Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87993
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38771
    Posts
  3. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    7596
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2960
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/21/23 in all areas

  1. உமாவைக் கொல்வதில்லை என்று உறுதியளித்த பிரபாகரன் அக்காலத்தில் மதுரையில் இயங்கிவந்த சுபாஷ் சந்திரபோஸ் சங்கத்தினர் தமது கூட்டமொன்றிற்கு நெடுமாறன் அவர்களையும் அழைத்திருந்தனர். சந்திரபோஸின் தீவிர அபிமானியாகவிருந்த பிரபாகரனும் நெடுமாறனுடன் இக்கூட்டத்திற்குச் சென்றிருந்தார். கூட்டத்தில் பேசிய பலரும் சுபாஸ் சந்திரபோசையும் அவரது இந்தியத் தேசிய ராணுவத்தையும் புகழ்ந்து பேசியபோது உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். இந்தியத் தேசிய ராணுவத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மண்டபத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ராணுவ வீரர்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் ராணுவ வணக்கத்தினை ஒத்த சைகையைச் செய்தபோது பிரபாகரனும் உணர்வுபொங்க எழுந்துநின்றார். கூட்டம் முடிவுற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நெடுமாறனுடன் பேசிய பிரபாகரன், தன்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றதற்காகக் அவருக்கு நன்றி கூறினார். மேலும், "சுபாஸ் சந்திரபோசிற்கு அவரின் வீரர்கள் விசுவாசத்துடன் அளித்த வணக்கத்தைப் போன்று, நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளின் ராணுவ அணிவகுப்பினைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றும் கூறினார். தனது ராணுவ வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடும் சுபாஸ் சந்திரபோஸ் பிந்நாட்களில் பேசிய நெடுமாறன், அன்றைய சுபாஸ் சந்திரபோஸின் நிகழ்வு பிரபாகரனின் வாழ்வில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒரு திருப்பம் என்று கூறுகிறார். அன்றிலிருந்து புலிகள் இயக்கத்தை இரு ராணுவ வல்லமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை பிரபாகரன் செயற்படுத்தத் தொடங்கினார். புலிகளின் கொடியினை வடிவமைத்த பிரபாகரன் அவர்களுக்கான சீருடைகளையும் தானே வடிவமைத்தார். பரிசோதனைகள் மூலம் தான் அதுவரையில் பயன்படுத்தி வந்த புலிகளுக்கிடையிலான சங்கேத தொலைத்தொடர்பு முறையினை அவர் மேலும் மெருகூட்டினார். மேலும், தனது போராளிகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளான வோக்கி - டோக்கி களைப் பயன்படுத்தும் பயிற்சிகளையும் வழங்கவேண்டும் என்று தீர்மானித்தார். நவீன தொலைத் தொடர்புக் கருவியுடன் தியாக தீபம் - லெப்டினன்ட் கேணல் திலீபன் தனது இயக்கத்திற்கான நவீன தொடர்பாடல் வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தினை பிரபாகரன் வகுத்தார். அக்காலத்தில் பிரபாகரன் எடுத்த தீர்மானங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது, டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று சுயமாக இயங்குவது எனும் தீர்மானமாகும். இதனை, தமிழ்நாட்டில் புலிகளுக்கான தனியான முகாம்களை அமைப்பதிலிருந்து ஆரம்பித்து வைத்தார். தமிழ்நாட்டின் சிறுமலை, பொள்ளாச்சி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் புலிகளுக்கான முகாம்கள் பிரபாகரனால் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களிலேயே புலிகளின் போராளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உட்பட்ட கெரில்லா ராணுவம் ஒன்று கற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படை உபாயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகளுக்காக ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய ராணுவ அதிகாரிகளை பிரபாகரன் பணிக்கு அமர்த்தினார். இம்முகாம்களுக்கு அடிக்கடி சென்றுவந்த பிரபாகரன் தனது போராளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை மேற்பார்வை செய்து வந்ததோடு, தனது பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். தனது போராளிகளை சுபாஸ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிகரான ஒரு போராட்ட அமைப்பாக உருவாக்கும் வேலைகளில் பிரபாகரன் மும்முரமாக ஈடுபட்டு வந்தவேளையில், சென்னையில் தன்னை வந்து சந்திக்குமாறு அமிர்தலிங்கத்திடமிருந்து பிரபாகரனுக்கு அழைப்பொன்று வந்திருந்தது. சென்னையில் அமிர்தலிங்கம் தங்கியிருந்த விடுதியொன்றில் அவரைச் சந்தித்தார் பிரபாகரன். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே நிலவிவந்த பிரச்சினையினைத் தீர்ப்பதே தனது சென்னை பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அமிர்தலிங்கம் பிரபாகரனிடம் கூறினார். ஆனால் , அமிர்தலிங்கம் பேசி முடிக்கும் முன்பே மிகக் கோபத்துடன் பேசிய பிரபாகரன் "அது எப்படிச் சாத்தியமாகும்? புலிகள் இயக்கத்தின் கொள்கையினை அவர் மீறிவிட்டார். அதற்கு மேலதிகமாக எனது ஆதரவாளர்களையும் அவர் கொன்றிருக்கிறார்" என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் மீது அவர் வைத்திருந்த மரியாதையின் நிமித்தம், பெருஞ்சித்திரனார் வீட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் இணங்கினார். பெருஞ்சித்திரனார் தனது போராளிகள் மீதும், ஆதரவாளர்கள் மீது பிரபாகரன் வைத்திருந்த பாசமும், அக்கறையும் ஆளமானது. மேலும், தனது போராளிகளையும் ஆதரவாளர்களையும் கொல்பவர்களை ஒருபோதும் அவர் மன்னித்ததில்லை. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர், 27 வயது நிரம்பிய ப. இறைக்குமரன எனும் தமிழீழ விடுதலைச் செயற்ப்பாட்டாளர் அளவெட்டிப் பகுதியில் 7 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சுடப்பட்டார். இறைக்குமரன் சுடப்பட்டதை நேரில் கண்ட அவரது நண்பரான 28 வயதுடைய த.உமாகுமரனும் அந்தக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அளவெட்டியின் வயற்பகுதி ஒன்றிலிருந்து இவ்விரு இளைஞர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. விவசாய அதிகாரியாகப் பணியாற்றிவந்த இறைக்குமரன் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி எனும் அமைப்பின் செயலாளராகக் கடமையாற்றி வந்தார். இதற்கு முன்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவில் சேர்ந்து செயற்பட்டு வந்த அவர், 1976 இல் முன்னணிக்குச் சார்பான பத்திரிக்கையான இளைஞர் குரலின் ஆசிரியராகவும் செயலாற்றியிருந்தார். ஆனால், ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்த முடிவினால் அதிருப்தியடைந்த இறைக்குமரன், முன்னணியிலிருந்து விலகி தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக இயங்கத் தொடங்கினார். இறைக்குமரனினதும், உமாகுமரனினதும் கொலைகளுக்கு பழிவாங்கியே தீரவேண்டும் என்று எண்ணிய போதும் பிரபாகரன், உமாவைக் கொல்வதைத் தவிர்க்க விரும்பினார். தமிழ்நாட்டில் உமா மகேஸ்வரன் தங்கியிருந்த பெருஞ்சித்திரனாரின் வீட்டினைக் கண்காணிக்க சில போராளிகளை பிரபாகரன் நிறுத்தியிருந்தார். புலிகளின் போராளிகள் தனது வீட்டிற்கருகில் நடமாடித் திரிவதை அவதானித்த பெருஞ்சித்திரனார், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு உமாவை வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று பணித்திருந்தார். உமாவின் பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்திருந்த பெருஞ்சித்திரனார் உமாவைக் கொல்லவேண்டாம் என்று பிரபாகரனிடம் கேட்கும்படி அமிர்தலிங்கத்தை வேண்டியிருந்தார். பெருஞ்சித்திரனாரின் வீட்டிற்கு தனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் பிரபாகரன் சென்றார். உமாவுடன் கைகொடுப்பதை அவர் தவிர்த்துவிட்டார். உமாவுடனான பிரச்சினையைத் தீர்க்குமாறு அமிர்தலிங்கம் பிரபாகரனைப் பார்த்து மன்றாட்டமாகக் கேட்டார். ஆனால், பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக நின்றார். எவர்மீதும் தனக்கு எந்த வெறுப்பும் இல்லையென்று பிரபாகரன் அங்கு கூறினார். இயக்கத்தின் கொள்கைகளை எவரும் மீறுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில் எவரினதும் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறுவதை பிரபாகரன் முற்றாகத் தவிர்த்திருந்தார். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "உமாதான் இப்போது உங்களின் இயக்கத்தில் இல்லையே?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார். அமிரைப் பார்த்துப் பேசிய பிரபாகரன், "இயக்கத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே போதுமானது அல்ல. இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள், விடுதலைப் போராட்டத்தில் இருந்தும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். இயக்கத்தின் விதிகளின்படி, போட்டியாக இன்னொரு அமைப்பைத் தொடங்குவதும் குற்றமே. இயக்கத்தின் யாப்பும், கொள்கையும் கூறுவது அதையே. எவரும் இதற்கு விதிவிலக்கில்லை. இதை எவராவது மீற விரும்பினால், மரணத்தை விரும்பி அழைக்கிறார்கள் என்று பொருள்" என்று மிகவும் தீர்க்கமாகக் கூறினார். இதைக் கேட்டதும் பெருஞ்சித்திரனார் மிகுந்த வருத்தமடைந்தார். "இப்படிப் பேசாதீர்கள். நீங்கள் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது உண்மைதான். ஆனால், உங்களுடன் நின்று, இயக்கத்திற்கான தொடர்பாடல் வேலைகளைச் செய்ததும், இன்று புலிகள் இயக்கம் பற்றி உலகம் அறிந்துகொள்ளவும் உதவியது உமாதான்" என்று பெருஞ்சித்திரனார் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார். முன்னர், தனது வீட்டிற்கு வந்த பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது அன்றாடச் செலவுகளுக்கு சிறுதொகைப் பணத்தினை அவ்வப்போது பெற்றுச் சென்றதை பெருஞ்சித்திரனார் பிரபாகரனுக்கு நினைவுபடுத்தினார். பெருஞ்சித்திரனாரின் வீட்டிலேயே புலிகள் இயக்கம் பணத்தினை சேமித்து வைத்திருந்தது. புலிகளின் பணத்தினைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதே பெருஞ்சித்திரனாரின் பணியாக இருந்தது. "இப்போது ஒருவரையொருவர் கொல்லப்போவதாக மிரட்டுகிறீர்களா? அதைச் செய்யவேண்டாம்" என்று பிரபாகரனைப் பார்த்துக் கூறினார் பெருஞ்சித்திரனார். சி.என்.அண்ணாத்துரையுடன் ராமசாமிப் பெரியார் மேலும் பேசிய பருஞ்சித்திரனார், ராமசாமிப் பெரியார் மணியம்மையை மணந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகத்தை அமைத்தவரான அண்ணாத்துரை கூறியதை நினைவுபடுத்தினார். "இருகட்சிகளாக இருந்தபோது, இருகுழல்த் துப்பாக்கியாக இயங்கலாம் என்று அன்று அண்ணாத்துரை கூறியதுபோல, நீங்களும் இயங்கலாம்" என்று அவர் கூறினார். பெருஞ்சித்திரனார் கூறியதை வழிமொழிந்த அமிர்தலிங்கம், "ஐயா கூறுவதன்படியே செய்யுங்கள்" என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறினார். பின்னாட்களில் பிரபாகரனின் தீவிர அபிமானியாக மாறிப்போன பெருஞ்சித்திரனார் என்னுடன் ஒருமுறை பேசும்போது, அன்று தனது வீட்டில் இடம்பெற்ற கூட்டம் ஓரளவு பலனை அடைந்ததாகக் கூறினார். தானும், அமிர்தலிங்கமும் இணைந்து, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒருவரையொருவர் கொல்வதில்லை எனூம் உறுதிப்பாட்டை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறினார். " தான் கொடுத்த வாக்குறுதியை பிரபாகரன் இறுதிவரை கடைப்பிடித்து வந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனது வீட்டைச் சுற்றி தான் நிறுத்தியிருந்த தனது போராளிகளை அவர் விலக்கிக் கொண்டார். அதற்குப் பின்னர் உமாவைக் கொல்ல அவர் ஒருபோதும் எத்தனிக்கவில்லை. எனது நன்றியை தெரிவிக்க பிரபாகரனை நான் சந்திக்க முடியாது போனமைக்காக வருந்துகிறேன்" என்று பெருஞ்சித்திரனார் கூறினார். அதன் பிறகு, அவர் இறக்கும்வரை பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உமா மகேஸ்வரனைத் தான் கொல்லாமல் இருப்பதற்கு, பிரபாகரன் ஒரு நிபந்தனையினை விதித்தார். அதாவது, உமா மகேஸ்வரன் தனது அமைப்பை நடத்தலாம், ஆனால் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக உரிமைகோர முடியாது என்று கூறினார். ஏழுமாதங்கள் வரை பிணையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த பிரபாகரன், 1983 ஆம் ஆண்டு, மாசி மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பதை பொலீஸார் நன்கு அறிந்தே இருந்தனர். ஆனாலும், அறிக்கையினைச் சமர்பிப்பதற்காக அவர் தங்கியிருந்ததாகக் கருதப்பட்ட பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி வீடுகளை அவர்கள் சோதனையிட்டனர். பிரபாகரன் அன்று யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான காரணம் ஒன்று இருந்தது. தான் மனதில் வரைந்துவைத்திருந்த சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தைப்போன்ற இலட்சிய உறுதியும், தியாக மனப்பான்மையும் கொண்ட கெரில்லா ராணுவம் ஒன்றை உருவாக்குவதே அது.
  2. புலிகளை மீட்டுவரும் நடவடிக்கை கே மோகன்தாஸ் தமிழ்நாட்டு பொலீஸ் மா அதிபர் கே மோகன்தாஸைச் சந்தித்த இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் ருத்ரா ராஜசிங்கம் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் இலங்கைக்கு நாடுகடுத்துமாறு கேட்டுக்கொண்டார். தனது கோரிக்கைக்கு வலுச் சேர்ர்கும் முகமாக அவர்கள் இருவர் மீதும் இருந்த குற்றச்சாட்டுக்களின் பட்டியலை ருத்ரா, மோகந்தாஸிடம் காண்பித்தார். அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் இருவர்மீதும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்ற் ருத்ரா கூறினார். ஆனால், சமயோசிதமாக இந்தக் கோரிக்கையினை மறுத்துவிட்ட மோகன்தாஸ், நாடுகடத்தும் விவகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருப்பதால் தான் இதுகுறித்து எதுவும் செய்யமுடியாது என்று ருத்ராவிடம் கூறினார். ஆனால், மத்திய அரசாங்கம் இதற்கு இணங்கும் பட்சத்தில் தான் இதுதொடர்பாக இலங்கையதிகாரிகளுக்கு உதவத் தயாரக இருப்பதாகவும் கூறினார். புது தில்லியில், வெளிவிவகார அதிகாரிகள் இலங்கையின் வேண்டுகோளினை கண்ணியமாக மறுத்துவிட்டார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமையினால், அவர்களை நாடுகடத்துவது முடியாத காரியம் என்று அவர்கள் கூறினார்கள். மேலும், அவர்கள் இருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை, கொலை முயற்சி, இந்திய வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் சட்டத்திற்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்காகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். ஆகவே, இக்குற்றச்சட்டுக்கள் குறித்து தமிழ்நாட்டு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கியதன் பின்னரே இலங்கையின் நாடுகடத்தும் கோரிக்கை குறித்துத் தம்மால் சிந்திக்க முடியும் என்றும் கூறிவிட்டார்கள். ராஜசிங்கம் வெறுங்கைய்யுடன் நாடு திரும்பினார். யாழ்ப்பாணத்திலிருந்து வாரந்தோறும் வெளிவரும் சட்டர்டே ரிவியூ எனும் ஆங்கில பத்திரிக்கை இலங்கையரசின் முயற்சி குறித்து ஏளனத்துடன் "புலிகளை மீட்டுவரும் நடவடிக்கை" எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் 1973 ஆம் ஆண்டு குட்டிமணியை இந்தியா விருப்பத்துடனேயே நாடு கடத்தியிருந்தமைக்கும், இன்று பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துவதற்கு இந்தியா காட்டிவரும் எதிர்ப்பையும் ஒப்பிட்டும் செய்தி வெளியிட்டிருந்தது. அன்று, பிரதமாரகவிருந்த சிறிமா மிகவும் தீவிரமாக அணிசேராக் கொள்கையினை கடைப்பிடித்து வந்தமையும், இலங்கை தொடர்பாக இந்தியா எதுவிதமான பாதுகாப்பு அச்சுருத்தல்களையும் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், அக்காலத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுத எழுச்சியென்ற ஒன்றே இலாதிருந்ததும், தமிழர் மீதான அரச பயங்கரவாதம் இன்றிருப்பதுபோல மிகத் தீவ்ரமாக இருக்கவில்லையென்பதும் மற்றைய காரணமாகும். ஆனால், ஜெயவர்த்தன பதவியேற்றதன் பின்னர் நிலைமை முற்றாக மாறியிருந்தது. ஜெயாரின் அமெரிக்கா நோக்கிய சாய்வும், தமிழர்கள் மீது அவரால் ஏவிவிடப்பட்ட ராணுவ பொலீஸ் அராஜகங்களும் இந்தியா தனது நிலைப்பாட்டினை மாற்றவேண்டிய சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது. ஆவணி 6 ஆம் திகதி இரு போராளித் தலைவர்களையும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலீஸார் சமாதானத்திற்கு ஊறுவிளைவித்தமை மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய பிணையில் எடுக்கக்கூடிய குற்றங்களை அவர்கள் மீது சுமத்தியிருந்தார்கள். நிபந்தனை அடிப்படையிலான பிணையில் இருவரையும் விடுவித்த நீதிமன்றம், வழக்கு முடியும்வரை இருவரும் தமிழ்நாட்டின் வேறு வேறு நகரங்களில் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டது. பிரபாகரன் மதுரையைத் தெரிவுசெய்ய, உமா மகேஸ்வரன் சென்னையில் இருக்க ஒப்புக்கொண்டார். பிரபாகரன் நெடுமாறனுடனும், உமா மகேஸ்வரன் பெருஞ்சித்திரனாருடனும் தங்கிக்கொண்டார்கள். நீதிமன்றம் கட்டளையிட்டதன்படி அவர்கள் நகர எல்லைக்குள் வசிப்பதை உறுதிசெய்ய உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரும், மூன்று கொன்ஸ்டபிள்களும் அவர்களுடன் தங்கியிருந்தார்கள். பிரபாகரனுக்கு அவர்களுடன் தொடர்பாடுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. சிறிது நாட்களிலேயே அவர்கள் பிரபாகரனின் அபிமானிகளாக மாறிவிட்டார்கள். அவர் நகருக்கு வெளியே சென்றபோது அவர்கள் கண்டும் காணாததுபோல இருந்துவிடுவார்கள். அவரைப் பின் தொடர்வதைக் கைவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று அவர் கைய்யொப்பம் இடவேண்டும் என்கிற நீதிமன்றத்தின் கட்டளையினையும் அவர்கள் காற்றில் பறக்கவிட்டார்கள். ஒரேயொரு முறை மட்டுமே பொலீஸார் பிரபாகரனின் அறையினைச் சோதனை செய்யவேண்டி ஏற்பட்டது. பிரபாகரன் செய்தித் தாள்களை வெட்டி, கோப்பாக பராமரித்து வருவதை அவதானித்த பொலீஸார் அதனை என்னவென்று பார்க்க விரும்பினர். அதில் ஒன்று அல்பேர்ட் துரையப்பாவின் கொலை. அக்கொலை தொடர்பாக பிரபாகரனை தேடி இலங்கைப் பொலீஸார் நடத்திய தேடுதல் வேட்டைகள் குறித்த செய்திகளும் அதில் காணப்பட்டன. "இந்த செய்தித் தால்களை எதற்காக வெட்டி வைத்திருக்கிறீர்கள்? அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று பொலீஸார் அவரை கேட்டனர். இவ்வாறு அவர்கள் கேட்டது பிரபாகரனுக்குச் சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், " ஆம், எனக்கு அவரைத் தெரியும். நான் தான் அந்த நபர்" என்று அவர் பதிலளித்தார். பிரபாகரனின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்டதும் பொலீஸார் ஒருகணம் அதிர்ந்துபோனார்கள். பொலீஸாரில் ஒருவர் நெடுமாறனிடம் இதுகுறித்துப் பேசியதுடன், கொலைகாரர் ஒருவருக்குத் தஞ்சம் கொடுத்திருக்கிறீர்கள் என்றும் முறையிட்டார். நெடுமாறனின் அறைக்குச் சென்ற அந்தப் பொலீஸ்காரர், "ஐயா, நீங்கள் ஒரு ஆபத்தான மனிதரை இங்கே தங்கவைத்திருக்கிறீர்கள். தான் ஒரு கொலைகாரன் என்று அவரே கூறுகிறார்" என்று கூறினார். அந்தப் பொலீஸ்காரரைத் தொடர்ந்து பிரபாகரனும் நெடுமாறனின் அறைக்குச் சென்றார். தனது அறையினை பொலீஸ் காரர் தனது அனுமதியின்றிச் சோதனையிட்டதாக அவர் நெடுமாறனிடம் புகாரளித்தார். இதனையடுத்து அந்தப் பொலீஸ்காரரைப் பார்த்துப் பேசிய நெடுமாறன், "இந்த வீட்டில் எந்தவொரு அறையினையும் எனது அனுமதியின்றிச் சோதனையிட உங்களுக்கு அதிகாரம் இல்லை" என்று கூறினார். மேலும், அந்தப் பொலீஸ்காரரின் நடவடிக்கை குறித்து அவரின் உயரதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினார். பிரபாகரனைப் பொறுத்தவரையில் நெடுமாறனின் வீட்டில் அவர் தங்கியிருந்த 7 மாதங்களும் இனிதே அமைந்திருந்ததுடன், அவரால் பல செயற்பாடுகளையும் முன்னெடுக்க உதவியிருந்தது. நெடுமாறனின் குடும்பத்தில் ஒருவராக அவர் நடத்தப்பட்டதுடன், நெடுமாறனின் மனைவியார் சமைத்த சைவ உணவுவகைகளையும் அவர் விரும்பி உண்டார். நெடுமாறனின் பிள்ளைகளோடு மிகவும் அன்பாகப் பழகிய பிரபாகரன், அவ்வபோது நெடுமாறனின் 6 வயது மகளுடன் கரம் விளையாட்டிலும் ஈடுபட்டார். பிள்ளைகள் படுக்கைக்குச் செல்லுமுன் அவர்களுக்குக் கதைகள் சொல்லித் தூங்கவைப்பதிலும் அவர் தன்னை ஈடுபடுத்தினார். பிரபாகரன் அவர்களுக்குக் கூறிய பெரும்பாலான கதைகள் தமிழர்களின் வீரத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டவை. இலங்கையில் தமிழர்கள் மேற்கொண்டுவரும் விடுதலைப் போராட்டம் தொடர்பான கதைகளையும் அவர் நெடுமாறனின் பிள்ளைகளுக்குக் கூறினார். அவ்வாறு ஒருநாள் பிரபாகரன் 1958 ஆம் ஆண்டு பாணதுறையில் சிங்களவர்களால் உயிருடன் எரிக்கப்பட்ட சைவ மதகுருவின் கதை பற்றிக் கூறியபோது, கண்ணீருடன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நெடுமாறனின் மகன், "அந்த ஈனச் செயலைச் செய்த அரக்கர்களை அழிக்க உங்களுடன் நானும் வந்து சேரப்போகிறேன்" என்று உணர்வுபொங்கக் கூறியிருக்கிறார். அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டுக்கொண்டே பேசிய பிரபாகரன், "நீங்கள் நன்றாகப் படியுங்கள். நாங்கள் அந்த அரக்கர்களுக்குச் சரியான தண்டனையினை வழங்குவோம் " என்று கூறினார். மதுரையில் அவர் தங்கியிருந்த 7 மாதங்களும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் அவரது வாழ்நாளில் மிகவும் பயனுள்ள காலங்களாக இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரும் அவரது போராளிகளும் மதுரையிலேயே தங்கிவிட்டதுடன், ஆரம்ப மாதங்களை தம்மைச் சுய விமர்சனம் செய்வதிலேயே கழித்தனர். பின்னர், தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்தனர். நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? எங்கே தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன? தற்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து எப்படி முன்னேறப்போகிறோம்? ஆகிய கேள்விகளைத் தாமே கேட்டுக்கொண்டதுடன் அதற்கான பதில்களையும் தேடத் தொடங்கினார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.