Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. இவர் எப்பொழுதும் நழுவுகிற மீன். இவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு தமிழர் கொடுக்க அவர்களுக்கு “இதோ வருகிறேன் அதோ வருகிறேன் “என்று சொல்லி கடைசியில் தமிழருக்கு ஏதும் செய்யாமல் போனவர். ஆனாலும் சீமான் சமீபத்தில் இவரிடமும் போய் வந்து வாயாறப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.
  2. கவலைப்படாதே சகோதரா. புலி ஒன்று பதுங்கியிருக்கிறது. அதனால் எப்போதும் பதுங்கியிருக்க முடியாது. வெளியே வரும். உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் சொல்கிறேன். மீஸா சட்டத்தில் பல திமுக ஆட்களை இந்திரா உள்ளே அள்ளிப் போட்டார். சுடலையையும் அவர் விட்டு வைக்கவில்லை.சிறையில் நல்ல சாப்பாடு போட்டு, சுடலையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆரை வீழ்த்த இந்திராவோடு கருணாநிதி கூட்டுச் சேரவில்லையா? கை கோக்கவில்லையா? அதுதானே அரசியல். தேர்தல் கூட்டு களநிலவரத்தை வைத்து மாறும். அதிமுக வும் அடுத்த கரையில் தூண்டில் போட்டு காத்து நிற்கிறது. தனித்தா? கூட்டா? எதுவானாலும் பாதிப்பு திமுகவுக்கே. இந்த இடைவெளியில் அண்ணன் கடலில் படகில் போய் ஏதோ செய்யப் போகிறாராமே. அதைப் பாருங்கள். கருர் சோகத்தில் இருந்து மீள அண்ணனின் நகைச்சுவையும் தேவைதானே?
  3. சரஸ்வதி பூசைக்குப் போன இடத்தில் எடுத்து வந்திருக்கிறீர்கள் போலே? பாடலுக்கு நடனமாடியவர் பெயர் கனகா. இந்தக் கனகா தேவிகாவின் மகள் கனகாவுக்கு முந்தையவர். சரஸ்வதியை வைத்து இடம் பெற்ற இந்தப் பாடலைப் போலவே பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்றொரு பாடல் இருக்கிறது. அதில் கே.ஆர். விஜயா பாட, எல். விஜயலக்சுமி நடனம் ஆடியிருப்பார். பஞ்சவர்ணக்கிளி, கௌரிகல்யாணம் இரண்டையுமே இயக்கியவர் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சங்கர்.
  4. வாசித்தவுடன் சத்தமாக சிரித்துவிட்டேன். முதல்வரியே சிரிக்க வைத்தது. இரண்டாவது வரி அதற்கு மேல். நல்ல நகைச்சுவயை கேட்டு நாளாயிற்று என்ற கவலை இன்று வாசித்ததில் தீர்ந்து விட்டது.
  5. அவர் எப்பவோ பின் கதவாலே போயிட்டார் எண்டு சொன்னாங்கள்
  6. சில ஆவணப் படங்கள் பார்த்திருகிறேன். 91வயது அரை வாழ்ந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை
  7. குமாரசாமி, இதுக்கெல்லாம் கேலிச்சித்திரம் வரைவதோ AIஇல் கேட்டு வாங்கிப் போடுவதோ நன்றாக இருக்காது. நாகரீகமாகவும் இருக்காது. உதாரணத்துக்கு சென்ற வருடம் கள்ளக்குறிச்சியில் (விசச்)சாரயம் குடித்து 67 பேர் இறந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இறந்த குடும்பங்களும் தலா பத்து இலட்சம் கொடுத்ததுக்குமே நான் ஒன்றுமே வரையவில்லையே.
  8. காசேதான் கடவுளடா படத்தில் இந்தப் பாடலை சுசிலா பாடியிருந்தார், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. இசையில், பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அப்போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியில் இந்தப் பாடலை கேட்கும் போது, சில வரிகளுக்குள் மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களுக்கான காரணம் தணிக்கையாகும். படம் தணிக்கைக்கு செல்லும் முன்னரே இசைத்தட்டு வெளியிடப்படுவது பொதுவாக இருந்தது. வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும்போது, “எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம் அங்கங்கே தொட வேண்டும் கை பதமாக..." எனப் பாடல் வரிகள் இருக்கும். ஆனால், திரைப்படத்தில் "எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக..." என்று இருக்கும்
  9. காலத்துக்கு ஏற்ற கவிதை. அருமை ரசோதரன். கர்ணன் படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலில் இப்படி எழுதியிருப்பார் புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
  10. குமாரசாமி, இந்த விடயத்துக்கு எதுக்கு ‘புலம்ஸ்’ஸை கேட்டுக்கொண்டு? பேசாமல் அமைச்சர் ஐயா இராமலிங்கம் சந்திரசேகரருக்கு ஒரு போன் போட்டு சொன்னால், அவர் கவனிச்சுக் கொள்வார்😛
  11. “கும்பலைக் கூட்டுறான் கொடியை நாட்டுறான் கொஞ்சநேரம் நின்று பாத்தால் உண்டியலை நீட்டுறான்…” கட்சி வளர்ச்சிக்காக உண்டியலை நீட்டியவர் கருணாநிதி அல்லவா?
  12. நாங்கள் விலங்குகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை. எங்களிடமும் வடக்கிருந்து மரணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போ எல்லாம் மருந்து மாத்திரைகளில் வாழ்வு போய்க் கொண்டிருப்பதால் திசைகளை எல்லாம் மறந்துவிட்டோம். “கப்பலில் வந்த கொண்டையினரை திறக்க கதாநாயகன் வெளிப்படுவார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பார்த்தால் அவர் அந்த நாட்டு மொழி பேசுவார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்க்க”, சும்மாதானே கொண்டையினருக்குள்ளே இருக்கிறேன் என்று நாலு நாளா உங்கள் மொழியை படித்தேன் என்று அவர் சொல்லுவார்”.புஸ்பா 2 படத்தில் இந்தக் காட்சியைச் சொல்லி “யாருக்கு கதை விடுறீங்கள்?” என்று புளூச் சட்டை மாறன் டைரக்டரை வாங்கியிருப்பார். படத்தைப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு கனவுக் காட்சி. ஆக படங்களை பார்க்க வைக்க ஒரு புளூச்சட்டை மாறன் தேவைதானே. நீங்கள் கதை சொன்னவிதத்தில் கூடவே நானும் உங்களுடன் பயணித்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். நன்றாகச் சொன்னீர்கள். பலதையும் கோர்த்து ஆக்கபூரவமான விசயங்களையும் சேர்த்துச் சொன்னீர்கள். ஏன் எங்களையும் கூட உங்களுடன் சேர்ந்து எழுத வைத்தீர்கள். நன்றி யசோதரன். ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை
  13. கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள். இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster Love Parade அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக் காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார். அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன, "பாதுகாவல் போர்வையிலே ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்" இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை. விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது. கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் உலகில் முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும். பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று.
  14. Die Abhängigkeit der deutschen Arzneimittelfirmen vom US-Markt ist groß. Die Vereinigten Staaten sind das wichtigste Exportland für die Branche. 2024 gingen dem Statistischen Bundesamt zufolge Waren im Wert von 27 Milliarden Euro und damit knapp ein Viertel der deutschen Pharmaexporte in die USA. Damit ist die deutsche Pharmabranche wesentlich stärker vom US-Markt abhängig als etwa der Maschinenbau und die Chemieindustrie. Besonders gefragt waren etwa Impfstoffe. https://www.zeit.de/wirtschaft/2025-09/medikamente-zoelle-usa-trump-auswirkungen-deutschland-gxe
  15. இந்தப் பாடலில் தோன்றுபவர் குசலகுமாரி. ஜமுணாராணியைப் பார்க.க வேண்டுமானால், “அமுதைப் பொழியும் நிலவே..”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்…”, “அன்புள்ள மான் விழியே…” என்று அவரின்அருமையான பல பாடல்கள் இருக்கின்றன. இந்தப் பாடலை எழுதியவர் சுரதா. கிண்டிக் கிளறி எடுத்துக் கொண்டு வந்து நல்ல நல்ல பழைய பாடல்களை போடுகிறீர்கள். வாழ்த்துக்கள் Suvy.
  16. இதைச் சொல்வதற்காக நானும் கொஞ்சமாக வருந்துகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்றாலும் முகராசி ஒன்று இருகிறது அல்லவா. உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது😊
  17. யேர்மன் மருந்து உற்பத்தியில் கால் பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு கணக்கிருக்கிறது. மனுசன் அடிக்கடி கரடி விட்டு வெருட்டிக் கொண்டிருக்கிறார்.
  18. இந்தப் பாடலுக்காக ஒரு மாதத்துக்கு மேலாக பத்மினியும், வையேந்திமாலாவும் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டதாக செய்தி இருக்கிறது. பாடலும், ஆடலும் நன்றாக அமைந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்தாலும், இன்றுவரை பிரபலமாக இருப்பது, அந்த நடனத்துக்கு இடையில் பி.எஸ். வீரப்பாவின் குரலில் ஒலித்த, “சபாஸ் சரியான போட்டி” என்ற வசனம்தான்
  19. உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல். நன்றி Newbalance
  20. அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியிலே மடியிலேயே கையை வைச்சிட்டியே மாப்பு🤪
  21. ராசாத்தி அம்மாள், கவிஞர் வாலியுடன் நாடகங்களில் நடித்தவர். நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா எம்ஜிஆரின் நாடகக்குழுவில் இருந்தவர். எம்ஜிஆர் படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார். நடிகர் செந்தாமரை கலைஞருடன் நல்ல உறவில் இருந்தவர். செந்தாமரையின் மனைவி கௌசல்யா வழங்கிய பேட்டி ஒன்று இங்கே இருக்கின்றது. மீண்டும் கோசான் வீட்டைச் சுத்தி அடை மழை😊
  22. முன்னரெல்லாம் சிவாஜிக்கு -சி.எஸ்.ஜெயராமன், எம்ஜிஆருக்கு சீர்காழியார் எனப் பாடிக்கொண்டிருந்தார்கள். தூக்குத் தாக்கி படத்ததோடு சிவாஜி, சௌந்தரராஜனோடு ஒன்றிப் போனார். எம்ஜிஆரும் சௌந்தரராஜனை தன் படத்தில் பாடவைத்தாலும் விட்ட குறை தொட்ட குறை என்று அவ்வப்போது சீர்காழியாருக்கும் தன் படத்தில் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாஸ் மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் எம்ஜிஆருடன் உடனிருப்பவர் மாலினி. அன்றைய முன்ணணி நடிகர்களோடு மாலினி நடித்திருந்தோலும் பத்துப் படங்களுக்குள் இவரது திரைப்பயணம் நின்றுவிட்டது. சபாஸ் மீனா படத்தில் சிவஜியுடன் மாலினி இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “ காணா இன்பம் கனிந்ததேனோ..” பாடல் அன்று அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல்.
  23. 49 வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று செத்துப் போனவருக்கு என்ன பிரச்சினை இருந்ததோ? யாரறிவார். நித்தம் சோறின்றி எத்தனை பேர் எத்தனையோ வருடங்கள் வாழ்கிறார்கள். யாரும் அதிசயப் படவில்லை. கொஞ்சம் மில்லியன்களை அந்தப் பக்கமும் திருப்பி விடலாம். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ். கிருஸ்ணன் கேட்பார், “ கோவிலை கட்டுவது எதனாலே?" என்று. அதற்கான பதில், “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே” என்று வரும். இன்றைய நிலையில் கோவிலைக் கட்டுவது ஒரு வியாபாரத்திற்குத்தான். அதுசரி அநேகமாக பல்லி மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.