Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19125
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7051
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/13/23 in all areas

  1. எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை. எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட்டும் போட்டு விட்டு, மக்களை சம்பந்த படுத்தாமல் விட்ட ஜி ரி எப் வின் பிழையா? பிழை சரிக்கு அப்பால் - இது வெளிப்படைத்தன்மை அதற்காக எனக்கு படுகிறது. 2. இலங்கையோடு நேரடியாக நாம் எழுதும் எதுவும் அது எழுதபட்ட காகிதத்தின் பெறுமதி கூட அற்றது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. டட்லி-செல்வா, பண்டா-செல்வா, திம்பு, ஒஸ்லோ….இப்போ இமாலயன். 3. இதை வாசித்து பார்த்தால் இது ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் மிகவும் உயர் நிலை சாராம்சமாக இருக்கிறது. யாரும் இல்லை என மறுக்கமுடியாத விடயங்கள் - அது மட்டும் அல்ல ஏலவே இலங்கை சட்டத்தில் உள்ளவைதான் இதில் இருக்கிறன. ஆகவே இதில் நான் எந்த முன்னேற்றத்தையுமோ, எமக்கான தீர்வுக்கான blueprint ஐயோ காணவில்லை. இது எல்லோரும் இலங்கையர், இலங்கைக்குள் ஜனநாயகத்தை, மனித உரிமையை, பொருளாதார அசமச்சீரை சரி செய்தால், அதிகாரத்கை மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தால் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற பழைய சிங்கள அணுகுமுறையின் புதிய வடிவாகவே எனக்கு படுகிறது. இது இனைப்பிரச்சினையின் அடிப்படையான தமிழர் அபிலாசைகள் பற்றி எதுவும் சொல்வதாக எனக்கு படவில்லை. 4. அடுத்து வசி சொன்ன விடயம். எமது அபிலாசைகள் நிறைவேறாவிட்டால் கூட பரவாயில்லை, இருக்கும் சட்டத்தையாவது அமல்படுத்த இது உதவினால் பரவாயில்லை. ஆனா தொடரும் நில அபகரிப்பு இதர விடயங்கள் - அது கூட சாத்தியமில்லை என்றே சொல்லி நிற்கிறன. 5. நல்லாட்சியில் சுமந்திரனை வைத்து ரணில் புதிய அரசியல் சட்ட நாடகம் ஆடி நேரம் கடத்தியது போல் இப்போ சுரேந்திரனை வைத்து ஆடுகிறார்.
  2. யுத்த காலம் வேறு விதமான இலக்குகள், மக்கள் தங்கள் சுய புத்தியைப் பாவித்து இலக்குகளை வரிசைப் படுத்திக் கொண்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் (போர் ஓய்வு தற்காலிகமாக வந்த காலத்தில் கூட), சில கட்டுப் பாடுகள் தளர்த்தப் பட்டன, வன்னியில் வாழ்ந்தோருக்கு இது புரியும். எனவே, இது போன்ற விடயங்கள் மூடியிருந்த நகரங்கள் திறக்கப் படும் போது நிச்சயம் உள் நுழையும். முகாமை செய்யலாம், முற்றாகக் கட்டுப் படுத்த இயலாது. முற்றாகக் கட்டுப் படுத்தினால் என்னவாகும்? வெளித்தோற்றத்தில் எல்லாம் சுத்தமாகத் தெரியும் (கலாச்சாரக் காவலர்களுக்கு இந்த வெளித்தோற்றம் மட்டும் தான் முக்கியமென்பதால் அவை அமைதியாகி விடுவினம்😎!). இருட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் முதல், திருமணம் தாண்டிய உறவு வரை எல்லாம் நடக்கும், இளவயதுக் கர்ப்பங்களும், அனாதைகளும் இருட்டிலேயே உருவாகி, இருட்டிலேயே முடிந்து போகும் (ஏனெண்டால் பாலியல் அறிவும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒவ்வாமை என்பதால் எங்கள் சமூகத்தில் மிகக் குறைந்த நிலை!) ஒரு ஆரோக்கியமான சமூகம் தேவையென்றால், இது போன்ற விடயங்களை மதுக் கட்டுப் பாடு, போதை வஸ்துத் தடை, பாலியல் சுரண்டல் குறித்த எச்சரிக்கை என்பவற்றை உத்தியோக பூர்வமாக அமல் படுத்தி அனுமதிக்க வேண்டும். அப்படி முகாமை செய்யாமல் ஒரேயடியாகத் தடுத்தால் என்ன ஆகும் என்பதை அறிய தென்னாபிரிக்க நகரங்களில் நடக்கும் இரகசிய பார்ட்டிகளும், தீ விபத்துகளும், அதியுயர்ந்த HIV தொற்றுகளும் எப்படிப் போகின்றன என்று தேடி அறிந்து பாருங்கள்!
  3. அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி..... வைத்தியசாலையில் ஒரு நாள் நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்...... சரி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்றார்கள் அதாவது இன்னும் 1 மாதம்தான் இருக்கின்றது. இதனால் பெற்றோல் விலையுடன் அனைத்துப்பொருட்களின் விலையும் ஒரு சுற்று அதிகரிக்கப்போகின்றது. மிடில் கிளாஸில் இருந்து ஒரு படி கீழே இறங்கிய அனைவரும் மீண்டும் ஒரு படி கீழே இறங்கப்போகின்றோம். சாதாரணமாக SL grade இல் இருப்பவர்களைத்தவிர அவளவு இலகுவாக சம்பளம் யாருக்கும் 1 இலட்சங்களை தாண்டுவது அரிது, வேண்டுமானால் பிரைவேட்டாக உழைக்கவேண்டியிருக்கும். 95% ஆன அரச உத்தியோகத்தர்களுக்கு நிச்சயம் லோன் இருக்கும் வீட்டுக்காகவோ அல்லது வாகனத்துக்கோ ஏதாவது ஒரு தேவைக்காக லோன் எடுத்திருப்பார்கள், எனவே அது போக மிகுதிதான் சம்பளம் அதுவும் இப்போது வரியையும் கழித்தால் இன்னும் குறையத்தான் போகின்றது ஆனால் ஒட்டுமொத்த சம்பளம் அதிகரிக்கப்போவதில்லை. வைத்தியசாலையில் குடிபோதையில் கூறிவரின் கருத்து ஒருவகையில் சரிதான் அவர் சாராயம் வாங்க கொடுத்த பணத்தில் இருக்கும் டக்ஸில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்தும் கூட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது, ஆனால் இலங்கையில் எந்த ஒரு அரச உத்தியோகத்தருக்கும் சாராயம்வாங்கும்போது, அரிசி, பருப்பு, சீனி என்ற எந்த பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை, அதாவது சாதாரணமக்கள் கொடுக்கும் அதே வரிப்பணத்தை அரச உத்தியோகத்தர்கள் கட்டுகிறார்கள் அதோடு அதைவிட கூடுதலாக சம்பளத்திலும் வரி அறவிடப்படுகின்றது. சுருக்கமாக விரும்பியோ விரும்பாமலோ வரிகட்டவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பவர்கள் அரச ஊழியர்கள்தான். நாட்டில் ஏற்படும் திடீர் பொருளாதாரச்சிக்கல்களுக்காக மாதாந்த வேதனத்தை 2 மாதங்கள் தள்ளிப்போடவும் அரசாங்கத்தால் முடியும் ஆனால் இப்படி எதுவும் தனியார் துறைக்கு நடக்கப்போவதில்லை. இப்படி வேறு எந்த நாட்டிலும் நடக்காதுதான் ஆனாலும் இப்படியான சூழ் நிலைக்கு நமது நாடு என்றோ தள்ளப்பட்டுவிட்டது. இதுதொடர்ந்தால் அரசவேலையைவிட்டுவிட்டு வேறுதொழிலுக்கு செல்வதைதவிர பலருக்குவேறுதெரிவு இருக்கப்போவதில்லை. ஒரு லட்சம் என்பது இப்போது ஒன்றும் அவளவு பெரிய சம்பளமேயல்ல என்பதால் அரசு 120000க்கு மேல் சம்பளம் எடுக்கும் அனைவருக்கும் வரியை அமல்படுத்தியிருக்கின்றது. ஒரு முடிவெட்டும் நபரை எடுத்துக்கொள்வோம் முடிவெட்டுவதற்கு ஒருவருக்கு 500 ரூபாய், ஒரு நாளில் குறைந்தது 10 பேர் வெட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் மாதத்திற்கு 150 000 ரூபாய்களை அவர் உழைக்கத்தான் போகின்றார் ஆனால் அவர் இதற்கு எந்த வரியையும் கட்டப்போவதில்லை ஆனால் சமுர்த்திப்பதிவும் அதற்கான கொடுப்பனவையும் அவரால் பெறமுடியும். வீதியோரத்தில் பகோடா, மிக்ஸர் விற்கும் தள்ளிவண்டிவைத்திருப்பவராலும் அண்ணளவாக இதே சம்பளத்தைப்பெறமுடியும் ( தெரிந்தவர்கள் இருவர் இருக்கின்றார்கள் ) ஓரு ஆட்டோ ஒட்டுனராலும் அவரது ஓட்டத்தைப்பொறுத்து இவை சாத்தியம்தான். இப்போதாவது Pick Me யாழ் வந்ததால் தப்பித்தோம் 2018 இல் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் என் ஊருக்கு வருவதற்கு 2000 ரூபாய் கொடுத்தேன் அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பஸ் ரிக்கட் 1300 ரூபாய் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து என் ஊருக்கு 2000 ரூபா இவர்களையெல்லாம் விடுங்கள் மன்னிப்போம் கஸ்ரப்பட்டால்தான் பணம்கிடைக்கும், 2019 இல் இறந்த என் தந்தையின் கிரியைகளைசெய்வதற்காக கீரிமலை சென்றிருந்தேன் அங்கே கொடுக்கவேண்டிய பணம் 10 000 ரூபாய், அரை மணித்தியாலத்திற்கு ஒருவர் என்றவாறு கிரியைகள் நடக்கும் எப்படியும் குறைந்தது 20 நபர்களை போட்டுக்கொள்வோம் ( உண்மையில் மிக அதிகம்) ஒரு நாளில் 2 லட்சம் கிடைக்கும் மாதத்திற்கு 60 லட்சம் ஆனாலும் அங்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று சமுர்த்திப்பதிவு இருப்பதாக கேள்வி... இங்கும் வரி கட்டப்படுவதில்லை. இதேபோன்று 3 மாடி வீடுகளை கட்டிவாழும் கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்திற்கே படியளப்பதற்கும் அரச ஊழியர்களே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களை வென்றவர்கள் நமது அரசியல்வாதி சகாக்காள்.... அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரி உண்மையில் எமது நாட்டைவிட மிக அதிகம்தான் ஆனால் அதிகமான வரி மக்களை அவளவாகப்பாதிக்காது காரணம் அங்கே எந்தத்தொழிலாக இருந்தாலும் மணித்தியாலத்திற்கு 20 அல்லது 22 டாலர்கள் வழங்கவேண்டும் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனால் எந்த ஒரு மனிதனதும் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணத்தை அனைவராலும் உழைத்துக்கொள்ளலாம், அதோடு வயோதிபத்தில் பண உதவி போன்று பல திட்டங்கள் இருக்கின்றன இவற்றினால் கட்டப்பட்ட வரி மீண்டும் ஏதாவது ஒருவிதத்தில் கிடைக்கும் துரதிஸ்டவசமாக இலங்கை நிலை நான் சொல்லித்தெரியவெண்டியதில்லை. அனைவரது பணப்பரிவர்த்தனையையும் கவனிபதற்காக இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது. வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். காணி,வீடு, கார் என எது வாங்கினாலும் எந்த source இல் இருந்து பணம் கிடைத்தது என்பதில் கேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு டக்ஸில் சகலதும் முடிவடையும். இதை இன்னும் திறம்பட செய்யவேண்டுமானால் இந்தியாவில் Gpay பயன்படுத்துவதைப்போல் இங்கேயும் பயன்படுத்தினால் சலூன் முதற்கொண்டு சைக்கிள்கடை வரை அனைத்துமே இலகுவில் கண்காணிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த TIN இலக்கம் இல்லாமல் ஒரு வங்கிக்கணக்குக்கூட திறக்கமுடியாமல்போகலாம். இந்தியாவில் இருக்கும் ஆதார் காட் போல் இங்கேயும் அனைத்தும்வரலாம். TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளுங்கள். இந்தக்கட்டுரை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் கொமண்டுங்கள் பார்ப்போம். https://www.manithanfacts.com/2023/12/tin no tax srilanka.html
  4. எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது. ஒரு சில பல இடங்களில் நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.
  5. உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி கோசான். எவருக்கும் தெரியாமல் திடுதிப்பென வந்திறங்கியது தான் புதிராக இருந்தது. இனிவரும் வாரங்களில் ஆய்வாளர்கள் பந்திபந்தியாக எழுதுவார்கள்.கவனிப்போம். கந்தையா மேலே உள்ள இலக்குவின் காணொளியைக் கேட்டீர்களானால் இதற்கான முழுவிடையும் கிடைக்கும். அதாவது இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எதுவுமே இல்லை. ஆனால் இலங்கையும் இந்தியாவும் இதன் பலனை அனுபவிப்பதாக சொல்கிறார்கள். மில்லியன் டாலர் கேள்வி.
  6. குமாரசாமி, யுத்தம் தொடர்ந்து நடந்திருந்தால் சாத்தியமில்லை. யுத்த அவலத்தின் மத்தியில் உயிரைக்காப்பாறுவதே மக்களின் தேவையாக இருக்கும. போது மக்களே அதை விரும்ப மாட்டார்கள். ஆனால், யுத்தம் முடிந்திருந்தால் காலக்கட்டாறில் விளையாட்டுக்கு எவரும் விதிவிலக்கு இல்லை. விடுதலைப்புலிகளும் காலக் கட்டாறின் கட்டுப்பாட்டில் இருந்த சாதாரண மனிதர்களே. நிச்சயமாக காலச்சுனாமி அணைகளை உடைத்திருக்கும். அதில் சந்தேகமே இல்லை.
  7. எழுதினால்…. எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொரு திரியிலும் எழுதுறார்….. சதா யாழில் கிடக்கிறார்…வேலைக்கு போறேல்லையோ…. சுய விலாசம் காட்ட எழுதுறார்…. இத்யாதி…இத்யாதி…. தேவையில்லை அண்ணை…. எதாவது புளிச்சல் ஜோக்கை கொப்பி பேஸ்ட் அடிப்பது, அல்லது கருத்தேதும் எழுதாமல் திரிக்கு திரி ஆட்களை குறிவைத்து தாக்குவது… இப்படி நாட்களை ஜாலியாக கழிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
  8. இதுவரை பார்த்த படங்கள் எல்லாவற்றிலும் பிக்குக்கள் இருக்க எமது ஆட் கள் காலில் விழுவதைதான் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு தமிழன் இருக்க பிக்கு எழுந்து நின்று கொடுப்பதை / வாங்குவதை இப்பொழுது தான் பார்க்கிறேன். 😊
  9. தமிழ்நாடு ஒரு முன்னோடி தான். முற்காலத்தில் மதகுருமார்கள் நடத்திவைத்தால் தான் திருமணம் செல்லுபடியாகும் என்று இருந்த நிலைமையை அண்ணா என்ற முதலமைச்சர் பதிவு திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டம் கொண்டுவந்து மாற்றி அமைத்தார் என்று யாழ்களத்தில் படித்தேன். (திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கோசமும் விளங்கியது)
  10. இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வு முயற்சி என்றால் சம்பந்தப்பட்வர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம்?ஏன் ஒரு தமிழ்பத்திரிகையிலோ இணயத்தளத்திலோ இன்று வரை இதூன் இமாலயப் பிரகடனம் என்று குறிப்பிடக்கூடிய அளவில் செய்திகள் வரவில்லை.பிரிஎவ் அமைப்பே தங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறது.உலகத்தமிழர் அமைப்பால் ஒரு 50 பேர் கொண்ட கூட்டத்தையாவது கூட்டி விடயத்தைத் தெரிவிக்க முடியாத கையறு நிலையில்தான் காணப்படுகிறது.இது போலித்துவாரகாவின் மாவீரர்நாள் உரை போல இந்த இமாலயப் பிரகடனும் பிசுபிசுத்துப் போகப் போகின்றது.இப்படி ஒரு பிரகடனத்திற்கு புத்த பிக்குகள் எ பிரதான எதிர்கட்சிகள் ஆதவளிப்பதில் இருந்தே சந்தேகம் மேலும் வலுக்கிறது. இந்த பிரகடனத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்தாகக் கூறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கறிவைத்து ரணில் போடும் குள்ளநரித்திட்டம்தான் இது.
  11. முட்டி? ஓ... கள்ளு முட்டி??? மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்காது.... என்ன வலியாட்டம் ஆடினாலும், கையில இருக்கிற முட்டி உடையாது, கண்டியளே...
  12. யோவ் சாமியாரே, இன்னிக்கு கிறிஸ்மஸ் பார்ட்டி. டிஜே, சின்னமாமியே போட வலியாட்டம் போடனுமெல்லே!
  13. மேலே சொன்ன பட்டியலில் 87 ஒப்பந்தத்தை வேண்டும் என்றே சேர்க்கவில்லை. அது சம்பந்தமாக என் பார்வை வேறுபட்டது. யாழில் முன்பே பலதடவை எழுதியதுதான். எமக்கு சரியான பொறுப்புக்கூறல், தீர்வு அமைந்த பின் இந்த பொது அடையாளத்தை சுமக்கும் படி கொரோனா அது நியாயம். ஆனால் இவர்கள் அணுகுமுறையோ, பிரச்சனையே நாம் இந்த பொது அடையாளத்தை சுமக்க மறுப்பதுதான் என்பது போல இருக்கிறது.
  14. ஊருக்குத்தான் போகவில்லை, சென்னைக்குமா? இது உங்கள் மித மிஞ்சிய கற்பனை. யுத்த காலம் வேறு. யுத்தமற்ற காலம் வேறு. புலிகள் தனி நாட்டை அடைந்து, அதன் பின் அங்கே ஒரு தேர்தல் ஜனநாயகம் அமைக்கப்பட்டிருப்பின், கால ஓட்டத்தில் டிஜே யும் வந்திருக்கும். டிஜே = போதை அல்ல. இதுவும் உங்கள் அதீத கற்பனை. அல்லது மோசமான சுய அனுபவம். மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு…. அவர காப்பாத்த வேணும் கர்த்தரு…🤣
  15. உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் (நா.தனுஜா) தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடாகவே தாம் கருதுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலை' பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் இன்று புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்: பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் நேபாளத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஏப்ரல் 27 இல் கைச்சாத்திடப்பட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய 'இமயமலை' பிரகடனத்தைக் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள், அதுகுறித்து இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து அப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் கோரியுள்ளனர். முதன்முதலாக உலகத்தமிழர் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கியதோர் குடை அமைப்பாகவே காணப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம்வகித்த (பின்னர் அதிலிருந்து விலகிய) பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தைக் கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக உலகத்தமிழர் பேரவையானது புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தம்மைக் காண்பித்துக்கொள்வது தவறு எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் எம்மைச் சந்தித்து இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்ததுடன், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அவருக்குரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டது. மாவீரர் நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடியவர்களுக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்றது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுவருகின்றது. இவ்வாறு அடக்குமுறைகள் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தி உலகத்தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி முன்னைய காலங்களில் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயற்பட்டுவந்த உலகத்தமிழர் பேரவை, இன்னமும் அதிலிருந்து மாறவில்லை என்பதையும் இந்நகர்வு வெளிப்படுத்துகின்றது. உலகத்தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர், குறிப்பாக இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் கூட்டமைப்பு உலகத்தமிழர் பேரவையுடன் மிகநெருங்கிய உறவைப் பேணிவந்திருப்பதுடன், கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அதன் தொடர்ச்சியாகவே பேரவை இயங்கிவருகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் விளைவாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி வெகுவாகச் சரிவடைந்தது. எனவே எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் கூட்டமைப்பு 'நல்ல பிள்ளையாக' செயற்பட முயற்சிக்கின்றது. அதன்படி தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. 'இமயமலை' பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 6 அம்சங்களும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அண்மையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்காது. மாறாக அவை தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிட்ட விதத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பை மூடிமறைத்து, அதனை நேர்மறையான விதத்தில் காண்பிப்பதற்கும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதன் ஊடாக தமிழ்மக்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கு முற்றுப்புள்ளிவைத்து போலியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதற்குமே பங்களிப்புச்செய்யும். எனவே இதனை முற்றாக நிராகரிக்கவேண்டுமெனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற பாடத்தை அவர்களுக்குப் புகட்டவேண்டும் எனவும் தமிழ்மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  16. இந்த குழுவில் உங்கள் நண்பரும் கலந்து கொண்டுள்ளார். அவரை கேட்டு எழுதுவீர்கள் என நம்புகிறேன்
  17. சென்னை பார்ட்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது போதைப்பொருட்கள் பாவனைதானே? அல்லது காலம் எனும் காட்டாற்றில் போதைப்பொருளும் ஒரு அம்சம் என சொல்ல வருகின்றீர்களா? விடுதலைப்புலிகள் ஆட்சி இன்றிருந்தால் உங்கள் காலக்காட்டாறு விளையாட்டுக்கள் நடைபெற சாத்தியம் இருந்திருக்குமா? சுனாமிகள் அணையை உடைத்திருக்குமா?
  18. காலம் என்பது காட்டாறு…. அது தடுத்து நிறுத்த முடியாத மோட்டாரு…. சகல விடயங்களிலும் மேனாட்டு நடைமுறைகளை பின் பற்றி கொண்டு சிலதை மட்டும் தவிர்க்க முடியாது. இல்லாவிட்டால் தலிபான் போல் ஒட்டு மொத்தமாக அடித்து மூட வேண்டும். இதெல்லாம் சென்னையில் 98 வாக்கிலேயே வந்து விட்டது. சென்னை என்ன நாசமாயா போய்விட்டது.
  19. நான் வரவில்லை வெளிநாட்டிலே தமிழர்களின் ஆட்டம் பாட்டம் பார்ட்டிகள் எல்லாம் குவிந்து போய் இருக்கின்றது. யாழ்பாணத்தில் உள்ளவர்கள் பாவங்கள் அவர்களையும் enjoy பண்ண அனுமதிப்போம். அவர்கள் அங்கே enjoy பண்ணுவதை தடுப்பதற்காக இங்கே உள்ள கலாச்சார காவலர்கள் விமான ரிக்கற் வாங்கி யாழ்பாணம் போய் அங்கே நடைபெறுகின்ற பார்ட்டிகளுக்குள் இவர்களே போதை வஸ்தை செருகிவிடுவார்கள் போல் தெரிகின்றது.
  20. யாழ்ப்பாணத்திலை இராணுவம் தான் இப்ப தோட்டம் துரவு எல்லாம் செய்யுதாம்.எங்கடையள் எல்லாம் பொறின் சிந்தனையிலை தான் திரியினமாம். ஏனெண்டால் அவையள் வெள்ளைக்காரன் பரம்பரையாம். ஆனால் வெள்ளைக்காரன் நாட்டிலை கக்கூஸ் கழுவியும் வாழ்பவன் தான் ஈழத்தமிழன். காக்கைக்குத் தெரியுமா, எருதின் புண்ணைப் பற்றி....😎
  21. பாருங்க மக்களே பாருங்க….. ஒரே போதை வஸ்து கடத்தல் புள்ளிகளால் யாழ் நிரம்பி வழியுது🤣
  22. போதாகுறைக்கு ஐஸ் போதை யார் குடுகிறார்கள் கனடா பக்கத்தில் இருந்து புலம்பெயர் நாங்கள்தானே கஞ்சாவில் பிடிபட்டவனுக்கும் வக்கீல் அரேஞ் பண்றது புலம்பெயர் இப்ப Dj க்கு வக்காலத்து வாங்கிற ஆட்களை இந்த யாழ் களத்தில் யார் என்று பாருங்கள் உறவுகளே ?
  23. சுவியருக்கு எப்ப பாத்தாலும் ஒரு இது...😀
  24. வெளிநாடுகளில் நடக்கும் தனிப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் அங்கு நடக்கவிருக்கும் ரீன் ஏஜ் DJ கொண்டாட்டங்களையும் ஒன்றாக செருகி குழப்புவதிலையே ஒரு சிலர் குறிக்கோளாக உள்ளனர். அனுபவங்கள் தான் பாடங்கள். எது வேண்டும் எது வேண்டாம் என சொந்த அனுபவங்களும் பார்த்த அனுபவங்களுமே தீர்மானிக்கின்றன. ஆட்டுறைச்சியெண்டால் இரண்டு பெக் கேட்பது போல DJ மியூசிக் எண்டால் கஞ்சாவை சுருட்டி இரண்டு இழுவை இழுத்து விட்டால் அந்தமாதிரி இருக்கும்.அது மட்டுமல்ல வடகிழக்கு பகுதிகளில் வாலிப பருவத்தினரிடையே இப்போது நடப்பது கட்டுப்பாடற்ற போக்கு. சட்ட திட்டங்களும் ஒழுங்கில்லை. திருப்பி கேள்வி கேட்டாலே கத்திக்குத்து வாள் வெட்டு.அங்கு போதை பொருளுக்கும் பஞ்சமில்லை. மேலை நாடுகளிலையே பார்ட்டி என்றால் அந்த ஏரியா காவல்துறையே கண்ணுக்குள் எண்ணை விட்டு அவதானித்துக்கொண்டிருக்கும்.ஆனால் அங்கு காவல்துறையே போதை பாவிப்பதை உற்சாகப்படுத்தும் ஒரு பிரச்சனையை அமுக்க,அடக்க,மறக்க வைக்க பல விடயங்களை அறிமுகப்படுத்தலாம்.அரசும் அதை முன்னெடுத்து செய்யும். இதைத்தான் மேற்குலகம் பல இடங்களில்,நாடுகளில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. அவன் கிணத்துக்குள் விழ்ந்தால் நாமும் கிணத்துக்குள் விழ வேண்டும் அவசியம் யாருக்குமில்லை. மற்றும் படி நான் இசை ,கொண்டாட்டங்களுக்கு எதிரியல்ல. அடி தூள்...🤣
  25. சஜித் பீரேமதாசாவின் தேர்தல் விஞ்ஙாபனத்தில் மூன்றில 2 பங்கு இமாலயப் பிரகடனமாம் என்றால் யோசித்துப் பாருங்கள் தீர்வுத்திட்டம் எவ்வளவு பலவீனமானதென்று. அதனால்தான் இந்தத்தீர்வுத்திட்டத்தை பிக்ககள் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்க். அதுமட்டுமல்லாமல் தமிழர் அடையாளத்தை அழிக்கச் சொல்லி சஜித் சொல்கிறார் அது படிப்படியாக நடைபெறும் என்று சுரேன் சொல்கிறார். இது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் இல்லை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் குள்ள நரி ரணிலின் தீர்வுத்திட்டம்.
  26. அதையேன் பேசுவான்? இந்தா வருட இறுதிப் பார்ட்டிகள் வருகின்றன. போக விருப்பமில்லா விட்டாலும் "Asian Uncle Dance" என்று நான் செல்லமாக அழைக்கும் டான்சுகளைப் பார்ப்பதற்காகவே போவதுண்டு. Asian Uncle Dance என்ன என்று அறிய தமிழ் பாடசாலைப் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு வீடியோக்களைத் தேடிப் பாருங்கள், புரியும்😂!
  27. குதிரை ஓட்டுபவரை ஜாக்கி என்பது போல் இது டிஸ்க் ஜாக்கி disc jockey என்பார்கள் இந்த ஜாக்கிகள் வெகு குறிப்பிட்ட சிலர்தான் இன்னும் புகழின் உச்சத்தில் இன்னும் இருக்கிறார்கள் .கடைசியாக ஒரு பெண் கூட உள்ளார் ஆசியா பக்கத்தில் பெயர் மறந்து விட்டது இன்னார் ஜாக்கி என்றால் ரிக்கட் விலை எகிறும் . சிலது சாம்பிள் கீழே . இன்னிக்கு செவ்வாய் இரவு விரதம் மரக்கறி வீடுகளில் சவுண்டை கூட்டி கள உறவுகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் கம்பனி பொறுப்பாகாது 😀
  28. எனக்கும் அது புரியவில்லை. ஐரோப்பாவில் ஹொட்டேல்களில் தங்கும் விருந்தினர்கள் தங்கும் ஒவ்வொரு இரவுக்கும் city tax செலுத்துவது போல. இருக்குமோ? அப்படி என்றாலும் அனுமதி தேவையில்லை பங்கு பற்றுவோருக்கு tax payment செய்தால் போதுமானதே! இதிலை கற்பனைக்கு என்ன விடுகின்றீர்கள். Open up எல்லோரும் அன்று துடிப்புடன் ஆடி இன்று நடக்க இருக்க எழும்ப கஷ்ரப்படும் நிலையின் விரக்தி வெளிப்பாடு. 😂
  29. ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂
  30. மொறு மொறு மீல் மேக்கர் கட்லட் .........! 👍
  31. சாதாரணமாய் வீட்டில் மிளகாய், வாழைக்காய், கத்தரி பஜ்ஜிகள் போடுவதுண்டு ஆனால் மாங்காய் பஜ்ஜி இதுவரை போடவில்லை ஒருக்கால் போட்டுப் பார்க்கத்தான் வேணும்........! 👍 சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு பதிவு இட்டது மகிழ்ச்சி, கவனமாக இருங்கள் தோழர்.......! நன்றி தோழர்......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.