Everything posted by Kavi arunasalam
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மென்மையான குரல் மட்டுமல்ல மெலடியான பாடல்களுக்கும் பொருத்தமானது ஏ.எம்.ராஜாவின் குரல். தனது அமைதியான குரலால் பல உள்ளங்களில் புகுந்து இசையால் ஒரு ராஜ்ஜியம் அமைத்த ஏ.எம்.ராஜா திடீரென “ஓகோ என்தன் பேபி” என்று ஒரு துள்ளல் பாட்டைப் பாட அது அன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைத்து. இன்று எழுபது வயதுக்கு மேல் இருக்கும் அன்றைய இளைஞர்கள் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்டால் போதும் அன்றைய காதல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போவார்கள். வீதியில் தங்களுக்கு விருப்பமான பெண்கள் போனால் சைக்கிளில் வரும் அன்றைய இளைஞர்களுக்கு பாட வருகின்றதோ இல்லையோ வாயில் இந்தப் பாடல் கண்டிப்பாக விசில் வடிவமாக (எங்கள் ஊரில் அதை ‘சீக்காய் அடிப்பது’ என்பர்கள்) வரும். “மாசிலா உன்மைக் காதலே”, “மயக்கும் மாலை பொழுதே”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”என்று ஏ.எம்.ராஜா அன்று பாடிய பல மெலடிப் பாடல்கள் காலம் கடந்தும் வாழ்கின்றன. பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடலுக்கு நடிகை ஜமுனா பிடிக்கும் அபிநயம் சிரிக்கவைக்கும். ஆனால் பாடல் எவ்வளவு ரசிக்கப்பட்டது என்பதற்கு சீனா பெண்கள் பங்கு கொள்ளும் இந்த வீடியோ ஒரு சாட்சி A
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னாயிற்று? திடீரென 64 வருடங்கள் பின்னோக்கி? நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கிறேன். நன்றி Suvy
- காளிதாஸ்..! எப்படி..?
-
உஷாரையா, உஷாரு..!
நீங்கள் இப்போ எங்கே நிற்கிறீர்கள்? டுபாயிலா? அல்லது சென்னையிலா?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்றைய எழுச்சிப் பாடல் என்றால் முதலாவதாக இந்தப் பாடலைத்தான் சொல்லலாம்.குதிரைக் குளம்பொலி பின்னணியில் ஒலிக்க அதற்கேற்றால் போல் ரி.எம்.எஸ் குரல் கொண்டு பாட.. நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடல் இது. மன்னாதி மன்னன் திரைப்படம் பாரதிதாசன் எழுதிய சேரதாண்டவம் என்ற நாடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கதை, வசனம், பாடல்கள் என்று கண்ணதாசன் இந்தப்படத்தில் கலக்கியிருப்பார். இந்தப் படத்தில் அஞ்சலி தேவிக்கு, “காவிரித் தாயே காவிரித் தாயே காதலன் விளையாட பூ விரித்தாயே” என்ற பாடல் இருக்கும் ஜமுனாராணி பாடிய அந்தப் பாடல் அப்பொழுது பெண்களின் பிரபல்யமான சோகப்பாடல்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வைரமுத்து (கிராமியப்) பாடல்கள் எழுதும் போது மறக்காமல் மாட்டையும் சேர்த்துக் கொள்வார்
-
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.!
சந்தித்திருக்கிறேன். ஈழப்பிரியனுக்கு வீரவணக்கம்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இங்கேயும் குளிர்தான்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நான் துணைவனைத்தான் காணவில்லை என்று நினைத்தேன்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேஐர் சுந்தரராஜன் (அண்ணன்ன)செய்த தவறுக்கு ஜெய்சங்கரை (தம்பி) தவறாக புரிந்து கொள்வார் கே.ஆர்.விஜயா. படம் முடிவிலேயே உண்மை பார்வையாளருக்குத் தெரியும். இன்றும் நான் ரசித்துக் கேட்கும் பாடல்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கிருஸ்ணனுக்குப் பதிலாக காகம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
“நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்” (என்னைப் போல் ஒருவன் திரைப்படப் பாடல் “தங்கங்களே நாளைத் தலைவர்களே” யின் இடையில் இருந்து உருவியது)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! பச்சரிசிப் பல்லு ஒரு சிறுமிக்கு ஆடலாம் அல்லது ஒரு கிழவிக்கு ஆடலாம். எம்ஜிஆரின் காதலி சிறுமியா? இல்லை கிழவியா? என்று கண்ணதாசன் மேல் அன்று ஒரு விமர்சனம் வந்தது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கா.மு.ஷெரிப் எழுதிய பாடல் என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். நடன ஆசிரியர் தங்கப்பன் ஜெமினி சந்திராவுடன் அசத்தலாக ஆடியிருப்பார். இந்த தங்கப்பன்தான் எம்ஜிஆரின் அதிகப் படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் நடன ஆசானும் இவர்தான். ஜெமினி சந்திரா பின்னாளில் இந்திக்குப் போய் விட்டார்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏 “இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது” நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தவறு
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
“மதம் பிடித்ததில்லை”என்றவுடன் கவிஞர் வாலி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என கோயில் நிர்வாகிகளுக்குள் பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு வருடக் கணக்கில் நீண்டது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்காததால் அந்த யானை கோயிலில் கட்டுண்டு இருந்தது. ஒருநாள் அந்த யானை கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். கவிஞர் வாலியோ அந்த நிகழ்வுக்கு இப்படி எழுதி இருந்தார். „யானைக்கு மதம் பிடிக்கலை அதனால் ஓடிற்று' என்று.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கண்ணை நம்பாதே
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- அமைதியில்லாதென் மனமே என் மனமே..
பழைய கள்ளு புளிக்கும் என்பார்கள். இங்கே அது இனிக்கிறது👍🏾- ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
- சிந்தனைக்கு சில படங்கள்...
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமைவரை கூட வரும்- சிரிக்க மட்டும் வாங்க
உங்களுக்கு கை கொஞ்சம் நீளம்தான் - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.