Everything posted by goshan_che
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மான ரோசம் கெட்ட திமுகதான் பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு என இருந்தது உண்மைதான். இதே போலத்தான் மானம் கெட்ட சீமான் மஹராஸ்டிரா வரை போய் மோடியை ஆதரித்து பிஜேபி க்கு வாக்கு கேட்டார். அண்ணணின், மோடி குஜராத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி ஆறாயிரம் கோடியை வங்கியில் இட்டார் என்ற மோடி ஆதரவு பேச்சும் இலகுவில் மறக்க கூடியதல்ல. திமுக பதவிக்கக சங்கிளிடம் கூட்டு. அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதக்காக பிஜேபி புகழ். இரெண்டும் ஒன்றேதான். இவ்வளவு ஏன் அண்ணனின் யாழ்கள தம்பி ஒருவர் “சீமான் பிஜேபி கூட்டணி வைத்தால் நீங்கள் சீமானை எதிர்பீர்களா” என்ற என் கேள்விக்கு 2 வருடமா பதில் சொல்லாமல் இருக்கிறார். இதில், திமுக, சீமான், யாழ்கள தம்பி எவரும் யோக்கியம் இல்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ரேபீஸ் ஊசி போட்டு கொள்ள வேண்டிய அளவுக்கு இருக்கும் தம்பிகளின் கடிப்பு. நீங்கள் சொன்னதை யாழில் எழுதப்போய்த்தான் என்னை கடித்து குதறினார்கள். வாங்கும் கடியை அப்படியே மனதில் நிறுத்தி - சீமானை துவைக்க தேவைப்படும் சக்தியாக மாற்றிக்கொண்டேன்🤣.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
யார் சுத்துமாத்து சுமனை சொல்கிறீர்களா, அல்லது பெர்மிட் மன்னன் தரனை சொல்கிறீர்களா? இருவரையும் போது போதும் எனும் அளவுக்கு யாழில் கழுவி, கழுவி ஊத்தியுள்ளேனே?
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான் Nantha Kumar RUpdated: Saturday, November 2, 2024, 0:01 [IST] சென்னை: ‛‛அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு.. நீங்கள் வெட்ட நினைக்கும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் நாங்கள். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை. அழுகின கூமுட்டை.. ஒன்று ரோட்ல இந்த பக்கம் நில்லு. இல்லை அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரில அடிபட்டு செத்துப்போவ'' என்று நடிகர் விஜயை மறைமுகமாக கடுமையாக சீமான் விமர்சனம் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் நடிகர் விஜயை, சீமான் நேரடியாக விமர்சனம் செய்தார். நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதை காட்டமாக சீமான் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சீமான் பேசியதாவது: அன்பு என்றால் அன்பு.. வம்பு என்றால் வம்பு.. சாதாரண வம்பு இல்லை உடன் பிறந்தார்களே.. கொடிய வம்பு.. நீங்கள் வெட்ட அரிவாளை எடுக்கும்போது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறப்புகள் அல்ல நாங்கள். நீங்கள் வெட்ட நினைக்க எண்ணும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எங்கள் முன்னவர்கள் ஒன்றை தான் கற்று கொடுத்து உள்ளார்கள். உண்மையை பேசு. அதை உரக்க பேசு. உறுதியாக பேசு. இறுதி வரை பேசு என்பது தான். இதுதான் எங்கள் கோட்பாடு. மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! என்று பாடியவனின் பேரன்டா நான். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி. நெஞ்சு டயலாக் இது. நெஞ்சு டயலாக்... இதயத்தில் நெருப்பு எரிகிறபோது சில பொறிகள் வாய்வழியாக வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமந்து வருகிற வலியின் மொழிதான் எங்களின் மொழி. விடுதலை பெற்றவர் பேசுவதற்கும், அடிமை பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. வேறுபாடு உண்டு ப்ரோ. எங்கள் கோட்பாடு ஒன்று தான். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. இது கொள்கை இல்லை. கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. What bro.. Its very wrong bro. ஒன்று சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் சாலையில் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. தன் இன பாலகன். தன் மார்பிலேயே பால் குடித்தவர். தன் மடியிலேயே தவழ்ந்தவன் இறந்து விட்டானே என்று அழுது துடிப்பது தமிழ் தேசியம். என் தங்கை இசை பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்தது தமிழ் தேசியம். தூர இருந்து சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா. இரண்டும் ஒன்றா.. உடலில் நெருப்பு கொட்டி வெந்தது வீர தமிழன் முத்துகுமார். அது தமிழ் தேசிய பெரும் நெருப்பு. கடற்கரையில் தலைக்கு ஒரு குளிரூட்டி. காலுக்கு ஒரு குளிரூட்டி. தலைமாட்டில் மனைவி.. கால்மாட்டில் துணைவி என்று போலி உண்ணாவிரதம் நடத்துவது திராவிடம். இரண்டும் ஒன்று. '' என ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். அதனை கேட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். சீமானின் இந்த பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/if-you-stand-on-center-of-the-road-lorry-will-hit-and-died-seeman-slams-tvk-leader-vijay-on-the-rem-651287.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
புலிகளின் முடிவுக்கு முன்னும், பின்னும் 1948-2020 வரை பல சிங்கள தலைவர்கள் விரும்பி, முயன்று முடியாமல் போனது, மக்களை தேசியத்தில் இருந்து விலக்குவது. ஆனால் NPP க்கு காலமும், தமிழ் கட்சிகளின், புலம்பெயர் தமிழர் தலைமைகளின் போக்கிலித்தனமும் கைகொடுக்கிறன. ஓ…கொழும்பு தமிழரசு காரார்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
யார் முன்னாள் ஈபிடிபி வடக்கு மாகாண சபை எதிர் கட்சி தலைவரா? இப்போது எந்த கட்சியில்? ஒரு பஸ் பிரயாணத்தில் கண்டேன். மிகவும் மெலிந்து போய் நோய் வாய்பட்டவர் போல தெரிந்தார். இந்த நிலையிலும் பதவி ஆசை.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும். அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது. எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர். NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம். பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது. மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை. கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன். காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள். விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நான் இன்னும் டிரைவர் வைக்கும் அளவுக்கு உயரவில்லை ப்ரோ… அதுக்கு அப்பறம் வேலைக்காரி வேற வைக்கணும்🤣. சரி நேரம் கிடைக்கும் போது ஆதாரத்தை பாகிரவும்.🤣. பிகு நீங்கள் எனக்கு பதில் எழுதி செலவழித்த நேரத்துக்கு இரெண்டு ஆதாரத்தை தட்டி விட்டிருக்கலாம் என யாரும் நினைச்சால் நான் பொறுப்பல்ல👻
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
🤣 கிழக்கு மாகாண வாக்குகளை சிதறடித்து, அம்பாறையின் தமிழ் பிரதிநிதிதுவத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் மூலம் கிடைத்த வாக்குகளை வைத்து தேசிய பட்டியல் ஆசனம் எடுத்த கஜனையா சொல்கிறீர்கள்🤣. அவரை பெரிய கஜே அம்பாறைக்கு நேர்ந்து விட்டார். தேர்தலின் பின் சில தடவை தலைகறுப்பை காட்டினாராம். வாக்காளர்கள் வலை விரித்து தேடுகிறார்கள்🤣
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு நாடகம் ஆடினார், ஆளுனர் தன் எசமானுக்காக, யுடியூப்பர் தன் வருவாய்க்கான நாடகம் ஆடினர். நாடகமோ, நாட்டியமோ, வீதி திறப்புக்கு சிறிதோ, பெரிதோ ஆவன செய்த அனைவருக்கும் பாராட்டுகள். புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நல்லது…. இனியாவது யாழ்களத்தில் இப்போ எல்லாம் முன்னர் போல குறுக்கு கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில் மனம் போனபோக்கில் ஆதாரமற்ற கட்டுகதைகளை அவிழ்து விடலாம் என நினைக்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். பிகு. உங்கள் கருத்து முக்கியம் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறிய 1. விஜை பின்னால் இருந்து தமிழ் தேசியவாதிகள் இயக்குகிறனர் 2. விஜை திராவிடத்தை உறவாடி கெடுக்க நினைக்கிறார் இவை இரண்டும் கருத்துக்கள் அல்ல. நீங்கள் இதை ஊகமாக கூட சொல்லவில்லை. தரவு போல் அடித்து விட்டீர்கள். அதை நம்பி இரு அப்பாவிகள் லைக் வேறு போட்டார்கள். உங்கள் நேரம் போலவே வாசகர் நேரமும் பொன்னானதே. அதை ஆதாரமற்ற தகவல்கள் கூறி வீணடிக்க வேண்டாமே🙏. கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது, ஆனால் நாம் காணும் கனவை நிஜம் என பொதுவெளியில் எழுதும் போது கேள்விகள் வரத்தான் செய்யும். பதில் சொல்லமுடியாவிட்டால் பம்மலாம் அல்லது நேரத்தை சாட்டலாம். வேறு வழியில்லை. இலண்டன் பயணம் சிறப்புற வாழ்த்து.
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
கடந்த சில வருடங்களாக பனை அபிவிருத்தி சபையின் பொருட்களின் தரம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் பனங்கட்டி கையிருப்பு குறைவாக இருப்பது ஒரு குறை. பண்டதரிப்பு நிலையம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருந்தாலும், பலவித பனம் பொருட்களை ஒரே இடத்தில் தரமாக வாங்க முடிகிறது. புதிய தலைவர் இதை அடுத்த நிலைக்கு இட்டு போக வேண்டும்.
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
தகவலுக்கு நன்றி ஜி. படம் ரொம்ப பழசு போல இருக்கு, இதை இப்பதானா தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்களா? அண்ணனுக்கு வெட்டுவதை வெட்டி இருந்தா லைக்காவுக்கு கொடுத்த ஆதரவை கொடுப்பாரே?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
என் கேள்விக்கென்ன பதில் 🤣
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
யாராவது படம் பார்தீர்களா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜைக்கும் ஸ்டாலின், சீமான் போன்றோருக்கும் உள்ள இன்னொரு வரவேற்க வேண்டிய வேறுபாடு. அரசியல் வாழ்க்கைக்காக குடும்ப உறுப்பினர்களை வைத்து பேஷன் ஷோ நடத்துவதில்லை. அதே போல் பலமாதங்களாக விஜை-சங்கீதா உறவு பற்றி ஊகம் பலவாறு பறந்த போதும் விஜை அலட்டி கொள்ளவில்லை. ஆனால் முரசொலி செல்வம் மரணத்துக்கு தன் சார்பில் அவரை அனுப்பி இருந்தார் என அறிகிறேன். சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் இப்போ திமுக எதையாவது கிண்டிவிட தலையால் மண் எடுப்பார்கள்🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழ் நாட்டில் நீங்கள் மேலே எழுதியதுதான் அரசியல் நிதர்சனம். அங்கே கூட்டணி வைப்பதாகில் நீங்கள் சொன்ன கட்சிகளுடந்தான் வைக்க முடியும். இல்லாமல் ஊழல் இல்லாத கட்சி என தேடிப்பார்த்தால் நாதக உட்பட எவரும் மிஞ்ச மாட்டார்கள். ஆனால் சீமான் கூட்டணி கதவை சாத்தியதாக நீங்கள் கூறுவது கொஞ்சம் உருட்டல் வகை🤣. வேணும் எண்டால் கூறவும், கூட்டணி வைப்பது, விஜை மாநாட்டுக்கு போவது பற்றி, சீமான் புது பெண் போல வெட்கப்பட்டு கொண்டு கொடுத்த பேட்டிகளை பகிர்கிறேன். சீமான் ஆசையாய்தான் இருந்தார். படுபாவி விஜை, சீமானின் எந்த சமிக்ஞை பற்றியும் ஒரு எதிர்வினை கூட காட்ட இல்லை. விஜை பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னும் கூட சீமான் நம்பிக்கையோடுதான் இருந்தார். மாநாட்டில் நடுநாயகமாக பெரியாரை வைத்து, திராவிட கொள்கை என் ஒரு கண் என சொன்னது கிட்டதட்ட சீமானின் முகத்தில் கதவை அறைந்து சாத்தியதை போல. கூடவே பேச்சிலும் சீமானை பெயர் சொல்லாமல் விமர்சித்தார் விஜை. இதன் பின் வேறு வழி இன்றி சீமான் - இல்லாத கூட்டணியை இல்லை என அறிவித்தார். விஜை அவர் அப்பா எல்லாம் பல வருடமாக சினிமாவில் இருப்போர் அவர்களுக்கு சீமானை, அதைவிட சீமானை எங்கே வைக்க வேண்டும் என தெரியும். அடேங்கப்பா என்ன ஒரு விடுகதை🤣. எனக்கு உந்தளவுக்கு ஐ கியூ இல்லை வாலி சார்🤣
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அப்போ விஜைக்கு விஜி அண்ணி என்ன முறை🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது நல்ல விடயம் தானே. ஈழத்தமிழர் குமையும் விதமாக விஜை எதுவும் கூறாதவிடத்து - அவரை வரவேற்பதில் தவறேதும் இல்லையே. அவர் என்ன திரள்நிதி கேட்டாரா அல்லது மாவீரகளை, பொட்டம்மானை தூஷித்தாரா? இல்லையே. இது நிபந்தனை அற்ற வரவேற்பில்லை. இப்போதைக்கு வரவேற்காமல் விட காராணம் ஏதுமில்லை. ஓ எல் சோதனை வருடம் ஒருமுறை வரும், ஆனால் கிரிகெட் வேர்ல்ட் கப் நாலு வருடம் ஒரு முறைதான் வரும் 🤣. லே ஒண்டோரியோவை தெர்மகோல் போட்டு மூடிய “சென்ற ஊர்” ராஜு அண்ணன் ரசோ வாழ்க🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அதுக்கு முன்பே தமிழ் நாட்டில் தலைவரின் படத்தை அல்ல, தலைவரையும், போராளிகளையும் வைத்திருந்த பலரை நான் அறிவேன் ப்ரோ. சீமான் தலைவரை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்தார் என்பது சூரியனுக்கு நான் டோர்ச் அடித்த பின்பே மக்கள் சூரியனை அறிந்தனர் என்பதை போன்ற கருத்து. முடிந்தால் இது பற்றிய டாக்டர் காந்தராஜ் பேட்டியை அல்லது வேல்முருகன் பேச்சை உங்கள் அபிமான யூடியூப்பில் பாருங்கள். கடைசியா போனமாதம் தமிழ் நாடு போனேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரி @பாலபத்ர ஓணாண்டி ப்ரோ இப்போ உங்களிடம் நான் கேள்வி கேட்க்கும் முறை. 1. விஜை மாநாட்டு திரியில் நீங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் - விதை நான் போட்டது என தேவர்மகன் வசனம் பேசி சீமான் புகழ் பாடினீர்கள்? தனிமனித அபிமானம்? 2. விஜை பின்னால் நின்று இயக்குபவர்கள் எல்லாம் பெரிய தமிழ் தேசிய தூண்கள் என்றீர்கள். யாரிவர்கள்? இவர்கள் விஜையை பின்னால் இருந்து இயகுவது உங்களுக்கு எப்படி தெரியும்? இதற்கான ஆதாரம் என்ன? 3. விஜை திராவிடத்தை மனப்பூர்வமாக ஏற்கவில்லை, உறவாடி கெடுக்க போகிறார் என்றீர்கள். இதை விஜை அல்லது புஸ்ஸி ஆனத் உங்களிடம் தனியாக சொன்னார்களா? இல்லாவிடின் எப்படி உங்களுக்கு விஜையின் மன ஓட்டம் தெரிய வந்தது? கேள்விகளுக்கு பதிலை ஆவலோடு எதிர்பார்கிறேன். பிகு யாழில் நாதம், குணா கவியழகன் போன்ற “அடித்து விடும்” ஆட்கள் என நான் நினைப்போர் அனைவரையும் கேள்வி கேட்பதை போலதான் இந்த கேள்விகளும். தனிப்பட்டு ஏதுமில்லை. சதவீத கணக்குக்கு நான் வரவில்லை. ஆனால் சீமான், குறிப்பாக இதுவரை காலமும் விஜையை தம்பி, பச்சை தமிழன் என தன் வாயாலே முத்திரை குத்திவிட்டு, கூட்டணிக்கு தயார் என பல்லிளித்து விட்டு - இனி விஜையை சீமான் பாதி மலையாளி என கூறினால் - அது அம்பலம் ஏறாது. சங்கிகள் - ஏலவே ராஜா ஜோசப் விஜை என்பதை கையில் எடுத்து, விஜையும் ஆம் நான் ஜோசப்தான் என கூறி மூக்குடைந்தார். என்னை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் நேரடி சங்கிகளும், மறைமுக சங்கிகளும் (சீமான்) ஒருவரை எதிர்ப்பது அவருக்கு பிளஸ்சே தவிர மைனஸ் அல்ல.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வணக்கம் ப்ரோ, கண்டு கனகாலம். அது சரி…. நான் முன்வைத்த தரவு அடிப்படையிலான கருத்துகள் அத்தனையும் பைபாஸ் பண்ணி விட்டு - நேரடியாக எனக்கான தமிழ் தேசிய மரபணு சோதனையில் இறங்கி உள்ளீர்கள். கருத்தை விட்டு கருத்தாளரின் ரிஷி மூலம் தேடும் யாழின் நெளிவு சுளிவுகளை நன்றாக கற்று கொண்டு விட்டீர்கள், சபாஷ். சரி முதலில் உங்களுக்கான பதில். 1. தமிழ் தேசியம் என்பது இலங்கையில் வேறு, தமிழகத்தில் வேறு. உதாரணமாக இலங்கையில் யார் தமிழர் என கருதும் போது அதில் இஸ்லாமியர் அடங்கார். ஆனால் தமிழகத்தில் அடங்குவர். ஆகவே இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் முஸ்லிம்களுக்கானது அல்ல, ஆனால் தமிழகத்தில் அது அவர்களையும் உள்ளடக்கியது. இது வெறும் உதாரணமே. ஆகவே தமிழ் தேசியம் என்பது இலங்கையிலும், தமிழகத்திலும் ஒரே விடயம் அல்ல. இரெண்டுக்கும் ஒத்த வரைவிலக்கணமும் இல்லை. 2. கூடவே 1950 கள் முதல் தமிழ் தேசியம் இலங்கையில் ஒரு வரித்துக்கொள்ள பட்ட கொள்கை. திம்பு முதல் பல பிரகடங்கள் இலங்கை தமிழரின் தமிழ் தேசியத்தை வரையறுத்து, வலியுறுத்துகிறன. 3. தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் ஒரு நோஞ்சான் பிள்ளை. ஆனால் காலப்போக்கில் அது திராவிட கொள்கையை உள்ளீர்த்து, தமிழ் நாட்டினர் அனைவருக்கும் உரிய, தமிழ் நாட்டிற்கென தனித்துவமான, யார் தமிழர் என்ற வட்டத்தை பெரும்பிக்குமான, தமிழ் தேசிய அரசியலாக மிளிர வேண்டும் என்பதே என் போன்றோரின் நிலைப்பாடு. அது மட்டும் இல்லை, இந்திய ஒருமைப்பாட்டை மீறாத வகையிலும் (இல்லை என்றால் நசுக்கி விடுவார்கள்), அம்பேத்காரை ஏற்கும் வகையிலும் கூட இந்த தமிழ் நாட்டுக்குரிய தமிழ் தேசியம் வரையறுக்கப்படல் வேண்டும். இந்த வகையான தமிழ் தேசியத்தைத்தான் சீமான் கைக்கொள்ளவார் என எதிர்பார்த்து உங்கள் எல்லோருக்கும் முன்பே அவரை ஆதரித்தவன் நான். சீமான் இதை செய்தால் அவரை ஆதரிப்பேன் என பல தடவை யாழில் எழுதியும் உள்ளேன். ஆனால் அவர் இதை எல்லாம் புறம் தள்ளி, தமிழ் தேசியத்தை சாதி, மத அடிப்படையில் குறுக்கி, பிளவு படுத்தி, சங்கி-தமிழ் தேசியத்தை முன்னிறுத்தினார். நிச்சயமாக சீமான் பிராண்ட் சங்கி தமிழ் தேசியத்தை நான் வன்மையாக எதிர்கிறேன். இது தமிழ் தேசியமே இல்லை. போலித் தமிழ் தேசியம். ஆனால் விஜை முந்தள்ளும் தமிழ் தேசிய + திராவிட கொள்கை கலப்பு மிக இயல்பானது. இரு வேறு பசுக்களின் பாலினை ஒரே குடுவையில் கலப்பது போன்றது. அங்கே சோசலிச கொள்கைக்கும் இடமுண்டு, இறை வணக்கத்துக்கும் இடமுண்டு, அம்பேத்காருக்கும் இடமுண்டு. நான் முன்பு எழுதியுள்ளேன், சீமான் தனது தாக்குதலை திராவிட கொள்கை, பெரியார், தெலுங்கு வழி சாதிகள் என ஆரம்பிக்காமல் - திமுக, அண்ணாவுக்கு பிந்திய தலைவர்கள் என ஆரம்பித்து இருக்க வேணும் என. விஜையின் கட் அவுட் வரிசை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் ரிபரன்ஸ்சை வைத்து பார்த்தால் புரியும் - அவர் எடுத்துள்ள நிலைப்பாடு அச்சொட்டாக இதுவே. ஆகவே எனக்கு சீமான் மீது கடுப்பா, தமிழ் தேசியத்தின் மீது கடுப்பா என்ற உங்கள் கேள்விக்கான பதில் - எனக்கு சீமான் முன்வைக்கும் போலி/சங்கி தமிழ் தேசியத்தின் மீது கடும் கடுப்பு. அதை சுயலாபத்துக்காக முன் வைப்பதால் சீமான் மீது செம கடுப்பு. ஆனால் மிக இயல்பான, அந்த மண்ணின் யதார்தத்தோடு அனுசரித்த போக்குடைய, கம்யூனிசம், தலித்தியம், பெரியாரிசத்தில் இருந்து நல்லன எடுத்து அல்லன விடுக்கும் விஜை முன்வைக்கும் தமிழ் தேசியம் எனக்கு மிக பிடித்தமானது. சொல்லப்போனால் இந்த வகை மெய்-தமிழ் தேசியத்தை விஜை இதை நேற்று பிரகடன படுத்த, பல வருடங்கள் முன்பே யாழில் இதை பிரசுரித்து, சீமானுக்கு பரிந்துரைத்தவன் நான் என்ற வகையில் - இது தனியே விஜை பாணி தமிழ் தேசியம் மட்டும் அல்ல, இது கோஷான் பாணி தமிழ் தேசியமும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
புலவர் ஓணாண்டியார் இப்பெல்லாம் கவிதையை விட்டுட்டு நல்லா கதை எழுத ஆரம்பித்து விட்டார். விஜை எஸ் ஏ சியின் மகன் - எஸ் ஏ சி திராவிட அரசியலில் வந்தவர். விஜயகாந்த் திமுக ஆதரவில் இருந்த காலத்தில் எஸ் ஏசியும் அதே நிலைபாட்டில்தான் இருந்தார். அது மட்டும் அல்ல கருணாநிதியின் பல திரைக்கதைகளை இயக்கும் அளவுக்கு திமுகவுக்கு திராவிட அரசியலுக்கு நெருக்கமானவர், இதுதான் விஜையின் அரசியல் ஆரம்ப புள்ளி. அடுத்து விஜை பாதி மலையாளி. விஜையின் அம்மா சோபா, மலையாள பாடகர், மை மோகனுக்கு முன்பு குரல் கொடுத்த, சுரேந்தரின் அக்கா. ஆகவே சீமானின் இனத்தூய்மை திராவிட எதிர்ப்பை விஜை விரும்பினாலும் கையில் எடுக்க முடியாது. சீமானை போல் விஜை தான் மலையாளி என்பதை மறைக்கவும் முடியாது. ஆகவே விஜையால் திராவிட கொள்கையை புறம் தள்ள முடியாது. அடுத்து விஜை என்றும் தன் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்தவரில்லை. ஆகவே சீமானின் சங்கி-தமிழ்-தேசியத்தின்- தாய் மதம் திரும்பும் கொள்கையும் அவருக்கு ஏற்புடயதல்ல. அத்தோடு பெரியாரோடு முரண்படவோ, தெலுங்கு வழி சாதியினரை மூர்க்கமாக எதிர்கவோ கிறிஸ்தவ வெள்ளாள சமூகத்கை சேர்ந்த விஜைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவரின் நேற்றைய இரசிகர், இன்றைய தொண்டர் பலர் தெலுக்க்கு வம்சாவழியினர். ஒவ்வொரு வோட்டும் தேவை என கருதும் எந்த அரசியல்வாதியும் பெரும் இனக்கூட்டங்களை பகைக்கமாட்டார். அது சீமானை போல ஆட்சிக்கு வருவதில் ஆர்வம் இல்லாத, கொடுப்பனவுக்கு வேலை செய்யும் எஜெண்டுகள் செய்யும் வேலை. சகல அரசியல்வாதிகளும் செய்வது சகலதும் அரசியலின் பால்பட்டே. ஆனால் விஜை திராவிடத்தை உள்ளிருந்து கொல்ல முயல்கிறார் என்பது ஓணாடியார் விட்டத்தை பார்த்து எழுதிய அருமையான கற்பனை. தேள்வடிவ தாக்குதல், சிலந்தி வடிவ தாக்குதல், அரூஸ், நிலாந்த்தன், திருநாவுக்கரசு எல்லாருக்கும் கற்பனை வளத்தில் டப் கொடுக்கிறார் ஓணாண்டி. புலிகள் போராட்டம் முடிவுக்கு வரும் தறுவாயில் - தம்மை தாமே தேற்ற பலர் இப்படியான கதைகளை அவிழ்த்த்து விட்டு தாமும் பேயராகி, வாசிப்பவரையும் பேயனாக்கினார்கள். விஜையின் வரவு, பெரியாரை நடுநாயகமாக்கி அதன் மூலம் விஜை சீமனை புறம்தள்ளியமை மூலம், சீமானின் அரசியல் கிட்டதட்ட சாம்பல் கரைக்கும் நிலைக்கு வந்து விட்டதை கண்டு மனம் ஒப்பாத அவரின் ரசிக சிகாமணிகள் இப்படியான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதில் பலதுக்கு முன்பே பலதடவை பதில் சொல்லியாகி விட்டது. மேலே நான் சொன்னது புலிகளை பயங்கரவாதிகள் என எதிர்த்த மா பொ சியை சீமான் எம்மிடமே தமிழ் தேசிய பிதாமகன் என அறிமுகப்படுத்திய நய வஞ்சகத்தை. இதே போல் தேவையில்லாமல் தலைவரை தமிழ் நாட்டில் இழுத்து போய், தலைவர் vs கருணாநிதி என ஒரு மாய சமன்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஈழத்தமிழர், தலைவர், புலிகள் என்றாலே தமிழ்நாட்டில் பலர் வெறுக்கும் நிலையை வலிந்து உருவாக்கியவர் சீமான். இப்படி நயவஞ்சக லிஸ்ட் நீளும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நயவஞ்சகன்(ர்) சீமான். எமது எதிரிகளை எம்மிடமே எம் கொள்கையின் பிதாமகர்கள் என நிறுவ முற்பட்ட கயவன்(ர்). மிக கேவலமான எதிர்புரட்சியாளர். மபொசி மட்டும் அல்ல, புலிகள் அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி, போர் என்றால் மக்கள் சாவார்கள் என கூறிய ஜெ, புலிகளை பயங்கரவாத அமைப்பு என சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றிய மாமா காளிமுத்து என பலரை இப்படி வரலாற்று திரிபு செய்துள்ளார். புலி அனுதாபியாக இல்லாத போதும் உண்மையை ஆதாரத்தோடு வெளிக்கொணர்தமைக்கு நன்றி. இதை தமிழ் நாட்டு இளசுகளும், நேற்று பெய்த மழையில் இன்று காலையில் முளைத்த புலம்பெயர் காளான்களும் நம்பியது கூட பரவாயில்லை, என் வயதை ஒத்த, ஈழநாதத்தில் நடப்பதை 90களில் தினமும் வாசித்து வளர்ந்த ஏழு குதிரை வயசான பூமர் அங்கிள்கள் கூட நம்பியதுதான் சோகம். இதுவரைக்கும் நாம் கட்டு காசு மீட்டதாக வரலாறு, பெளதீகம், பொருளியல் எதுவுமில்லையே.