Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    45
    Points
    8907
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2956
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46791
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/19/24 in all areas

  1. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  2. புகையிரதம் முழுவதும் சிங்களவர்கள். ஓரிரு தமிழர்கள். பேச்சிற்குக் கூட தமிழர் ஒருவரை அருகில் காண முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு தமிழில் பேசுவது கேட்கும், அதுவும் சில சொற்கள்தான். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களைக் கூடக் காணவில்லை. ஆனால், சிங்களவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பல குடும்பங்கள் யாழ்ப்பாணம் செல்வது தெரிந்தது. யாழ்ப்பாணாத்தில் பார்க்கப்போகும் இடங்கள், இதுவரை எத்தனை முறை யாழ்ப்பாணம் வந்தாயிற்று என்கிற விபரங்கள் அவர்களிடையே பகிரப்பட்டன. அடிக்கடி வந்திருப்பார்கள் போலும். சிலர் இராணுவத்தினரின் குடும்பங்களாக இருக்கலாம். சுமார் 3200 ரூபாய்கள் கொடுத்து குடும்பங்களாக அடிக்கடி வந்துபோவதென்பது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தவரை சற்றுக் கடிணமாகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் இராணுவத்தினரின் குடும்பத்தவர் என்றால் ஒருவருடத்திற்கு குறைந்தது இருமுறையாவது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு இலவசமாக வரமுடியுமாம். இடையிடையே வடை, பழங்கள், தேநீர் என்று விற்றார்கள். பலருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ரயிலில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையாக இருக்கவேண்டும், ஊதா நிறத்தில் மேற்சட்டையணிந்து காலையுணவும், மதிய உணவும் விற்று வந்தார்கள். இரு முட்டை ரோல்களை வாங்கி உண்டேன், பசிக்குப் பரவாயில்லை போல இருந்தது. புளியங்குளம் புகையிரத நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரை மறித்து வைத்திருந்தார்கள். பின்னால் வரும் இன்டர்சிட்டி புகையிரதத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமாம். ஒற்றைத் தண்டவாளத்தில் யாழ்ப்பாணம் செல்வதால் வரும் பிரச்சினை. மைத்துனனுக்கும் நண்பனுக்கு மாறி மாறி தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். நண்பனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மைத்துனனுடன் பேசி ரயில் 3 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்று கூறினேன், "வாங்கோ, மகனை அனுப்பி வைக்கிறன்" என்று மைத்துனன் கூறினார். வன்னியூடாக ரயில் செல்லும்போது யன்னல்வழியாக நிலங்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். இனந்தெரியாத வலியும் பெருமூச்சூம் என்னை ஆட்கொண்டது. இங்கே அவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்கள் கால்பட்ட தடங்களும், அவர்கள் குருதிசிந்திப் போரிட்ட இடங்களும் அவர்களின்றி அநாதரவாகக் கிடப்பது போலத் தோன்றியது. இத்தனை இடங்களை மீட்க எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்தோம், இன்று எல்லாமே வீணாகிப்போய், அநாதைகளாக நாமும் எமது தேசமும் இருப்பது கண்டு வேதனைப்பட்டேன். இருபுறமும் அவ்வப்போது தெரிந்துமறைந்த ஆக்கிரமிப்பின் அடையாளங்களான படைமுகாம்களும், தலைமையகங்களும், வீதியோரங்களில் நேர்த்தியாக மெழுகப்பட்டு, எமது தேசத்தை ஆக்கிரமித்த களிப்பில் கம்பீரமாக வர்ணப் பூச்சில் காணப்பட்டன. ஆனையிறவின் பிற்பகுதியூடாகச் செல்லும்போது தெரிந்த சிங்கள பெளத்த தேசம் எம்மீது கொண்ட வெற்றியின் அடையாளமான சிங்கள பெளத்த இராணுவ வீரன் ஒருவனின் சிலையும், அதனைப் பார்வையிடவென இன்றும் வந்துசெல்லும் கூட்டம் கூட்டமான சிங்களவர்களும், அப்பகுதியில் இராணுவம் அமைத்திருக்கும் உணவு விடுதியும் கண்ணில்ப் பட்டது. விரக்தியும், வெறுப்பும், வேதனையும் ஒருங்கே பற்றிக்கொள்ள முகத்தினை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஒருவாறு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது புகையிரதம். இறுதிப்பெட்டிக்கு முன்னால் உள்ள பெட்டி எனது. பொதிகளை இறக்கிக்கொண்டு இறங்கினேன். இனம்புரியாத சந்தோஷம், எங்கள் ஊர் என்று ஆனந்தம். முன்னால் மெதுமெதுவாகச் செல்லும் பயணிகளைத் தவிர்த்து, கடந்து, வாயிலில் நின்ற ஊழியரிடம் பயணச் சீட்டைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். முன்னால் யாழ்ப்பாணம் சிரித்துக்கொண்டு நின்றது. மூன்று மூன்றரை மணியிருக்கும், வெய்யில் தகதகத்துக்கொண்டிருந்தது. புகையிரத நிலையம் முன்னால் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் வந்திறங்குவோரை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. என்னைக் கூட்டிச்செல்ல மைதுனரின் மகன் வருவான் என்று நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நிலையத்தின் முன்னால் உள்ள வட்ட வடிவ மலர்த்தோட்டத்தின் வேலியின் மேல் சாய்ந்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வரும் பயணிகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். நண்பன் அழைப்பில் வந்தான். "ம‌ச்சான், சொறியடா வர ஏலாமல்க் கிடக்கு, இண்டைக்கு மட்டும் உன்ர மச்சானின்ர வீட்டில தங்கு, நாளையிலிருந்து என்ர பொறுப்பு" என்று கெஞ்சுவது போலக் கேட்டான். "இல்லை ஜெயரட்ணம், நான் மைத்துனரின் வீட்டில் தங்குகிறேன், அவர்களுக்கும் சந்தோசம், நீங்கள் கரைச்சல்ப்பட வேண்டாம்" என்று கூறினேன். "இல்லையில்லை, நாளையில இருந்து என்ர பொறுப்பு" என்று கூறிவிட்டுத் துண்டித்தான். சில நிமிடங்கள் சென்றிருக்கும், ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன், ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி, கையில் இன்னொரு ஹெல்மெட்டுடன் என்னைப் பார்த்துக்கொண்டு, வாயில் சிறிய புன்னகையுடன் நிற்பது தெரிந்தது. அருகில்ப் போய், "நீங்கள் சுவியின்ர மகனோ?" என்று கேட்டேன். "ஓமோம்" என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தான் மைத்துனரின் இளைய மகன். "சரி, வாங்கோ போவம்" என்று அவன் கூறவும், பைகளில் ஒன்றை ஸ்கூட்டரின் அடிப்பகுதியிலும் மற்றையதை எனது மடியிலும் வைத்துக்கொண்டு கன்னாதிட்டி வீதியில் இருக்கும் மைத்துனரின் வீட்டிற்குச் சென்றோம். போகும் வழியெல்லாம் இதயத்துடிப்பு அடங்க‌ மறுத்துவிட்டது. இந்த வாகன‌ நெரிசலுக்குள் எப்படித்தான் ஓட்டுகிறார்களோ என்று அதிசயத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன். வீட்டையடைந்ததும் முதலாவதாக மாமியைச் சந்தித்தேன் (தகப்பனாரின் சிறிய தங்கை, சிறியவயதில் எங்களை பார்த்துக்கொண்டவர், அன்பானவர்). என்னைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அப்படியே அவர் முன்னால் கதிரையில் இருந்துகொண்டு நெடுநேரம் பேசினேன். பல விடயங்கள் இருந்தன பேசுவதற்கு. மைத்துனரின் மனைவி அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர். நான் வருவது தெரிந்து வேளைக்கு வேலையினை முடித்து வந்திருக்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவு பரிமாறப்பட்டது. அருமையான சுவை, நெடுங்காலத்திற்குப் பின் யாழ்ப்பாணத்தில் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட‌ திருப்தி. அவர்களுடன் ஓரிரு மணிநேரமாவது பேசிக்கொண்டிருந்திருப்பேன். நண்பன் மீண்டு தொலைபேசியில் வந்தான், "மச்சான், வாசலில நிக்கிறன், சொல்லிப்போட்டு வா, வெளியிலை போவம்" என்று கூறினான். எனது "சித்தியைப் போய்ப் பார்க்க முடியுமா?" என்று கேட்டேன். "அதுக்கென்ன, வா போவம்" என்று சொன்னான். உடனே வீட்டினுள் சென்று சித்திக்கென்று கொண்டுவந்த சில பொருட்களை அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு கொழும்புத்துறை நோக்கிக் கிளம்பினோம்.
  3. ஒருவாறு 13 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தில்லியில் இறங்கினோம். மிகவும் விசாலமான, நவீன விமானநிலையம். ஆனால், இறங்கியவுடன் முகத்தில் அறையும் துர்நாற்றம். பனிப்புகார்போன்று நகர் முழுவதையும் மூடிநின்ற புகை, சுவாசிக்கவே சிரமப்பட்டவர்கள் சில‌ர் இருந்தார்கள். குறைந்தது 4 முறைகளாவது இருக்கும், தில்லி விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி இறங்க வழி பார்த்துக்கொண்டிருந்தார் விமானி. இடைக்கிடையே தனது சிரமத்துக்கான காரணம் பற்றிக் கூறிக்கொண்டதுடன், 50 ‍- 100 மீட்டர்களுக்குமேல் எதையும் பார்க்கமுடியாது என்றும் கூறினார். அவரது சிரமம் அவருக்கு. கொழும்பில் பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு அவதிப்படுவது போல இந்தியர்கள் இறங்கினார்கள். ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு, தலைகளுக்கு மேலால் பொதிகளை இறக்கிக்கொண்டு, ரொம்பவே அவதிப்பட்டார்கள். விட்டால் இன்னொரு விமானம் ஏறிவிடுவார்கள் போலிருந்தது. நானும் அந்தச் சிங்களவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தோம். நாம் பரவாயில்லை போலிருக்கிறதே என்று எண்ணியிருப்பார். ஒருவாறு சுங்கப்பகுதிக்கு வந்தேன். சீருடை அணிந்த எல்லைப்படை வீரர்கள் எனது பொதிகளை ஸ்கானர் ஊடாகச் சோதித்தார்கள். போதாதற்கு "எல்லாவற்றையும் வெளியே எடு, உனது பொதியினுள் கண்டெயினர் இருக்கிறது" என்று ஒருவன் கோபமாகச் சொன்னான். இன்னுமொருவன் "போன், இடைப்பட்டி, சப்பாத்து, பணப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துவை" என்று சொல்ல, இன்னுமொருவன் பொதியை திற என்று சொல்ல திக்கு முக்காடிப்போனேன். ஆங்கிலம் பேசமாட்டார்களோ? சைகையிலேயே எல்லாம் நடந்தது. ஹிந்தியில் கேட்டான், "எனக்கு உனது பாசை தெரியாது" என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை, எனது சித்திக்கு நான் எடுத்துச்சென்ற என்ஷுவர் மாப்பேணிகளையும், சிக்கன் சூப் கண்டெயினரையுமே அவன் கேட்கிறான் என்பது புரிந்தது. எனக்குத் தெரிந்த வழியில் அவனுக்கு புரியப்படுத்த முயன்றேன். இறுதியாக வெளியே எடுத்துத் திறந்து காட்டினேன். சரி, மூடி வை என்றான். ஒருவாறு அவர்களிடம் இருந்து தப்பித்து கொழும்பு செல்லும் விமானத்திற்குக் காத்திருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று எண்ணி, அப்பகுதி நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த விமானம் வருவதற்கு இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கிறது என்று கடிகாரம் சொன்னது. பெரிய விசாலமான விமான நிலையம். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் (எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா, அவவேதான்). ஆனால், திக்கு எது திசை எதுவென்று ஒருவருக்கும் சொல்லமாட்டார்கள் போல. சர்வதேசப் பயணிகளுக்கான பகுதி எதுவென்று அறிவதற்குள் களைத்துவிட்டேன். தெரியாமல் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். அங்கு ஒருவரும் இல்லை, ஒரேயொரு ஆயுதம் தாங்கிய எல்லைப்படை வீரரைத் தவிர. என்னைக் கண்டவுடன் உடனேயே கோபத்துடன் ஓடிவந்தார். ஹிந்தியில் ஏதோ கேட்டார். ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டிருக்கலாம். மெதுவாக காற்சட்டைப் பையில் இருந்த பாஸ்போட்டை அவருக்குக் காண்பித்து, சிட்னியிலிருந்து வருகிறேன், இலங்கை போக வேண்டும், வழிதெரியவில்லை என்று சைகையில் கேட்டேன். அங்கிருந்து கீழே செல்லும் படிகளைக் காட்டி, கீழே போ, அங்கு கூறுவார்கள் என்பதுபோல சைகையில் ஏதோ சொன்னார். புரிந்ததுபோல இறங்கத் தொடங்கினேன். ஒருவாறும் கொழும்பு செல்லும் விமானத்தின் பகுதிக்கு வந்தாயிற்று. இன்னும் நேரம் இருக்கிறது. சரி, கழிவறைக்குப் போகலாம் என்று எண்ணி, பயணப்பையினைத் தோளில்ப் போட்டுக்கொண்டு உள்ளே சென்றேன். இன்னும் ஊரில் இருக்கும் பழைய காலத்து மிஷனறி வகை கழிவறைகளை வைத்திருந்தார்கள். அருகில் தவறாது தண்ணீர் எடுக்கும் குழாயும், பக்கெட்டும். நவீன கழிவறைகளும் இருந்திருக்கலாம், நான் கவனிக்கவில்லை. உபாதையினைக் கழிக்க புதியது பழையது என்று பார்த்தால் முடியுமா? ஒருவாறு கொழும்பு விமானத்தின் பயணிகளை அழைத்தார்கள். ஒவ்வொருவராக கடவுச்சீட்டைப் பார்த்துவிட்டு விமானம் நோக்கி நடக்கச் சொன்னார்கள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டால், விமானத்தின் கத‌விற்கு ஒரு சில மீட்டர்கள் முன்னால் அதே எல்லைக்காவல் வீரர்கள். இரு ஆண்களும் ஒரு பெண்ணும். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்றால் என்னவென்று அவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம் என்று தோன்றியது. மிக மோசமாக நடந்துகொண்டார்கள். "ஏய், ஓ" என்று அதட்டல்கள். அவர்களது மொழி புரியாத ஒருவர் என்றால், சொல்லத் தேவையில்லை. என்னை அந்தப் பெண் படைவீரர் பரிசோதித்தாள். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துக்கொண்டே, பொதியைத் திற என்று கூறினாள். பொதியின் மேற்பகுதி அறுந்துவிட்டதால் என்னால் மழுமையாக அதனைத் திறக்க முடியவில்லை. முடிந்தவரையில் உள்ளே இருந்தவற்றை அவளுக்குக் காண்பிக்க முயன்றேன். "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வினவினாள். சிட்னி என்றேன். "எங்கே போகிறாய்?" என்று கேட்டாள், கொழும்பு என்று பதிலளித்தேன். பயணப்பொதிக்குள் இருக்கும் சொக்லெட் பெட்டிகளைக் கண்டுவிட்டாள், "இவற்றை யாருக்காகக் கொண்டுபோகிறாய்?" என்று கேட்டாள். பின் தானே "ஓ, பிள்ளைகளுக்கா?" என்று அவளே கேட்கவும் நானும் ஆமென்று விட்டேன். என்ன நினைத்தாளோ தெரியாது, "இல்லையில்லை, நீ எதனையும் திறந்துகாட்டவேண்டாம், உனது பிள்ளைகளுடன் விடுமுறையினை சந்தோஷமாகக் கொண்டாடு" என்றுவிட்டுப் புன்னகைத்தாள். பரவாயில்லை, ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று தோன்றியது. அவளுக்குப் பலமுறை நன்றிகூறிவிட்டு விமானத்தின் உள்ளே சென்றேன்.
  4. ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது. எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?” “ஓம், வாறன்” “ விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம். ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்” நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு ‘லொக்கரில்’ என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு 106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறது” என்று தகவலைத் தந்தார்கள். கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். “போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்” என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார். “லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்” என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார். எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை” என எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார். “நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்” என முகமது குறிப்பிட்டான். “போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என லூக்கா சொன்னான். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” என எல்விஸ் சொன்னான். அரச சட்டத்தரணியான லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள். ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என முடித்தார். நீதிபதி தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது…” நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார் “முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது” ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” வழக்கு முடிந்து விட்டது. ஆனால், டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளா? அல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? Photos Thumilan Selvakumaran
  5. மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன். உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது. வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  6. கொழும்பு செல்லும் விமானம் சற்றுச் சிறியது. பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். இந்தியாவிலிருக்கும் பெளத்த யாத்திரீகர் தலம் ஒன்றிற்குச் சென்றுவருகிறார்கள் என்று தெரிந்தது. சில முஸ்லீம்கள், ஒரு சில தமிழர்கள். இரண்டரை மணித்தியாலப் பயணம் என்றாலும், இரவுணவும், குடிக்க மென்பான‌மும் தந்தார்கள். ஓரளவிற்கு மரியாதையுடன் பேசினார்கள். கட்டுநாயக்காவில் இறங்கியதும் பல்வேறு உணர்வுகள். முதலில் பயம், பின்னர் எமக்கு நடந்த அநீதிகள், அதைத் தொடர்ந்து எமது அழிவுகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் இலங்கையின் கோட்டை கொத்தளங்கள் என்றெல்லாம் நினைவிற்கு வந்துபோனது. இலங்கைக்கு வந்தாயிற்று, அவர்கள் சொல்வதன்படியே ஆடவேண்டும். உணர்வுகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிடு என்று மனம் சொல்லியது. ஆகவே அப்பாவியாக சுங்க அதிகாரிகளின் பக்கம் சென்றேன். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் பதிந்து தந்தான் ஒருவன். நன்றி என்று சொல்லிவிட்டு பொதியை எடுக்கும் பகுதிக்குச் சென்றேன். சில நிமிடங்களில் பொதி வந்து சேர்ந்தது. எடுத்துக்கொண்டே வெளிச்செல்லும் பகுதி நோக்கிச் செல்கையில் எனக்கு முன்னால் சென்ற இளைஞன் ஒருவனை விமானப்பட வீர‌ன் ஒருவன் விசாரிப்பது தெரிந்தது. ஆகவே, அவன் பின்னால் எனது நேரத்திற்காகக் காத்து நின்றேன். அவனை அனுப்பிவிட்டு என்னைப் பார்த்தான். கடவுச்சீட்டை அவனிடம் கொடுத்தேன், வாங்கிப் பார்த்துவிட்டு நீ போகலாம் என்று சொன்னான். வெளியே வந்தேன். வெளியில் சித்தப்பா. கண்டதும் கைலாகு கொடுத்து வரவேற்றார். அவர் ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் பொதிகளை ஏற்றிக்கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் கொட்டகேன நோக்கிச் சென்றோம். யாழ்ப்பாணாத்திற்குப் போகுமுன் ஒருநாளை கொழும்பில் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதன்படி அக்காவைச் சென்று சந்தித்தேன். மதிய உணவு, ஷொப்பிங் என்று சில மணிநேரங்கள் சென்றது. பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். பற்பசை, பல்துலக்கி, சவர்க்காரம், டியோட்ரண்ட், ஷேவிங் ரேஸர் இப்படி இந்தியாதிகள். பின்னேரம் தூக்கம். காலையில் 4 மணிக்கு எழுந்தாயிற்று. புகையிரதம் 5:45 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து கிளம்பிவிடும், தவறவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அந்தக் காலை வேளையில் கொழும்பு சுறுசுறுப்பாகவே இருந்தது. இதேவகையான பல காலை வேளைகளில் கொழும்பின் பல தெருக்களில் அலைந்து திரிந்த காலம் ஒன்றிருந்தது. என்னுடன் பிளட்போம் சீட்டை எடுத்துக்கொண்டு சித்தப்பாவும் உள்ளே வந்தார். இன்னும் நேரம் இருந்தது. உள்ளே அலைமோதியது கூட்டம். எங்குதால் செல்கிறார்களோ தெரியவில்லை, கூட்டம் கூட்டமாகச் சிங்களவர்கள் பயணிக்கிறார்கள். எம்மைச் சிங்களவர்கள் என்று எண்ணி சிலர் வந்து தாம் போகவேண்டிய புகையிரதம் எந்த பிளட்போமுக்கு வரும் என்றும் கேட்டார்கள். மேலே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அட்டவணையினைப் பார்த்து முடிந்தவரையில் அவர்களுக்குக் கூறினோம். எமது புகையிரதத்தை இன்னும் காண‌வில்லை. ஆனால் இன்னொரு பிளட்போமுக்கு யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி வந்திருந்தது. பெருத்த கூட்டம் ஒன்று அதனுள் அவசரப்பட்டு ஏறுவது தெரிந்தது. நாம் நிற்பது சரியான பிளட்போம தானா என்று சித்தப்பாவைக் கேட்டேன். எனது பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு ரயில் அதிகாரியொருவரிடம் அவர் வினவினார். நீங்கள் யாழ்தேவிக்கு பணம் செலுத்தியிருக்கிறீர்கள். அது வந்துவிட்டது. இன்டர் சிட்டி மட்டுமே இங்கு வரும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறினார். அவசர அவசரமாக பொதிகளை இழுத்துக்கொண்டு படிகளால் ஏறி யாழ்தேவி பிளட்போமிற்குள் இறங்கி புகையிரதத்தினுள் நுழைந்துவிட்டோம். ஒருவாறு இருக்கை தேடி அமர்ந்து, சித்தப்பாவிற்குக் கைகாட்டி அனுப்பிவைத்தேன். புகையிரதம் நகரத் தொடங்கியது.
  7. சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். பார்த்துக்கொண்டு போனால் எயர் இந்தியாவே உள்ளவற்றில் மலிவானதாய் இருந்தது. அதற்கு அடுத்ததாக மலிவான எயர்லங்காவுக்கும் கிட்டத்தட்ட 500 டொலர்கள் வித்தியாசம். எதற்காக அவனுக்குக் கொடுக்க வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கே போய் அங்கிருந்து கொழும்பிற்குப் போகலாம் என்று நினைத்து, அதனை வாங்கிவிட்டேன். பயணச் சீட்டு வாங்கியாயிற்று, ஆனாலும் பயணம் நடக்குமா என்பது இன்னமும் உறுதியில்லை. இறுதிநேரத்தில்க் கூட வீட்டில் சூழ்நிலை மாறலாம். பிள்ளைகள் ஏதாவது கூறலாம் என்று நினைத்து மூத்தவளிடம் "நான் தனியே போவதுபற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் போகத்தான் வேணுமப்பா, அவ உங்களைப் பாத்தவ, போட்டு வாங்கோ, நாங்கள் சமாளிக்கிறம்" என்று சொன்னாள். அப்பாடா, பிள்ளைகள் ஓக்கே, அப்போ பயணிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சரி, யாழ்ப்பாணத்தில் எங்கே தங்குவது, கொழும்பில் எங்கே தங்குவது, பயணிப்பது எங்கணம் என்று அடுத்த விடயங்கள் தொடர்பான கேள்விகள். கொழும்பில் தங்குவதற்கு மனைவியின் சித்தியின் வீடு இருந்தது. என்னை ஒரு சில நாட்களுக்கு தம்முடன் தங்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இல்லையென்று சொன்னார்கள். எனக்கும் நன்கு பரீட்சயமானவர்கள்தான், நானும் ஆமென்றுவிட்டேன். விமானநிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது முதல், யாழ்ப்பாணத்திற்கான ரயில் சீட்டுக்களை முன்பதிவுசெய்து, அதிகாலை 5 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையம் வந்து, ஓடி- ஏறி ஆசனம் பார்த்துத் தந்ததுவரை எல்லாமே சித்தப்பாதான். கடமைப்பட்டிருக்கும் சிலரில் அவருமொருவர். சரி, பயணத்திற்கு வரலாம். யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் பார்க்கவேண்டும். நண்பனிடம் கேட்டேன். "நீ பேசாமல் வா, நானெல்லோ இடம் ஒழுங்குபடுத்தித் தாரது" என்று சொன்னான். அவன் சொன்னால் செய்வான் என்பது தெரியும், ஆகவே மீண்டும் கேட்டுத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை. பயணிப்பதற்கு முதல்நாள் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். "மச்சான், அறுவைச் சிகிச்சை ஒன்றிற்காக கொழும்பு வந்திருக்கிறேன், ஆறுதலாய் எடுக்கிறேன்" என்று பதில் வந்தது. அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது? வேறு இடமும் ஒழுங்குசெய்யவில்லையே, சரி போய்ப் பாப்பம் என்று கிளம்பிவிட்டேன். யாழ்ப்பாணத்தில் மைத்துனனின் வீடு இருக்கிறது, அவசரமென்றால் அங்கு தங்கலாம் என்று சொல்லியிருந்தான். ஆகவே, பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டேன். இந்தப் பயணத்தில் நான் செய்யவேண்டிய இரு முக்கிய விடயங்கள் என்று நான் நினைத்தவைகளில் முதலாவது சித்தியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது. மற்றையது வன்னிக்குச் செல்வது. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே நானும் செல்வது, முள்ளிவாய்க்காலில் இறங்கி வணங்குவது. இவைதான். வேறு எதுவுமே மனதில் இருக்கவில்லை.
  8. 2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.
  9. இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன். நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூதர்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அதுவரை உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்துதிரிந்த அவர்களுக்கு இஸ்ரேல் எனும் தமது மூதாதையர் நாட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்தின் தலைமையில் மேற்குலகு ஆதரவு வழங்கியது, இதற்கான காரணம் அவர்கள் முகம்கொடுத்த அழிவுகளும் துன்பங்களும்தான். நவீன இஸ்ரேலின் உருவாக்கத்தினையடுத்து, சுற்றியிருந்த அரபுநாடுகள் அதனை முற்றாக அழித்துவிட மேற்கொண்ட இருபெரும் யுத்தங்களின் போதும் (1967 ஆம் ஆண்டின் ஆறுநாள் யுத்தம், 1973 இன் யொம் கிப்புர் யுத்தம்) யூதரின் பக்கமே அரபுலகத்தைத் தவிர்த்த உலக அனுதாபம் இருந்தது. ஆனால், இஸ்ரேல் அதன்பின்னர் நடந்துகொண்ட முறை அந்த அனுதாபத்தினை சிறிது சிறிதாகக் குறைத்து ஈற்றில் மேற்கின் ஒரு சில நாடுகளின் ஆதரவு என்று சுருங்கிவிட்டது. இதற்கான முக்கியமான காரணம் பாலஸ்த்தீனத்தின்மீதும், அம்மக்கள் மீதும் இஸ்ரேல் நடத்திவரும் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தான். எமது தாயகத்தில் , எமது தாயக‌க் நிலத்தொடர்பை உடைத்தெறிந்து நடைபெற்றுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இஸ்ரேலின் ஆலோசனையின் பெயரில் நடத்தப்படுபவை என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால், அதுதான் உண்மை. உலகெங்கும் சுயநிர்ணய உரிமை கோரிப் போரிடும் இனக்குழுமங்களுக்கெதிரான ஆக்கிரமிப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் இஸ்ரேலின் மொசாட் உதவிவருவது வெளிப்படை உண்மை. சரி, அக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னதான யுத்தத்திற்கு வரலாம். இஸ்ரேல் பாலஸ்த்தீனர்கள் மீது நடத்திவந்த அடக்குமுறைகளும் படுகொலைகளும் எந்தளவு தூரத்திற்கு மனித நேயத்திற்கு எதிரானதோ, அதற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ஹமாஸ் அக்டோபர் 7 இல் நடத்திய தாக்குதல். தமிழர்களின் நிலத்தொடர்பை ஊடறுத்து அமைக்கப்பட்ட இராணுவமயப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களும் ஹமாஸ் நடத்திய தாக்குதலும் பல விடயங்களில் ஒத்துப்போகின்றன. யூதர்களைக் கடத்திச் சென்றது, பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கியமை என்பதைத் தவிர புலிகளும் ஹமாஸும் நடந்துகொண்டது ஒரே வகையில்த்தான். கொல்லப்பட்டவர்களில் ஆயுதம்தரித்த குடியேற்றக்காரர்களும் அடக்கம், இரு சம்பவங்களிலும். நடக்கும் குடியேற்றங்களை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதே குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம். ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்தும் யுத்தம் முற்றான அழித்தொழிப்புடன் கூடிய ஒரு இனக்கொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. போரிடும் தரப்புக்களுக்கு பின்னால் நின்று சாமரம் வீசும் ஈரான் ஆகட்டும், ஹூத்தீக்களாகட்டும், அமெரிக்காவாகட்டும், இவர்கள் எவருமே கொல்லப்படும் பாலஸ்த்தீனர்களுக்காகவோ கொல்லப்பட்ட யூதர்களுக்காகவோ உண்மையாக இரங்கவில்லை. பாலஸ்த்தீனர்களினதும், யூதர்களினதும் அவலங்களைப் பாவித்து தத்தமது தனிப்பட்ட இலாபங்களை அடைய விளைகிறார்கள். எமது போராட்டத்தில் இந்தியா ஒருபக்கமும் அமெரிக்கா இன்னொரு பக்கமும் சாய்ந்து செயற்பட்டது போல. போகிறபோக்கில் நீங்கள் ஈழத்தமிழரையும் தொட்டுவிட்டுச் செல்கிறீர்கள். இலங்கை இலங்கையர்களுக்குச் சொந்தமா? எல்லோரையுமே நீங்கள் கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் ஒன்றாக நடத்துகிறார்களா? அப்படி நடத்தியிருந்தால் நாம் தனிநாடு கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது? எமது போராட்டம் தனிநபர்களால் தூண்டிவிடப்பட்ட தேவையற்ற போராட்டம் என்று கூறும் அளவிற்கு உங்களின் எண்ணம் சுருங்கக் காரணம் என்ன? அல்லது இதுதான் உங்களின் உண்மையான நிலைப்பாடா? நல்லது, வெளியே வந்திருக்கிறீர்கள்.
  10. இதை வாசிக்க வாசிக்க ஆனந்தமாக இருக்கின்றது. யான் படும் துன்பம் மற்றவர்களும் படும் போது எழும் ஆறுதல் இருக்கே... சொல்லி மாளாது! இதே வசனங்களுடன் "உங்கள் படத்தை வேறு போட்டு எழுதுகிறியள்... முகனூலிலும் அரசியல் எழுதி அவனே அடிக்கடி உங்களை தடை செய்கிறான்" என்ற வசனங்களும் சேரும்.
  11. பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான் என்று சொல்லும்போதே நினைத்தேன், நீங்கள் கூட வேலை செய்யும் நண்பர்கள் சொல்வதைத்தான் ஒப்புவிக்கிறீர்கள் என்று. வெள்ளை சிவப்பு வைன்களில் சீனி இல்லை. 100 கிராம் சிவப்பு வைனில் 0.6 கிராமும் வெள்ளையில் 1கிராமும் உண்டு. கலோரி அளவில் வெள்ளை வைனை விட சிவப்பில் சற்று அதிகமாக உள்ளது (ஜஸ்ரின் குறிப்பிட்ட sweet wine வேற). உங்கள் வைத்தியர் தலையாட்டியது மிகச் சரி. வெள்ளை வைன் அருந்தியதால்தான் மாரடைப்பு வந்தது என்று முடிவெடுப்பதற்கு நீங்கள் ஒன்றும் பகுத்தாய்வாளர் இல்லை. சிவப்பு வைன் பாவித்திருந்தால் சில வேளை முன்னதாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். இன்றைய அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று தெரிந்து கொள்வது தவறல்ல. கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களில் எத்தனை கலோரி, சீனி, கொழுப்பு உண்டென்று குறிக்கப்படுவது கட்டாயம். ஏனென்றால் நாமாகவே இன்னென்ன உணவில் சீனி உண்டு இல்லை என்று முடிவெடுக்க முடியாது. நாம் தெரியாமலே இத்தனை நாள் சாப்பிடும் உணவில் கலோரிகள் ஏதாளமாக இருக்கலாம். அரைகுறை அறிவோடு எனக்கு நானே வைத்தியன் என்ற முடிவை நான் எப்போதும் எடுக்க மாட்டேன். வைத்தியரின் ஆலோசனையைப் பிரதானமாகவும் எனது தேடலை மேலதிகமாகவும் கொண்டே எனது உணவு, மருந்து பாவனைகள் இருக்கும். இறுதியாக, இது இலங்கையில் சராசரி ஆயுட்காலம் 60 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை. 60 ஆம் ஆண்டுக்கு முன் வைன் குடிக்கவில்லை, சீனி, பசுமதி, இனிப்பு, இறைச்சி உண்ணவில்லை, சதாரண வருத்தத்துக்கு மாத்திரைகள் எடுக்கவில்லை, அமெரிக்கன் மருந்து விற்பதற்காகப் புதிய நோய்களை உருவாக்கிப் பரப்பவில்லை, வைத்தியர் வியாபாரியாக இருக்கவில்லை… ஆனாலும் அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை? இவ்வளவு அறிவுரை கூறும் உங்களிடமே இதற்கான பதிலையும் எதிர்பார்க்கிறேன் (வழக்கம்போல், எழுதினால் வெட்டுவீர்கள் என்று நழுவ வேண்டாம்).
  12. எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி. சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனடிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அப்போது இந்தியா இவ்விடயத்தில் தலையிடவே இல்லை. 1983 இலிருந்துதான் இந்தியா எமது பிரச்சினையில் தலையிட ஆரம்பித்தது. அதற்கு வித்திட்டவர் இந்திரா. ஆனால், 1983 ஆம் ஆண்டின் இனக்கொலை தமிழர்கள் தனித் தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதையும், அவர்கள் தம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்த முடியாது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு உணர்த்திற்று (உங்களுக்கு அந்த உணர்வு வரவில்லையென்றால் பிழை தமிழர்களில் அல்ல). 2009 இல் நடந்தவை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்கள் "இலங்கையர்" என்று கூறி மகிழ மாட்டீர்கள். இந்தியா தலையிட்டது தனது நலன்களை காத்துக்கொள்ளவே. அதற்கும் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல. எமது போராட்டம் இந்திய நலன்களுக்கான போராட்டம்தான் என்று நீங்கள் நம்பினால், அது உங்களின் அரசியல் அறிவை, எமது போராட்டத்தின் சரித்திரம் தொடர்பான புரிதலைக் காட்டி நிற்கிறது. அழிக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் மட்டும்தான். ஆனால், எமது இருப்பிற்கான, மொழிக்கான, தாயக‌க் காப்பிற்கான போராட்டமும் தேவையும் என்றுமில்லாதவாறு இன்று அதிகமாகவே இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாது, நாம் அனைவருமே இலங்கையர் என்று நீங்கள் கூறி மகிழ்வீர்களாக இருந்தால்,பிழை என்னில் இல்லை. இந்தியாவையும், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவினையும் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, எனது கேள்விக்கு பதில் தாருங்கள். இலங்கையில் இன்று தமிழர்கள் சம உரிமையினைக் கொண்டு, தமது மொழிக்கான சம அந்தஸ்த்தினைக் கொண்டு, இராணுவ ஆக்கிரமிப்பின்றி, தமது தாயகம் காவுகொள்ளப்படாது, பெளத்த மயமாக்கப்படாது சிங்களவர்களுக்கு நிகரான சுதந்திரத்தைக் கொண்டு வாழ்கிறார்களென்று நம்புகிறீர்களா?
  13. எனக்கு முதல் மாரடைப்பு வந்ததே வெள்ளை வைன் அடிக்க தொடங்கிய போதுதான்.நான் வழமையாக சிவப்பு வைன் அருந்துபவன். பிரசரும் சுகரும் கூட வெள்ளை வைன் அடியும் என ஒரு பழைய காய் ஆலோசனை தந்தார்.வைத்தியரிடம் வெள்ளை வைன் பற்றி ஆலோசனை கேட்க அவரும் தலையாட்டினார். விளைவு இரண்டு குளிசை மேலதிகமாக....... நிழலியாரே! மாலை 6 மணிக்கு பின் மதுபானமோ அல்லது கொழுப்பு சார்ந்த சாப்பிடாமல் ஒரு மாதம் இருந்து பாருங்கள். சொர்க்க வாசல் தெரியும். காலை மாலை வயிறார எதையும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு மாலையில் தண்ணீர் மட்டும் குடியுங்கள் சொர்க்கத்தின் வாசலே திறக்கும். இதுவும் என் சொந்த அனுபவம்.
  14. விடுதலை புலிகளின் 40 வருட செயல் பாடுகளை தோல்வியில் முடிந்ததை போல திரைக்கதை வசனம் அமைக்கும் மாக்கள் கூட்டம் இதையும் தான் கொஞ்சம் கேட்கலாமே. தலைவர் கணிப்பின்படி ஒரு இளைய சமூகம் சரியாகவே சிந்திக்கிறது.
  15. வேதப்பள்ளியும் சாதப் பள்ளியும் ...... நின்றபடி நகைசுவை .......! 😂
  16. இவன் யாரை தனது எதிரியென்று சொல்கிறான்? தமிழ் மக்களையோ? தமிழினத்திற்குத் துரோகம் இழைத்து, எதிரியுடன் நின்று தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொன்றாயே, அந்தத் தமிழர்களையா சொல்கிறாய்? இன்னுமாடா உன்னை தமிழ்ச் சனம் நம்பும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
  17. பயண நாள். கார்த்திகை 24, காலை மனைவி விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். வழமையான விமான நிலைய சடங்குகளுக்குப் பின்னர் 58 ஆம் இலக்க வாயிலுக்குப் போகச் சொன்னாள் எயர் இந்தியா விமானப் பணிப்பெண். சில நூறு பேராவது இருக்கும். அப்பகுதியெங்கும் இந்தியர்கள். ஒருகணம் நான் நிற்பது சிட்னி விமானநிலையம்தானோ என்று எண்ணவைக்கும் வகையில் இந்தியர்களின் சத்தம். பெரும்பாலும் ஹிந்தி, இடையிடையே மலையாளம் அல்லது தெலுங்கு. தமிழ் மருந்திற்கும் இருக்கவில்லை. 10 மணிக்கு எம்மை விமானத்தினுள் அனுமதிக்கவேண்டும், 11 மணிவரை விமானம் ஆயத்தமாக இருக்கவில்லை. நின்ற பல நூற்றுக்கணக்கான இந்தியர்களையும் என்னையும் இரு வரிசைகளில் நிற்கச் சொன்னாள் இன்னொரு பணிப்பெண். முதலாவது வரிசை பணக்காரப் பயணிகளுக்கானது, பிஸினஸ் கிளாஸ். அதன்பின்னர் சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள். சிலர் அதுவரை தம்முடன் நடந்துவந்த தம்து பிள்ளைகளை திடீரென்று இடுப்பில் தூக்கி வைப்பதையும் காண முடிந்தது. இறுதியாக, என்னைப்போன்ற‌ சாதாரணமானவர்களை அழைத்தார்கள். உள்ளே சென்று, இருக்கையின் இலக்கம் பார்த்து அமர்ந்துகொண்டேன். மூன்றிருக்கை அமைப்பில், ஒரு கரையில் எனது இருக்கை. எனதருகில் ஒரு இந்தியப் பெண்ணும் அவரது சிறிய வயது மகனும் அமர்ந்துகொண்டார்கள். சிறுவன் அருகிலிருந்து என்னை உதைந்துகொண்டிருந்தான். எதுவும் பேசமுடியாது, பேசாமல் இருந்துவிட்டேன். அப்பெண்ணினது கணவனும் இன்னொரு கைக்குழந்தையும் எமக்குப் பின்னால் உள்ள வரிசயில் அமர்ந்திருந்தார்கள். அக்குழந்தை தொடர்ச்சியாக அழுதபடி இருந்தது. இடைக்கிடையே அக்குழந்தையை அப்பெண் தூக்கியெடுப்பதும், கணவரிடம் கொடுப்பதுமாக அவஸ்த்தப்பட்டுக்கொண்டிருந்தாள். கணவன் விமானப் பணிப்பெண் ஒருத்தியிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும், என்னிடம் வந்து "சேர், உங்கள் இருக்கையினை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சென்று அமர முடியுமா?" என்று கேட்டாள். எனக்குப் புரிந்தது, "சரி, செய்யலாமே" என்று எழுந்து மாறி இருந்தேன். அதன்பின்னர் எவரும் என்னை உதைக்கவில்லை. நான் இருந்த வரிசையில் மூன்று இருக்கைகள். நான் யன்னலின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். நடுவில் எவரும் இருக்கவில்லை. மூன்றாவது இருக்கையில் ஒருவர் அமர்ந்துகொண்டார். இந்தியராக இருக்கமுடியாது. தமிழராக இருக்கலாம். சிலவேளை சிங்களவராகவும் இருக்கலாம், பேசவில்லை. 55 வயதிலிருந்து 60 வரை இருக்கலாம். கறுப்பான, மெலிந்த , சிறிய தோற்றம் கொண்ட மனிதர், தனியாகப் பயணம் செய்கிறார் போல. மதிய உணவு பரிமாறப்பட்டபோது, சலித்துக்கொண்டேன். நன்றாகவே இருக்கவில்லை. பாதி அவிந்தும், மீது அவியாமலும் இருந்தது உணவு. வேறு வழியில்லை, சாப்பிட்டே ஆகவேண்டும். அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணி, "நீங்கள் இந்தியரோ ?" என்று கேட்டேன். "இல்லை, இலங்கை" என்று கூறினார். "ஓ. அப்படியா, இலங்கையில் எங்கே?" என்று கேட்டேன். "கொழும்பு" என்று அவர் கூறினார். "நான் யாழ்ப்பாணம்" என்று கூறினேன். சிட்னியில் என்ன செய்கிறோம், எத்தனை வருடங்களாக வாழ்கிறோம் என்று சில விடயங்களைப் பகிர்ந்துவிட்டு மீண்டும் மெளனமானோம். அவர் தூங்கிவிட்டார். நானோ எனக்கு முன்னால் திரையில் தெரிந்துகொண்டிருந்த விமானத்தின் பறப்பின் பாதையினை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
  18. இல்லை. இது அவர்கள் சமுதாயத்தில் சர்வ சாதாரண விடயம். அவர்கள் அப்படித்தான், இது பற்றி இங்கே ஒரு கருத்தை வைத்திருந்தேன். நிர்வாகம் நீக்கி விட்டது. ஒரு இனத்தை தரக்குறைவாக எழுதியதற்காகவும் இருக்கலாம்.
  19. என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்சைகளைக் குழந்தைகளில் செய்கிறார்கள் என இணையக் குப்பையில் இருந்து ஆதாரமில்லாத தகவலை இங்கே பதிந்திருக்கிறீர்கள். ஓநாய் வீடியோ தேடும் நேரத்தின் பத்திலொரு பங்கு நேரம் போதும் - AAP இன் பால் மாற்ற சிகிச்சை விதிகள் எவையென்று தேடிப்பார்க்க. இப்படியான தவறான தகவல்களை எழுதி விட்டு சவாலுக்குட்படுத்துபவனை அடக்கு முறையாளன், சூடு சொரணையற்றவன் என்று சம்பந்தமேயில்லாமல் திட்டல் வேற. 2. திரியோடு ஒட்டிய கருத்து: ஈராக், ஈரான், மேற்கு பற்றிய திரியில் ஒரு பாலின உறவு , பால் மாற்றம் பற்றிய பொய் தரவுகளை யார் கொண்டு வந்தது? வாசகர்களே தேடிப் பார்க்கட்டும். 3. சீண்டல்: உங்கள் மருந்தே உங்களுக்கு ஏன் கசக்கிறது? நேரே பதில் சொல்லும் துணிவோ, நேர்மையோ இல்லாமல் உங்கள் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டும் உறுப்பினர்களை எப்படி நீங்கள் விளித்திருக்கிறீர்கள் இது வரை? எனவே உங்கள் பாணியிலேயே ஈரானைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் புரிந்திருப்பது திருப்தி. பி.கு: இணையத்தில் கலாச்சார யுத்தம் நடத்தும் தீவிர வலது சாரிகள், தங்கள் மருத்துவ/அறிவியல் அடிப்படையற்ற குப்பைகளைப் பரப்ப உங்கள் போன்ற ஆட்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் தகவல்களை சரி பார்க்காமல் யாழுக்கு எடுத்து வருகிறீர்கள் - உங்களுடைய இந்த அறிவடிமைத் தனம் பற்றி ஒரு கரிசனைகூட இல்லாமல், சரியான தகவலைத் தர முயல்பவனை நோக்கி பாட்ஷா பாணி மிரட்டல் விட்டிருக்கிறீர்கள், அச்சம் வரவில்லை, புன்னகையே வருகிறது.
  20. இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு! சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்” வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மேலும் இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த தருணத்தில் 40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1366575
  21. 23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும் என்றும் ஆதி சொன்னான். கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. “அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோ“ என்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?” “டாடோ” என்றேன். “அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது. 2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய ‘போர்’ அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது. இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள். உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்பு’த்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்” என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன். டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்த ‘சிக்கன் றோல்ஸ்’ மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போக, மாலையில் வேலை முடிய “பியர் கொண்டு வா” என்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன். நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்” என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோ” என ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று. “மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத் திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ? என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது. டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது. அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது. Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt (ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்) கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன
  22. நிழலி, டாடோவின் பிறந்ததினத்துக்கு 2021இல் வரைந்த ஒரு படம் Kandiah57, தெரியாது. வங்கியூடாக பணப் பரிமாற்றங்கள் செய்திருக்க மாட்டார்கள் என் நினைக்கிறேன்
  23. புளியோதரையும் , எலுமிச்சை சோறும் தமிழரின் பாரம்பரிய பயண உணவுகள் (பொதிசோறு) வெங்காயம் .. தக்காளி..? பயணத்திற்கான பொதிசோற்றுக்கு இது தாங்காது.. இது பெங்களூர் சித்ரன்னம் தோழர்.. இவர் கதைப்பதும் கர்நாடக தமிழ்.. அது போக. தனியாக கலவை செய்து சோற்றில் கலப்பதைவிட அரிசியின் ஊடே கலவையை கலந்து கொதிக்க வைத்தால் சுவை அந்த மாதிரி இருக்கும்..
  24. வீட்டுக்கு வீடு வாசல்படி. இதுக்குத் தான் ஒன்றுக்கு இரண்டுக்கு தவிர தனியே எங்கும் போவதில்லை. சிட்னியில் உங்களை சந்திக்க வந்தபோதும் மனைவியுடனே வந்ததை கண்டிருப்பீர்கள். பயணச் சீட்டுகள் எல்லாமே விலை கூட்டிவிட்டார்கள். அத்துடன் நாங்கள் விரும்பிய இருக்கைகளை முன்னர் மாதிரி இலவசமாக எடுக்க முடிவதில்லை. சாப்பாடுகளும் முன்னர் போல தரமானவையாக இல்லை. முதலே ஏன் கேட்டு மாறவில்லை என யோசித்தேன். பரவாயில்லை அவர்களாகவே கேட்டு அடி உதையில் இருந்து தப்பியுள்ளீர்கள்.
  25. பிள்ளைகள் மட்டுமல்ல அந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புழுதியில் காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து ஓடி விளையாடித் திரிந்த எம்மாலேயே தாங்க முடியாமல் இருக்கிறது. மாரி காலமென்றால் மழை வெள்ளம் நுழம்பு அட்டை அதையும் கடந்து செல்ல முடியுதில்லை.
  26. எண்ணமும் என்ன நீ இருப்பது எங்கே .......! ஆர்.எஸ். மனோகர் & ராஜசுலோசனா.......! 😍
  27. எதிரும் புதிருமாக நின்றவர்கள் மாட்டுக்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
  28. விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள் பட மூலாதாரம்,URUGUAYAN AIR FORCE படக்குறிப்பு, "விமானம் உடைந்திருந்தது, வெளியே நான் பனியால் சூழப்பட்டிருந்தேன்." 3 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 13, 1972 அன்று மான்டிவிடியோவை சேர்ந்த ஓல்ட் கிறிஸ்டியன்ஸ் கிளப் பள்ளியைச் சேர்ந்த ரக்பி அணி, சிலியின் சாண்டியாகோவுக்கு செல்ல உருகுவே விமானப்படை விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தது. அந்த நகரத்தில் உள்ள ஓல்ட் பாய்ஸ் குழுவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் விளையாட இருந்தனர். ஆனால், அவர்களோடு சேர்த்து 45 பேரோடு பயணித்த எப்எச் - 227D விமானம் ஆண்டெஸ் மலைகளின் மேல் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழக்க நேர்ந்தது. இதர 17 பேர் அடுத்தடுத்த நாட்களில் காயம் காரணமாகவும், உணவு இல்லாமை மற்றும் அங்கிருந்த அசாதாரண நிலைமைகளாலும் உயிரிழந்தனர். இந்த விபத்து வரலாற்றில் “தி மிராக்கில் ஆஃப் ஆண்டெஸ்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில்கூட “தி ஸ்னோ சிட்டி” என்ற பெயரில் படமாகவும் வெளிவந்துள்ளது. விமான போக்குவரத்து வரலாற்றில் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம். காரணம் இதிலிருந்து தப்பித்த மீதி 16 பேரும், விபத்தில் இறந்து போன சக நண்பர்களின் பிணங்களைத் தின்று பிழைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் விபத்து நடந்து 72 நாட்கள் கழித்தே மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ராபர்டோ கேனெஸ்ஸா தற்போது குழந்தைகள் இதய மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இதய மருத்துவராக உள்ளார். மார்ச் 2016இல் அவர் எழுதிய "நான் உயிர் பிழைக்க வேண்டும்: ஆண்டெஸ் மலையில் ஏற்பட்ட விமான விபத்து எவ்வாறு உயிர்களைக் காக்க என்னைத் தூண்டியது," புத்தகத்தை அவர் வெளியிட்ட நேரத்தில், பிபிசியின் விக்டோரியா டெர்பிஷையர் நிகழ்ச்சி அவரை நேர்காணல் செய்தது. விமான விபத்தில் பிழைத்தவரின் வாக்குமூலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரார்ட்டோ கேனெஸ்ஸா 1974 இதுவே அவரது சாட்சியம். "நாங்கள் ஆண்டெஸ் மலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு மேகமூட்டமாகக் காணப்பட்டது. திடீரென்று , ஒரு விமான ஊழியர் பயணிகளை 'உங்கள் சீட் பெல்ட்களை வேகமாக அணிந்து கொள்ளுங்கள், நாம் மேகங்களுக்கு நடுவே செல்ல இருப்பதால், விமானம் குலுங்கப் போகிறது' என்று கூறினார். உடனடியாக விமானமும் குலுங்கத் தொடங்கியது. யாரோ ஒருவர் என்னை ஜன்னல் பகுதியைப் பார்க்க சொன்னார், நாங்கள் மலைகளுக்கு மிக அருகில் பறந்து கொண்டிருந்தோம். உடனே சிலர் 'நான் சாகக்கூடாது' என்று சொல்லத் தொடங்கினர். விமானம் உயரத்திற்குப் பறக்க முயற்சி செய்தது, ஆனாலும் விபத்தில் சிக்கிக் கொண்டது. நான் என்னுடைய இருக்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். விமானம் தனது இரண்டு இறக்கைகளையும் இழந்து மலைகளில் சறுக்கத் தொடங்கியது. இறுதியில் அது நின்றபோது, எனக்கு முன்னாள் இருந்த பாறையின் மீது மிக வேகமாக நான் பறந்துபோய் விழுந்தேன். எனது தலை கடுமையாக இடித்துக் கொண்டதில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. விமானம் நின்றுவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய கை, கால்கள் இன்னமும் அங்கேயே இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆம் நான் பிழைத்துவிட்டேன்." பட மூலாதாரம்,COURTESY "என்னால் அதை நம்பவே முடியவில்லை. சுற்றிப் பார்த்தால் எல்லாமே மோசமாக நொறுங்கிக் கிடந்தது. சில நண்பர்கள் இறந்திருந்தனர், மற்றவர்கள் காயமடைந்திருந்தனர், ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. சிலரின் உடம்பில் உடைந்த உலோகத் துண்டுகள் குத்திக் கொண்டிருந்தது. நான் இங்கிருந்து வெளியே போக வேண்டும், காவல்துறை வந்துவிடும், அவசர ஊர்தி, தீயணைப்பு வீரர்கள் வந்து விடுவார்கள் என்றெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு விமானத்தின் வால் பகுதிக்குச் சென்றுவிட்டேன். விமானம் உடைந்திருந்தது, வெளியே நான் பனியால் சூழப்பட்டிருந்தேன். அமைதி நிறைந்த மலைகளுக்கு நடுவில் நாங்கள் மாட்டிக்கொண்டதால் நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன்." உடலை வாட்டிய கொடூரப் பசி பட மூலாதாரம்,URUGUAYAN AIR FORCE படக்குறிப்பு, "அங்கிருந்த அதீத குளிரால் நாங்கள் உறைந்து போயிருந்தோம்" "அங்கு தீயணைப்பு வீரர்களும் இல்லை, உதவி எதுவுமே இல்லை. விமானி உயிரோடுதான் இருந்தார், ஆனால் விமானி அறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களால் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. அப்போது அவர் தன் பெட்டியில் துப்பாக்கி இருக்கிறது என்று சொன்னார். அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். இரவு முழுவதும் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால், எங்களால் அவரை வெளியே எடுக்கவே முடியவில்லை. அங்கிருந்த அதீத குளிரால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். அடுத்த நாள், மிகவும் மோசமாகக் காயமடைந்த ஒருவர் இறந்துவிட்டார். அது எனக்கு நல்லதாகவே தோன்றியது, காரணம் அவருக்கு வலி பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. பிழைத்திருந்த மற்றவர்களுக்கு வெறும் பனியும், பாறைகளும் மட்டுமே இருந்தது. வேற எதுவுமே உண்பதற்கு இல்லை. எங்களுக்கு மிகவும் மோசமான பசி மட்டும் இருந்தது. கொடூரமான பசியில் இருக்கும்போது உங்களின் உள்ளுணர்வு எதையாவது சாப்பிடு என்று சொல்லிக் கொண்டே இருக்குமல்லவா? அதனால் காலணிகளின் லெதர் அல்லது பட்டைகளை உண்ணலாமா என்று நாங்கள் யோசித்தோம். அதனால் காலணியின் லெதரை மெல்லத் தொடங்கினோம். ஆனால் அதில் அதிகமான ரசாயனங்கள் இருக்கும் என்பதால் அது எங்களுக்கு விஷமாக மாறக்கூடும் என்று நாங்கள் உணர்ந்தோம். அதைத் தவிர அந்த நேரத்தில் எங்களிடம் உண்ண வேறு எதுவுமே இல்லை." மனித சோதனை "ஒருகட்டத்தில் அங்கிருந்த ஒருவர் 'எனது மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். ஏனென்றால் நமது நண்பர்களின் உடலை உண்ணலாம் என்று எனக்குத் தோன்றுகிறது,' என்று கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் அது முட்டாள்தனம், நாம் அதைச் செய்யக்கூடாது, நாம் நரமாமிசம் உண்பவர்களாக மாறக்கூடாது என்று அவருக்குப் பதிலளித்தனர்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எனது நண்பர்கள் உயிர் வாழ எனது உடல் உதவியாக இருக்குமானால் நான் பெருமையாக உணர்ந்திருப்பேன்." "அந்த நேரத்தில் நான் ஒரு மருத்துவ மாணவன் மற்றும் அந்த உடல்கள் அப்போது இறைச்சி, கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டாக மட்டுமே தெரிந்தது. எனது நண்பர்களின் தனியுரிமையை மீறி அவர்களின் உடலின் பாகங்களை வெட்டுவது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. அங்கிருந்தவர்களில் யாரோ ஒருவர், இயேசு கிறிஸ்து தனது லாஸ்ட் சப்பரில் ‘என்னுடைய உடல் மற்றும் ரத்தத்தை எடுத்துக்கொள்’ என்று சொன்னால் மட்டும் பரவாயில்லையா?' என்று கத்தினார். ஆனால் எனக்கோ அது லாஸ்ட் சப்பர் கிடையாது. இதே நான் அங்கிருந்த பிணங்களில் ஒன்றாக இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பேன் என்று சிந்தித்தேன். எனது நண்பர்கள் உயிர் வாழ எனது உடல் உதவியாக இருக்குமானால் நான் பெருமையாக உணர்ந்திருப்பேன். இன்றும் எனது நண்பர்களின் ஒரு பகுதி எனக்குள் இருப்பது போன்று நான் உணர்கிறேன். மேலும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உடல்களை உண்டு மீட்கப்படும் வரை பிழைத்திருப்பது ஒரு சிலருக்கு மற்றவர்களைவிட மிகக் கடினமாக இருந்தது. அது ஒரு மனித சோதனை என்று நான் அடிக்கடி நினைப்பேன். பின்னால் பிழைத்திருந்தவர்களோடு இறைச்சியைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாகிவிட்டது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விபத்து நடந்து 40 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட படம் பிணங்களை உண்டதைவிடக் கடினமான சவால் "இறந்து போனவர்களின் குடும்பங்கள் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தன. அவர்கள் இறந்து போனவர்களின் உடல்களுக்கு என்ன ஆனது என்பது குறித்துக் கவலைப்படவில்லை. இறந்தவர்கள் உயிரோடு இருந்தபோது என்ன ஆனது என்பது மட்டுமே அவர்களது கவலையாக இருந்தது. இது வேடிக்கையானது, காரணம் இந்தக் கதைக்கு இரண்டு பார்வைகள் உள்ளதாக நான் நினைக்கிறன். ஏனெனில், உயிர் பிழைத்திருக்க நாங்கள் எதிர்கொண்ட கடுமையான சவால்களில், பிணங்களை உண்டதெல்லாம் கடினமான விஷயமாகத் தெரியவில்லை. சிலர் 'அட! பிணங்களைத் திண்றதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்களா" என்று இது ஏதோ மாயமந்திரம் போலக் கேட்கிறார்கள். ஆனால் பிணங்களை உண்டது வெறும் பிழைத்திருப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது மட்டுமே. நாங்கள் அணியாக இருந்து ஒன்று சேர்ந்து பணியாற்றி ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டதால் நாங்கள் பிழைத்தோம் என்பதே கடினமான ஒன்று." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பர் 2010இல், உயிர் பிழைத்தவர்களின் குழு சிலியில் சுரங்கம் ஒன்றில் மாட்டிக்கொண்ட 33 பேரின் உறவினர்களை பார்க்கச் சென்றது. "மலைகளில் இருந்து வெளியேறி 11 நாட்கள் நடந்ததால் நாங்கள் பிழைத்தோம். எங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவும் தொடர்பு கொள்வதற்கும் உதவிய விஷயங்களில் ஒன்று நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம் என்பதும், ஒன்றாக வளர்ந்தோம் என்பதும்தான். எங்களிடம் இருந்ததெல்லாம் உயிர் மட்டுமே. 'அனைத்து முரண்பாடுகளையும் கடந்து இதைச் செய்வோம், என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம்' என்று சொல்லிக்கொண்டோம். நான் மலைகளில் இருந்தபோது எனது நண்பர்கள் இறப்பதைப் பார்த்தேன். அடுத்தது நானாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். அப்போதுதான் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் உள்ள கோடு எவ்வளவு மெல்லியது என்பதைப் புரிந்துக் கொண்டேன். அப்போதிலிருந்து கூடுதல் நாட்களை மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்." https://www.bbc.com/tamil/articles/c4ny1g0eleno
  29. முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள் January 18, 2024 — கருணாகரன் — புலம்பெயர்தோர் வாழ்வைக் குறித்த வேறுபாட்டதொரு புரிதல் மந்தாகினி குமரேஷின் ‘இரை தேடும் பறவைகள்’ கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. புலம்பெயர்தலின் வலியையும் புதிய (பனித்) திணையில் (நிலத்தில்) ஒட்டிக் கொள்ள முடியாத அந்தரிப்பையும் இந்தத் தொகுதியிலுள்ள முதற் கவிதை தொடக்கம் பலவும் சொல்கின்றன. புலம்பெயர் தமிழ்ப்பரப்பின் பெரும்பாலான உணர்வலை இதுதான். கூடவே தாய்நிலம் மீதான நினைவுகளாகவும். ஆனாலது வெறுமனே நினைந்துருகுதல் என்றில்லாமல் விடுதலை வேட்கையாக. இவ்வாறான புலம்பெயர்தல் அல்லது புதிய திணையில் வாழ நேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படும் ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், மியன்மார், ஆபிரிக்க நாட்டினர் என உலகத்தின் பல திசைகளிலிருந்தும் அகதிகளாகிப் பெயர்ந்து ஏதோவொரு நாட்டில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டில் 117.2 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்து அல்லது நாடற்றவர்களாக உள்ளனர் என UNHCR இன் மதிப்பீட்டறிக்கை சொல்கிறது. இவர்களிற் சிலருக்கு திணைகள் அதிகம் பிரச்சினையாக இருப்பதில்லை. அவர்கள் பனியோடும் வெயிலோடும் கூடிய திணையைச் சேர்ந்தவர்கள் என்பதால். இலங்கை, பர்மா போன்ற நாடுகளைச் சேர்ந்தோருக்கு பனியும் குளிரும் கூட ஒரு தீராப் பிரச்சினை. மற்றும்படி மொழி, உணவு, தொழில், பழக்க வழக்கங்கள் எனப் பண்பாட்டுப் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த அனைவருக்கும் உண்டு. இதெல்லாம் புலம்பெயர்வுகளின் தொடர் பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள். இருந்த போதும் அவர்கள் இவற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? தங்களுடைய இலக்கிய எழுத்துகளிலும் சினிமா, ஓவியம், நாடகம் போன்ற கலை வெளிப்பாடுகளிலும் இதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான எழுத்துகளும் கலை வெளிப்பாடுகளும் தமிழுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவைபற்றிய அறிமுகங்களையாவது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நம்மைப் போன்ற சக புலம்பெயரிகளின் (அகதிகளின்) பிரச்சினை எப்படியாக உள்ளது? அவர்கள் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுடைய உணர்நிலைகள் எவ்வாறுள்ளன என்று தெரியும். 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு நாடுகாண் பயணங்களின் மூலமும் வெவ்வேறு காரணங்களுக்காகவும் புதிய நாடுகளுக்குச் சென்று குடியேறி வாழ நேர்ந்தவர்களின் பிரச்சினைகளும் அனுபவங்களும் எப்படியிருந்திருக்கும்? ஆக்கிரமிப்புக்காகச் சென்றோராகட்டும் வணிகம் மற்றும் தேசாந்தர நிலையில் யாத்திரீகமாகச் சென்றவர்களாகட்டும், அனைவரும் இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? அன்று இன்றுள்ள அளவுக்கு தொடர்பாடல் தொடக்கம் அனைத்து வசதிகளும் சீராக இருந்திருக்காது. இந்த நிலையில் புதிய திணையில் இணங்கிக் கொள்வதற்கு நிச்சயமாக அவர்களுடைய மனமும் உடலும் மிகச் சிரமப்பட்டிருக்கும். அதைப்பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. வரலாற்றில் எங்கும் அத்தகைய பதிவுகள் பெரிதாகக் காணப்படவில்லை. இப்படி இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்த Robert Nocks என்பவர் தான் இலங்கையில் இருந்த அனுபவங்களை (1659 -1680) An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக எழுதியுள்ளார். இது தமிழில் ‘இலங்கைத் தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு“ என்ற பெயரில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. அதில் அவருடைய அனுபவங்கள் வேறாக இருந்தாலும் புதிய திணையில் எதிர்கொண்ட நெருக்கடிகள் ஓரளவுக்குப் பேசப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் அவர்கள் எல்லாவற்றையும் கடந்து இணங்கியும் துணிச்சலாடு எதிர்கொண்டும் வாழ்ந்திருக்கின்றனர். அதற்கான மனத் தயாரிப்பு அவர்களிடம் இருந்துள்ளது. புலம்பெயர்ந்து இன்னொரு நிலத்துக்குச் சென்றால், அதனோடு இணங்கியே தீர வேண்டும். வேறு வழியில்லை. அதுவும் கதியற்றவர்களாகச் சென்று விட்டால், அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்றுத்தானாக வேண்டும். ஏற்றே நிமிர வேண்டும். கல்லில் துளிர் விடும் விதையைப்போல. மந்தாகினி குமரேஷ், ஈழத்தமிழர் நிலைநின்று புலம்பெயர்வைப் பற்றி எழுதுகிறார். இன்னும் கூர்மையாகப் பார்த்தால், ஈழப்போராட்டப்பரப்பிலிருந்து புலம்பெயர நேர்ந்த நிலைமைகளைக் குறித்து எழுதுகிறார் எனலாம். அதனோடு இணைந்த கனவுகளையும் நினைவுகளையும் அவை உண்டாக்கும் உணர்வலைகளையும். உட்குமைவும் விடுதலை வேட்கையின் தவிப்பும் மிஞ்சித் துடிக்கும் கனவுகளும் மந்தாகினியின் கவிதைகளில் பொருண்மைப்பட்டிருக்கின்றன. ஈழப்போராட்டத்துடன் ஐக்கியப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மந்தாகினி. ஈழப்போராட்டம் மிகுந்த சிக்கலையும் பேரவலப்பரப்பையும் கொண்டது. இந்தச் சிக்கல்களும் பேரவலமும் ஈழப்போராட்டத்துடன் இணைந்திருந்தவர்களையும் கடுமையாகப் பாதித்தது. மந்தாகினியின் குடும்பத்துக்கும் இது நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் அதைத் தாக்குப் பிடித்தே நின்றனர். ஈழப்போரின் முடிவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டை விட்டு வெளியேறச் செய்து புலம்பெயர வைத்தது. களத்தில் அடிபட்டுச் சேதங்களோடும் வலிகளோடும் குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர்களில் ஒருவராகினார் மந்தாகினி. இன்னொரு திணையில் – புதிய நிலைகொள்ளலில் – அவர்கள் இணங்கித் தீரவேண்டிய காலக்கட்டாயம். அந்த வாழ்க்கையே இந்தத் தொகுதியின் சாராம்சமாகும். “மழை நனைத்த சிறகுகள் போல் கனத்த மனதுகள் காலைக் கடிவாளமிட வலிந்து வைத்த காலடியின் வேதனைச் சுவட்டோடு சிலர் வந்தோம்…” (இரைதேடும் பறவைகள்) ஈழத்திலிருந்து கனடாவுக்குச் சென்ற நிலையை இந்தவரிகள் சொல்கின்றன. அதற்குப் பின்னர் அங்கே எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகளும் அவை உண்டாக்கிய உணர்வலைகளும் சில கவிதைகளில் பேசப்படுகின்றன. இன்னொரு தொகுதிக்கவிதைகள் இந்தப் புலப்பெயர்வுக்கு முன்னரான காலத்தையும் களத்தையும் கொண்டுள்ளன. “எங்கள் தெருக்கள் அப்போது குன்றும் குழியுமாய் மூடிக்கிடந்தன. நாங்கள் உறவுகளேதுமற்று தனித்திருந்தோம். இருபது நாள் வயதுடைய கடிதங்களே உறவுகளாய் கண்டபோதில் உவகை கொண்டும் நின்று கழிக்க நேரமின்றி உருண்டோடின காலங்கள்…” (உறவு) மந்தாகினி புலம்பெயர்ந்து புதிய திணையில் ஏதோ வகையில் வாழ்வைக் கட்டமைத்தாலும் அவருடைய மனம் அதிலிருந்து வெளியேறி தாய் நிலத்திலும் அதனுடைய கனவிலும் (அது தாயக விடுதலைக் கனவு) தத்தளிக்கிறது. அப்படித் தத்தளிக்க வைக்கும் வகையிலேயே நிகழ்ச்சிகளும் அமைந்து விடுகின்றன. ‘மனிதம் காத்திருந்தது’ என்ற கவிதை இதற்குச் சான்று. ஈழப்போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட போராளிகளின் ஒளிப்படங்கள் இணைய வெளியில் வெளிவந்து ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள நீதியைக் குறித்துச் சிந்திப்போர் அனைவரையும் கலங்கடித்தது. அது மந்தாகினியையும் தத்தளிப்புக்குள்ளாக்குகிறது. “வலைத்தளங்களில் உலாவிய அப்படங்கள் உண்மையா? கருகிஇ உறுப்பிழந்து உயிரிழந்து உடலும் இழந்து சிதறி.. வேறுபாடற்று.. குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் வயோதிபர் என வேறுபாடற்று.. விறகடுக்கினால் போல் அடுக்கிடந்த அவர்கள் பற்றிய படங்கள் உண்மையா? நாணம் மறைத்த ஆடையிழந்து பேய்க் கூட்டம் வன்புணர்ந்த இன்னிசைகளின் தோற்றஉரு உண்மையா? மாயமா?….” தேச விடுதலை என்பது இவ்வாறான அவலப்பரப்பில் சென்று முடிந்த யதார்த்தத்தை, கொடுமையை, உலகத்தின் கையறு நிலை அல்லது அதனுடைய தந்திரத்தைக் குறித்த விமர்சனத்தை இந்தத் தத்தளிப்பின் வரிகள் சொல்கின்றன. தாய் நிலம் மீதான கனவுக்கு ‘காத்திருப்பு’ என்ற கவிதை இன்னொரு சான்று. இது ஒரு குறியீடாக, மண்ணுக்குள் புதையுண்டு போன வீரர்களின் நினைவைப் பேசுவனூடாக உணர்த்தப்படுகிறது. “காட்டோர இல்லங்களில் துயிலும் நீங்கள் விதையாய் மண்ணில் உறைந்து விழுதாய் வருவீர் எழுந்து கார்த்திகை மலரும் காந்தள் போலென்று இன்றும் நம்புகிறோம்…” போராட்டம் போராகி, அதுவும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் முடிவுற்றாலும் மனம் அடங்கவில்லை. அது மேலும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது. இந்த மாதிரியான உணர்வலையுடன், நம்பிக்கையுடன் எழுதப்படும் ஈழக்கவிதைகளும் கதைகளும் அபுனைவுகளும் அதிகம். அதற்குக் காரணம், ஈழ விடுதலை என்பது அந்தளவுக்கு ஆழ்விருப்புக்கொண்டது. லேசில் கலைந்து கரைந்து விடாத மாபெரும் கனவு. என்பதால்தான் உலகம் முழுவதிலுமுள்ள ஈழத்தமிழர்கள் இன்னும் விடுதலை வேட்கையைக் குறித்துப் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டுமுள்ளனர். மந்தாகினியும் தன்னுடைய பாத்திரத்தை ஏற்கிறார். இப்படிப் பலரும் தமது பாத்திரத்தை ஏற்றுச் செயற்படும்போது அதிலிருந்து எப்படித் தன்னுடைய குரலால் – கவிதைகளினால் – வேறுபட்டுத் தெரிகிறார்? என்று நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு கவிதைக்குரல் தனித்துவமாக ஒலிப்பதைக் கொண்டே அதனுடைய கவனமும் தாக்கமும் வரலாற்றில் இருக்கும். இலக்கியத்தின், கலையின் அடிப்படைக் கூறுகளில் இது முக்கியமானது. மந்தாகினியின் தனித்துவம் அல்லது வேறுபாடு என்பது, ‘நான் யார்?’ என்ற கவிதையில் ஓரளவுக்குத் தெரிகிறது. அவர் பெரும்பாலான பெண் கவிஞர்களைப்போல பெண்ணியத்தை உரத்த தொனியில் பேசும் கவிஞரல்ல. அதேவேளை தன்னடையாளத்தைக் குறித்துச் சிந்திக்காமல் விடவுமில்லை. “என் வண்ணமென்ன?” என்ற கேள்வியே அதுதான். “அலைமோதும் வண்ணக் கலவை கொண்டேன் ஆத்திரம் கொண்டு சிவப்பானேன் துயர் தந்த போர்வையினுள் முடங்கும்போது கறுப்பானேன் துரோகங்கள் என்னைப் பழுப்பாக்கின அன்பும் காதலும் என்வாழ்வை அரவணைக்கும் வேளை பச்சைப் புல்வெளியாய் பசுமை கொண்டேன் நல்லது நடக்க நீலம் என் மண்ணிறத்து மேனியில் ஊதா ஊர்வலம் போனது… இப்படி விரிந்து கொண்டே செல்லும் கவிதை, “கணனியெழுத்துகள் நீ பிரித்தானிய அடியென்றது கடவுச்சீட்டு கனடியன் என்றது! அலமலந்து போனேன். நான் யார்? என் வண்ணமென்ன? ஆகாச வெளியில் அசைந்தாடும் வெற்றிடம் நான்” எனக் கவிதை முடியும்போது ஒரு கணம் அதிர்ச்சியாக வெறுமை ஏற்படுகிறது. மறுகணம் பெருந்துயர் கவிகிறது. அகதி நிலை என்பது மற்ற எல்லா அடையாளங்களைக் குறித்துச் சிந்திப்பதையும் விட மேவி, தான் யார் எனத் தேடுகிறது. மந்தாகினியின் கவிதைகளில் இந்த அகதிக்குரலே தொடர்ந்தும் ஒலிக்கிறது. தன்னுடைய இளமைக்காலத்தை நினைவில் மீட்டும்போதும் அகதி நிலை மறைதொனியில் ஒலிக்கிறது. ஆகத் தன்னைத் தக்க வைப்பதற்கான எத்தனமே மந்தாகினியின் கவிதைகள். அது அவர் தன்னை மட்டும் தக்க வைப்பதற்கான குரல் அல்ல. தன்னை என்பதன் மூலமாக தான் சார்ந்தோரை, தன்னினத்தோரை என விரிந்து அமைகிறது. பெயர்தலும் அகதியாதலும் என்பது தனியே ஒருவருக்கு நேரும் நிலைமை அல்ல. அது பலருக்குமானது. குறிப்பாக தமக்கான வாழும் உரிமைகளைப் பற்றிப் பேசுவோருக்கு நிகழ்வது. அதையே மந்தாகினி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். யாருடனும் உரையாடலைத் தொடங்கக் கூடிய எளிய கவிதைகளே மந்தாகினியினுடையவை. பயண வழியில் சந்திக்கின்ற மனிதர்களோடு பேசுவதைப் போல, பகிர்வதைப்போல எளிமையானவை. ஆனாலும் அதற்குள்ளும் தகிக்கும் வெம்மையை உணரலாம். “வலுவான தக்கைகொண்டு அடைக்கப்பட்ட வளிக்குமிழ்களாய் உணர்வுகள்.. மறுக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் முளையாகக் கிள்ளப்பட்ட ஆசைகள் முட்டி மோதின உள்ளே. அமுக்கம் தவிர்க்க வெடிக்க நினைக்கும் கண்ணாடிக் குடுவையாய் மனம்…” (எல்லைகள்) இந்தக் குமுறல் சாதாரணமானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பெண்ணின் ஆழ்மனத் தவிப்பும் வெடிப்புமாகும். ‘சொல்லாத சேதிகளில்’ தொடங்கிய இந்த வெடிப்பு தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மந்தாகினியைக் கடந்தும் எத்தனை தலைமுறைகளுக்கு இது நீளும் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு நம் தமிழ்ச்சமூகத்தின் அசைவு – முன்னேற்றம் அல்லது மாறுதல் மிக மெதுவாக நத்தைப்பயணமாகவே நிகழ்கிறது. இது எதிர்பார்ப்புக்கு எதிரானது. அது உண்டாக்கும் சலிப்பும் கோபமும் சாதாரணமானதல்ல. இப்படிப் பன்முகமாக வெளிப்பாடடையும் மந்தாகினியின் கவிதைகள், தன் காலத்தின், தன் வாழ்களத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அனுபவத்துக்கும் அறிதலுக்கும் முதன்மை அளிக்கும் எழுத்துச் செயற்பாட்டில் அல்லது அவ்வாறான எழுத்து முறையில் இது நிகழ்வதுண்டு. அப்படியென்றால் இவை வெறுமனே காலப்பதிவுகள் அல்லது கால வெளிப்பாடுகள்தானா? என்று யாரும் கேட்கக் கூடும். காலத்தையும் களத்தையும் உதறி விட்டு அல்லது அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என புனைவொன்றில் இயங்கக் கூடிய மனது வாய்த்தவர்கள் வேறு புனைவுகளை உருவாக்கக் கூடும். அவர்களுக்குப் புனைவென்பது மகிழ்ச்சிக்கான ஒரு கலை வெளியாக இருக்கும். அல்லது புனைவின் பரிமாணங்களை வெவ்வேறு விதமாக நிகழ்த்திப் பார்க்கும் விருப்புடையோராக இருக்கும். கலையிலும் இலக்கியத்திலும் எதற்கும் சாத்தியங்கள் உண்டு. அவற்றிற்கு எல்லைகளே இல்லை. எனவே அதை ஏனையவர்கள் செய்யலாம். மந்தாகினி தன்னனுபவங்களையும் தான் அறிந்தவைகளையும் எழுத்தில் முன்வைக்க விரும்புகிறார். அது தன்னுடைய கடமைப்பாடு என்பது அவருடைய எண்ணம். நம்பிக்கை. அத்தகைய படைப்புச் செயல்வழியே அவருடையது. நாளை இதிலிருந்து அவர் மீறியோ மாறியோ செல்லலாம். புதிய யோசனைகள் வரலாம். வரலாற்றில் அப்படியான மாற்றங்களும் மீறல்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்பொழுது ஈழப்படைப்பாளிகள் பலரையும்போல மந்தாகினியின் கால்களும் மனமும் மண்ணில் வேர் கொண்டவையாகவே உள்ளன. கால்களும் மனமும் என்பது புறமும் அகமும் என இங்கே அர்த்தப்படுத்தப்படுகிறது. மந்தாகினி ஈழப்போராட்டப்பரப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய புறமும் அகமும் அரசியல் மயப்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மந்தாகினியை 1990 இன் இறுதிப்பகுதியிலிருந்து அறிவேன். ஈழப்போர்ச் சூழலில் சமூகச் செயற்பாட்டியக்கத்தில் மக்களுக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தார். இடையிடையே கவிதைகளையும் கதைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். “தொடர்ந்து எழுதுங்கள்” என்று ஊக்கப்படுத்தினேன். ஆனால், அவருடைய பணிகளும் வாழ்க்கைச் சூழலும் அவற்றில் தீவிரமாக இயங்க இடமளிக்கவில்லைப் போலும். பிறகு போர். அது அவரையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. இறுதியில் புலம்பெயர்ந்து கனடாவுக்குச் சென்றார். ஆனாலும் அவருக்குள்ளிருக்கும் படைப்பு மனம் ஓயாமல், அலையடித்துக் கொண்டேயிருக்கிறது. அதன் விளைவானவையே இந்தக் கவிதைகள். இவை தணிய மறுக்கும் அனற் காற்று. வற்ற மறுக்கும் துயர ஊற்று. உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப முனையும் நியாயக் குரல். கால சாட்சியம். வரலாற்றின் முகத்தில் எழுதப்படும் கண்டன வார்த்தைகள். துயர்ப்பதிவு. உலகத்தை கோமாளியாக்கி வேடிக்கை பார்க்கும் துயரம் தின்னியின் சத்திய வார்த்தைகள். மந்தாகினி இன்னொரு காலடியோடு மேலும் புதிய பயணங்களை நிகழ்த்தட்டும். https://arangamnews.com/?p=10377 யாழ் களத்திலும் இருந்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன் https://yarl.com/forum3/profile/10632-manthahini/content/?type=forums_topic&change_section=1
  30. இவர்கள் மீனின் விலை குறைந்து விட்ட்து என்று சொல்வதெல்லாம் அதன் விலை ஆயிரத்துக்கு மேலேதான். நான் பேலியகொடையில் வாங்குவதால் அந்த விலைகளைத்தெரியும். மற்ற இடங்களில் வாங்கினால் அதனையும் விட ஒன்றரை இரண்டு மடங்கு அதிகம். உண்மையாகவே பிள்ளகைளின் ஊடட சத்து என்பது பாரதூரமானது. முடடையின் விலையும் அப்படி. அரசு எப்படியோ வரி வரி என்று போட்டு மக்களை வதைக்கிறது. எப்படியாவது IMF இடம் நல்ல பெயர் எடுத்து கடன் வாங்கத்தான் முயட்சிக்குதே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. தேர்தலின் பின்னர் ஒரு மாற்றம் நிச்சயமாக வரும். ஆனால் அதன் விளைவுகள் எப்படியோ , பொறுத்திருந்து பார்ப்பம்.
  31. நேற்றைய ஒரு செய்தியில்…. மீன் விலை பாதியாக குறைந்து விட்டது என்றிருந்தது. காரணம் மக்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லாமல் போய் விட்டதாம். இவை எல்லாம் வளரும் பிள்ளைகளின் ஊட்டச் சத்து சம்பந்தப் பட்ட விடயம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் இதனைப் பற்றி பெரிதாக சிந்திப்பதாக தெரியவில்லை.
  32. முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன். இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன். பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம். நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள். இன்னமும் முடிவில்லை.
  33. அந்தந்த நேரத்துக்கு அந்தந்த பதில்களும் , செயட்பாடுகளும். இங்கு அரசு என்றெல்லாம் ஒன்றுமில்லை, எப்படி பதவியை வைத்து கொள்ளையடிக்கலாமோஅப்படி கொள்ளையடிப்பதுதான் நோக்கம். எதிர் காலத்தையும் , சுகாதாரத்தையும் பற்றி எந்த அரசு(?) சிந்திக்கிறது. கொண்டு வரும் மருந்துகளிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதையும் விட பெரிய மோசடி என்ன இருக்கிறது?
  34. கண்ணிவெடி யுத்தம் போராளிகளின் தாக்குதல்களின் மும்முரம் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வட கிழக்கில் அதிகரித்துவரும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தது. மேலும், யாழ்ப்பாணம் செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் தமது பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது. யாழ்ப்பாணத்திற்கு மரக்கறிகளையும், தேங்காய்களையும் எடுத்துச் சென்ற பாரவூர்தியொன்று பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி சாரதியும், நடத்துனரும் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை கூறியிருந்தது. ஆவணியின் இறுதிப்பகுதியில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு அச்சுருத்தலாகவும், சவாலாகவும் மாறியிருந்தன. ஆகவே, இதற்கு முகம் கொடுப்பதற்காக கண்ணிவெடிகளில் இருந்து இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடிய கவச வாகனங்களை தென்னாபிரிக்காவிலிருந்து அரசு கொள்வனவு செய்தது. இதற்கு மேலதிகமாக இராணுவ ரோந்துகளுக்கு முன்னர் வீதிகளை சோதனை செய்து, கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியது. போராளிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களும், இராணுவத்தினரின் காப்பு நடவடிக்கைகளும் இருதரப்பினரதும் புத்திசாதுரியங்களுக்கிடையிலான போட்டியாக மாறியது. ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்ற இரு சம்பவங்கள் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலையினை விளக்கப் போதுமானவை. கண்ணிவெடிகளுக்குத் தாக்குப்பிடிக்கும் பவள் கவச வாகனத்தைப் புரட்டிப் போட்ட புலிகள் முதலாவது சம்பவம் கரவெட்டி மேற்கில் இருக்கும் கல்லுவம் மண்டான் பகுதியில் நடைபெற்றது. இப்பகுதியினூடாகச் செல்லும் பிரதான வீதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை வழங்கியவர்களே புலிகள்தான். ஆகவே, இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று தமது தேடுதலை ஆரம்பித்தனர். கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குப் பாதுகாப்பாக இன்னொரு தொகுதி இராணுவத்தினர் தென்னாபிரிக்க பவள் கவச வாகனங்களில் வந்திருந்தனர். கண்ணிவெடி புதைக்கப்பட்ட பகுதியின் மேலாக கவச வாகனம் ஏறியபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டது. பவள் வாகனம் குடைசாய உள்ளிருந்த 8 இராணுவத்தினர் அவ்விடத்தில் பலியானார்கள். அதே நாளன்று நீர்வேலிப் பகுதியில் இவ்வாறான கண்ணிவெடி அகற்றும் பிரிவொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புரட்டாதி மாதமளவில் தமது கண்ணிவெடித் தாக்குதல் திறமையினை புலிகள் நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். இம்மாதத்தின் முதலாம் திகதி வடமாராட்சி திக்கம் பகுதியில் அவர்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க பொலீஸார் நடத்திய தாக்குதல்களில் அப்பகுதியில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதோடு வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது. இருநாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 3 ஆம் திகதி வடமராட்சி, கிழக்குப் பருத்தித்துறைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த எட்டு மீனவர்களை ரோந்துவந்த கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் மூலமாகவும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் மூலமாகவும் போராளிகளின் ஆயுதச் செயற்பாட்டினை வடக்கிற்குள் மட்டுப்படுத்திவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி நம்பிவந்தார். ஆனால், அவரின் நம்பிக்கையினைச் சிதைக்கும் விதமாக புரட்டாதி 10 ஆம் திகதி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஸ்த்தரித்துக்கொண்டனர். புரட்டாதி 11 ஆம் திகதி வர்த்தக அமைச்சின் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய லலித், பயங்கரவாதம் கிழக்கிற்கும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கிழக்கிற்கான பாதைகளை நாம் மூடிவருகிறோம். இதற்காக வடக்குக் கிழக்கு எல்லையோரங்களில் சிங்களக் கிராமங்களை நாம் உருவாக்கி வருகிறோம்" என்று அவர் கூறினார். இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லையோர சிங்களக் குடியேற்றங்களை இலக்குவைத்த புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் லலித் அதுலத் முதலியின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்டுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்கள் மீது தமது பார்வையைத் திருப்பினர் புலிகள். பாலஸ்த்தீனத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய அரசின் திட்டத்தினைனை நகலாகக் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட இவ்வகைச் சிங்களக் குடியேற்றங்கள் திருகோணமலை முதல் முல்லைதீவு வரையான கரையோரப்பகுதிகளிலும், 1950 களில் அமைக்கப்பட்ட சிங்களைக் குடியேற்றமான பதவியாவுக்கும் பாரம்பரிய தமிழ்க் கிராமமான நெடுங்கேணிக்கும் இடையே தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அமைக்கப்பட்ட சிங்கள மீனவக் குடியேற்றங்களான கொக்கிளாய் நாயாறு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் விவாசாயக் குடியேற்றக்கிராமமான பதவியாவின் விஸ்த்தரிப்பாகவும் இவை உருவாக்கப்பட்டு வந்தன. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. செம்மலைத் தாக்குதல் மாத்தையா தலைமையிலான 16 போராளிகள் அடங்கிய புலிகளின் அணியொன்று, முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில், முல்லைத்தீவு நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் செம்மலைக் கிராமத்தில் கண்ணிவெடியொன்றைப் புதைத்துவிட்டு இராணுவத்தினரின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலை 10:15 மணிக்கு ஜீப் வண்டி முன்னல் வர பின்னால் இரு ட்ரக்குகளில் இராணுவத்தினர் அப்பகுதிநோக்கி வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி தம்மைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்த புலிகளின் அணி, நடுவில் வந்துகொண்டிருந்த ட்ரக்கினை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்கியது. ட்ரக் கண்ணிவெடியில் வெடித்துச் சிதற பின்னால் வந்த இரண்டாவது ட்ரக் வண்டியில் இருந்த இராணுவத்தினர் வெளியே குதித்துத் தாக்குதலில் ஈடுபட, புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சமர் மூண்டது. ஒருகட்டத்தில் தாக்குதலை முடித்துக்கொண்டு புலிகளின் அணி பின்வாங்கிச் சென்றது. இந்தச் சண்டையில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட மேலும் மூவர் காயமடைந்தனர். முல்லைத்தீவு முகாமிலிருந்து வந்த மேலதிக இராணுவத்தினர் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடினர். இச்சண்டையில் நான்கு பயங்கரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக கொழும்பில் அரசாங்கம் கோரியபோதும், புலிகள் அதனை மறுத்திருந்தனர். மேலதிக இராணுவத்தினர் அப்பகுதிக்கு வருமுன்னரே தமது அணி அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர்கள் அறிவித்தனர். கொக்கிளாயில் இராணுவத்தின்மேல் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சிலர் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினர். ஆனாலும், அப்பகுதியில் தான் முன்னெடுத்து வந்த இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை விஸ்த்தரிப்பதில் இருந்து அரசாங்கம் சிறிதும் பின்வாங்க விரும்பவில்லை.
  35. அதெல்லாம் முடிந்து இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்ந்த பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலால் என்ன நடந்தது என்பதில் இருந்து தான் கதை தொடங்குகிறது. அதாவது 1948 க்கு பின்பு. பலஸ்தீனியர்கள் கல்லால் எறிந்து இஸ்ரேலிய இராணுவத்துக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதையும் இஸ்ரேல் தமது இராணுவ வாகனத்தால் அம்மக்களை அடித்தும் சுட்டும் கொன்ற காட்சிகளை நீங்கள் பார்க்கவில்லை எனில் நீங்கள் வேற்றுக்கிரகத்தில் உள்ளீர்கள். சும்மா யாரும் ஆயுதத்தை தூக்குவானா என்ற அறிவு கூடவா உங்களுக்கு இல்லை???
  36. அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது.
  37. எல்லைகள் உண்டு” எவருமே விசா இன்றி உள்புக. முடியாது அமெரிக்கர்களின் நாடு சுருக்கமாகச் சொன்னால் ஈழப்பிரியன். யஸ்ரின். மருதன்கேணி. நூணாவிலன். .. நில்மினி ... போன்றோருடைய. நாடு 🤣. மேலும் சீனா ரஷ்யா பிரித்தானியா,. போன்ற உலக நாடுகள் அமெரிக்காவை எற்றுக்கொண்டு உள்ளன இது ஆதாரம் இல்லையா??? எவரும் கதைக்காவிடில். பேசாமல் தானே இருக்க வேண்டும் ...நீங்கள் கதைக்காவிடில். விசுகர். பேசாமல் இருப்பார் 🤣
  38. மனதைக் கவர்ந்த ஒரு அனுபவப் பகிர்வு...! தொடர்ந்து எழுதுங்கள், கவி அருணாசலம்...!
  39. உங்களை மாதிரியே கவியரும் தொடர் கதை மூலம் ஒரு கொக்கியைப் போட்டு எல்லாரையும் இங்கேயே சுத்தி வர வைச்சிருக்கிறார்😂. சுவியர், கவியர் - யாழுக்குக் கிடைத்த இரு அரிய பொக்கிஷங்கள்!
  40. 2015 வரை நாங்களும் ஓரளவுக்குத் தேவையான மரக்கறி வகைகள் தோட்டம் செய்தோம். பலருக்கும் கொடுத்து குளிர் காலத்திலும் பாவிப்பதற்காக இன்னொரு குளிர்சாதன பெட்டியும் வாங்கி மேலதினமாக வருவதை வெட்டிவெட்டி பொதி செய்து வைத்திருந்தோம். 2015 இன் பின் கோடை விடுமுறைகளுக்கு வீட்டில் நிற்பது இல்லை என்றே சொல்லலாம். தற்சமயம் கோடையிலும் நிற்பதில்லை குளிர் காலங்களிலும் நிற்பதில்லை.
  41. என‌க்கும் தெரியாது உடையார் அண்ணா........... வாழ்த்துக்க‌ள்🙏🥰.............என‌க்கும் செய்ய‌ ஆசை தான்.............நான் இருக்கும் இட‌த்தில் வெக்கை கால‌த்தில் நிறைய‌ ப‌ழ‌ம் சும்மா புடுங்கி சாப்பிட‌லாம்.............முந்தி ம‌ர‌க்க‌றிக‌ள் நிறைய‌ வைத்து இருந்த‌வை அதை செய்ய‌ ஆட்க‌ள் இல்லை.......இப்போது த‌னிய‌ ப‌ழ‌ங்க‌ள் தான் உடையார் அண்ணா............வெக்கை கால‌ம் வ‌ரும் போது வீடியோ பிடிச்சு உங்க‌ளுக்கு அனுப்புறேன்....................
  42. முகமதுவின் கார் பேர்லினை அடையும் போது இருட்டி விட்டிருந்தது. கார் முகமதுவின் இருப்பிடத்துக்கு வந்தவுடன், முகமதுவும், லூக்காவுமாக டாடோவின் முகத்தை மூடி, வாகனத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்குள் இழுத்துப் போனார்கள். முகம் மூடப்பட்டிருந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை டாடோவால் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்த அறை முழுவதும் பொலித்தீன் விரிக்கப் பட்டிருந்தது. அதன் மேலே மரம் வெட்டும் வாள், சுத்தியல், துளையிடும் இயந்திரம், கத்தி, பேஸ்போல் துடுப்பு... போன்ற பல பொருட்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அதை எல்லாம் ஒழுங்கு செய்து வைத்தது எல்விஸ். தொலைபேசியில் அழைத்து முகமது அவனுக்குச் சொன்ன வேலைகள் அவை. முகமூடி அகற்றப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு உள்ளாடை மட்டும் அணிந்திருந்த டாடோ பொலித்தீன் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு மரண பயம் தரும் வகையில் அவன் முன்னால் தாக்குதலுக்குத் தேவையான பல வகையான ஆயுதங்கள். டாடோ அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்ததால் அவற்றை அழித்து விடும்படி முகமது, எல்விஸ்ஸிடம் சொன்னான். எல்விஸ் அவற்றை எல்லாம் ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கட்டி காட்டுக்குள் எறிந்து விட்டு வந்தான். பயணக் களைப்புத் தீர்ந்ததன் பிற்பாடு தரையில் இருந்த டாடோவின் முன்னால் முகமது வந்து நின்றான். முதலில் அவன் கையில் எடுத்த ஆயுதம் துளையிடும் இயந்திரம். டாடோவின் பின்புறம் போய் நின்ற முகமது ஒன்றி்ல் இருந்து எண்ணும்படி டாடோவுக்குச் சொன்னான். துளையிடும் இயந்திரத்தின் சத்தம், கட்டளையிடும் முகமதுவின் அதிகாரக் குரல். டாடோ எண்ண ஆரம்பித்தான். ஒன்று, இரண்டு…. டாடோ இருபது என்று சொல்லும் போது, அவனின் பிடரியை அண்டிய முதுகில் முகமது ஒரு துளை போட்டான். வலி தாங்காமல் துடித்த டாடோவிடம் “சத்தம் போடாமல் தொடர்ந்து எண்ணு” என்று சத்தமாகச் சொன்னான். வலியுடன் டாடோ தொடர்ந்து எண்ணினான். முகமது என்ன கணக்குப் போட்டானோ தெரியாது 20,40,60,.. என ஒவ்வொரு இருபதுக்கும் டாடோ முதுகில் ஒவ்வொரு துளையாகப் போட்டுக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆறு துளைகள். 120க்கு மேலே எண்ண டாடோவால் முடியவில்லை. முகமது ஓய்வெடுக்கும் போதெல்லாம், தன் பங்குக்கு லூக்காவும் டாடோவைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தான். டாடோவின் மேலான தாக்குதல்கள் அடுத்த நாளும் தொடர்ந்தன. தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை அழைத்து வரும்படி முகமது எல்விஸ்ஸிடம் சொன்னான். வந்த வைத்தியர், அறையில் இருந்த நிலைமையைப் பார்த்து உறைந்து போய் நின்றார். “டொக்டர் எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டால் ஒரு மனிதன் உடனடியாக இறக்கமாட்டான்?” கையில் துப்பாக்கியுடன் நின்ற முகமதுவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டொக்டரால் அங்கே நிற்க முடியாது. “தொடையில் சுட்டால்…” “எல்விஸ், டொக்டருக்கு காசு குடுத்து அனுப்பி விடு” கனரக வாகனங்களுடன் முகமதுவின் வீடு இருந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நின்றனர். வழமைபோல் யாரோ சிரியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியைக் கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பு படை அணியினரால் அவதானிக்க முடியவில்லை. தங்களது அதிகாரியின் கட்டளைக்காக அவர்கள் ஆயத்தமாக நின்றார்கள். முகமது துப்பாக்கியால் சுட்ட குண்டுகள் இரண்டு இலக்குத் தவறாமல் டாடோவின் தொடையில் போய்த் தங்கின. துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதும், “இது உயிரைப் பறிக்கும் வேலை. இனியும் தாமதிக்க முடியாது. நிலமை தீவீரமாக இருக்கிறது. உள்ளே செல்லவும்” அதிகாரியின் கட்டளை கேட்டு சிறப்பு அதிரடிப்படை முகமதுவின் வீட்டுக்குள்ளே நுளைந்தது. பேர்லின் அரச சட்டத்தரணி முன்னால் முகமது, லூக்கா,எல்விஸ் மற்றும் அறுபது வயதான முகமதுவின் இன்னுமொரு தொழிலாளியும் நின்றார்கள். முகமது, லூக்கா இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் எல்விஸின் மேல் வழக்குப் பதியும் படியும், மற்ற ஊழியரில் ஒரு குற்றமும் இல்லாததால் அவரை விட்டுவிடும்படியும் அரச சட்டத்தரணி உத்தரவிட்டு, கையெழுத்திட்டார்.
  43. அது பிரச்சினையில்லை.......அதுக்கும் கூட ஞாபகசக்தியும் அதை சரியாகப் பொருத்துகின்ற இடங்களும் தெரிய வேண்டும்.....அது எல்லோருக்கும் கைகூடாது......உங்களுக்கு கைகூடி வருது.......தொடருங்கள்......! 👍
  44. கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.
  45. அப்போ முழு பைத்தியங்கள்தான் நாகசாகியிலும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் கருத்துக்களை சரியாக புரிய முடியவில்லை
  46. A few days after LTTE proposed the Interim Self Governing Authority (ISGA), President Chandrika Kumaratunga sacked three ministers of the cabinet and took over the ministries using her constitutional powers, ending the uneasy coalition between her and the Prime Minister Ranil Wickremesinghe while he was out of the country.[52] Addressing the nation she claimed that this decision was taken in the interest of national security.[53] Janatha Vimukthi Peramuna also decided to ally with PA to defeat the Ranil Wickremesinghe's government which they claimed as a threat to the sovereignty of the country. Consequently, President Chandrika Kumaratunga dissolved the parliament on 7 February 2004 which effectively ended Ranil Wickremesinghe's regime.[54] https://web.archive.org/web/20160303221631/http://www.island.lk/2003/11/05/ https://web.archive.org/web/20121013032124/http://www.dailynews.lk/2003/11/05/new04.html http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3469261.stm "President Chandrika Kumaratunga has dissolved the Sri Lankan parliament, paving the way for snap elections." நாடாளுமன்றம் இடைநடுவே கலைக்கப்பட்டு ரணில் மாமாவின் அரசும் கவிழ்ந்தது.! நீங்கள் எழுதியதில் நான் மேற்கோளிட்டவைக்கான தரவுகள் மேலே உள்ளன.
  47. இல்லை நான் சொன்னது ரொம்பவும் சரியாகும் ரணில் அரசாங்கம் இரண்டு தடவைகள் கலைக்கப்பட்டது முதல் தடவையாக புலிகளின் தலைவருடன் ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்தபோது ரணிலுக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கும். தனிப்பட்ட ஈகோ உண்டு இதனை ரணில் சந்திரிக்கா விரும்பதா தீர்வை புலிகளிற்கு கொடுப்பதாக நாடகமாடுமடினார். இந்த தீர்வு வருகிறது என்ற நிலையில் இவருடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது ரணில் 2001 இருந்து 2004 வரை பிரதமராக இருந்தது உண்மை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியவில்லை இடையில் கலைக்கப்பட்டுவிட்டது விகடனின் செய்தியை பாருங்கள் இரண்டாவது தடவையாக மைத்திரிபாலா ரணில் அரசாங்கத்தை கலைத்து மகிந்த பிரதமர் ஆக்கினார். நியமித்தார் ஶ்ரீறிலாங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி இரண்டு கட்சிகளும் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில். ஒரேநேரத்தில் ஒரேநிலைப்பாட்டில் இருந்தது இல்லை இனிமேலும் இருக்கப்போவதில்லை ஒன்று ஆதரிக்க மற்றது எதிர்க்கும் இந்த விடயத்தில் இவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் இது ஒரு கள்ள உறவு அல்லது இரகசிய உறவு ஒற்றுமை. இதுவே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது செய்ய போதுமான காரணியாகும்.
  48. இது சந்திரிக்கா அம்மையார் ஐனதிபதி ஆகவும் ரணில் பிரதமராகவும். இருந்த நேரம் என நினைக்கிறேன் வருடம் மாதம் திகதி எனக்கு தெரியாது பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது ரணில் அமெரிக்காவில் இருக்கும் போது அம்மையார் பிரதமர் பதவியை பறித்து விட்டார் பாவம் ரணில் பிரதமராக அமெரிக்கா போனவர். பதவியை இழந்து திரும்பி வந்தார் அந்த நேரம் இந்த இனப்பிரச்சனையை தீர்க்கிறேன் என்று புலுடா விட்டு கொண்டு திரிந்தவர். பதவி இழந்ததும் பேச்சுவார்த்தை குழம்பி விட்டது…… இதை தான் போல சிலர் தீர்வு வந்தது தமிழர்கள் குழப்பினார்கள் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்வது இப்படி பச்சோந்திகள் தமிழர்கள் மத்தியில் இருக்கும் வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.