Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. பாணிப் பினாட்டுச் செய்வவது எப்படி? உறவுகள் யாருக்காவது தெரியுமா. ??
  2. இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரரானவர்கள் பற்றி நிலவன் அவர்கள் தந்த விபரம். 1989ம் ஆண்டு நவம்பர் 27 முதல் ஆண்டுதோறும் மாவிரர் நாள் அனுட்டிக்கப்படு வருகிறது. 2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழத்தில் அனுட்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114. மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கரும்புலிகள் 259 உள்ளடங்குகின்றனர். எல்லைப்படை மாவீரர்கள்- 281 இதில் பெண்கள்-05 , ஆண்கள்-276 ஆகும். காவற்துறை மாவீரர்கள்– 50 இதில் பெண்கள்-03 ,ஆண்கள்-47 ஆகும். மாமனிதர்கள்-19 நாட்டுப்பற்றாளர்கள்-480 இதில் பெண்கள்-28, ஆண்கள்-452 ஆகும். 31-10-2008 முதல் 27-11-2008 வரை 276 மாவீரர்கள் உள்ளடங்களாக 2008 மாவீரர் எழுச்சி நாள் வரையில் 22390 மாவீரர்கள் எனப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்கால இடப்பெயர்வு காரணமாக தற்காலிக நினைவுத் தடங்களாக மேலும் துயிலும் இல்லங்கள் 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் இறுதிவாரம் வரை 6 தற்காலிக மாவீரர் நினைவுத்தடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்றது. அதற்கு பிற்பட்ட காலப் பகுதியில் போராளிகள் வீரச்சாவடைகின்ற இடங்களில் மாவீரர்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்டது. வீரச்சாவடையும் மாவீரர்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளலாம். நிலவன். தொடர்பு இலக்கம் +61406770300
  3. மன்னிக்க வேண்டும் நிழலி அவர்களே! உங்கள் ஊட்டத்தை நான் வாசிக்கும் நேரத்தில்... என் மனைவி கூப்பிட... நான்போற அவசரத்தில், மாதமாக இருக்கிறேன் என்று வாசித்துவிட்டுக் கலங்கிவிட்டேன்.
  4. நிழலி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 💐 வாழ்த்துடன் இணைக்கப் படம் தேடினேன் உங்களின் உண்மையான படம் கிடைத்தது.😁
  5. நீங்கள் யாரென்று தெரியாமல்.... உங்களிடம் எதையும் எதிர்பாராமல்.. உங்களுக்கு ஒரு புன்னகையை பரிசளிக்க ஒரு குழந்தையால் மட்டுமே முடியும்.!! மகிழ்ச்சியாக இருக்கப் பணம் தேவையில்லை.🤗
  6. ரஞ்சித் மற்றும் சகாறா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 🙌💐
  7. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு வெவ்வேறு இனங்கள் பொதுவான வம்சாவளியின் மூலம் தொடர்புடையவை என்று கூறுகிறது - “டார்வினின் கூற்றுப்படி மனிதனின் தோற்றமும் குரங்கின் தோற்றமும் ஒன்றாக தான் உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என தெரிந்து கொள்ள மனிதனின் ரத்தம் எந்த விலங்குகளிடம் ஒத்து போகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் குரங்கிற்கும் மனிதனுக்கும் சம்மந்தமே இல்லை. ஆனால் பன்றியின் ரத்தம் மனிதனின் ரத்தத்தோடு அதிகளவில் ஒத்து போகிறதாம்.கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவர் நன்கு ஆராயாத ஒரு முடிவை சொல்வது போல் ஆகிவிட்டது. சரி அன்றைய காலகட்டத்தில் இந்த ரத்த சோதனை முறைகள் இல்லை ஆதலால் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு, இதய பொ௫த்தம் ஆராய்ச்சி செய்து பார்த்தி௫க்கிறார்கள். இப்போது இதய அறுவை சிகிச்சை மூலம் இதய மாற்று முறை மிகவும் எளிதாக வந்து விட்டது. அதுமட்டுமின்றி இதயம் பலவீனம் உள்ளவர்கள் செயற்கை இதயம் பொ௫த்தும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எனினும், விலங்குகளின் இதயம் எது மனிதனுக்கு பொ௫ந்தும் என்று பார்த்த போது குரங்கை விட பன்றியின் இதயம் சற்று பொ௫த்தமாகவே இ௫ந்ததாம்.பன்றியின் ரத்தத்தை செலுத்த முடியாமல் இ௫ந்தாலும், பன்றியின் இதயத்தை பொறுத்த முடியாமல் இ௫ப்பினும். குரங்கை விட அனைத்து விதத்திலும் பன்றி மனித௫க்கு ஒத்து போகிறது.அதற்காக பன்றியில் இ௫ந்து மனிதன் தோன்றினானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. பெரும்பாலும் அன்றைய அறிவியல் அவ்வாறு தீர்க்கமாக இல்லை என்ற காரணத்தால் இதன் விளைவுகள் தெரியவில்லை. ஆனால் இன்றைய அறிவியலின் கூற்றுப் படி குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை என்பது மேற்கூறிய ஆய்வின் மூலம் தெளிவாகின்றது.”
  8. Wikipedia எனக்கு எல்லாம் தெரியும்Facebook எனக்கு எல்லாரையும் தெரியும்Google என்கிட்டதான் எல்லாமே இருக்குInternet நான் இல்லைன்னா நீங்க மூணுபேரும் அம்பேல்தான்Electricity என்னடா அங்க சத்தம்?
  9. 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் உலகினை அழித்திடுவோம்' என்று பாரதி பாடினான். தனி ஒரு தமிழனுக்கு உலகில் வாழ உரிமை இல்லை எனிலும், உலகினை அழித்திடுவோம் என்று உலக மக்களே உழைக்கிறார்களே! என்னே கருணை.!!
  10. அழிவை தருவது (ஆணவம்) ஆபத்தை தருவது (கோபம்) இருக்க வேண்டியது (பணிவு) இருக்க கூடாதது (பொறாமை) உயர்வுக்கு வழி( உழைப்பு) கண்கண்ட தெய்வம் (பெற்றோர்) செய்ய வேண்டியது (உதவி) செய்யக்கூடாதது (துரோகம்) நம்பக்கூடாதது (வதந்தி) நழுவ விடக்கூடாதது (வாய்ப்பு) நம்முடன் வருவது (புண்ணியம்) பிரியக்கூடாதது (நட்பு) மறக்க கூடாதது (நன்றி) மிகமிக நல்லநாள் (இன்று) மிகப்பெரிய தேவை (அன்பு) மிகக்கொடிய நோய் (பேராசை) மிகவும் சுலபமானது (குற்றம் காணல்) மிகப் பெரிய வெகுமதி (மன்னிப்பு) விலக்க வேண்டியது (விவாதம்) வந்தால் போகாதது (பழி) போனால் வராதது (மானம்)
  11. ரதித் தங்கச்சி நதிக்கையோரம் இருப்பதால்.... தேற்றி ஆறுதல் அளிக்க, உள்ளம் கவரும் நதிக்கரைப் பாடல்கள் பல உண்டு.... மோகன் அண்ணா வரும்வரையில் அந்தப் பாடல்களைக் கேட்டு ஆறுதல் கொள்ளத் தங்கச்சியை வேண்டுகிறேன்.
  12. குமாரசாமி என்று பெயரைக் கொண்டவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்பது என் கணிப்பு, என் பெரியப்பா ஒருவர் பெயரும் குமாரசாமி. பிள்ளையாரைப்போல் குண்டாக வண்டியும், தொந்தியும் கொண்டவர். திருநெல்வேலியிலுள்ள பழங்கிணற்றடிப் பிள்ளையார் கோவிலில் பூனூல் அற்ற பூசாரியாக இருந்து பூசைகளை மேற்கொண்டு வந்தவர். எல்லோரும் அவரைச் சாமியார் என்று அன்போடு அழைப்பார்கள். அத்தனை மென்மையான உள்ளமும் கொண்டவர். எங்கள் யாழ்கள உறவு சாமியாரிடம் உள்ள மென்மையான உள்ளத்தையும் கள உறவுகள் பலரும் அறிவார்களே ஐயா.🙏
  13. அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? ***
  14. வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔
  15. உணவை உண்ணும்போது அறு சுவைகளையும், அதாவது இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு. என ஒவ்வொன்றின் சுவையையும் தனித்தனியாக உணர்ந்து உண்ணக்கூடியவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுபோல்... கண்கள் காணும் அழகில் இருக்கும் காட்சிகளையும் உணர்ந்து ரசிப்பவனது உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது பிறரையும் மகிழவைக்கும் என்பதற்கு கள உறவு ராசவன்னியர் ஒரு சாட்சி. 🙌
  16. சசி வர்ணம் அவர்களுக்கு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.