Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. இதை மறந்து விட்டேன் மற்ற ஒரு கோணத்தில், மிளகு (காயவைத்தே அதன் கருமை நிறம், அதுவும் ஒரு விதத்தில் கருகல் தான்) உட்பட வேறு வாசனை திரவியங்கள் காய வைத்தே தூள் ஆக்க படுகிறது. அனால், மிளகாய் மாத்திரம் ஏன் புற்றுநோய் ஊக்கி உருவாகுவதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பதை சொல்லும் விஞ்ஞான ஆய்வை இதுவரை காணவில்லை.
  2. இது ஒன்றும் அறிவுரை அல்ல. அனால், கிரிப்டோ இல் ஒழுங்குமுறை (regulations) மாறுவாது மிக வேகமாக நடைபெறுவது. இறுதியாக வந்த கிரிப்டோ புரிதல் உடன்பாட்டில், குறிப்பிட்ட விளக்கத்துக்கு இணங்க வேண்டும், தொடர்ந்து கிரிப்டோ மத்திம பரிமாற்ற (cex) (இணைய) தளத்தை பாவிப்பதற்கு. அந்த விளக்கம் 'ஆம், (நான்) முதலிட்ட முழுப்பணத்தையும் இழக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விளங்கி இணங்குகிறேன்' என்பது. இது பொதுவாக, கிரிப்டோ இல் எல்லோருக்கும் தெரியும் என்றாலும், அப்பட்டமாக கையெழுத்து வைத்து இணங்குமாறு இதுவரை கேட்கப்படவில்லை. இப்போது இணங்காவிட்டால், கிரிப்டோ மத்திம பரிமாற்ற (cex) (இணைய) தளத்தை பாவிப்பது, இணங்கும் வரையிலும் தடுக்கப்படுகிறது.
  3. எந்த உணவும் வெப்பத்தில் எரிந்ததால் (நேரடியாக என்றால் மேலும் அதிகம்) , அதில் புற்றுநோய் ஊக்கிகள் உருவாகுவதன் வாய்ப்புகூட . இதனால் தான், barbecue (குறிப்பாக), பொரியல் (கருகுவதால்) போன்றவை இயலுமானவரை தவிர்க்க அறிவுறுத்தப்படுபடுகிறது. ((தசை) கருகும் போது PAH (polycyclic aromatic hydrocarbons), Heterocyclic amines (HCA) , இவை carcinogenic. அதே போல மாப்பொருள் உணவுகளும் கருகினால்). மிளகாய் (காய்தலில், கருகல் பதத்தை அடைந்தே , எந்த வெப்பப்படுத்துதல் முறையானாலும்) தூள் தயாரிப்பது. (ஆனால், பொதுவாக எந்த உணவு என்றாலும், எந்த முறையிலும் அதிகமாக, அல்லது கூடிய வெப்பநிலைக்கு (பொரியல், barbecue போன்றவை) உட்படுத்தி தயாரித்தாலும், இவைகளை உருவாக்கும் வாய்புக்கள் இருக்கிறது). எனவே, மிளகாய் தூளில் புற்றுநோய் ஊக்கிகள் ஒப்பீட்டளவில் உருவாகுவதன் வாய்ப்புகள் கூட. மிளகும் அப்படிதான், வறுத்தால், ஆனால், வறுத்தால் தான் மிளகும் தூக்கும். ஆகவே, பச்சை மிளகாயில் பொதுவாக இந்த பிரச்னை இல்லை. ஆனால், நான் நம்புவது , (மிளகா தூளுக்கு) எமது மரபணு ஏதோ ஓர் இயைபாக்கம் அடைந்து, மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்,. பொதுவாக அதை இழக்க கூடாது என்றும் (ஆயினும், அது ஒவ்வொருவரின் தெரிவும்). (ஏனெனில், உணவு, மரபணுவை காலப்போக்கில் மாற்றுவதாக இருக்கிறது, blue zone களில் (youtube இல் தேடி பார்க்கவும்) நடந்த ஆய்வு மூலம் விஞ்ஞான முடிவு. ஒருமித்தது அல்ல.) அனால் சுவை எமது சமையல் முறையில் உள்ள பிரச்சனை - சிறிதாக வெட்டி விட்டு தூள் அல்லது வேறு எது வுடன் சமைத்தாலும், அந்த தன்மையை ஆக குறைந்தது பகுதியாக எடுக்கும். மற்றது, organic என்பது (விஞ்சான அடிப்படையிலும்) வகுக்கப்பட்ட ஒரு தரம் (standard). குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் (regulations) வேறுபடலாம் உ.ம். eu, uk organic standard, ஆசிய (அப்படி இருந்தால்), அமெரிக்கா organic standard இலும் கூடுதலான கட்டுப்பாட்டை கொண்டு இருக்கும்.) பொதுவாக, ஒரு ஒழுங்குமுறையில் உள்ள organic உணவுகள், பதார்த்தங்கள், இன்னொரு ஒழுங்கு முறையில் organic என்று certify படுத்தப்பட முடியாது. இத் ஒரு காரணம், eu, uk, பொதுவாக உணவின் (organic அல்லாததும்) விலை சராசரியாக கூட இருப்பதற்கு.
  4. atacms ஏவுகணைகள் (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால் (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ). அனால் gsldb இன் idea ஐ ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி உள்ளது
  5. இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம் போன்றவைக்கு கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை. https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/ This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline. ....
  6. மிகவும் வேண்டிய ஆக்கம். பிள்ளைகள், அவவர்களின் தேவைகளை கூட கேட்டு, அது ஒப்பீட்டளவில் கடினமாயின், பெற்றோர் எடுக்கும் முயற்சியை அறிந்தே, கால தாமதித்து போன்றவை அனுபவித்தே பெறவேண்டும். அத்துடன், எந்த தேவை ஆயினும், சிறிய பொருளாயினும் அளவு. இங்கே, புலம் பெயர்த்தவர்களில் நோனாக்கள் பலர் - பிள்ளைகளை போட்டிக்கு அனுப்புவதில்லை, காரணம், தோல்வி வந்துவிடும் என்ற மனப்போக்கால். முயன்று தோற்பது அனுபவம், அனால், வெல்லத்தான் முற்றுமுழுதாக, முழுமனதாக, முயல வேண்டும். நான் அறிந்து, 2 குடும்பம், பிள்ளைகளை ஒரு போதும் தேசிய / அரச போக்குவரத்து சேவையை பாவிக்க பழ்க்கவில்லை. அவர்கள், முதல்தரம் பாவித்த அரசு போக்குவரத்தில் ஏதோ ஒரு முறுகல் அசம்பாவிதம் நடந்து விட்டது, அவர்களுக்கு மிகவும் பயம் தொற்றி, அரச போக்குவரத்தை பாவிக்கும் நம்பிக்கை (confidence) போய்விட்டது. பின், சிலகாலம் அவர்களின் பெற்றோர், உறவினர் அரசு போக்குவரத்தை பாவிப்பதற்கு அவர்களை பழக்கி எடுத்தார்கள். ஒரு முறை கோயிலில், ஒரு தாய் தனது பிள்ளை நிலத்தில் இருப்பதை பார்த்து ஏசினார் (கோயிலுக்கு வந்தால் எப்போதும் இருந்து விட்டு போகவேண்டும் என்றது கூட தெரியாதவர்கள்). (பின்பு அறிந்து கொன்டேன், அவர்கள் வடக்கில், வெளிநாடு வரு முன் அவர்களின் நிலை மிக வசதி குறைந்ததாக இருந்தது என்று). இப்படி, பல தக்கென பிழைக்கும் வாழக்கைக்கு வழிசொல்லும் அனுபவங்களை தடுக்கும் பெற்றோரை கண்டுவிட்டேன்.
  7. அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன். யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை. ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது. இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன் உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்). (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). ) https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
  8. ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும் முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US அனுப்பி இருக்கிறது Blinken ஐ சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.
  9. கடவுள் நம்பிக்கை இருந்தால், எந்த வடிவமும் கடவுளே. இவ்வளவு விஞ்ஞான மேற்கு சமூகத்திலும், god help us, நாங்கள் அப்பனே முருகனே, சிவனே, சண்முகனே என்பது போல , அவர்கள் அழைப்பது Jesus (என்று சற்று சத்தமாக) ஆய்வுக்கு அப்பால் என்பதை விஞ்ஞான சமூகம் ஏற்றுக்கொள்கிறது.
  10. xrp தண்டக்கட்டணத்தின் காரணமாக sec உடன் பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது. sec தான் இதை ஆரம்பித்தது. தலைப்பு செய்தி மட்டும் கீழே பதிவிடப்பட்டு உள்ளது. விபரங்களுக்கு இணைப்புக்குள் சென்று பார்க்கவும். https://en.bitcoinsistemi.com/there-is-no-calm-between-ripple-and-sec-there-has-been-a-new-development-in-the-xrp-case-here-are-the-details/ There is no calm between Ripple and SEC: There has been a new development in the XRP case! Here are the Details… Ripple objected to the SEC's $2 billion penalty request in a petition to the court. ஒன்றும் (நிதி) அறிவுரை அல்ல.
  11. நுண்கணிதத்தை அறிந்து இருந்தார்கள் என்பததற்கு எதாவது இருக்கிறதா?
  12. ஆம். இதை மறந்து விட்டேன், என்னது முதியவர்களை கேட்டு இருக்க கூடிய வாய்ப்பு இருந்து, எவ்வாறு தெரியும் என்று கேட்டு இருந்தால், அவர்கள் சொல்லி இருக்க கூடிய பதில் என்று நான் எதிர்பார்ப்பது, அவர்களின் (எனது சிறுவயது நேரடி முதியவர்கள்) முதியவர்கள் சொன்னது என்பது தான் அநேகமாக பதிலாக இருந்து இருக்கும். ஆனல், குவேனியை விட, (உறுத்தி) அவர்கள் சொன்னது கதிர்காமதில், வேடுவர் முருக வழிபாட்டுக்கு வந்தது செங்குந்தரால், கைக்கோளரால்). அந்த கதை சுருக்கமாக,, வள்ளியை முருகன் மணந்தது கதிர்காமத்தில், அதன் தூது விளையலட்டை செய்து வள்ளியை முருகனுக்கு விழுத்தியது வீரவாகுவும், அவரின் சகோதரர்களும். அந்த வழிதான். வேடுவர் முருக வழிபாட்டுக்கு வந்தனர். அப்படியே, இங்கே செங்குந்தர் (கைக்கோளர்) என்ற சாதி வேர் விட்டது. வாய்வழி கதை தான். (நான் நம்புவது, முருகன் எனும் அந்த நேர நவீனத்துவம், தீவுக்குள் வந்து, வேடரை மடக்கி இருக்க வேண்டும்; அவர்கள் சொல்லுவது உண்மை என்றால்)
  13. ஏய்க்காட்டை செய்தியாக்கும் வல்லமை மேற்கிடம் உண்டு ஆம், தடைகள் வரும் அனால் வராது என்ற கதை, வடிவேலுவின் கதை என்று bbc தலைப்பு போட்டு இருக்கலாம்.
  14. விஜயன் கடத்தப்பட்ட கதை ஒரிசாவில் / வங்கத்தில் இல்லை. அனால், எதோ ஒரு குடிவரவும், கலப்பும், வந்தவர்கள், இருந்தவர்களை மடக்கி மேலாண்மை செய்ததும் நடந்து இருக்கிறது. ஏனெனில், தமிழரில், வங்க சாயல் மரபணு 28% ஐ சராசரியாக தொடுகிறது. குவேனி, மனிதர், ஏனெனில், நூல்நூற்றுக் கொண்டு இருந்தது, ஒரு நவீன மனித நவீன திறமை (நூல் நூற்பது இப்பொது கூட எல்லோராலும் செய்ய முடியாது, வேண்டு என்றால் செய்து பாருங்கள், எவராகிலும், சிக்கிவிடும்). நூல் நூற்பது என்றால் - ஒன்றில், நூல் இழையோடும் (இது கடினம்) திறமை இருக்க வேண்டும் (அல்லது இறக்குமதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்), அதே போல நூல் உற்பத்தி, அல்லது இறக்குமதி. (சீன பட்டு நூல் உற்பத்தி திருடப்பது கிட்டத்தட்ட கி.பி 5-6ம் நூற்றாண்டில் - சொல்வதன் காரணம் குவேனி கால நாகரிகத்தின் நிலையை காட்டுவதற்கு.) எப்படி பார்த்தாலும், அந்த நேரத்தில் இருந்தது மிகவும் நவீன மனித நவீனமான நாகரிகம். (எந்த சாதியாக இருந்தாலும், கீழே விளக்கம் இருக்கிறது. சாதி நான் அறிந்ததை சொல்வதற்கு) (ஆனால், ஒரு கேள்வி இருக்கிறது, குவேனியின் கதை, அப்படி உண்மையில் நடந்ததா என்றும்). மகாவம்சம், பௌத்தத்தை ஆதரிக்காதோரை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டது. அந்த இருட்டடிப்பில் ஒன்று தான் குவேனியை, நவீனம் அடையாத (மனிதர் அல்லாத) பெண்ணாக காட்டுவது. குவேனிக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதையும் (மிக நவீனமான இப்பொது நடப்பதை வைத்து பார்த்தால் கூட, குவேனியும், பிள்ளைகளும் 'நீக்கப்பட்டு' இருக்க வேண்டும், அதாவது கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.) குவேனி, உண்மையில் பெயர் குவேனியா என்பதும் கேள்வி. ஏனெனில், வேனி தமிழ் பெயர், மகாவம்சம் அந்த பெயரை சூட்டியதா (குவேனிக்கு, குவேனி) என்று. அனால், குவேனி, எனது முதியவர்கள் சொல்லி சிறு வயதில் நான் கேட்டது, குவேனியும் (அப்போது இருந்தவர்களும்), செங்குந்தர் (கைக்கோளர்) சாதி என்று. அவர்களின் காரணம், இவர்கள் மட்டும் தான், தமிழரில், (முருகனின் ஆணையால்) நூல் செய்து, நூற்று, நெசவு செய்தவர்கள். மற்ற சாதிகள் அவ்வப்போது (பின்பு) நெசவில் மட்டுமே ஈடுபட்டன. (இது கதை என்றாலும், உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள், கதிர்காமகத்துக்கும் , இவர்களுக்கும் உள்ள தொடர்பு வேடர் முருக வழிபாட்டுக்கு வந்தது). ,இன்னோமொன்றையும் சொல்கிறேன், சிறுவயதில் (படிக்காத) முதியவர்கள் சொல்லி கேட்டது, வெள்ளாளர் என்ற சாதியின் தோற்றம் வெளியில் இருந்து என்று (அந்த நேரத்தில் அது ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை எனக்கு). அனால், பின் (துறை சார்) சிறீனிவாச ஐயங்காரும் சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்த போது அதிர்ச்சி அடைந்தேன் - இவர்களுக்கு எப்படி தெரியும் என்று (எனது முதியவர்களுக்கு, அறியும் போது சொல்லிய எல்லோரும் இறைவனடி சேர்த்து விட்டார்கள் ). (ஐயங்கார் சொல்லியது உண்மை என்றால்). ஐயங்கார் சொல்லியது, வெள்ளாளர் என்ற சாதியின் தோற்றம் திராவிட வருகையின் கடைசி அலையில் இருந்து, மற்ற சாதிகள் ஏற்கனவே இருந்தன என்று. எங்கு வந்த (கடைசி) அலை என்பதை சொல்லவில்லை. அனால், வந்ததில் இருந்து அவ்வளவு மாறவில்லை என்று, எனவே ஐயங்கார் நேரத்தில் ஆய்வு செய்த இடங்களுக்குவந்த கடைசி அலை என்றே எடுக்க வேண்டும். இதை Anthropometry ஐயும் அடிப்படையாக வைத்து தான் ஐயங்கார் சொல்லி இருந்தார். (ஆனால், இப்பொது வரும் DNA ஆய்வுகள், ஐயங்கார் அவ்வளவு வில்லத்தவில்லை என்பதை சுட்டுகின்றன.) மற்றது, கி.மு 500 இல், எந்த வந்தான் வரத்தும் இறங்கி போகும் தீவில் மனிதர் இல்லை என்பது அப்பட்டமான பொய், உலகின் மற்ற பாகங்களில் நடந்ததை வைத்து பார்த்தால்.
  15. கல்லோயா திட்டத்தை முன்வைக்கும் போது, சேனநாயக்கா சொல்லியது, வருங்கால சிங்கள பிரதேசத்தின் பாதுகாப்பு அணைக்கட்டு.
  16. இப்படியான தவறில், போலீஸ் பாரபட்சமாக இருப்பதாக UK இல் இளவட்டம் சொல்கிறது. முக்கியமாக, UK இல் தனியார் பாடசாலையில் படிப்பவர்கள் இப்படினயானவற்றில் எட்டுப்பட்டால், எச்சரிக்கையோடு விடுவிக்கப்படுகிறார்கள். அனால், அரச பாடசாலைகள் என்றால், முறையாக வழக்கு பதிந்து. சட்டமன்றம் போய், தீர்ப்பின் படி முடிவு இருப்பதாக. (தனியார் பாடசாலை என்றால் பெரும்பான்மை வெள்ளைக்கள், மற்ற இனங்களும் இருக்கிறது, அனால் சிறிய தொகை. அதனால், நிற வேறுபாடும் காரணமாக இருக்கலாம்.) இப்படி செய்து, மற்ற பாடசாலைகளில் படித்த, படிக்கும் பல இளவட்டத்தின் வாழ்க்கை பாழாகி போய்விட்டது என்று.
  17. 50 வயதில் இருந்து, மிகக்கூடிய விழும் விபத்து நடப்பது, படிகளில், குறிப்பாக மாடிப் படிகளில் இறங்கும் போது (uk சராசரி வீடுகளுக்கு மாடி இருப்பதால், UK இல் அதிகம்). இதன் காரணம், இறங்கும் போது (அல்லது அதை ஒத்த அசைவில், உ.ம். துள்ளிச் செய்யும் Lunge உடற் பயிற்சியில், கீழ் சென்று நிலை எடுப்பது, மேல் எழும்புவதிலும் கடினம், அனால் செய்பவர்களுக்கு இதன் வேறுபாடுணர்வதில்லை, காரணம் சமநிலை பேணுவதில் உள்ள பழக்கமும், பயிற்சியும்), குறிப்பிட்ட ஒரு தசை நார் ஏறத்தாழ ஒரே நேரத்தில் குறுகிறது, நீள்கிறது. (ஆனால், நான் நினைக்கிறன், காலம் போக, இது 40 வயதில் இந்த மாடிப்படி இறங்கும்போது விழும் விபத்து பிரச்சனை தொடங்கும். ஏனெனில், இருப்பது (sitting), நவீன புகைத்தலாக மாறி வருகிறது. சில கம்பனிகள் இதை கவனத்தில் எடுத்து, நிற்கும் நேரத்தை கூட்ட கதிரைகள் , மேசையில், ஒன்று கூடும் இடங்களில் நீக்கி விட்டன, வேலை முறையையும் மாற்றி உள்ளன). அனால், 50 வயதில் இருந்து, படி இரங்கி ஏறுதல் மற்றும் கவனமும் அவசியம் , மற்றும் எல்லா அங்கங்களையும் கிரமமாக பாவிப்பது அவசியம். பாவிப்பதால் தான் மூளைக்கு தெரிகிறது, ஆம், குறிப்பிட்ட அங்கங்கள் பாவிக்கப்படுகிறது, அவற்றுடன் அதன் (மூளையின்) தொடர்பாடலை உற்சாகமாக வைத்து இருக்க வேண்டும் என்று. பாவிக்காவிட்டால்,மூளையுடன் அங்கங்களின் தொடர்பாடல் நலிவடைந்து, கிட்டத்தட்ட அங்கங்களின் அசைவுகளை மூளை தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்து, அங்க அசைவுகளை மூளை அணைத்து விடும் நிலைக்கு வருகிறது. அசைவுகள் குறையும் போது, படிப்படியாக, அங்கங்கள் கிட்டத்தட்ட துருப்பிடிக்கும் நிலையை அடைகின்றன. மற்றது, muscle mass (தசை திணிவு) குறைவடைதல், 50 இல் இருந்து, ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஆக குறைந்தது 10% ஆல் குறைகிறது. இதன விளைவு, வெகு இலகுவாக விழுவது, முறிவது போன்ற விளைவுகள். முக்கியமான பிரச்சனை, சாதாரண அசைவில் எல்லா தசை நார்களும் பங்கெடுப்பதில்லை, அல்லது பங்கெடுப்பது குறைவு. (உ.ம். வேறு பதிவில் சொல்லி இருக்கிறேன், வயிற்று, நெஞ்சு கோறை தசை நார்கள் பாவிப்பது மிக குறைவு (ஆனால், உண்மையில் பாவிக்க வேண்டும்). பலருக்கு அப்படி தசை நார்கள் இருப்பதாய் உணர்வதில்லை, அறிவதில்லை. மருத்துவ, உயிரியல் துறையில் இருப்பவர்களுக்கு தெரியும், ஆனால், பயிற்சி இல்லாமல் அவை பாவிக்கப்படுவது இயல்பாக வராது.) (எனவே, தர்க அடிப்படையில் பார்த்தல், muscle ஐ இயன்ற அளவு கட்டி எழுப்புவது 50 இல் இருந்து அவசியமாகிறது, அல்லது குறையும் வீதத்தை குறைப்பது. இதில் உடற்பயிற்சி பெரிய பங்கு வகிக்கிறது) முதல் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தாவிட்டாலும், 50 ஐ அண்மிக்கும் போது மிகுந்த கவனம் எடுத்து, இயன்ற அளவு, கிரமமாக உடல் பயிற்சி அல்லது அதை ஒத்த அசைவுகள் செய்ய வேண்டும். மற்றும் உடம்பை, உடல் பயிற்சி அல்லது அதை ஒத்த அசைவுகள் மூலம், இயன்ற அளவு, தொடர்ந்து இந்த அசைவு செய்ய முடியாது (கிட்டத்தட்ட சவால்) என்பதை அவ்வப்போது எதிர்கொள்ள வைக்க வேண்டும். இந்த பயிற்சி மூளைக்கும் பொருந்தும். ஏன் 50 களில் இது வீறுகொண்டு தொடங்குகிறது என்பதற்கு (ஏனெனில் உடம்பு சரிவு தொடங்குவது 30 க்கு பின்) வயது போகிறது, டெஸ்ட்ரோன் குறைகிறது, மாதவிடாய் நின்று விடுகிறது என்ற பொதுவிளக்கங்களை என்பதை தவிர வேறு விளக்கங்கள் நான் அறியவில்லை. (இயன்ற அளவு செய்தால் கிடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை).
  18. சாதாரண தமிழை புரியாது, விஞ்ஞானத்தை, தமது பிம்பப்படி, பிரயோகிக்க எத்தனிக்கும் விஞ்ஞான அதிமேதாவி கொசுக் கடி தொல்லை தாங்க முடியவில்லை. இவ்வளவுக்கும், சுழித்தோ, நெளித்தோ எழுதவில்லை. இப்போதைய ஈரான் சனத்தின் பொது நிறத்தை வைத்து - அந்த நேர எந்த சனத்தின் நிறத்தை சொல்லலாம். (இந்த விஞ்ஞான விளக்கத்தின் படி , குளிர் பிரித்தானியாவில், தொடக்க ( ~ 12, 000) கறுப்பர் இருந்து இருக்க கூடாது.) அதுவும் சொந்த மொழியையும், விஞ்ஞானத்தையும் போட்டு குழப்பி, உணர்வு கொப்பளிக்கும் கொசு கடி தொல்லை. எடுகோள் கொசு கடி, மற்றவர்கள் எதோ ஒரு வழியால் வரலாம், திராவிடர் வனத்தில் இருந்து விழுந்து முளைத்தவர்கள். கப்பில், விவிலியம் சொல்லுவது கொசு கடி பிம்பத்துக்கு ஆகா, ஓகோ. அதில் உள்ள அடையாள வேறுபாடு கூட தெரியவில்லை. அப்போ மகாவம்சத்தை ஏற்று கொண்டு, orientalists சொன்ன இலங்கைத் தீவு சிங்கள தீவு என்று சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தானே. (அதை தான் வாழைப்பழ ஊசி ஏற்றுகிறார்களோ என்பது- வாசகர் தீர்மானிக்க வேண்டியது).
  19. எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை அந்தி மயங்கி, இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்' இயங்குவது.
  20. இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல் இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும். ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது. உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல் ஈரானின் உண்மையான சனநாயக அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல் கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால், Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும் ஈரானில், மேற்கிற்கு ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர் வடிக்கிறது). முல்லாக்கள் கொன்று எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது. (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா) ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ). (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
  21. அப்போது, ஆர்க்கிமிடிஸ், குளிக்கும் தொட்டியில் இருந்து அம்மணமாக எழும்பி கண்டுபிடித்து விட்டேன், கண்டுபிடித்து விட்டேன் என்று ஓட, சனமும் கண்டோம் , கண்டோம் என்று ஆர்க்கிமிடிஸ் பின் ஓடியது எதனால்? சனங்கள் உண்மையில் எதைக் கண்டது?
  22. அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of war,) ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும் உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம் கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது . எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது. கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும் , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில் இருந்து தெரிகிறது. இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும். இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.
  23. ஏன் இந்த சிந்தனை? (மேற்கில், இந்த போக்கை, மனநலத்தில் உள்ள வேறு ஏதோ ஒன்றை பிரதிபலிப்பதாக கொள்ளப்படும்.) வாழ்க்கையில் இரசனை போய்விட்டதா? அல்லது, பேசா அனுபூதி பிறந்ததா?
  24. மேற்கு சொல்வதே மிகப்பெரிய ராஜதந்திர முரண்பாடு , இஸ்ரேல் ஐ பாதுகாப்போம், (அதாவது இஸ்ரேல் எந்த நிலையில் எங்காவது, எவரையும் அடித்தால், அல்லது அடிக்கப்பட்டவர் திருப்பி அடித்தாலும் பாதுகாப்போம்.) இந்த பாதுகாப்போம் என்றது நிபந்தனை அற்றது. அடிக்கப்பட்டவர், திருப்பி இஸ்ரேல் ஐ தாக்க முனைவரக்ள் (எவராகினும்), அப்போதும் பாதுகாப்பது - ஆனால், ஒருவர் தாக்கும் போது, அடிக்கப்பட்டவர் திருப்பி அடிப்பதை தடுப்பது (எவராகிலும்) என்பது act of war; (ஏனெனில் தடுப்பவருக்கும், இதில் ஈரானுக்கும் பிரச்சனை இல்லை). எவரேனும் உள்ளே வந்து தாக்கும் போது, அவருக்கு எதிர்க்க அந்த இடத்திலும், உள் வந்தவரின் நிலப்புலத்திலும் தாக்குதல் நடத்தப்படும் சாத் திய கூறுகள் இருக்கிறது, மேற்கு சொல்வதின் படி அந்த நிலபுலத்தில் தாக்குதலை எதிர்க்க வேண்டும். ஆகவே, மேற்கு, அது செய்யபோவதை தான் சொல்கிறது, அதாவது போர்வைக்கு இஸ்ரேல் இன் பதிலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஆனால் அனாமதேயமாக (மேற்கு நம்புகிறது தடயத்தை அழிக்கலாம் என்று) பங்குபற்றுவது அல்லது தலை வகிப்பது. அந்த நிலையில், ஈரான் திருப்பி மேற்கின் இலக்குகளுக்கு அடிக்க எத்தனிக்கும்.
  25. அமெரிக்கா (மற்றும் வாலுகள், வாலுகள் ஒன்றும் அறிவிக்கவில்லைத் தான்) போர்வைக்கு கதை விடுவதை செய்தியாக அமெரிக்கா ஆக்க, மேற்கு ஊடகங்கள் காவுகின்றன. மற்ற (நாடுகள்) எவரும் இதை கருத்தில் எடுக்கவில்லை. எடுப்பது (ராஜதந்திர) மடமை. அனால், இது ராஜதந்திரத்தில் ஒன்றாக (ஐயந்திரிபுக்கு, மறுத்தலுக்கு இடம், காலம் ஏற்படுத்தப்படுகிறது) மேற்கு கருதலாம். ஏனெனில், அப்பட்டமான, இரான் தூதரக தாக்குதலை அவ்வாறே ஏய்க்காட்ட முயன்றன. ஆயினும், பாதுகாப்பு சபையில் வெட்டவெளிச்சம் போட்டு அம்மணத்தை காட்டின. செய்துவிட்டு, இஸ்ரேல் நன்றாக செய்து விட்டது எனறு அறிவிப்பதை எது தடுக்கிறது (ஈரானின் தாக்குதலை தடுத்தது போல, இஸ்ரேல் நன்றாக தடுத்தது விட்டது என்றது போல)? அமெரிக்கா உள்ளேயும் செலவாகு கூடும், தேர்தலில். அனால், இது ஆழமாக போய்விடக் கூடாது எனபதற்கு, ருசியா, சீன நெருக்கப்படுகிறது, பெயராவில் பகிரங்கமாக இஸ்ரேல் இன் பதிலுக்கு, இரான் திருப்பி அடிக்க கூடாது என்பதற்கு (மேற்கும் அதன் rule based. தூஹ்ஹரகம் அழிக்கப்பட்டதை கவலை கூட தெரிவிக்க விடாமல் முடக்கிய மேற்கு). சீன சொல்லி இருப்பது, ஈரானுக்கு அதன் இறைமை, நிலபுல ஒருமைப்பாட்டுக்கு இணைவாக கையாளாக்கூடிய நிலையில் இருக்கிறது. சீனாவின் (ரஸ்சியாவினதும்,) செய்மதிகள் விமானந்தாங்கி, இஸ்ரேல், மற்றும் அரபு நாடுகளை அவதானித்து கொண்டு இருக்கும். மற்றது, அவை f35, எப்படி இருக்கும் என்பதிலும் குறி. (ஈரானிடமும் தொழில்நுட்பங்கள் இருக்கிறது, உண்மையான சண்டையில் வேலை செய்யுமா, செய்யா என்பதை அறிவதற்கும்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.