Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. துன்பமின்றி மக்கள் சாந்திகொண்டு வாழ நேசக்கரம் நீட்டும் சாந்தியும் சாந்திகொண்டு துன்பமின்றி நீடுவாழ அவர் பிறந்தநாளில் வாழ்த்துவதோடு, சாந்தி ஆசனத்தையும் அவர் பயின்று ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.!! 🙌
  2. டீக்கடைக்காரர் அனில் மோரைக் கடைந்து இப்போது நெய் எடுத்திருப்பார்களே! இந்தியப் படையின் ம(க்கு)த்துகள்.!!
  3. உங்களைப் பற்றிக்கொண்ட மன நிறைவும் மகிழ்ச்சியும், எங்களையும் பற்றிக்கொண்டது வன்னியரே! பற்றிக்கொள்ள வைத்தமைக்கு நன்றி.!! அப்பன் தமிழனுக்கு எதிராக இருந்தாலும் தமிழுக்கு எதிரல்ல.! மகன் இரண்டுக்குமே நான் எதிரானவன் அல்ல என்று செயலில் நிரூபித்துக் காட்டுவாரா..??
  4. நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு. சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு. எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்சியின் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது, அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்.. இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சத்தமா சொன்னா... யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...
  5. மெல்லினமே மெல்லினமே... நீ வல்லினமாகும் முயற்சியில்... விகாரமாகிவிட்டாய்.... அப்துல் ரகுமான்.
  6. கொரோனா பேசுகிறேன்....ஏன் மனிதா! என்னைக் கண்டு பயப்படுகிறாய் ..?நான் கிருமி அல்ல …கடவுளின் தூதுவன் ...ஆயிரமாயிரம் பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்தியவன் தானே நீ…ஆயிரமாயிரம் விலங்குகளை கொன்று பயணித்தவன் தானே நீ ....ஆயிரமாயிரம் மரங்களை அழித்து...நாற்காலியில் அமர்ந்து தேனீர் பருகியவன் தானே நீஆயிரமாயிரம் பறவைகளை அழித்து...தொலைபேசியில் உரையாடியவன் தானே நீஇப்போது புரிகிறதா! வலி என்றால் என்ன என்று …?பணத்துக்கு ஒரு நீதி..வீதிக்கு ஒரு சாதி. ...பெயருக்கு ஒரு வாழ்க்கை ....என வாழ்ந்தவன் தானே நீ ..இப்போது என்னை கண்டு பயந்து நடுங்கி ஓடுகிறாய் ... வானத்தை போல் பரந்த மனம் கொண்டாயா ….?நிலத்தை போல் சமமாக பிறரை நினைத்தாயா ….?நீரைப் போல் தன்னலமின்றி தாகம் தீர்த்தாயா ....?காற்றை போல் அனைத்தையும் அரவணைத்தாயா ….?நெருப்பை போல் தீயதை பொசுக்கத் துணிந்தாயா .. ...?பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?காற்றை மாசுபடுத்தவா ?இயற்கையை அழிக்கவா ?பூமியை கழிப்பிடமாக்கவா ?ஒன்றை மட்டும் புரிந்துகொள் ....உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல ....இந்த உண்மையை உணர்ந்தால்....கடவுளையே கண்டுபிடித்த உனக்கு ....எனக்கான மருந்தினைகக் கண்டுபிடிப்பது சிரமம் அல்ல ….அச்சம் கொள்ளாதே. ...நானே வெளியேறுவேன் ....பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக ….உலகம் நிறைந்த பிஞ்சுக் குழந்தைகளுக்காக .... ️ படித்ததில் பிடித்தது
  7. எனக்கும் உந்த வயதுபற்றி ஐயம் உண்டு. இப்போதெல்லாம் ஒரு புதிய பதிவைப் பதிந்து அனுப்பினால் அது இரண்டுதரம் பதிவாகி வெளிவருகிறது.🤔
  8. மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை நான் போற்றுகின்றேன். உங்கள் குழந்தைகள் தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தவர்கள். இந்த உன்னதமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்காக உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள். என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனைக்கு அமைவாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வின் நீட்சியாக யாழ்கள உறவுகளும் மாவீரர்களைப் பெற்றெடுத்த அந்தப் பெற்றவர்களை அறிந்து தெரிந்திருந்தால், அவர்கள் இருக்கும் போதே போற்றி மதிப்பளிப்பது போற்றுதற்குரியது. மொறிசம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் தியாகராசா சிவகாமசுந்தரி. இவர் பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது பிள்ளைகளில் மூவரை ஈழவிடுதலைப் போருக்கு ஈந்தவர். தேசப்பற்று மிகுந்த இவர் புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்த பின்பும் தொடர்ச்சியாக ஈழ மண்ணின் விடுதலைப் போராட்டப் பணிகளில் பெறும்பங்காற்றியவர். இவரைப் போற்றுவதற்கு மனம்கொண்டால் கீழ்வரும் தொலைபேசி எண்மூலம் தொடர்புகொண்டு போற்றி வாழ்த்தலாம். 079194699585. இத்தகய பெற்றோரைப் போற்றி வாழ்த்தும் பொருட்டு, கள உறவுகளும், நீங்கள் அறிந்து தெரிந்த பெற்றோரின் தொடர்பு இலக்கங்களை, அவர்களின் அனுமதியைப் பெற்றபின்பு இங்கு பதிய வேண்டுகிறேன்.
  9. சுவி அவர்களே! நான் கடகராசியில் பிறந்தவன். சிறப்பானவர்களை சிறப்பித்து வாழ்த்துவதானால், அதற்குரிய நாளான 17,05,2021 அன்று வாழ்த்துங்கள் என்று ராசி பலன் சொன்னதால், உங்கள் பிறந்த நாளை இன்று வாழ்த்தி மகிழ்கிறேன். சுவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! வாழ்க பல்லாண்டு.!!
  10. தோழர் புரட்சி அவர்களுக்கு!
  11. ஒரு நிலா பாட்டின் இனிமையுடன் நிலாமதி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  12. விடுப்புகளை அறிந்தால்தானே தடுப்புகளைத் தவறின்றிச் சரியாகப் போடமுடியும். அதில் நிழலி ஐயாவும் திறனுடன் நேர்மையும் கொண்ட பெருவிண்ணன். உங்களுக்கும் ஏற்பட்ட அனுபவத்தை மறந்துவிட்டு இப்படியெல்லாம் எழுதக்கூடாது தம்பி.😌
  13. வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்! முறுக்கெடுத்து முறுக்குச் சுடச் சிறித்தம்பிக்கு வயதுபோய் வலு காணாதாம். அதனால் அவர் தனது உடம்பில் முறுக்கேற்ற முருங்கக்காய் கட்டுவாங்கிக் கறிகாச்சினவராம், எனக்கும் தந்தவர். 😋
  14. பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த கள உறவுகள் தமிழ் சிறி, புரட்சிகர தமிழ்தேசியன், ஜெகதா துரை, புங்கையூரன், உடையார், பெருமாள், சுவி, வாத்தியார், ஈழப்பிரியன், யாயினி, குமாரசாமி, நிலாமதி, நந்தன், இணையவன், கிருபன், சுவைப்பிரியன், அனைவருக்கும் பாஞ்சின் உளமார்ந்த நன்றிகள்!!
  15. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என்றொரு பழமொழி உண்டு. முறிந்து முறிந்து கருத்தெழுதி, சிம்ரனை எண்ணிக் குனிய நினைத்தால் நிமிர முடியாது கவனம் சாமியார். 😂
  16. கந்தையாண்ணை நீங்கள் பேராண்மை திரைப்படம் இன்னமும் பார்காவிட்டால் ஒருமுறை எடுத்துப் பார்க்கவும், அந்தப் படக்கதைதான் உங்கள் பின்னூட்டத்தில் ஓடுதண்ணை.😩
  17. உங்கள் ஊகம் மிகச் சரியானதே இந்த முறுக்கு சிறித்தம்பியின் கல்யாணத்திற்கு அவர் அண்ணி சுட்டது.🤣
  18. எது உண்மை? எது பொய்? என்பதை... 4 விதமா பேசும் இந்த 4 பேரிடமும் சென்றால் நன்றாக அறியமுடியும் தங்கையே.😲
  19. வாத்தியார்....! இங்கு பின்னூட்டம் கொடுத்த எவருமே சிறித்தம்பி முறுக்குச் சுட்ட நாளைக் கவனிக்கவில்லை. அது வெள்ளிக்கிழமை. அவர் பியர் அடித்து மப்பேத்திக்கொள்ளும் நாளது. அன்றுதான் முறுக்கும் சுட்டிருக்கிறார். நீங்கள் கிட்டத்தட்ட சரியாகத்தான் கணித்துள்ளீர்கள். ஆனாலும் அது எண்ணையுமில்லைத் தண்ணியுமில்லை, நல்ல மப்பிலை பியரை ஊத்தித்தான் சுட்டிருக்கிறார். 😂🤣
  20. தாத்தாவுக்கு வலியும், வேதனையும், ஏமாற்றமும் மட்டுமே. பரிமளாக்கா எங்கே.....??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.