Everything posted by satan
-
குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?
தண்ணியில கண்டம் போல தெரியவில்லை, தண்ணிப்பஞ்சம், சோம்பேறித்தனம் போலல்லவா தெரிகிறது.
-
பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்
தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி என்றும் தன்னை விளித்துள்ளார் அருச்சுனா. இவர் ஒரு கொள்கையோடு செயற்படுவதாக தெரியவில்லை. ஒரு தடவை நாமலை உயர்த்தி பேசுகிறார். தனது தந்தையை காணாமலாக்கியதை மன்னித்து விட்டதாக கூறுகிறார், அவரது தந்தை மட்டும் அவர்களால் காணாமலாக்கப்படவில்லை. தையிட்டி விகாரையை அகற்ற முடியாது அவர்களுக்கு வேறு காணி வழங்கப்படும் என்றார். ஆனால் தனது காணியை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், மதம் இனம் என்பது கவனிக்கப்படாது என்றார். இப்படி மாற்றி மாற்றி ஏதோ குழப்பி பேசி தன்னைத்தானே மற்றவர்கள் பரிகசிக்க வைக்கிறார்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
மீண்டும் பூனையா? அதுவும் கறுப்புப்பூனையா? உங்களின் வீட்டில் பூனைகள் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்கின்றன? உதுதான் சொல்லுறது இரவில் பயணம் செய்யக்கூடாதென்று. எல்லோரும் தூங்கும்போது நாமும் தூங்கி விட வேண்டும். இல்லையென்றால் உப்பிடித்தான் பகலில் வராத நினைவுகள் எல்லாம் வந்து பயமுறுத்தும்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அது ரசோவாக இருக்காதா என்றும் மனம் ஏங்கும். இல்லையென்றாலும் நித்திரை வராதே.
-
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!
இதற்கு முன் பல பெண் நீதிபதிகள் இதே மல்லாக்கத்தில், யாழ் உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றி இருக்கிறார்கள். அப்போ ஒரு முறைப்பாடும் அவர்களுக்கு எதிராக எழவில்லை. உதாரணமாக உதயநிதி என்று நினைக்கிறன், பெயர் மனதில் சரியாக இல்லை. யாழ் நீதிமன்றத்தில் கடமையாற்றியவர், இவர் இராணுவத்தினரின் மக்களுக்கெதிரான கெடுபிடிகளை கண்டித்தவர், இந்த ஒரு காரணத்தினாலேயே இடம் மாற்றப்பட்டவர், மஹிந்த ஆட்சியில். நம்ம ஆட்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை அதையும் ஒத்துக்கொள்கிறேன்
-
கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்
உயர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது நல்லாட்சி காலத்தில். அப்போது அப்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் கோத்தா ஜனாதிபதியாக வந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மட்டுமேன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார்கள் எதிர்க்கட்சிகள். ஒன்றுமே விளங்கவில்லை.
-
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!
இவர் நீதிபதியாக கடமையாற்றியது மல்லாகத்தில். அதுவும் ஒரு பெண்மணி. தலைக்கனமாய் இருக்கும்.
-
கொஞ்சம் ரசிக்க
சொல்வபவர்களெல்லாம், தாங்கள் சுகபோகமாக வாழ்ந்து, மாளும்போதே எதையோ சொல்லிவிட்டுப்போகிறார்கள். பிழைத்துக்கொண்டால் அவர்களும் சொன்னவற்றை மீளப்பெறுவார்கள். நாம் நாமாக, இருப்பதைக்கொண்டு, நிறைவு கண்டால் போதும். வேறொருவரின் ஆலோசனையும் தேவையில்லை.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஒரு கதையில் பல அன்றாட சம்பவங்களையும் கலந்து சுவையாக ஆர்பாட்டமின்றி எழுதுகிறீர்கள். பல தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இதுகளையெல்லாம் சட்டம் போட்டு திருத்த முடியாது, அதுகளாய் திருந்தினாலொழிய. சட்ட ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடுங்கள்.
-
யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது
வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் சண்டியர்களை இழுத்து வருகிறார்கள், இவர் இவ்வளவு காலமும் ஒளித்திருந்துவிட்டு இந்நேரம் பார்த்து கிளம்புகிறார். தலைவனே கிளம்பும்போது, இவர்கள் கூலிகள் என்ன செய்வது?
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
தொலைந்தது கள்ளத்தொடர்பு! அது சரி, சிறியர் ஏன் இதை இங்கு இணைத்தார்?
-
சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்பச் சென்ற நபர்களால் பதற்றம்
வேலையில்லாத கூட்டம் அரசியல் செய்ய விளையுது!
-
மாகாணசபைத் தேர்தலை அவசரமாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வட மாகாண முன்னாள் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
ஆங் அப்படியொரு நிலை இருக்கா? இல்லை வருமா? சர்வதேச அளவில் இந்தியாவின் இருப்பு தளர்ந்து வருகிறது, அதில இவர்கள்தான் இந்தியாவை தூக்கி நிலைநிறுத்துகிறார்கள். இத்தனை தமிழரை அழித்து தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கியதே இந்தியாதான், அதை அனுரா வெளிப்படையாகவே கூறியுள்ளார். அவருக்கு இவை இந்தியாவை கதாநாயகனாக காட்ட வேண்டிய தேவை.
-
அநுரவின் அரசு பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை : சந்திரிகா விசனம்
சுடலை ஞானம் பேசுகிறார் அம்மணி. இவர் ஆட்சி நடத்தும்போது தமிழரை சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்காமல் நல்லாட்சி நடத்தியிருக்கலாம். அன்று விதைத்ததை இன்று அறுக்கிறார் கவலையோடு. இனி கவலைப்பட்டு என்ன பிரயோசனம். "ஏழை அழுத கண்ணீர் ஏழு தலைமுறைக்கு." "ஏழையின் கண்ணீர் கூரிய வாள் போன்றது." அறுத்தே தீரும். ம், வைத்தியசாலை, ஆலயம் என்று பாராமல் விரட்டி விரட்டி அடித்தீர்களே. இப்போ உங்களுக்கு சிகிச்சை. உங்களுக்கும் சந்தர்ப்பம் உண்டு கவலைப்படாதீர்கள். இந்த குற்றங்கள் எல்லாம் இன்று நேற்று நடந்தவையல்ல, உங்கள் ஆட்சி காலத்திலும் நடந்தவையே, நீங்களும் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக நீங்களும் பொறுப்புக்கூறவேண்டும். யாருமே ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப விரும்பவில்லை. ஊழலிலேயே வாழ்ந்து, ஊக்குவித்து வளர்த்து விட்டவர்கள். அதற்காக நீங்களும் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஊழலை ஒழிக்காமல் எப்படி நல்லாட்சி செய்வது என்றும் சொல்லலாமே. பிச்சைக்காரரெல்லாம் ஆட்சி நடத்திய நாடு இதுவாகத்தான் இருக்கும். எல்லா ஜனாதிபதிகளும் வீடு இல்லை, வாழ வழியில்லை என்கிறார்கள். ஆனால் ஆட்சியை பிடிப்போமென்றும் சூழுரைக்கிறார்கள்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
சுமந்திரனின் அனுதாபி, அபிமானிகள் அப்பப்போ வந்து கருத்து வைப்பார்கள்!
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
அதைத்தாங்கய்யா எல்லோரும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அப்பப்போ சொல்கிறீர்கள்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
நாட்டுக்கு நாடு வேறுபடுவார்களென நினைக்கிறன். அலுப்புத்தட்டாது, ஆர்வத்தை தூண்டும் அழகிய எளிய வசன நடை. மற்றவரை நோகடிக்காது அவர்களையும் அரவணைத்து எழுதும் உங்கள் மனநிலை எழுத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.
-
தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்
நடவாது என்று சொல்வார்கள்...... பின்னாளில் அது நடந்து விடும். நடந்த கதைகளுமுண்டு,
-
மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
கள்ளர் கூட்டத்தலைவனை சந்தித்து அடுத்த கட்ட திட்டம் பற்றி யோசிக்கிறார்கள். ஒருபுறம் பிச்சைப்பாட்டு, மறுபுறம் வீரப்பேச்சு. எத்தனை நாளுக்கு மக்களை கூட்ட முடியும்? கூட்டம் கலையும் முன் ஏதாவது திட்டம் தீட்ட வேண்டுமே. இந்தளவுக்கு தெருவுக்கு வருவோமென எந்த அரசியல் வாதியும் நினைத்திருக்க மாட்டார்கள். அனுரா அரசியல் கதிரைக்கு வந்தவுடன் சவால் விட்டவர், அச்சுறுத்தியவர்கள் இப்போ தம்மை காப்பாற்ற கூடுகின்றனர். இத்தனை பிச்சைக்காரர்களை மக்களே போசித்துள்ளனர் இவ்வளவு காலமும். உதயன் கம்மன் பில சொன்னார், "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை , 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." ஆனால் உண்மை அதுவல்ல. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து நாட்டை கொள்ளையடித்து விருந்துண்டார்கள். அதற்கு தமிழரை விலையாக காட்டி, ஏழை மக்களை ஏமாற்றினார்கள். மீண்டும் வெட்கமில்லாமல் அந்த மக்களிடம் தஞ்சசமடைகிறார்கள் இராணுவத்தின் பின்னால். இவர்களின் பழிகளை இராணுவம் சுமக்கிறது. இராணுவம் தம்மை புனிதப்படுத்த வேண்டுமென்றால்; குற்றவாளிகளை அடையாளம் காட்டி தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். எத்தனை கலந்தான் ஏமாற்றுவார் நாட்டை?
-
தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்
எனது கருத்தும் அதுவே. அப்படி இந்தியா அச்சப்பட்டு அதை தடுக்க முயற்சித்தால், தானாகவே அந்த முடிவை நோக்கி மாநிலங்களை தள்ளுகிறது. எவ்வாறெனினும் அது ஒருநாள் நடக்கத்தான் போகிறது.
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
இவரின் ஒரு சகோதரியின் கணவர் தமிழர். அவர்தான் அந்த தமிழர். அவர் பெயரில் மஹிந்த வாங்கி வைத்திருக்கலாம். இப்போ, தனது வீட்டை தமிழர் ஒருவர் தனக்கு தருவதாக அனுராவுக்கு கடுப்பேற்றுகிறார். மைத்துனர் என்பதை விட, தமிழர் என்று சொல்வதில் பெருமை போலும். இன்னுமா இவரை சிங்களமக்கள் நம்புகிறார்கள்?
-
நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..
நாமல், நூறு மில்லியன் சொத்து காட்டியுள்ளார். காட்டாதது, மறைத்தது, பதுக்கியது எவ்வளவோ? அவர் என்ன தொழில் செய்தார்? பதிலில் உண்மையில்லை சொதப்புகிறார். மனைவியின் சொத்து, அதை பிரித்து அறியதெரியாதவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்கிறார். தன் பெயரில் உள்ள சொத்து என தானே அறிவித்துவிட்டு, பிரித்தறியதெரியாதவர்கள் என்கிறார். இப்போ மனைவியின் சொத்து விசாரணை செய்துவிட்டால் தெரிந்து விடும். நாமலே மனைவியின் சொத்தை பிரித்தறிய அழைப்பு விடுகிறார். இது இருக்க, அவரின் தம்பி புலம்புகிறார், மற்றவர் நினைப்பதுபோல் மஹிந்த குடும்பத்திடம் ஒன்றுமில்லையாம். மற்றவர், இவர்களிடம் இருப்பது எது என்று சொன்னார்களா? அவர்களுக்கு வீடு வழங்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்கள். இவர், கார் இல்லையாம், வீடு இல்லையாம், அரசாங்க கார் அல்லது வேறு யாரிடமாவது தானாம் இரவல் கார் வாங்குவார்களாம். அம்மா மோசடி செய்து நிலங்களை கொள்வனவு செய்து இப்போ முழிக்கிறார். தனது தந்தை எப்போதும் சொல்வாராம், பிறர் உழைப்பில் நாம் வாழக்கூடாது, உழைத்து வாழ வேண்டுமென்று. அப்போ, காலம் பூராவும் மக்கள் பணத்தில் சுகபோகம் வாழவேண்டுமென்று அடம்பிடிப்பதும் கோரிக்கை வைப்பதுமேன்? தனக்கு வாழ வழியில்லையாம், படிப்பு சொல்லிக்கொடுக்கிறாராம் அதுவும் சும்மாவாம். எந்தப்பாடசாலையில் என்று சொல்லவில்லை. வாழ வழியில்லாதவர் சும்மா கற்பிக்கிறாராம். பகிடியாய் இல்லை? இவர்கள் வங்கிக்கணக்கில் எவ்வளவு கோடி, எவ்வளவு கோடி சொத்து, எத்தனை கோடி மதிப்புள்ள கார்கள் வெளிவராமலா போகும்? அப்போ என்ன சொல்லப்போகிறார் இவர்? இவர்களை வெளியில் விட்டு வைத்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். இவர்களின் பேச்சை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்? தானாக வந்து பொறியில் தலை மாட்டும்வரை அனுரா பொறுத்திருக்கிறாரா அல்லது பொறி வைத்து காத்திருக்கிறாரா? ஏதோ ஒன்று வெகு சீக்கிரம் நடைபெற போகிறது. மின்சார சபை ஊழியரை யாரோ இயக்குகிறார்கள். அந்த இயக்குனரை கைது செய்தால், பின்னால் இயங்குபவர்கள் வெளியில் வருவார்கள். மக்களுக்கு இவர்களின் சொத்துக்களையும் பினாமிகளையும் விரைவில் வெளியிடுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் சாதகமாக்கிக்கொள்வார்கள்.
-
நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..
ஒரு கள்ளனை கைது செய்தால், பல கள்ளர் பதறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி கதறுகிறார்கள், வாழ வழியில்லை என்று பிச்சைப்பாட்டு பாடுகிறார்கள், மக்களை கூட்டுகிறார்கள், சட்டத்தை நீதிமன்றத்தை விமர்ச்சிக்கிறார்கள் ஏன்? ஒரு கள்ளனுக்கு பின்னால் பல கள்ளர் மறைந்திருக்கிறார்கள். அந்தக் கள்ளனை பாதுகாத்தால் தாம் அகப்படப்போவதில்லை பாதுகாப்பாக இருக்கலாமென நினைக்கிறார்கள். சூழ்ச்சி செய்து அரசை கவிழ்க்க முயற்சிப்பார்கள். முடியாவிட்டால், தாம் அரச சாட்சிகளாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து தம்மை காப்பாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் தலைவன் நிலை என்ன?
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்டு, பிரதிநிதிகளை தம் சார்பாக தெரிந்தெடுத்து, தமது பிரச்சனைகளை பாராளுமன்றம் எடுத்துச்சென்று தீர்த்து வைப்பதும், அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. கட்சி மக்களுக்காவன்றி கட்சிக்காக மக்களல்ல. அப்படியிருக்கும் போது, ஜனாதிபதி வேட்ப்பாளருக்கு கணிசமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களின் விருப்பும் அதுவாகத்தான் இருந்தது. மக்களின் விருப்புக்கு, ஆதரவாக செயற்பட்ட உறுப்பினரை, கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி ஒருவர் மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்படுபவராக இருந்தால், அவரை மக்கள் தங்கள் பிரதிநிதியாக, கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து, கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும், அதுதான் நடந்தது. ஆனால் அதை குறித்த நபர், ஏற்றுக்கொள்ள மறுத்து, தன்னிச்சையாக, கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக கட்சியையும், அதன் பதவிகளையும் கையகப்படுத்தும் போது, மக்கள் அந்தக்கட்சியை நிராகரிக்க வேண்டிய கட்டாயம், தேவை ஏற்படுகிறது. இந்த எதேச்சாதிகார உறுப்பினரின் நடவடிக்கையால் கட்சியிலிருந்து நீக்கப்படும், பழிவாங்கப்படும் உறுப்பினர்களை எங்கிருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராக வேண்டும். மக்களுக்கு சேவை செய்பவர்கள், மக்களின் விருப்பு வெறுப்புக்கு முன்னுரிமை வழங்குபவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் சேவை தொடரும். கட்சி முக்கியமல்ல, மக்களுக்கான சேவையே முக்கியம். உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து, அவமானப்படுத்தி வெளியேற்றுவது. பின், சவால் விடுவது குற்றம் சுமத்துவது இந்த பிடாரியின் வழக்கம். தமிழரசுக்கட்சி மக்களுக்கான கட்சி. சுமந்திரனின் வீட்டுச்சொத்தல்ல. தமிழரசுக்கட்சியை சுமந்திரன் இறுக்கப்பிடித்தால், மக்கள் வேறொரு கட்சியை உருவாக்க வேண்டிய தேவையை இவரே உருவாக்குகிறார். தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் பாப்போம் என்று சவால் விட்டவர், தமிழரசுக்கட்சியில் நின்றே வென்று காட்டட்டும், பாப்போம் மக்கள் நாம்! இது மக்கள் அவருக்கு வைக்கும் சவால்!