Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    5818
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8907
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19102
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87986
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/19/23 in all areas

  1. கருத்துப் படங்களை ரசித்து ஊக்கப் படுத்திய.... சுவியர், ஈழப்பிரியன், நிலாமதி அக்கா ஆகியோருக்கு மிக்க நன்றி. 🙏 உங்களது ஆர்வம்.... என்னை மிகவும் உற்சாகப் படுத்தியது. அதற்காகத் தன்னும், தொடர்ந்தும் கருத்துப் படங்களை இணைப்பேன். 🙂
  2. இலங்கை கிரிக்கெட் சிங்கம் XI · பொண்டாட்டி நான் இரவு சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்திருவன்.... sorry சின்ன திருத்தம் Evening Tea வைங்க வரதான் வீட்டுக்கு Sri Lanka Cricket Asia Cup 2023 Finalsite....!
  3. தொடருங்கள் சிறியர்........பத்து பக்கங்கள் எழுதுவதைவிட இரு சிறு கருத்துப் படம் நிறைய சிந்திக்க வைக்கின்றது........! 👍
  4. இலங்கையை ஆக்கிரமிக்க இந்திரா காந்தி விரும்பாதது ஏன்? இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் மென்மையான போக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து வருவதை இந்திரா உணரத் தலைப்பட்டார். ஆகவே வேறு வழியின்றி ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்க எண்ணிய அவர் ஆவணி 17 ஆம் திகதி மீண்டும் அவரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். ஜெயாருடன் பேசும்போது இந்தியா ராணுவ ரீதியில் இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருவதாகக் கூறினார். ஆகவே, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஜெயாரிடம் கூறினார் இந்திரா. இதற்காக தனது பிரத்தியேக ஆலோசகரான பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் உதவுவார் என்றும் தெரிவித்தார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தபோது இலங்கையில் இருந்த இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்குச் செவ்வியொன்றினை வழங்கிக்கொண்டிருந்தார் ஜெயார். இந்திரா பார்த்தசாரதியின் பெயரைப் பரிந்துரைத்தபோது தன்னைப் பேட்டி கண்டுகொண்டிருந்த இந்தியப் பத்திரிக்கையாளரைப் பார்த்து, "யார் இந்தப் பார்த்தசாரதி?" என்று ஜெயார் கேட்டார். அவர் 73 வயதுடைய, பிரதமருக்கு வெளிவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக இருப்பவர் என்றும், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்றும், சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலப் பத்திரிக்கையான ஹிந்து குழுமத்தின் குடும்ப உறுப்பினர் என்றும் பதில் வந்தது. மறுநாள் , ஆவணி 18 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா, "நேற்று, நான் மீண்டும் இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எனது தூதுவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அனுப்புவதாக அவரிடம் கூறினேன். எனது கோரிக்கைகளை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். அதன்படி, எமது மூத்த இராஜதந்திரியான சிறி ஜி.பார்த்தசாரதி அவர்களை முக்கியமானதும், சிக்கலானதுமான இந்த நடவடிக்கைக்காக வருகிற வாரம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளேன்" என்று கூறினார். கோபாலசாமி பார்த்தசாரதி தற்போது எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வங்கதேசப் பிரச்சினையின்போது தனது இராணுவத்தை அனுப்பி அம்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த இந்திராவை, இலங்கையில் தனது இராணுவத்தை அனுப்பமுடியாமல்த் தடுத்தது எது? என்பதுதான். தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்த வங்கதேசப் பிணக்கில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. வங்கதேசத்தை விடுவித்ததன் மூலம் ஏக காலத்தில் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரக்கூடிய இராணுவ தாக்குதல்களை கிழக்கில் நிரந்தரமாகவே தடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பம் இந்தியவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆகவேதான் இந்தியா கிழக்கு பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து வங்கதேசத்தை உருவாக்க உதவியது. ஆனால், இலங்கையினை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புப் பலவீனப்படும் நிலை இருந்தது. ஆகவேதான், இந்திரா அதனை எப்படியாவது தவிர்க்க முடிவெடுத்தார். இந்திராவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் விளக்கத்தினை அவருக்கு வழங்கியிருந்தார்கள், "நீங்கள் இலங்கையில் ஈழம் எனும் தனிநாட்டை உருவாக்க உதவினீர்கள் என்றால், இலங்கையில் இரு நாடுகளான சிறிலங்காவும், ஈழமும் இருக்கும். ஈழம் எனும் தமிழ்ப் பிரதேசம் இந்தியாவுக்கு நட்பாக இருந்தாலும், சிறிலங்கா எனும் நாடு இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடும். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகள் சிறிலங்காவைத் தமது தளமாகப் பாவிப்பதற்கு அது கதவுகளைத் திறந்துவிடும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுருத்தலாக மாறும். இலங்கையில் இந்தியாவுக்கெதிரான நாடுகள் களம் அமைப்பதனைத் தடுக்கவேண்டுமென்றால், இலங்கை ஒருநாடாக இருப்பதிலேயே அது தங்கியிருக்கிறது. ஆகவே, இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம்" என்று அவர்கள் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து இந்திரா அரசியல் விவகார ஆணைக்குழு, அரசியல்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தனது ஆலோசகர்கள் வழங்கிய அறிவுருத்தல்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் இவற்றின் மூலமான முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளரான கலாநிதி பாபனி சென் குப்தா கூறுகையில் "இவையே இந்திராவின் போதனைகள் அல்லது பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த இந்திராவின் போதனைகள்" என்று நாளடைவில் அழைக்கப்படலாயின என்று கூறுகிறார். குப்தா மேலும் கூறுகையில், தென்னாசியாவின் நாடொன்றில் இடம்பெறும் உள்நாட்டு விவாகரங்கள் எதிலும் தலையிடுவதில்லை எனும் கொள்கையினையே இந்தியா கொண்டிருக்கிறது. மேலும், வேறு நாடுகளும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவின் நலன்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலாவது வெளிநாடொன்று தலையிடுமாக இருந்தால் இந்தியா அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் சென்று இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் வெளிநாடொன்றில் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தியா சகித்துக்கொள்ளாது. ஆனால், தென்னாசியாவில் உள்ள எந்தவொரு நாடாவது உள்நாட்டில் நடக்கும் தீவிரமான பிணக்கொன்றினைத் தீர்ப்பதற்காகவோ அல்லது மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சவால்விடும் வகையிலான கிளர்ச்சியை அடக்கவோ தன்னைச் சுற்றியிருக்கும் தென்னாசிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக இந்தியாவிடமிருந்து உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசாங்கம்,இந்தியாவைத் தவிர்த்து பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடம் உதவியினைக் கோருவது இந்தியாவிற்கு எதிரான, அதன் நலன்களுக்குப் பாதகத்தினை விளைவிக்கும் செயற்பாடுகளாக இந்தியாவினால் கருதப்படும். இந்தியா இலங்கை விவகாரத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடாமைக்கான காரணம், அப்பிராந்தியத்தில் இலங்கை இராணுவ உதவிகோரிய நாடுகள், இலங்கையில் தலையிடக்கூடாதென்றும், தானும் தலையிடப்போவதில்லையென்றும் கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையினை மீறி எவராவது தலையிட்டால் இந்தியா அதனைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் மிரட்டியிருந்தது. ஆகவேதான், பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண உதவிகளைத்தவிர வேறு எதனையும் தமிழர்களுக்குச் செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் (1990) கொழும்பில் நடைபெற்ற வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான கருத்தரங்கில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ஜெயவர்த்தன‌ அரசாங்கத்தின் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளை எதிர்கட்சித் தலைவரான அநுர பண்டாரநாயக்க கடுமையாக விமர்சித்திருந்தார். "நீங்கள் ஆயுதங்களைக் கேட்டீர்கள், ஆனால் எதனையுமே உங்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று அவர் கூறினார். இடைமறித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ஆம், நாங்கள் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா எமது முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டு முறியடித்துவிட்டது. நாம் ஆயுதங்களைக் கேட்ட நாடுகளைத் தொடர்புகொண்ட இந்தியா, "நாம் இலங்கையை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஆகவே நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை" என்று கூறியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றோம், ஆனால் இந்தியா எம்மை ஆக்கிரமிக்கப்போவதில்லையென்று எமக்கு தெரிந்ததன் பின்னர் அந்த நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லாமல்ப் போய்விட்டது" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் ஜூலை இனக்கலவரங்களே தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும், இலங்கையின் சரித்திரத்திலும் முக்கிய திருப்பங்களாக இருந்தன. அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் 17 நாட்களும் எதிர்காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தின் அளவைத் தீர்மானித்தன என்று கூற முடியும். இந்தச் சுதந்திரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இந்திராவின் போதனைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வாக இந்தியா முன்னெடுத்த செயற்பாடுகளாலும் தீர்மானிக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.
  5. ஈழத்தமிழரின் அவலங்களை தன‌து அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த நினைத்த கருநாநிதி இந்திய சுதந்திரதின விழாவில் இந்திரா ஆற்றிய உரையும், அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கெளரவமும் ஜெயாரைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. ஆகவே, தனது அரச ஊடகங்களை இந்திராவிற்கெதிராகவும், இந்தியாவுக்கெதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்குமாறு பணித்தார். ஜெயாரின் ஆணைப்படி அரச ஊடகங்கள் இந்திராவின் நம்பகத்தன்மையினையும் அவரது பக்கச்சார்பின்மையினையும் வெகுவாகக் கேள்விகேட்டு விமர்சித்திருந்தன. இந்தியாவைச் சண்டியர் என்று விளித்த இந்த ஊடகங்கள் சிறிய நாடான இலங்கையின் கைகளை மடக்கி வைக்கப் பார்ப்பதாக குற்றம் சுமத்தின. அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையினையும், இந்திரா காந்தியின் காட்டமான உரையினையும் அவை வெகுவாக விமர்சித்தன. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க விரும்பியது. தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், "இந்திரா காந்தியுடனான பேச்சுக்களின் பின்னர் நிலைமை மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நல்லெண்ண உதவிகளின்மூலம் அடிப்படை மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் கருத்து வெளியிட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமிர்தலிங்கம் கூறினார். அரசாங்கமானது தனிநாட்டிற்கு நிகரான சாத்தியப்படக்கூடிய மாற்றுத்தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டு அதனைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். காத்திரமான மாற்றுத்தீர்வொன்றினை அரசு முன்வைக்கும் பட்சத்தில், தாம் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை அதற்கு இணங்கவைக்கப்போவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்தீர்வு எப்படி இருக்குமென்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், அது சமஷ்ட்டி அடிப்படையிலான , தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்று கருத்து வெளியிட்டார். அப்படியான மாற்றுத்தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் ஒரு தரப்பாக தீர்வுவிடயத்தில் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். நல்லிணக்க உதவிகளைச் செய்யும் நிலையிலிருந்து செயற்றிறன் கொண்ட மூன்றாவது தரப்பாக இந்தியா தன்னை முன்னகர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு உதாரணமாக சர்வதேச பிணக்குகளளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அளிக்கும் பங்கிற்கு நிகராக தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இலக்கு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் ஜெயார் முற்றாக நிராகரித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ஜெயார், இந்தியா அடக்கி வாசிப்பதே இப்போதைக்குத் தேவையானது என்று கூறினார். தேவைப்பட்டால் நாம் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினை நாடுவோம், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் கூறினார். தில்லியிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கத்தை உணவெழுச்சியினால் உந்தப்பட்ட தமிழ்நாடு வரவேற்றது. "ஈழத்திற்கான யாத்திரை" எனும் பெயரில் நெடுமாறனினால் ஆவணி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட‌ பேரணி தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும், 8 நாட்களாக, 1700 கிலோமீட்டர்கள் தூரம் நடைபவணியாக வந்த 5,000 ஈழ ஆதரவாளர்களின் முயற்சியினால் மொத்தத் தமிழ்நாடுமே உணர்வுகொண்டு எழுந்து நின்றது. ஈழத்தில் பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக உணர்வுடன் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தினர். பிரபாகரனை நேசித்த மக்களைக் கொண்டவையும், அவர் சிறிதுகாலம் வாழ அடைக்கலம் கொடுத்தவையுமான‌ இரு பழமை மிக்க நகரங்களான மதுரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலேயே இந்தப்பேரணி நடைபெற்றிருந்தது. பிரபாகரனுடன் நெடுமாறன் ‍ 80 களின் இறுதிப்பகுதியில் ஒரு தொகை மீன்பிடிப் படகுகள் மூலம் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்வதே நெடுமாறனின் நோக்கமாக இருந்தது. கொழும்பும், தில்லியும் நெடுமாறனின் இந்த முயற்சியினால் கடுமையான நெருக்கடியச் சந்தித்தன. தனது சிறிய கடற்படையை உசார்ப்படுத்திய ஜெயார், பாக்கு நீரிணையைக் கடக்கும் படகுகள் அனைத்தையும் தடுத்துவிடும்படி ஆணையிட்டார். இது தேவையற்ற மோதலை உருவாக்கிவிடும் என்று அஞ்சிய தில்லி, நெடுமாறனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. எம் ஜி ஆருடன் பேசிய இந்திரா காந்தி, நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதை நிறுத்தும்படி கோரினார். நெடுமாறனுக்கு மீன்பிடிப் படகுகளை வழங்குவதைத் தடுத்ததன் மூலம் அவரின் முயற்சியை முறியடித்தார் எம்.ஜி.ஆர். தனது காவல்த்துறையைக் கொண்டு தமிழ்நாட்டின் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை அகற்றினார். இந்தியாவின் சுதந்திர தினமான ஆவணி 15 ஆம் திகதி இராமேஸ்வரத்தின் கரையை வந்தடைந்த நெடுமாறனின் பேரணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாண செல்வதற்கென்று இரு ஓட்டை விழுந்த‌ படகுகள் மட்டுமே அக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றில் ஏறிக்கொண்ட நெடுமாறன், அதன் உரிமையாளரைப் பார்த்து படகினை யாழ்ப்பாணம் நோக்கிச் செலுத்துமாறு கோரினார். நெடுமாறனின் கோரிக்கயினை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட அந்த உரிமையாளரினால் கடலில் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. படகின் அரைப்பகுதிக்கு நீர் நிரம்பிவிட, வேறு வழியின்றி படகு மீண்டும் கரையை வந்தடைந்தது. தனது முயற்சியைத் தடுத்து நிறுத்தியது எம்.ஜி.ஆர் என்பதை நெடுமாறன் உடனடியாக உணர்ந்துகொண்டார். ஆத்திரம் மேலிட, "எம்.ஜி.ஆரே இதனைச் செய்ததது. என்னைக் கைது செய்யுங்கள், கைதுசெய்யுங்கள்" என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார் நெடுமாறன். கருநாநிதியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தமிழ்நாட்டில் பெருகிவந்த ஈழ ஆதரவு சூழ்நிலையினை தமக்குச் சார்பாகப் பாவிக்க எண்ணினர். ஆகவே, தமிழ்நாட்டுச் சட்டசபையில் தாம் வகித்த பதவிகளைத் திறந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கப்போவதாகக் கூறினர். ஆனால், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரினதும் இராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆனால், சட்டசபை அமர்வுகளை புறக்கணித்து வந்த இவர்கள் இருவரும், இந்திய மத்திய அரசு வங்கதேசப் பிரச்சினையில் வங்காளிகளுக்குச் சார்பாக நடந்துகொண்ட போதும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு தனிநாடு காண உதவவில்லை என்று குற்றஞ்சாட்டினர். தமிழர் பிரச்சினை தொடர்பாக தில்லிக்குப் போதிய அழுத்தத்தினைக் கொடுக்கவில்ல என்று எம்.ஜி.ஆரையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தி.மு.க வுக்குச் சார்பான பத்திரிக்கைகள், எம்.ஜி. ஆர் ஒரு மலையாளி என்பதாலும், இலங்கையின் கண்டியில் பிறந்ததாலும் அவர் ஈழத்தமிழருக்கு அனுதாபம் காட்டவில்லை என்று எழுதியிருந்தன. தன்மீதான விமர்சனத்தினால் ஆத்திரப்பட்ட எம்.ஜி.ஆர் சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி தில்லிக்கு அழுத்தம் கொடுக்க எண்ணினார். தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தில்லி தலையிடவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியது. அமிர்தலிங்கம் ஆவணி 16 ஆம் திகதி சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்தார். பின்னர் கருநாநிதியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், தன்னைச் சந்திக்கும் முன்னர் எம்.ஜி.ஆரை அமிர்தலிங்கம் சென்று சந்தித்தமை கருநாநிதிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டபோது, தான் திருச்சியில் மூன்றுநாட்கள் தங்கியிருப்பதால், தன்னால் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். ஆகவே, திருச்சிக்குச் சென்ற அமிர்தலிங்கம் கருநாநிதியைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்தினார்.
  6. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்க விரும்பிய இந்திரா ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜெயவர்த்தனவின் விஜயத்தின் பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவாகியது. இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட‌ இந்திய அதிகாரிகள், "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" தமிழருக்கான தீர்வொன்றையே பிரதமர் இந்திரா கோருவதாக குறிப்பிடச் சொன்னார்கள். சுதாரித்துக்கொண்ட இலங்கையதிகாரிகள், "ஒன்றுபட்ட" இலங்கை எனும் பதத்தினை நிராகரித்து "ஓற்றை நாடான" எனும் பதத்தினை பாவிக்கக் கோரினர். நிலைமை சிக்கலடைவதை அவதானித்த இலங்கைக் குழுவின் தலைவர் ஹெக்டர், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை அடக்கி வாசியுங்கள், இந்திராவின் வாயால் நாம் விரும்பாத சொற்களை வரப்பண்ணாதீர்கள் என்று கட்டுப்படுத்தினார். இந்திரா தனது எண்ணத்தை கூறும் அதிகாரத்தை நாம் கேள்விகேட்கக் கூடாது என்று கூறினார் அவர். இதனை ஜெயாரின் ஆலோசகரான பேர்ணாட் திலகரட்ணவும் ஆதரித்தார். அன்று மாலை இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திரா உரையாற்றினார். ஜெயாரின் விசேட பிரதிநிதி ஹெக்டர் இந்தியா வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவருடனான பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் சம்பவங்கள் குறித்த இந்திய மக்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கரிசணை குறித்து தான் தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை ஆராய ஜெயவர்த்தன ஆடி மாதத்தில் கூட்டவிருந்த சர்வகட்சி மாநாடு குறித்தும் பேசிய இந்திரா, அம்மாநாடு நடவாது போனமை குறித்தும் குறிப்பிட்டார். "அவர்கள் என்னிடம் முன்வைத்த தீர்வுக்கான யோசனைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய இலங்கை ஆயத்தமாக இருப்பதாக என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார். இந்திரா காந்தி "பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களும் அரசாங்கம் சுமூகமான தீர்வுகுறித்துக் கலந்துரையாட முன்வரவேண்டும் என்று நான் எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளிப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யக் காத்திருப்பதாகவும் அவர்களிடம் கூறினேன். இரு நாடுகளுக்கும் இருக்கும் பாரம்பரிய உறவு முறையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செய்ய விரும்பு உதவிகள் குறித்த நன்றியை இலங்கை ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருக்கிறார். எமது உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்" என்றும் தெரிவித்தார் ஆவணி 12 ஆம் திகதி லோக்சபாவில் இந்திரா வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையினைத் தெளிவாகக் காட்டியிருந்தது. இந்திராவின் அறிக்கயில் குறிப்பிடப்பட்டிருந்த அடிப்படை இலக்கணங்கள் இவ்வாறு இருந்தன, 1. பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழருக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். 2. வழங்கப்படும் தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துபவையாக இருக்க வேண்டும். மேலும், வெளி மத்தியஸ்த்தத்தின் உதவியினூடாகவே தீர்வு எட்டப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வு காணப்படல் வேண்டும் என்றே இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஜெயார் அனுப்பிய பிரதிநிதி இலங்கை மீண்டபோது பல அமைச்சர்கள் இந்திராவினால் பாவிக்கப்பட்ட "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்திற்கெதிரான தமது கடுமையான ஆட்சேபணையினை வெளியிட்டார்கள். குறைந்தது "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்தினைப் பாவிக்கும்போது இலங்கையின் கரிசணைகளையாவது அறிக்கையினுள் உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், தனது முடிவில் தீர்க்கமாக நின்ற ஹெக்டர், இந்தியாவின் கொள்கைகளை அவர்கள்தான் முடிவெடுக்கமுடியும், இலங்கையர்கள் அல்ல என்று கூறிவிட்டார். தமிழர் மீதான அரச ஆதரவுடனான தாக்குதல் முடுக்கிவிடப்பட்ட நாளான ஆடி 25 ஆம் திகதி அமிர்தலிங்கமும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவில் நின்றிருந்தார்கள். மன்னாரில் நடைபெற்ற தமது வருடாந்த மாநாட்டில் இலங்கையரசுடன் பேரம்பேசலில் ஈடுபடுவது இல்லை என்று முடிவெடுத்தார்கள். வவுனியாவில் இருக்கும்போது ஆவணி 29 ஆம் திகதி இந்திராவிடமிருந்து அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்று வந்திருந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்பதே இந்திராவிடமிருந்து வந்த அந்தச் செய்தி. ஆனால், அமிர்தலிங்கத்தால் வவுனியாவை விட்டு வெளியேற முடியவில்லை. வழியில் சிங்களவர்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டால் அவர் கொல்லப்படுவது உறுதி எனும் நிலைமை காணப்பட்டது. ஆகவே, இந்தியத் தூதர் சத்வால் ஊடாக தான் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கம் மட்டுமல்லாமல் அவருடன் சிவசிதம்பரமும், சம்பந்தனும் கூடவே தில்லிக்குப் பயணமாவதற்கான ஏற்பாடுகளை சத்வால் செய்துகொடுத்தார். ஆவணி 6 ஆம் திகதி வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறாவது திருத்ததினூடான இலங்கைக்குள் தனியான நாடொன்றினை உருவாக்க முயலமாட்டோம் என்கிற சத்தியப்பிரமாணத்தை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தனர். ஆனால், அரச அதிகாரிகளான தமிழர்கள் இச்சத்தியப்பிரமாணம் குறித்து தமது விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டனர். இந்த விடயம் புலிகளின் உயர்பீடத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்று பிரபாகரன் கருதினார். இச்சத்தியப்பிரமாணம் எந்த அர்த்தமும் கொண்டிருப்பதாக அவர் நினைக்கவில்லை. புதிய அரசியலமைப்பின் மேல் சத்தியப்பிரமாணம் செய்யும் தமிழ் அதிகாரிகள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதை எதுவும் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இச்சத்தியப்பிரமாணத்தை ஒரு பிரச்சினையாக்குவதன் மூலம் அரச அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்கனவே முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இன்னொரு பிரச்சினையாக இதனை உருவாக்க வேண்டாம் என்று அவர் கூறினார். தெற்கில் பணிபுரிந்துவந்திருந்த பல தமிழ் அதிகாரிகள் கலவரத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. "எமது முடிவுகள் மூலம் அவர்களை வீதியில் நாம் எறிந்துவிடக் கூடாது" என்று அவர் உறுதியாகக் கூறினார். கந்தசாமி பத்மநாபா ஆனால், பத்மாநாபாவின் அமைப்பான ஈ.பி.ஆர்.எல் எப் வித்தியாசமான நிலைப்பாட்டினை எடுத்தது. சிங்கள அதிகாரத்துக்கெதிரான தமிழரின் நிலைப்பாட்டை அடையாள வழியிலாவது தமிழர்கள் காட்டவேண்டும் என்று பத்மநாபா கூறினார். அரசின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்மேல் சத்தியப்பிரமாணம் செய்து பதவியை நீடிக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று அவர் வாதிட்டார். ஈரோஸ் மற்றும் புளொட் அமைப்புக்கள் இதுகுறித்து எந்த முடிவினையும் எடுக்க மறுத்துவிட்டன. இவ்வமைப்புக்களின் தலைவர்கள் அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர். பத்மநாபாவின் முடிவினை ரமேஷ் தலைமையில் சிறிய போராளிக் குழுவொன்று நடைமுறைப்படுத்தியது. இந்தக் குழுவில் இருந்த ஏனையவர்களின் பெயர்கள், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன் மற்றும் இளங்கோ. அரச அலுவலகங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள். ஒரு பொலீஸ் ஜீப் உடபட சில அரச வாகனங்களை அவர்கள் எரியூட்டினார்கள். ஆனால், ஈ.பி.ஆர். எல். எப் இன் அரசுக்கெதிரான இந்தச் செயற்பாடுகள் எந்த விளைவினையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தமது பணிகளைத் தக்கவைப்பதே முக்கிய கரிசணையாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனமும் தமது ஊழியர்களை ஆறாவது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்கும்படி கேட்டிருந்தது. எனது படிவத்தில் கையொப்பமிட்டு எனது ஆசிரியரிடம் கையளித்தேன். கையொப்பமிட்ட எவருமே அதன்பின்னர் இந்த சத்தியப்பிரமாணம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மிகக்கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அமிர்தலிங்கம் கொழும்பை வந்தடைந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்தே அவர் கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பில், இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அவர் பொறுப்பெடுக்கப்பட்டார். ஆவணி 11 ஆம் திகதி அவர் சென்னைக்குப் பயணமானார். அமிர்தலிங்கத்தை வரவேற்கவென தில்லியிலிருந்து வந்திருந்த இந்திய உள்நாட்டு விவகார அமைச்சர் பி.வெங்கடசுப்பையா மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே. எஸ். பாஜ்பாய் ஆகியோர் சென்னையில் அமிரைச் சந்தித்தனர். எதிர்க்கட்சியான ஜனதாக் கட்சியின் இரா செழியனும் அங்கு இருந்தார். சென்னையில் அன்றிரவு தங்கிய அமிர்தலிங்கம் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனையும் தி.மு.க வின் தலைவர் மு கருநாநிதியையும் சென்று சந்தித்தார். மறுநாளான ஆவணி 12 ஆம் திகதி சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் கிளம்பிச் சென்றார். ஹைதரபாத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவும் அமிருடன் பயணத்தில் இணைந்துகொண்டார். விமானத்தில் பயணித்தவாறே அமிரும் நரசிம்மராவும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். தில்லியில் விமான நிலைய கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நரசிம்மராவோ, அமிரை அங்கே அழைத்துச் சென்றார். கூடிநின்ற பத்திரிகையாளர் முன்னிலையில் அமிர் பேசினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.