Everything posted by ஏராளன்
-
தமிழர் பகுதியில் அமைய உள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?
தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்? கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 பிப்ரவரி 2026 வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உத்தேச கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டத்திற்கு தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுமாறு கோரி, வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்புக்களை தமிழர்கள் வெளியிட்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தமிழர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு தமிழர்களே ஏன் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்? கிவுல் ஓயா திட்டம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள காணிகளில் 1983ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே இந்த கிவுல் ஓயா திட்டம் என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறித்த பகுதிகளில் வாழும் சிங்கள மக்களினால் செய்கை செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேவையான நீர் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் இந்த திட்டத்தின் பணியை முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது முஸ்லிம் முதியவரின் கடை பெயரை எதிர்த்து கூடிய கூட்டம் - அங்கு வந்த 'முகமது தீபக்' செய்தது என்ன? '100 ரன் வித்தியாசம்' - வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் விளையாட மறுத்த பிறகும் இந்தியா ஏன் இலங்கை செல்கிறது? உங்கள் வீட்டு சமையலறையில் கோழி இறைச்சியை கழுவுவது ஆபத்தானது என்று தெரியுமா? End of அதிகம் படிக்கப்பட்டது இதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மா ஓயாவின் முக்கிய துணை நதியான கிவுல் ஓயாவை குறுக்காக அணை அமைத்து கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 1,700 ஹெக்டேர் புதிய நிலங்களில் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள 700 ஹெக்டேர் நிலங்களின் பயிர்செய்கை திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எதிர்ப்பில் ஈடுபடுவோர் என்ன சொல்கின்றார்கள்? பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்களுக்கு விடுவிக்க முடியாத காணிகளை, சிங்கள மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கிவுல் ஓயா திட்டத்திற்கு விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''நாங்கள் இலங்கையின் உலர் வலயத்தில் வாழ்கின்ற மக்கள். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நீர்த்தேவை என்பது விவசாய தேவைக்கும், அன்றாட ஜீவனோபத்திற்கும் முக்கியமானது. இந்த நீர்த்தேவை தனியே குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்த குடியேற்றப்பட்ட மக்கள் என்பது இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சிறிய மக்கள். அவர்களுக்கு இருக்கின்ற அதே தேவை, மகாவலி எல் வலயத்திற்கு வெளியிலுள்ள மக்களுக்கும் இருக்கின்றது.'' என்றார் பத்மநாதன் சத்தியலிங்கம் ''அந்த குறிப்பிட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த திட்டத்தை செய்கின்றார்கள். ஏனைய மக்கள் கைவிடப்பட்ட மக்களாகவே இப்போதும் இருக்கின்றார்கள். யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பலர் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமி இன்று காடாகியிருக்கின்றது. 2014ம் ஆண்டு இருந்த அரசாங்கம் கூகுள் வரைப்படத்தில் எங்கேங்கெல்லாம் பச்சை நிறமாக இருந்ததோ, அந்த நிலங்களை வனவல திணைக்களத்திற்கு சொந்தமானது என விசேட வர்த்தமானியூடாக அறிவித்திருந்தது.'' என்றார் அவர் ''அப்படி அறிவித்த அந்த பிரதேசத்திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் பயிர் செய்த நீர்பாசன குளங்கள், வயல்கள் எல்லாம் அதற்குள் உள்ளடங்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்திற்குள் மீள்குடியேற வந்த மக்களை அந்த வர்த்தமானியை காட்டி இன்று வரை அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த இடத்தை விடுவிக்க நாங்கள் அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. விடுவிப்போம் என்று சொல்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அறிக்கை தருகின்றார்கள்.'' ''பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களை குடியேற விடாத அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டை கிவுல் ஒயா திட்டத்திற்காக விடுவித்திருக்கின்றார்கள்'' என பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார். சிங்கள குடியேற்றமா? புதிய சிங்கள குடியேற்றங்களை மீண்டும் கொண்டு வந்து, தமிழர் பகுதிகளில் குடியமர்த்தும் திட்டத்தை இந்த அரசாங்கமும் முன்னெடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். ''1983ம் ஆண்டு செய்ததை போல அல்லது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் வேறு மாகாணங்களிலிருந்து பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றியதை போல இந்த அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்ற போகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது'' என்றார் அவர். படக்குறிப்பு,வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சியை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கோரிக்கை விடுக்கின்றார். ''வவுனியா வடக்கு பிரதேசமானது, தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பூர்வீக பிரதேசத்தில் சிங்கள மயமாக்குவதற்கான, அதாவது எங்களுடைய பிரதேசத்தில் இன பரம்பலை மாற்றியமைப்பதற்கான அந்த வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் செய்கின்றது என்பது எங்களுக்கு தெட்ட தெளிவாக தெரிகின்றது.'' என்றார் அவர் ''இவ்வாறான திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.'' என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இருப்பில் கை வைக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கின்றார். ''சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிர் அல்ல. சிங்கள குடியேற்றங்களை இனவாதிகள் கொண்டுவர முயற்சிப்பதற்குதான் நாங்கள் எதிர்க்கின்றோம். வவுனியா வடக்கில் அரைவாசிக்கு மேல் சிங்கள குடியேற்றங்கள் வந்து விட்டன. அபிவிருத்தி திட்டமா? சிங்கள குடியேற்றமா?'' என கேள்வி எழுப்புகிறார் அவர். படக்குறிப்பு,சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் யானை மனித மோதல் காடுகள் அழிக்கப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், யானை மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் குறிப்பிடுகின்றார். ''எங்களுடைய காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த காடுகள் அழிக்கப்படுகின்றமையினால் மனித யானை மோதல்கள் இன்னும் அதிகமான இருக்கும். இன்றும் கூட அடிக்கடி யானைகளினால் மனிதர்களின் உயிர்கள் வன்னி பகுதிகளில் இழக்கப்படுகின்றன. இது இன்னும் அதிகரித்து செல்லும் என்ற பயம் இருக்கின்றது.'' என அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கம் என்ன கூறுகின்றது? ''கிவுல் ஓயா திட்டமானது, இன மற்றும் மத அடிப்படையிலான நோக்கங்களை கொண்டது என கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது'' என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும். எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது, திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழே மேற்கொள்ளப்படும்'' அவர் தெரிவித்தார். மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxyxwlplrxo
-
கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு ; 200 பேர் உயிரிழப்பு
கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு; 200 பேர் உயிரிழப்பு 07 Feb, 2026 | 09:38 AM கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். 21 மணிநேரத்திற்குப் பிறகு மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238050
-
அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: Vishnu 07 Feb, 2026 | 05:53 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அவசரகால சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது. இப்போது கூட தையிட்டியில் நாங்கள் போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கும் பாதிக்கப்பட்டுள்ளன. பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும், இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன. கடந்தகால ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம், இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா? இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல் ஹேய்சர் விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது. இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/238037
-
அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி
அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் 'உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத' வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என்று இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், டெல் அவிவ் 6 பிப்ரவரி 2026 மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான உலகளாவிய ஊகங்களுக்கிடையே, இஸ்ரேல் தலைவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்து வருகின்றனர். இரானின் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய சில கருத்துகளைத் தவிர, தனது மிகப்பெரிய எதிரிக்கு எதிராக, தனது வல்லரசு நட்பு நாடு நடவடிக்கை எடுப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரது அரசாங்கமும் சமமாக மௌனமாக உள்ளது. "இந்த தருணத்திற்கு நெதன்யாகு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது," என்று இஸ்ரேலின் பாதுகாப்பு உளவுத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவரும் தற்போது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் மூத்த இரான் ஆராய்ச்சியாளராகவும் உள்ள டேனி சிட்ரினோவிச் கூறினார். "அமெரிக்கா வளைகுடாப் பகுதியில் இவ்வளவு படைகளைக் கொண்டிருப்பதும், இரானைத் தாக்குவதற்கு டிரம்ப் இவ்வளவு நெருக்கமாக இருப்பதும், நெதன்யாகுவைப் பொறுத்தவரை, அவர் இழக்க முடியாத ஒரு பொன்னான தருணம்." என்கிறார் சிட்ரினோவிச். இஸ்ரேலின் சிக்னல் உளவுப் பிரிவின் முன்னாள் துணை இயக்குநரான ஆசாஃப் கோஹன், இஸ்ரேலின் மௌனத்திலும் ஒரு உத்தி இருப்பதாகக் கூறுகிறார். "இந்த முறை அமெரிக்கர்கள் வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலியத் தலைமை நம்புகிறது. ஏனென்றால், அவர்கள் அதிக வலிமை வாய்ந்தவர்கள், அதிக திறன்களைக் கொண்டவர்கள், மேலும் உலக அரங்கில் அவர்களுக்கு அதிக சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது," என்கிறார் அவர். பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக இரானை இஸ்ரேல் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தலாகவும், மத்திய கிழக்கில் ஸ்திரமின்மைக்கான மிகப்பெரிய ஆதாரமாகவும் கருதி வருகிறார். அவரது பொதுவான மௌனம், தனது முக்கிய கூட்டாளியான அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்பதைக் குறிக்கவில்லை. சமீபத்தில் இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஷ்லோமி பைண்டர், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இரானில் உள்ள சாத்தியமான இலக்குகள் குறித்து கவனம் செலுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. பட மூலாதாரம்,Getty Images இரானில் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட அதிகபட்ச தாக்குதல்களை நோக்கி நெதன்யாகு தனிப்பட்ட முறையில் அமெரிக்காவைத் தள்ளுகிறார் என்று சிட்ரினோவிச் நம்புகிறார், மேலும் சமீபத்தில் டிரம்பைத் தடுத்து நிறுத்துமாறு நெதன்யாகு வலியுறுத்தியதாகக் கூறப்பட்டபோது, திட்டமிடப்பட்ட அமெரிக்க தாக்குதலை "மிகச் சிறியது" என்று அவர் கருதியதால் தான் என்றும் அவர் கூறுகிறார். கடந்த ஆண்டு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு இரானியர்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக "எதிர்த்து நிற்க" வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது இரானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறார் - அவற்றில் வரையறுக்கப்பட்ட குறியீட்டுத் தாக்குதல்கள் மற்றும் முழுமையான ஆட்சி மாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. பொதுவில், புதிய பேச்சுவார்த்தைகளை பரிந்துரைப்பதன் மூலம் மூலம் இராணுவ அச்சுறுத்தல்களை அவர் மாற்றியுள்ளார். பல அமெரிக்க நட்பு நாடுகள் இரானின் தலைமையை அகற்ற முயற்சிப்பது பிராந்தியத்திற்கு பெரும் அபாயங்களைக் கொண்டிருப்பதாக எச்சரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பலர் தங்கள் பாதுகாப்புக்கான சாத்தியமான நன்மைகளைக் காண்கிறார்கள். டெஹ்ரானில் ஆட்சியை மாற்றுவதன் மூலம், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அது ஒரு நாள் அணு ஆயுதங்களைப் பெறும் சாத்தியக்கூறையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. இது, ஹிஸ்புல்லா உட்பட, பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களையும் மேலும் பலவீனப்படுத்தும். இஸ்ரேலின் அல்மா ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, ஹிஸ்புல்லாவிடம் லெபனான் எல்லையில் இன்னும் 25,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளன. இதற்கு மாறாக, சில இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய ஆட்சியை நீடிக்க அனுமதிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதல் அல்லது இரானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் கூட, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பெரிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகிறார்கள். "முழுமையான தீமையை நீங்கள் கையாளும்போது, நீங்கள் வரையறுக்கப்பட்ட முறையில் செயல்படக்கூடாது," என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ள யேஷ் அட்டிட் கட்சியைச் சேர்ந்த மோஷே டூர்-பாஸ் கூறினார். "இஸ்ரேல் மிகவும் வலிமையாக செயல்பட வேண்டும், மேற்கத்திய உலகமும் அவ்வாறு செயல்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்து. இரான் போன்ற நமது மோசமான எதிரிகள் என்று வரும்போது, பெரிய வேறுபாடுகள் இல்லை. அச்சுறுத்தலை நாம் அனைவரும் புரிந்துகொள்கிறோம்." இரானின் பதிலடியால் ஏற்படும் விலைக்கு, ஆட்சியைக் கவிழ்க்காமல் விட்டுவிடும் மற்றொரு மோதல் சுற்று தகுதியானதாக இருக்காது என்று பலர் கூறுகின்றனர். கடந்த ஆண்டு 12 நாட்கள் நீடித்த போரில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, இரான் நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவி பதிலடி கொடுத்தது. அவற்றில் சில, இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி, டெல் அவிவ்வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது மோதி, குறைந்தது 28 பேரைக் கொன்றன. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,12 நாட்கள் நடந்த போரின் போது, சில இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி ஊடுருவின. இஸ்ரேலிய ராணுவம் இன்னும் பல உயிரிழப்புகளைச் சந்திக்கத் தயாராக இருந்தது, ஆனால் டெஹ்ரானின் (இரான்) தற்போதைய அதிகரித்த பாதிப்பு உணர்வு , இன்னும் தீவிரமான எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும். அந்த மோதலிலிருந்து இரான் கற்றுக்கொண்டதாகவும், போர் முன்னேற முன்னேறத் தனது தந்திரங்களை மாற்றிக்கொண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரை ஆண்டிற்குப் பிறகு, இரான் தனது ஏவுகணை இருப்பை மீண்டும் கட்டியெழுப்பி வருகிறது. அமெரிக்கத் தாக்குதல் ஏதேனும் நடந்தால், டெல் அவிவ் "உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத" பதிலடியைச் சந்திக்கும் என்று இரானின் அதி உயர் தலைவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்தார். "ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால், மீண்டும் ஒரு தாக்குதலின் வலியை இஸ்ரேல் அனுபவிக்க நேரிடும் என்று நெதன்யாகு பயப்படுகிறார்," என சிட்ரினோவிக் கூறினார். "ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமானால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார், ஆனால் ஆட்சி மாற்றம் அமெரிக்காவால் மட்டுமே சாத்தியம்." இரானிய ஆட்சியின் இந்தத் தீவிரமான பாதிப்பு நிலையை - 12 நாள் போருக்குப் பிறகு அதன் இராணுவப் பாதுகாப்பு குறைந்துள்ள சூழல், அதன் பிராந்திய நிழற்படைப் படைகள் பலவீனமடைந்துள்ள நிலை மற்றும் உள்நாட்டில் அதன் ஆட்சிக்கு எதிராகப் பரவலான போராட்டங்கள் நடந்து வரும் நிலை - ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்கிறார் கோஹன். "இரான் இப்போது அதன் பலவீனமான நிலையில் உள்ளது - இது மீண்டும் வராத ஒரு வாய்ப்பு," என்று கோஹன் கூறினார். "இதுதான் சரியான நேரம் - இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று நம்பும் மக்கள் பலர் உள்ளனர்." டெல் அவிவில், கடந்த ஜூன் மாதம் இரானிய ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே இன்னும் வசித்து வரும் குடியிருப்பாளர்கள், மற்றொரு மோதலைப் பற்றி ஊகித்து வருகின்றனர். "எங்கள் தலைவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார் நேரியா என்ற இளைஞர். "தாக்குதல் மூலமாகவோ அல்லது பிற வழிகள் மூலமாகவோ, எனக்குத் தெரியாது, ஆனால் ஆட்சியை மாற்றுவதற்கு நாம் நிச்சயமாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குண்டுகளைச் சந்திப்பது இது முதல் முறையல்ல - அது இனிமையானது அல்ல, ஆனால் நீண்ட கால அடிப்படையில் நாம் இங்கே பாதுகாப்பாக உணர இது உதவுமென்றால், நாம் அதைச் சந்தித்துதான் ஆக வேண்டும்." பட மூலாதாரம்,Dave Bull/BBC படக்குறிப்பு,இரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேலியர்கள் ஆதரிப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அருகிலிருந்த ஷானி என்ற இளம் பெண், தான் கலவையான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். "இரானிய மக்கள் - அவர்களில் பலர் - அமெரிக்கா உதவ வேண்டும் என்று விரும்புவதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். "அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். செயல்களுக்கு விளைவுகள் உண்டு." இஸ்ரேலியக் கருத்துக்கணிப்புகள், யூத குடியிருப்பாளர்களில் பெரும்பாலாலோர் இரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தொடர்ந்து காட்டுகின்றன - கடந்த ஆண்டு நடந்த 12 நாள் போருக்குப் பிறகும் இதே நிலைதான். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கான அபாயங்கள் அப்படியே உள்ளன. இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரைச் சுற்றியுள்ள இராணுவ மற்றும் மத குருமார்களின் கூட்டணியில் வெளிப்படையான விரிசல்கள் ஏதுமில்லாத நிலையில், மற்றும் நாட்டில் பிளவுபட்ட எதிர்க்கட்சி இயக்கம் உள்ள நிலையில், அரசு வீழ்ந்தால் இரானின் கட்டுப்பாட்டை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு இளைய வாரிசு, இஸ்ரேலுக்கான பதிலடியில் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் ஒரு உள்நாட்டுப் போரின் குழப்பம் இரானியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஆழமான உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும். மேலும், வான்வழித் தாக்குதல்களால் மட்டுமே பொதுவாக ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதில்லை என்று பல பாதுகாப்புத் துறை உள்விவகார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ள இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் "மிஸ்டர் செக்யூரிட்டி" (பாதுகாப்பு நாயகன்) என்ற தனது உடைந்த பிம்பத்தை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்து வருகிறார். இரானில் ஆட்சி மாற்றம் - அல்லது காமனெயியின் படுகொலை - ஒரு அரசியல் பரிசாக இருக்கும், ஆனால் அது ஒரு அபாயமும் கூட. "இது ஒரு சூதாட்டம், ஆனால் கணக்கிடப்பட்ட ஒன்று," என்கிறார் சிட்ரினோவிக். "காமனெயி தூக்கியெறியப்பட்டதற்கு அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நெதன்யாகு கவலைப்படுவதில்லை. தான் டிரம்புடன் இணைந்து இரானிய ஆட்சியை அழித்ததைக் காட்ட அவர் விரும்புகிறார். அமெரிக்கர்கள் இறுதிவரை வருவார்கள் என்று தெரிந்தால், அவர் எடுக்கத் துணியும் அபாயம் இது. சிக்கலே டிரம்ப் தான்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் நடந்த போராட்டங்கள் இதுவரை ஆயதுல்லா காமனெயியின் ஆட்சியை வீழ்த்தத் தவறிவிட்டன. அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஆனால் இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவதுடன், பிராந்தியத்திலுள்ள அதன் நிழற்படைகளுக்கான ஆதரவை நிறுத்துவது மற்றும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது ஆகிய நிபந்தனைகளை டிரம்ப் விதித்துள்ளார் - இவை அனைத்தும் இரானிய ஆட்சிக்கு 'சிவப்புக் கோடுகளாக' (மறுக்க முடியாத எல்லைகள்) பார்க்கப்படுகின்றன. இஸ்ரேலியத் தலைமை எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கடுமையாக எதிராக உள்ளது, மேலும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பதில் இஸ்ரேலிய ஆய்வாளர்கள் பிளவுபட்டுள்ளனர். வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் ஆகிய இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும், ஆனால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் தான் கருதுவதாக கோஹன் கூறினார். "இரானின் அதி உயர் தலைவர் மற்றும் டிரம்ப் ஆகிய இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது. அவர்களுக்கு உண்மையில் சிவப்புக் கோடுகள் எதுவும் இல்லை. 2013-ல் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, அவை மாறிக் கொண்டே இருந்ததால் நாங்கள் அவற்றை 'இளம் சிவப்புக் கோடுகள்' என்று அழைப்போம்," என்று கோஹன் கூறினார். "இரானை நாம் எப்போதும் தீயவர்களாகப் பேசுகிறோம், ஆனால் அவர்கள் மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள்," என்று அவர் கூறினார். "சூழ்நிலையை மாற்றுவதற்கு, இதுவரை செய்யப்படாத ஒன்றை அவர்கள் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்." "ஆம், சமரசம் செய்துகொள்ளும் திறன் அங்கு உள்ளது, அவர்கள் வட கொரியா அல்ல, ஆனால் இந்த ஆட்சிக்கும் சில சிவப்புக் கோடுகள் உள்ளன," என்று எச்சரித்த சிட்ரினோவிக், ஒரு போரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்று கூறினார், "ஏனெனில் இரானியர்கள் இது தங்கள் வாழ்வா சாவா போராட்டம் என்று நினைப்பார்கள்." டிரம்ப் தனது பேச்சுவார்த்தை நிபந்தனைகளைக் குறைத்து, இரானின் அணுசக்தி திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. டெஹ்ரான் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தேவையான அளவிற்கு நிபந்தனைகள் குறைக்கப்பட்டால், பிராந்தியத்தின் பெரும்பகுதி நிம்மதிப் பெருமூச்சு விடும் - மேலும் இஸ்ரேலில் பலர் மூச்சை அடக்கிக் காத்திருப்பார்கள். இரான் வெளிப்படையான தடையைத் தவிர்க்கும் அதே வேளையில், நடைமுறையில் எந்தவொரு புதிய செயல்பாட்டையும் தற்காலிகமாகத் தடுக்கும் வகையில் செறிவூட்டல் போன்ற விவகாரங்களில் சமரசங்களை உருவாக்குவதற்கான வழிகள் இருப்பதாக கோஹன் கூறுகிறார். "எங்களுக்கும் இரானியர்களுக்கும் உள்ள அத்தியாவசிய வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் விரைவான முடிவுகளை விரும்புகிறோம், ஆனால் இரானியர்களிடம் மிகுந்த பொறுமை உள்ளது," என்று அவர் கூறினார். "அவர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள் இங்கே 2000 ஆண்டுகளாக இருக்கிறோம், அணு ஆயுதம் பெற எங்களுக்கு இன்னும் 30 ஆண்டுகள் தேவைப்பட்டாலும் பரவாயில்லை'." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn40kmk1px0o
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மூலமாக ஒப்பந்தம் செய்து 2.5 லட்சம் முற்பணமும் வழங்கி வேலையை தொடங்கச் சொன்னால் அவர் தொடங்காது காலந்தாழ்த்திக்கொண்டிருந்தார். காலதாமதமாவதால் அதிருப்தி அடைந்த வைத்தியர் தனது கொழும்பு றோயல் கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஊடாக பிரதமர் ஹரிணியின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இப்பிரச்சனையை சொன்னபோது அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு கட்டும்படி கூறியிருக்கிறார். அவ்வாறு தான் இந்த பாடசாலை கட்டப்பட்டது. இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல் இப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த பிரிவில் 30 மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மேலும் 5 லட்சத்தை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வாங்கிவிட்டார். அப்பாவின் தாய் மாமாவின் மகன் தான் இந்த வைத்தியர். 2010 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்தியருடைய அம்மாவின் இறுதிச்சடங்கின் போது அப்பா அவரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தவர். டொக்ரர் ஆறுமுகம் இராசையா நினைவாக அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யும்படி. அதனை ஞாபகம் வைத்திருந்தாரோ என்னவோ இந்த அரும்பணியை செய்து முடித்துள்ளார்.
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா: இலங்கை கடற்படையின் அதிரடி ஏற்பாடுகள்! 06 Feb, 2026 | 04:05 PM யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது. அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களைப் பாதுகாக்க உயிர்காப்பாளர்களை நிறுத்தக்கூடிய இடங்களையும், மருத்துவ வசதிகளை வழங்க தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிப்பதையும் கடற்படை கண்டறிந்து வருவதுடன், கடற்படையின் உதவியுடன் அமைக்கப்பட்ட கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது, மேலும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் சாலைகளை சுத்தம் செய்து வருகிறது. மேலும், இந்த வருடாந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பூசாரிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவு தீவுக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கடற்படையால் மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த வருடாந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பூசாரிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவு தீவுக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கடற்படையால் மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/237999
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
அண்ணை தேடும்போது கீழுள்ளவாறு AI தகவல் போட்டுள்ளது. AI Overview இலங்கையில் குளவி கூடுகளைக் கொளுத்துவது நேரடியாக ஒரு பெரிய குற்றமாகப் பார்க்கப்படாவிட்டாலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தீ மூட்டுவது தண்டனைக்குரியது. குளவிகள் சுற்றுச்சூழலுக்கு நன்மையானவை மற்றும் பயிர் பூச்சிகளை வேட்டையாடுபவை, எனவே அவற்றைக் கலைப்பதற்கு பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றுவது அவசியம் Kalki Online. பாதுகாப்பு முக்கியம்: குளவி கூடுகளைக் கொளுத்துவது பெரும் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கலாம், இது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். பரிந்துரை: கூடுகளை அப்புறப்படுத்தத் தேவைப்பட்டால், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் அல்லது நிபுணர்களின் உதவியுடன், பெரும்பாலும் இரவில் குளவிகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் அகற்றுவது நல்லது, தீயிட்டு கொளுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது. மாங்குளத்தில் குளவி கொட்டியதில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி on Tuesday, January 27, 2026 By Batticaloa முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழைய கொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன. குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.battinews.com/2026/01/5_14.html
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான நிர்வாண படங்கள் - 'பெரும் பிழை' என சாடும் வழக்கறிஞர்கள் படக்குறிப்பு,எப்ஸ்டீன் கட்டுரை தகவல் பெக்கி டேல் மற்றும் மாட் மர்பி பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தணிக்கை செய்யப்படாத நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன. இந்த கோப்புகளை தணிக்கை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அவை இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. இதனால் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஈடுசெய்ய முடியாத" தீங்கு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறிய கோப்புகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியாக சுமார் 40 புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, வார இறுதியில் முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வெளிப்படையாக பேசியது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் படங்கள் முறையாகத் தணிக்கை செய்யப்படும் வரை அந்த வலைதளத்தை தடை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையை விரைந்து சரிசெய்ய நீதித்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக நியூயார்க் நீதிபதி செவ்வாயன்று தெரிவித்தார். "தொழில்நுட்பம் அல்லது மனிதப் பிழையின்" காரணமாக இந்தக் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, இதுகுறித்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை நீதித்துறை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் இது சார்ந்த புதிய புகார்களை ஆய்வு செய்து வருவதாகவும், கூடுதல் தணிக்கை தேவைப்படும் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்த்து வருவதாகவும் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம், முழுமையாக தணிக்கை செய்யப்படாத கோப்புகளை ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) கூறிய போதிலும் கூட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணத்தக்க படங்கள் புதன்கிழமை அன்றும் இணையத்தில் கிடைப்பதை பிபிசி வெரிஃபை கண்டறிந்தது. இது குறித்து நீதித்துறையை அணுகிய பிபிசி, தணிக்கை செய்யப்படாத கோப்புகளின் பெயர்களையும் வழங்கியதுடன், இது பற்றிய கருத்தை கேட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிராட் எட்வர்ட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஏற்பட்டுள்ள சேதம் ஈடுசெய்ய முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார். "பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையின் மிகக் கொடூரமான தருணங்களில் ஒன்றை மீண்டும் பொதுமக்கள் முன் கொண்டுவந்துள்ளது," என்று எப்ஸ்டீனின் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஆஷ்லி ரூப்ரைட் பிபிசியிடம் கூறினார். பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த நான்கு படங்களில், முகம் மற்றும் உடல் தணிக்கை செய்யப்படாத நிலையில் முழுமையாக ஆடை அணியாத இளம்பெண்கள் காணப்பட்டனர். சமூக பிரபலங்கள் பலருடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த ஆதாரங்களுக்காக, வெளியிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோப்புகளில் தேடியபோது இவை கண்டறியப்பட்டன. சிலரது புகைப்படங்கள் ஒரு சில ஆவணங்களில் தணிக்கை செய்யப்பட்டும், வேறு சிலவற்றில் தணிக்கை செய்யப்படாமலும் உள்ளன. ஒரு கோப்பில் ஒரே படத்தின் இரண்டு பதிப்புகள் உள்ளன. அதில் ஒரு பதிப்பில் முகம் கருப்பு நிறக் கட்டத்தால் மறைக்கப்பட்டும், மற்றொன்றில் முகம் முழுமையாகத் தெரியுமாறும் உள்ளது. மற்றொரு வீடியோவில், ஒரு பெண் தன் ஆடையை கழற்றி தனது மார்பகத்தை கேமராவிற்குக் காட்டுவதைப் போல் உள்ளது. கிறிஸ்துமஸ் சமயத்தில் எப்ஸ்டீன் கோப்புகளின் சமீபத்திய தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, பாலியல் ரீதியான புகைப்படங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்களைத் தணிக்கை செய்யும் பணியை நீதித்துறை (DoJ) அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். அமெரிக்க காங்கிரஸ் விதித்த காலக்கெடுவுக்கு முன்னதாக, பேசிய துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான பணிகளுக்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால், கோப்புகள் சரியான நேரத்தில் வெளியிடப்படாது என்று கூறினார். "நாங்கள் வெளியிடப்போகும் ஒவ்வொரு துண்டு காகிதத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர், அவர்களின் பெயர், அடையாளம், அவர்களின் கதை என, பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்தும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறோம்," என்று அவர் அப்போது தெரிவித்தார். இதுமட்டுமின்றி, வெளியிடப்பட்ட கோப்புகளில் உள்ள மருத்துவத் தகவல்கள் மற்றும் சட்ட அறிக்கைகள் மூலமாகவும் பலரது அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. கருவின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் தொடர்பான இரண்டு வீடியோக்களில் ஒருவரின் பெயர் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட நேரம், தேதி மற்றும் அது எடுக்கப்பட்ட இடம் எனக் கருதப்படும் விபரங்களுடன், கருவின் வளர்ச்சிக் காலமும் தெளிவாகத் தெரிந்தது. மற்றொரு ஆவணத்தில், எப்ஸ்டீனிடம் விசாரணை நடத்தப்பட்ட வீடியோ பதிவில், ஒரு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடுவது இடம்பெற்றுள்ளது. இந்தக் கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைப் போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதற்காக, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எங்களுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் ஒருபோதும் பொதுவெளியில் வராதவர்கள், பொதுமக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் இப்போது பொதுப் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன," என்று வழக்கறிஞர்களில் ஒருவரான பிராட் எட்வர்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "இது உண்மையில் மிகப்பெரும் பிழை." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy84vgp0d1o
-
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் ; பொலிஸ் விசாரணை ஆரம்பம் Published By: Digital Desk 3 06 Feb, 2026 | 03:27 PM நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா பகுதியில் பாடசாலை ஒன்றில், தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மாணவிக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக இன்று வெள்ளிக்கிழமை (06) வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். தாக்குதலின் விளைவாக மாணவிக்கு அடிகாயங்கள், உட்காயங்கள் ஏற்பட்டதுடன், கடும் வலியினால் தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி இன்று பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாவது, குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வருவதாக கூறினார். சம்பவ தினத்தன்று, பெற்றோரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கன்னம் மற்றும் செவி பகுதிகளில் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் தலையை பிடித்து மேசையில் மோதச் செய்து, முதுகுப் பகுதியில் முழங்கையால் தாக்கியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டதாகவும், பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதணியுடன் வீடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, சம்பவ விவரங்களை தெரிவித்ததுடன், ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார். இதனையடுத்து, மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர். பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த ஆசிரியர் இதற்கு முன்னரும் பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாகவும், ஏற்கனவே ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237986
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
எமது சுழிபுரம் கிழக்கு கிராமத்தில் 55 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மாடிக்கட்டிடம் அ.மி.த.க பாடசாலையில் திறக்கப்பட்டது.
-
கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!
கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி! 06 Feb, 2026 | 11:11 AM கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தபோது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மோதலின் பின்னர், அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதுடன், அதில் பயணித்த அனைவரும் கடலில் வீழ்ந்தனர். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு கடலோர காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சியோஸ் ஸ்கைலிட்சியோ (Skylitseio) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காயமடைந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுடன் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்களின் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிர்தப்பியவர்கள் கிரீஸ் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலின்படி, குறித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237963
-
புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது
புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது Feb 6, 2026 - 09:30 PM வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlb2mzj0000g356nm8c6opol
-
வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்
வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம் Published By: Digital Desk 3 06 Feb, 2026 | 05:19 PM வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். https://www.virakesari.lk/article/237980 அம்மணிகளே உங்களை நம்பித்தான் எதிர்கால இ.போ.ச இயங்கும் போல! பார்த்து கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.
-
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 பிப்ரவரி 2026, 06:55 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,@actorvijay/X படக்குறிப்பு,2015இல் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது. காசோலை மூலம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு வருமான வரி (TDS) செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரொக்கப் பணத்திற்குச் செலுத்தப்படவில்லை. இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது 5 கோடி ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான வரியைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த ஐந்து கோடி ரூபாய் உள்பட கணக்கில் வராமல் 15 கோடி ரூபாயை பெற்றதாகவும் அதற்கான வரியைச் செலுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 2016 - 17ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் அவரது வருவாய் 35.42 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர் மன்றத்திற்குச் செய்த செலவாக சுமார் 64.71 லட்ச ரூபாயையும் சில சொத்துகளின் மதிப்பு குறைந்ததற்காக 17.81 லட்ச ரூபாயையும் வரி விலக்கிற்காகக் கோரியிருந்தார். ஆனால், வருமான வரித் துறை அதனை ஏற்கவில்லை. 38.25 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டுமென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்தக் கூடுதல் வருவாயை கணக்கில் காட்டியிருக்க மாட்டார் என்றும் கூறியது. இதற்காக அவருக்கு வருமான வரி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்தே விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார். வருமான வரித்துறை தரப்பு கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்துவந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர் வருமான வரிச் சட்டங்களின் படி, சரியான முறையிலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர் வாதாடினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகள் 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாகவே துவங்கியிருக்க வேண்டுமே தவிர 2022 ஜூன் 30 முன்பாக அல்ல என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜனவரி 23ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்து, தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 6) விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvngvxv0wo
-
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர் Feb 6, 2026 - 04:10 PM நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையில், அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தெரிவிக்கையில்: "குறித்த ஆசிரியர் வழமையாகவே மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி எனது பெற்றோரை இழுத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியவர், எனது கன்னம் மற்றும் செவிப்பகுதிகளில் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் எனது தலையைப் பிடித்து மேசையில் மோதியதுடன், முழங்கையால் முதுகுப் பகுதியிலும் பலமாகத் தாக்கினார். வலியின் உச்சக்கட்டத்தால் எனக்குத் தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே நிலையிலேயே நான் இருந்தேன்." என குறிப்பிட்டுள்ளார். பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியர் முன்னரும் பல மாணவர்களை இவ்வாறே மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது. மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நானுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். -நுவரெலியா நிருபர் செ.திவாகரன்- https://adaderanatamil.lk/news/cmlar78ol000a356ngjyrq2g4
-
க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்
க .பொ.த சாதாரண தரப் பரீட்சை; பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகள் தடை! 06 Feb, 2026 | 04:06 PM 2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனமோ அல்லது அரச கல்வி நிறுவனமோ இந்த தடையை மீறி சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள் அலலது கருத்தரங்குகளை நடத்தினால் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று பரீட்சை வினாப்பத்திரம் தொடர்பான சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல், ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல், அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. யாரேனும் ஒருவரோ அல்லது நிறுவனமோ வேறு தரப்பினரோ இக்கட்டளையை கவனத்திற் கொள்ளாமல் செயற்படின், அந்நபர் அல்லது அந்நிறுவனம் அல்லது அத்தரப்பினர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படுவர். யாரேனும் ஒருவரோ நிறுவனமோ தரப்பினரோ இக்கட்டளையை ஏதேனும் விதத்தில் மீறிச் செயற்பட்டால் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ பொலீஸ் தலைமையகத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கோ முறைப்பாடு செய்யமுடியும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/237979
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
பெற்றோர், பழைய மாணவர் இணைந்தே தீர்வு கண்டிருக்கலாம். குளவிக் கூடு கொழுத்த எல்லாம் வலயத்தின் அனுமதி தேவையா?!
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
'100 ரன் வித்தியாசம்' - வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன் பட மூலாதாரம்,Getty Images 6 பிப்ரவரி 2026, 13:25 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பட மூலாதாரம்,Getty Images நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை இருப்பினும், இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆரோன் ஜார்ஜ் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே. ஆனால் பின்னர், தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடி, 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 55 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இருப்பினும், கேப்டன் ஆயுஷ் மத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும், வைபவ் தனது சதத்தை எட்டிய பிறகு தனது ரன் குவிப்பு வேகத்தை அதிகரித்தார். வைபவ் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்கள் உட்பட ஒரு அபாரமான இன்னிங்ஸுடன் ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார். வெந்தாத் திரிவேதி 32 ரன்கள் எடுத்தார், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக, அபிக்யான் குண்டு 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார், கனிஷ்க் செளஹான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை இங்கிலாந்துக்கு முன்னால் வைத்தது. பட மூலாதாரம்,Getty Images இங்கிலாந்து இன்னிங்ஸ் இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் ஜோசப் மூர்ஸ் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பின்னர் பென் டாக்கின்ஸ் 66 ரன்களும் பென் மேயஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து அணி வெறும் 177 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், காலேப் பால்க்னர் 67 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 115 ரன்கள் எடுத்தார். பால்க்னருக்கு ஆதரவாக ஜேம்ஸ் மின்டோ 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இங்கிலாந்து 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பாக அம்ப்ரிஸ் சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒன்பது ஓவர்களில் 56 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர, கனிஷ்க் செளஹான் மற்றும் தீபேஷ் தேவ்வர்தன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,Getty Images வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் வீரர்கள் "14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை." ''குழந்தை போன்ற முகம், ஆனால் அபாரமான வலிமை" ''இது குழந்தையல்ல, நெருப்பு" இவை, இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி சமூக ஊடகங்களில் குவிந்த எண்ணற்ற கருத்துகளில் சில. வெள்ளிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தனது சாதனையால் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் அவர் சாதனை படைத்துள்ளார். அவரது சிக்ஸர்களும், தோள்களின் வலிமையும் கிரிக்கெட் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தின. கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே எக்ஸ் தளத்தில், "இன்று நான் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பையன், அவன் ஒரு சிறுவன்தான், ஆனால் உண்மையிலேயே அற்புதமானவன் " என்று எழுதியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், "இன்று அவர் உண்மையிலேயே சூரியனைப் போல பேட்டிங் செய்தார். வேகமானவர், திகைப்பூட்டுபவர் மற்றும் யாராலும் தடுக்க முடியாதவர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைத்தையும் முயற்சித்தனர், ஆனால் சூரியனை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டார். "வைபவ் சூர்யவன்ஷியிடமிருந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸ் கிடைத்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தது உண்மையிலேயே அசாதாரணமானது. அவரது நோக்கம், வேகம் மற்றும் டைமிங் நாள் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது" என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பதிவிட்டார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், "வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் சிறப்பு வாய்ந்தவர் என்று தெரியும். இன்று அவர் அதை மீண்டும் நிரூபித்துள்ளார். 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உட்பட 80 பந்துகளில் 175 ரன்கள். 150 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகக் கிடைத்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். நீரஜ் என்ற நபர், "14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,Ashley Allen-ICC/ICC via Getty Images 2025 ஆம் ஆண்டில் வெளிப்பட்ட அபார திறன் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இந்த இன்னிங்ஸில், வைபவ் 14 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசினார். டிசம்பர் மாதத்தில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் மகாராஷ்டிராவிற்கு எதிராக வைபவ் ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். அவர் 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சையத் முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த மிக இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். 2025-ல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளை அடித்தார். பட மூலாதாரம்,Getty Images ஐபிஎல்லில் சிறந்து விளங்கிய சூர்யவன்ஷி 2025 ஏப்ரல் 28 ஆம் தேதி, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு முக்கியமான நாளாக இருந்தது. அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 11 சிக்ஸர்களையும் ஏழு பவுண்டரிகளையும் பதிவு செய்தார். அந்த இன்னிங்ஸ் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அவரது அசாதாரண திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. கிரிக்கெட் உலகம் அவரது ஆட்டத்தை வியப்புடன் பார்த்தது. அவரிடம் இருந்து இத்தகைய திறமை வெளிப்பட்டதை யாராலும் நம்ப முடியவில்லை. ரஷீத் கான், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள். அதன் பிறகு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 40 ரன்களும், பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களும் எடுத்து தனது ஆட்டத்தை மேலும் உறுதிப்படுத்தினார். ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79r91zyr9go
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் “இலங்கை” என 188 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:50 PM அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தின் (U.S. Department of Justice) இணையதளத்தில் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில், ‘Sri Lanka’ (இலங்கை) என்ற சொல் 188 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக ஆவணங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. இந்த ஆவணக் காப்பகத் தரவுத்தளத்தில் ‘Sri Lanka’ என்ற சொல்லைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பல்வேறு தரவுத் தொகுதிகளில் இந்தக் குறிப்புகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக மின்னஞ்சல்கள், பயணம் தொடர்பான தகவல்கள், தொடர்புப் பதிவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் துணைத் தொடர்புகள் போன்றவற்றில் இவை இடம்பெற்றுள்ளன. ஆவணங்களில் காணப்படும் பெரும்பாலான இலங்கை தொடர்பான குறிப்புகள், குற்றச்செயல்கள் அல்லது இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என ஆய்வு தெரிவிக்கிறது. மாறாக, இலங்கைக்கு அல்லது இலங்கையிலிருந்து பயணம் செய்த தகவல்கள், வசிப்பிடம் குறித்த குறிப்புகள், கல்வி அல்லது தொழில்சார் பின்னணித் தகவல்கள், நேர மண்டலம் (Time Zone) தொடர்பான விவரங்கள், தனிப்பட்ட அல்லது தொழில்முறை உரையாடல்களில் இடம்பெற்ற சாமான்ய குறிப்புகள் போன்ற தற்செயலான சூழல்களிலேயே ‘இலங்கை’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில ஆவணங்களில், “இலங்கையில் இருந்தேன்”, “இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” போன்ற சாதாரண தகவல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், சில நபர்களின் பிறப்பிடம், வசிப்பிடம் அல்லது தற்காலிக தங்குமிடமாகவும் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. இந்த தேடல் முடிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஜெஃப்ரி எப்ஸ்டீனின் செயல்பாடுகளின் மையமாக இலங்கை இருந்ததாக எந்த சான்றுகளும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளில் பல நபர்கள் தொடர்பான உரையாடல்களில், இலங்கை என்பது வெறும் கடந்து செல்லும் குறிப்பாகவே (passing reference) இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த எப்ஸ்டீன் ஆவணங்களில், சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் தொடர்பாடல்கள் பெருமளவில் உள்ளன. இதனால், ஆவணங்களில் இடம்பெறும் பெயர்கள் அல்லது இடங்கள் தவறான செயற்பாடுகளை குறிக்காது என்றும், அவற்றை முழுமையான சூழ்நிலையுடன் (context) புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வலையமைப்பு மற்றும் அவரது கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை ஆராயும் பணியில், உலகளாவிய ஊடக நிறுவனங்கள் இந்த ஆவணக் காப்பகத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலதிக தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237900
-
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு
தூய்மை பணியாளர் பத்மாவிற்கு வாழ்த்துகள்.
-
மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா
மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது, அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார் வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் லிசெல் லீ மற்றும் ஷாஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் ஷாஃபாலி வெர்மா, அருந்ததி ரெட்டி பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி வந்த லிசெல் லீ, 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அவர் 30 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதன் பின்னர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்- லாரா வால்வார்ட் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 37 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சினெல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஆர்சிபி. ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். ஆர்சிபியின் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். 2வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து கிரேஸ் ஆட்டமிழக்க ஆர்சிபி அணிக்கு அதுவொரு அதிர்ச்சியான தொடக்கமாகவே இருந்தது. அடுத்து ஜார்ஜியா வோல் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதை கவனத்தில் கொண்டு, ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி மிகச்சிறப்பாகவே விளையாடியது. 2வது ஓவரில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆர்சிபி அணி, 2வது விக்கெட்டை 16வது ஓவரில் தான் இழந்தது. ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். 54 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த ஜார்ஜியா வோல், 16வது ஓவரில் மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார். 41 பந்துகளில், 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, 18வது ஓவரில் சினெல் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது. மகளிர் பிரீமியர் லீக்கின் நான்கு சீசன்களிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, இருப்பினும் அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நெருங்கிய தோழிகளாகக் கருதப்படுகிறார்கள், இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். இருவரும் தங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள், ஆனால் தனது அணியை முதல் முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற ஜெமிமாவின் கனவை அவரது தோழி ஸ்மிருதி மந்தனா தகர்த்துவிட்டார். வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "இறுதிப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்கிறோம் எனும்போது, நிச்சயமாக ஒரு அழுத்தத்தை உணர்ந்தோம். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்ச் இது. எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆர்சிபி ரசிகர்கள் தான் எங்களோடு எப்போதும் உடன் நிற்கிறார்கள், இதுபோல ஒரு ரசிகர் கூட்டத்தை பார்க்க முடியாது. இந்த வெற்றி அவர்களுக்கானது" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7ylx0ymyxo
-
அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு
அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு 05 Feb, 2026 | 05:45 PM (நா.தனுஜா) பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பதிவான தன்னிச்சையான தடுத்துவைப்புகள், பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்குக் காரணமாக அமைந்த கட்டமைப்பு ரீதியான நிலைவரங்கள் இன்னமும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளினாலேயே காணி உரிமைகள் மற்றும் மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன. அதேவேளை 1983 - 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது. அதேபோன்று சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதனால், பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரச நிதியின் முறைகேடான பயன்பாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்ததாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தத்தில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக்குண்டுத்தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது. இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும், அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை. அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அரசு உடந்தையாக செயற்பட்டதாக சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரித்திருப்பினும், அத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்தமையானது மீறல்கள் தொடர்வதற்கு இடமளித்தது. அத்தோடு மனிதப்புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை. மேலும் நீண்டகால யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும் வருகின்றனர். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237930
-
புத்தளம் - மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்
புத்தளம்-மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன் 05 Feb, 2026 | 05:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புத்தளம் -மன்னார் வீதியில் பாரிய அணை ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அந்த பாதை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தவறான தீர்மானத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திவிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புத்தளம் -மன்னார் வீதி 100 வருடம் பழைமைவாய்ந்த வீதி அதிகாரசபைக்கு சொந்தமானதாகும். நான் அமைச்சராக இருந்தபோது அந்த பாதையை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தேன். என்றாலும் காலப்போக்கில் இந்த பகுதியில் இருக்கும் ஒருசில சிங்கள மக்கள் அந்த பாதையை மூடிவிடுமாறு தெரிவித்து வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில் பிரதிவாதியாக வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், விடயத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அந்த பிரதேச அமைச்சர் என்றவகையில் எனது பெயரும் தெரிவிக்கப்பட்டிருந்தது.நாங்கள் எல்லோரும் அந்த வழக்குக்கு முகம்கொடுத்துவந்தாேம். மஹிந்த ராஜபக்ஷ் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்த பாதை பொது மக்கள் பயன்படுத்திய பாதை அதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அன்று வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், வீதி அதிகாரசபை இருந்தன. கோட்டாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் அந்த பாதையில் பயணிக்க முடியாமல் இருந்ததால் அந்த பாதை மூடப்பட்டது. இந்த பாதை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிக்க 100 கிலோ மீட்டர் குறைவாகும். மன்னாரில் இருந்து புத்தளத்துக்கு வருகின்றபோது 100 கிலோ மீட்டர் குறைவு. இவ்வாறான நிலையில் இந்த பாதையை மூடிவிடுவதற்கு எந்த ஜனாதிபதிகளின் காலத்திலும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இருக்கும் வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம் நீதிமன்றத்துக்கு சென்று, வழக்கு தொடுத்த துராேகிகளுடன் இணைந்து, நாங்கள் இந்த வழக்குகளுடன் உடன்படுகிறோம். அதனால் இந்த வழக்கை விடுவியுங்கள் என நீதிமன்றில் சென்று தெரிவித்திருக்கிறது. இது நியாயமான நடவடிக்கையல்ல. முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இனவாதமில்லாத அரசாங்கம் என்றே நாங்கள் தெரிவித்து வருகிறோம். அப்படிப்பட்ட அரசாங்கம் இந்த பாதையை நிரந்தமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றிருந்தால், அந்த துராேகத்தனத்தை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அநுரகுமார திஸாநாயக்க அன்று மன்னாருக்கு வந்து, தான் ஜனாதிபதியாக தெரிவானால் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிடுவதாக தெரிவித்திருந்தார். இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான பாதையல்ல. இந்த நாட்டுக்கான பாதை. விலங்குகளை பாதுகாப்பதாக தெரிவித்து மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கக்கூடாது. நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. எங்களது மண்ணுக்கு செல்வதற்கான பாதையை திறந்து தருமாறே கேட்கிறேம். அரசாங்கத்தில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இரு்கிறீர்கள். தமிழ், முஸ்லிம் மக்களை நாங்கள் பார்ப்போம் என்று சொல்கிறீர்கள். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கான வரப்பிரசாதமே இந்த பாதை. அதனால் இந்த பாதைய மூடிவிட எடுத்த முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237920
-
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு
இந்தியாவிலிருந்து கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன 10 பெய்லி பாலத்தொகுதிகள் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 06:36 PM 'தித்வா' சூறாவளியினால் வீதிப்போக்குவரத்து சேவைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து, அதனை சீரமைக்கும் நோக்கில் இந்தியா வழங்கிவரும் உதவிகளின் நீட்சியாக, அடுத்தகட்டமாக அனுப்பிவைக்கப்பட்ட 10 பெய்லி பாலத்தொகுதிகள் இன்று வியாழக்கிழமை (5) கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன. அவை இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவினால் துறைமுக மற்றும் விமானசேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/237935