Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் அல்ஜசீரா நிருபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் அல்ஜசீரா நிருபர்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கட்டப் போரின் போதும் வெளிநாட்டு நிருபர்கள் இராணுவத்துடன் சென்றிருந்தனர்.

... இவைகளை நல்ல தலைப்பிட்டு, இணைத்தால்... நீண்ட காலத்துக்கு ....

Sri Lanka Tourism

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இராணுவம் செய்த அட்டூழியங்கள் கண் முன்னால் நடந்திருக்க.. ஆதாரங்கள் இருக்க.. அதை நிராகரித்துப் பேச கோத்தா போன்றவர்களை அணுகும் ஊடகங்கள்.. விடுதலைப்புலிகள் சார்ந்த குற்றச்சாட்டுக்களை மறுதலிக்க உண்மைகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் அளிப்பதில்லை. அது ஏன்..??!

வன்னி இராணுவ நடவடிக்கை ஆரம்பமானதில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு இடங்களை நோக்கி பாதுகாப்புத் தேடி வரத் தொடங்கினர்.

அதன் பின்னர்.. ஐநா.. செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் இருப்பை தமது பாதுகாப்புக் கருதி கோரினர் வன்னி மக்கள். கிளிநொச்சியில் ஒரு ஆர்ப்பாட்டத்தையே ஐநா வெளியேற்றத்தை தடுக்க நடத்தினர். ஆனால் ஐநா அதற்கு செவிசாய்க்கவில்லை. சிறீலங்கா படைகளுக்கு வழி சமைத்துக் கொடுத்துவிட்டு வவுனியாவில் போய் பதுங்கிக் கொண்டது.

இப்படி எல்லோரும் கைவிட்ட நிலையில் தான் மக்கள் விடுதலைப்புலிகளோடு அவர்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்று போயினர்.

இதில் விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயமாக பாவித்ததாக சொல்பவர்கள்.. ஏன் மக்கள் வெளியேற வேண்டாம் என்று கேட்ட போது அதனை ஏற்று சிறீலங்கா அரசை நிற்பந்தித்துத்து ஐ நா கண்காணிப்பின் கீழ் ஒரு பாதுகாப்பு வலயத்தை நிறுவி இருக்கவில்லை. கிளிநொச்சியை.. முல்லைதீவு நகரை கொண்ட இரண்டு பாதுகாப்பு வலயங்களை ஐநா மற்றும் செஞ்சிலுவைச் சங்க ஆதரவோடு மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நிறை வேற்றி இருந்தால் மக்களை புலிகள் மனிதக் கேடயமாக பாவித்திருக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்காதே..??!

ஏன் அதை செய்யவில்லை..??! சிறீலங்கா அரசு கேட்டதற்காக ஏன் வெளியேறிப் போயினர். தங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஏன் அப்போது சிறீலங்கா ஏற்க நிற்பந்திக்கவில்லை.??!

விடுதலைப்புலிகள் தம்மை சுட்டதாக சில மக்கள் இராணுவத்திடம் சொல்லி இருக்கலாம். அல்லது அப்படிச் சொன்னால் உங்கள் குடும்பத்தினரை விடுவிப்போம் என்று இராணுவம் மக்களுக்கு சொல்லி இருக்கலாம். இதேபோன்ற காட்சிகள் இந்திய இராணுவம் ஈழ மண்ணை ஆக்கிரமித்த போதும் நிகழ்ந்தது. இந்திய இராணுவத்தின் தொல்லையில் இருந்து தப்ப விடுதலைப்புலிகள் சுடுகிறார்கள்.. பதுங்குகிறார்கள் என்று பேட்டி கொடுத்த யாழ்ப்பாண மக்களை இப்பவும் நினைவு கூற முடிகிறது.

இராணுவ நிற்பந்தங்களின் கீழ் மக்கள் சொல்பவை எப்படி நியாயமான கருத்துக்களாக ஆதாரம் சார்ந்தவையாக இருக்க முடியும்..???!

விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை பாவிக்கின்றனர் என்று முன்னர் கூறினார்கள். இப்போ சொல்கிறார்கள் அப்படி அவர்கள் எதனையும் பாவிக்கவில்லை என்று.

நாளை சொல்வார்கள் விடுதலைப்புலிகள் மக்களை பிடிச்சு வைச்சிருக்கேல்ல.. மக்கள் பாதுகாப்புத் தேடி போன இடத்தில் தாக்கப்பட்டார்கள் என்று.

உண்மையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து நின்ற மக்களை இராணுவ இலக்காகும் வண்ணம் அவர்களை செல் அடித்து விரட்டிச் சென்றதும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வலயத்தை அடைக்கலம் தேட செய்து கொடுக்காததும் சிங்கள இராணுவத்தினதும்.. சர்வதேசத்தினதும் பெரும் குற்றமாகும். அதை மறைக்க விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயமாக பாவித்தனர் என்று கதை அளக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயமாக பாவித்திருப்பின் அவர்கள் முள்ளிவாய்க்காலுக்குள் ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. மன்னாரில் வைத்தே அதை செய்திருக்க முடியும். சிங்கள இராணுவ முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்..??! அல்லது கிளிநொச்சியில் வைத்து அதை செய்திருக்க முடியும்..??! ஏன் முள்ளிவாய்க்கால் வரை போக வேண்டும்..! மக்களுக்கு சர்வதேச பாதுகாப்புடனான ஒரு வெளியேற்றத்தை விரும்பியே அவர்கள் அப்படிச் செய்துள்ளனர்.

யாழ்ப்பாண சிறீலங்கா இராணுவ முன்னகர்வின் போது யாழ்ப்பாண நகரை விட்டு வெளியேற கேட்ட விடுதலைப்புலிகள் தென்மராட்சியில் வைத்து மக்களை அப்படிக் கோரவில்லை. விரும்பிய மக்களை வன்னிக்குள் நகர்த்தி விட்டனர். ஆனால் வன்னியில் மக்களை பாதுகாப்ப்பான பிரதேசத்துக்கு நகர்த்தக் கூடிய நிலை இருக்கவில்லை. காரணம்.. எல்லா பக்கமும் இராணுவ நடவடிக்கை. அந்த வகையில் அவர்கள் முள்ளிவாய்க்காலை நாடியது மக்களுக்கு ஒரு பாதுகாப்பான வெளியேற்றம் வேண்டியே ஆகும். ஆனால் சர்வதேசமோ.. மனித உரிமை அமைப்புக்களோ அப்போது அப்படியான ஒரு பாதுகாப்பான வெளியேற்றத்தை செய்ய முன் வரவில்லை.

இப்போ லிபியாவில் மிஸ்ரா என்ற போராளிகளின் பிரதேசத்தில் இருந்து பிரிட்டனும் அமெரிக்காவும் மக்களை கடல்வழியாக மீட்டு.. போராளிகளின் இன்னொரு கட்டுப்பாட்டு பகுதி நோக்கி நகர்த்தி உதவுகிறார்கள். ஏன் இதை சிறீலங்காவில் செய்ய முடியவில்லை..???! அப்போது எங்கே போனது இந்த மனிதாபிமானம். அந்த பகுதியில் லிபிய போராளிகள் மக்கள் வாழ்விடங்களில் இருந்து துப்பாக்கி சண்டை போடுகின்றனர். அப்போ பிரிட்டன்... அமெரிக்கா அந்தப் போராளிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்ட முடியுமா..??! ஆனால் கடாபியின் படைகள் அப்படிச் செய்வதாகச் சொல்கின்றனர்.

ஆக தங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிலைமைகளை அதிகாரம் படைத்தோர் விபரிக்கின்றனரே தவிர.. செய்ய வேண்டியவற்றை சரியான வேளையில் இவர்கள் செய்யாததாலேயே சிங்கள இராணுவம் இத்தனை பலியிடல்களையும் போர்க்குற்றங்களையும் துணிந்து செய்ய முடிந்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில்.. சர்வதேச நீதியான விசாரணை நடத்த வேண்டும். சிறீலங்கா இராணுவ அச்சுறுத்தலுக்குள் இருந்து தமிழ் மக்களை விடுவித்துவிட்டு அந்த மக்களிடம் விசாரணை நடத்த வேண்டும். விசாரிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை சர்வதேசம் உறுதி செய்து கொடுக்கும் என்றால் உண்மையில் வன்னியில் என்ன நடந்தது என்பதை மக்களில் பலர் நியாயத்தின் பால் நின்று சொல்லக் கூடும். அது விடுதலைப்புலிகள் மீதான பல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் என்பதே உண்மை.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.