Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    1962
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87972
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7038
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33034
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/27/23 in Posts

  1. பதின்மூன்று உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லச் செல்ல கணவருக்கு மட்டுமல்ல எனக்கு மகளுக்குக் கூட எமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவாரம்பித்துவிட்டது. கணவருக்கு ஒரு நாலரைப் பரப்புக் காணி தங்கையின் காணியுடன் சேர்ந்து இருக்கு. பத்து ஆண்டுகளாக கணவர் குடும்பத்தைப் பார்த்து, தங்கைக்கு வீடுகட்டி சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்து தமையனை ஐந்து தடவை வெளிநாடு செல்லக் காசு அனுப்பி, தம்பியை ஒரு ஆண்டுகளாக மாமி சிங்கபூரில் வைத்திருந்து பணம் முழுவதும் செலுத்தி லண்டன் அனுப்பி, இப்பிடி எல்லாம் குடும்பத்துக்காக உழைத்ததில் மாமி ஐந்து பரப்பு வீட்டுக்காணியும் எட்டுப் பரப்பு தோட்டக் காணியும் ஐந்து இலட்சம் காசும் மகளுக்குக் கொடுத்து மிகுதி இருந்த நாலேகால் பரப்புக் காணியை குடும்பத்தைப் பார்த்ததுக்காக கணவர் பெயரில் எழுதிவிட்டார். 90 ம் ஆண்டிலிருந்து தங்கையே குத்தகைக்கு விட்டு அதையும் அனுபவித்து வருகிறார். நான் போகும்போதே வன்னியில் காணி வாங்கி ஆட்களை வைத்து ஒரு பண்ணையோ அன்றி கோழி ஆடுமாடுகளுக்கான இயற்கை உணவு தயாரிப்பதையோ அல்லது விளையும் நெல்களை விவசாயிகளுக்கு உதவும் பொ ருட்டு வாங்கிக் களஞ்சியப்படுத்தி பின் விற்கும் ஒரு சிறு செயலையோ ஆரம்பிக்கலாம் என எண்ணி இரண்டு மூன்று இது தொடர்பானவர்களிடம் முன்னரே கதைத்து பல சூம் மீற்றிங்கில் ஆலோசித்து, பலரும் நீங்கள் வாருங்கள் நாம் உதவுகிறோம் என்றனர். ஆனால் பிரபாவின் அனுபவமும் வேறு சிலருடன் நேரில் சென்று தொடர்ந்து கதைத்தபோது வெளிநாட்டில் இருக்கும் நான் தனித்து அவற்றைச் செய்வதில் பல இடற்பாடுகள் இருப்பதை அறிய முடிய, எம் ஊர் என்றால் கூட பலர் எமக்கு உதவ இருப்பார்கள். தெரியாத வன்னியில் நான் தனியாக எதுவும் செய்வது ஆபத்தானது என்று தெரிய, முதலில் சிறிதாக ஏதும் தொடங்கி உன் ஆசைக்கு செய்துபார். இரண்டு மூன்று ஆண்டுகளில் நாம் இங்கு வந்து தொடர்ந்து இருக்கும்போது ஏதாவது பெரிதாகச் செய்யலாம் என்றார் கணவர். அவர் கூறுவது சரியாகப் பட சிறிதாக ஒரு ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தால் தெரியும் என்று எண்ணி லண்டனில் யூ டியூபில் பார்த்த ஒரு பெண் ஆசிரியர் நடாத்தும் பண்டைத்தரிப்புப் பண்ணையை போய்ப் பார்த்தால் வீடியோவில் பார்ப்பது எதுவும் உண்மையானதாக இருக்காது என்று தெரிந்தது. சிறிய குளம் போன்று ஒன்று அமைத்து அதில் தாராக்கள், அன்னம் எல்லாம் அந்தப் பண்ணையில் இருப்பதாகக் காட்டினார்கள். எத்னையோ கோழிகள், ஆடுகள் இருக்கும் என்று வந்தால் ஒரு சிலதைத் தவிர வேறு எதையும் பண்ணையில் காணவில்லை. என்ன இப்படி வெறுமையாக இருக்கிறதே என்றால் எல்லாம் விலைப்பட்டுவிட்டன என்கிறார். அப்ப நீங்கள் எதுவும் பெருக்குவதில்லையா என்றதற்கு தன் மகனே தயாரித்தது என்று ஒரு பெரிய இயந்திரத்தைக் காட்டினார். கூடுகள் கிளீன் பண்ணிக்கொண்டு இருக்கிறம். நாளைக்கு வேறெங்கோ இருந்து கோழிக்குஞ்சுகள் வருகின்றன. ஒரே நேரத்தில் 400 குஞ்சுகள் பொரிக்க வைக்க முடியும் என்றதுடன் வெளிநாட்டில் இருந்து வரும்போது வாத்து முட்டைகள் ஒரு பெட்டி கொண்டுவந்து தருகிறீர்களோ என்றார். பார்ப்போம் என்றுவிட்டு வருகிறேன். முன்னர் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு பேரவையின் கீழ் வேலை செய்ததாகக் கூறிய ஒருவர் உடுப்பிட்டியில் ஒரு மாதிரிப் பண்ணையை நடத்துகிறார் என்று ஒரு வீடியோ. அதில் தான் 13 பண்ணைகளை காரைநகரில் நடத்துவதாகவும் ஊடுப்பிட்டியில் நான்கு கனடாவில் வாழும் தமிழர்கள் சேர்ந்து நடத்துவதாகவும் அதை இவர் தற்காலிகமாகப் பாராமரிப்பதாகவும் கூற லண்டனில் இருந்தே அவருக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைத்திருந்தேன். என் நண்பன் ஒருவரின் வீடு காரைநகரில். அவர்களும் அப்போது வெளிநாட்டில் இருந்து அங்கு வந்திருந்தனர். எம்மை வரும்படி அழைத்ததன்பேரில் நானும் கணவரும் மட்டும் சென்று உரையாடும்போது பண்ணை பற்றி விசாரித்தால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இளந்திரையனையும் தெரியவில்லை. நான் உடனே தொலைபேசியில் அழைக்க சுகம் விசாரிக்கிறார். நான் விபரத்தைக் கூறி உங்கள் பண்ணைகளில் ஒன்றையாவது நான் பார்க்கவேண்டும். என் நண்பர்களைக் கேட்டால் அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருக்கா அவர்களுக்கு உங்கள் பண்ணை எங்கு இருக்கு என்று கூறமுடியுமா என்கிறேன். நான் பார்க்க ஆட்கள் இல்லாததால் என் பண்ணைகளை மூடிவிட்டேன் என்கிறார். அப்ப சரி நாளை உடுப்பிட்டிப் பண்ணையைப் பார்க்க வருகிறோம் என்கிறேன். அந்தப் பண்ணையும் இப்ப மூடியாச்சு. கனடாக்காரர் நாலுபேருக்கும் பிரச்சனை. நான் இப்ப ஊரெழுவில் ஒரு பண்ணையைப் பாராமரிக்கிறேன் என்கிறார். மூன்று மாதங்களில் 14 பண்ணைகளை எதனால் மூடினீர்கள் என்று கேட்க நேரில வாங்கோ கதைபம் என்கிறார். நண்பர்கள் உம்மை நல்லாத்தான் ஏமாத்தியிருக்கிறார் என்று சிரிக்க என்னை மட்டுமா ??? என எண்ணி அவமானமாகவும் கோபமாகவும் இருக்கு. அடுத்த இரண்டு நாட்கள் வேறு அலுவல்களால் போகமுடியாதிருக்க போன் செய்துவிட்டு அவர் ஊரெழுவிலாவது நிற்கிறாரா என்று உறுதிப்படுத்திக்கொண்டு நானும் கணவரும் செல்கிறோம். ஒரு நான்கு பரப்புக்காணி இருக்கும். இரு பக்கமும் மாட்டுத் தீவனப் புற்கள் மற்றும் சோளம் என்பன நடப்பட்டிருக்கு. உள்ளே சென்றால் பெரிய கொட்டில் ஒன்று போடப்பட்டு ஆறு பால்மாடுகள் கட்டப்பட்டிருக்கு. இன்னொரு பக்கம் ஒரு பத்து ஆடுகள் மேல் தட்டில் நிற்கின்றன. ஒரு நான்கு கூடுகளில் நல்ல ஆரோக்கியமான கோழிகள் இருக்க பார்க்க ஆசையாகத்தான் இருக்கு. எம்மைக் கண்டுவிட்டு வந்து கதைக்கிறார். இதுவும் ஒரு கனடாக்காரரின் காணிதான். எல்லாமாக இருபது பரப்பு. இப்ப இவ்வளவும் தான் செய்யிறம். போகப்போக பெரிதாக்கலாம் என்று இருக்கிறம் என்கிறார். உங்கள் பண்ணைகள் ஏன் மூடினீர்கள் என்றதற்கு, நாங்கள் நாங்கள் நின்றால்தான் பண்ணையை ஒழுங்காகப் பாராமரிக்கலாம். நான் மற்றவர்கள் பண்ணையைக் கவனிக்க வந்தவுடன் அங்கு வேலை செய்பவர்களும் கவனம் இல்லை. கோழிகள் எல்லாம் நோய் வந்து செத்துவிட்டன. இப்ப நான் இதை மட்டும் தான் பார்க்கிறேன் என்றவுடன் அவர் சொல்லாமலே பல விடயங்கள் எனக்குப் புரிகின்றன. எதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விடைபெற்று வர, என்ர போன் நம்பர் இருக்குத் தானே அக்கா. பண்ணை போட உதவிகள் தேவை என்றால் அடியுங்கோ என்கிறார். உங்களுக்கு அடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று மனதுள் சொல்லியபடி வருகிறேன். நான் ஒரு முன்மாதிரிப் பண்ணையை உருவாக்கி இவர்களுக்குக் காட்டவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. சில பெண்கள் வன்னியில் பண்ணைகளை நடத்துகிறனர். அதையும் பாருங்கள் என்று ஒருவர் முன்மொழிகிறார். ஏற்கனவே பார்த்தவைபோல்தான் இவையும் இருக்கும் என்னும் எண்ணத்தில் இனி எதையும் பாற்பதில்லை என்று முடிவுசெய்கிறேன். இணுவிலில் எந்தக் காணியுமே விற்பனைக்கு இலை. இருப்பது இரண்டு மூன்று பரப்பு மட்டுமே. அதுவும் ஒரு பரப்பு 30-40 லட்சம் என்று போகிறது. எனவே இணுவிலில் என்றில்லை நல்லகாணி இணுவிலுக்கு அருகில் இருந்தால் வாங்குவோம் என்று முடிவெடுத்து புரோக்கர்மாரிடம் கூறினால் ஒவ்வொரு நாளும் அந்தக் காணி இன்ன விலை என்று ஒரே தொல்லை. ஒரு பத்து தோட்டக்காணிகள் ,கலட்டுக் காணிகள், வெறுங்காணிகள் என்று பார்த்து வெறுத்துவிட்டது. எதுவும் நான் நினைத்ததுபோல் அமையவில்லை. கடைசியில் ஒரு காணி சுற்றிவர வீடுகள் பதின்மூன்று பரப்பு . கொஞ்சம் உள்ளுக்குப் போகவேண்டும். எங்கள் ஊரின் எல்லையில் எனக்குப் பிடித்துவிட பேரம் பேசுகிறோம். காணி உரிமையாளர் சுவிஸில். ஒரு காணிக்கு ஒரு புரோக்கர் இருக்கமாட்டார். கடைசி நான்கு பேராவது வருவார்கள். அது ஏன் என்றும் தெரியவில்லை.நானும் கணவரும் நான்கு புரோக்கரும் காணிக்காரரின் தமையனும் சுற்றிவர இருக்க ஒரு பரப்பு 15 லட்சம் என்கின்றனர். இதுக்கு 15 லட்சம் அதிகம். 11 லட்சம் என்றால் வாங்குகிறோம் என்கிறார் கணவர். கிணறு இல்லை. மதிலோ வேலியோ இல்லை. எனவே இந்த விலை அதிகம் என்கிறார். கடைசியில் புரோக்கர் பதின்மூன்று இலட்சம் என்று இறங்கி வர கணவர் 12 லட்சம் என்றால் சொல்லுங்கள் முடிக்கலாம் என்கிறார். காணிக்காரரின் தமையன் எதுக்கும் தம்பிக்குப் போன் அடிப்பம். அவர் என்ன சொல்லுறார் என்று பார்ப்பம் என்று விட்டு போன் செய்ய, அழைப்பில் வருகிறார் தம்பியார். எடுத்த எடுப்பிலேயே பதின்மூன்று என்றால் வாங்கட்டும். இல்லாட்டில் போகட்டும் என்று கூற கோபத்துடன் நானும் கணவரும் எழுகிறோம். எம்மைக் கூட்டி வந்து புரோக்கர் இருங்கோ கதைச்சுப் பார்ப்பம் என்கிறார். உவரிட்டை காணி வாங்கத் தேவை இல்லை என்றுவிட்டு விடுவிடு என்று சென்றுவிடுகிறோம். இனிமேல் காணி ஒன்றும் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து போனில் வரும் புரோகர்களின் தொலைபேசியை எடுக்காமல் விடுகிறேன்.
  2. ஒருங்கிணைந்த பண்ணைகளின் சிறந்த மாதிரிகளைப் பார்க்க விரும்புவோர் போக வேண்டிய இடம் மத்திய மாகாணம். 20 ஆண்டுகளுக்கு முன்பே, குண்டசால, சரசவிகம, ஹிந்தகல, மஹகந்த போன்ற பேராதனையை அண்டிய சிறு கிராமங்களில் அருமையான ஒருங்கிணைந்த பண்ணைகள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றுள் ஹிந்தகலவில் இருந்த பண்ணை சேதன பண்ணையாக இருந்தது. குண்டசாலையில் இருந்த ஒருங்கிணைந்த பண்ணையில், லொத்தர் அடிப்படையில் ஒரிரு குடும்பங்களைத் தேர்வு செய்து சில வருடங்களுக்கு பண்ணையில் வசித்து பயிற்சி பெறச் செய்யும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். வளர்க்கும் பயிர்கள், ஆட்டினங்கள், மாட்டினங்கள் என்பன வடமாகாணத்தில் வேறாக இருக்கும், ஆனால், செயல்படுத்தும் நுட்பங்கள், முறைகள் பற்றி இந்த மத்திய மாகாண ஒருங்கிணைந்த பண்ணைகளில் கற்கலாம், ஆலோசனை பெறலாம்.
  3. பன்னிரண்டு முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில் அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். கண்ணில் அம்மாச்சி உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார். நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும் கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார். ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு. காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல் சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர் மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.
  4. #ராஜ்கிரண் இவர் பெரும்பாலும் வேட்டி சட்டையில்தான் இருப்பார் .இதை உணர்ந்த முன்னனி வேட்டி நிறுவனம் இவரை அணுகியது. பெரும்பாலும் நாங்கள் பத்துலட்சம் தருவதுண்டு. உங்களுக்கு பதினைந்து லட்சம் தருகிறோம்..விளம்பரத்திற்கு நடியுங்கள் ஒரு நாள் தான் ஷூட்டிங் என்றார்கள்.ராஜ்கிரன் மறுத்துவிட்டார். அவர்கள் விடுவதாயில்லை,25 லட்சம் தருகிறோம்..என்று சொல்ல..அப்போதும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் ராஜ்கிரன். மேலாளரிடம் தகவல் போனது.. வேட்டி கட்டும் ராஜ்கிரன்தான் பொறுத்தமானவர் என்று...மீண்டும் வந்து சார் 50 லட்சம் தருகிறோம்..நீங்கள் மறுக்காதீர்கள்..என்று கேட்க... அப்போதும், எனக்கு விருப்பமில்லை என்று ராஜ்கிரன் சொல்ல...நிர்வாகத்தினர்..நிறுவனர்க்கு தகவல் தெரிவித்தனர். ஆச்சிரியப்பட்ட நிறுவனர்...கைபேசியில் ராஜ்கிரனை தொடர்புகொண்டார். ஒரு கோடி தருகிறோம்..ஒகேதானே...என்று கேட்க கொஞ்சமும் சலனமின்றி எனக்கு வேண்டாமையா..விட்டுடுங்க என்றதும்... மறுமுனையிலிருந்து என்ன சார் பிழைக்க தெரியாத ஆளா இருக்கிறீங்க... உங்களுக்கு இருக்கிற கடனை யோசிச்சீங்களா..நல்லா யோசிச்சு சொல்லுங்க என்றதும் ராஜ்கிரன் சிரித்துக்கொண்டே இப்படி சொன்னார் . வேட்டி ஏழை பாலைங்க உடுத்துறது.... எனக்கு கொடுக்குற ஒரு கோடிய அந்த வேட்டிலதான் வைப்பீங்க, பாவம் நூறு இருநூறுக்கு அதான் கிடைக்குது.. அதுலேயும் மண் அள்ளி போடனுமா.... ராஜ்கிரன் சொல்ல வாயடைத்துப் போனார். . இந்த #சிந்தனை எத்தனை பேருக்கு இருக்கிறது ? தலைவணங்கிறோம் ஐயா ! உங்கள் #மனிதநேயம் கண்டு.
  5. உங்களுக்கு அனுபவம் இல்லை என்று தெரிகிறது சும்மா கிடக்கும் காணி என்று எம்மூரில் ஒருவர் லண்டனில் இருந்து போய் சில பரப்புகளை ஒன்றாக்கி தோட்டக்காணி ஆக்கினார். அடிதடி கோட்டு கேஸ் என்று இழுக்க தொடங்க ஓடி வந்து விட்டது. பார்க்க ஆசையாக இருந்த காணிகள் மீண்டும் தரவையாக.....😭
  6. ஏங்க, காக்கா கத்துது.... 🤣
  7. நாங்கள் யு டியூபில் ஒரு சினிமாவைத்தான் பார்க்கிறோம், நேரில் சென்று பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு ஏமாற்றப் படுகிறோம் என்பது புரியும் ..........எல்லாம் அனுபவம்தான்......ஒன்றும் செய்யேலாது போனவை போனவைதான்.......தொடருங்கள் சகோதரி...........!
  8. இது ஜேர்மன் Spiegel என்னும் சஞ்சிகையில் வந்த ரசித்த கருத்தோவியம்.
  9. அவள் வருவாளா, கூடு கட்டி காத்திருக்கேன் வருவாளா.....! 😂
  10. அம்மாச்சி உணவகம் அருமையானதொரு பயனுள்ள திட்டம். நானும் பல தடவைகள் அங்கு சென்று உணவு உட்கொண்டு உள்ளேன். வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளவை பற்றி நல்லதும், குறைகளுமான அபிப்பிராயங்கள் உள்ளன. கிளிநொச்சி அமைவிடத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் பற்றிய உங்கள் கருத்து வருத்தமளிக்கிறது. இப்படியான திட்டங்களுக்கு நாமே ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள். உங்களைப்போன்றோர் ஆதரவு நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளின் மத்தியில் தொழில் செய்யும் பெண்களுக்கு தேவை. இங்குள்ள பணியாளர்கள் எப்படியான அடிகளை வாழ்க்கையில் வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை. எமது வாய்சுவைக்காக மட்டும் செல்லாது அவர்களை ஊக்குவிக்கவும் அங்கு சென்று உணவு உட்கொள்ளலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.