Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10104
    Posts
  3. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    488
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/16/23 in all areas

  1. வங்கிக்கொள்ளைகள் அரசிலிருந்து வெளியேற்றப்பட்ட சமசமாஜக் கட்சி கடுமையான கோபத்துடன் இருந்ததுடன், அரசைத் தருணம் பார்த்து பழிவாங்கவும் காத்திருந்தது. சிறிமாவுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்த சமசமாஜக் கட்சி சிறிமா தனது அதிகாரத்தைத் தவராகப் பயன்படுத்துவதாகவும், அதிகாரத்தைப் பாவித்து செல்வமீட்டும் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. காணி சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இச்சீர்திருத்த சட்டத்திற்கு முரணாக தன்னிடமிருந்த தென்னங்கணியொன்றினை தனியாருக்கு பெரும் விலையிற்கு விற்றதாகவும் குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும்கூட, சிறிமாவின் செல்வாக்குக் கடுமையான சரிவினைச் சந்தித்தது. மேலும், நீதியமைச்சரான பீலிக்ஸ் ஆர் டி பண்டாரநாயக்காவுக்கெதிரான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் சமசமாஜக் கட்சி ஆதரவளித்தது. இந்த அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்களை அச்சுருத்திவருவதாகவே இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. சிங்களத் தலைவர்களிடையே ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் அவர்களது நேரத்தின் பெரும்பகுதியினை விரயமாக்கிக்கொண்டிருக்க, பிரபாகரனோ ரகசியமாக வன்னி நோக்கிப் பயணித்தார். வவுனியா பகுதியில் தனது பயிற்சிமுகாம்களை உருவாக்கத் தொடங்கியதுடன், தனது பலப்பிரதேசமாகவும் அதனை மாற்றத் தொடங்கியிருந்தார். தனது தகப்பானாரான வேலுப்பிள்ளை காணி அதிகாரியாக இருந்தகாலத்தில் வன்னியின் பல பகுதிகளிலும் நடமட்டிய பிரபாகரனுக்கு வன்னியின் காடுகள் மிகவும் பரீட்சையமாக இருந்ததுடன், அவரைத்தேடி அரச படைகள் காடுகளுக்குள் நுழையும்போது தந்திரமாக அவர் தப்பிக்கொள்வதற்கும் அவரது காடுகள் பற்றிய பரீட்சயம் உதவியிருந்தது. பிரபாகரன் தனது முதலாவது பயிற்சிமுகாமை, வவுனியாவிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள, ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் ஆரம்பித்தார். அதற்கு பூந்த்தோட்டம் முகாம் என்று அவர் பெயரிட்டார். சுமார் 400 ஏக்கர்கள் விசாலமான அந்த பண்ணையில் பூங்கன்றுகள், மரக்கறித் தோட்டங்கள், வயல்வெளிகளும், அவற்றின் பின்புலத்தில் மிக அடர்ந்த காடும் காணப்பட்டது. காட்டின் மத்தியில் போராளிகள் தற்காப்புக் கலைகள் பயில்வதற்கும், குறிபார்த்துச் சுடும் பயிற்சியை மேற்கொள்ளவும் கொட்டில்களை அவர் அமைத்தார். இயக்கத்திற்கு புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள் பூந்தோட்டம் முகாமில் ஆரம்பத்தில் மரக்கறித் தோட்டங்கள் மற்றும் வயல்வெளியில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் முகாமிற்குத் தேவையான அரிசியும், மரக்கறி வகைகளும் கிடைக்கப்பெற்றது. போராளிகளுக்கு காலையிலும், மாலையிலும் போர்ப்பயிற்சி வழங்கப்பட்டது. குறிபார்த்துச் சுடுதலில் மிகுந்த அக்கறையினை பிரபாகரன் காண்பித்தார். மனிதர்களைப் போன்ற உருவங்கள் அட்டைகளிலும், மரங்களிலும் வரையப்பட்டு குறிபார்த்துச் சுடும் பயிற்சி நடத்தப்பட்டது. குறிபார்த்துச் சுடும் பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்த பிரபாகரன் பயிற்சி கிரமமாக நடைபெறுவதை மேற்பார்வை செய்துவந்தார். பிரபாகரனின் முகாமில் குறிபார்த்துச் சுடுவதில் பயிற்சியாளராகக் கடமையாற்றியவரும், பின்னாட்களில் ஈரோஸ் அமைப்பில் இணைந்துகொண்டவருமான நபர் ஒருவர் பேசும்போது, "அவரது அரையில் கைத்துப்பாக்கி செருகியிருக்க, மெதுவாக அவர் நடந்துவருவார். திடீரென்று பின்னால் திரும்பி, மரத்தில் இடப்பட்டிருக்கும் சிவப்பு நிற பயிற்சிக் குறிமீது துப்பாக்கியால் சுடுவார். தனது குறி கச்சிதமாக இலக்கைத் தாக்கிய பெருமிதத்தில் புன்னகைப்பார்" என்று பிரபாகரனின் துப்பாக்கி சுடும் திறமை பற்றி என்னிடம் பகிர்ந்தார். "அதேவேளை, இலக்குத் தவறுவது அவருக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்திவிடும். ஒவ்வொருமுறையும் இலக்குத் தவறும்போது, எதிரி உங்களைக் கொன்றுவிடுவான் என்று எம்மிடம் அடிக்கடி கோபத்துடன் கூறியிருக்கிறார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பயிற்சிமுகாமை நடத்துவதற்குப் பிரபாகரனுக்கு பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆகவே, முகாமிற்கான நிதியினை எப்படித் திரட்டலாம் என்கிற சம்பாஷணையினை அவர் இயக்கத்திற்குள் ஆரம்பித்து வைத்தார். வெளிப்படையாக பணத்தினைச் சம்பாதிக்க முடியவில்லை. பொலீஸார் எந்நேரமும் அவர்களைத் தேடித் திரிந்ததுடன், பொதுமக்கள் நேரடியாக அவர்களுக்கு பணம் கொடுத்துதவ அஞ்சினர். ஆகவே தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினர் கைக்கொண்ட வங்கிக்கொள்ளைகளில் தாமும் ஈடுபடுவதென அவர்கள் முடிவெடுத்தனர். "ஆனால், இது தவறல்லவா?" என்று மத்திய குழுவில் சிலர் கேள்வியெழுப்பவும் தவறவில்லை. பொதுமக்களின் பணத்தினையே வங்கிகள் கையாள்கின்றன. மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பு, அம்மக்களின் பணத்தினையே கொள்ளையடிப்பதென்பது தவறல்லவா?" என்று அவர்கள் கேட்டார்கள். பிரபாகரன் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார். அரசிற்குச் சொந்தமான வங்கியைக் கொள்ளையடிக்கலாம் என்று அவர் கூறினார். அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கொள்ளையடிக்க பிரபாகரன் முன்வைத்த இன்னொரு காரணம், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் அரசு, தமிழர் தாயகத்தை முற்றாகப் புறக்கணித்து வருவதால், அவ்வங்கிகளைக் கொள்ளையடிப்பது தகுமே என்றும் அவர் வாதிட்டார். அதன்பிறகு பிரபாகரன் வங்கிக்கொள்ளையினை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார். சில போராளிகளைத் தேர்ந்தெடுத்து அத்திட்டத்தினை விளக்கினார். வங்கி திறக்கும் நேரத்தினை அவதானிக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டார்கள். அலுவல்கள் ஆரம்பிக்கும் நேரம், பரபரப்பாக இயங்கும் நேரங்கள், மந்தமாக இயங்கும் நேரங்கள், பணமும் நகைகளும் வைக்கப்படும் இடங்கள், கொள்ளையில் ஈடுபடவேண்டிய போராளிகளின் எண்ணிக்கை, வங்கிக்குச் செல்லவும், தப்பி வரவும் பாவிக்கவேண்டிய வாகனம் போன்றவை விலாவாரியாக அலசப்பட்டன. ஒவ்வொரு தகவலும் அவதானிக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு, திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு, பரீட்சித்தும் பார்க்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு பங்குனி 5 ஆம் திகதி புத்தூரில் இயங்கிய மக்கள் வங்கிக்கு தான் தேர்ந்தெடுத்த போராளிகள் சிலரை அழைத்துக்கொண்டு சென்றார் பிரபாகரன். வங்கி அலுவல்கள் ஆரம்பித்திருந்த வேளை போராளிகளுடன் உள்நுழைந்த பிரபாகரன் கைத்துப்பாக்கியை மேலே உயர்த்திப் பிடித்துக்கொண்டு, வங்கி ஊழியர்கள் அனைவரையும் வங்கி முகாமையாளரின் அறையினுள் செல்லுமாறு பணித்தார். அதிர்ச்சியடைந்திருந்த ஊழியர்கள் அவர் கூறியதன்படி பணிந்தனர். கைகளை மேலே உயர்த்தியபடி நிற்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். காசாளரின் அறைக்கும், பாதுகாப்பாக பணம் வைக்கப்படும் அறைக்கும் இரு குழுக்கள் விரைந்தன. பணத்தையூம், நகைகளையும் இரு சாக்குகளில் சேர்த்துக் கட்டிய அவர்கள், "இந்த அசெளகரியத்திற்காக வருந்துகிறோம்" என்றுவிட்டுச் சென்றுவிட்டனர். அன்று சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்தின் முதலாவது வங்கிக்கொள்ளை வெறும் ஐந்தே நிமிடங்களில் நடந்தேறியது. இந்த வங்கிக்கொள்ளை அரசாங்கத்தையும் பொலீஸாரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்திய்ருந்தது. புதிய தமிழ்ப் புலிகளை முற்றாக அழிக்குமாறு பொலிசாருக்கு அரசு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுத அமைப்புக்களை அடக்குவதற்கு விசேட பொலீஸ் புலநாய்வுப் பிரிவொன்று பொலீஸ் தலைமைச் செயலகமான கொழும்பில் உருவாக்கப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் அரசியல் பேச்சுக்களை உன்னிப்பாக அவதானித்து வந்த பொலீஸ் புலநாய்வாளர்கள், ஆயுத அமைப்புக்களின் விபரங்களையும் திரட்டுமாறு பணிக்கப்பட்டனர். பொலீஸ் பரிசோதகர்களான பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மநாதன் ஆகியோரிடம் இந்த பணி வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் தமக்குத் தகவல் வழங்கக்கூடிய தமிழ் உளவாளிகளைக் கொண்ட வலையமைப்பொன்றினை உருவாக்கத் தொடங்கினார்கள். புதிய தமிழ்ப் புலிகளின் புத்தூர் மக்கள் வங்கிக் கொள்ளையினால் உந்தப்பட்ட இன்னொரு ஆயுத அமைப்பான ஈழம் விடுதலை அமைப்பு, புலோலியில் அமைந்திருந்த பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியினைக் கொள்ளையடித்தது. மக்கள் வங்கியினைப் போன்று, கிராம அபிவிருத்தி வங்கி அரச வங்கியல்ல. மாறாக இது விவசாயிகளுக்கு கடன் வழங்கும் ஒரு வங்கி. ஆனால், சமூக முற்போக்குச் சிந்தனை குறித்துப் பேசிய ஈழம் விடுதலை அமைப்பு, வறிய விவசாயிகளின் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றது. இக்கொள்ளையின் பின்னர், இவ்வமைப்பின் தலைவரான வரதராஜப்பெருமாள் பொலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரது அமைப்புக் கொள்ளையடித்துச் சென்ற பணமும், நகைகளும் மீட்கப்பட்டது. வரதருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் ஹென்ஸ் மோகன், சந்திர மோகன் மற்றும் தங்க மகேந்திரன் ஆகியோர் ஆகும். வங்கி முகாமையாளரான வேலுப்பிள்ளை பாலகுமாரும் கொள்ளையில் உடந்தையாகச் செயற்பட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பொலீஸ் பரிசோதகர் பத்மானாதனே கைதுகளை நடத்தியிருந்தார். ஈழம் விடுதலை அமைப்பு முற்றாக ஒடுக்கப்பட்டதோடு அதன்பிறகு அவ்வமைப்பின் செயற்பாடே இல்லாமற்போனது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள், அமைப்பினையும், உறுப்பினர்களையும் விட்டு தலைமறைவாகியது இதுவே சரித்திரத்தில் முதன்முறையாகும்.
  2. பேபி சுப்பிரமணியம் செஞ்சோலை பாடல் வெளியீட்டு நிகழ்வில் வி. பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் எம். தங்கன் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பிரபாகரன் எனும் பெயரை முன்னர் கேட்டிருந்தனர். ஆனால் தற்போது துரையப்பாவின் கொலைதொடர்பான பிரமிப்பு இளைஞர்கள் மத்தியில் பிரபாகரனை ஒரு வீரன் எனும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. புதிய தமிழ்ப் புலிகள் எனும் பெயருக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் தான் என்று மக்கள் பேச அரம்பித்திருந்தனர். ஆகவே, பிரபலமான அந்த அமைப்பில் தாமும் இணையவேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் தனியாக அதுவரை இயங்கிக்கொண்டிருந்த எஸ். சுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட பேபி சுப்பிரமணியம். துரையப்பாவின் கொலை பேபி சுப்பிரமணியத்தை பிரபாகரனின் விசிறியாக மாற்றிவிட்டிருந்தது. அவர் தற்போதும்கூட பிரபாகரனின் விசிறிதான். வன்னி நிர்வாகத்தின் கல்வித்துறைப் பொறுப்பாளராக அவர் இன்று கடமையாற்றுகிறார். யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் தனது நிலையினைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதே வேளை தெற்கில் ஜெயவர்த்தனா தன்னை கட்டமைத்துக்கொண்டு வந்தார். குடியரசு யாப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு நாளான வைகாசி 22 , 1975 ஆம் ஆண்டு, கொழும்பு தெற்கின் தனது பாராளுமன்ற ஆசனத்திலிருந்து விலகிக்கொண்டார் ஜே அர். இதற்கான காரணமாக தேசிய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் தொடர்பான பிணக்கே இருந்தது. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின்படி பாராளுமன்றம் அரசியலமைப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ஐந்து வருடங்களுக்குத் தொடரமுடியும் என்று இருந்தது. ஆனால், சிறிமாவின் அரசானது 1970 ஆண்டில் பதவிக்கு வந்ததுடன், அது 1975 ஆம் ஆண்டு தேர்தல்களை மீளவும் நடத்தவேண்டிய தேவையும் இருந்தது. ஆனால், சிறிமா அரசியலமைப்பினைப் பாவித்து 1977 வரை ஆட்சியை நீட்டிக்க நினைத்திருந்ததால், ஜே ஆர் இதற்கான தனது எதிர்ப்பினைக் காட்டவும், தேர்தலினை 1975 இலேயே நடத்தவேண்டும் என்றும் கோரியே தனது ஆசனத்திலிருந்து விலகியிருந்தார். ஆகவே, ஜே ஆரின் கொழும்பு தெற்கிற்கான இடைத் தேர்தல் ஆடி 18 ஆம் திகதி நடத்தப்பட்டபோது தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான தொண்டைமான் ஜே ஆர் இற்கு தனது முழு ஆதரவினையும் வழங்கினார். சமஷ்ட்டிக் கட்சி, மற்றும் தமிழர் ஐக்கிய முன்னணியின் ஏனைய கட்சிகளும் திரைமறைவில் ஜே ஆர் இன் வெற்றிக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. ஈற்றில் ஜே ஆர் 25,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். தொண்டைமான் பிரபாகரனும், ஜே ஆரும் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதே காலப்பகுதியில் சிறிமாவின் அரசாங்கம் கட்சிக்குள் பல உட்கட்சிப் பிணக்குகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கா, லங்கா சமசமாஜக் கட்சி - கம்மியூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடான தேசியமயமாக்கும் கொள்கையினைக் கடுமையாக எதிர்த்து வந்ததுடன், ஈற்றில் லங்கா சமசமாஜக் கட்சியினை அரசிலிருந்து வெளியேற்றவும் காரணமானார். அதனைத் தொடர்ந்து கம்மியூனிஸ்ட் கட்சியும் அரசிலிருந்து விலகிக்கொண்டது.
  3. தளர்த்தப்பட்ட தடைகள் அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்டமை சிங்களவர்களிடையே அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. மிதவாதத் தமிழ்த் தலைமைகளை கடுமையாக விமர்சித்த சிங்களவர்கள் இளைஞர்களின் வன்முறைகளுக்கு பின்னால் இருந்து தூண்டுவது அவர்களே என்று குற்றஞ்சாட்டினர். குற்றப் புலநாய்வுத் துறையிடமிருந்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய முன்னணியினரை, குறிப்பாக அமிர்தலிங்கத்தை இந்த வன்முறைகளுக்கு தூபம் போட்டவராகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இன்னொரு அறிக்கையின்படி, அமிர்தலிங்கமே இந்த வன்முறைக் கும்பல்களுக்கு பொறுப்பாக இருப்பதாகவும், இந்த ஆயுத அமைப்புக்களின் தலைவர்களை அமிர்தலிங்கம் அடிக்கடிச் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகவும் கூறியிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. தமிழ் இளைஞர் பேரவை நாட்களில், பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறிசபாரட்ணம், சத்தியசீலன், முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் ஆகியோர் அமிர்தலிங்கத்தை அடிக்கடி சந்தித்தே வந்திருந்தார்கள். அமிர்தலிங்கம் மீது அவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. புரட்சி செய்ய விரும்பும் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கும்படி தந்தை செல்வாவே அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். அமிர்தலிங்கத்தின் மூலம் இளைஞர்களின் கொதிநிலையினைக் கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது அதற்கு தடுப்பொன்றினைப் போட்டுவைத்திருப்பதே செல்வாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாத சிங்கள அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும், பல இடதுசாரிச் சிந்தனையாளர்களும் அமிர்தலிங்கத்தைத் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்தது நாளடைவில் இந்த இளைஞர் அமைப்புக்கள் மீது அமிர்தலிங்கம் வைத்திருந்த பிடி தளர்ந்துபோகக் காரணமாகியது. துரையப்பாவின் மரணம் சிறிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரும் அதிர்ச்சியினை அவருக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆகவே, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கெதிராக கடுமையான பொலீஸ் நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டார். துரையப்பாவின் மரணச்சடங்கின் முன்னர் கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டவேண்டும் என்ற கட்டளை பொலீஸாருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து பொலீஸாரின் கண்காணிப்பிலிருந்துவந்த பல தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு சிறியில் அடைக்கப்பட்டார்கள்.ஆடி 28 முதல் ஆவணி 4 வரையான ஒருவார காலப்பகுதியில் பின்வரும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பாட்டர்கள். கே. சிவானந்தன், ஏ. மகேந்திரா, நமசிவாயம் ஆனந்தவிநாயகம், சோமசுந்தரம் சேனாதிராஜா, எம். சின்னையா குவேந்திரராஜா, ஏ. மயில்வாகனம் ராஜகுலசூரியர், ஆனந்தப் பூபதி பாலவடிவேற்கரசன், சிவராமலிங்கம் சூரியகுமார், தம்பித்துரை முத்துக்குமாரசாமி, ஆசீர்வாதம் தாசன், கே.சுந்தரம்பிள்ளை சபாரட்ணம், அண்ணாமலை வரதராஜா, எஸ். அப்பாத்துரை நித்தியானந்தன், சிதம்பரம் புஷ்ப்பராஜா, ராமலிங்கம் கலேந்திரன், பொன்னுத்துரை சற்குணலிங்கம், டி. ஜீவராஜா, குருகுலசிங்கம், எம். பாலரட்ணம், பி. வீரவாகு, கே. உதர்சன், கே. சிவஜெயம், தம்பிப்பிள்ளை சந்ததியார், அமிர்தலிங்கம் ஆனந்தகுமார், வைத்திலிங்கம் சிறிதரன் மற்றும் சிலரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களுள் அடக்கம். ஆனால், இவர்களுள் எவருமே துரையப்பாவின் கொலைபற்றி அறிந்திருக்கவில்லை. இவர்கள் எவருக்குமே புதிய தமிழ்ப் புலிகள் அமைப்புப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், இவர்கள் கைதுசெய்யப்பட்ட நிக்ழவினை, கொலையாளிகளைப் பிடித்துவிட்டோம் என்று சிங்கள பத்திரிக்கைகள் கொண்டாடின. ஆனால், துரையப்பாவின் கொலையுடன் தொடர்புபட்டிருந்த ஒரு சிலர் ஆவணி மற்றும் புரட்டாதி மாதங்களின் இறுதிப்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். அதுகூட தமிழ் இளைஞர் பேரவையின் கீழ்மட்ட உறுப்பினர்களைத் தேடித்தேடி பொலீஸார் கைதுசெய்துவந்தபோதே நடைபெற்றது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலரின் பெயர் விபரங்கள் வருமாறு, வி. சதாசிவம் சதானந்தசிவம், சோமு குலசிங்கம், செல்வரட்ணம் செல்வகுமார், ரட்ணபாலா, கொகா சந்திரன், ராஜேந்திரம் ஜெயராஜா, விஸ்வஜோதி ரட்ணம், பி. கலபதி, எஸ்.லோகனாதன், ஆறுமுகம் கிருபாகரன், ரஞ்சன், வாரித்தம்பி சிவராஜா, முத்துத்தம்பி வசந்தகுமார் மற்றும் மேரி அல்போன்ஸ் ஆகியோர். இவர்களுள், ஆறுமுகம் கிருபாகரன் ஆவணி 21 ஆம் திகதியும், கலபதி புரட்டாதி 19 இலும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளை எதிர்நோக்கியபோது இவர்கள் தமக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் பொலீஸாரிடம் கூறிவிட்டனர். இவர்கள் மூலமே புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டி வந்தது. பிரபாகரனால் தமக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளைகளான "உங்களின் வீடுகளில் உறங்கவேண்டாம், எப்போதுமே ஒரு ஆயுதத்தினை உங்களுடன் வைத்திருங்கள்" என்பனவற்றைக் கடைப்பிடிக்கத் தவறியமையே கிருபாகரனும் கலபதியும் பொலீஸாரிடம் அகப்படவேண்டிய நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது. அவர்களைத் தேடி பொலீஸார் வந்தபோது அவர்கள் தமது வீடுகளில் ஆயுதம் ஏதுமின்றி காணப்பட்டார்கள். ஆனால், இதற்கு அவர்களால் கூறப்பட்ட காரணம் இயக்கத்திடம் அன்று இருந்தது வெறும் இரண்டு கைத்துப்பாக்கிகளே என்றும், அதனாலேயே தம்மால் ஆயுதம் ஒன்றினை வைத்திருக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இயக்கத்திலிருந்த இரு துப்பாகிகளில் ஒன்றினை பிரபாகரனும், மற்றையதை பற்குணராஜாவும் வைத்திருந்தனர். தன்னிடமிருந்த துருப்பிடித்த துப்பாக்கியின் மூலமே துரையப்பாவை பிரபாகரன் சுட்டிருந்தார். ஆனால், துப்பாக்கிகள் இல்லாவிட்டாலும்கூட கத்தி, மிளகாய்த்தூள் போன்றவற்றை தனது போராளிகள் எப்படிப் பயன்படுத்துவது என்று பிரபாகரன் அவர்களுக்குப் பயிற்சியளித்திருந்தார். குறைந்தது சமையலறைக் கத்தியையாவது உங்களுடன் வைத்திருங்கள் என்று தனது போராளிகளுக்கு அவர் சொல்லியிருந்தார். துரையப்பாவைச் சுட்டுவிட்டு அவரது காரில் நீர்வேலிவரை பயணித்த பிரபாகரனும் அவரது தோழர்களும், காரினை நீர்வேலியில் கைவிட்டு விட்டு ஒவ்வொரு திக்கில் சென்றார்கள். பிரபாகரன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அன்றிரவு அங்கு தான் தூங்கவிரும்புவதாகக் கேட்டார். அவரது நண்பருக்கோ துரையாப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்போது தெரிந்திருக்கவில்லை. பிரபாகரன் கூட துரையப்பாவின் கொலைபற்றி நண்பரிடம் மூச்சுவிடவில்லை. தனது காற்சட்டையிலிருந்த கைத்துப்பாக்கியினை எடுத்து தலையணையின் கீழ்வைத்துக்கொண்டே அவர் உறங்கிப் போனார். காலையில் நண்பர் கண்விழித்துப் பார்க்கும்போது பிரபாகரன் எழுந்து போயிருந்தது தெரிந்தது. சிறிதுநேரத்தின் பின்னர் அப்பகுதியெங்கும் துரையப்பாவின் கொலைபற்றி மக்கள் பேசத் தொடங்கினர். அக்கொலை தமிழரின் அண்மைய சரித்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அரசியற் கொலை என்பதுடன், அது இலங்கையின் வரலாற்றையும் புதிய பாதையில் பயணிக்கவைத்தது. பிரபாகரனுக்கு தனது திட்டங்கள் பற்றியோ, நடவடிக்கைகள் பற்றியோ இரகசியம் பேணும் இயல்பு இருந்தது. அவைகுறித்து சிறிய தகவல்கள் கசிவதைக்கூட அவர் விரும்பவில்லை. மேலும், தனது பாதுகாப்புக் குறித்தும் அவர் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். துரையப்பாவின் கொலையினையடுத்து தனது மூன்று தோழர்களுக்கும் தெரிந்திருந்த தனது மறைவிடங்களுக்கு மீண்டும் போவதை அவர் தவிர்த்து வந்தார். தனது தோழர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்படுமிடத்து, சித்திரவதைகளின்போது அவர்கள் தனது மறைவிடங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிய பிரபாகரன் அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தார். சில நண்பர்கள் அவரை மீண்டும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் அவர் அதற்கு விரும்பவில்லை. தப்பியோடுவதற்கான தருணம் இதுவல்ல என்று அவர் தனது தோழர்களிடம் கூறினார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து துரையப்பாவின் கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியற் சூழ்நிலையினை தமக்குச் சாதகமாகப் பாவிக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறினார் பிரபாகரன்.
  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம் துரையப்பா மீதான தாக்குதலின் வெற்றி மற்றும் புத்தூர் வங்கிக்கொள்ளையின் வெற்றி ஆகியவை கொடுத்திருந்த உற்சாகத்தினையடுத்து தனது நீண்டகாலக் கனவான நகர்ப்புர கரந்தடிப்படையொன்றினை செயற்படுத்தும் திட்டத்தினை முன்னெடுத்தார் பிரபாகரன். தமிழ்நாட்டில் சிறிதுகாலம் அவர் தங்கியிருந்த நாட்களிலேயே அவர் இதனைத் திட்டமிட்டு வந்தார். அவ்வமைப்பிற்கான பெயரைப்பற்றி அவர் சிந்தித்தபோது நிச்சயம் "தமிழ் ஈழம் " எனும் வார்த்தை தனது அமைப்பின் பெயரில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். சுந்தரலிங்கம் 1960 களில் பிரேரித்த ஈழம் என்பது அல்ல பிரபாகரனின் ஈழம் என்பது. தமிழ் இலக்கியங்களில் ஈழம் எனும் சொல் மொத்த நாட்டையுமே குறிப்பிட்டிருந்தது. ஆனால், பிரபாகரனின் கனவு தேசமான ஈழமோ தமிழ் மக்களின் வரலாற்றுத்தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களே என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அடுத்ததாக, புலிகள் எனும் சொல்லும் தனது அமைப்பின் பெயரில் இடம்பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். தமிழர்களின் பலமான மன்னர்களான சோழர்களின் சின்னம் புலியென்பது குறிப்பிடத் தக்கது. சோழர்களின் ஆட்சியிலேயே தமிழர்களின் நாகரீகம் பெருவளர்ச்சியடைந்ததோடு, பலமும் அதிகரித்திருந்தது. தமிழ் ஈழம், புலிகள் ஆகிய சொற்களோடு விடுதலை எனும் சொல்லும் தனது அமைப்பின் பெயரில் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது அமைப்பு ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றது, சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் விடுதலை பெறவே அவரது அமைப்பு போராட்டத்தினை நடத்தவேண்டியிருந்தது. ஆகவே, தனது அமைப்பிற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று அவர் பெயரிட்டார். தனது புதிய அமைப்பிற்கான இலட்சினை ஒன்றை பிரபாகரன் முன்னமே தேர்வுசெய்திருந்தார். அவர் மதுரையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு ஓவியக் கலைஞரைக் கொண்டு அதனை அவர் வரைந்து வைத்திருந்தார். அந்த வரைஞரிடம் தனது இலட்சினை அமையவேண்டிய விதத்தினைக் கூறினார் பிரபாகரன். கர்ஜிக்கும் புலியின் தலை, புலியின் முன்னங்கால்கள் வெளியே பாயுமாற்போல் இருக்க, இரு தானியங்கித் துப்பாக்கிகளும் 33 துப்பாக்கிக் குண்டுகளும் வட்டவடிவில் புலியின் தலையினைச் சுற்றிவர அது வரையப்பட்டிருந்தது. தான் வரைந்த ஓவியத்தை அந்த ஓவியர், பிரபாகரனிடம் காட்டியபோது பிரபாகரன் மிகுந்த உற்சாகமடைந்தார். தனது அமைப்பிற்கான அரசியலமைப்பின் வரைவையும் பிரபாகரன் தயாரித்து வைத்திருந்தார். அவ்வரைபின்படி, அமைப்பின் குறிக்கோள்கள் பின்வருமாறு கூறப்பட்டன, 1. முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம் 2. பூரண இறையாண்மை கொண்ட சோசலிச, ஜனநாயக மக்கள் அரசாங்கத்தை உருவாக்குதல். 3. அனைத்து விதமான சுரண்டல்களையும் இல்லாதொழித்தல், குறிப்பாக சாதி வேற்றுமைகளை முற்றாகக் களைதல். 4. சோசலிச உற்பத்தி முறையினைக் கைக்கொள்ளல். 5. விடுதலைக்கான போராட்ட வழியான அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டத்தினை மேற்கொள்வது. 6. கெரில்லா ரீதியிலான போர்முறை படிப்படியான பரிணாம வளர்ச்சியின் மூலம் முழுவடிவிலான மக்கள் போராக மாற்றி விடுதலையினை வென்றெடுப்பது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட மத்திய குழ்வொன்றினால் தலைமை தாங்கி நடத்தப்படும் என்று வரையப்பட்டிருந்தது. இந்த அமைப்பில் அரசியல் மற்றும் ராணுவப் பிரிவுகள் அமைந்திருக்கும். அமைப்பின் உறுப்பினர்கள் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டதுடன் புகையிலை, மதுபானம், உறுப்பினர்களிடையே பாலுறவு, குடும்பங்களுடனான தொடர்பு, மாற்று அமைக்களுடன் இணைதல் , புதிய அமைப்புக்களை தோற்றுவித்தல், அமைப்பை விட்டு பிரிந்து போதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தன .
  5. தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கமே தமிழினத்துக்கு தை பிறந்து ஒரு வழி பிறக்கட்டும்
  6. ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.