Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19152
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    8910
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38777
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/18/21 in all areas

  1. கிழக்கில் கருணாவால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர்கள் கடத்தலை புலிகளின் மேல் சுமத்தி, தனது கொலைப்படைக்கு வெள்ளையடிக்கும் சிங்களப் பேரினவாதம். ஆக்கம் : இனவாதி வோல்ட்டர் ஜயவர்தின காலம் : கருணா சிறுவர்களைக் கடத்திச் சென்று தனது துணைராணுவக் கொலைப்படையில் இணைத்துவந்த காலம் இணையம் : இனவாதப் புத்திஜீவிகளின் லங்கா வெப் "புலிப் பயங்கரவாதிகளின் ஊதுகுழல் தமிழ்நெட்டும், அவர்களின் பிணாமி கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருணா அம்மான் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாக கூப்பாடு போட்டு வரும்வேளையில், புலிப்பயங்கரவாதிகள் கருணாவின் பெயரைப் பயன்படுத்தி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிறுவர்களைக் கடத்திச்சென்று தமது படையனியில் சேர்த்துவருகிறார்கள் என்று எமது ராணுவத்தினர் கூறுகின்றனர்". "கருணாவின் அமைப்பு புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து பிரிந்து சென்று தனியே இயங்குவதும், கிழக்கு மாகாணத்தில் புலிககளை விட மிகவும் பலம்வாய்ந்ததாகவும் அது காணப்படுகிறது". "ஐ நா வின் மிகக்குறைந்த மதிப்பீட்டின்படியே குறைந்தது 5000 சிறுவர்கள் அவர்களது படையணியில் இணைக்கப்பட்டிருப்பதாகாக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளின் பல ரகசிய முகாம்களில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இச்சிறுவர்களின் வாழ்வு மிகவும் கோரமானது என்று ராணுவத்தினர் கூறுகின்றனர். ராணுவத்தினர் மேலும் கூறுகையில் இம்முகாம்களை வெளியார் எவரும் பார்வையிடவோ, நிலைமைகளை ஆராயவோ அனுமதியளிக்கப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்". "ராணுவத்தினர் இக்கடத்தல்கள் பற்றிக் கூறும்போது, பெரும்பாலான கடத்தல்கல் கிழக்கிலேயே இடம்பெறுவதாகக் கூறுகின்றனர். யுனிசெப் அமைப்பினை மேற்கோள் காட்டி செய்திவெளியிட்ட தமிழ்நெட் கருணா குழு சந்திவெளி, கிரான், மாங்கேணி, வாழைச்சேனை, இருதயபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கூறுகிறது. அத்துடன் புலிகளின் பிணாமிக் கட்சியான கூட்டமைப்பே கிழக்கில் கருணா சிறுவர்கள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறுகிறது என்றும் கூறினார். புலிகளின் அத்துமீறல்களை வெளியிடாத இடதுசாரிச் சிங்களச் சேவையான சந்தேஷய கருணாவின் கடத்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டுவது அவர்களின் புலிகள் மீதான அனுதாபத்தினையே காட்டுகிறது. இருந்தபோதிலும் அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல கருணா குழுவினர் சிறுவர் கடத்துவது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும், அறியத்தந்தால் விசாரணை நடத்துவதாகவும் உறுதிப்படித்தியுள்ளார்". "ஆனால், கருணா குழுவினரால் சிறுவர்கள் கடத்தபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அதே அரச கட்டுப்பாட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே புலிகளும் சிறுவர்களைக் கடத்திச் செல்கிறார்கள் என்று ராணுவத்தினர் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக இம்மாகாணத்தில் அண்மையில் புலிப்பயங்கரவாதிகள் அப்பாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதனை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்". "ராணுவத்தினரின் செய்தியின்படி மன்னம்பிட்டிப் பகுதியில் தாமோதரம்பிள்ளையின் வீட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அவரது மகனை இழுத்துச் சென்றனர். அதேபோல கரபொட்ட பகுதியில் கூலித் தொழில் செய்யும் தங்கவேலு என்பவரையும் இழுத்துச் சென்றனர். தாம் இதுபற்றி யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருக்கு அறியத் தந்ததாகவும் ராணுவத்தினர் கூறுகின்றனர்". "இவ்வாறே கருணா அம்மானின் பிறந்த இடமான கிரானில் ஆலய முன்றலில் விளையாடிக்கொண்டிருந்த 8 சிறுவர்களை வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இச்சிறுவர்களின் பெற்றோர்களில் மூவர் இதுபற்றி பொலீஸில் முறையிட்டதாகவும் ராணுவத்தினர் கூறுகின்றனர்". "இன்னொரு சந்தர்ப்பத்தில் பாடசாலையிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் செல்வதனை எதிர்த்த ஆசிரியர் ஒருவர் புலிப் பயங்கரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டபின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் காயப்படுத்தப்பட்டார் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர். வாழைச்சேனை நகர்ப்பகுதியில் பேரூந்தொன்றில் பயணித்த வேளையிலேயே அந்த ஆசிரியர் தக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது". "பொத்துவில் பொலீஸ் பிரிவில் அமைந்திருக்கும் பயங்கரவாதிகளின் முகாமிலிருந்து தப்பிவந்த இளைஞர் ஒருவர் கூறுகையில் தன்னைப்போன்ற இன்னும் 13 சிறுவர்கள் புலிகளால் சங்கிலிகளால் கட்டப்பட்டு புலிகளின் அலுவலகத்தில் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறினார். கச்சிக்குடியாறு பகுதியில் அமைந்திருக்கும் தமது முகாமிற்கு அருகில் தன்னை அவர்கள் பிடித்துச் சென்றதாகவும், ஆனால் தான் தப்பிவந்து பொலீஸில் சரணடைந்ததாகவும் அவர் கூறியதாக ராணுவத்தினர் கூறுகின்றனர்". குறிப்பு : சிங்கள இனவாதியான வோல்ட்டர் ஜயவர்தினவால் எழுதப்படும் இக்கட்டுரை சாதாரண சிங்கள மக்களையும், வெளிநாட்டு வாசகர்களையும் இலக்கு வைத்தே எழுதப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் கடத்தல் இடம்பெற்ற இடங்கள் அனைத்துமே ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்பதும், கடத்தப்பட்ட சம்பவங்கள் அனைத்துமே கருணா குழுவால் நடத்தப்பட்டவை என்பதை யுனிசெப் மற்றும் அலன் ரொக் போன்ற ஐ நா அமைப்புக்களும் மனிதவுரிமை வாதிகளும் பெற்றோர்களையும் சாட்சிகளையும் நேரில் கண்டு விசாரணைகளை நடத்தியபின் ஐ நா வின் உத்தியோக பூர்வ அறிக்கையின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத் தாக்கது. சிங்கள இனவாதிகள் செய்வதெல்லாம் கருணாவின் குற்றங்களைப் புலிகள் மேல் போட்டுவிட்டு, கருணாவின் குற்றங்களுக்கு வெள்ளையடிப்பதுதான். இதில் வேடிக்கையென்னவென்றால் கருணாவின் துரோகம் தொடங்கிய நாட்களில் மன்னம்பிட்டி, வெலிக்கந்தை, கரப்பொட்ட போன்ற முழுதான ராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களிலேயே கருணா தனது முகாம்களை அமைத்து சிறுவர்களைக்கடத்திச் சென்று பயிற்சியில் ஈடுபடுத்தி வந்தான் என்பது, ராணுவ முகாம்களுக்கு அருகிலேயே கருணாவின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்ததை சர்வதேச பத்திரிக்கையாளர்களும், கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோரும் கண்டதை பல ஊடகங்களும், ஐ நா வின் அறிக்கையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது. http://www.lankaweb.com/news/items06/260606-10.html
  2. தோழரை கண்டதில் மகிழ்ச்சி.👍
  3. இலங்கை நாடு ஒரு நோயாளி, பிரபாகரனின் பயங்கரவாதிகள் இந்த நாட்டின் வைரஸுக்கள், கருணாவே இவ்வைரஸை அழித்து உயிர்காக்கும் நிவாரனி ! ஆக்கம் : சிங்கள இனவாதி சார்ள்ஸ் பெரேரா இணையம் : லங்கா வெப் எனக்குப் போர் பிடிப்பதில்லை. நான் ஒருபோதும் ஒரு எறும்பிற்குக் கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். அதனால், அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படும்போது நான் மிகுந்த கவலையடைகிறேன். இலங்கையின் தமிழ்ப் பயங்கரவாதிகள் உண்மையான கொலைகாரர்கள். மக்களின் உயிரினைப் பறிப்பதுபற்றி அவர்கள் ஒரு கணமேனும் சிந்திப்பதில்லை. அதற்காக வெறிநாய்களைக் கொல்வதுபோல், பயங்கரவாதப் புலிகளையும் கொன்றுவிடுங்கள் என்று நான் யாரையும் கேட்கப்போவதில்லை. அதனாலேயே இப்பயங்கரவாதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன்மூலம் கொலைகளையாவது தடுத்து நிறுத்தலாம் என்று நான் விரும்பினேன். இரத்தவெறிபிடித்த புலிப் பயங்கரவாதிகளுக்கும் , ராணுவத்தினருக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் இத்தொடர் படுகொலைகளை நிறுத்தும் முதலாவது நோக்கத்துடனேயே நிகழ்த்தப்பட்டது. இந்த யுத்த நிறுத்தம் மூலம் பயங்கரவாதிகளைச் சுடுவதை ராணுவம் நிறுத்திக் கொண்டது. ஆனால் பயங்கரவாதிகளோ ராணுவத்தையும், ராணுவத்தோடு சேர்ந்து இயங்குபவர்களையும், தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் , ஏன், தம்முடன் இருந்தோர்களையும் கொல்வதையோ அல்லது கொல்வதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதையோ இதுவரை நிறுத்தவில்லை. ஆக, படுகொலைகளை நிறுத்தும் நோக்குடனும், சமாதானத்தை எட்டும் நோக்குடனும் நிகழ்த்தப்பட்ட இந்த யுத்த நிறுத்தத்தின் உண்மையான விளைவு இவை மட்டும்தான். இந்த யுத்த நிறுத்தம் மூலம் கொடூரப் பயங்கரவாதிகள் தம்மை எதிர்த்தவர்களைக் கொல்லவும், சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பயிற்சியில் ஈடுபடுத்தவும், தமது மனித வெடிகுண்டுகளான கரும்புலிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும், அரச ராணுவமோ அல்லது அரச அதிகாரிகளோ செல்லமுடியாத தமது அதிகாரத்திற்குற்பட்ட பகுதியென்று ஒரு பகுதியை அடாத்தாக பிரகடணம் செய்யவும் முடிந்திருக்கிறது. இப்பயங்கரவாதிகளை வேட்டையாடி, மக்களைக் காத்துவந்த ராணுவத்தின் கைகள் கட்டப்பட்டு நிற்க , இப்பயங்கரவாதிகள் தமது கொலைக்கலாசாரத்தினை தடையின்றி முன்னெடுக்கவே இந்த யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதிகள் தமக்கான அதிகாரப் பிரதேசத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை ஏற்றுக்கொள்வதோடு இரு இனங்களுக்கிடையிலான பிளவினையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ் என்னைப்போன்ற ஒருவர் தொடர்ச்சியாக போரிற்கு எதிரானவராக தன்னைக் காட்டிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை. இப்போது, நாசகாரப் பயங்கரவாதிகள் டொடர்ச்சியாக மக்களைக் கொல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ராணுவத்திடம் துப்பாக்கிகள் இருந்தும் இந்த மிலேச்ச பயங்கரவாதிகளைக் கொல்ல முடியாமல் இருக்கிறது. ஆனால், யாராவது இந்தப் பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த ஒருவர் இந்த முட்டாள்த்தனமான "புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால்' கட்டுப்படாதவராக இருத்தல் வேண்டும். கொடூரமான புலிப் பயங்கரவாதிகள் தமது கொலைவெறியாட்டத்தில் அப்பாவி கருணா அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்லும்போது நான் கவலையடைகிறேன். ஆனால், கருணா அம்மான் வன்னிப் பயங்கரவாதிகளைக் கொன்றார் என்று செய்தி கேட்கும்போது வெட்கமறியாத எனது உள்மனம் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. மனிதநேயத்தைப்பொறுத்தவரை ஒரு பயங்கரவாதியைக் கொல்வதுகூடத் தவறாகத் தெரியலாம், ஆனால் இது உயிரைக் கொல்லக்கூடிய ஒரு வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு ஒப்பானது. நாம் நோயாளியைக் காப்பதற்காக வைரஸைக் கொல்கிறோம். அதேபோல, இன்று அந்த் நோயாளி இலங்கை எனும் நாடு. அந்த நாட்டினைப் பீடித்திருக்கும் உயிர்கொல்லும் வைரஸுக்கள் பாஸிஸப் பயங்கரவாதிகளின் தலைவன் பிரபாகரனும் அவனது கொலைகாரர்களும். பிரபாகரன் எனும் கொடிய வைரஸைக் கொல்லும் உயிர்காக்கும் தடுப்பு மருந்தே எமது கருணா அம்மான் ! முற்றும்! http://www.lankaweb.com/news/items05/240405-2.html
  4. இலங்கை வாழ் தமிழர்களுக்கான உண்மையான விடுதலை என்பது இலங்கையின் அரசியல்த் தலைமையிடமும் ராணுவத்தினரிடமும் கருணா அம்மானின் கைகளிலுமே இன்று இருக்கிறது. சிங்கள இனவாத புத்திஜீவிகளின் இணையமான லங்கா வெப்பின் ஆசிரியர் தலையங்கம் காலம் : மாசி 1, 2007 இலங்கைக்குள்ளும் வெளிநாட்டிலும் வாழும் பல விமர்சகர்கள் தற்போது புலிகள் ஒரு பலவீனப்பட்டுப்போன இயங்குநிலையிழந்த ஒரு அமைப்பென்பதை ஏற்றுக்கொள்ள தலைப்பட்டுள்ளனர். புலிகள் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டதனால் அவர்கள் மீது தொடர்ச்சியாக நாம் கொடுத்துவரும் ராணுவ அழுத்தம் எவ்விதத்திலும் தளர்த்தப்படவோ நிறுத்தப்படவோ கூடாது. எமது ராணுவத்தினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த புலிகளின் வெளிநாட்டு அனுதாபிகளும், அரச சார்பற்ற அமைப்புக்களூம், நிதி வழங்குனர்களும், இறுதியாக அமெரிக்க தூதரும் கூட முயற்சிக்கலாம். இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் புலிகள்தான் என்று இன்றுவரை கூறிவரும் இவர்கள் தமிழ் மக்களின் விடுதலை என்பது புலிகளை அழிப்பதில்த்தான் ஆரம்பமாகிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனும் மகத்தான செயற்பாட்டில் இறங்கியிருக்கும் நாடான அமெரிக்கா, இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்துச் சமூகங்களுக்கும் தலைவலியாக இருந்துவரும் புலிப் பயங்கரவாதிகளை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வதும், அவர்களுடன் பேசி தமிழர்களுக்கான தீர்வினை வழங்குங்கள் என்று அரசினைக் கேட்பதும் நகைப்பிற்கிடமானது. அமெரிக்கா செய்யவேண்டியது யாதெனில், புலிப்பயங்கரவாதிகளை அழித்து தமிழ் மக்களுக்கான உண்மையான விடுதலையினை வழங்குவதேயன்றி புலிகளை தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதல்ல. எமது ராணுவத்தினர் எதோச்சதிகார பிரபாகரனின் குழுவுக்கெதிரான அழுத்தத்தினை பலமுனைகளிலும் பிரயோகித்துவரும் நிலையில், எமது அரசுத்தலைவரான மகிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் எமது ராணுவத் தளபதி எமது ராணுவத்தை வெற்றிகரமாக நடத்திவருவதுடன், ராணுவ நடவடிக்கைகளிலும் அவற்றின் வெற்றியிலும் கருணா அம்மானின் அர்ப்பணிப்பும், பங்களிப்பும் அளவிடமுடியாதது. எமது நாட்டிற்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்திவரும் பிரபாகரனின் செயற்பாடுகளுக்கெதிராக கருணா அம்மான் எடுத்துவரும் வெற்றிகரமான ராணுவச் செயற்பாடுகள் வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும்கூட, எமது நாட்டிற்கு அவர் ஆற்றிவரும் சேவை மெச்சத் தக்கது. கருணா அம்மான் இலங்கை நாட்டு மக்களுக்கு ஆற்றிவரும் இந்த தியாகச் செயலின் உண்மையான அளவினை புலிப் பயங்கரவாதிகளின் பார்வையிலிருந்து பார்க்கும்போதே உணர்ந்துகொள்ளமுடியும். கருணா அமைப்பின் வீரர்களின் நடவடிக்கையினால் புலிப்பயங்கரவாதிகள் உடல்ரீதியிலும், உளரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, அச்சமடைந்துபோய் இருக்கிறார்கள். புலிகளின் அனைத்து துறைகளிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவரும் கருணா வின் வீரர்கள் இறுதியில் புலிகளின் அழிவு என்பது இந்நாட்டின் அனைத்து மக்களின் நல்வாழ்விற்கும் அவசியமானது என்பதையும், புலிகளின் அழிவு என்பது எந்தவிதத்திலும் எவரையும் ஆதிக்கப்போவதில்லையென்பதையும் விரைவில் உணர்த்தத்தான் போகிறார்கள்.
  5. பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய முன்னாள் புலிகளின் தளபதி கருணா அம்மான். ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின காலம் : கருணா மகிந்தவின் தயவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய காலம் புலிப்பயங்கரவாதிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்து, பின்னர் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளின்மேல் விசனமடைந்து ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டுவரும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரின் பதவியேற்கும் நிகழ்வினை ஐக்கிய தேசியக் கட்சி, புலிப்பயங்கரவாதிகளின் பிணாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாக்சிஸ்ட் அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் கருணா பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை விமர்சித்து, புறக்கணிப்புச் செய்திருந்தன. தனது பதவியேற்கும் நிகழ்வில் பேசிய கருணா, " புலிப் பயங்கரவாதிகளின் இறுதி ராணுவத் தோல்வி கிளிநொச்சியில் அவர்களுக்கு வெகு விரைவில் வழங்கப்பட்டுவிடும். பல சாவால்களுக்கும் மத்தியில் என்னை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியமைக்கான கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாக எனது இப்பாராளுமன்றப் பதவியினை நான் பார்க்கிறேன்" என்று கூறினார். இலங்கையின் அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சத்தியப்பிரமானம் செய்து தனது பாராளுமன்றப் பதவியினை ஏற்றுக்கொண்ட கருணா அம்மானின் இந்த நிகழ்வினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணா முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றூம் மட்டக்களப்பு நகர மேயர் சிவசங்கீதா பிரபாகரன் உட்பட அக்கட்சியில் பல பிரமுகர்கள் பொதுமக்கள் கலரியில் இருந்து கண்டுகளித்தனர். கருணாவின் பதவியேற்பு நிகழ்வினை எதிர்த்தரப்பு வரிசையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் விமல் வீரவன்ச கண்டுகளித்ததுடன், கருணா அம்மானுக்கு தனது பாராட்டுதல்களையும் வழங்கினார். கருணா தொடர்ந்தும் பேசுகையில், " நாம் மிக நீண்டகாலமாக மிகவும் தவறான பாதையில் சிந்தித்து, பயங்கரவாதப் புலிகளுடன் சேர்ந்து செயற்பட்டு வந்தோம். ஆனால், பயங்கரவாதிகளின் தவறான பாதையினை உணர்ந்துகொண்டபின்னர், ஜனநாயகத்தை முற்றாகத் தழுவி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினை உருவாக்கி இலங்கை நாட்டின் ஜனநாயக அரசியலில் இறங்கியிருக்கிறோம்". "கிழக்கு மாகாணம் புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டது. தற்போது அங்கே பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாணசபை அரசு முன்னெடுத்து வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமான எமது கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்". "புலிப்பயங்கரவாதிகள், அவர்களது சரித்திரத்தில் தமது ராணுவ ஆற்றலின் மிகவும் பலவீனமான நிலையினை இப்போது அடைந்துவிட்டார்கள். அரச ராணுவத்தினரின் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக அவர்கள் இப்போது பாவிக்கிறார்கள். பயங்கரவாதிகளின் இறுதி ராணுவத் தோல்வி கிளிநொச்சியில் வைத்து அவர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் நெருங்கிவிட்டது. அதன்பின்னர் கிழக்கு மாகாணத்தைப் போலவே வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும்" என்றும் கூறினார். தனது பதவியேற்பின் பின்னர் பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவர் சந்தித்து பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார். http://www.lankaweb.com/news/items08/081008-3.html
  6. புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர்கலைக் கொன்றது கருணா குழுவே - ராணுவம் தெரிவிப்பு காலம் : கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ராணுவ முகாம்களில் இருந்து செயற்பட்டு வந்த காலம் மூலம் : சிங்கள இனவாதி வோல்ட்டர் ஜயவர்தின பிரபாகரனின் புலிகள் பிரிவுக்கும் கருணாவின் பிரிவுக்கும் இடையே கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களில் அண்மையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளரும் அவரது நெருங்கிய சகாவும் கருணாவினால் கொல்லப்பட்டுள்லதாக ராணுவத்தினர் கூறியிருக்கின்றனர். ராணுவத்தினர் மேலும் தகவல் தருகையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர் பகலவன் என்றழைக்கப்படும் சிவானந்தன் முரளி மற்றும் அவரின் நெருங்கிய சகாவான வதனன் ஆகிய போராளிகள் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பின் வடமேற்கே அமைந்திருக்கும் தன்னாமுனைப் பகுதியில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. ராணுவத்தினரின் தகவல்களின்படி பகலவன் பொட்டு அம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்து வந்தவர் என்றும், வதனன் அவரின் நடவடிக்கைகளில் உதவிவந்தவர் என்றும் தெரியவருகிறது. மட்டக்களப்புப் பொலீஸாரின் கூற்றுப்படி இவர்களைச் சுட்டுக் கொன்ற ஆயுததாரிகள் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள்பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கூறியிருக்கின்றனர். புலிகளின் இரு புலநாய்வுப் போராளிகளும் தமது மரணத்தினை மட்டக்களப்பு - வாழைச்சேனை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே தழுவிக்கொண்டதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். ஏறாவூர் பொலீஸ் நிலையப் பொறுப்பாளர் தர்மசேன ரத்நாயக்கவின் கூற்றுப்படி கைத்துப்பாக்கியினால் சுடப்பட்ட இரு போராளிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகத் தெரியவருகிறது. ஆனால், புலிகளின் ஆங்கிலமூல இணையச் செய்திச் சேவை தமிழ்நெட்டோ கொல்லப்பட்ட இருபோராளிகளும் அரசியல்த் துறையினைச் சேர்ந்தவர்கள் என்றே கூறுகிறது. தமிழ்நெட்டின் செய்தியின்படி இந்த அரசியல்த்துறைப் போராளிகள் இருவரும் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைராணுவக் குழுவின் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இக்கொலைகளை தமது ஆதரவாளரான 49 வயது செல்லையா குமாரசூரியர் என்பவர் புலிகளால் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாகவே கருணா மேற்கொண்டதாக ராணுவத்தினை நம்புகின்றனர். கருணா குட்ழு ஆதரவாளர் குமாரசூரியர் கொல்லப்பட்ட நாளன்று, அவரின் வீட்டிற்குச் சென்ற புலிகளின் பிஸ்ட்டல் குழுவினர் அவரது பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், அழைத்து 15 நிமிடங்களின் பின்னர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்தபோது குமாரசூரியர் கொல்லப்பட்டுக் கிடந்ததாகவும் அவரது மனைவி கூறியிருக்கிறார். தமது போராளிகள் இருவர் கொல்லப்பட்டதுபற்றி செய்திவெளியிட்ட தமிழ்நெட், அண்மையில் ஆயித்தியமலைப் பகுதியில் கருணா குழுவினராலும் ராணுவத்தாலும் கொல்லப்பட்ட தமது 7 அரசியல்த்துறைப் போராளிகள்பற்றியும், பெண்டுகல்ச்சேனைப் பகுதியில் கொல்லப்பட்ட இன்னொரு அரசியல்த்துறைப் போராளிபற்றியும் செய்திவெளியிட்டிருந்தது. புலிகள் மீதான படுகொலைகலை ராணுவத்தினரும் கருணாவும் இணைந்தே நடத்துவதாகப் புலிகள் தெரிவித்திருக்கும் நிலையில், ராணூவமோ கருணா குழு மட்டுமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. http://www.lankaweb.com/news/items04/080504-2.html
  7. "நான் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி வரும்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னை அரசியலில் இணைந்துகொள்ளுமாறு அழைத்ததன் பின்னரே அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு வந்தது. புலிகளின் பயங்கரவாதத்தைத் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் துணிவுடன் எதிர்த்து நின்றவர்கள் எவருமே இருந்ததில்லை. அவரே 1983 இல் ஜனாதிபதியாகி இருந்தால் இந்தப் பிரச்சினையினை அன்றே இல்லாதொழித்திருப்பார். எனது 22 வருட கால போராட்ட அனுபவத்தில் மகிந்த ராஜபஷவைப் போன்றதொரு நேர்மையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. அவர் இந்தப் போரில் வென்று, வடக்குக் கிழக்குப் பிரச்சினையினை நிச்சயமாகத் தீர்த்துவைப்பார் என்று நான் 100 வீதம் நம்புகிறேன்". "புலிகள் இயக்கம் ஒரு முழுமையான பயங்கரவாத இயக்கமாக எனக்குத் தெரிந்தது. எல்லோரும் நம்பிக்கொண்டிருந்ததைப் போல தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமாக அது எப்போதுமே இருந்ததில்லை, அதனாலேயே எனது வீரர்கள் 6000 பேரையும் கூட்டிக்கொண்டு அந்த இயக்கத்திலிருந்து விலகினேன். அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று, அனைத்து மதங்களினதும் மத வழிபாட்டுத்தலங்களைத் தாக்கியழித்து, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றி, அவர்களை சொத்துக்களைச் சூறையாடிய ஒரு அமைப்பு எவ்வாறு மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுத்தர முடியும்?". "என்னைப்போலவே, நேர்மையான ஏனைய தளபதிகளையும் நான் இயக்கத்தினை விட்டு வெளியேறிவரவேண்டும் என்று நான் கேட்டேன். திருகோணமலைத் தளபதி பதுமனுடன் இதுபற்றிப் பேசியிருந்தேன், ஆனால் அவர் வன்னியில் அகப்பட்டதனால் அவரால் தப்பி வரமுடியவில்லை". "முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிப் பயங்கரவாதிகள் மிகவும் பலவீனமான கட்டத்தில் இருந்தபோது அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார். 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் புலிகளின் வெளியுலக நகர்வுகள் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்த தருணத்தில், சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றிவரக்கூடிய சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கை முழுவதும் சுதந்திரமாக, தடைகள் இன்றி பயணிக்க அவர்களால் முடிந்தது. இந்தத் தருணத்தினைப் பாவித்து தெற்கின் பல பகுதிகளுக்கும் அவர்கள் ஆயுதங்களையும், ஆயிரக்கணக்கான கிலோகிராம்கள் வெடிமருந்துகளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.". "ஒருபக்கம் தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டே அழித்துக்கொண்டிருந்த பிரபாகரன், வாழ்க்கையின் அனைத்து உல்லாசங்களையும் அனுபவித்துக்கொண்டே வந்தார். ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது எனும் சட்டத்தை வைத்திருந்தார்கள், ஆனால் தனக்கு திருமண ஆசை வந்தவுடன் தானே கொண்டுவந்த சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு திருமணம் முடித்துக்கொண்டார்" "பிரபாகரன் சிங்களவர்களை மட்டுமல்ல, பல்லாயிரக்கனக்கான தமிழர்களையும் படுகொலை செய்தார். உலகில் இருந்த மிகவும் கொடூரமான பயங்கரவாதிகளில் பிரபாகரன் முதன்மையானவர்".
  8. பிரபாகரன் தனது இறுதிமூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார் அவரது கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கிவிட்டது -கருணா அம்மான் ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின (இலங்கை ராணுவ அரச வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் , அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சிங்களவர், அமெரிக்க -இலங்கை கூட்டுறவின் கலிபோர்னியா மாநில ஒருங்கிணைப்பாளர், பிரசித்திபெற்ற வழக்கறிஞரான இவர் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இலங்கையில் தமிழருக்கென்று உரிமைகள் வழங்கப்பட்டுவிடக் கூடாதென்று இந்திய ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே கடுமையாகப் போராடிவந்த இனவாதி, 2020 மே 3 ஆம் திகதி இறந்தார்) காலம் : இனவழிப்புப் போரின் இறுதிக்காலம் போராட்டத்தில் ஈடுப்பட்டவரும், இன்று அவருக்கெதிரான ராணுவ நடவடிக்கையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அண்மையில் பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசும்போது, " பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார், அவர் செய்த மிலேச்சத்தனமான, கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கி விட்டது" என்று கூறினார். இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் சிங்களச் செய்தியாளரின் பேட்டிக்கு, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் கருணா பதிலளித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் தொடர்ந்தும் பேசுகையில், " எனது கருத்துக்களுக்கும், அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கும் கருத்துக்களுக்கும் பிரபாகரன் செவிசாய்க்கவில்லை. நான் அவருடன் வெளிப்படையாகவே முரண்பட்டுக்கொள்வேன். ஆனால், இயக்கத்தில் இருந்த பல மூத்த தளபதிகளுக்கு அந்தத் தைரியம் கிடையாது. பிரபாகரன் கூறும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு, அவரின் பின்னால் தமது அதிருப்தியைத் தெரிவிப்பார்கள்" என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், " முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும், கண்டி தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல்தொடர்பாகவும் நான் பிரபாகரனிடம் கேள்வி கேட்டேன். இந்தத் தாக்குதல்கள் புலிகள் மீதான நற்பெயரை உலகளவில் பாதித்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா என்று கேட்டதற்கு பிரபாகரன் தனக்குத் தெரியாமலேயே இது நடத்தப்பட்டுவிட்டது என்று என்னிடம் கூறினார். ஆனால், பிரபாகரனுக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடப்பதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும், அவர் கூறுவது ஒரு முழுப்பொய் என்று நான் தெரிந்திருந்தேன்". தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா மேலும் கூறும்போது, "பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும். புலிகளின் ஆட்பலமும், ஆயுத வளமும் மிகக் கடுமையான வீழ்ச்சியினைக் கண்டிருந்த சமயத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகள் பாரிய நிதிச் சேர்ப்பையும், அதன்மூலம் பெருமளவு ஆயுதங்கலையும், கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் தமது ராணுவத்தையும் வலப்படுத்திக்கொண்டனர்". "புலிகளின் தலைவர்கள் என்று சூசை, நடேசன், தயா மாஸ்ட்டர் போன்றவர்களை பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் அங்கே தலைவர்களே கிடையாது. இவர்களின் கருத்துக்களைப் பிரபாகரன் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கடற்புலிகளின் தளபதி என்று கூறிக்கொள்ளும் சூசைக்கு தரையில் சண்டையிடுவது எப்படியென்று எதுவுமே தெரியாது. அவரை எவருமே தலைவராக மதிக்கவேண்டிய அவசியம் இல்லை". "புலிகளின் அரசியல் அலோசகர் அன்டன் பாலசிங்கம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முகத்திற்கு நேரே, நானும் கருணா கூறுவதையும் நீ கேட்கப்போவதில்லை, ஒரு பாசிஸ வெறிபிடித்த சர்வாதிகாரியாக நீ செயற்படுகிறாய் என்று கூறினார். இதற்கு முன்னர் பிரபாகரனின் தாந்தோன்றித்தனமான முடிவுகளைக் கேள்விகேட்ட மாத்தயாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நடந்த அநியாயப் படுகொலைகளை நீங்களும் அறிந்திருப்பீர்காள்".
  9. "பிரபாகரனின் சுயரூபம் தமிழர்களால் நன்கு விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அவரால் இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி வடக்கில் இருந்து தேவையானளவு போராளிகளை இயக்கத்தில் சேர்க்கமுடியாமற்போய்விட்டது. அதனாலேயே தனது ஆளணி வளத்துக்காக கிழக்கில் தங்கியிருக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. வன்னியில் அவரது கட்டுப்பாட்டிற்குள் அகப்பட்டுப்போன மக்களைக் கட்டாயமாக இழுத்துவந்து தனது படையில் அவர் இணைத்தார்". "இங்கே இயங்கிவரும் சில "ஜனநாயக" தமிழ்க் கட்சிகளின் அரசியலுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணத்திற்கு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒருபோதுமே இணைக்கப்படக் கூடாதெனும் முடிவில் நாம் ஆணித்தரமாக இருக்கிறோம், ஆனால் சில தமிழ்க் கட்சிகள் இம்மாகாணங்கள் இணைக்கப்படுவதை விரும்புகின்றன. ஆனால், அது அவர்களது அரசியல் விருப்பம். வேண்டுமானால் கலாசார ரீதியில் வட மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையே சில தொடர்புகள் இருப்பதை நான் அனுமதிப்பேன், ஆனால் அரசியல் ரீதியில் நிச்சயமாக நாம் தனித்தே இயங்குவோம். நான் ஜனநாயக வழியைப் பின்பற்றி இன்று மக்களுக்குச் சேவை செய்வதுபோல பிரபாகரனும் தனது பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு இந்தப் பேட்டியின்மூலம் அவரைக் கேட்டுக்கொள்கிறேன்". "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியல்ல, மாறாகப் பயங்கரவாதப் புலிகளைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு பிணாமிக் கட்சி. கூட்டமைப்பினை உருவாக்குவதில் நானும் கடுமையாக உழைத்திருந்தேன். பிரபாகரனின் அனுமதியில்லாமல் கூட்டமைப்பின் எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் வாயே திறக்கமுடியாதிருந்தது. கூட்டமைப்பிற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ததுகூட பிரபாகரன் தான். புலிப்பயங்கரவாதிகளின் அச்சுருத்தல்களுக்கும், கட்டளைகளுக்கும் அமைவாகவே உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இவ்வாறு பிரபாகரனால் தெரிவுசெய்யப்பட்ட பொம்மை உறுப்பினர்களுக்கு வக்களிக்குமாறு தமிழர்கள் பிரபாரனால் ஆயுதமுனையில் அச்சுருத்தப்பட்டனர்". "வருகிற பொதுத் தேர்தல்களில் எமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 8 இடங்களைப் பெறும் என்பது உறுதியானது. கூட்டமைப்பு ஒரு ஆசனத்தைத்தன்னும் பெறாது மண் கவ்வும் என்று நம்புகிறேன்". " இதுவரை காணாத அளவில் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை நாம் ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 22 வருடங்களில் எமது மக்கள் கண்டிராத பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன". "புலிப்பயங்கரவாதிகளை முற்றாக அழித்து இப்போரில் எமது படையினர் வெற்றி ஈட்டுவார்கள் என்பது உருதிப்படுத்தப்பட்டு விட்டது. மிகவும் திறமையாக எமது பாதுகாப்புச் செயலாளரால் திட்டமிடப்பட்டு, அத்திட்டம் எமது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவால் நடைமுறைப்படுத்தப்பட்டு, இப்போது இலங்கை நாடு புலிப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து வெற்றியீட்டும் தருணத்தில் நிற்கிறது". "பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்க, நாம் அவரின் கண்மூடித்தனாமன அக்கிரமங்களுக்கான தண்டனையினை வழங்கக் காத்திருக்கிறோம்". முற்றும் ! http://www.lankaweb.com/news/items08/151208-3.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.