Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10720
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19139
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46797
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/26/23 in Posts

  1. காந்திக்கு பாடம் எடுத்ததால்… அவன் எங்கள் தகப்பன் சுவாமி… இந்தியாவின் அகிம்சா முகத்தை சூரசம்ஹாரம் செய்ததால் ….. அவன் எங்கள் முருகன்….. உடலை தானமாக கொடுத்ததால்… அவன் எங்கள் கர்ணன்….. தண்ணீரும் இன்றி பன்னிரு நாட்கள் படுக்கை எனும் சிலுவையில் தொங்கியாதால்…… அவன் எங்கள் யேசு பிரான்….. ஒரு பாரதம் பார்தீபனின் வில்லாண்மை பற்றிப் பாடியது…. இன்னொரு பாரதம் எங்கள் பார்தீபனின் செயலாண்மை முன் விக்கித்து நின்றது…. ஊரெழுவில் பிறந்தவன்…. அவன் போகும் போது ஊரெழுந்து மரியாதை செய்தது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். வீர வணக்கம்.
  2. யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமும் தடுத்து நிறுத்திய புலிகளும் 1983 ஆம் ஆண்டின் இறுதிப்ப‌குதியில் பிரபாகரனின் செயற்பாடுகளில் முக்கியமானவையாகக் காணப்பட்ட ஐந்து விடயங்களில் இறுதி இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது என்றே கூறலாம். அவை பெண்கள் போராட்டத்தில் இணைந்துகொள்வதில் இருந்த தத்துவார்த்த ரீதியிலான சிக்கல்களும் பிரபாகரனின் சொந்த வாழ்க்கையும் ஆகும். திருமதி அடேல் பாலசிங்கம் பெண்விடுதலை குறித்த பொதுவான சிக்கல்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் அடேல் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்டது. அடேல் அவர்கள் 1983 ஆம் ஆண்டு பெண்களும் விடுதலைப் போராட்டமும் எனும் தலைப்பில் புத்தகமொன்றினை சென்னையில் வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். முதலாவதாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருக்கும் எந்தப் பெண்ணும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடி தனது சமூகத்தைப் பாதுகாக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறாள் என்பது. இதன்மூலம் தமது தேசத்தின் மீதான பற்றினை பெண்களால் உணரமுடியும் என்று அவர் கூறினார். இரண்டாவது தாயக விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கெடுப்பதன் மூலம் போராட்டத்தினைப் பலப்படுத்தலாம் என்பது. பழமைவாதிகளின் கருத்தான பெண்களின் பங்களிப்பு போராட்டத்தினைப் பலவீனப்படுத்தும் என்பதை அவர் முற்றாக நிராகரித்தார். மூன்றாவது தாயக‌ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் பெண்கள் சமூகத்தில் தமது விடுதலையினை அடைந்துகொள்ள முடியும் என்பது. விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக விடுதலையினையும் அடைந்துகொள்ளலாம் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அடேல் எழுதிய புத்தகத்தினை அடையாறிலும், திருவாண்மியூரிலும் அக்காலத்தில் தங்கியிருந்தவர்கள் படித்தார்களா என்பதை நான் அறிய முயன்றேன். ஆனால், அப்புத்தகம் பற்றியோ அல்லது அதுகுறித்த கலந்துரையாடல்கள் பற்றியோ எவருக்கும் ஞாபகம் இருக்கவில்லை. அவர்களின் ஒரே சிந்தனை அப்போது நடந்துகொண்டிருந்த இந்திய பயிற்சிபற்றியதாகவே இருந்தது. ஆனால், அடேல் எழுதிய சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் பிரபாகரன் தன்னுடன் பேசும்போது பல இளம் தமிழ்ப் பெண்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள் என்று கூறியதாக எழுதுகிறார். போராட்டத்தில் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் பெண்கள் தம்மை ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்று அவர் அடேலிடம் கூறியிருக்கிறார். சிங்கள அரசுகளால் தமிழர்கள் மீது கொடூரமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிராக தம்மையும் போராட அனுமதிக்குமாறு பல பெண்கள் அடேல் ஊடாக பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்களை அவர் படித்திருந்தார் என்று அடேல் எழுதுகிறார். அக்கடிதங்களில் தமது சமூகத்தின் மீதான கடூரமான ஒடுக்குமுறைகளுக்கெதிராகத் தாம் போராடி சமூகத்தைக் காக்கப்போவதாக பெண்கள் பலர் கேட்டிருந்தனர். பின்னாட்களில் அடேலுடன் பேசிய பிரபாகரன் பெண்களையும் ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். பெண்களை இயக்கத்தில் இணைத்துக்கொள்ளும் நடைமுறை எவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்றின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டின் தமிழினக் கொலையும், அதற்கு சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கொழும்பு, பேராதனை , மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை தமது தாயகமான வடக்குக் கிழக்கிற்கு துரத்தியிருந்தது. தென்பகுதி பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கப் போவதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்த போது தமிழ் மாணவர்கள் திரும்பிச் செல்ல மறுப்புத் தெரிவித்தனர். தமது உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், தம்மை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் கோரிக்கையினை நிராகரித்த ஆணைக்குழு, உடனடியாக விரிவுரைகளில் கலந்துகொள்ளுமாறும் இல்லையேல் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஆகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவதென்று முடிவெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இப்போராட்டத்தை அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களும் வரவேற்றிருந்தன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை ஈரோஸின் மாணவர் அமைப்பான கெஸ் (GUES) முன்னெடுத்திருந்தது. யாழ்க்குடாநாட்டில் வாழ்ந்துவந்த மாணவர்களின் உணர்வுகளை இப்பிரச்சாரம் வெகுவாகத் தூண்டியிருந்தது. ஆனால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவோ மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தது. மாணவர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்திற்கு முன்னர் தத்தமது பல்கலைக்கழக பதிவாளர்களைச் சந்தித்து மீள இணைந்துகொள்ளவேண்டும் என்று அது அறிவித்தது. சில மாணவர்கள் போராட்டத்தில் இருந்து வெளியேறி தமது பட்டப்படிப்பினைக் காத்துக்கொள்ள முயன்றனர். இதனையடுத்து புலிகள் இயக்கம் "கொலைக்களத்திற்குச் செல்ல வேண்டாம்" என்கிற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை கார்த்திகை 7 ஆம் திகதி வெளியிட்டது. தெற்கில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழ் மாணவர்களின் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்படும் என்று அத்துண்டுப்பிரசுரம் குறிப்பிட்டிருந்தது. சிங்களப் பேரினவாதம் பலக்லைக்கழகங்களைக் கூட வெலிக்கடைச் சிறைகளாக மாற்றி படுகொலைகளில் ஈடுபடும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது. தமிழ் மாணவர்களின் அழுத்தத்திற்கு தாம் வளையப்போவதில்லை என்று அரசு அறிவித்தது. அடுத்து பல்கலைக்கழக விரிவுரைகளை தை மாதத்திலிருந்து ஆரம்பிக்குமாறு மாணியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது. இது தமிழ்மக்களை ஆத்திரப்பட வைத்தது. மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மக்களின் அனுதாபத்தினைப் பெறத்தொடங்கியது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவிக்க பெருமளவான மக்கள் நாள் தோறும் பல்கலைக்கழகத்திற்கு வரத் தொடங்கினார்கள். பாடசாலை மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்ததோடு ஊர்வலங்களில் ஈடுபட்டார்கள். யாழ்க்குடாநாடெங்கிலும் கறுப்புக் கொடிகள் தொங்க‌விடப்பட்டன. எங்கும் பதற்றமான நிலை நிலவத் தொடங்கியதோடு ஆங்காங்கே அரச வாகனங்களுக்குப் போராளி அமைப்புக்கள் தீமூட்ட ஆரம்பித்தன. 1984 ஆம் ஆண்டு, தை மாதம் 9 ஆம் திகதி ஐந்து ஆண்களும் நான்கு பெண்களுமாக 9 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தினை மூடுமாறு அரசு அறிவித்தது. ஆனால், உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அகற்ற அரசால் முடியவில்லை. உண்ணாவிரதத்தின் ஆறாம் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மாணவி ஒருவர் மயக்கமுற்றார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் உடல்நிலை மோசமாகிவருவதாக அறிவித்தனர். ஏனைய மாணவர்களின் நிலைமையும் மோசமாகிக்கொண்டே வந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 2002 ஆனால் அரசாங்கம் மசியவில்லை. அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் லலித் அதுலத் முதலி உண்ணாவிரதப் போராட்டங்களினால் அரசை பயமுறுத்த முடியாது என்று அறிவித்தார். 7 ஆம் நாளான தை 16 ஆம் திகதி இரவு 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்கு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய இளைஞர் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஏற்றிக்கொண்டு சென்றது. வாகனத்தில் வந்தவர்கள் விக்டர் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் அச்சுவேலிப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உணவளிக்கப்பட்டபின்னர் தமிழ்நாட்டிற்கு படகுமூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தினை புலிகள் பலவந்தமாக முடித்துவைத்து மாணவர்களைக் கடத்திச் சென்றமையானது ஏனைய போராளிக் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக புளொட் மற்றும் ஈரோஸின் மாணவர் அமைப்பினர் இதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இது மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமையினை எந்த அனுமதியும் இல்லாமல், அவசியமற்ற முறையில் தடுத்த சம்பவம் என்று புளொட் சாடியிருந்தது. ஆனால் தமது நடவடிக்கையினை விளக்கி புலிகள் பின்னர் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தனர். மாணவர்களின் உயிரைக் காக்கவே அவர்களை நாம் அழைத்துச் சென்றோம். அவர்களின் பூரண அனுமதியுடனேயே அவர்களை அழைத்துச் சென்றோம். அவர்கள் தற்போது உணவருந்த ஆரம்பித்திருப்பதோடு நல்ல உடல்நிலையிலும் உள்ளனர். மாணவர்கள் இறப்பதை நாம் அனுமதிக்க முடியாது. உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் மரணித்தாலும் அரசு அதனைச் சட்டை செய்யப்போவதில்லை. அகிம்சை முறையிலான எந்தப் போராட்டத்தையும் அரசு கவனத்தில் எடுக்கப்போவதில்லை என்பதனாலேயே நாம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்றினோம். அதுவரை காலமும் வன்முறையற்ற வழிகளில் போராடுவதன் மூலம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமிழ் மக்கள் எண்ணிவந்ததை மாற்றுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு நடந்துகொண்ட விதத்தினை முன்வைத்து புலிகளுக்கு ஆதரவானவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசை அமைப்போம் என்று பதவிக்கு வந்த ஜெயவர்த்தன அரசு தற்போது மிகவும் கொடூரமான அரசென்று தன்னை வெளிக்காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.தொழிற்சங்கப் போராட்டங்களையும் மாணவர்களின் வன்முறையற்ற போராட்டங்களையும் தனது அரச ராணுவம் மற்றும் பொலீசாரைக் கொண்டு மிருகத்தனமாக அரசு அடக்கிவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்திற்குத் தெரிந்த ஒரே பாஷை துவக்கின் பாஷையே என்று அவர்கள் வாதிட்டனர்.
  3. மட்டக்களப்புச் சிறையுடைப்பு தமிழ்ப் போராளிகள் இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்குச் செல்கிறார்கள் என்கிற செய்தி இலங்கை இராணுவத்தின் காதுகளுக்கும் எட்டியது. கார்த்திகை மாதம் வரை தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவரும் விடயம் இலங்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அது தெரியவருமுன்பே ஜெயவர்த்தனவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்புச் சிறைச்சாலையுடைப்பு. ஆடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின்போது தப்பிய 19 தமிழ் அரசியல்க் கைதிகளை அரசு ஆடி 28 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியிருந்தது. விமானப்படை விமானமொன்றில் மட்டக்களப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்க் கைதிகளை வான் ஒன்றில் ஏற்றி மட்டக்களப்பு விமானப்பட முகாமிலிருந்து மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த ஆனைப்பந்தி எனும் இடத்திற்கு பொலீஸார் இழுத்துச் சென்றார்கள். மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட சிறைச்சாலை இப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மட்டக்களப்புச் சிறைச்சாலையில் மேலும் 22 அரசியற்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களான வரதராஜப் பெருமாள் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரும் அடக்கம். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் சத்துருக்கொண்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு நினைவுதினத்தில் உரையாற்றுவதற்காக இந்த விரிவுரையாளர்கள் இருவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தது. இந்த விடயம் பொலீஸாருக்குத் தெரியவந்ததையடுத்து நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்த இரு விரிவுரையாளர்களையும் அது கைதுசெய்து வைத்திருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிவா, மணி, குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் அடக்கம். அவ்வமைப்பின் தலைவர் பத்மநாபாவும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் வந்திருப்பது பொலீஸாருக்கு தெரிந்திருக்காமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை. மட்டக்களப்புச் சிறைச்சாலை உடைக்கப்பட்டபோது அங்கு 41 தமிழ் அரசியற்கைதிகளும் இன்னும் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் இருந்தனர். மூவினத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்த இச்சிறைச்சாலையில் மிகக் கொடூரமான குற்றவாளிகள் சிலரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவா என்பவரும் அப்போது சிறைச்சாலயில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர் அவர். அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவுறும் தறுவாயில் இருந்தபோதும்கூட சிறையுடைப்புக் குழுவினருடன் அவரும் இணைந்துகொண்டார். வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் இருந்து உயிர்தப்பி மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 19 தமிழ் அரசியற்கைதிகளிடமிருந்தும் வெலிக்கடையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழுவொன்று ஆவணி மாதத்தில் அங்கு விஜயம் செய்திருந்தது. ஆனால், இந்த விசாரணைகளை முற்றாகப் புறக்கணிப்பதென்று 19 கைதிகளும் முடிவெடுத்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த அதிகாரிகள் வெலிக்கடையில் நடந்த விடயங்கள் குறித்து அறிய முயன்றனர். ஆனால், பொலீஸ் அதிகாரிகள் மீது தமக்கு நம்பிக்கை சிறிதும் இல்லையென்று கூறிய அவர்கள் விபரங்கள எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பொலீஸ் அதிகாரிகள் தமது கோபத்தை கைதிகள் மீது காட்ட முயன்றனர். பொலீஸ் அதிகாரிகள் சென்றபின்னர் கைதிகளுடன் பேசிய சிறையதிகாரிகள் சிங்களப் பகுதியொன்றில் அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறையொன்று கட்டப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தமிழ்க் கைதிகளை புதிய சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தனர். "எங்களை மீண்டும் சிங்களப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொல்லவே அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நாம் நினைக்கத் தொடங்கினோம்" என்று சிறையுடைப்பின்போது தப்பிய கைதியொருவர் என்னிடம் கூறினார். சிறையுடைப்பு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் அங்கிருந்த அனைவராலும் ஒருமித்தே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். புளொட் அமைப்பின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும் பின்னர் இலங்கை ராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்டவருமான மாணிக்கதாசனுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் போராளித் தலைவர்களாகக் காணப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பரமதேவா ஆகியோர் சிறையுடைப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கினர். சிறையினை உடைத்து அனைவரும் வெளியேறும்வரை ஒன்றிணைந்து செயற்படுவதென்றும் அதன்பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தத்தமது இடங்களுக்குத் தப்பிச் செல்லமுடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. "சிறையுடைப்பினை மிகக் கவனமாகத் திட்டமிட்டோம்" என்று அவர் கூறினார். திட்டத்தின் சாராம்சம் என்னவெனில் சிறையதிகாரியையும் ஏழு காவலர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களை கதிரைகளுடன் கட்டி, வாய்களுக்குள் துணிபொதிந்து விட்ட பின்னர் சிறையின் முன்வாயிலாலேயே வெளியேறுவது என்பதுதான். சிறைவாயிலின் சாவிகளின் பிரதிகள் சவர்க்காரக் கட்டிகளில் பிரதிசெய்யப்பட்டு தயாரித்துவைக்கப்பட்டிருந்தன. திடமான தேகக் கட்டமைப்பைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், மகேஸ்வரன் மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் சிறைக் காவலாளிகளை மடக்கிப் பிடிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது எந்த இயக்கத்தையும் சேர்ந்திராத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அழகிரி ஆகியோருக்கு முன்வாயில் திறக்கப்பட முடியாது போகுமிடத்து பின்பகுதியில் உள்ளை சிறைச்சாலைச் சுவரை உடைத்து தயாராக நிற்கும் பணி கொடுக்கப்பட்டது. சிறையதிகாரியினதும், சிறைக் காவலாளிகளினதும் வாய்களைக் கட்டிப்போடும் பணி வைத்தியர் ஜயதிலகராஜாவுக்கும் காந்தியத்தின் டேவிட் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. தப்பிச் செல்வதற்கான நேரத்தை மிகக் கவனமாக அவர்கள் குறித்துக்கொண்டார்கள். சிறைச்சாலையின் முன்வாயிலில் எப்போதுமே ஒரு காவலாளி கடமையில் இருப்பார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி வலம்வந்துகொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக பொலீஸ் ரோந்து வாகனம் ஒன்றும் இப்பகுதிக்கு வந்துசென்றுகொண்டிருக்கும். ஆகவே வெறும் 7 நிமிட இடைவெளிக்குள் சிறையுடைப்பை நிகழ்த்தித் தப்பிச் செல்லவேண்டும். தப்பிச்செல்வதற்கு இரவு வேளையைத் தேர்ந்தெடுத்தார்கள். வீதிகளில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஆனால் முற்றாக வெறிச்சோடிக் கிடவாமலும் இருப்பதே தப்பிச் செல்வதற்கு ஏதுவானது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி இரவு 7:25 இலிருந்து 7:32 இற்கிடையில் தப்பிச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது இராணுவ ரோந்தணி கிளம்பிச் சென்று பொலீஸ் ரோந்தணி வருவதற்கிடையில் அவர்கள் தப்பிச் செல்ல வேண்டும். ஆயுதங்களைக் கடத்தும் பணி இராணுவப் பயிற்சி பெற்ற போராளிகளிடமே விடப்பட்டது. டக்ளசும் அவரது ஏனைய தோழர்களும் வெளியிலிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அதன்படி மத்திய குழு உறிப்பினரான குணசேகரம் என்பவர் சிறைச்சாலையின் வாயிலுக்கு வெளியே டக்ளஸ் குழுவினரை பொறுப்பெடுக்கும் பொருட்டு நிற்கவைக்கப்பட்டார். மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பரூக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு புளொட் அமைப்பு ஆயுதங்களை வழங்கியதுடன் அவர்கள் தப்பிச் செல்லும் ஒழுங்குகளையும் செய்திருந்தது. தமிழ் ஈழ ராணுவம் எனும் அமைப்பின் தலைவரான பனாகொடை மகேஸ்வரன் தானும் தனது இரு தோழர்களான காளி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரும் மட்டக்களப்பு வாவியூடாக படகில் தப்பிச் செல்வதாகக் கூறினார்கள். நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா, குருக்களான சின்னராசா, ஜயதிலகராஜா, சிங்கராயர் மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் புலிகளின் அனுதாபிகளாக இருந்தனர். மற்றையவர்களுடன் பேசிய குரு சிங்கராயர் அவர்கள், தான் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். அவரது வயதும், உடல்நிலையும் தப்பிச்செல்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தப்பிச் சென்றால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும், ஆகவே தப்பிச்செல்வதில்லை என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். நித்தியானந்தன் பேசும்போது தானும் தனது மனைவியும் தம்பாட்டில் தப்பிச் செல்வதாகக் கூறினார். கோவை மகேசன் அப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததோடு வைத்தியர் தர்மலிங்கத்தின் வயது அவரைத் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக அவசரகால நிலைமைச் சட்டத்தினூடாகவே கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் நிலையிலும் இருந்தார்கள். ஆகவே அவர்களும் தப்பிச் செல்வதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். குரு சிங்கராயர், கோவை மகேசன், வைத்தியர் தர்மலிங்கம் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாத முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தனர். மிகச் சிறியளவிலான ஆயுதங்களையே சிறைச்சாலைக்குள் அவர்களால் கடத்திவர முடிந்திருந்தது. ஆகவே ரப்பரால் உருவாக்கப்பட்ட காலணிகளில் கைத்துப்பாக்கிகள் போல வெட்டி அவற்றினைக்கொண்டே சிறைக் காவலர்களையும் ஏனைய கைதிகளையும் அச்சுருத்துவது என்று முடிவாகியது. பனாகொடை மகேஸ்வரன் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்தார். "தப்பிச் செல்ல நாம் குறித்துக்கொண்ட நிமிடம் வரையும் நாம் கடவுளை வேண்டிக்கொண்டோம். தப்பிச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முதல் எங்கள் அனைவரையும் சந்தித்த குரு சிங்கராயர் எம்மை ஆசீர்வதித்ததுடன் எமது முயற்சி வெற்றியளிக்கவும் வாழ்த்தினார் " என்று என்னுடன் பேசியவர் கூறினார். இரவு 7 மணியளவில் சிறைக்காவலாளி அந்தோணிப்பிள்ளை கைதிகளுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வந்தார். வழமையாக மாலை வேளைகளில் மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் அப்போதுதான் சிறிது மதுவை அருந்திவிட்டு உற்சாகமான மனநிலையில் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடிக்கொண்டு வந்தார். "எப்பிடி இருக்கிறியள் தம்பிகள்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வந்தார். அவரைத் திடீரென்று பிடித்துக்கொண்ட பரந்தன் ராஜன் உடனேயே அவரைக் கட்டினார். டேவிட் அவரது வாயைத் துணிகளால் கட்டிப்போட்டார். ஆறடி உயரமும், சிறந்த உடல்வாகுவும் கொண்ட பனாகொடை மகேஸ்வரன் சிறையதிகாரியையும் காவலர்களையும் தாக்கி அவர்களைப் பிடித்துக்கொண்டார். இதனையடுத்து சிறைக்கதிகள் வரிசையாக சிறைவாயிலுக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். பின்புற சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளும் அழகிரியும் திடீரென்று சிறை நிசப்தமானதையடுத்து சிறையின் முன்வாயிலிக்குச் சென்று பார்த்தபோது அது திறந்துகிடந்தது. வாயிலூடாக வெளியே ஓடிய அவர்கள் சிறையின் பின்புறம் நோக்கி வெளிவீதியால் ஓடினார்கள். வாவியின் கரைக்கு அவர்கள் சென்றபோது மகேஸ்வரனையும் அவரது தோழர்களையும் ஏற்றிக்கொண்டு படகொன்று வாவியூடாக வெளியேறுவதை கண்ணுற்றார்கள். இவர்கள் கூக்குரலிட ஆரம்பிக்க, சென்றுகொண்டிருந்த படகு திரும்பிவந்து இவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றது. தந்தை செல்வாவின் முன்னாள் வாகனச் சாரதியும் பின்னர் ஆயுத அமைப்பொன்றில் இணைந்துகொண்டவருமான வாமதேவவாவைக் கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலீஸார் 100,000 ரூபாய்களை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தனர். கைதுசெய்யப்பட்டபின் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நிர்மலா நித்தியானந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையினை உடைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறந்துவிட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போராளிகள் காட்டுப்பகுதியொன்றின் ஒற்றையடிப் பாதைக்கு வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் அப்பாதை வழியே ஒன்றாகச் சென்ற அவர்கள் பின்னர் த‌த்தமது அமைப்புக்கள் ஒழுங்குசெய்திருந்த படகுகள் தரித்துநின்ற கரைகளை நோக்கிச் சென்று அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். புலிகளின் அனுதாபிகளான நித்தியானந்தன், குருவானவர்களான சின்னராசா, ஜயதிலகராஜா மற்றும் ஜயகுலராஜா ஆகியோர் சிறைச்சாலையின் பிற்பகுதிக்குச் சென்றனர். பரமதேவாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சுமார் 600 மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருந்த மாந்தீவை படகொன்றில் ஏறிச் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இருட்டில் அவர்கள் முதலைக்குடா நோக்கி வேகமாக ஓடினர். அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்ட அவர்கள் திருக்கோவில் நோக்கி அதனை ஓட்டிச் சென்றனர். மறைவிடம் ஒன்றில் அங்கு தங்கிய பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். பனாகொடை மகேஸ்வரனுக்கு வேறு திட்டம் இருந்தது. அவர் மட்டக்களப்பிலேயே இருக்க விரும்பினார். போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய அவர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று எண்ணினார். மட்டக்களப்புப் பகுதி அவருக்குப் பரீட்சயமில்லாதபோதும் மறைவிடம் ஒன்றைத் தேடி ஒளிந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சில மாதங்களின் பின்னர் அவர் அதிரடி நடவடிக்கை ஒன்றைச் செய்திருந்தார். காத்தான்குடியில் இருந்த வங்கியொன்றைக் கொள்ளையிட்டு அங்கிருந்த 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றார். அக்காலத்தில் அதுவே அதிகளவு பணம் களவாடப்பட்ட நிகழ்வாக இருந்தது. "தமிழர்களின் வரலாற்றில் திகிலான அத்தியாயம்" என்று டேவிட் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்தச் சிறையுடைப்பு அங்கிருந்த ஏனைய கைதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழ் அரசியற்கைதிகள் தப்பிச் சென்றதையும், வாயிலின் இரும்புக் கதவுகள் அகலத் திறந்து கிடந்ததையும் கண்ணுற்ற அவர்களும் தப்பிச் சென்றார்கள். பொலீஸாரின் ரோந்தணி வழமைபோல 7:32 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபோது அது வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. உடனடியாக பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தரை, நீர், ஆகாய வழியாக பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சில கைதிகளை, குறிப்பாக சிங்களக் கைதிகளை பொலீஸார் பின்னர் மீளப் பிடித்து கொண்டனர்.
  4. ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதற்கும், இலங்கையில் சில உண்மை அறிக்கைகளை இணையத்தில் தொடர்புகொள்வதைத் தடைசெய்வதற்கும் இந்த சட்டமூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வரைவு மசோதாவுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வர்த்தமானியின் படி, இலங்கையில் சில உண்மை அறிக்கைகளை இணையத்தில் தொடர்புகொள்வதைத் தடைசெய்யும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஆன்லைன் பாதுகாப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது; தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக ஆன்லைன் கணக்குகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற ஆன்லைன் கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க; இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்; உண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்கான தவறான அறிக்கைகளின் தகவல்தொடர்புக்கான நிதி மற்றும் பிற ஆதரவை அடக்குவதற்கு. The government has issued a gazette notification announcing the Online Safety Bill. According to the Gazette, the bill is to establish the Online Safety Commission and to make provisions to prohibit online communication of certain statements of fact in Sri Lanka. Earlier, the draft bill was approved by the Cabinet on September 4. According to the gazette, the Online Safety Commission is established to make provisions to prohibit online communication of certain statements of fact in Sri Lanka; to prevent the use of online accounts and inauthentic online accounts for prohibited purposes; to make provisions to identify and declare online locations used for prohibited purposes in Sri Lanka; to suppress the financing and other support of communication of false statements of fact and for matters connected therewith or incidental thereto. https://www.dailymirror.lk/breaking-news/Gazette-issued-announcing-Online-Safety-Bill/108-267576 ############# ################# ################# ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் முக்கிய விதிகள் இந்த மசோதா ஆன்லைன் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுகிறது, அதன் செயலாக்கத்தை மேற்பார்வையிடவும் ஆன்லைன் தீங்குகள் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்யவும். இணைய சேவை வழங்குநர்கள் (ISP கள்) தங்கள் தளங்களில் இருந்து தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றி, அத்தகைய உள்ளடக்கத்தைப் புகாரளிக்க பயனர்களுக்கு உதவ வேண்டும். ஆன்லைன் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளங்களைத் தடுப்பதற்கும், குறிப்பிட்ட ஆன்லைன் இருப்பிடங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த ISPகளுக்கு அறிவுறுத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மசோதாவின் விதிகளுக்கு இணங்காததற்காக ISPகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஆணையம் அபராதம் விதிக்கலாம். Key provisions of the Online Safety Bill The bill establishes an Online Safety Commission tasked with overseeing its implementation and addressing complaints related to online harms. Internet Service Providers (ISPs) are required to remove harmful content from their platforms and enable users to report such content. The Online Safety Commission is granted authority to block websites and instruct ISPs to restrict access to specific online locations. The commission can impose fines on ISPs and social media companies for non-compliance with the bill’s provision https://www.themorning.lk/articles/kJoknFck7KnJZNZA6iG0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.