Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. குமாரசாமி, கோசான் சொன்னது சரிதான். சம்பிராதய முறைப்படியான திருமணம் சிறீலங்காவில் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு, எனது தந்தை இறந்தது 1962இல். அப்பொழுது பென்ஷனுக்கு விண்ணப்பித்த பொழுது, திருமணம் சம்பிராதய முறைப்படி நடந்தது என்றே குறிப்பிட்டார்கள். ஐயரின் ஒப்புதலும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. அப்பொழுது (50-60 ஆண்டுகளுக்கு முன்னார்) பிறப்புப் பதிவில் பெற்றோர்கள் திருமணமானவர்களா? பதிவுத் திருமணமா? சம்பிராதயத் திருமணமா? என்ற கேள்வி இருந்தது. இப்பொழுதும் விண்ணப்பப்படிவத்தில் அப்படியான கேள்வி இருக்கிறதா தெரியவில்லை. சம்பிராதயத் திருமணமானாலும் பதிவுத் திருமணத்தில் எப்பொழுதும் சிக்கலில்லை.
  2. suvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான். எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன். மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது. வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்” என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉
  3. உண்மை, பொய் எல்லாம் எனக்கு சத்தியமாகத் தெரியாது யாயினி. வேறொன்றுமில்லை. பாடசாலைக்கால நினைவுகள் வந்தன. பாடசாலை செல்லும் போது ஒரு முதியவரை வீதியில் காண்பேன். மனநிலை சரியில்லாதவர். அவருக்கு அருகில் போய் அவரது பட்டப்பெயரைச் சொன்னால் போதும், அவர் கோபமாகிக் கத்தத் தொடங்கிவிடுவார். சில வேளைகளில் கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்து எறியத் தொடங்கிவிடுவார். அவரது கோபம் அடங்க கனநேரமாகும். பாடசாலை முடிந்து வரும் போது அவதானத்துடன்தான் அவரைக் கடந்து செல்வோம். தற்செயலாக அந்த மனிதர் எங்களை கண்டால் போதும், கெட்ட வார்த்தைகளுடன் எங்களைத் துரத்தத் தொடங்கிவிடுவார். காதில் விழும் அந்த வார்த்தைகளை கேட்டு ரசிப்போம். எங்களுக்கு அப்போது அது பகிடியாக இருக்கும். ஆனாலும் அவரை ஏதோ வகையில் துன்புறுத்தியிருக்கிறேன். அது ஒரு காலம். அரசியலிலும் அது வேலை செய்கிறது என்பது இப்போது தெரிகிறது. ரசிக்கிறேன்.
  4. காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.
  5. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
  6. அரசியல் சம்பந்தமான காரணங்களை வைத்துத்தான் புகலிடக் கோரிக்கை வைக்கமுடியும் என்ற இலக்கியவாதிகளின் எண்ணத்தை வாத்தியார் கணக்கு மாற்றிப் போட்டிருக்கிறது. புலம்பெயர் இலக்கிய வாதிகளோடு ஷோபா சக்திக்கு என்ன பிரச்சினையோ? கதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. வடமராட்சியில் பனைமுனை என்ற ஊரை எனக்குத் தெரியும். காடல்முனை அறியப்படாத ஊராக இருக்கிறது. எது எப்படியோ காடல்முனை ஆட்களை நம்பவே கூடாது.
  7. பொதுவாக வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவது சவாலானதாகவே இருந்து வருகிறது. கப்பலோட்டிய தமிழன், சிவகங்கைச் சீமை போன்ற படங்களை இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். அதே நேரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தனித்துவமான இடத்தைப் பெற்றது. பந்துலுவின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, சக்தி கிருஷ்ணசாமியின் காலம் கடந்தும் நிலைக்கும் வசனங்கள், சிவாஜி கணேசனின் மேன்மையான நடிப்பும் வசன உச்சரிப்பும், மேலும் அந்தப் படம் வர்ணத்தில் வெளியானதும் அதன் வெற்றிக்குக் காரணங்களாக அமைந்தன. தற்போது வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எடுத்துக்கொண்ட கருவைத் தெளிவாக முன்னிறுத்தாமல் கதை திசைமாறி எங்கெங்கோ பயணிக்கிறது. மேலும், நடிகர்கள் பாத்திரங்களாக மாறாமல், நடிகர்களாகவே திரையில் தோன்றுகிறார்கள். சில இடங்களில் நாங்கள் இப்பொழுது ‘மாஸ்’ சினிமாதான் பார்ககிறோம் என்ற நிலைக்கு எங்களைத் தள்ளி விடுகின்றது. உதாரணமாக, சிவகார்த்திகேயனை அடித்து வீழ்த்திய பிறகு “அவனை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரவி மோகன் கூறிவிட்டு ரயிலில் பயணிக்கிறார். ஆனால் அடுத்த கணமே அதே ரயிலில் சிவகார்த்திகேயன் தோன்றி சண்டை போடுவதைச் சொல்லலாம் “இப்போதைய தலைமுறைக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த தகவலை இந்தப் படம் வழங்கியுள்ளது” என்று பேராசிரியர் சு.ப. சோமசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜனவரி 13ஆம் தேதி கொழும்பு Havelock Cityஇல் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றபோது திரையரங்கின் நிலை அதற்கே சாட்சியாக இருந்தது. பத்தோடு பதினொன்றாக வந்துள்ள ஒரு திரைப்படமாகவே பத்தோடு பதினோராவது ஆளாக பராசக்தியைப் பார்த்துவிட்டு திரும்பினேன். எனக்குப் படம் பிடிக்கவில்லை. நான் சங்கியும் இல்லை நடிகனை தலைவனாக, கடவுளாக கொண்டாடுபவனும் இல்லை. ஆனால் ஒரு நடிகனை முன்னிறுத்தி அவர் மூலமாக ஆட்சிக்கு வந்ததுதான் திமுக. 67இல் திமுக வென்றபோது அமைச்சர்களது பட்டியலை எம்ஜிஆரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தவர்தான் அறிஞர் அண்ணா. எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளதாததால் ஆதித்தனாருக்கு மந்திரி பதவி கிடைக்காமல் போனதும் வரலாறு. பேராசிரியர் திமுக அபிமானி என்பது ஏற்கனவே நான் தெரிந்து வைத்திருக்கிறேன். சுபவீ வரிசையில் சுபசோ வையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.