Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மானஸ்தன்… அநேகமா இப்போதைக்கு பாதி மீசையோடத்தான் இருப்பார்🤣.
  2. 👆👌 ஓம்… பிஜேபியை எதிர்க்காதவனுக்கும், பெரியாரை எதிர்த்தவனுக்கும் தமிழ் நாட்டில் அரசியல் எதிர்காலம் இல்லை. இதை விஜை உணர்ந்து நடப்தில்தான் அவரின் வெற்றி உள்ளது. அமலாக்க துறை, உளவு துறைக்கெல்லாம் பயப்பட்டால் சீமான் போல விலை போக வேண்டியதே. களவு எடுத்தாலும் ஜெகத் ரட்சகன், பாலாஜி நிற்பது போல் தைரியமாக நிற்க வேண்டும்.
  3. நான் எனது சொந்த மண்ணில் இருந்து, என் பூர்வீக மண்ணில் இருந்து துரத்தப்பட்டேன். இதில் எங்கே ஐயா வருகிறது இனத்துவேசம்? இது அல்லவா நீங்கள் வந்த காரணம் - அப்படியாகின் வந்த காரணம் (பொருளாதாரம்?) எதுவோ அதை சொல்லுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் எமக்கு இலங்கை தீவில் நிகழ்ந்த, நிகழ்கிற அநீதியை மட்டும் சொல்லாமல் விட வேண்டாம். கதை போல சொல்லலாம்.
  4. பிகு விஜை செய்ய வேண்டியதில் மிக முக்கியமானது திமுகவை எந்தளவு அடிக்கிறாரோ அதை விட ஒரு படி மேலாக பிஜேபியை அடிக்க வேண்டும். நேற்று திமுகவை சாடிய அளவுக்கு பிஜேபியை சாடவில்லை. இது மாற வேண்டும். குறிப்பாக கொள்கை விடயங்களில் - போட்டு வெளுக்க வேண்டும். இல்லா விட்டால் இலகுவாக திமுககாரர் இவரை பிஜேபி பி டீம் என பிரச்சாரம் செய்து விடுவார்கள். சீமான் உண்மையிலே பி டீம் போல கொள்கை விளக்கம் கொடுத்தமையால் அவருக்கு அது சரியான பெயர்தான் - ஆனால் இதையே விஜைக்கு பாவிக்க இம்மியளவும் விஜை இடம் கொடுக்க கூடாது. அதற்கு ஒரே வழி பிஜேபியை மிதிப்பதுதான். குறிப்பாக கொள்கைகளை.
  5. மீள வரவேற்றோர் அனைவருக்கும் நன்றி. தனித்தனியே எழுதி பக்கத்தை நீட்ட விரும்பவில்லை 🙏. ——— History doesn’t repeat itself but it often rhymes என்கிறார் மார்க் டுவைன். அதாவது வரலாறு அச்சொட்டாக அப்படியே மீளாது ஆனால் அது அதே சந்தத்தில் மீள ஒலிக்கும். விஜயகாந்த் - சீமான் - விஜை ஒப்பீடும் இதை ஒத்த ஒன்றே. விஜயகாந்த் விட்ட மிகப்பெரிய பிழை பிரேமலதா, சுதீசை அரசியலில் இறக்கியது. அவர்கள் பணம், ராஜ்யசபா சீட்டுக்கு விஜயகாந்தை அடகு வைத்தார்கள். அதேபோல் ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தல் காண முன்னமே அவரின் குடிக்கு எடுத்த சிகிச்சை அவரின் மூளையை பாதித்து விட்டது, அத்தோடு அவர் அரசியல் வாழ்க்கை எழ வழியே இருக்கவில்லை. சீமான் விட்ட மிகப்பெரிய பிழை பெரியாரில் கை வைத்தது. அடுத்து நொடிக்கு ஒரு நிலை மாறுவது, மூன்றாவதாக கொள்கை அளவில் பிஜேபி சொல்லும் ஒவ்வொரு விடயத்தையும் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் அப்படியே ஒப்புவிப்பது. பிஜேபி ஸ ரி க ம ப த நி ஸ என்றால், சீமான் ஸ நி த ப ம க ரி ஸ என்பார். இவை எல்லாம் இவர் பிஜேபி ஏஜெண்ட் என்பதை மக்கள் பிரித்தறிய உதவின. இருவரும் விட்ட பிழை கூட்டணி வைக்காமல் வீம்பு காட்டியது. இவற்றை பலதை விஜை இப்போதே விலக்கி நடப்பதாக எனக்குப்படுகிறது. விஜை முன் இருக்கும் மிகப்பெரிய சவால் திமுக எதிர் கூட்டணி ஒன்றை உருவாக்கி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதே. திருமாவுக்கு துணை முதல்வர், கம்யூனிஸ்டுகளுக்கு அவர்கள் கொள்கைகள் சிலதை அமல் படுத்தல் போன்ற நியாயமான விட்டு கொடுப்புகளை செய்தால் - முதலில் திமுக கூட்டணியை உடைக்கலாம். காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஸ்டாலினுக்கு இப்போதே விஜை பேசியதை மேற்கோள் காட்டி ஆட்சியில் பங்கு கேட்டு கடிதம் எழுதி விட்டார். அதே போல் விசிக நிர்வாகி ஒருவரும் டிவீட்டியுள்ளார். திமுக கூடாரத்தை இத்தனை வருடத்தில் சீமான் இப்படி ஒரு போதும் கதற விட்டதே இல்லை. ஒரு பேச்சில் விஜே அதை சாதித்துள்ளார். இப்படி விஜைக்கு சாதமாக பலது இருக்கிறது. ஆனால் அவர் முன்னாள் உள்ள பெரிய சவால் அதிமுக. அவர்கள் விஜே தலைமைய ஏற்க மாட்டார்கள். அவர்கள் வராமல் திமுககவை வெல்வது கடினம். அதே போல் நிர்வாகிகள் மரணத்தில் விஜை காட்டிய சுணக்கம், நேரில் போகாமை தொடர்ந்தால் அவரும் சீமானை போல் அவர் கட்சிகாராராலேயே தூக்கி எறியப்படுவார். இந்த விடயத்தில் உதய்யை பார்த்து விஜை கற்று கொல்ல வேணும். ஆச்சரியமான உண்மை.
  6. நல்ல கருத்து. பொதுவெளியில் ஏற்க வரட்டு கெளரவம் விடாது என நினைக்கிறேன், ஆனால் கடந்த ஆறுமாத கால நிகழ்வுகள் நான் சொன்னது சிலதை உண்மை என உங்கள் உள்மனம் ஏற்க வைத்திருக்கும் என நம்புகிறேன்.
  7. உண்மைதான். ஆனால் என்ன தான் உபிஸ் 200 ரூபாய்க்கு ஓவர் டைம் பார்த்தாலும், மீம்ஸ் பேக்டரிகள் இயங்கினாலும்…எடப்பாடி, கமல், அண்ணாமலை, சீமான் …வஞ்சகம் இல்லாமல் மீம்ஸ்க்கு கண்டெண்ட் கொடுத்தார்கள் என்பதும் உண்மை. விஜை இதை தன் பேச்சிலேயே, எம்மை பி டீம் என பச்சை குத்த முடியாது, மீம்ஸ் போட்டு கலாய்க்க முடியாது என கூறியது அவருக்கு விசயம் விளங்கவாவது செய்கிறது என நினைக்க வைக்கிறது. நிச்சயம் விஜை வெல்ல இருப்பதை விட தோற்க இருக்கும் நிகழ்தகவே தற்போது அதிகம். ஆனால் எனக்கு அவரை எதிர்க்க ஒரு காரணமும் இன்னும் இல்லை, ஆதரிக்க பல காரணங்கள் உண்டு. எப்படியோ திமுக பக்கம் எதிர்காலம் உதய்ணா என்பது கண்கூடு. ஆகவே வரும் காலம் விஜைண்ணா vs உதய்ணா என அமைந்தால் நல்லது என நினைக்கிறேன். விஜையை பற்றி மக்கா மிசி, பிரச்சனையை லெப்ட் ஹாண்டில டீலு பண்ணுற மைக்கல் ஹசி என நான் சொல்லவில்லை…/ மச்சி it’s a long way to go என்பதை நானும் ஏற்கிறேன்.
  8. கூட்டணி தற்கொலைக்கு சமம்.. திராவிடத்தை கொன்று புதைப்பேன்.. விஜய் அறிவிப்பால் சீமான் ஆவேசம் Mathivanan MaranPublished: Monday, October 28, 2024, 8:22 [IST] சென்னை: தேர்தல் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது; அதற்கு பேசாமல் விஷம் குடித்துவிட்டே படுத்துவிடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்த நிலையில் சீமான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பிளவுவாத சக்தியான பாஜகவும் ஊழல்வாதிகளான திமுகவும்தான் சித்தாந்த, அரசியல் எதிரிகள் என அறிவித்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்; தவெக ஆட்சியில், அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு எனவும் அறிவித்தார். அதேபோல திராவிடமும் தமிழ்த் தேசியமும் தங்களது இரு கண்கள் என்றார் விஜய். நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு சிறிய கட்சிகள், கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே 'தம்பி விஜய்' என பாசமாக அழைத்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நேற்றைய பேச்சைத் தொடர்ந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், தந்தை பெரியார் மட்டுமே பெண்ணுரிமைக்காக போராடவில்லை. வேலுநாச்சியார் போராடும் போது தந்தை பெரியாரே பிறக்கவில்லை. பாரதியாரைப் போல பெரியாரும் பெண் உரிமைக்காகப் போராடினார். அவ்வளவுதான். திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமது கண்கள் என்கிறார் விஜய். அவரது கட்சியின் கொள்கைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஒத்துவராதவை; எதிரானவை என்றார். மேலும் கூட்டணி என்பதே தற்கொலைக்கு சமமானது. கொள்கைகளில் உடன்பாடு இல்லாத போது எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? கூட்டணி என முடிவெடுத்துவிட்டால் அது ஒவ்வொரு கட்சிக்கும் தற்கொலைக்கு சமமானதுதான். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம். ஏன்? உங்க தனித்துவத்தை இழந்துவிடுவீர்கள். உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் கோபித்துக் கொள்வார் என நினைத்தால் நீங்கள் என்ன பேசுவீர்கள்? நீங்க செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கி பேசனுமா? முட்டுக் கொடுக்கனுமா? அதை ஏற்பீர்களா நீங்கள்? கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறீர்கள்.. கட்சியை காப்பாற்றுவதுதான் லட்சியம் என்றால் எந்த லட்சியத்தை காப்பாற்ற கட்சியை தொடங்குனீங்க? எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு நான் தோற்றுதான் போகிறேன்.. உங்களுக்கு என்ன இழப்பு? என் முன்னோர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன்.. எங்க கட்சியை உருவாக்கிய சிபா ஆதித்தனார், மபொசி என எல்லா தமிழ்த் தேசிய அரசியல் முன்னோர்கள் எல்லாம் திராவிடத்தில்தான் கரைந்தனர். அந்த திராவிட பூதம் தின்று விழுங்கிவிட்டது. நான் ஒருத்தன்தான் திராவிடத்தை கொன்று புதைக்க வந்தவன். அப்ப என்னையாவது சுதந்திரமாக விடவேண்டும். என்னை ஏன் கூட்டணிக்கு போ என்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார். https://tamil.oneindia.com/news/chennai/declaration-by-actor-vijay-seeman-strongly-opposes-alliance-politics-dravidian-movements-650091.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி: ரத்த கொதிப்பு, ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு.
  9. பிரித்தானிய லேபர் பார்ட்டி ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒரு சேர வெற்றிகரமாக கைக்கொள்ளவில்லையா? அதேபோல் இதுவும் சாத்தியமே. ஏலவே இரெண்டும் மிக நெருங்கிய கொள்கைகளே. தமிழ் தேசியத்தில் இருந்து தெலுங்கு வம்சாவழி வெறுப்பையும், திராவிடத்தில் இருந்து தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் மற்றும் ஊழலையும் நீக்கி விட்டால், இரு கொள்கைகளும் ஒன்றேதான். மீசை வைத்தால் இந்திரன் தமிழ்தேசியம், மீசை எடுதால் சந்திரம் திராவிடம். இன்னொரு திரியில் கருவாட்டு சாம்பார் என்றீர்கள். கறி இட்லியை போல் இதுவும் ஒரு வகை புதிய டிஷ் என சாப்பிட்டு பாருங்கள்🤣.
  10. விஜை பெரியார் சிலைக்கு பூ போட்ட பின்னும் கூட, பூமர் அங்கிள், கூட்டணிக்கு காத்திருக்கிறேன், மாநாட்டுக்கு அழைத்தால் போவேன் என்று வாயைவிட்டு இறைஞ்சினார். ஆனால் இந்த விஜை கொஞ்சமும் இரக்கமில்லாமல் திடலில் பெரியார் கட் அவுட், கொள்கையில் பெரியாருக்கு முதலிடம் கொடுத்ததும் இல்லாமல், மேற்கோள் காட்டி, வரலாற்றை பேசி, மேடையில் அழகு தமிழில் உரக்க பேசும் வெறுப்பரசியலையும் செய்யமாட்டோம் என பூமர் அங்கிளின் நடுமண்டையிலேயே போட்டிருக்கார்🤣. போட்ட போடுகையில்…தம்பி தம்பி என நெஞ்சை நக்கிய அங்கிள், ஓவர் நைட்டில் பிளேட்டை திருப்பி போட்டு, 2026 இல் தனிய நிண்டு டெபாசிட் தானம் பண்ணப்போவதாக சபதம் எடுத்துள்ளார்🤣. போலிகளை நம்பி ஏமாறாதீர்! உங்கள் சகலவிதமான தமிழ் தேசிய அபிலாசைகளுக்கும் (தமிழ் நாட்டில்) நாட வேண்டிய ஒரே இடம் த.வெ.க. அவர்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.
  11. எனது பயண கட்டுரையில் நான் யாழில் ஜேபிவியின் மீதான அபிமானம் அதிகரிப்பதாக தெரிகிறது என எழுதிய போது…அதை எள்ளி நகையாடியோர், என் மீது பொய் பட்டம் கட்டியோருக்கு, தேர்தல் முடிவுகள் சிலதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன்.
  12. சேரும் கூட்டம் அத்தனையும் வாக்காகாது என்பது சிவாஜி, ரஜனி, கமல் என பலர் தமிழ் நாட்டில் காட்டிச் சென்றுள்ள அனுபவப்பாடம். ஆனால் எம் ஜி ஆர், விஜயகாந்த் என இதற்கு விதிவிலக்குகளும் உள்ளனர். விஜையும் ஒரு விதி விலக்காக அமைய வேண்டும் என்பது என் மனதார்ந்த அவா. முன்பு யாழில் சீமானை நான் கடுமையாக விமர்சித்த போது - அவர் எப்படி பட்ட அரசியலை செய்தால் நீங்கள் வரவேற்பீர்கள் என பலர் அடிக்கடி கேட்டு, நான் பலதடவை எழுதிய பதில்…. மொழிவாரி பிரிப்புக்கு பின், திராவிட/பெரியாரிய கொள்கையின் தொடர்ச்சி = தமிழ் தேசியம் என சீமான் கூற வேண்டும், அனைவரையும் தமிழர்களாக ஏற்க்கும் வட்டத்தை பெருப்பிக்கும் அரசியல் செய்ய வேண்டும்… குறிப்பிட்ட சில ஆதிக்க சாதியினரின் (தெலுங்கு வம்சாவழியினர் உட்பட்ட) அதிகாரத்தை மட்டுப்படுத்த, சாதிக் கணக்கெடுப்பை நடத்தில் அதன்படி ஒதுக்கீடு வழங்க கோரல் வேண்டும். உணர்ச்சி வயப்படுதல், அவதூறு பேசல் போன்ற அடாவடி அரசியலை கைவிட வேண்டும்… இவ்வாறு நான் பட்டியல் இட்ட பலதை விஜை செயலில் கொண்டு வந்துள்ளார், கொள்கை விளக்கம் என்ற அடிப்படையிலாவது. விஜை வெல்வாரா இல்லையா என்பதை விட, அவரின் கருத்துகள், கொள்கை பிரகடனம், அரசியல் செய்யப்போவதாக சொல்லும் முறை - மிக சரியாக இருக்கிறது. கூட்டணியில் மட்டும் அல்ல, தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எல்லாம் அரசியல் நகர்வின் அடுத்த கட்டம். நிச்சயம் திமுக கூட்டணியில் இருந்து திருமாவை கிளப்ப விஜை முயல்கிறார். முயற்சி வெற்றி பெற வேண்டும். அதே போல் பாரி வேந்தர், கம்யூனிஸ்ட், இன்னும் சிலரை இணைக்க முயலவேண்டும். மிக முக்கியமாக பிசிறு என சீமானால் கேவலப்படுத்த பட்டு உள்ளே குமைந்து கொண்டிருக்கும் காளி அம்மாள் போன்ற உத்வேகம் மிக்க தமிழ் தேசிய அரசியல்வாதிகளை சீமான் போன்ற போலிகளிடம் இருந்து விஜை தன்பக்கம் ஈர்க்க வேண்டும். விஜை செய்ய விழைவது தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டில் re branding செய்யும் முயற்சி. திராவிட கொள்கை கருணாநிதி குடும்பத்திடமும், தமிழ் தேசியம் சின்ன கருணாநிதி சீமானிடம் சிக்கி கொண்டுள்ளன, இவை இரண்டையும் மீட்டு, காலத்துகேற்ப்ப புதுப்பித்து, நீக்க வேண்டியவை (கடவுள் மறுப்பு) நீக்கி, ஏலவே பல ஒற்றுமைகளை உடைய இரு தத்துவார்த்த வழிகளையும் ஒன்றாக்கி பயணிக்க வேண்டியது தமிழ் நாட்டின் மீட்சிக்கு அத்தியாவசியமானது. இந்த பெரும்பணியை விஜை என்ற தனிமனிதனால் செய்ய முடியாமல் போகலாம்…. அப்படி ஆககூடாது…. விஜை தன் முயற்சியில் வெல்ல வேண்டும் என்பது இயற்கையிடம் என் மன்றாட்டம்.
  13. இதன் அர்த்தம்…. மே . இ வென்றால் வாத்தியாருக்கு 2 புள்ளி, இங்கிலாந்து வென்றால் 10 பேருக்கு 2 புள்ளி, மே.இ, அல்லது இங்கிலாந்து யார் வென்றாலும் - அவுஸ் என கணித்தோருக்கு 2 புள்ளி guaranteed ? எனக்கு இது சுத்தமா விளங்கவில்லை🤣
  14. நான் அப்பவே சொன்னேன் வாக்கு எண்ணும் மிசினில் மோசடி எண்டு. யாரும் நம்பவில்லை🤣 தயவு செய்து ஏனைய போட்டியாளர்கள் பற்றி கதைக்க வேண்டாம் 🤣🤣🤣
  15. ஒரு முன்னாள் முதல்வர் என்ற மரியாதை கூட இல்லாமல் 5ம் வரிசையில் உக்காத்திருக்கானுகளே🤣.
  16. எதையோ செய்து என்னை நிரந்தர முதல்வர் ஆக்கினால் - பொதுப்பணித்துறை ஒப்பந்தம் முழுவதும் நீங்கள் கைகாட்டும் ஆளுக்குத்தான்🤣.
  17. அனந்தி… சும்… விக்கி…. கஜேஸ்… எல்லாரும் ஆளாளுக்கு இதில் கருத்து சொல்கிறார்கள்…அரசியல் செய்கிறார்கள். ஆனால் தமிழரின் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழரசு கட்சி தலைவர் கப்சிப். இன்னும் டீல் படியவில்லையோ? ”சடலம்” சிறிதரனை கண்டா வரச்சொல்லுங்க🤣
  18. தமிழரசின் தலைவர் சம்பந்தரா, சிறிதரனா? இதற்கு சம்பந்தரை மாறாமல் விட்டிருக்கலாமே. எதுவுமே செய்யாமல், சொல்லாமல் காலாமாகிய சடலம் போல் கதிரையில் இருக்கவா சிறிதரன் இந்தளவு அந்தரப்பட்டு, கட்சியை உடைத்து தலைவரானார்? சிறிதரன் லீடர் அல்ல, டீலர்.
  19. சிங்கம் இளைச்சா….எலி என்னத்துக்கோ கூப்பிடுமாம்🤣.
  20. 99 உலக கோப்பை செமியில் தெ.ஆ வின் டொனால்டும், குலூஸ்னரும் தோத்த அதே பாணியில் இன்று நேபாளம். கைக்கெட்டியது…. இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. இதுவரைக்கும் நடந்த போட்டியில் யார் அதிகநாள் முதல்வரோ அவரே நிரந்தர முதல்வர் என அறிவித்து விடுங்கள்🤣
  21. அமலாக்கத்துறையை ஏவி விடும் அரசியல் பழிவாங்கல்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.