Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87990
    Posts
  4. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    1887
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/24/23 in all areas

  1. திண்ணை (இப்போதைக்கு) திறந்து விடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அனுமதி மற்றும் மட்டுறுத்துநர் பார்வைக்குள் இருப்பவர்களால் திண்ணையை பயன்படுத்த முடியாது. ஏனையவர்களால் பயன்படுத்த முடியும். நன்றி
  2. இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவே ஜூலை 83 இனக்கொலையின் சூத்திரதாரி ஒட்டுமொத்தச் சிங்கள மக்களினதும் கோபமே இந்த இனக்கலவரம் என்று ஜெயாரும் அவரது அரசாங்கமும் கூறிவந்ததை பொய்யென்று நிரூபிக்கவே இந்த சம்பவங்களை நாம் இங்கே பதிகிறேன். சில சந்தர்ப்பங்களில் நல்ல மனம் படைத்த சிங்களவர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது தமிழர்களைக் காத்திருக்கிறார்கள். ஆனால், இப்படியான சிங்களவர்களை ஏனைய சிங்களக் காடையர்கள் அச்சுருத்தியிருந்தனர். தமிழர்களைக் காப்பாற்ற நினைத்தால், தமிழர்களைப்போலவே அவர்களையும் கொன்று எரித்துவிடுவோம் என்று அவர்கள் அச்சுருத்தப்பட்டனர். 1983 ஜூலை இனக்கொலையினையடுத்து பாரிய அகதிகள் முகாமாக மாறிய கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் பிரட்மண் வீரக்கோண் ஆறு பிரத மந்திரிகளுக்கு காரியாதிரிசியாகப் பணியாற்றிய உயர் அரச அதிகாரியான பிரட்மண் வீரக்கோண் ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். அவர் தனது அயலில் வசித்த தமிழர்களை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார். தமிழர்களைப் பாதுகாத்து வைத்திருப்பதற்காக பல சிங்களவர்கள் அவருக்கு தொலைபேசியூடாக கொலைப் பயமுருத்தல் விடுத்துக்கொண்டிருந்தனர். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களைத் தான் பாதுகாப்பாக அகதிகள் முகாமிற்குக் கொண்டு சென்றதாக அவர் என்னிடம் கூறினார். "நான் பயத்திற்காக அவர்களை அகதிமுகாமிற்கு அழைத்துச் செல்லவில்லை. எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த தமிழர்களின் உயிரைக் காப்பது அவசியமானது. அவர்களைத் தொடர்ந்தும் எனது வீட்டில் வைத்திருந்தால், அவர்களையும் கொன்றுவிடுவார்கள், ஆகவேதான் அவர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றேன்" என்று கூறினார். http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2021/07/055B0D0A-3E4E-491A-8723-7D0444FB1205.jpeg எரிந்துகொண்டிருக்கும் தமிழர்களின் வியாபார நிறுவனம் ஒன்று அந்த இனக்கொலையினை அனுபவித்தவன் என்கிற வகையிலும், இனக்கொலையில் அகப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்டவன் என்கிற வகையிலும் இந்த இனக்கொலை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு என்கிற முடிவிற்கே நான் வரவேண்டி இருக்கிறது. இலங்கையின் இனக்கொலையும் அதன் பின்னரும் எனும் நூலினை பியதாச எழுதியிருந்தார். அவர் ஆவணப்படுத்திய சாட்சியங்களினூடாக இந்த இனக்கொலையினை திருநெல்வேலித் தாக்குதல் நடப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருந்தது என்பது தெளிவாகிறது. நான் சேகரித்த முக்கியமான சாட்சியங்களில் ஒன்றான வாக்களர் பட்டியலைப் பாவித்தே தமிழர்களின் வியாபா நிலையங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன என்பதனை பியதாசவும் தனது நூலில் சாட்சியங்களோடு குறிப்பிட்டிருக்கிறார். வியாபார நிறுவனங்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தில் இக்காலத்தில் பணிபுரிந்து வந்த தமிழ் அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில், தனது திணைக்களத்திலிருந்தே வியாபா நிறுவனங்களின் பட்டியல் காடையர்களுக்கும், தலைமை தாங்கியவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது என்று கூறினார். தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் அரசாங்கத்தின் அதியுயர் பீடமே இத்தாக்குதல்களை வழிநடத்தி வருகின்றது என்பதற்கான ஆதாரத்தினை ஞாயிறு இரவும், திங்கள் காலையும் ஜெயார் நடந்துகொண்ட விதத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஞாயிறு மாலை அதிகாரிகளும், ஜெயாரின் ஆலோசகர்களும் பொரள்ளை மற்றும் மரதானை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்து மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த வேளை, ஜெயாரோ மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன குறிப்பிடுகிறார். இரத்தமும் சயனைட்டும் என்று தான் எழுதிய புத்தகத்தில் ஞாயிறு இரவு ஜெயார் நடந்துகொண்ட விதம் குறித்து எட்வேர்ட் குணவர்த்தன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், "ஜனாதிபதி குடும்பத்துடன் தனது நேரத்தைக் களித்தார். மிக விலைமதிப்பான ஊதாநிறத்திலான‌ முழு ஆடையில் தனது ஆசனத்தில் வீற்றிருந்த அவர், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல அதிகாரிகள் தன்னிடம் கூறிய அசம்பாவிதங்கள் குறித்த செய்திகளை மிகவும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவந்த வன்முறைகள் குறித்து அதிகாரிகளும் ஆலோசகர்களும் பதற்றதுடன் அவரிடம் கூறும்போது அவர் அதிர்ச்சியடையவில்லை, கலவரப்படவில்லை, நிதானம் தளரவில்லை. ஆனால், தனது இராணுவத்தினரும் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டபோது சற்றுக் கவலைப்பட்டார்" என்று கூறுகிறார். நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து ஜெயார் நன்கு அறிந்தே இருந்தார். அது அவருக்கு ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ஆனால், இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கலகத்தில் ஈடுபடலாம் என்பதே அவருக்கு இருந்த ஒரே கவலை. ஆனால், அவர் இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவை அன்று நாள் முழுதும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்குமாறு பணித்தார். 13 கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கே வீரதுங்க கொழும்பிற்கு வந்தார். பொலீஸ் உயர் அதிகாரிகளும், மூத்த ஆலோசகர்களும் ஞாயிறு மாலையும், திங்கள் காலையும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்குமாறு ஜெயவர்த்தனவை அயராது வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் மசியவில்லை. அது ஏன்? பிரபாகரன் உட்பட பெரும்பாலான தமிழர்கள் ஜூலை 83 இனக்கொலையில் அரசாங்கமே முக்கிய சக்தியாக முன்னின்று செயற்பட்டதைக் கண்டுகொண்டனர்.
  3. நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கமைத்து நடத்தப்பட்ட தமிழினக்கொலை ‍ - ஜூலை 83 திங்கட்கிழமை காலை, தமிழ் உட்டகவியலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு "தூய்மையாக்கப்பட்ட" 20 வீடுகளில் எனது வீடும் ஒன்று. அவற்றில் மூன்று வீடுகள் அரச பத்திரிக்கையான டெயிலி நியூஸில் வேலை பார்த்த தமிழர்களது. நான் அப்பத்திரிக்கையுன் துணை ஆசிரியர், கே நடராஜா என்பவர் விளம்பரங்களுக்கான ஆசிரியர், ப. பாலசிங்கம் அவர்கள் பிராந்திய ஆசிரியர். தினகரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன், வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவப்பிரகாசம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் ஆகியோரது வீடுகளும் அன்று காலை எரியூட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் கொழும்பின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தபோதும், அவை யாவுமே ஒரேநேரத்தில் எரிக்கப்பட்டன. காலை 11:30 முதல் மதியம் 12:30 வரையான ஒரு மணிநேரத்தில் இவை அனைத்தும் இலக்குவைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் மட்டுமல்லாமல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வியாபார உரிமையாளர்கள் ஆகிய தமிழர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தமிழர்களின் வியாபாரங்களை, அவர்களின் பொருளாதாரத்தை, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை இலக்குவைத்து நன்கு திட்டமிட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் நடத்துப்பட்டுவருவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். மொன்டேகு ஜயவிக்கிரம 2001 மேலும், இத்தாக்குதல்களை அரசாங்கத்தின் மிக உயர் பதவியில் உள்ளவர்களே திட்டமிட்டு நடத்துவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். திருநெல்வேலியில் சிங்கள ராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே சிங்கள மக்கள் தன்னிச்சையாக இத்தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என்ற அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களை தமிழர்கள் முற்றாகப் புறக்கணித்தார்கள். திருநெல்வேலித் தாக்குதலை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த, நன்கு ஒருங்கமைக்கப்பட்ட தமிழர் மீதான தாக்குதலுக்கான சாட்டாகப் பாவித்ததே அன்றி அதுவே காரணம் அல்ல என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழில்த்துறை அமைச்சராக கடமையாற்றிய மொன்டேகு ஜயவிக்கிரமவின் வீட்டிற்கு அயலில் வசித்துவந்தவர் எனது நண்பர். ஜயவிக்கிரம அந்த வார இறுதி முழுவதும் தனது மலையகத்து வாசஸ்த்தலத்தில் தங்கிவிட்டு திங்கட்கிழமை பிற்பகலே கொழும்பிற்குத் திரும்பியிருந்தார். தனது அயலில் இருந்த தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் உடனே செயலில் இறங்கினார். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களுடன் பேசிய ஜயவிக்கிரம, "ஜெயார் தனது வேட்டைநாய்களை தமிழர்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார், அவற்றினை இனிமேல் மீள அழைப்பது இயலாத காரியம்" என்று கூறினார். ஜயவர்த்தனவின் அமைச்சர்களும், அவர்களின் அடியாட்களும் கொழும்பு நகர் முழுவதிலும் தமது காடையர்களை வழிநடத்தி தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். தொழில்த்துறை அமைச்சர் சிறில் மத்தியூ தனது காடையர்களை கொழும்பு கோட்டைப்பகுதியில் அமைந்திருந்த தமிழர்களின் கடைகளைச் சூறையாடி எரிக்கும் நடவடிக்கைகளில் தலைமை தாங்கியிருந்தார். பிரேமதாசாவும் அவரது அடியாட்களும், கோட்டைப்பகுதி நடைபாதை வியாபாரிகளை அழைத்துக்கொண்டு வாழைத்தோட்டப் பகுதியில் இருந்த தமிழர்களின் வியாபார நிலையங்களையும், வீடுகளையும் எரித்துக்கொண்டு வந்தனர். கொழும்பு நகர மேயர் தனது மாநகர தொழிலாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபையின் அங்கத்தவர்களையும் அழைத்துக்கொண்டு மரதானைப் பகுதியிலிருந்த தமிழர்களின் சொத்துக்களை எரித்துக்கொண்டிருக்க, முஸ்லீமான போக்குவரத்து அமைச்சர் எம். எச். மொகம்மட் தனது அடியாட்களை பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மாவட்ட அமைச்சர் மல்லிமாராச்சி கொழும்பு வடக்கிலிருந்த தமிழர்களின் வீடுகளை எரிக்க, உதவியமைச்சர் அநுர பஸ்டியான் கொழும்பு தெற்கில் தமிழர்கள் மீது தாக்குதல்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். எமக்கு உதவியளிக்குமாறு நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவேளை மன்னாரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் எமது வீடு நோக்கி ஓடிவந்து எமதருகில் மயங்கிக் கீழே சரிந்தார். மயக்கம் தெளிந்து அவர் பேசும்போது, தானும், நண்பரும் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது வெறிபிடித்த சிங்களவர்களின் கூட்டம் ஒன்று தம்மைத் துரத்த ஆரம்பித்தது என்று கூறினார். "நாங்கள் ஓடத் தொடங்கினோம், ஆனால் எனது நண்பனை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நான் கட்டடம் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன். எனது நண்பரை இரும்புக் கம்பிகளால் அவர்கள் அவ்விடத்திலேயே அடித்துக் கொன்றார்கள். பின்னர் பழைய டயர் ஒன்றினை இழுத்துவந்து, அதன்மீது எனது நண்பனை தூக்கி எறிந்தார்கள். பெற்றோலினை நண்பன் மீது ஊற்றிப் பற்றவைத்தார்கள்" என்று அழுகையுடன் கூறினார். அவரால் அந்த கொடூரமான அனுபவத்தினை மறக்கமுடியவில்லை. பின்னாட்களில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதனை அறிந்துகொண்டேன். மறுநாள், செவ்வாய்க்கிழமை நாம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த இன்னொரு நண்பரான குமாரசாமியின் அனுபவம் வித்தியாசமானது. தெகிவளை, ரட்ணகார பிளேஸ் இல் அமைந்திருந்த அவரது வீட்டைச் சிங்களவர்கள் சூழ்ந்துகொண்டபோது அவர் தனது அறையிலேயே இருந்திருக்கிறார். அவரைப் பிடித்துக்கொண்ட சிங்களவர்கள் வீதிக்கு இழுத்துவந்து அங்கே இருக்குமாறு பணித்திருக்கிறார்கள். சிலர் அவரைத் தாக்கியபோது அருகிலிருந்த சிலர் அவரைத் தாக்கவேண்டாம் என்று மறித்திருக்கிறார்கள். குமாரசாமியை என்ன செய்வது என்பதுபற்றி அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஒருபகுதியினர் அவரை உயிருடன் தீயிட்டுக் கொழுத்திவிடலாம் என்று கூறினர். அதன்படி இரு சிங்கள இளைஞர்கள் அருகிலிருந்து பெற்றோல் நிலையத்திற்குச் செல்ல, மீதிச் சிங்களவர்கள் அவர் தப்பிவிடாதவாறு சுற்றிக் காவல் நின்றுகொண்டனர். அங்கே நின்ற ஒரு சிங்கள இளைஞன், குமாரசாமியின் முகத்தினருகில் குனிந்து, அவரின் காதில், "மடையா, ஏன் இப்படி குந்தியிருக்கிறாய்? எழும்பி ஓடு" என்று ரகசியாமக் கூறியிருக்கிறார். அந்தச் சிங்கள இளைஞன் கூறியதன்படியே குமாரசாமி எழுந்து ஓடத் தொடங்கினார். வீதியின் முகப்பில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவரிடம் அவர் அடைக்கலமாக, அவரோ குமாரசாமியை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். மறுநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். வீதியில் செல்லும் வாகனங்களை மறித்துத் தமிழர்களைத் தேடும் சிங்களக் காடையர்கள் ‍- தமிழினக்கொலை ஜூலை 83
  4. ஜெயார் தமிழருக்குக் கொடுத்த இறுதித் தீர்வு - ‍ தொடரும் இனக்கொலை ஜூலை 83 தமக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் காப்பற்ற நினைத்த சிங்கள இனவாதிகள் ஜனாதிபதி ஜெயவர்த்தன மற்றும் முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் ஆகியோர் தமக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வன்முறைகள் ஆரம்பிக்கும் முன்னரே எடுத்திருந்தனர். தனது மகன் ரவியின் முதல்த்தாரமும் தமிழருமான சார்மெயின் வன்டர்க்கோன் மற்றும் அவரது மகள், தாயார் ஆகியோரைப் பாதுகாப்பாக தனது செயலகத்திற்கு அழைத்துவர ஆயுதம் தாங்கிய ராணுவப் பிரிவொன்றினை அனுப்பிவைத்தார் ஜெயார். தமிழரான சார்மெயின் சிங்களக் காடையர்களால் தாக்கப்படக் கூடும் என்று ஜெயார் கருதினார். தான் கொல்லப்படுவதற்கு முன்னர் சிங்களக் காடையர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழர் ஒருவர் ‍ - தமிழ் இனக்கொலை ஆடி 1983 சிங்களக் காடையர்களால் முன்னாள் அமைச்சர் குமாராசூரியர் அவஸ்த்தைக்குள்ளாகியுள்ளார் என்று கேள்விப்பட்டபோது அவரைப் பாதுகாப்பாக அழைத்துவர ராணுவ ஜீப் வண்டியொன்றினை ஜெயார் அனுப்பிவைத்தார். குமாராசூரியரை வீட்டிற்கு வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள், அவரது கைகளைக் கட்டி அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையம் வரை இழுத்துச் சென்று கொல்வதற்கு முயற்சித்ததை தாம் கண்ணுற்றதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். அவரைக் கொல்வதற்கு வாட்களை வெளியே சிங்களவர்கள் எடுத்துக்கொண்டிருக்க அவ்விடத்திற்கு வந்த ஜெயார் அனுப்பிய ராணுவத்தினர் அவரை மீட்டிருக்கின்றனர். http://www.oferrceylon.com/wp-content/uploads/2017/01/chief.jpg செல்வாவின் மகனும், பின்னாட்களில் இந்தியாவின் முகவராகவும் மாறிய சந்திரஹாசன் காலஞ்சென்ற தந்த செல்வாவின் மகனான சந்திரகாசனையும் அவரது தாயாரையும் காப்பற்ற காமிணி திசாநாயக்கா தனது பாதுகாப்புப் பிரிவினை அனுப்பியிருந்தார். சட்டக்கல்லூரிக் காலத்திலிருந்து காமிணியும் சந்திரகாசனும் நண்பர்களாக இருந்தவர்கள். தொண்டைமான் என்னுடன் பேசும்போது, தனது பேத்தியை பாதுகாப்பாகக் கூட்டிவர பிரேமதாசா தனது குண்டர்படையினர் சிலரை அனுப்பி காடையர்களிடமிருந்து அச்சிறுமியை மீட்டுவந்ததாகக் கூறினார். வணிக மற்றும் கப்பற்றுரை அமைச்சரான லலித் அதுலத் முதலியை இனக்கொலை நடைபெற்று சுமார் 10 நாட்களின் பின்னர் அவரது அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. "நான் வன்டேர்வட் பிளேசில் இருந்த எனது நண்பர்கள் சிலரைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அன்று ஈடுபட்டிருந்தேன், என்னிடம் நீங்கள் கேட்டிருந்தால் உங்களது வீட்டையும் என்னால் காப்பாற்றியிருக்க முடியும்" என்று அவர் என்னைப்பார்த்துக் கூறினார். அந்தவேளையில் நான் வேறு அமைச்சர்களுடன் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். எனது வீடு எரிந்துகொண்டிருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தே இருந்தது, எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் எனது இரு மகன்களையும் காப்பற்றிக்கொள்வதுதான். எனது வீட்டைப்பற்றி எனக்குக் கவலை இருந்தது. நிச்சயம் எனது வீடு தாக்கப்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டு, வீடும் எரிக்கப்படும் என்று நான் ஊகித்திருந்தேன். நான் காலை 11:30 மணியளவில் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தபோது தொலைபேசி வேலை செய்தது. அரைமணித்தியாலம் சென்றபின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயற்சித்தேன், இம்முறை தொலைபேசி மெளனமாகக் கிடந்தது. எனது அயலவரான சோமதாசவுடன் தொலைபேசியூடாகப் பேசினேன். எனது வீடு எரிந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். மறுமுனையில் அவர் விசும்புவது எனக்குக் கேட்டது. "எமது பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளைப் பாதுகாக்க‌ நாம் முயன்றோம், ஆனால் எம்மால் அது முடியாமற் போய்விட்டது" என்று சில வாரங்களுக்குப் பின்னர் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் கூறினார். "தமிழர்களின் வீடுகளைத் தேடி ஒரு கூட்டமொன்று எமது பகுதிக்குள் நுழைந்தது. நாம் இங்கு தமிழர்கள் எவரும் இல்லையென்று கூறவே அக்கூட்டம் சென்று விட்டது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின்னர் அதே கூட்டம் தெகிவளைப் பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிங்களப் பொலீஸ் அதிகாரி ஒருவருடன் மீண்டும் எமது பகுதிக்குள் நுழைந்தார்கள். கையில் வக்காளர் அட்டையினை வைத்திருந்த பொலீஸ் அதிகாரி, "தமிழர்களைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேவலமாகத் திட்டிக்கொண்டே உங்கள் வீட்டிற்கு காடையர்களை அழைத்துக்கொண்டு போனார்" என்று கூறினார். 1983 இனக்கொலையில் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட தமிழரின் வீடு ஒன்று எனது அயலவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள அனைவரையும் நாம் அடித்துக் கலைக்கவேண்டும், அவர்கள் இங்கே வாழக்கூடாது என்று அந்தப் பொலீஸ் அதிகாரி எம்மைப் பார்த்துக் கத்தினார். எமது வீதியில் (பி டி டி சில்வா மாவத்தை, தெகிவளை) இருந்த மூன்று தமிழர்களின் வீடுகளைக் கொழுத்திவிட்டு வெளியே வந்த அந்தப் பொலீஸ் அதிகாரி தன்னுடன் வந்த சிங்களவர்களைப் பார்த்து, "அப்பி சுத்த கரா" ( நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்) என்று சிங்களத்தில் கோஷமிட்டார்" என்று கூறினார். அதாவது அப்பகுதியை தமிழர் எனும் கிருமிகளிடமிருந்து தூய்மைப்படுத்தி விட்டோம் என்பதே பொருள். எனது வீடு மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததாக அயலவர் கூறினார். எமக்கு ஒவ்வொருநாளும் மீன் வழங்கும் மீனவரான சைமன் எமது வீட்டினை எரித்த சிங்களக் காடையர் குழுவில் தானும் இருந்ததாகக் கூறினார். "அவர்கள் முதலில் உங்களின் வீட்டுக்கதவை உடைத்துத் திறந்தார்கள். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள் விருந்தினர் தங்கும் அறையில் இருந்த ஷோகேஸ் (காட்சிப்படுத்தும் அலுமாரி) இனை அடித்து நொறுக்கினார்கள். வீட்டினுள் இருந்த உங்களின் புத்தகங்களை வெளியே எடுத்துவந்து இருக்கைகளில் பரப்பினார்கள். பின்னர் புத்தகங்கள் மீது கொண்டுவந்த பெற்றொலினை ஊற்றினார்கள்" என்று கூறினார். சைமன் மேலும் கூறும்போது, "கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பொலீஸ் அதிகாரி கூட்டத்தைப் பார்த்து, "உங்களுக்குத் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறவும் வெறும் 10 நிமிடத்தில் அங்கிருந்தவற்றை அவர்கள் சூறையாடினார்கள். பின்னர் உங்கள் வீட்டிற்கு அவர்கள் நெருப்பு மூட்டினார்கள்" என்று கூறினார். எனது காட்சிப்படுத்தும் அலுமாரியில் நூதணப் பொருட்கள் எவற்றையும் நான் வைத்திருந்ததில்லை. அகராதிகள், சொற்களஞ்சியங்கள் போன்றவையே அதில் அடுக்கப்பட்டிருந்தன. 1957 இல் நான் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தபோது இலங்கை சமூக கலாசார மாற்றம் ஒன்றிற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தொடர்பாடல் மொழியாக அதுவரை இருந்துவந்த ஆங்கில மொழியினை சிங்களமும், தமிழ் மொழியும் பிரதியீடு செய்துவந்தன. இதனாலேயே அகராதிகள், சொற்களஞ்சியங்கள் ஆகியவற்றின் தேவை அந்நாட்களில் அதிகமாகக் காணப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எனக்கிருந்த புலமை காரணமாக கல்வியமைச்சினூடாக வெளியிடப்பட்டு வந்த அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பல்கலைக்கழக நூட்களை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்துவந்தேன். 1961 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான எனது மனைவிய மணந்துகொண்டதன் பின்னர் பாடசாலைப் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். எமது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பெருமளவு ஆங்கிலம் ‍- தமிழ் அகராதிகளை, சொற்களஞ்சியங்களை நாம் வாங்கிச் சேகரித்து வந்தோம். நாம் காலம் காலமாகச் சேகரித்து வைத்திருந்த தடித்த அட்டையிலான அகராதிகள் சிங்களக் காடையர்கள் தமது நாசகார வேலையினைச் செய்ய வரப்பிரசாதமாக அமைந்தன. ஆகவேதான் தொடர்ந்து இருநாட்களாக எரிந்த வீட்டிலிருந்து அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. எனது வீட்டிற்கு வெளிப்புறமாக எனது படிக்கும் அறையினை நான் அமைத்திருந்தேன். அதற்குள் நான் சேகரித்து வந்த அரசியல் புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய பத்திரிக்கைச் செய்திகள், நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்க்கள், பெறுமதியான நூட்கள் என்று பல சேமிக்கப்பட்டிருந்தன. அங்கும் சென்ற சிங்களவர்கள் அவற்றின் மீது பெற்றோலினை ஊற்றி பற்றவைத்திருந்தனர். எனது புத்தகங்களில் எவையுமே மிஞ்சியிருக்கவில்லை.
  5. மாப்பிசைந்த கைக்கு விலங்கு நிச்சயம் 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.