Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. மல்லிகை வாசம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    11
    Points
    1662
    Posts
  2. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33035
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19163
    Posts
  4. tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    4150
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/17/21 in Posts

  1. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஆது மகன் ஸத்தாது... குலவலிமை பெருவாழ்வு
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, சித்திரை 2007 அகதியாக இடம்பெயர்ந்து வந்த இளைஞரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படைக் கூலிகள் கடந்த செவ்வாயன்று, ஏறாவூர் பொலீஸ் பிரிவிற்குற்பட்ட களுவங்கேணி கோரளங்கேணி அகதிமுகாமில் தங்கியிருந்த அகதி மீது உந்துருளியில்வந்த இரு கருணா துணைப்படைக் கூலிகள் நடத்திய தாக்குதலில் அவர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். அகதிகள் முகாமிற்கருகில் இருந்த கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போதே இப்படுகொலையினை துணைப்படைக் கூலிகள் நிகழ்த்தியிருக்கின்றனர். கொல்லப்பட்டவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரைப்பகுதியின் பங்குடாவெளியைச் சேர்ந்த 28 வயதுடைய சித்திரவேல் சிவனாதன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் பொலிஸாரினால் ஏறாவூர் வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உறவினரிடம் கையளிக்கப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையில் இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களையடுத்து பெருமளவு மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஏறாவூர் பகுதியில் தஞ்சம் கோரியிருந்தனர்.
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, பங்குனி 2007 கருணா துணைராணுவக் குழுவுக்கான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தினைச் சாடும் மனிதவுரிமைக் காண்காணிப்பகம் கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்படும் பிள்ளைகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து அவர்களை மீட்டுத்தருவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தாலும்கூட, அவை எவற்றையும் அது செய்யவில்லையென்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது. "சிறார்களை தனது குழுவினுள் கட்டாயப்படுத்தி இணைத்து யுத்தத்தில் கருணா பாவித்துவருவது இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தான் என்பது தற்போது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது " என்று மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான தலைவர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். "கருணா குழு இலங்கை அரசாங்கத்துக்காக இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறது. கொழும்பு அரசாங்கம் புலிகளுக்கெதிரான தனது போரில் சிறார்களை பலவந்தமாக இணைப்பதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டிய தருணம் வந்திருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். இவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி ,"மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழு எனும் துணை ராணுவக்குழுவின் அலுவலகங்கள் முகாம்களுக்கு வெளியே சிறுவர்கள் தானியங்கித் துப்பாக்கிகளோடு காவல்கடமையில் ஈடுபட்டிருப்பதை நாம் பார்த்தோம். இலங்கை ராணுவத்தினரும், பொலிஸாரும் இதுபற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது இச்சிறார்களைக் கடந்து செல்கின்றனர்" என்று கூறப்பட்டிருக்கிறது. "ஒரு சிறுவன், கையில் தானியங்கித் துப்பாக்கியோடு துணைராணுவக்குழுவின் தலைவரான கருணாவின் ஊரான கிரானில், அவரது அலுவலகத்திற்கு முன்னால் நிற்கக் கண்டோம். மேலும் வாழைச்சேனை, முறக்கோட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் ராணுவ முகாம்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் கருணா குழுவின் முகாம்களுக்கு முன்னால் மேலும் சிறுவர்கள் ஆயுதங்களோடு காவற்கடமையில் ஈடுபட்டிருப்பதையும் நாம் கண்டோம். தமது முகாம் வாயிலில் சிறுவர்கள ஆயுதங்களோடு காவல்கடமையில் இருப்பதைக் கண்டும் இலங்கை ராணுவமோ பொலிஸாரோ எதுவித நடவடிக்கையினையும் எடுக்காது பேசாமலிருப்பது கூறும் ஒரே விடயம் இந்த உரிமை மீறல் அவர்களின் ஆசீருடனுன், ஆதவுடனும்தான் நடைபெறுகிறதென்பதைத்தான். ஆகவே இலங்கை அரசாங்கம் இதுகுறித்து தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறுவதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று மேலும் அடம்ஸ் அவர்கள் கூறினார். "இலங்கை அரசாங்கத்திற்காக கருணா சிறுவர்களைக் கடத்துவது இப்போது வெளிப்படையாகிவிட்டது. கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு பெற்றோர் கருணா குழுவினரிடம் கேட்டபோது இக்கடத்தல்கள் பற்றி முறையிட்டால் கொல்லப்படுவீர்கள் என்றும், அவர்களைப் புலிகள் கடத்தினார்கள் என்று வெளியே போய்ச் சொல்லுங்கள் என்றும் அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள்" என்று அறிக்கை மேலும் கூறுகிறது. "எமது பிள்ளைகளை புலிகளே கடத்தினார்கள் என்று கூறும்படி இலங்கை ராணுவமும் பொலிஸாரும் எம்மைக் கட்டாயப்படுத்தினார்கள் என்று கருணாவினால் கடத்தப்பட்ட பிள்ளைகளின் பேற்றோர்கள் கூறியிருக்கின்றனர். இது, இலங்கை அரசாங்கம் கருணாவுக்கு ஆதரவாக செயற்படுகிறதென்பதை வெளிப்படையாக்குகிறது. ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினர் இலங்கை ராணுவத்தினருடன் சேர்ந்து உலாவருவது கிழக்கில் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த மாதம் கருணா குழுவின் முக்கியஸ்த்தர் ஜெயம் ராணுவ கவச வாகனத்தின் மீதிருந்து வாழைச்சேனைப் பகுதியில் வலம் வந்ததும், கருணா துணைப்படையினர் பொலீஸாரின் வாகனங்களில் ரோந்துவருவதும் இப்போது பரவலாக நடக்கிறது". "மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் குறைந்தது 5 முகாம்களை கருணா குழு இயக்கிவருகிறது. இதே பகுதியில் இலங்கை ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவு தனது தலைமை முகாமினைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இப்பகுதி 100% ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, கிழக்கின் பிரதான நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையும் இப்பகுதியூடாகவே பயணிக்கிறது. முதுகல பகுதியில் அமைந்திருக்கும் கருணா முகாம் ராணுவ முகாமின் ஒரு எல்லையில் அமைக்கப்பட்டிருக்கிறது". "கருணா குழுவினரின் கடத்தல்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ராணுவத்தினர் மீதான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவோம் என்று ஜனாதிபதி மகிந்த எம்மிடம் பலமுறை வாக்குறுதியளித்தபோதும் கூட, இதுவரை அவர் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது கருணா குழு இன்றுவரை நடத்திவரும் சட்டவிரோத கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் சுட்டிக் காட்டுகின்றன". http://srilankamuslims.lk/wp-content/uploads/2015/06/ltte1.png2_1.png "தம்மிடம் ஆதாரங்கள் இல்லாமல் விசாரணைகளை ஆரம்பிக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்குத்தேவையான ஆதாரங்கள் அவர்களின் கண்முன்னே, அவர்களின் ராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. நாம் சேகரித்துவைத்திருக்கும் ஆதாரங்களுக்கு மேலதிகமாக, அவர்களின் பொலிஸாரிடம் வழங்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கூட இருக்கின்றன". கடந்த ஜனவரி மாதத்தில் கருணா குழுவினரால நடத்தப்பட்ட கடத்தல்கள் தொடர்பான 100 பக்க அறிக்கையொன்றினை இச்சபை அரசிடம் கையளித்திருந்தது. தனிப்பட்ட சம்பவங்கள், வாக்குமூலங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு கருணா குழு எவ்வாறு அரச ஆதரவுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறார்களைக் கடத்துவது, கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவது, முகாம்களை அமைப்பது, சிறார்களை பலவந்தப்படுத்தி போரிற்கு இழுத்துச் செல்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதென்பதை ஆதாரத்துடன் வழங்கியிருந்தது. யுனிசெப் அமைப்பின் அறிக்கைப்படி மார்கழி 2006 இலிருந்து மாசி 2007 வரை குறைந்தது 45 சிறுவர்களை கருணா குழு பலவந்தமாகக் கடத்திச் சென்று ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவருகிறது. இவர்களில் மூவர் உள்ளக இடப்பெயர்வு முகாம்களிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார்கள். “ ஆனால், கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதைக் காட்டிலும் பலமடங்கு அதிகமானது. ஏனென்றால், தமது பிள்ளைகளைக் கடத்தியதுபற்றி முறைப்பாடு செய்யுமிடத்து கொல்லப்படுவீர்கள் என்று பல பெற்றோர்கள் கருணாவினால் பயமுருத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், 17 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களைக் கருணா கடத்திச் சென்றது குறித்து யுனிசெப் கணக்கில் எடுக்கவில்லை" என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, பங்குனி 2007 கடத்தப்பட்ட எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள் - கொழும்பில் மனிதவுரிமைகள் அமைப்பு கவனயீர்ப்புப் போராட்டம் "கடந்த வருடத்திலிருந்து குறைந்தது 76 தமிழர்களைக் கொழும்பில் கருணா துணைப்படைக் கூலிகளும் அரச புலநாய்வுத்துறையும் சேர்ந்து கடத்திச்சென்றுள்ளனர். நாம் இவர்களை உடனடியாக விடுவிக்கும்படி இவர்களிடம் கோருவதோடு, அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு எமது உறவுகளை மீட்டுத்தருமாறும் வேண்டுகிறோம்" என்று கொழும்பு ஹயிட் பார்க்கில் சத்தியாக்கிரக நிகழ்வில் ஈடுபட்ட கடத்தப்பட்டவர்களை மீட்கும் அமைப்பினர் கோரிக்கை முன்வைத்தனர். புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையில் இப்போராட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், துரைரத்தினசிங்கம், அரியநேந்திரன், பத்மானாதன், சந்திரநேரு, சந்திரகாந்தன், கனகசபை மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் சிறிதுங்க ஜயசூரிய, மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். "கடத்தப்பட்ட எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள், இல்லையேல் அவர்களை எங்கே சிறைப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள்" என்பதே அவர்களின் முதன்மையான வேண்டுகோளாக இருந்தது. கடத்தப்பட்ட உறவுகளின் பிள்ளைகள் கூடக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், "அவர்களைக் கொன்றுவிடுங்கள், நாங்கள் இனிமேல் அவர்களைத் தேடும் தேவையும், மன உழைச்சலும் இல்லாமல்ப் போகட்டும்" என்கிற கவலைமிகுந்த பதாதைகளின்பின்னால் இப்பிள்ளைகள் நின்றிருந்தது பார்ப்போர் மனதினை வாட்டியது. கடத்தப்படுக் காணாமல்ப்போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், "எனது அப்பா எங்கே?" "தனது அப்பாவைக் கேட்டு அழும் என் மகளுக்கு நான் என்ன சொல்லுவேன்?" "தமிழர்களையும் மனிதர்களாகப் பாருங்கள்" "மக்கள் சுதரத்தின்மூலமான சமாதானத்தினை அனுபவிக்க வழிவிடுங்கள்" "கடத்தப்பட்ட எமது உறவுகளை விடுவியுங்கள்" ஆகிய கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, பங்குனி 2007 உள்ளக இடப்பெயர்வினால் அல்லற்பட்ட மக்களிடையே ஐவரைக் கடத்திச்சென்ற கருணா துணைப்படைக் கூலிகள் மட்டக்களப்பு மனிதவுரிமைக் கவுன்சிலில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின்படி கடந்த 10 நாட்களுக்குள் குறைந்தது ஐந்து பேரை கருணா துணைப்படைக் கூலிகள் உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்களிடமிருந்து கடத்திச் சென்றிருக்கிறது. ஒரு சைவக் குருக்கள், இரு பதின்மவயதுச் சகோதரிகள் மற்றும் இன்னும் இரு இளைஞர்கள் அடங்கலாக ஐவர் இவ்வாறு துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருப்பதாக இந்த அமைப்புத் தன்னிடம் முறைப்பாடு கிடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. 1. அழகுத்துரை யோகராஜா, 23, கரடியனாறு 2. ரவீந்திரன் கோபினாத், 21, அம்பிலாந்துரை 3. மயிலப்போடி மேகநாதன், 45, சைவைக் குருக்கள் 4. நவரத்தினம் அஞ்சலிதேவி, 18 5. நவரத்தினம் ஜயலலிதா 16 ஆகியோரே இவ்வாறு பலவந்தமாக தற்காலிக தங்குமுகாம்களிலிருந்து கருணாவினால் கடத்திச் செல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்களின் கடத்தல்கள் பற்றிய முறைப்பாட்டினை உறவினர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலீஸ் நிலையங்களில் செய்துள்ளனர்.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, பங்குனி 2007 கருணா துனைப்படைக் கூலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்களுக்கு இறுதி வணக்கம் தெரிவிப்பு கடந்தவருடம் ஜனவரி மாதம் கருணா துணைப்படைக் கூலிகளால் கடத்தப்பட்டு மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்களுக்கு இறுதி வணக்க நிகழ்வு மூன்றுநாள் துக்க அனுஷ்டிப்பின் பின்னர் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. கடத்திக் கொல்லப்பட்ட 7 ஊழியர்களினதும் உருவப்படங்களை உறவினர்கள் அஞ்சலி நிக்ழவிற்குக் கொண்டுசென்று மக்கள் வணக்கத்திற்காக வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திருவுருவப்படங்கள் கிளிநொச்சி கலசார நிலையத்திற்கு மக்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பொதுச்சுடரினை ஏற்றியபின்னர் உறவினர்கள் கருணா துணைப்படைக் கூலிகளால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் பேசிய கழகத்தின் தலைவர் சிவனடியார், "சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு, பலதரப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சில் ஆகிய அனைத்து அமைப்புக்களிடமும் நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டபோதும் கூட எமது அன்பானவர்களை எம்மால் காப்பற்ற முடியவில்லையே" என்று ஆதங்கத்துடன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "யுத்தத்தாலும், வறுமையினாலும் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு யுத்த கெடுபிடிகளின் மத்தியிலும் தம்மாலான சேவையினைச் செய்திட துணிந்து சென்ற எமது அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களையே அவர்கள் வேட்டையாடியிருக்கிறார்கள்" என்றும் அவர் மேலும் கூறினார். இந்நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், புலிகளின் முக்கியஸ்த்தர் பாலகுமாரன், நிஷோர் அமைப்பின் தலைவர் கனகரத்தினம் அடிகள் மற்றும் புனர்வாழ்வுக்கழக அதிகாரிகளும் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். பிரதேசவாத வெறிபிடித்த மிருகங்களே ! இவர்களை எதற்காகக் கொன்றீர்கள்?
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, பங்குனி 2007 கருணா துணைக்கூலிகளின் கப்பம் கோரலினை எதிர்த்து கொழும்பு தமிழ் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் "ராணுவ புலநாய்வுத்துறையினருடனும், இலங்கை பொலிஸாரின் ஆதரவுடனும் கருணா துணைப்படைக் கூலிகளால் தம்மீது விடுக்கப்பட்டுவரும் கொலைமிரட்டல்களுடன் கூடிய கப்பம் கோருதலை எதிர்த்து கொழும்பு பெட்டா, கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதி தமிழ் வியாபாரிகள் தமது வியாபார நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்" என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். "எங்களுக்கு பகிரங்கமாகவே அவர்கள் தாம் கருணா குழு என்று அறிமுகப்படுத்தி பெருந்தொகையான பணத்தினைக் கப்பமாகக் கோருகிறார்கள். பொலிஸாரும் இவர்களுக்கு உடந்தையென்பதால், எமது முறைப்பாட்டினை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. அதனாலேயே நாம் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். கருணா துணைப்படைக் கூலிகள் தமக்கு விடுக்கப்பட்டுவரும் கொலைமிரட்டல்களையடுத்து ஒரு தொகுதி தமிழ் வர்த்தகர்கள் கொட்டாஞ்சேனை பொலீஸ்நிலையத்தின் முன்னால் செய்த ஆர்ப்பாட்டத்தினை அப்பொலீஸ் நிலைய அதிகாரிகள் தடுக்க முனைந்தனர். "எம்மில் பலர் உயிரச்சம் காரணமாக கருணா கேட்ட கப்பத்தொகையினைக் கட்டிவிட்டோம். சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றிற்கு தாம் கேட்கும் கப்பத்தினை உடனடியாக செலுத்துமாறும் இல்லையேல் எம்மைக் கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டினார்கள், வேறு வழியின்றி அவர் கேட்ட தொகையினை அவ்வங்கிக் கணக்கிற்கே கட்டினோம்" என்று அவர்கள் தெரிவித்தார்கள். கொழும்பு கோட்டை, பெட்டா ஆகிய பகுதிகளில் தமிழ் வர்த்தகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் அன்று மூடப்பட்டிருந்தன. கருணா துணைப்படைக் கூலிகளோடு ராணுவம், பொலிஸார் மற்று ஆட்சியில் உள்ள சில முக்கியஸ்த்தர்களுக்கும் நிச்சயம் தொடர்பிருப்பதாக வர்த்தகர்கள் மேலும் தெரிவித்தனர்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, பங்குனி 2007 இரு குடும்பஸ்த்தர்களை விசாரணைகளுக்கென்று அழைத்துச் சென்று சுட்டுக்கொன்ற கருணா துணைக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:45 மணியளவில் வாழைச்சேனையின் கறுவாக்கேணிப் பகுதியில் அமைந்திருக்குக் கெண்டயன் கேணியில் பொதுமகன் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த கருணா துணைக்குழுவினர் அங்கிருந்த இரு குடும்பஸ்த்தர்களை "உங்களை விசாரிக்க வேண்டும், எங்களுடன் வாருங்கள் " என்று அழைத்துச் சென்று வீட்டிற்கு வெளியே வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர். கொல்லப்பட்ட இரு குடும்பஸ்த்தவர்களின் விபரம் வருமாறு, 1. தம்பியைய்யா மோகன், 44, இரு பிள்ளைகளுக்குத் தகப்பன், முச்சக்கர வண்டி ஓட்டுபவர் 2. குருகுலசிங்கம் சிறிகுமரன், 30, மேசன் தொழிலாளி, 6 மாதக் குழந்தையின் தகப்பன். கொல்லப்பட்ட இருவரும் மைத்துனர்கள் என்பதோடு, கருணா குழுவினரால் அழைத்துச்செல்லப்பட்டு மிக அருகிலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிறிகுமரன் கல்லாற்றினைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதோடு, தனது காதல் திருமணத்தின்பின்னர் திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றையில் வாழ்ந்துவந்தவர். அப்பகுதியில் இலங்கை ராணுவம் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையினை அடுத்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த அவர், இறுதியாக கெண்டயன்கேணிக்கே மீள வந்திருந்தார். அவரது குடும்பமும் அவருடனேயே உறவினர்களுடன் கெண்டயன்கேணியில் தங்கியிருந்தது. மறுநாள், திங்கட்கிழமை காலை இவர்கள் இருவரது உடல்களை கண்டெடுத்த பொலிஸார் வாழைச்சேனை வைத்தியசாலையில் அவற்றை ஒப்படைத்துள்ளனர்.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, பங்குனி 2007 ராணுவ புலநாய்வுத்துறையின கட்டுப்பாடில் இயங்கும் கருணா துணைப்படையினரால் மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 6 இளைஞர்களின் உடல்கள் கொழும்பு முத்துராஜவல காட்டுப்பகுதியில் கண்டெடுப்பு கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் கொழும்பு கந்தானை பிரிவிற்குள் வரும் முத்துராஜவல சதுப்பு நிலக் காட்டுப்பகுதியில் ஆறு மட்டக்களப்புத் தமிழ் இளைஞர்களின் உடல்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றுவிட்டு, இவர்களின் உடல்களை இக்காட்டுப் பகுதியில் துணைப்படையினர் வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டபோது இந்த இளைஞர்களின் உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிகிறது. கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் துணிகளால் மூடிக் கட்டப்பட்டு, தலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இவ்விளைஞர்களின் உடல்களைப் பரிசோதித்துள்ள வைத்தியர்கள் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதுவரை கண்டெடுக்கப்பட்ட 6 தமிழ் இளைஞர்களின் உடகளையடுத்து, அப்பகுதியில் கருணா துணைப்படையினராலும், அரச ராணுவப் புலநாய்வுத்துறையாலும் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்ற ஏனைய தமிழ் இளைஞர்களின் உடல்களை இப்பகுதியில் தேடுவதற்காக பொலிஸார் ஒரு பிரிவினை உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது. ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் இவ்விளைஞரின் உடல்களை காணமல்ப் போன தமது பிள்ளைகளை தேடும் பெற்றோர் வந்து அடையாளம் காட்டியுள்ளனர். அதன்படி முதலில் அடையாளம் காணப்பட்ட ஐந்து இளைஞர்களின் விபரமும் வருமாறு, 1. அருள் சுரேஷ், ஆலய வீதி மட்டக்களப்பு 2. சுப்ரமணியம் பிரபாகரன், ஆயித்தியமலை மட்டக்களப்பு 3. சிவப்பிரகாஷ் மதிரூபன், கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு 4. கந்தசாமி வெள்ளையன், மட்டக்களப்பு நகர்ப்பகுதி 5. பொன்னையா கமல்கார்த்திக், உன்னிச்சைமலை மட்டக்களப்பு 6. ஆறாவது இளைஞரின் உடல் இச்செய்தி வெளிவரும்வரை அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் நடவடிக்கையின் மூலம் இவ்வுடல்களை பொலீஸார் பெற்றோரிடம் கொடுக்க சம்மதித்துள்ளனர். இதேவேளை, அநுராதபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இன்னும் 5 தமிழ் இளைஞர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணாத நிலையில், அநுராதபுர வைத்தியசாலைச் சவ அறையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
  10. 'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்'
  11. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு ஆறு வழுக்கையாறு. இது ஒரு சிறு ஆவணம். வேஸ்ட் அல்ல பெஸ்ட்.....! 🤔
  12. ஆச்சரியம்....! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.