Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - சொல்கிறார் ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - சொல்கிறார் ராஜபக்சே

சனிக்கிழமை, ஏப்ரல் 2, 2011, 12:33[iST]

திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

மும்பையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார்.

அவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ராஜபக்சே கோவிலுக்கு சென்றதும் மத்திய போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை அழைத்து சென்றனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராஜபக்சேவுக்காக பக்தர்களை தடுத்து வைத்த கோயில் நிர்வாகம்

வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ராஜபக்சே நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். ராஜபக்சே சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் கருவறையைச் சுற்றி வந்தார். தரிசனத்திற்கு பிறகு ராஜபக்சேவுக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ராஜபக்சே ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ.55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார்.

இந்தியா தோற்க ஏழுமலையானிடம் வேண்டுதல்!

பின்னர் ராஜபக்சே நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை.

இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலையானை வேண்டினேன்.

ஆந்திர முதல்வரும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எனக்கு தேவையான உதவிகளை செய்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...", என்றார்.

பின்னர் அவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் அவருக்கு ஏழுமலையான்- பத்மாவதி தாயார் உருவ படங்களை பரிசாக வழங்கினார். இருவரும் சுமார் 30 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

முன்னதாக ராஜபக்சே ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ.55 ஆயிரம் நாணயங்களை துலாபாரம் செலுத்தினார்.

thatstamil

:rolleyes: :rolleyes:

ராஜபக்சேவுக்காக பக்தர்களை தடுத்து வைத்த கோயில் நிர்வாகம்

ஆந்திர முதல்வரும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எனக்கு தேவையான உதவிகளை செய்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...", என்றார்.

த‌மிழ‌ர்க‌ளை தொட‌ர்‌ந்து எ‌ட்டி ‌‌‌‌மி‌தி‌க்‌கிறது இ‌ந்‌திய அரசு: வைகோ

இலங்கை அதிபர் ராஜப‌க்சவுக்கு இந்தியாவில் வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த ராஜபக்ச, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.

நாஜி வெறியன் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜப‌க்ச, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜப‌க்சவின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்துள்ளார்.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது.

தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான ராஜப‌க்சவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது இந்திய அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் ரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?

ஆஸ்‌ட்ரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?

முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள், தங்களை அழித்துக்கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

நாய்களைச் சுட்டுக் கொன்று, அன்னை பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய ராஜப‌க்ச, இந்திய அரசின் விருந்தைத் தின்றுவிட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1104/02/1110402030_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.