வழமையாக நான் யூட்டியூப் பதிவுகளை குறிப்பாக வரலாறு சம்பந்தமான பதிவுகளை கரிச்சுகொட்டுவேன்🤣. ஆனால் உண்மையிலேயே இது “பராவாவில்லை ரகம்”.
ஆனால் ரவிதாசனும் ஏனைய இருவரும் உத்தம சோழன் காலத்தில்தான் கண்டு பிடிக்க பட்டனர் என்பது ஆதாரபூர்வமாக நிறுவபட கூடியதாக தெரியவில்லை.
அவர்கள் தண்டிக்கபட்டதாக கூறும் கல்வெட்டு ராஜராஜன் காலத்துக்குரியதே. அதற்கு முன்பே, உத்தம சோழன் ஆட்சியில் அவர்கள் கண்டுபிடிக்க பட்டார்கள் என்பதற்கு ஆதராம் இருக்கிறதா? அறிந்தோர் சொல்லவும்.
எனக்கு உத்தம சோழன் மீதுதான் சந்தேகம்.
அநிருத்த பிரம்மராயருக்கு பின், உத்தம சோழன் கொலையாளிகளில் ஒருவரை பிரதம அதிகாரி ஆக்கினான் என்பதும். 16 வருடம் பட்டத்து இளவரசனின் கொலை மர்மம் துலங்காமல் இருந்தது என்பதும், ராஜராஜன் ஆட்டி கட்டில் ஏறியதும் கொலையாளிகள் தண்டிக்கபட்டனர் என்பதும் உத்தம சோழன் நோக்கி கையை காட்டுகிறது.
அடுத்து உத்தம சோழனுக்கு கொலை செய்ய முகாந்திரம் இருந்தது. கண்டராதித்தனின் மகனாக அவரே வந்திருக்க வேண்டிய பட்டத்துக்கு, ஆதித்தன் வருகிறார்.
உத்த சோழன் தான் கொலையை செய்தார் எனில் ஏன், ராஜராஜன்,
1. அவருக்கு பட்டத்தை விட்டு கொடுத்தார்?
2. ஏன் கொலையாளிகளை கொல்லாமல் விட்டார் என்ற கேள்விகள் எழுகிறன.
ஒன்றில் ராஜராஜன் இதை உத்தம சோழன் செய்திருப்பார் என நம்பவில்லை, அறியவில்லை
அல்லது
சோழ வம்சத்தில் பட்டத்துக்காக சகோதர கொலை நடந்தது என்பதை பதிவு செய்ய அவர் விரும்பாமல் போகலாம்.
ஆனால் இந்த கொலைக்கான பழி தீர்தலாகவே காந்தளூர் சம்ஹாரத்தை நிகழ்த்தினார் என நான் நம்புகிறேன்.