Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. விசுகர் அவர்களே! இதையும் பார்த்தால் விருப்பம் இன்னும் அளவுகடந்து வருமே.. 🏃‍♀️🏃‍♂️
  2. இவர்கள் எப்படி இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? குடும்பத் தலைவன் 7 சங்கீதச் சுரங்களில் 3 மட்டும் பாடிவருவதால்! அது எந்த 3 சுரங்கள் ?? ச ரி ம !! 😂🤣
  3. தனிக்காட்டுராசா, கொழும்பான் இருவருக்கும்,
  4. இன்றுவரை பிறந்நாள் கொண்டாடிய அனைவரும்,
  5. தினமும் காலையில் எழும்போது என் வீட்டிலேயே நான் காணும் இனிதான காட்சிகள்... கடல்கடந்து வந்ததால் நினைவில்மட்டும் உறங்கிய நிலையில், என்னை உலுக்கி எழுப்பி எனது ஊருக்கே கொண்டுசென்று மீண்டும் அதனைக் காணவைத்தது உங்கள் காவலூர்க் கனவுக் கவிதை. தொடர்ந்தும் நாங்கள் கவலை மறந்து மகிழ உங்கள் அழகிய கனவுகள் தொடரட்டும். 🙌
  6. தொடருங்கள் நிழலி அவர்களே.! கற்பனைக்கு வாழ்த்துக்கள்..!! பாவம் ராசுக்குட்டி ஆர் பெத்த பிள்ளையோ..?? நாங்கள் களத்தில் கருத்தெழுதி உங்களிடம் மாட்டுப்படுவதுபோல் அவரும் கூகுள் ஆண்டவரைத் தரிசிக்கப்போய் மாட்டிக் கொண்டாரே.!! ஆனாலும் பிறவிக் குணம் யாரைவிட்டது..! மனைவி சொன்ன புளி, சின்ன வெங்காயம், உள்ளி வாங்குவதற்கும் கூகுள் ஆண்டவரைத் தரிசித்த பின்புதான் கொள்முதல் செய்தாராம். சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும். மிருதுவான, ஈரப் பதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும். புளி புளி இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளிச் சாறு ஏற்றது. லேசான டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவும். உள்ளி நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
  7. வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல...! மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!! மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...! ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை..!!
  8. பசுவின் பால்போல் வெண்மையும், இனிமையும் கொண்ட கவிதை. 🙌 "பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம்" இந்த வரிகள் கொண்டுள்ள பொருள், பனித்தூறலை மட்டுமல்ல, கொரோனாவையும் கொண்டுவந்து கொள்முதல் செய்ய வைக்கிறதே.!
  9. மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪
  10. நெடுக்கால போவன் அவர்களுக்கு இனிய பிந்தநாள் வாழ்த்துக்கள்!! பிறந்து வளர்வது இயல்பு! உயர வளர்ப்பது அறிவு!!
  11. இளமையாக இருந்தபோது என் பருக்கள் பற்றி கவலைப்பட்டேன். நான் முதுமை கொண்ட பின்பு தோல் சுருக்கங்கள் பற்றிக் கவலைப்படுகிறேன். இளமையாக இருந்தபோது ஏகாந்தத்தை விரும்பினேன். நான் முதுமை கொண்ட பின்பு என் தனிமையை எண்ணிக் கலங்குகிறேன். இளமையாக இருந்தபோது அழகான கட்டுடலைத் தேடினேன். நான் முதுமை கொண்ட பின்பு அழகான இதயத்தைத் தேடுகிறேன். நான் இளமையாக இருந்தபோது நினைத்ததைச் செய்ய மனம் நினைத்தது நான் முதுமை கொண்ட பின்பு செய்தவை சரியா தவறா மனம் சரிபார்க்கிறது..
  12. தமிழ் சிறி மற்றும் சிவா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
  13. பிச்சை எடுத்தால் பிச்சைக்காரன் என்று பெயர்! வட்டிக்குக் கொடுத்தால் வட்டிக்காரன் என்று பெயர்! கடன் வாங்கினால் கடன்காரன் என்று பெயர்! சீதனம் வாங்கினால் சீதனக்காரன் என்று பெயர் வரவேண்டுமே? அதென்ன மாப்பிள்ளை என்று பெயர்??
  14. புத்த பிக்குகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொட்டை அடிப்பது.! தங்களை தலையை மொட்டை அடித்த பிக்குகள் அரசியலுக்கு வருவார்கள். மக்களை மொட்டை அடிக்க அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவார்கள்.
  15. வேண்டுதல் செய்தால் நீங்கள் இறைவனிடம் செல்வீர்கள்...! தொண்டுகள் செய்தால் இறைவன் உங்களிடம் வருவான்...!!
  16. கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள். தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்..... அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல். பெண்ணா இவ சனியன் புத்தி கெட்டு போனேனே தம்பிமக சமைச்சா சபையெல்லாம் வாசம் வரும் அள்ளி இலையிலிட்டா அடுக்கடுக்கா வெள்ளிவரும் உண்ணவொரு கையெடுத்தா உள்நாக்கில் நீர்வடியும் கத்தரிக்காக் கூட்டுவச்சா கடவுளுக்கே பசியெடுக்கும் வெண்டைக்கா பச்சடியும் வெள்ளரிக்கா தக்காளி கிண்டி விட்ட கீரைக்கும் கீழிறங்கும் தெய்வமெல்லாம்! அப்படிக்கி சமைப்பாளே அள்ளியள்ளி வைப்பாளே அடுப்படிக்கு நான்போக அவசியமே இல்லாமே உட்கார்ந்த பாய்வரைக்கும் ஓடிவந்து வைப்பாளே இவளும் சமைச்சாளே எல்லாந் தலையெழுத்து
  17. வாலி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்
  18. கடிகாரத்திற்கு நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும் அதை நல்ல நேரமாகவும் கெட்ட நேரமாகவும் மாற்ற மனிதனால் மட்டுமே முடியும்.
  19. கடினமாய் உழைத்தவர்களை விட.... கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்
  20. சாத்திரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!☕
  21. நம் வாழ்வில் எல்லாம் ஒருநாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.