் தங்களது பணி களை அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யும் சூழலை உருவாக்குதல், இலங்கையில் இனச்சிறு பான்மை மக்கள் நீண்ட காலமாக அரசியல் தளத்தில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையை சரி செய்ய தேவைப்படும் அரசி யல் சட்ட திருத்தங்களைக் கொண்டு வருவது ஆகிய விடயங்களையும் பன்னாட்டு சமூகம் இலங் கையிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் அமைப்புக் கூறி யிருக்கின்றது.

பூராயம்

http://www.pooraayam.com/eelam-srilanka/556-2010-08-04-02-28-38

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு பொழுது போக்குக்காக ஒன்று கூடி அறிக்கைகளை விடுவதில் அர்த்தம் இல்லை. மேற்படி குற்றங்களுக்கு இவர்களும் ஒரு வகையில் உடந்தை.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நியமித்த குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து அதே விடயங்கள் தொடர்பாக தானே ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதாக இலங்கை தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல” என்று முதியோர் குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி அஹ்திசாரி தெரிவித்தார்.

பேராயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமை தாங்கும் முதியோர் குழுவில் அயர்லாந்து ஜனாதிபதி மேரி றொபின்சன், முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான், முன்னாள் அல்ஜீரிய வெளிநாட்டமைச்சர் லக்தார் பிரஹ்மி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி அஹ்திசாரி ஆகியோர் அங்கத்துவம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26035

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.