Everything posted by goshan_che
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு நாடகம் ஆடினார், ஆளுனர் தன் எசமானுக்காக, யுடியூப்பர் தன் வருவாய்க்கான நாடகம் ஆடினர். நாடகமோ, நாட்டியமோ, வீதி திறப்புக்கு சிறிதோ, பெரிதோ ஆவன செய்த அனைவருக்கும் பாராட்டுகள். புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நல்லது…. இனியாவது யாழ்களத்தில் இப்போ எல்லாம் முன்னர் போல குறுக்கு கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில் மனம் போனபோக்கில் ஆதாரமற்ற கட்டுகதைகளை அவிழ்து விடலாம் என நினைக்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். பிகு. உங்கள் கருத்து முக்கியம் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறிய 1. விஜை பின்னால் இருந்து தமிழ் தேசியவாதிகள் இயக்குகிறனர் 2. விஜை திராவிடத்தை உறவாடி கெடுக்க நினைக்கிறார் இவை இரண்டும் கருத்துக்கள் அல்ல. நீங்கள் இதை ஊகமாக கூட சொல்லவில்லை. தரவு போல் அடித்து விட்டீர்கள். அதை நம்பி இரு அப்பாவிகள் லைக் வேறு போட்டார்கள். உங்கள் நேரம் போலவே வாசகர் நேரமும் பொன்னானதே. அதை ஆதாரமற்ற தகவல்கள் கூறி வீணடிக்க வேண்டாமே🙏. கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது, ஆனால் நாம் காணும் கனவை நிஜம் என பொதுவெளியில் எழுதும் போது கேள்விகள் வரத்தான் செய்யும். பதில் சொல்லமுடியாவிட்டால் பம்மலாம் அல்லது நேரத்தை சாட்டலாம். வேறு வழியில்லை. இலண்டன் பயணம் சிறப்புற வாழ்த்து.
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
கடந்த சில வருடங்களாக பனை அபிவிருத்தி சபையின் பொருட்களின் தரம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் பனங்கட்டி கையிருப்பு குறைவாக இருப்பது ஒரு குறை. பண்டதரிப்பு நிலையம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருந்தாலும், பலவித பனம் பொருட்களை ஒரே இடத்தில் தரமாக வாங்க முடிகிறது. புதிய தலைவர் இதை அடுத்த நிலைக்கு இட்டு போக வேண்டும்.
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
தகவலுக்கு நன்றி ஜி. படம் ரொம்ப பழசு போல இருக்கு, இதை இப்பதானா தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்களா? அண்ணனுக்கு வெட்டுவதை வெட்டி இருந்தா லைக்காவுக்கு கொடுத்த ஆதரவை கொடுப்பாரே?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
என் கேள்விக்கென்ன பதில் 🤣
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
யாராவது படம் பார்தீர்களா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜைக்கும் ஸ்டாலின், சீமான் போன்றோருக்கும் உள்ள இன்னொரு வரவேற்க வேண்டிய வேறுபாடு. அரசியல் வாழ்க்கைக்காக குடும்ப உறுப்பினர்களை வைத்து பேஷன் ஷோ நடத்துவதில்லை. அதே போல் பலமாதங்களாக விஜை-சங்கீதா உறவு பற்றி ஊகம் பலவாறு பறந்த போதும் விஜை அலட்டி கொள்ளவில்லை. ஆனால் முரசொலி செல்வம் மரணத்துக்கு தன் சார்பில் அவரை அனுப்பி இருந்தார் என அறிகிறேன். சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் இப்போ திமுக எதையாவது கிண்டிவிட தலையால் மண் எடுப்பார்கள்🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழ் நாட்டில் நீங்கள் மேலே எழுதியதுதான் அரசியல் நிதர்சனம். அங்கே கூட்டணி வைப்பதாகில் நீங்கள் சொன்ன கட்சிகளுடந்தான் வைக்க முடியும். இல்லாமல் ஊழல் இல்லாத கட்சி என தேடிப்பார்த்தால் நாதக உட்பட எவரும் மிஞ்ச மாட்டார்கள். ஆனால் சீமான் கூட்டணி கதவை சாத்தியதாக நீங்கள் கூறுவது கொஞ்சம் உருட்டல் வகை🤣. வேணும் எண்டால் கூறவும், கூட்டணி வைப்பது, விஜை மாநாட்டுக்கு போவது பற்றி, சீமான் புது பெண் போல வெட்கப்பட்டு கொண்டு கொடுத்த பேட்டிகளை பகிர்கிறேன். சீமான் ஆசையாய்தான் இருந்தார். படுபாவி விஜை, சீமானின் எந்த சமிக்ஞை பற்றியும் ஒரு எதிர்வினை கூட காட்ட இல்லை. விஜை பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னும் கூட சீமான் நம்பிக்கையோடுதான் இருந்தார். மாநாட்டில் நடுநாயகமாக பெரியாரை வைத்து, திராவிட கொள்கை என் ஒரு கண் என சொன்னது கிட்டதட்ட சீமானின் முகத்தில் கதவை அறைந்து சாத்தியதை போல. கூடவே பேச்சிலும் சீமானை பெயர் சொல்லாமல் விமர்சித்தார் விஜை. இதன் பின் வேறு வழி இன்றி சீமான் - இல்லாத கூட்டணியை இல்லை என அறிவித்தார். விஜை அவர் அப்பா எல்லாம் பல வருடமாக சினிமாவில் இருப்போர் அவர்களுக்கு சீமானை, அதைவிட சீமானை எங்கே வைக்க வேண்டும் என தெரியும். அடேங்கப்பா என்ன ஒரு விடுகதை🤣. எனக்கு உந்தளவுக்கு ஐ கியூ இல்லை வாலி சார்🤣
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அப்போ விஜைக்கு விஜி அண்ணி என்ன முறை🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது நல்ல விடயம் தானே. ஈழத்தமிழர் குமையும் விதமாக விஜை எதுவும் கூறாதவிடத்து - அவரை வரவேற்பதில் தவறேதும் இல்லையே. அவர் என்ன திரள்நிதி கேட்டாரா அல்லது மாவீரகளை, பொட்டம்மானை தூஷித்தாரா? இல்லையே. இது நிபந்தனை அற்ற வரவேற்பில்லை. இப்போதைக்கு வரவேற்காமல் விட காராணம் ஏதுமில்லை. ஓ எல் சோதனை வருடம் ஒருமுறை வரும், ஆனால் கிரிகெட் வேர்ல்ட் கப் நாலு வருடம் ஒரு முறைதான் வரும் 🤣. லே ஒண்டோரியோவை தெர்மகோல் போட்டு மூடிய “சென்ற ஊர்” ராஜு அண்ணன் ரசோ வாழ்க🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அதுக்கு முன்பே தமிழ் நாட்டில் தலைவரின் படத்தை அல்ல, தலைவரையும், போராளிகளையும் வைத்திருந்த பலரை நான் அறிவேன் ப்ரோ. சீமான் தலைவரை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்தார் என்பது சூரியனுக்கு நான் டோர்ச் அடித்த பின்பே மக்கள் சூரியனை அறிந்தனர் என்பதை போன்ற கருத்து. முடிந்தால் இது பற்றிய டாக்டர் காந்தராஜ் பேட்டியை அல்லது வேல்முருகன் பேச்சை உங்கள் அபிமான யூடியூப்பில் பாருங்கள். கடைசியா போனமாதம் தமிழ் நாடு போனேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரி @பாலபத்ர ஓணாண்டி ப்ரோ இப்போ உங்களிடம் நான் கேள்வி கேட்க்கும் முறை. 1. விஜை மாநாட்டு திரியில் நீங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் - விதை நான் போட்டது என தேவர்மகன் வசனம் பேசி சீமான் புகழ் பாடினீர்கள்? தனிமனித அபிமானம்? 2. விஜை பின்னால் நின்று இயக்குபவர்கள் எல்லாம் பெரிய தமிழ் தேசிய தூண்கள் என்றீர்கள். யாரிவர்கள்? இவர்கள் விஜையை பின்னால் இருந்து இயகுவது உங்களுக்கு எப்படி தெரியும்? இதற்கான ஆதாரம் என்ன? 3. விஜை திராவிடத்தை மனப்பூர்வமாக ஏற்கவில்லை, உறவாடி கெடுக்க போகிறார் என்றீர்கள். இதை விஜை அல்லது புஸ்ஸி ஆனத் உங்களிடம் தனியாக சொன்னார்களா? இல்லாவிடின் எப்படி உங்களுக்கு விஜையின் மன ஓட்டம் தெரிய வந்தது? கேள்விகளுக்கு பதிலை ஆவலோடு எதிர்பார்கிறேன். பிகு யாழில் நாதம், குணா கவியழகன் போன்ற “அடித்து விடும்” ஆட்கள் என நான் நினைப்போர் அனைவரையும் கேள்வி கேட்பதை போலதான் இந்த கேள்விகளும். தனிப்பட்டு ஏதுமில்லை. சதவீத கணக்குக்கு நான் வரவில்லை. ஆனால் சீமான், குறிப்பாக இதுவரை காலமும் விஜையை தம்பி, பச்சை தமிழன் என தன் வாயாலே முத்திரை குத்திவிட்டு, கூட்டணிக்கு தயார் என பல்லிளித்து விட்டு - இனி விஜையை சீமான் பாதி மலையாளி என கூறினால் - அது அம்பலம் ஏறாது. சங்கிகள் - ஏலவே ராஜா ஜோசப் விஜை என்பதை கையில் எடுத்து, விஜையும் ஆம் நான் ஜோசப்தான் என கூறி மூக்குடைந்தார். என்னை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் நேரடி சங்கிகளும், மறைமுக சங்கிகளும் (சீமான்) ஒருவரை எதிர்ப்பது அவருக்கு பிளஸ்சே தவிர மைனஸ் அல்ல.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வணக்கம் ப்ரோ, கண்டு கனகாலம். அது சரி…. நான் முன்வைத்த தரவு அடிப்படையிலான கருத்துகள் அத்தனையும் பைபாஸ் பண்ணி விட்டு - நேரடியாக எனக்கான தமிழ் தேசிய மரபணு சோதனையில் இறங்கி உள்ளீர்கள். கருத்தை விட்டு கருத்தாளரின் ரிஷி மூலம் தேடும் யாழின் நெளிவு சுளிவுகளை நன்றாக கற்று கொண்டு விட்டீர்கள், சபாஷ். சரி முதலில் உங்களுக்கான பதில். 1. தமிழ் தேசியம் என்பது இலங்கையில் வேறு, தமிழகத்தில் வேறு. உதாரணமாக இலங்கையில் யார் தமிழர் என கருதும் போது அதில் இஸ்லாமியர் அடங்கார். ஆனால் தமிழகத்தில் அடங்குவர். ஆகவே இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் முஸ்லிம்களுக்கானது அல்ல, ஆனால் தமிழகத்தில் அது அவர்களையும் உள்ளடக்கியது. இது வெறும் உதாரணமே. ஆகவே தமிழ் தேசியம் என்பது இலங்கையிலும், தமிழகத்திலும் ஒரே விடயம் அல்ல. இரெண்டுக்கும் ஒத்த வரைவிலக்கணமும் இல்லை. 2. கூடவே 1950 கள் முதல் தமிழ் தேசியம் இலங்கையில் ஒரு வரித்துக்கொள்ள பட்ட கொள்கை. திம்பு முதல் பல பிரகடங்கள் இலங்கை தமிழரின் தமிழ் தேசியத்தை வரையறுத்து, வலியுறுத்துகிறன. 3. தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் ஒரு நோஞ்சான் பிள்ளை. ஆனால் காலப்போக்கில் அது திராவிட கொள்கையை உள்ளீர்த்து, தமிழ் நாட்டினர் அனைவருக்கும் உரிய, தமிழ் நாட்டிற்கென தனித்துவமான, யார் தமிழர் என்ற வட்டத்தை பெரும்பிக்குமான, தமிழ் தேசிய அரசியலாக மிளிர வேண்டும் என்பதே என் போன்றோரின் நிலைப்பாடு. அது மட்டும் இல்லை, இந்திய ஒருமைப்பாட்டை மீறாத வகையிலும் (இல்லை என்றால் நசுக்கி விடுவார்கள்), அம்பேத்காரை ஏற்கும் வகையிலும் கூட இந்த தமிழ் நாட்டுக்குரிய தமிழ் தேசியம் வரையறுக்கப்படல் வேண்டும். இந்த வகையான தமிழ் தேசியத்தைத்தான் சீமான் கைக்கொள்ளவார் என எதிர்பார்த்து உங்கள் எல்லோருக்கும் முன்பே அவரை ஆதரித்தவன் நான். சீமான் இதை செய்தால் அவரை ஆதரிப்பேன் என பல தடவை யாழில் எழுதியும் உள்ளேன். ஆனால் அவர் இதை எல்லாம் புறம் தள்ளி, தமிழ் தேசியத்தை சாதி, மத அடிப்படையில் குறுக்கி, பிளவு படுத்தி, சங்கி-தமிழ் தேசியத்தை முன்னிறுத்தினார். நிச்சயமாக சீமான் பிராண்ட் சங்கி தமிழ் தேசியத்தை நான் வன்மையாக எதிர்கிறேன். இது தமிழ் தேசியமே இல்லை. போலித் தமிழ் தேசியம். ஆனால் விஜை முந்தள்ளும் தமிழ் தேசிய + திராவிட கொள்கை கலப்பு மிக இயல்பானது. இரு வேறு பசுக்களின் பாலினை ஒரே குடுவையில் கலப்பது போன்றது. அங்கே சோசலிச கொள்கைக்கும் இடமுண்டு, இறை வணக்கத்துக்கும் இடமுண்டு, அம்பேத்காருக்கும் இடமுண்டு. நான் முன்பு எழுதியுள்ளேன், சீமான் தனது தாக்குதலை திராவிட கொள்கை, பெரியார், தெலுங்கு வழி சாதிகள் என ஆரம்பிக்காமல் - திமுக, அண்ணாவுக்கு பிந்திய தலைவர்கள் என ஆரம்பித்து இருக்க வேணும் என. விஜையின் கட் அவுட் வரிசை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் ரிபரன்ஸ்சை வைத்து பார்த்தால் புரியும் - அவர் எடுத்துள்ள நிலைப்பாடு அச்சொட்டாக இதுவே. ஆகவே எனக்கு சீமான் மீது கடுப்பா, தமிழ் தேசியத்தின் மீது கடுப்பா என்ற உங்கள் கேள்விக்கான பதில் - எனக்கு சீமான் முன்வைக்கும் போலி/சங்கி தமிழ் தேசியத்தின் மீது கடும் கடுப்பு. அதை சுயலாபத்துக்காக முன் வைப்பதால் சீமான் மீது செம கடுப்பு. ஆனால் மிக இயல்பான, அந்த மண்ணின் யதார்தத்தோடு அனுசரித்த போக்குடைய, கம்யூனிசம், தலித்தியம், பெரியாரிசத்தில் இருந்து நல்லன எடுத்து அல்லன விடுக்கும் விஜை முன்வைக்கும் தமிழ் தேசியம் எனக்கு மிக பிடித்தமானது. சொல்லப்போனால் இந்த வகை மெய்-தமிழ் தேசியத்தை விஜை இதை நேற்று பிரகடன படுத்த, பல வருடங்கள் முன்பே யாழில் இதை பிரசுரித்து, சீமானுக்கு பரிந்துரைத்தவன் நான் என்ற வகையில் - இது தனியே விஜை பாணி தமிழ் தேசியம் மட்டும் அல்ல, இது கோஷான் பாணி தமிழ் தேசியமும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
புலவர் ஓணாண்டியார் இப்பெல்லாம் கவிதையை விட்டுட்டு நல்லா கதை எழுத ஆரம்பித்து விட்டார். விஜை எஸ் ஏ சியின் மகன் - எஸ் ஏ சி திராவிட அரசியலில் வந்தவர். விஜயகாந்த் திமுக ஆதரவில் இருந்த காலத்தில் எஸ் ஏசியும் அதே நிலைபாட்டில்தான் இருந்தார். அது மட்டும் அல்ல கருணாநிதியின் பல திரைக்கதைகளை இயக்கும் அளவுக்கு திமுகவுக்கு திராவிட அரசியலுக்கு நெருக்கமானவர், இதுதான் விஜையின் அரசியல் ஆரம்ப புள்ளி. அடுத்து விஜை பாதி மலையாளி. விஜையின் அம்மா சோபா, மலையாள பாடகர், மை மோகனுக்கு முன்பு குரல் கொடுத்த, சுரேந்தரின் அக்கா. ஆகவே சீமானின் இனத்தூய்மை திராவிட எதிர்ப்பை விஜை விரும்பினாலும் கையில் எடுக்க முடியாது. சீமானை போல் விஜை தான் மலையாளி என்பதை மறைக்கவும் முடியாது. ஆகவே விஜையால் திராவிட கொள்கையை புறம் தள்ள முடியாது. அடுத்து விஜை என்றும் தன் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்தவரில்லை. ஆகவே சீமானின் சங்கி-தமிழ்-தேசியத்தின்- தாய் மதம் திரும்பும் கொள்கையும் அவருக்கு ஏற்புடயதல்ல. அத்தோடு பெரியாரோடு முரண்படவோ, தெலுங்கு வழி சாதியினரை மூர்க்கமாக எதிர்கவோ கிறிஸ்தவ வெள்ளாள சமூகத்கை சேர்ந்த விஜைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவரின் நேற்றைய இரசிகர், இன்றைய தொண்டர் பலர் தெலுக்க்கு வம்சாவழியினர். ஒவ்வொரு வோட்டும் தேவை என கருதும் எந்த அரசியல்வாதியும் பெரும் இனக்கூட்டங்களை பகைக்கமாட்டார். அது சீமானை போல ஆட்சிக்கு வருவதில் ஆர்வம் இல்லாத, கொடுப்பனவுக்கு வேலை செய்யும் எஜெண்டுகள் செய்யும் வேலை. சகல அரசியல்வாதிகளும் செய்வது சகலதும் அரசியலின் பால்பட்டே. ஆனால் விஜை திராவிடத்தை உள்ளிருந்து கொல்ல முயல்கிறார் என்பது ஓணாடியார் விட்டத்தை பார்த்து எழுதிய அருமையான கற்பனை. தேள்வடிவ தாக்குதல், சிலந்தி வடிவ தாக்குதல், அரூஸ், நிலாந்த்தன், திருநாவுக்கரசு எல்லாருக்கும் கற்பனை வளத்தில் டப் கொடுக்கிறார் ஓணாண்டி. புலிகள் போராட்டம் முடிவுக்கு வரும் தறுவாயில் - தம்மை தாமே தேற்ற பலர் இப்படியான கதைகளை அவிழ்த்த்து விட்டு தாமும் பேயராகி, வாசிப்பவரையும் பேயனாக்கினார்கள். விஜையின் வரவு, பெரியாரை நடுநாயகமாக்கி அதன் மூலம் விஜை சீமனை புறம்தள்ளியமை மூலம், சீமானின் அரசியல் கிட்டதட்ட சாம்பல் கரைக்கும் நிலைக்கு வந்து விட்டதை கண்டு மனம் ஒப்பாத அவரின் ரசிக சிகாமணிகள் இப்படியான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதில் பலதுக்கு முன்பே பலதடவை பதில் சொல்லியாகி விட்டது. மேலே நான் சொன்னது புலிகளை பயங்கரவாதிகள் என எதிர்த்த மா பொ சியை சீமான் எம்மிடமே தமிழ் தேசிய பிதாமகன் என அறிமுகப்படுத்திய நய வஞ்சகத்தை. இதே போல் தேவையில்லாமல் தலைவரை தமிழ் நாட்டில் இழுத்து போய், தலைவர் vs கருணாநிதி என ஒரு மாய சமன்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஈழத்தமிழர், தலைவர், புலிகள் என்றாலே தமிழ்நாட்டில் பலர் வெறுக்கும் நிலையை வலிந்து உருவாக்கியவர் சீமான். இப்படி நயவஞ்சக லிஸ்ட் நீளும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நயவஞ்சகன்(ர்) சீமான். எமது எதிரிகளை எம்மிடமே எம் கொள்கையின் பிதாமகர்கள் என நிறுவ முற்பட்ட கயவன்(ர்). மிக கேவலமான எதிர்புரட்சியாளர். மபொசி மட்டும் அல்ல, புலிகள் அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி, போர் என்றால் மக்கள் சாவார்கள் என கூறிய ஜெ, புலிகளை பயங்கரவாத அமைப்பு என சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றிய மாமா காளிமுத்து என பலரை இப்படி வரலாற்று திரிபு செய்துள்ளார். புலி அனுதாபியாக இல்லாத போதும் உண்மையை ஆதாரத்தோடு வெளிக்கொணர்தமைக்கு நன்றி. இதை தமிழ் நாட்டு இளசுகளும், நேற்று பெய்த மழையில் இன்று காலையில் முளைத்த புலம்பெயர் காளான்களும் நம்பியது கூட பரவாயில்லை, என் வயதை ஒத்த, ஈழநாதத்தில் நடப்பதை 90களில் தினமும் வாசித்து வளர்ந்த ஏழு குதிரை வயசான பூமர் அங்கிள்கள் கூட நம்பியதுதான் சோகம். இதுவரைக்கும் நாம் கட்டு காசு மீட்டதாக வரலாறு, பெளதீகம், பொருளியல் எதுவுமில்லையே.
- 5 வயது பேரனின் கேள்வி
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மானஸ்தன்… அநேகமா இப்போதைக்கு பாதி மீசையோடத்தான் இருப்பார்🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
👆👌 ஓம்… பிஜேபியை எதிர்க்காதவனுக்கும், பெரியாரை எதிர்த்தவனுக்கும் தமிழ் நாட்டில் அரசியல் எதிர்காலம் இல்லை. இதை விஜை உணர்ந்து நடப்தில்தான் அவரின் வெற்றி உள்ளது. அமலாக்க துறை, உளவு துறைக்கெல்லாம் பயப்பட்டால் சீமான் போல விலை போக வேண்டியதே. களவு எடுத்தாலும் ஜெகத் ரட்சகன், பாலாஜி நிற்பது போல் தைரியமாக நிற்க வேண்டும்.
-
5 வயது பேரனின் கேள்வி
நான் எனது சொந்த மண்ணில் இருந்து, என் பூர்வீக மண்ணில் இருந்து துரத்தப்பட்டேன். இதில் எங்கே ஐயா வருகிறது இனத்துவேசம்? இது அல்லவா நீங்கள் வந்த காரணம் - அப்படியாகின் வந்த காரணம் (பொருளாதாரம்?) எதுவோ அதை சொல்லுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் எமக்கு இலங்கை தீவில் நிகழ்ந்த, நிகழ்கிற அநீதியை மட்டும் சொல்லாமல் விட வேண்டாம். கதை போல சொல்லலாம்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பிகு விஜை செய்ய வேண்டியதில் மிக முக்கியமானது திமுகவை எந்தளவு அடிக்கிறாரோ அதை விட ஒரு படி மேலாக பிஜேபியை அடிக்க வேண்டும். நேற்று திமுகவை சாடிய அளவுக்கு பிஜேபியை சாடவில்லை. இது மாற வேண்டும். குறிப்பாக கொள்கை விடயங்களில் - போட்டு வெளுக்க வேண்டும். இல்லா விட்டால் இலகுவாக திமுககாரர் இவரை பிஜேபி பி டீம் என பிரச்சாரம் செய்து விடுவார்கள். சீமான் உண்மையிலே பி டீம் போல கொள்கை விளக்கம் கொடுத்தமையால் அவருக்கு அது சரியான பெயர்தான் - ஆனால் இதையே விஜைக்கு பாவிக்க இம்மியளவும் விஜை இடம் கொடுக்க கூடாது. அதற்கு ஒரே வழி பிஜேபியை மிதிப்பதுதான். குறிப்பாக கொள்கைகளை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மீள வரவேற்றோர் அனைவருக்கும் நன்றி. தனித்தனியே எழுதி பக்கத்தை நீட்ட விரும்பவில்லை 🙏. ——— History doesn’t repeat itself but it often rhymes என்கிறார் மார்க் டுவைன். அதாவது வரலாறு அச்சொட்டாக அப்படியே மீளாது ஆனால் அது அதே சந்தத்தில் மீள ஒலிக்கும். விஜயகாந்த் - சீமான் - விஜை ஒப்பீடும் இதை ஒத்த ஒன்றே. விஜயகாந்த் விட்ட மிகப்பெரிய பிழை பிரேமலதா, சுதீசை அரசியலில் இறக்கியது. அவர்கள் பணம், ராஜ்யசபா சீட்டுக்கு விஜயகாந்தை அடகு வைத்தார்கள். அதேபோல் ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தல் காண முன்னமே அவரின் குடிக்கு எடுத்த சிகிச்சை அவரின் மூளையை பாதித்து விட்டது, அத்தோடு அவர் அரசியல் வாழ்க்கை எழ வழியே இருக்கவில்லை. சீமான் விட்ட மிகப்பெரிய பிழை பெரியாரில் கை வைத்தது. அடுத்து நொடிக்கு ஒரு நிலை மாறுவது, மூன்றாவதாக கொள்கை அளவில் பிஜேபி சொல்லும் ஒவ்வொரு விடயத்தையும் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் அப்படியே ஒப்புவிப்பது. பிஜேபி ஸ ரி க ம ப த நி ஸ என்றால், சீமான் ஸ நி த ப ம க ரி ஸ என்பார். இவை எல்லாம் இவர் பிஜேபி ஏஜெண்ட் என்பதை மக்கள் பிரித்தறிய உதவின. இருவரும் விட்ட பிழை கூட்டணி வைக்காமல் வீம்பு காட்டியது. இவற்றை பலதை விஜை இப்போதே விலக்கி நடப்பதாக எனக்குப்படுகிறது. விஜை முன் இருக்கும் மிகப்பெரிய சவால் திமுக எதிர் கூட்டணி ஒன்றை உருவாக்கி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதே. திருமாவுக்கு துணை முதல்வர், கம்யூனிஸ்டுகளுக்கு அவர்கள் கொள்கைகள் சிலதை அமல் படுத்தல் போன்ற நியாயமான விட்டு கொடுப்புகளை செய்தால் - முதலில் திமுக கூட்டணியை உடைக்கலாம். காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஸ்டாலினுக்கு இப்போதே விஜை பேசியதை மேற்கோள் காட்டி ஆட்சியில் பங்கு கேட்டு கடிதம் எழுதி விட்டார். அதே போல் விசிக நிர்வாகி ஒருவரும் டிவீட்டியுள்ளார். திமுக கூடாரத்தை இத்தனை வருடத்தில் சீமான் இப்படி ஒரு போதும் கதற விட்டதே இல்லை. ஒரு பேச்சில் விஜே அதை சாதித்துள்ளார். இப்படி விஜைக்கு சாதமாக பலது இருக்கிறது. ஆனால் அவர் முன்னாள் உள்ள பெரிய சவால் அதிமுக. அவர்கள் விஜே தலைமைய ஏற்க மாட்டார்கள். அவர்கள் வராமல் திமுககவை வெல்வது கடினம். அதே போல் நிர்வாகிகள் மரணத்தில் விஜை காட்டிய சுணக்கம், நேரில் போகாமை தொடர்ந்தால் அவரும் சீமானை போல் அவர் கட்சிகாராராலேயே தூக்கி எறியப்படுவார். இந்த விடயத்தில் உதய்யை பார்த்து விஜை கற்று கொல்ல வேணும். ஆச்சரியமான உண்மை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நல்ல கருத்து. பொதுவெளியில் ஏற்க வரட்டு கெளரவம் விடாது என நினைக்கிறேன், ஆனால் கடந்த ஆறுமாத கால நிகழ்வுகள் நான் சொன்னது சிலதை உண்மை என உங்கள் உள்மனம் ஏற்க வைத்திருக்கும் என நம்புகிறேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உண்மைதான். ஆனால் என்ன தான் உபிஸ் 200 ரூபாய்க்கு ஓவர் டைம் பார்த்தாலும், மீம்ஸ் பேக்டரிகள் இயங்கினாலும்…எடப்பாடி, கமல், அண்ணாமலை, சீமான் …வஞ்சகம் இல்லாமல் மீம்ஸ்க்கு கண்டெண்ட் கொடுத்தார்கள் என்பதும் உண்மை. விஜை இதை தன் பேச்சிலேயே, எம்மை பி டீம் என பச்சை குத்த முடியாது, மீம்ஸ் போட்டு கலாய்க்க முடியாது என கூறியது அவருக்கு விசயம் விளங்கவாவது செய்கிறது என நினைக்க வைக்கிறது. நிச்சயம் விஜை வெல்ல இருப்பதை விட தோற்க இருக்கும் நிகழ்தகவே தற்போது அதிகம். ஆனால் எனக்கு அவரை எதிர்க்க ஒரு காரணமும் இன்னும் இல்லை, ஆதரிக்க பல காரணங்கள் உண்டு. எப்படியோ திமுக பக்கம் எதிர்காலம் உதய்ணா என்பது கண்கூடு. ஆகவே வரும் காலம் விஜைண்ணா vs உதய்ணா என அமைந்தால் நல்லது என நினைக்கிறேன். விஜையை பற்றி மக்கா மிசி, பிரச்சனையை லெப்ட் ஹாண்டில டீலு பண்ணுற மைக்கல் ஹசி என நான் சொல்லவில்லை…/ மச்சி it’s a long way to go என்பதை நானும் ஏற்கிறேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கூட்டணி தற்கொலைக்கு சமம்.. திராவிடத்தை கொன்று புதைப்பேன்.. விஜய் அறிவிப்பால் சீமான் ஆவேசம் Mathivanan MaranPublished: Monday, October 28, 2024, 8:22 [IST] சென்னை: தேர்தல் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது; அதற்கு பேசாமல் விஷம் குடித்துவிட்டே படுத்துவிடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்த நிலையில் சீமான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பிளவுவாத சக்தியான பாஜகவும் ஊழல்வாதிகளான திமுகவும்தான் சித்தாந்த, அரசியல் எதிரிகள் என அறிவித்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்; தவெக ஆட்சியில், அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு எனவும் அறிவித்தார். அதேபோல திராவிடமும் தமிழ்த் தேசியமும் தங்களது இரு கண்கள் என்றார் விஜய். நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு சிறிய கட்சிகள், கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே 'தம்பி விஜய்' என பாசமாக அழைத்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நேற்றைய பேச்சைத் தொடர்ந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், தந்தை பெரியார் மட்டுமே பெண்ணுரிமைக்காக போராடவில்லை. வேலுநாச்சியார் போராடும் போது தந்தை பெரியாரே பிறக்கவில்லை. பாரதியாரைப் போல பெரியாரும் பெண் உரிமைக்காகப் போராடினார். அவ்வளவுதான். திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமது கண்கள் என்கிறார் விஜய். அவரது கட்சியின் கொள்கைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஒத்துவராதவை; எதிரானவை என்றார். மேலும் கூட்டணி என்பதே தற்கொலைக்கு சமமானது. கொள்கைகளில் உடன்பாடு இல்லாத போது எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? கூட்டணி என முடிவெடுத்துவிட்டால் அது ஒவ்வொரு கட்சிக்கும் தற்கொலைக்கு சமமானதுதான். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம். ஏன்? உங்க தனித்துவத்தை இழந்துவிடுவீர்கள். உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் கோபித்துக் கொள்வார் என நினைத்தால் நீங்கள் என்ன பேசுவீர்கள்? நீங்க செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கி பேசனுமா? முட்டுக் கொடுக்கனுமா? அதை ஏற்பீர்களா நீங்கள்? கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறீர்கள்.. கட்சியை காப்பாற்றுவதுதான் லட்சியம் என்றால் எந்த லட்சியத்தை காப்பாற்ற கட்சியை தொடங்குனீங்க? எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு நான் தோற்றுதான் போகிறேன்.. உங்களுக்கு என்ன இழப்பு? என் முன்னோர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன்.. எங்க கட்சியை உருவாக்கிய சிபா ஆதித்தனார், மபொசி என எல்லா தமிழ்த் தேசிய அரசியல் முன்னோர்கள் எல்லாம் திராவிடத்தில்தான் கரைந்தனர். அந்த திராவிட பூதம் தின்று விழுங்கிவிட்டது. நான் ஒருத்தன்தான் திராவிடத்தை கொன்று புதைக்க வந்தவன். அப்ப என்னையாவது சுதந்திரமாக விடவேண்டும். என்னை ஏன் கூட்டணிக்கு போ என்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார். https://tamil.oneindia.com/news/chennai/declaration-by-actor-vijay-seeman-strongly-opposes-alliance-politics-dravidian-movements-650091.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி: ரத்த கொதிப்பு, ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு.