Everything posted by goshan_che
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
மொக்கன் கடை சாப்பாடும் வேணும், மாடும் வெட்டக்கூடாது. இனி vegan மாட்டு சூப்தான் அறிமுக படுத்த வேணும்🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் எள்ளென நினைத்தேன்….🤣 தம்பி போத்தில்லையே அடைச்சிட்டான்🤣
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓம்… ஆனால் இப்படி புலிகள் மீது அபாண்டம் சொன்ன சவுக்கு மீது…கஞ்சா வழக்கு பாய்ந்த பின்…. சீமான் என்ன சொல்கிறார்? எந்த ஆதாரமும் இல்லாமல், “யார் சவுக்கு காரில் கஞ்சாவை வைத்தது” என கேட்டு, காவல் துறை மீது மறைமுகமாக பழி போட்டு, சவுக்குக்கு முட்டு கொடுக்கிறார். புலிகளை போதை பொருள் வியாபாரிகள் என சொன்ன சவுக்க்கு இப்போதும் ஏன் சீமான் எட்டாய் வளைந்து முட்டு கொடுக்கிறார்?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஆணின் பெயர் கொண்ட பேக்கரியா?
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓமோம்….நானும் கவனிச்சனான்🤣. அதே ஆட்கள் 3 வருடம் முதல் சவுக்கு திமுக சொம்பு என இதே யாழில் எழுதினவை. சவுக்கு மட்டும் இல்லை இவர்களும் சவுக்கு போல அங்கேயும், இங்கேயும் தாவி திரிவதை நினைக்க ஒரே சிரிப்பு🤣 நேற்று அண்ணன் சீமான், கஞ்சாவை பொலிஸ்தான் வைத்தது என சவுக்குக்கு ஆதரவாக பேசிய காணொளி. புலிகள் போதை பொருள் கடத்தினார்கள் எனும் சவுக்குக்கு ஏன் சீமான் முட்டு கொடுக்க வேண்டும். யோசிக்கவும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சரியாக ஓராண்டுக்கு முன்பு, சவுக்கு சிறையால் வந்த போது, அவரை அண்ணன் சீமான் ஆரத்தழுவி வரவேற்று, சீமானுக்கு சவுக்கு பொன்னாடை போத்தி, சவுக்கும் சீமானும் ஒன்றாக அமர்ந்து பேட்டி கொடுத்த அரிய நிகழ்வின் காணொளி கீழே. இதில் சவுக்குக்கு இனிமேல் என்ன பிரச்சனை வந்தாலும் தான் பக்கபலமாக நிற்பேன் என அண்ணன் சீமான் சூளுரைத்தார். # கஞ்சா குடிக்கியை கட்டிப்புடி🤣 # சின்னக் கருணாநிதி
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected. This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA. The money raised would be used ''SAY NO TO DRUGS'' and ''GO GREEN GLOBE'' projects. I am here to appeal for your generous help. RUN FOR A BETTER FUTURE MASSIVE THANK YOU!. மிக்க நன்றி. https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தனியாகவா போறனிங்கள்? நான் 2009 க்கு பின் பலதடவை போய் விட்டாலும், வற்றாப்பளைக்கு வடக்கே போக விரும்பியதில்லை. விரும்பியதில்லை என்பதை விட முடிவதில்லை. ஒரு வகையில் out of sight, out of mind நழுவல் புத்திதான்.
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
அவதானம் வடக்கு கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் 52 பாகை செண்டிகிரேட் வரை வெப்பம் உயரும் அபாயம் என இலங்கை அரசு அறிவிப்பு!
- IMG_7456.jpeg
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
அண்மையில் இலங்கை ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது, வடக்கு கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் 52 பாகை செண்டிகிரேட் வரை வெப்பம் கூடும் வாய்புள்ளதாம்.
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா🤣.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
அங்கே அப்படி இருப்பதால், விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது தெலுங்கன் என அவர் மீது இன ஒதுக்கல் செய்து மனம் நோகடித்தது சரி? இதுவா உங்கள் வாதம்? அது சீமானின் உள்ளாடையை சக கருத்தாளர் தேடுகிறார் என்று வந்த மிக கேவலமான கருத்துக்கு வந்த பதில். கே(அ)வலத்தை தந்தவனுக்கே (ருக்கே) அதை திருப்பி கொடு 😎 👍
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST] தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
ஓம் மற்றப்பக்கம்தான்….அத்தோடு இப்போ வட அரைகோளத்தில் கோடை ஆரம்பம் என்பதால் பறவைகள் இடம்பெயர்ந்தும் இருக்க கூடும். மற்றப் பக்கத்தால் போனாலும் சன நடமாட்டம் இன்றி கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். குறிப்பாக மம்மல் நேரம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
🤣 இதில் அடி சறுக்க என்ன இருக்கிறது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவா. தெரிந்ததை எழுதுவதும், தெரியாததை அறிவதும்தானே கருத்துக்களத்தின் நோக்கம். இப்போ உங்கள் தயவால் இதை அறிந்து கொண்டேன். என் குடும்ப உறுப்பினர் விரைவில் போகிறார். உதவியாக இருக்கும். அதே போல் யாழ்கள உறவுகளுக்கும்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்தை கேலி செய்தமைக்கு நிகரான குற்றம் தான் தமிழன் என உணர்ந்து, செயலால் காட்டிய மனிதனை “நீ வந்தேறி, வாழலாம் ஆள முடியாது, நீ எல்லாம் சி எம் கனவு காண்பதே தமிழ் பிள்ளைகளுக்கு அவமானம்” என இன ஒதுக்கல் செய்தது என்பது என் அபிப்பிராயம்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நேற்று பார்ட்டியில் நிண்டதால் கேள்விக்கு உடனே பதில் போடவில்லை, மன்னிக்கவும். கருணாநிதி ஈழத்தமிழரை கருவறுத்தார். மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வைத்து விஜயகாந்த் உட்பட ஏனைய தெலுங்கு வம்சாவழிகள் மீது வன்ம அரசியல் செய்ய வேண்டியதில்லை. இங்கே நீங்கள் தமிழ் நாட்டு தமிழரை குற்றம் சாட்டுவதாக நினைக்கிறேன். ஆனால் விஜயகாந்த் ஆட்சியில் அமராமைக்கு மக்கள் மட்டுமே காரணம் இல்லை. அவரின் கூட்டணி முடிவுகளும், பிரேமலதா+சுதீசின் அப்பட்டமான “பெட்டி” டீல்களும் முக்கிய காரணம். மனநிலை மோசமானபின் யாரும் அவரை சீ எம் ஆக்க விரும்பமாட்டார்கள் - அந்த வகையில் அது சரியான முடிவே. அவரின் மனநிலையை கேலி செய்தது தப்புத்தான்.
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
மிகவும் விரிவானதும், சிந்தனையை தூண்டக்கூடியதுமான பதில்கள். நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி. புலி தன் வரிகளை மாற்றாது என்பார்கள் - அதே போல் ஜேவிபி தன் இனவாதத்தை, கம்யூனிசத்தை கைவிடுமா? நான் NPP ஐ ஒரு முகமூடி என்றே பார்கிறேன். அத்தோடு - இனப்பிரச்சனைக்கு ஏனையோர் போல இவர்களும் ஒரு தீர்வைத்தானும் அறிவிக்கவில்லையே?
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
🤣 நிச்சயமாக ஒரு 1ம் உலக நாட்டில் இருந்து, சுற்றுலாவாக அல்லாமல் ஒரு கடமையாக போக வேண்டிய நிர்பந்தத்தில், 15 மணியளவை பிரயாணத்தில் செலவழித்து, இயல்பாகவே சுற்றுலா போவதில் நாட்டமில்லாத ஒருவர், நான்கு நாளைக்கு - இலங்கைக்கு அல்ல, சொர்கத்துகே போயிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்🤣. தவிரவும் எனது கட்டுரையை விளங்கி கொள்ள - இலங்கைக்கு கொவிட்டுக்கு முன்னான வருடங்களில் போன அனுபவம், கொவிட்/அறகளைக்கு பின் நாடு இருந்த நிலமை என்பனவற்றை அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்போதுதாம் 2024 இல் இலங்கை நாம் எதிர்பார்த்த படி மோசமாக இல்லை என எழுதியதை விளங்கி கொள்ளலாம். நீங்கள் இப்போதுதான் கொழும்பு ஏர்போர்ட்டுக்கே முதல் தரம் போனேன் என்கிறீர்கள் - ஆகவே நீங்கள் இலங்கையை “சொர்காபுரி” என நான் சொல்லியதாக தப்பாக விளங்கி, அதனால் ஏமாற்றம் அடைந்துள்ளீர்கள். இதனால்தான் என்ன விசயங்கள் அதிருப்தியாய் இருந்தன என படம் போட்டு விளக்க முடியுமா என கேட்டேன். உங்கள் அதிருப்திக்கான காரணம், தூசு, மாசு, wet-bathrooms/toilets, டாய்லெட் டிசு இல்லை (இன்னொரு திரியில் வெள்ளைகாரர் குறை பட்டதாக எழுதி இருந்தீர்கள்) இந்த வகை 1st world complaints என்றால் - அதற்கும் நான் எழுதியதுக்கும் சம்பந்தமில்லை. அதுதான் இலங்கை கொவிட்டுக்கு முன்பும், பின்பு எப்போதும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
கவலையை விடுங்கள் எந்த பதட்ட நிலையும் உருவாகவில்லை🤣. ஆனால் எனது எழுத்தை “மிகைப்படுத்தல்” என விபரித்தால் அது என் integrity சார்ந்த விடயம் என்பதால் பதில் கொஞ்சம் காரமாக வரும் 🤣. இரெண்டு திரிகளிலும் ஒரே விடயத்தையே அலசுவதால் overlap சகஜம். ஆனால் இங்கே நீங்கள் எழுதியதை பார்க்க இவை typical first world complaints என்பதாக படுகிறது. மீண்டும் சொல்கிறேன் இந்தியாவுக்கு கீழே இருக்கும் தீவு 3ம் உலக நாடான இலங்கை - நியூசிலாந்து இல்லை🤣. உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம். நானும் இந்தியாவிலோ, இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதில்லை. போய் இறங்கியதும் முதலில் முகத்தில் அடிப்பது வெக்கை, அடுத்தது வியர்வை நாற்றம். பயணக்களைப்பு, சீதோசண மாற்றம் - நிச்சயமாக முதல் மூன்று நாள் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கும். ஆனால் இவை அந்த நாடுகளின் அடிப்படை பண்புகள். சுற்றுலா போகும் நாம் தான் அவருக்கு பழக வேண்டும் அல்லது வேறு எங்காவது போக வேண்டும்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வில் இன்னொரு படிமுறைக்கு போய் விட்டீர்கள்🤣🤣🤣. படு பயங்கர தம்பிகள் கூட இப்படி ஒரு முட்டு கொடுத்ததில்லை🤣. நடுநிலையாளராக காட்டி கொள்ளும் உங்களுக்கு இது புதிசு…கண்ணா….புதிசு. பிகு பொது வெளியில் மூக்கை தோண்டி, திரவியத்தை தூவக்கூடாது என்பது அடிப்படை சுகாதாரம். வேணும் எண்டால் அண்ணனுக்கு ஒரு டிரிம்மர் வாங்கி அனுப்பி விடுங்கள்.
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
சீமானின் இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சர்ச்சைகுரிய சர்வதேச எல்லை உள்ள பகுதியில், சர்வதேச எல்லைக்கும், நாட்டின் உள்ளக கோட்டுக்கும் (inner line) இடையே செல்ல, மட்டுமே இதுவரை இந்த பெர்மிட் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியருக்கு, இந்தியாவுள் பூரண நடமாடும் சுதந்திரத்தை (Freedom of movement) கொடுக்கிறது. இன்னர் லைன் பெர்மிட் என்பது அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நில எல்லை சம்ப்னதமானது. மஹாராஸ்டிரா, கர்னாநடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட எந்த வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை. அதேபோல் கஸ்மீரின் இதை ஒத்த காணி வாங்கும் “விசேட அந்தஸ்தை” இந்திய பாராளுமன்று சில வருடங்கள் முன் இல்லாமல் ஆக்கியது. ஆகவே தமிழ்நாட்டில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டை கொண்டு வருவதில் பின்வரும் சிக்கல்கள் உண்டு. 1. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழ் நாட்டை போன்ற சர்வதேச கடல் எல்லை மட்டும் உடைய நாடுகள் எதுவும் இதை கோராதவிடத்து, தமிழ் நாடு மட்டும் கோருவது, எது இங்கே இன்னர் லைன் என்ற கேள்வியையும், கூடவே இது நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையற்ற கோரிக்கை என்பதையும் காட்டி நிற்கும். 2. அப்போ தமிழ் நாடு அரசு இப்படி கோருவது, தனியே வேற்று மாநிலத்தவரை தடுக்க என்றே கருதப் படும். அப்போது இதஈ எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் இந்த பெர்மிட்டை தள்ளுபடியாக்கலாம். ஆனால் வழக்கு போடும் மட்டும் தமிழ்நாடு அரசு முயலாலாம். 3. உண்மையில் பாரிய பிரச்சனை தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் வேலை செய்வோரின் நலன் பற்றியதே. ஏனைய மாநிலங்களும் இதையே செய்தால் டெல்லி, பம்பாய், பெங்களூர், ஹைதரபாத், இன்னும் பல வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் இருக்கும் தமிழ் நாட்டவருக்கு ஆப்பாக முடியும். ஆகவே இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதை செய்வது சுலபம் அல்ல. ஆனால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் இது மிக சாத்தியாமாகும். உண்மையில் இந்த வட மாநில குடிவரவு விடயத்தை தமிழ் தேசிய அரசியல் பேசுவோர் இதயசுத்தியுடன் அணுகில், அவர்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையைதான் கையில் எடுக்க வேண்டும், இந்திய ஒருமைப்பாடு எனும் மொக்காட்டுகுள் இருந்து கையை காட்டாமல். Edited November 2, 2023 by goshan_che
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
சைக்….மேடையில் மூக்கையே அந்த தோண்டு தோன்ற மனிசன்🤣