Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1866
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88006
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7401
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/29/21 in Posts

  1. மலையோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று ........! 😂
  2. Lauterbrunnen மற்றும் Grindelwald ஆகிய இரு இடங்களும் அவசியம் கால்நடையாக நடந்து ரசிக்கக் கூடிய அற்புதமான இடங்கள். என்னுடன் வந்த இருவருடனும் சில தூரம் நடந்துவிட்டு, பின்னர் காரிலேயே சுற்றிப் பார்த்தோம். "Top of Europe" இன்னும் அற்புதம்..! நேரம் கிட்டும்போது சுவிட்சர்லாந்து பயண நினைவுகளை எழுதுகிறேன்.
  3. இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!
  4. உங்களை இழந்த இந்நாளில்(30.10.2021) உங்களை நினைவு கூருகின்றோம்😢😢😢🙏வீரவணக்கங்கள் வரதா அக்கா🙏 லெப். கேணல் வரதா / ஆதி...! தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஊரிலே தான் திரு.திருமதி யோகராசா இணையருக்கு ஒரு அக்கா, இரண்டு அண்ணாக்களுடன் கடைசிச் செல்வப் புதல்வியாக சந்திரகுமாரி எனும் நாமத்துடன் 01.11.1969 இல் எங்கள் வரதா அக்கா வந்துதித்தார். அவர் எமது தேசியத் தலைவருக்கு நெருங்கிய உறவினர் என்ற பெருமையையும் பெரும் பேற்றையும் தமதாக்கிக் கொண்டுள்ளார். அதன் காரணத்தினால் சந்திரகுமாரி அக்காவுக்கு சிறு வயது முதல் இயல்பாகவே மிகுந்த நெஞ்சுரமும் தலைமைத்துவப் பாங்கும் இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது. அவரது குடும்பமானது மாமிச உணவு உண்ணாத பரம்பரைச் சைவக் குடும்பம் ஆகும். அவரது தந்தையார் அரசாங்க எழுதுவினைஞராகக் கொழும்பு மாநகரத்திலே பணியாற்றி வந்தார். இதனால் சந்திரகுமாரி அக்காவும் தனது சிறு வயதுக் கல்வியை கொழும்பிலே கற்றார். பின்பு 1977ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பாரதூரமான இனக் கலவரத்தின் காரணத்தினால் அவரது குடும்பம் கொழும்பை விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வல்வெட்டித்துறையில் வசித்து வந்தனர். சந்திரகுமாரி அக்காவும் தனது மிகுதிப் பாடசாலைக் கற்கை நெறியினை வல்வெட்டித்துறையிலுள்ள மிகவும் பிரபல்யம் பெற்ற கல்லூரியான சாரண இயக்கத்தில் அகில இலங்கை வரை சென்று சாதனை படைத்த யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியில் தொடர்ந்தார். எம் தலைவன் பிறந்த மண்ணிலே பிறந்த காரணத்தினால் “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்” என்ற முது மொழிக்கேற்ப சந்திரகுமாரி அக்காவும் சிறு வயது முதல் வீரத்தில் மட்டுமல்ல கல்வியறிவிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். பாடசாலையில் நடைபெறும் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது தட்டெறிதல், குண்டெறிதல், மரதன் ஓட்டப்போட்டி போன்றனவற்றில் பங்குபற்றி மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு பல பரிசுக் கேடயங்களையும் பெருமையையும் பெற்றுக் கொடுத்தார். படிப்பிலும் குறை வைக்கவில்லை. 1985ஆம் ஆண்டில் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற வல்வை நூலகப் படுகொலை அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் தனது கல்வியை மனந் தளராது தொடர்ந்து க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1988வது அணியில் வர்த்தகப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்று வந்தார். இவர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் 1987 – 1988 களில் இந்திய வல்லாதிக்க இராணுவத்தினரின் கெடுபிடிகளினால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டிருந்தார். இந்திய இராணுவத்தின் அத்தனை கெடுபிடிகளுக்குள்ளும் தனது கல்வியறிவைப் பூர்த்தி செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கல்வி கற்று 1988இல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் இலங்கை அரசினால் தமிழ் மாணவர்களின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தரப்படுத்தல் கொள்கை மூலம் ஏற்பட்ட வெட்டுப்புள்ளிப் பிரச்சனையினால் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். பின்பு 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பெண் போராளிகளின் சுதந்திரப் பறவைகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி வந்தார். 12.05.1985 இல் க.பொ.த சாதாரணதரம் படிக்கும் போது நடைபெற்ற வல்வை நூலகப் படுகொலை, தரப்படுத்தலின் விளைவாக 1988 இல் க.பொ.த உயர்தரத்தில் ஏற்பட்ட பிரச்சனை, 02.08.1989 இல் நடைபெற்ற வல்வைப் படுகொலை போன்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் அவரை எமது போராட்டத்தின் பால் ஈர்த்தது. இதன்பால் 1990 இல் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரகுமாரி அக்காவும் “அடுப்பங்கரைகளிலும், சினிமா கொட்டகைகளிலும் சிந்தைகளைப் பறி கொடுத்து தூங்கிக் கிடந்திடாமல் அலங்கார ஆடைகளையும் அழகு ஆபரணங்களையும் அணிந்து திரிந்து போலித்தனமான புளகாங்கிதம் அடையாமல் புரட்சிகரக் கருத்துக்களை உறுதியாகப் பற்றி போர்க் குணம் கொண்ட மங்கையாய்க் களம் புகுந்து எமது நீதியான யுத்தத்தின் மூலம் அநீதியான யுத்தமனைத்திற்கும் முடிவு கட்டலாம்” என்றும் “நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது நாயகன் கடமை மட்டுமல்ல நமது கடமையுமாகும்” என்பதனையும் உணர்ந்து எழுச்சி கொண்டு மகத்துவம் மிக்க எம் பெருந் தலைவன் அணியில் இணைந்து மகளிர் பயிற்சிப் பாசறையில் 11வது அணியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வரதா எனும் பெயர் கொண்டு வரிப்புலியாகினார். பின்னர் அவர்களது பயிற்சி முகாமிலேயிருந்து 150 போராளிகளைத் தேர்ந்தெடுத்து எந்த ஆபத்தான போர்ச் சூழலையும் எதிர் கொண்டு நிற்கவல்ல துணிவாற்றலுள்ள போராளிகளாக மாற்றும் மிகத் திறமையான கடுமையான விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டு பலாலிப் பகுதி, யாழ். கோட்டைப் பகுதி போன்ற இடங்களில் போர் முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணி ஒன்றிற்கு அணித் தலைவியாக சிறிது காலம் யாழ். கோட்டைப் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பின்பு பலாலிப் பெருந்தளத்தின் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த பெண் போராளிகளின் போர் அணிகளுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மினி முகாம்கள் மீது துணிகரத் தாக்குதல்களை நடாத்திச் சாதனைகள் படைத்தார். மேலும்,அவர் சைவ உணவு உண்ணுபவராக இருந்ததால் தனக்குரிய சைவ உணவு கிடைக்காத பட்சத்திலும் தான் பசியிருந்தபடி பலாலிப் போர் முனையில் நிற்கும் தனது அணியின் சக போராளிகளுக்கு ஒரு அணித் தலைவி எனும் பொறுப்புடன் ஒரு தாயாக நேரம் தவறாது பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினரின் பதுங்கித் தாக்குதல்களினை வெகு சாமர்த்தியமாகச் சமாளித்துக் கையாண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்லும் தன்னலமற்ற சேவையையும் புரிந்தார். எமது அமைப்பின் பெண் போராளிகளின் படையணிகள் வளர்ச்சி பெற்று விரிவாக்கம் கண்டதுடன் விடுதலைப் போரிலும் முக்கிய பங்காற்றியது 10.07.1991 இல் தொடங்கிய ஆகாய கடல் வெளிச் சமரின் போது இனங் காணக் கூடியதாக இருந்தது. இப் பெருஞ் சமரில் பெண் போராளிகளைக் கொண்ட பல படைப் பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு துணிவாற்றலுடன் வீர சாதனைகள் படைத்தன.இச் சமரில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணிக்கு அணித்தலைவியாகப் பொறுப்பேற்றுச் சென்று நெஞ்சுறுதியுடனும் ஓர்மத்துடனும் சமரிட்டு வீர சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச இராணுவ – அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஒன்று உருவானது.அதாவது புலிகள் ஒரு முழு அளவிலான மரபுவழி இராணுவத்தைப் போன்று செயற்பட்டிருக்கின்றார்கள் என்றும் இந்தச் சமரை அவதானிக்கும் போது இலங்கைத் தீவில் இரண்டு இராணுவங்கள் உள்ளது போல் தோன்றுகின்றது என்பதும் ஆகும்.இந்தக் கருத்தானது எமது புரட்சிகர இயக்கத்துக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியே ஆகும்!. ஆனையிறவுச் சமரில் பெண் போராளிகள் முக்கிய பங்கு வகித்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட “மின்னல் இராணுவ நடவடிக்கை” என்ற பெயரால் தமிழீழத்தின் “இதயபூமி” என்றழைக்கப்படும் மணலாற்றில் நடைபெற்ற நடவடிக்கைக்கு எதிராக நடாத்தப்பட்ட தற்காப்புச் சமரிலும் லெப். கேணல் அன்பு அண்ணா தலைமையில் பெண் போராளிகள் பங்கு கொண்டனர். இலங்கை இராணுவத்தின் இவ் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் வட தமிழீழத்தையும், தென் தமிழீழத்தையும் இரண்டாகப் பிரிப்பதும் எம்மை பலவீனப்படுத்தி அதன் மூலம் யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றுவதாகும். பெண் போராளிகளுக்கு இம் முறியடிப்புச் சமரானது புதுமையான காட்டுச் சமர் அனுபவமாக இருந்தது. ஏனெனில் காட்டுச் சமர்களில் அவர்கள் அதுவரை பங்கு பெறவில்லை. அக்காட்டைப் பொறுத்தவரை திக்குத் திசை தெரியாது; சூரியன் எங்கே உதிக்கிறது மறைகிறது எனத் தெரியாது; இராணுவம் எங்கிருந்து வருவார்கள் எனத் தெரியாது; காயமடைந்த வீரச்சாவடைந்த போராளிகளைப் பின் தளத்திற்கு நகர்த்துவதற்குப் பாதைகள் இல்லை; இதைவிட இராணுவம் ஏவிய எறிகணைகள் மரங்களில் வீழ்ந்து வெடிப்பதால் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இக் களமுனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராளிகள் வரைபடங்களின் உதவிகளுடனும் இராணுவத்தின் நகர்வுகளை தொலைத் தொடர்புக் கருவியூடாக (monitoring) ஒட்டுக் கேட்டும் இத் தாக்குதலின் விநியோக நடவடிக்கையை தடையற மேற்கொண்டும் மற்றும் விழுப்புண்ணடைந்த, வீரச்சாவடைந்தவர்களையும் பின் நகர்த்தியும் கடுமையாக நெஞ்சுறுதியுடன் போரிட்டனர். இச் சமரில் வரதா அக்காவும் ஒரு அணிக்கு தலைவியாகப் பொறுப்பேற்று மிகுந்த ஒர்மத்துடனும் உத்வேகத்துடனும் துணிவாற்றலுடனும் சமரிட்டு பின்பு இடது கையில் பாரிய விழுப்புண்ணடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பின் நகர்த்தப்பட்டார். ஆனையிறவுச் சமரின் பின் வெடிபொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியிலும் இப் பாரிய முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தமை எமக்கு பெரும் வெற்றியே! பின்னர் வரதா அக்கா இடது கையில் ஏற்பட்ட பாரிய விழுப்புண்ணின் காரணத்தினால் அக்கையானது சரிவர இயங்க முடியாமல் இருந்த படியால் 1991 இலிருந்து 1993 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதி வரை நீண்ட காலம் மருத்துவ சிகிச்சையிலே இருந்தார். பின்னர் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு தகுதி வாய்ந்த ஒருவர் பொறுப்பாளராக பதவி வகிக்க தேவை என்றபடியால்,வரதா அக்காவின் தலைமையேற்று நடாத்தும் பாங்கு, பொறுமை, சகிப்புத் தன்மை கல்வித் தகுதி போன்றன இனங் காணப்பட்டு 1993இல் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு பொறுப்பாளராக உள்வாங்கப்பட்டார். எமது நிதித்துறை மகளிர் பிரிவிலே ஆரம்பத்திலே கணக்காய்வுப் பகுதி, ஆயப்பகுதி போன்ற பகுதிகள் மட்டுமே இருந்தன. வரதா அக்கா கணக்காய்வுப் பகுதியைப் பொறுப்பேற்று நிர்வகித்தார். ஆயப்பகுதியை லெப்ரினன்ட் சாந்தாக்கா பொறுப்பேற்று நிர்வகித்தார். பின்பு லெப்ரினன்ட் சாந்தா அக்கா களப் பணிக்கு சென்றதும் வரதா அக்காவே ஆயப்பகுதியையும் சேர்த்து திறம்பட நிர்வகித்தார். பின்பு எமது நிதித்துறை மகளிர் பிரிவானது கணக்காய்வுப் பகுதி, தையல் பகுதி, உணவு வழங்கல் பகுதி, நகைத் தொழிலகம் ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரி எனப் படிப்படியாக விரிவாக்கம் கண்டது. 1993 தொடக்கம் 2001 கடற்கரும்புலிகள் அணிக்குச் செல்லும் வரை அவையனைத்தினதும் நிர்வாகப் பணியினையும் திறமையாக மேற்கொண்டதுடன் அத்தகைய நிர்வாகப் பளுவுக்குள்ளும் யாழ்ப்பாணத்தில் நகைவாணிபம், சேரன் களஞ்சியங்கள், கலியுக வரதன் உதிரிகள் வாணிபம், எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும். 1996இற்குப் பின்னர் வன்னியில் இளவேனில் எரிபொருள் வாணிபம், கலியுகவரதன் உதிரிகள் வாணிபம் போன்றனவற்றிலும் கணக்காய்வுப் பணியைத் திறம்பட மேற்கொண்டார். மேலும் தனது போராளிகளை துறை சார் வல்லுனர்களாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் 1994 இல் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தானும் கற்கை நெறியை மேற்கொண்டு ஏனைய போராளிகளையும் அக்கற்கை நெறியினை மேற்கொள்ள வழிகாட்டினார். அத்துடன் எமது கணக்காய்வுப் பகுதி பெண் போராளிகளுக்குத் தேவையான மேலதிக வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கு யாழில் பிரசித்தி பெற்ற வர்த்தகம், கணக்கியல், ஆங்கிலம் தொடர்பான ஆசிரியர்கள், விரிவுரையாளர்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததுடன் தானும் அவர்களுடன் இணைந்து அக்கற்கை நெறியினை மேற்கொண்டு தனது அறிவாற்றலையும் வளர்த்துக் கொண்டார். எனக்கும் வரதா அக்காவுக்குமான உறவானது 1995 மார்கழி மாதத்திலிருந்து தான் (நாங்கள் அடிப்படைப் பயிற்சி முடித்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு வந்ததிலிருந்து) ஆரம்பித்தது. நாங்கள் 17 வயதில் எமது குடும்ப உறவுகளைப் பிரிந்து முற்றிலும் வித்தியாசமான போராட்ட வாழ்க்கையினில் காலடியெடுத்து வைத்து ஆரம்பித்த போது வரதா அக்கா தான் எங்களை ஒரு தாயைப் போன்ற பரிவுடனும் பாசத்துடனும் அரவணைத்தார். எமக்குத் தாயில்லாக் குறையை அவரே நிவர்த்தி செய்தார். அவருக்கு கோபம் என்பது வந்து நான் ஒருபோதும் கண்டதில்லை. அப்படி கோபம் வந்தாலும் அதனை அடக்கி ஒரு சிறிய சிரிப்புடன் சமாளித்துவிட்டுச் செல்லுவார். அவரிடம் எப்போதும் ஒரு அன்புடன் கலந்த கண்டிப்பும் ஆளுமையும் காணப்படும். அவர் எப்போதும் எங்களை தான் ஒரு பொறுப்பாளர் என்ற ரீதியில் அதிகாரம் செய்து கட்டளையிட்டதும் இல்லை. நாமும் ஒரு போதும் அவரது கட்டளையை மீறியதும் இல்லை. எப்பொழுதும் நாம் செய்யும் சிறு சிறு குறும்புகள், குழப்படிகளை ஒரு தாயைப் போன்ற உணர்வுடன் ரசிப்பார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். எங்கள் முகாமில் ஒரே வயதுடைய மற்றைய போராளிகளை விட வயதில் குறைந்த ஏழெட்டுப் பேர் இருந்தோம். அதனால் நாங்கள் அந்த வயதிற்குரிய குறும்புகள், குழப்படிகளுடனேயே எப்போதும் காணப்படுவோம். ஒரு நாள் இரவு நேரத்தில் எமது பணி முடித்து முகாம் திரும்பி இரவு உணவினை உட்கொண்டு விட்டு ஒரு அறையில் எல்லோரும் சேர்ந்திருந்த குஷியில் பாட்டு,நடனம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தோம். மற்றைய அறையில் சில வயதில் கூடிய போராளிகள் தமது வாணிபங்களின் ஆவணங்களை முகாமில் கொண்டு வந்து வைத்திருந்து பொறுப்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எங்களின் சத்தமானது இடைஞ்சலுடன் கூடிய தொந்தரவாக இருந்ததின் காரணத்தினால் எங்களை அமைதியாக இருக்கச் சொல்லுமாறு வரதா அக்காவிடம் சென்று புகாரளித்தார்கள். இதனால் வரதா அக்கா எங்களது மகிழ்ச்சியையும் கலைக்க விரும்பாமல் பணிபுரிபவர்களையும் சமாளிக்க வேண்டும் என நினைத்து, முதலாம் கட்டமாக ஒரு போராளியை எச்சரிக்கை செய்ய அனுப்புவார். ஆனால் வந்தவரும் எங்களுடன் சேர்ந்து அந்த அமர்க்களத்தில் ஈடுபடுவார். பின்பு மற்றுமொருவரையும் அனுப்பி அவரும் முதல் அனுப்பியவரை ஒப்பி எங்களுடன் சேர்ந்து அமர்க்களத்தில் ஈடுபட்டதும் இறுதி எச்சரிக்கையாக தானே வரதா அக்கா களத்தில் குதிப்பார். எங்களுடைய மகிழ்ச்சியை உடனேயே தடை செய்யவும் விரும்பாமல் கொஞ்ச நேரமாவது நீடிக்கட்டும் என்று இடைவெளி விட்டு பணி புரியும் மற்றைய போராளிகளின் மனதையும் நோகடிக்காமல் தானே எங்களிடம் வந்து திட்டுவது மாதிரி நடித்து (வாய் மட்டும் தான் எங்களைப் பேசும் அதேவேளை அவரது மூக்கும் கண்ணும் சிரிக்கும்) அதிக பட்ச தண்டனையாக வாய்க்கு துவாய் கட்டும் தண்டனையை மட்டும் தான் தருவார். நாங்கள் அந்தத் துவாயை வாயில் கட்டிக் கொண்டும் எங்கள் அமர்க்களத்தைத் தொடருவோம். வரதா அக்கா தான் பொறுப்பாளர் என்ற சலுகையை ஒரு போதும் எடுத்துக் கொண்டது இல்லை.தன்னைப் போலவே தான் மற்றப் போராளிகள் என்று நினைப்பார். அவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவராக இருந்ததால் எமக்கு உணவு வழங்கல் பகுதியினால் வரும் உணவில் மரக்கறி உணவினை சிலவேளைகளில் அவர் பணி முடிந்து வரத் தாமதமானால் உணவு முடிந்துவிடும் என்ற காரணத்தினால் ஒரு போராளி எடுத்து ஒளித்து வைப்பதுண்டு. ஆனால் வரதா அக்கா இப்படி தனக்காக பிரத்தியேகமாக உணவு எடுத்து வைப்பதை எப்போதும் விரும்புவதில்லை. நாமும் சில வேளைகளில் பணி முடித்து வரத் தாமதமானால் கறி தீர்ந்து விடும். அதனால் நாங்கள் பசியில் வரதா அக்காவுக்காக எடுத்து ஒளித்து வைத்திருக்கப்படும் கறியினை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து எடுத்து உண்டு விடுவோம். அதனைக் கண்டதும் வரதா அக்காவுக்கு கறி எடுத்து ஒளித்து வைத்த போராளி எங்களைத் திட்டுவார். ஆனால் வரதா அக்கா “பிள்ளைகளுக்கில்லாத உணவு எனக்கெதுக்கு… அவர்கள் சாப்பிடட்டும்… அவர்களைத் திட்டாதே” என அந்தப் போராளிக்கு கூறிவிட்டு சோற்றுடன் கறிக்குப் பதிலாக பச்சை மிளகாய், வெங்காயத்துடன் தனது உணவினை முடித்துக் கொள்ளுவார். எல்லாப் போராளிகளையும் போலவே வரதா அக்காவும் மக்களை நேசித்த போராளி. எமது வாணிபங்களில் காலாண்டு,அரையாண்டு, ஆண்டிறுதி காலப்பகுதிகளில் இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதுண்டு. இதனால் பணி முடிய இரவு நேரமாகி விடும். ஆதலினால் அங்கு பணி புரியும் பெண் பணியாளர்களை வரதா அக்காவே தனது உந்துருளியில் ஏற்றிச் சென்று அவர்களது வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு வருவார். அதனால் பணியாளர்களின் பெற்றோர்களும் அவர் மேல் தீராத அன்பும் நன்மதிப்பும் வைத்திருந்தார்கள். மேலும் ஒருமுறை வரதா அக்கா இரவு நேரத்தில் பணி முடித்து ஒரு போராளியுடன் உந்துருளியில் பணியிடத்தில் சைவ உணவு கிடைக்காத படியால் மதிய உணவையும் உண்ணாத காரணத்தினால் மிகுந்த பசியுடன் முகாம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு முன்னால் ஒரு உந்துருளியில் பொது மகன் ஒருவர் தனது நிறை மாதக் கர்ப்பிணி மனைவியை ஏற்றிக் கொண்டு உந்துருளியின் முகப்பு விளக்கு பழுதடைந்த காரணத்தினால் இருட்டில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். இதனை அவதானித்த வரதா அக்கா அவர்களிடம் முகவரியைக் கேட்டு அவர்களது வீடு எமது முகாமிலிருந்து சிறிது தூரத்தில் தான் உள்ளது என்பதை அறிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு தனது உந்துருளி முகப்பு விளக்கின் மூலம் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி தனது கடும் பசியையும் மறந்து அவர்களது வீடு வரைக்கும் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டுத்தான் வந்தார். அந்தளவுக்கு சாதாரண பொது மக்களை நேசித்த போராளி அவர். இச் சம்பவத்தை அவருடன் வந்த போராளி எமக்கு போட்டுக் கொடுத்து அன்று தொடக்கம் நாங்கள் வரதா அக்காவைக் கண்டால் “குமார் குமார் லைற் அடி கோழிக் கூட்டுக்கு லைற் அடி” என்ற பாடலைப் பாடி கிண்டலடிப்போம். அவரும் “வாறனடி உங்களுக்கு” என்று செல்லமாக கோபித்தபடி, எங்களது கிண்டலை ரசித்தபடி செல்லுவார். எமது பிரிவிலிருந்து களப் பணிகளுக்குப் போய் ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடையும் போதும் “சேயை இழந்த தாய்ப் பசுவின் வலிக்கொப்பான” வேதனையடைவார். எமது பிரிவிலிருந்து வீரச்சாவடைந்த எல்லா மாவீரர் குடும்பங்களின் இல்லத்திற்கும் தானும் செல்வதோடு மட்டுமல்லாது எங்கள் எல்லோரையும் கட்டாயம் செல்லுமாறு கூறி அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் தானே முன்னின்று செய்து எங்களையும் செய்விக்க வைப்பார். காலையில் எழுந்து சத்தியப் பிரமாணத்தை முடித்துக் கொண்டதும் எங்கள் எல்லோரையும் ஓட்டப் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு முகாமில் உள்ள மாவீரர் மண்டபத்திலுள்ள மாவீரர் படங்களுக்கு தனது கையாலே பூக்கொய்து வைத்து கடவுளர்கள் மாதிரி கௌரவித்து வணக்கம் செலுத்தி விட்டுத் தான் தனது அன்றைய பணியை ஆரம்பிப்பார். அத்துடன் மற்றைய புதிய போராளிகளுக்கு மிகவும் அன்பாகவும் ஆர்வத்துடனும் மிகத் தெளிவாக புரியக் கூடிய வகையிலும் கணக்காய்வுப் பணியைக் கற்றுக் கொடுப்பதிலும் வல்லவர். நானும் 1997 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி விட்டு வரதா அக்காவுடன் தான் முதன் முதலில் கலியுகவரதன் உதிரிகள் வாணிபம், இளவேனில் எரிபொருள் வாணிபம் போன்றவற்றில் பணிக்குச் செல்லும் பேற்றைப் பெற்றேன். அங்கு அவர் எனக்கு கணக்காய்வுப் பணியினையும் பணியாளர்களுடன் அணுகும் முறையினையும் மிகவும் அன்புடனும் ஆர்வத்துடனும் தெளிவாகவும் கற்றுக் கொடுத்தார்.அவருடன் பணி புரிந்த ஒரு வருடத்திலேயே வாணிபங்களின் இலாப நட்ட முடிவுக் கணக்குகளை என்னால் தனியே தயாரித்து முடித்துக் கொடுக்கும் அளவிற்கு என்னை ஆற்றலுடன் வளர்த்து விட்டிருந்தார். அன்று அவர் ஊட்டிய ஊக்குவிப்பும் அறிவும் ஆளுமையும் தான் பின் நாளில் நானும் ஒரு கணக்காய்வு அணியின் அணிப் பொறுப்பாளராக உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தது. இப்படி போராளிகளை பணி ரீதியிலும் வளர்த்து விடுவதில் வல்லவர் அவர். எமது போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு வரதா அக்காவுக்கு கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டேயிருந்தது.எமது தேசியத் தலைவருக்கு ஐந்தாறு தடவைகள் கடிதம் அனுப்பி அனுமதி மறுக்கப்பட்டு வந்தும் மனம் சோராமல் திரும்பத் திரும்ப தன்னைக் கரும்புலிகள் அணியினுள் உள்வாங்குமாறு கடிதம் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவரது விடாமுயற்சியினாலும் தான் கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததாலும் 2001ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் அவரை கடற்கரும்புலிகள் அணியில் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக் கடிதம் தேசியத் தலைவரிடமிருந்து வந்தது. வரதா அக்காவுக்கோ தனது ஆசை நிறைவேறி விட்டதையிட்டு மிகப் பெரிய சந்தோசம். ஆனால் எமக்கோ தாயைப் போல பரிவு காட்டிய எங்கள் வரதா அக்காவைப் பிரியப் போகிறோம் என்கிற கவலை. ஆனால் போராளிகள் என்றால் பிரிவும் மறைவும் சகஜம் தானே! நாம் அதனை வலிந்து ஏற்றுக் கொண்டு எமது துயரங்களை மனதில் அடக்கிக் கொண்டு வரதா அக்காவிற்கு விடை கொடுத்தோம். பின்பு கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து கடல் நீச்சற் பயிற்சி, கடல் கனரக ஆயுதப் (Heavy Weapon) பயிற்சி போன்ற அனைத்துப் பயிற்சிகளினையும் தனது சரிவர இயங்க முடியாத இடது கையுடன் தன்னை விட வயது குறைந்த இளம் போராளிகளுக்குச் சமமாக ஈடுகொடுத்து உத்வேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் துணிவாற்றலுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நிறைவு செய்து கொண்டு தனது இலக்கிற்காக காத்துக் கொண்டிருந்தார். அத்துடன் (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாகக் கடற்படைக்கலன்களின் நகர்வினை அவதானித்து கட்டளையிடும் அதிகாரியாகவும் பணியாற்றினார். 2001 இல் எமது போராட்டமானது பரிணாம வளர்ச்சியடைந்து நாம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமாக இருந்தோம். இலங்கை இராணுவமானது பலவீனமடைந்து காணப்பட்டது. இதன் காரணத்தினால் யாழ் குடாநாட்டையும் மொத்த தமிழீழத்தையும் நாம் மீட்டெடுத்து விடுவோம் என்று பயமடைந்து அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நரி மூளையுடன் நோர்வே அரசின் தலையீட்டுடன் 22.02.2002 இல் நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எம்முடன் இணைந்து கையெழுத்திட்டார். இதனால் மக்கள் இலங்கை அரசின் கபடத் தனத்தை உணராமல் தமக்குத் தீர்வு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில் திகழ்ந்தார்கள். 2004 காலப் பகுதியில் வரதா அக்காவும் திருமண வயதைக் கடந்து விட்ட காரணத்தினால் அவரின் தந்தையாரின் வேண்டுகோளிற்கிணங்க தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்டளைத் தளபதி ஒருவரை இணையேற்றார். திருமணம் ஆகிவிட்டாலும் அவர் கடற்புலிகள் மகளிர் அணியிலேயே தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருந்தார். 2006 இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின் காரணத்தினால் A9 பாதை மூடப்பட்டு மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்தன. இதன் காரணத்தினால் எமது போராட்ட மரபுப்படி “துணைவனும் – துணைவியும் நடைமுறை வாழ்விலும் நாட்டை மீட்கும் மகத்துவமான விடுதலைப் போரிலும் சம பங்கு கொண்டு புறப்பட வேண்டிய வேளை இது தான் புறப்படுவோம்” என்று வரதா அக்காவும் அவரது துணைவரும் தத்தமது படையணிகளுடன் இணைந்து தமது பணியினை செவ்வனே மேற் கொண்டனர். அந்த வகையில் வரதா அக்காவும் கடற்புலிகள் மகளிர் படையணியுடன் இணைந்து (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாக அவதானிக்கும் தொலை தூர நோக்கி கண்காணிப்பு பிரிவில் கட்டளையிடும் அதிகாரியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டார். 30.10.2006 இல் மட்டக்களப்பில் இருந்து வன்னி நோக்கி காட்டு வழியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது எங்கள் வரதா அக்கா மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி எம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்டு விட்டார். நினைவுப்பகிர்வு: நிலாதமிழ்.
  5. தலிபான் கணக்கு வாத்தியார்..
  6. சமர்க்கள விரிப்புகள் தரையிறக்கம் அடுத்து, தரையிறக்கத்தின் போது என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப் பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூல், 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாறு கூறும் நூல் மற்றும் 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்' என்ற குடாரப்புத் தரையிறக்கத்தில் தொடங்கி சமாதான காலத்தில் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்டு யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் நுழைவது வரையிலான அனைத்து அனுபவங்களையும் ஆவணப்படுத்திய நூல் ஆகியவற்றில் இருந்து எடுத்துள்ளேன். இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தரையிறக்கம் எப்படி இருந்தது என்பதை அறிவதோடு, நீங்களும் அத்தரையிறக்கம் நடந்த குடாரப்பில் நிற்பது போன்ற உணர்வினையும் உங்களுக்கு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021 முதலாவதாக 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 86-87 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் முக்கிய பணிகள் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதிலேயே நடவடிக்கையின் வெற்றி தங்கியிருந்தது நடவடிக்கையின் முதற்கட்டமாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணிகள் அதன் துணைத்தளபதி லெப் கேணல் நேசனின் தலைமையில் முன்னரே குடாரப்புவில் தரையிறக்கப்படும். அந்த அணி ஒரு வெற்றிகரமான இரகசிய நகர்வை மேற்கொண்டு ஏ௯ வீதியால் சென்று, மேஜர் கோபித், மேஜர் இலக்கியன் ஆரியோரின் தலைமையிலான இரு அணிகளாகப் பிரிந்து ஆனையிறவை நோக்கியும் யாழ்ப்பாணத்தை நோக்கியும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து எதிரித்தளத்தைப் பிளந்து நிலைகொள்ளும். இந்த ஆரம்பச் செயல்களின் வெற்றிகளிலேயே அடுத்தகட்டங்களின் எதிர்காலம் தங்கிநின்றது. லெப் கேணல் நேசனின் அணிகள் வெற்றிகரமாகத் தம் பணியை முடித்து நிற்க, அடுத்ததாகத் தரையிறக்கப்படும் படைத்தொகுதிகளுடன் தரையிறங்கும் சிறப்புத் தளபதி லெப் கேணல் ராஜசிங்கன் தனது மேஜர் நகுலன், மேஜர் ரோய் ஆகியோரின் அணிகளுடன் நகர்ந்துவந்து இணைப்பை ஏற்படுத்துவர். எல்லாப் படையணிகளையும் இணைத்து கேணல் பால்ராஜ் அவர்கள் கண்டி வீதியிலிருந்து பெருங்கடல் வரையான நீண்ட பகுதியில் எதிரித் தளத்தைப் பிளந்து, உறுதியான, உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து, வியூகத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனையிறவுத் தளத்தின் பிரதான வழங்கல் பாதையைத் துண்டித்து, எதிரியின் போர்ப்பலத்தைக் கவர்ந்து சிதறடித்தபடி நிலைமைகளுக்கேற்ப முன்னகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். தலைவர் அவர்களால் இறுதிக்கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவுத்தளம் வீழ்த்தப்படும்வரை இத்தாவிற் களத்திற் போரிடவேண்டும். இரண்டாவதாக 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 353- 360 நேரம் அப்போது ஏழரையைத் தாண்டியிருந்தது. இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் முதலில் படகேறின. கடற்புலி அணியினர் தமது பணியினை மிகுந்த வேகத்துடன் செய்யத் தொடங்கினர். தர்சாவின் தலைமையிலான எமது படையணி அலை மீது தாவ, ஓங்கியடித்தது அலை. ஆரம்பத்தில் படகேறிய அணிகளுக்குக் கடலின் மாறுதலான போக்கைத்தவிர வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. எனினும் நேரம் செல்லச் செல்ல படைத் தரப்புக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்போலும். அந்தப் பகுதியில் கடற்படைப் படகுகள் உலாவத்தொடங்கின. காத்திருந்த கடற்புலிகளின் சண்டைப் படகுகள் அவற்றை மறிப்பதற்காக அத்திசைநோக்கி விரைந்தன. தாக்குதலணிகளை ஏற்றும் படகுகள் தமது வேகத்தை இன்னும் அதிகரித்தன. அவர்களின் செயலில் தெரிந்த வேகம் எம்மையும் விரைவாகச் செயற்படவைத்தது படகேறிப் பழக்கம் அற்றவர்கள்கூடப் பாய்ந்து உள்ளே ஏறினர். தொடர்ந்து ஏற்றுவதும், கொண்டுசென்று தரையிறக்குவதுமாக இருக்க, கடலில் தாக்குதல் தொடங்கியது. "இந்தத் தரையிறக்கிற நடவடிக்கையில் தாக்குதலணிக்குச் சின்னக் கீறல் கூட வரக்கூடாது" என்ற தலைவரின் கண்டிப்பான பணிப்பை நிறைவேற்றுவதற்காகக் கடற்புலி அணியினர் தமது உயிரைக் கொடுக்கவும் தயராகநின்றனர். கடற்படைப் படகு எமது படகுகளுக்கு அருகில் வரமுன்பே, அவற்றுக்குப் போக்குக்காட்டி வேறு திசையில் வலிந்திழுந்துச் சென்று சண்டையிட்டனர் அவர்கள். நெருப்புத் தணல்களாகப் புறப்பட்ட சன்னங்கள் கடலின் இருளைக் கிழித்தன. இரண்டு கடற்படைகளின் மோதலை நேரடியாகக் கண்ட புளுகத்துடன், பயணத்தில் எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற பயமும் இடையிடையே வந்துபோனது. ஒவ்வொரு தடவை கடற்படைப் படகுகள் மோதுகின்றபோதும் தலைவர் எம்மோடு கதைத்த காட்சிகள் மனதில் நிறைந்து, வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதுள் விரித்தது. இதுவரை எந்தவிதப் பாதிப்புமின்றித் தாக்குதல் அணிகள் தரையிறங்கிக் கொண்டிருந்தன. தர்சாவின் அணியில் கீர்த்தி, தனுசா ஆகியோரின் பிளாட்டூன்கள் கிட்டத்தட்ட இரவு 10.00 மணியளவில் குடாரப்புப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. ஒரு போதுமே கடற்பயணத்தில் பழக்கப்படாத போராளிகள் மயங்கிவிழாத குறையாக கடற்கரை மண்ணில் வந்து இறங்கினர். கடுங்குளிரில் நடுங்கி உப்புக் காற்றைச் சுவாசித்தபடி வந்து கரையேறும்போது கடற் தண்ணீருக்குள்ளே வீழ்ந்து முற்றுமுழுதாக நனைந்துவிட்டிருந்தனர். இதற்குள் கரையைநோக்கிக் கடற்படைப் படகுகள் தாக்கத்தொடங்கின. மயக்கத்தோடு இறங்கியவர்கள் கடற்கரை மண்ணிலே வீழ்ந்துபடுத்தனர். நல்ல காலமாக எல்லாச் சன்னங்களுமே தலைக்கு மேலே விரிந்திருந்த தென்னைகளை உரசிப் பறந்தன. இப்போது வெவ்வேறு பக்கங்களில் கடற்சமர் வலுத்திருந்தது. சமரணிகள் பயணம் செய்த படகுகளில் கடற்தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக எம்மைச்சூழ சண்டைப் படகுகள் நின்றன. நேரம் கிட்டத்தட்ட ஒரு மணியை அண்மிக்க கேணல் விதுசாவை ஏற்றிய படகு புறப்பட்டது. ஆர்.பி.யீ. போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் அதில் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே, "இப்ப படகு எதுக்கு நேரே போகுது?" "இப்ப வெற்றிலைக்கேணி தாண்டிற்றம்" "கரையிலிருந்து எவ்வளவு உயரத்தில போய்க்கொண்டிருக்கிறம்?" "இரண்டு கடல்மைல் உயரத்தில போறம். இப்ப மருதங்கேணிக்கு நேரே போறம். அடுத்தது தாழையடி." இப்படியே படகினுள் கலகலப்பான உரையாடல் நடந்துகொண்டிருக்க, நடுக்கடலில் கடும் எதிர்ப்பு உண்டானது. தூரத்தே இருந்து தாக்கியபடியே வந்த கடற்படைப் படகு எமது படகை அண்மித்தது. மேலால் சீறிப் பறந்தன சன்னங்கள். 'சடார்' என்ற ஓசையுடன் கையில் பட்ட காயத்தின் வேகத்தில் படகுக்கு வெளியே தலை தொங்கக் கிடந்தார் கப்டன் தண்ணிலா. அவரை வேகமாக இழுத்தெடுக்கவும், "ஒரு எஞ்சின் பழுதாய்ப்போட்டுது. இனி வேகமாய்ப் போக ஏலாது. கெதியாய் அறிவியுங்கோ" படகோட்டிய போராளி சொன்னார். அந்த சன்னம் இயந்திரத்தின் பணியையும் தடைசெய்திருந்தது. 'இனி முடிஞ்சுதா கதை. நேவிக்காரன் துரத்தி துரத்தி அடிக்கப்போறான்' என நினைத்துக்கொண்டு எமது ஆயுதங்களைத் தயார்ப்படுத்தவும், கடற்படைப் படகைநோக்கித் தாக்கியபடி கடற்புலிப் படகு ஒன்று முன்னேறியது. பிறகு இரண்டையுமே காணவில்லைப் போலிருந்தது. சிறிது நேரத்தில் எம்மிலிருந்து அதிக தூரத்தில் இரு படகுகளுக்குமிடையே சண்டை நடந்தது. அதேநேரம் இன்னுமொரு தாக்குதலணிப் படகு வந்து எமது படகைக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்தது. தொடர்ந்து கடற்படையினர் வருவதும், சண்டைப் படகுகள் மறிப்பதுமாக ஒரு விளையாட்டுப்போன்று கடற் பயணம் நடந்துகொண்டிருந்தது. திடீரெனக் கடற்படைப் படகு ஒன்று அருகில் வருவது போன்று இருந்தது. பின்னர் ஒன்றையும் காணவில்லை. இருள்நேரத்தில் நுரைத்து எழும் அலைகளை அண்டிய பகுதி கடும் இருட்டாகத் தெரிய, அது எமது கண்களுக்குப் படகுபோலத் தெரிந்தது போலும். மனம் நிம்மதி அடைந்தது. இப்போது குடாரப்பை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே பெரும் கடற்சமர் நடந்துகொண்டிருக்க, எமது படகு கரையை நோக்கித் திரும்பியது. இடையில் காற்றுப் படகுகள் நிற்க, அதற்குள் தாவினோம். சில நிமிடங்களிலேயே கரையில் இறங்கியதும் எங்காவது கீழே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஆகக் கூடுதலாக மயக்கமுற்றவர்கள் மண்வெட்டிகளை வைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்தார்கள். கும் கும் என அருகில் உள்ள தென்னந்தோப்பினுள் வீழ்ந்த எறிகணைகள் எம்மை அங்கு இருக்கவிடவில்லை. கரையில் நின்ற கேணல் பால்ராஜ் ஏற்கனவே நகர்ந்த அணியுடன் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தபடி நின்றார், தரையிறங்கிய கேணல் விதுசாவுடன் அப்போதைய நிலைமைபற்றிக் கதைத்துவிட்டு, அவர் இத்தாவில்நோக்கி நகரத்தொடங்க, எமது அணிகள் நாகர்கோயில் பகுதியை நோக்கியதான வெளிப்பாதுகாப்புக்கு நகர்த்தப்பட்டன. அவர்களுடன் ஒரு ஆண் போராளி புவிசார் நிலைகாண் முறைமையுடன் நிலையமைக்கப்படும் இடங்களைப் பதிவுசெய்தபடியே நகர்ந்தார். "தரையிறக்க நடவடிக்கையின் போது எங்களுடைய .50 கலிபர்கள் இரண்டையும் மாலதி படையணியுடன் விடும்படி தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். பெருங்கடற் பரப்பருகே மாலதி படையணி நிற்கப் போவதால் அவர்களுக்கு அவை தேவை என்று அவர் குறிப்பிட்டார். எனவே தரையிறங்க முன்பே .50 கலிபர்களை அவர்களோடு விட்டுவிட்டோம்" என்று அந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார் கேணல் துர்க்கா. கேணல் விதுசா வந்த படகு பழுதடைந்ததால் அதனைக் கட்டி இழுத்துவந்த படகு காயமடைந்த போராளியுடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தாக்குதலணிகள் இன்னும் முழுமையாக வந்துசேராத நிலையில் கடற்சமர் பலமடையத் தொடங்கியிருந்தது. தாம் கடும் தாக்குதலுக்கு மத்தியில் வந்துகொண்டிருயப்பதாக கேணல் விதுசாவுக்கு அறிவித்தார் சாந்தகுமாரி. அறிவித்த அந்தக் கணத்திலயே நடுக்கடலில் படகு ஒன்று தீப்பற்றத்தொடங்கியது. "சேரா-01 மெயின், சேரா-01 மெயின்" அந்த தொடர்புக் கருவிக்குமே தொடர்பு கிடைக்கலை, எல்லோர் மனதிலும் இடி விழுந்தது. சாந்தகுமாரியுடன் ஒரு பிளாட்டுன். ஏற்க முடியுமா? கடல் நடுவில் கண்ணெதிரே எம் தோழிகளைச் சாவிழுங்கிய துயரத்தில் முழ்கிப்போனோம். எதுவும் செய்யமுடியாத நிலையில் சோகம் இதயத்தைப் பிழிந்து, கணப்பொழுதுக்குள் எல்லாமே முடிந்துவிட்டதான உணர்வு, அவர்களது பணியை யார் செய்வார்? ஒவ்வொருவருக்கும் ஆளை மிஞ்சிய பணிகளல்லவா காத்திருந்தன. எல்லாவற்றுக்கும் விடையாக சாந்தகுமாரியின் குரலைச் சுமந்துவந்தது காற்று. "மெயின் சேரா-01, எங்களுக்குப் பிரச்சனை இல்லை. முதல் அடிவேண்டின போட்தான் இப்ப எரியுது" விடயம் சங்கேத மொழியில் வந்துசேர்ந்தது. "அது விதுசாக்கா வந்த போட்தான்" எல்லோர் வாய்களும் உரத்துச் சொல்லிக்கொள்ள எல்லோரின் மனதுக்குள்ளும் கடவுள்கள் வந்துபோயினர். சற்று நேரத்தில் சாந்தகுமாரியின் அணி தரையிறங்க குதூகலம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. வேகமாக அவரவர் இடங்களுக்கு அணிகளை அனுப்பிய விதுசா, நாகர்கோயில் பக்க நிலைகளிலிருந்து 100 மீட்டரில் தனது கட்டளைப் பீடத்தை அமைத்தார். இதுவரை நேரமும் தரையிறங்கும் அணிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட்ட தனுசாவின் அணி கொம்பனி மேலாளர் தர்சாவுடன் தொண்டைமானாறு நீரேரியை நோக்கி மணல் வீதியூடாக நகரத்தொடங்கியது. நாகர்கோயில் பகுதியிலிருந்து பருத்தித்துறை செல்லும் பழுதடைந்த தார் வீதியைக் கடந்து, ஆள் உயரப் புற்களை விலக்கியபடி நீருக்குள் கால் வைத்தனர். அடுத்து தரையிறங்கிய கீர்த்தியின் பிளாட்டூன், தரையிறங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அணிகளின் பாதுபாப்புக்காகக் கொம்பனியின் கட்டளை அதிகாரி லக்சனாவுடன் செம்பியன்பற்றுப் பகுதியில் தயாராக நிற்க, மற்றைய அணிகள் தத்தமது திசைகளைநோக்கி நகரத்தொடங்கின. அது இருள் கலையாத நேரம். மக்களின் குடியிருப்புக்கள் எங்கே என்று தெரியாதநிலையில் எமக்கு வாய்ப்பான இடங்களிலே வேகவேகமாக நிலை அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் சண்டை தொடங்கும் என்பது நிச்சயம். அதனால் அமைதியாகப் பணிகள் அரங்கேறின. மெல்லிய குளிர் காற்று மேனியை வருட, மண்வெட்டி மண்ணில் ஆழமாக இறங்கியது. சிறிய வாளியும் கையில் நாலைந்து குவளைகளுமாக சிவப்பு உடையணிந்த ஒரு சிறிய உருவம் திடீரென அங்கே தோன்றியது. எல்லோர் விழிகளும் அங்கேயே நிலைத்தன. பற்றைகளை விலக்கியபடி எம்மைநோக்கி வந்து கொண்டிருந்தது ஓர் அன்னை. எனினும் எங்கள் இராணுவ உணர்வு எச்சரிக்கை செய்தது. அப்பாலே உற்றுப் பார்த்தோம். எதையுமே காணவில்லை. புன்னகையுடன் வந்த அன்னை தேநீரைக் குவளைகளில் ஊற்றி எம்மிடம் நீட்டினார். வீட்டில் விடியற்காலை குளிருக்குள் படிப்பதற்காக எம்மை எழுப்பிவிட்டபின்னர், சுடச் சுடத் தேநீரைத் தயாரித்துத் தரும் எங்கள் அம்மாவின் பரிவும் கனிவும் அவர் பார்வையில் இருந்தது. வீட்டிலே 'நன்றாகப் படிக்கவேண்டும்' என்பதற்காக அம்மா தேநீரைத் தந்தார். இந்த அம்மா, நன்றாகச் சண்டை பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் தேநீரைத் தந்திருப்பாரா? எதுவாக இருந்தாலும் ஐதீகக் கதைகளில் வருகின்ற அமுதம்கூட அந்த அன்னையின் தேநீருக்கு ஈடாகாது என்பதுமட்டும் உண்மை. தேநீரை அருந்துகின்றபோது எல்லோர் விழிகளிலும் நீர் திரையிட்டது. சாந்தகுமாரியின் கொம்பனி மாமுனைக் கடற்கரை தொடக்கம் நீரேரிக்கரைவரை நிலையெடுத்திருந்தது. நேரம் ஏழரையைத் தாண்டியிருக்கும். மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தத்தமது வேலைகளுக்காகப் புறப்பட்டவேளைதான் போராளிகள் அங்கு நிற்பதைப் புரிந்துகொண்டனர். வீதியால் விற்பனைக்குப் பாண் கொண்டுவந்த தந்தையொருவர் திகைத்துப்போனார். "எப்...ப பிள்ளையள் வந்தனீங்கள்?" ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் தடுமாறிக்கொண்டு நின்ற ஐயாவிடம் "விடியத்தான் ஐயா வந்தனாங்கள். நீங்கள் அங்கால போக ஏலாது. சண்டை தொடங்கப்போகுது. திரும்பிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போங்கோ" என்று சொல்ல 'நீங்கள் வந்ததே காணும் பிள்ளைகள்’ என்ற எண்ணப் பார்வையுடன் பெட்டியோடு பாணை இறக்கி எம்மிடம் தந்துவிட்டுப் போய்விட்டார். அள்ளி அள்ளி வெளியில் எறிந்தாலும், மீளவும் பள்ளத்தைநோக்கி வழிந்து விழுகின்ற மணலுடன் போட்டி போட்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில் இருந்தவாறு பகை இருக்கும் திசைநோக்கிச் சுடுகலன்களுக்கு ஏற்றவாறு நிலைகளைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தோம். ******
  7. நிறைய சாப்பாடு செய்து களைத்து விட்டோம். இன்று ஒரு நல்ல டீ ஒன்று நாங்களே (மனிசியிடம் சொல்லாமல்) போட்டுக் குடுக்கலாம்/ குடிக்கலாம்......! 😂
  8. படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? இதனால் உண்டாகும் முக்கியமான சில தீய விளைவுகள் திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம். 1. நெருக்கம் குறைகிறது கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள். 2. எளிதில் போர் அடித்து விடும் படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது. 3. உடலுறவில் நாட்டமின்மை நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும். 4. வேறு ஒருவர் மீது காதல் நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும். 5. புரிதலின்மை உணர்வுகளை பகிர நெருங்க நினைக்கும் கணவன்/மனைவி அவர்களை விட்டு விலகிச் செல்வதால் இருவருக்கும் இடையே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள் இதனால் அவர்களுக்குள் இடையே புரிதல் இல்லாமல் போய்விடுகிறது 6. சண்டைகள் உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும். 7. வெறுப்பு உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆகவே நண்பர்களே துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்.. முகநூலிலிருந்து....
  9. "டாப் ஆஃப் ஈரோப் - Jungfraujoch " செல்ல Lauterbrunnen ரயில் நிலையத்திற்கு வந்து மலை ரெயிலில் ஏறி, மலை மேலே மூன்று இடங்களில் ரயிலில் மாறி செல்ல வேண்டும். உச்சம் தொட்டு மேலே சென்றால் நின்றால் பனி மூடிய மலைகள், சறுக்கு விளையாடுமிடங்கள்.. வெண்பனி மூடிய பல இடங்கள்.. வெற்று மணல் பாலைவனத்தையே 23 வருடங்களாக பார்த்திருந்த எனக்கு இந்த பனிமலைகளை தொட்டு சறுக்கி சிலிர்த்த அனுபவத்தை இன்னமும் ரசிக்கிறேன்..! கீழே இணைத்துள்ள காணொளி அவ்விடத்தை பற்றி சொல்லும்..
  10. அதனை Investment மற்றும் Momentum Investment என்று கூறுகிறார்கள். பொதுவாக Investment நீண்ட கால அடிப்படையில் சந்தை ஏற்ற இறங்கங்களிற்கு முகம் கொடுத்து, ஒரு சராசரியான வருவாயை ஈட்டுவது, இதன் போது சந்தையில் அதிக தலையீடு செலுத்துவதில்லை, வாங்கின முதலீடுகளை நீண்டகாலம் வைத்திருந்து வருவாய் ஈட்டுதல். இதன் காரணமாக முதலீட்டில், சந்தையில் இயலபாகவுள்ள ஆபத்துகளை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் உதாரணமாக Systematic risk, Unsystematic risk, R-Squared, CVar, Standard deviation, Sharp ratio, Beta, VaR https://www.investopedia.com/terms/s/systematicrisk.asp https://www.investopedia.com/terms/u/unsystematicrisk.asp#:~:text=Unsystematic risk is the risk,diversifiable risk%2C or residual risk. https://www.investopedia.com/articles/basics/03/050203.asp https://www.investopedia.com/terms/r/r-squared.asp https://www.investopedia.com/terms/c/conditional_value_at_risk.asp https://www.investopedia.com/terms/s/standarddeviation.asp https://www.investopedia.com/terms/s/sharperatio.asp https://www.investopedia.com/terms/b/beta.asp https://www.investopedia.com/terms/v/var.asp முதலீடுகளில் ஆபத்தினடிப்படையில் (Risk Tolerance) அதன் வருவாயை வகைப்படுத்துகிறார்கள் Conservative 12 - 15 % (return) , possible Draw down - 13% Growth oriented 15 - 22 % (return) , possible Draw down - 19% Aggressive 20 -30% (return) , possible Draw down -25% (இந்த Bench mark தகவல் அவுஸ்ரேலிய சந்தை நிலவரத்தினடிப்படையில் எடுக்கப்பட்டது - Unholy Grails A New Road to Wealth by Nick Radge) இதனை Benchmark என கூறுகிறார்கள், இந்த Benchmark விட கூடுதலாக வருமானம் ஈட்ட முயல்வதே Momentum Investment எனப்படுவதாக கூறப்படுகிறது. Momentum Investment இல் Investment உத்தியை கடைப்பிடித்தால் நட்டம் ஏற்படலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.