Everything posted by goshan_che
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
ஜூலி ஏற்கனவே விக்கி ஐயாவை டீலில் எடுத்து விட்டார். இப்போ வந்தது சிறிதரனிடம் டீல் போட. அநேகமாக டீல் முடிந்தால்…. பொது வேட்பாளரை இறக்கிறம்…தீர்வை எடுக்கிறம் என விக்கி+சிறி டபுள் ஆக்ட் களத்தில் இறங்கி மறைமுகமாக ரணிலுக்கு சைக்கிள் ஓடக்கூடும். யாழிலும் சிறிதரன் அடிப்பொடிகள் அடிச்சு தூள் பறக்க வைப்பார்கள். சிறியிடம் சங் பேசிய டீல் என்ன? படியுமா? சிறி இந்தியாவின் சைகைக்கு காத்திருக்கிறார். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஆனால் டீல் என்றதும் ஏதோ தமிழருக்கு தீர்வு எண்டு அங்கலாய்க்கப்படாது. சிறிதரன், சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை அது சாத்தியமில்லை.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
குழப்பம் விளக்கம் தரலால், குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும். இனிய இரவாகட்டும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?
-
தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்
இவர் எல்லாம் ஒரு தலைவர்…. ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, அதை செயற்குழுவில் சொல்லி, அனைவரையும் அரவணைத்து முன் செல்லுபவந்தான் தலைவன். இவருக்கு அவரின் செயற்குழுவிலேயே பாதிப்பேர் எதிர்ப்பு. இவர்கள் எல்லாம் leader இல்லை, dealer. வெள்ளையிம், சொள்ளையும், போனும் - வெத்திலை பெட்டியும், போட்டோ ஆல்பமும் மட்டும் மிஸ்ஸிங் 🤣.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
ஓ….அப்படியா…. விளக்கியமைக்கு நன்றி😎
-
தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்
தட் கரடியே காறித்துப்பின மொமெண்ட்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
பிகு தமிழ் வின்னை அடித்தால் ஏன் சம்பந்தமே இல்லாமல் இருவருக்கு மட்டும் வலிக்கிறது? சுமந்திரன் எதிர்ப்பாளர் என்ற பெயரில் யாழில் இயங்கும் சிறிதரனின் சிலீப்பர் செல் என்பதாலா? ஆனால் நான் சொன்னவை எதையையும் நீங்கள் மறுக்கவில்லை.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
யாருக்கு நல்லது? நான் நினைக்கிறேன் - சிறிதரனுக்கு நல்லது என அவரின் ஊது குழலான தமிழ்வின், ரணிலின் அமைசரின் அடாவடியை மறைத்து எழுதியுள்ளது என. ஆகவே சிறிதரனுக்கு இப்படி எழுதியது நல்லதுதான்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
இந்த பதில் உங்களுக்கும், கூடவே நிண்டு குஷியாகியோருக்கும். 1. கோஷான் ஒரு ஊடகம் அல்ல. ஊடகரும் அல்ல. ஊடகம் என்றால் குறைந்த பட்சம் நெஞ்சில் மஞ்சா இருக்க வேண்டும். கோஷான் அப்படி அல்ல, அவர் பயந்தாங்கொள்ளி. இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். உங்கள் ஒப்பீடு கொஞ்சம் “மொக்கு தனமாக” உள்ளதாக எனக்குப்படுகிறது. ஒரு தனி நபருக்கும், ஊடகத்துக்கும் உள்ள வேறுபட்ட கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? தமிழ் வின்னுடன் யாழை ஒப்பிட்டால் அது நியாயம். பிஸ்கோத்து பயந்தாங்கொள்ளி கருத்தாளர் என்னைப்போய்…… 2. நான் பெயரை மறைக்க மூன்று காரணங்கள். அ. இலங்கையில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ (தமிழர் தரப்பால் அல்ல) என்ற பயமும், ஆ.பெயரை சொன்னால், இன்னார் என இனம் கண்டு புலம்பெயர் தேசத்தில் சொறிச்சேட்டை விடும் ஆட்களின் அலுப்பு இருக்கும் என்பதும் இரெண்டாம் காரணம். மகனின் கராட்டி கிளாசுக்கு வருகிறோம் என யாழில் சொன்னவர்கள் யார் என உங்களுக்கு நினைவு நிச்சயம் இருக்கும்.🤣. அதே போல் இன்னொருவர் நான் என நினைத்து இன்று வரை யாரோ ஒரு லூஸ் கேசோடு இரவிரவாக கதைக்கிறார்🤣. பெயரை சொல்லாமல் கதைக்கும் போதே இந்த நிலை, சொல்லி கதைத்தால் நிலமை? இ. மூன்றாவது காரணம் முகமன். யாழில் எழுதுவோரை நேரிலும் கண்டு பழகினால் பின்னர் யாழில் சுதந்திரமாக எழுத முடியாது. இங்கே பலர் கருத்து வேறு பாடு கனமாக வரும் போதும் “அண்ணை, தம்பி, தாத்தா” என குருசேத்திரத்து அர்ஜுனன் போல் கலங்கி நிற்பார்கள். இன்னும் சிலர் அவர்களுக்காக வக்காலத்து வாங்க போய், தம் வாழ்நாள் கொள்கையையே எதிர்த்து எழுதி மொக்கேனப்பட்டு நிற்பார்கள். இப்போ பாருங்கள் உங்கள் ஒப்பீட்டை “மொக்குதனமானது” என சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. இதுவே கானா ரெஸ்டூரண்டில் உங்களுடன் கூட இருந்து சாப்பிட்டால் ? அப்படி சுதந்திரமாக எழுத முடியாது அல்லவா? ஆனால் இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ் வின்னுக்கு இல்லை. அப்படி இருந்தால் - அது ஊடகமாக இருக்க முடியாது. விளங்கி இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
அவர் இவர் நரியார் எல்லாரும் ஒரே கோட்டில் என்று கேள்விப்பட்டேன். நாட்டில் நீங்கள் சொல்வது சரி. புலம்பெயர் நாட்டில்?
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
திட்டமிட்டு யாரோ மே 19 ஆரம்பிக்குமாறு வைக்கிறார்களோ?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
நன்றி. இலங்கையில் இருந்து இயங்கும் பத்திரிகைக்கு உள்ள தைரியம் புலத்தில் இருந்து இயங்கும் தமிழ்வின்னுக்கு இல்லை. உள்ளபடி எழுதினால் ஶ்ரீதரனுக்கு சிக்கல் வரும் என்ற பயமாய் இருக்கும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பக்கத்தில ஒரு அன்ரி கையை ஓங்கிறா…சந்தர்ப சாட்சிப்படி அவதான்🤣. சவுக்கு இதை வைத்து அனுதாபம் தேட முனைந்தாலும்…..பலருக்கு இவர் அந்த அப்பாவி பெண்ணின் மரணத்தில் பெட்டி வாங்கி கொண்டு ஆடிய நியாபகம்தான் மனதில் வந்து போகும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
காடெல்லாம் கஞ்சாவானால், அதில், கால் கிலோவை நான் இழுப்பேன்🤣 கை உடைந்து இந்த மாரி கட்டுப்போட்டால், கையை தூக்க கூடாது. அதுக்காகத்தான் இப்படி brace போடுவது. இப்ப பலர் கேட்க்கும் கேள்வி என்னவென்றால்…இந்தளவு முறிவோடு சவுக்கு எப்படி டி சேர்ட் போட்டார்? வழமையா இந்த காயம் உள்ளோர் பட்டன் சேர்ட் போடுவதுதான் வழக்கம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
தொடை நடுங்கி தமிழ்வின் ஏன் அரசியல்வாதி முகத்தை மறைக்கிறது? பெயர் வெளியிடவில்லை? பயமா? அல்லது வெட்டி ஒட்டிய ஊடகத்தில் இந்த விபரங்கள் கிடைக்கவில்லையா?
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
👆🏼👇 அவர்கள் சொல்லியதைதான் முகமது கட் அண்ட் பேஸ்ட் பண்ணினானர். #ஆபிரகாமிய மதங்கள்
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
நியாயத்தை உணரத்தான் அதிக காலம் எடுக்காது. நியாயத்தை அடைய அதிக காலம் எடுக்கும். அடையாமலே போகவும் கூடும்.
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
கண்ணீர் அஞ்சலிகள். படுகொலை நடந்து மூன்று வருடங்களின் பின் அதே படகில் நெடுந்தீவு போனேன். படகின் நடுப்பகுதி முன் பின் பகுதிகளை மறைத்தபடி, நடுவில் இருக்கும் (இதன் மேலே தான் ஓட்டியின் அறை இருக்கும்) பயணிகள் அனைவரையும் பின் பகுதிக்கு அனுப்பி விட்டு, ஒருவர் ஒருவராக முன் பகுதிக்கு அழைத்து வெட்டி கொன்றார்களாம். எவரையும் சுடவில்லையாம். பின் பகுதியில் இருந்தோருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லையாம். கத்தும் போது அடி விழுவதாகவே நினைத்துள்ளார்கள், இல்லாவிடில் அதில் இருந்த பல நீந்த தெரிந்தோர் கடலில் குதித்து தப்ப முயன்றிருப்பார்கள் என்று ஊரவர்கள் சொன்னார்கள். இதை செய்தவர்கள் அப்போ 25 வயதாய் இருப்பின் இப்போ 64 வயசாளியாய் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இறைவனோ, இயற்கையோ இவர்களில் எவருக்குமாவது தக்க தண்டனை வழங்கி இருக்குமா? எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் தனியே அவாவை மட்டும் ?
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
ஓம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடயம் இப்படி அமையும். உதாரணமாக an apple a day keeps the doctor away, நாள் ஒரு ஆப்பிள் சாப்பிடின் டாக்டர் வீட்டுக்கு வரமாட்டார் என்பார்கள். ஆனால் அதுவே எனக்கு ஆகாது. இதை வைத்து பொது விதிகளை வகுக்க முடியாது.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இராட்சத பேரரசுகளின் கொள்கை, அரசியல், பாதுகாப்பு போட்டிக்கு நடுவே தம் சுய உரிமைக்காக போராடும் சிறிய தேசிய இனங்களின், இனவழி தேசிய நாடுகளின் நியாயத்தை உணர அவ்வளவு காலம் எடுக்காது🤣.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
அவன் அவன் தன் சொந்த வீட்டில் யாருக்கு ரூம் வாடகைக்கு விடுவது என்பது அவனவன் சுய உரிமை. சுதந்திரம். சுயநிர்ணயம். இதில் பக்கத்து வீட்டுக்காரன் மூக்கை நுழைக்க கூடாது என்பதை நானும் விளக்கி களைத்துப்போனேன்🤣.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இதுதான் ஆசாரவாதிகள் போக்கு. பன்றி இறைச்சி சுகாதார கேடானது என்றால் நீங்கள் தலையில் தூக்கி கொண்டாடும் ஜேர்மனியில் அதை சந்தையில் புழங்க விடுவார்களா? நாடாப்புழு - சரியான முறையில் சமைத்தால் பிரச்சனை இல்லை. மதங்கள் எப்போதும் சரியானதை உபதேசிக்கவில்லை. அப்படி என்றால் யசீதிகளுக்கு மத உபதேச அடிப்படையில் நடந்த கொடுமையும் சரி என்றாகி விடும்.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
ஒமோம்..:ஜோர்ஜியாவும், உக்ரேனும் சும்மா இருந்த ரஸ்யா மேல் படை எடுத்தது தப்புத்தான்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣 அதுவும் அந்த அட்டணக்கால்😎. #மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.
- IMG_7559.jpeg