Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87993
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19139
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20022
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10105
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/21/23 in all areas

  1. கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ஜி ஜி பொன்னம்பலம் தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள். தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர். "சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் . அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது. இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார். திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார். பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது. யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார். அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். 1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார். முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது. பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர்.
  2. எனக்கு லீவு வேணாம் சார். இறந்தது பக்கத்து வீட்டு பாட்டின்னு இப்ப தான சார் மெசேச் வருது.
  3. எப்படி எல்லாம் வாதடி வென்ற எமது சமூகம் ! மனதுக்கு பாரமாக உள்ளது. தொடருங்கள் ரஞ்சித்.நன்றி.
  4. தமிழர் மீது சிங்களத்தால் பிரயோகிக்கப்பட்ட பாகுபாடுகள் மக்கள் முன் பேசிய சிவசிதம்பரம் ஒன்பது விதமான பாகுபாடுகளை சிங்களவர்கள் சுதந்திரகாலத்திலிருந்து தமிழர்மேல் கட்டவிழ்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவையாவன, 1. தமிழ் மக்களின் ஒரு பிரிவினருக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன்மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினைக் குறைத்தது. 2. அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பலவந்தமான நிலப்பறிப்புக்கள் ஊடாக தமிழர் தாயகத்திலேயே தமிழரை சிறுபான்மையினராக மாற்றுவது. 3. சிங்கள மொழியை தனி ஆட்சி மொழியாக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழுக்கான அந்தஸ்த்து வெகுவாகக் குறைக்கப்பட்டு தமிழ் மக்களும் இரண்டாம்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டுள்ளமை. 4. பெளத்த மதத்திற்கு அரச யாப்பின்மூலம் உயரிய அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டமையானது நாட்டிலுள்ள ஏனைய மதங்களான சைவம், கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் இரண்டாம் நிலைக்கு இறக்கப்பட்டிருப்பது. 5. தமிழருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, காணிப்பங்கீடு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கான பங்கீடு ஆகியவற்றை வேண்டுமென்றே குறைத்ததன் மூலமும், தமிழ்ப் பிரதேசங்கள் வேண்டுமென்றே அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதும் இலங்கையில் தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளமை. 6. தமிழ் கலாசாரம் செழித்தோங்கி வளரும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழரை முற்றாக தனிமைப்படுத்தியிருப்பதன் மூலமும், இலங்கையில் தமிழ் கலாசாரத்தை வளர்ப்பதற்கு முட்டுக்கட்டைகள் போட்டுவருவதன் மூலமும் திட்டமிட்ட ரீதியில் தமிழ் இனவழிப்பொன்றினை நடத்திவருவது. 7. தமிழ் பேசும் மக்கள் மீது தொடர்ச்சியான அரச ஆதரவுடனான வன்முறைகள் 1956 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அம்பாறை (அழகிய பாறை) ஆகிய இடங்களிலும், 1958 ஆம் ஆண்டு நாடுமுழுவதிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் , 1961 ஆம் ஆண்டில் ராணுவத்தால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளும், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டில் பொலீஸார் மிருகத்தனமாக தமிழர்களைப் படுகொலை செய்தமையும், 1976 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லீம்கள் மீது புத்தளத்தில் பொலீஸார் நடத்திய தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களை தொடர்ச்சியான அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமக்கெதிரான இன அடக்குமுறைகளுக்கெதிராக அவர்கள் கிளர்ந்தெழாவண்ணம் இருக்கவே செய்யப்பட்டு வருகின்றன. 8. தமிழ் இளைஞர்களை சகட்டுமேனிக்குக் கைதுசெய்து, அடைத்துவைத்துச் சித்திரவதை செய்வதும், காரணமேயின்றி அவர்களை நீண்டநாட்கள தடுத்து வைத்திருப்பதும். 9. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், இனவாதிகளால் வரையப்பட்ட 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் மூலம் அதற்கு முன்னர் இருந்த சோல்பரி யாப்பினூடாக தமிழருக்குக் கிடைத்த மிகச்சொற்ப உரிமைகளைக் கூட முற்றாக இல்லாதொழித்து, தமிழ்த் தேசத்தின்மீது மிகக்கடுமையான சட்டங்களைப் பிரயோகித்தும், தமிழரின் ஒரு பகுதியினருக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழரின் அரசியல்ப் பலத்தைச் சிதைத்தும் பாராளுமன்றத்தில் சிங்களவர்களுக்கு மிகப்பெரும் பலத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை. அமிர்தலிங்கத்தின் உரையே மிகவும் கடுமையானதாகவும், சிங்களவர்களைச் சீண்டும் வகையிலும் அமைந்திருந்தது. இளைஞர்களை உணர்வேற்றக்கூடிய வகையிலேயே தனது உரையினை அவர் வடிவமைத்திருந்தார். தனது உரையின் முதலவாது பகுதியில் தமிழரின் பண்டைய புகழ்பற்றியும், வீரம் பற்றியும் பேசினார். தமிழர்கள் ஒரு இறையாண்மையுள்ள இனமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர தேசத்தில் வாழ்ந்தார்கள் என்று கூறினார். சரித்திர காலம்தொட்டே தமிழரும் சிங்களவரும் இந்த நாட்டினை பிரித்து தமக்கான ஆளுகைப் பிரதேசங்களை ஆண்டுவந்ததாக அவர் கூறினார். வடக்கும் கிழக்கும் தமிழரால் ஆளப்பட மேற்கும் தெற்கும் சிங்களவரால் ஆளப்பட்டதாக அவர் கூறினார். அவ்வப்போது தமது எல்லைகளை மீறி, தமிழரை ஆக்கிரமிக்க சிங்களவர்கள் எடுத்த முயற்சிகளையெல்லாம் தமிழர்கள் முறியடித்து, மீண்டும் சிங்களவர்களை தமது முன்னைய நிலைகளுக்கே தள்ளிவிட்டதாக அவர் கூறினார். யாழ்ப்பாண இராச்சியம் அதன் பலமான காலமான கி பி 1350 இலங்கையில் போர்த்துக்கீசர்கள் 1505 இல் வந்திறங்கியபோது தமிழர்கள் சுதந்திரமான நாட்டில் வாழ்ந்துவந்தார்கள். யாழ்ப்பாண இராச்சியம் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நாட்டின் தென்பகுதி கோட்டே இராச்சியத்தின் கட்டுப்பாட்டின்கீழும், மத்திய மலைநாட்டுப்பகுதி கண்டிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தது. 1619 ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசர்களிடம் வீழ்ந்தது. கோட்டே இராச்சியம் அதற்குமுன்னர் போர்த்துக்கீசர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கவில்லை. தம்மால் கைப்பற்றப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள தேசத்தின் இரு பகுதிகளையும் போர்த்துக்கீசர்கள் தனித்தனியாகவே ஆட்சிசெய்து வந்தார்கள். இதன்மூலம் இவ்விரு இனங்களினதும் தனித்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டிருந்தது. போர்த்துக்கீசரிடமிருந்த பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்ற, பின்னர் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் அவற்றினைக் கைப்பற்றினர். ஆனால் ஒல்லாந்தர்கூட தமிழ் சிங்கள பிரதேசங்களைத் தனித்தனியாகவே ஆண்டு வந்தனர். ஆனால், 1833 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் கமிஷனின் ஆலோசனையின்படி ஆங்கிலேயர்கள் தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்தார்கள். நிர்வாகத்தினை இலகுவாக்குவதற்காக அவர்கள் இதனைச் செய்திருந்தார்கள். 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு சுந்தந்திரம் வழங்கியபோது தமிழர்களின் பிரதேசத்தை தமிழர்களிடமும், சிங்களவரின் பகுதிகளை சிங்களவர்களிடமும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் முழு நாட்டினையும் சிங்களவர்களிடமே கொடுத்தார்கள். இன்று, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தினைப் பாவித்து தமிழரின் தேசத்தை சிதைத்து, தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி, இரண்டாம்தரப் பிரஜைகளாக்கியிருக்கிறார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனது பேச்சின் இரண்டாம் பாகத்தினை தாம் முன்வைக்கும் தமிழருக்கான தமிழீழம் எனும் சுதந்திர தேசம் எப்படி அமையப்போகிறது என்பதுபற்றிப் பேசுவதற்காக வடிவமைத்திருந்தார். அந்தத் தேசம் வடக்குக் கிழக்கு மாகாணங்களைக் கொண்டிருக்கும். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்கள் அத்தேசத்தின் குடிமக்களாக இருப்பார்கள். இலங்கையின் எப்பாகத்திலும் வாழும் தமிழர்களும், உலகில் எப்பகுதியில் வாழும் தமிழர்களும் இத்தேசத்தில் குடிமக்களாக விண்ணப்பிக்கும் தகமையுடையவர்கள் ஆகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்ற விரும்புபவர்களோ அல்லது குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்புகிறவர்களோ வேறு எவரின் அழுத்தமும் இன்றி வாழும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தேசம் ஜனநாயகரீதியில் செயற்படுவதோடு அதிகாரம் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். இத்தேசம் மதச்சார்பற்ற சோசலிச தேசமாக இயங்கும். இத்தேசத்தின் உத்தியோகபூர்வ மொழி தமிழாக இருக்கும். மேலும், இங்குவாழும் சிங்களவர்களுக்கான உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ்பேசும் சிறுபான்மை மக்களுக்கிருக்கும் உரிமைகளுக்கு ஒத்ததாக இருக்கும். இறையாண்மையுள்ள தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கும் திட்டத்தினை தாம் உடனடியாக ஆரம்பிக்கப்போவதாகவும், தாயகத்தை மீடகப்போகும் போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெருந்தொகையான இளைஞர்கள் உச்சஸ்த்தானியின் பின்வருமாறு கோஷமிட்டனர், "நீங்களே எங்கள் தளபதி". "விடுதலைப் போராட்டத்திற்கான திகதியை அறிவியுங்கள்". "நாங்கள் எங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம்". உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்ட இளைஞர்கள் ஓடிச்சென்று அமிர்தலிங்கத்தைத் தமது தோள்களில் சுமந்துகொண்டு, நீங்களே எங்கள் தளபதி, இப்போதே ஆணை வழங்குங்கள் என்று கோஷமிட்டனர். பிரபாகரன், உமாமகேஸ்வரன் உட்பட்ட பல ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தில் பிரசன்னமாகியிருந்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பிரதிநிதிகளுக்கான கூட்டமாக அது ஒழுங்குசெய்யப்பட்டிருந்தாலும் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். பலர் ஊர்களுக்கு ஊர்வலமாகச் சென்ற இளைஞர்கள் தமிழ் ஈழம் கோரி கோஷமிட்டபடி சென்றனர். பிரகடணம் செய்யப்பட்ட இடத்திற்கு வாயிற்காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தபோதும்கூட, இளைஞர் கூட்டத்தை ஏதும் செய்யாது இருந்துவிட்டார்கள். அம்மைதானத்தைச் சுற்றிவந்த இளைஞர்கள், "எமக்குத் தமிழ் ஈழமே வேண்டும். அதனை மீட்டெடுக்க எமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர்கள் உணர்வுபொங்க உரக்கமிட்டனர். தமிழ் இன உணர்வெழுச்சி அப்பிரதேசங்கும் நிறைந்திருந்தது. இப்படியான நிகழ்வினை யாழ்ப்பாணக் குடாநாடு இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டிருந்ததில்லை. தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம் தனிநாட்டிற்கான ஆணையினை மக்கள் தந்துள்ளதனால், இப்போராட்டத்தினை முன்னெடுக்க தமது கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி இனிமேல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் என்று கூறினார். "நாம் இப்போது ஒரு விடுதலை அமைப்பு" என்று தளபதி அமிர்தலிங்கம் முழங்கினார். பதிலுக்கு உரத்த குரலில் கோஷமிட்ட இளைஞர்கள் "நாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராகி வீட்டோம், இப்போதே ஆரம்பியுங்கள்" என்று கூறினார். விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்குழு உடனடியாகச் செயற்பட்டு விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கான திட்டத்தினை வரையப்போகிறது என்று இளைஞர்கள் எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கூடிய செயற்குழு நீண்டநேர ஆலோசனைகளுக்குப் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின விளங்கப்படுத்தி துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டதுடன் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறும் தமிழ் மக்களைக் கேட்டிருந்தது. இளைஞர்களுக்கு இது ஏமாற்றத்தினைக் கொடுத்தது. அமிர்தலிங்கத்தைச் சந்திக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் "நீங்கள் உறுதியளித்த விடுதலைப் போராட்டம் இதுதானோ?" என்றும் கேட்டனர். "பொறுமையாக இருங்கள், நாம் முதலில் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தவேண்டும்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த இளைஞர்களுக்கு பதிலளித்தார் அமிர்தலிங்கம்.
  5. அட... நம்ம பாட்டிமார் காலத்திலேயே... "ஜிலுக்கடி ஜின்னா" பாட்டு பாடி இருக்கிறார்கள். 🤣
  6. ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா, ஜிலு ஜிலு காத்துக்கு மெரினா......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.