Everything posted by ஏராளன்
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
விசேடதேவையுடையவர்களுக்கு மட்டுமல்ல முதியவர்கள், சிறுவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுப்போக்குவரத்து முழுவதுமே (பேருந்து, தொடரூந்து) விசேடதேவையுடையவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் எல்லோரும் இலகுவில் ஏறி இறங்கக்கூடிய வகையில் தாழ்தள/சமதள அணுகலை உடையதாக இருக்கவேண்டும்.
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்! Feb 10, 2026 - 03:23 PM 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlgf9akv0002356njssbopgi
-
இரகசிய அணு ஆயுத சோதனைகள்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு
இரகசிய அணு ஆயுத சோதனைகள் ; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு Published By: Digital Desk 3 10 Feb, 2026 | 02:30 PM இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்கா தனது சொந்த அணு ஆயுதச் சோதனைகளைத் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சாக்குப்போக்குகளை கூறிவருவதாக சீனா விமர்சித்துள்ளது. ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடந்த சோதனைகள் உட்பட, சீனா இந்த சோதனைகளை நடத்தியதாகவும், மேலும் அதிக வினைத்திறன் மிக்க சோதனைகளை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை செயலாளர் தாமஸ் டினானோ குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அமெரிக்கா சாக்குப்போக்குகளை புனைய முயற்சிக்கிறது. அமெரிக்கா அதன் பொறுப்பற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அக்டோபரில், ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்து வருகின்றன. எனவே அமெரிக்காவும் அவர்களுக்குச் சமமான அளவில் அணு ஆயுதச் சோதனைகளைத் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டிற்காக இருந்த கடைசி முக்கிய ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்', கடந்த வியாழக்கிழமையுடன் காலாவதியானது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், சீனா-ரஷ்யா-அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என சீனா ஏற்கனவே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் ஒரு புதிய அணு ஆயுதப் உருவாகுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. https://www.virakesari.lk/article/238278
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் பிரகாசிக்க நமிபியாவை இலகுவாக வெற்றிகொண்டது நெதர்லாந்து 10 Feb, 2026 | 03:46 PM (நெவில் அன்தனி) நெதர்லாந்துக்கும் நமிபியாவுக்கும் இடையில் டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நெதர்லாந்து 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது. இந்த வருட ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானுக்கு சவால் விடுத்து தோல்வி அடைந்த நெதர்லாந்துக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 26 வயதான பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்கள், லோகன் வென் பீக்கின் துல்லியமான பந்துவீச்சு என்பன நெதர்லாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்தப் போட்டி முடிவு எத்தகையதாக இருந்தாலும் இரண்டு அணியினரும் 150 ஓட்டங்களுக்கு மேற்பட்ட மொத்த எண்ணிக்கையைப் பெற்றமை விசேட அம்சமாகும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. நமிபியா சார்பாக நால்வர் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் லொவ்டி-ஈட்டன் மாத்திரமே கணிசமான எண்ணிக்கையைப் பெற்றார். அவர்களைவிட மற்றைய ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். ஜான் ப்ரைலின்க் (30), ஜான் நிக்கல் லொவ்டி-ஈட்டன் (42) ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேத்துடன் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர். தொடர்ந்து அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 18 ஓட்டங்களையும் ஜே.ஜே. ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லோகன் வென் பீக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் நெதர்லாந்தின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'தௌத் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் மைக்கல் லெவிட் 28 ஓட்டங்களைப் பெற்றார். (46 - 2 விக்.) இதனைத் தொடர்ந்து பாஸ் டி லீட், கொலின் அக்கமன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கொலின் அக்கமன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் பாஸ் டி லீட், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (18 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். பாஸ் டி லீட் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: பாஸ் டி லீட். https://www.virakesari.lk/article/238321
-
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது Feb 10, 2026 - 10:53 AM உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34
-
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:49 AM திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார். அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர். தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238270
-
சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்
சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:45 AM (நா.தனுஜா) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர். அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன. அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார். இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது. இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்குப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார். அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது. அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238269
-
ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!
ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! Feb 10, 2026 - 08:50 AM கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlg18hlu0003356n122qorhm
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கனடாவுடனான போட்டியில் தென் ஆபிரிக்கா 57 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 09 Feb, 2026 | 11:47 PM (நெவில் அன்தனி) அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவை தனது ஆரம்பப் போட்டியில் எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா 57 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஏய்டன் மார்க்ராம் குவித்த அரைச் சதம், லுங்கி நிகிடி பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன. கனடா சார்பாக தனித்து போராடிய நவ்நீத் தாலிவல் அரைச் சதம் பெற்று பலத்த பாராட்டைப் பெற்றார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் அரைச் சதம் குவித்ததுடன் தனது ஆரம்ப ஜோடி குவின்டன் டி கொக்குடன் முதலாவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தர்ர். குவின்டன் டி கொக் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து 33 ஓட்டங்களைப் பெற்ற ரெயான் ரிக்ல்டனுடன் இரண்டாவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை ஏய்டன் மார்க்ராம் பகிர்ந்தார். மார்க்ராம் 32 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். ஏய்டன் மார்க்ராமின் மிகவும் கடினமான பிடியை இடதுபுறமாகத் தாவி டிலொன் ஹேலிகர் பிடித்த விதம் முழு அரங்கையும பிரமிப்பில் ஆழ்த்தியது. அடுத்து களம் புகுந்த டிவோல்ட் ப்ரவிஸ் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். ஆனால், டேவிட் மில்லர், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர். டேவிட் மில்லர் 23 பந்துகளில் ஒரு பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடனும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 214 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு மத்தியிலும் 20 ஓவர்களையும் தாக்குப் பிடித்த கனடா சர்வதேச ரி20 அரங்கில் தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது. லுங்கி நிகிடி தனது முதல் பந்தில் அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வாவை ஆட்டம் இழக்கச் செய்ததுடன் 3ஆவது ஓவரில் யுவ்ராஜ் சம்ரா (12), நிக்கலஸ் கேர்ட்டன் (4) ஆகியோரை களம் விட்டகழச் செய்து கனடாவை திணறவைத்தார். ஆனால், நவ்நீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர். ஹார்ஷ் தக்கர் 29 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து சாத் பின் ஸபார் 11 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (133 - 6 விக்.) மறுபக்கத்தில் மூன்றாம் இலக்க வீரர் நவ்நீத் தாலிவல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 49 பந்துகளில் 7 பவண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்று எட்டாவதாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் லுங்கி நிகிடி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: லுங்கி நிகிடி https://www.virakesari.lk/article/238262
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு Feb 10, 2026 - 06:33 AM பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது. அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வேனை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போதும் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வேனை நிறுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த வேனின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlfwcg2k0001356n42mmgnrq
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா, சுருக்கமா வைக்கலாம் என்றால் ரசோமா(ரசோதரன்+ஒசாமா) சிலையடி என்று வைக்கலாம்!
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள் Published By: Vishnu 09 Feb, 2026 | 08:17 PM நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/238259
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் - அகழ்வுப் பணிகள் மார்ச்சில்! Published By: Vishnu 09 Feb, 2026 | 07:02 PM செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை (09) நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால் அடுத்த கட்ட அகழ்வுபணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றையதினம் சென்று பார்வையிட்டனர். மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால் இவ்வாண்டுக்கு புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியினை மீள பெற வேண்டியுள்ளமையால் புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/238256
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நிறைவு பெற்றது. வெள்ளை அடிக்க வேண்டும். வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி வெட்டிக் கட்டும் செலவு விபரம். @goshan_che அண்ணை, @வாத்தியார் அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, பரராஜசிங்கம் ஐயாவிற்கு நாம் ஒத்துக்கொண்ட மிகுதி 50000 ரூபாவை வழங்கட்டுமா? பொன்னாலை வேலைகள் சீலனுடைய தாமதத்தால் (வைத்தியசாலையில் நெருங்கிய உறவினர் இருந்ததால்) பிந்துகிறது. நாளை எஞ்சியுள்ள 3 பைக்கற், குறைப் பைக்கற் சீமந்தில் கல் அறுப்பதாக கூறினார்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஓமானை வீழ்த்தி அணிகள் நிலையில் இலங்கையை முந்தியது ஸிம்பாப்வே Published By: Vishnu 09 Feb, 2026 | 07:33 PM (நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஸிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேகம் அடிப்படையில் இலங்கையை முந்திக்கொண்டு ஸிம்பாப்வே முதலிடத்தில் இருக்கிறது. ப்ளெசிங் முஸராபனி, ரிச்சர்ட் எங்கரவா, ப்றட் இவான்ஸ் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஸிம்பாப்வே இலகுவாக வெற்றி பெற வழிவகுத்தனர். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதல் ஐந்து வீரர்களில் இருவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததுடன் மற்றைய மூவரும் 5 ஓட்டங்களுக்கு அப்பால் பெறவில்லை. ஸிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் ஓமான் சார்பாக விநாயக் ஷுக்லா (28), சுபியான் மெஹ்மூத் (25), நதீம் கான் (20) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். சுபியான் மெஹ்மூத், விநாயக் ஷுக்லா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் ஓமானின் நிலைமை இதைவிட மோசமாகி இருக்கும். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு 104 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் ஸிம்பாப்வேயின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர்களில் ஒருவரான டியொன் மயர்ஸ் (0), தடிவனாஷே மாருமணி (21) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். மற்றைய ஆரம்ப வீரர் ப்றயன் பெனெட், ப்றெண்டன் டெய்லர் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை அண்மிக்க உதவினர். எனினும் அவர்கள் இருவரும் 68 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ப்றெண்டன் டெய்லர் உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். ஓட்டங்கள் பெறுகையில் அவர் நொண்டியவாறு ஓடியதை அவதானிக்க முடிந்தது. ப்றெண்டன் டெய்லர் 31 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஓட்டங்களை ஸிம்பாப்வெ சிரமப்படாமல் பெற்றது. ப்றயன் பெனெட் 48 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகன்: ப்ளெசிங் முஸராபனி https://www.virakesari.lk/article/238257
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
எப்ஸ்டீன் இரகசிய ஆவணங்களில் 1,005 முறை இடம்பெற்றுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெயர் Published By: Digital Desk 3 09 Feb, 2026 | 04:45 PM மறைந்த அமெரிக்க பணக்காரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல மில்லியன் பக்கங்கள் கொண்ட இரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் உயர் அதிகாரிகளுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள 35 இலட்சம் பக்கங்கள் கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் விளாடிமிர் புட்டின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது. ரஷ்யா குறித்த குறிப்புகள் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்றன. எப்ஸ்டீன் பலமுறை புட்டினைச் சந்திக்க முயற்சி செய்துள்ளதும், அதற்காக ஐரோப்பிய அரசியல்வாதிகளின் உதவியை நாடியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இருவரும் நேரில் சந்தித்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஐநா-வுக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கினுடன் (Vitaly Churkin) எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சுர்கினின் மகனுக்கு நியூயோர்க்கில் வேலை வாங்கித் தரவும் அவர் முன்வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு மின்னஞ்சல் ஒன்றில் "சுர்கின் ஒரு சிறந்த நபர், எங்களுக்கிடையிலான உரையாடலுக்குப் பின்னர் அவர் ட்ரம்ப் பற்றி நன்கு புரிந்து கொண்டார்" என எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். எப்ஸ்டீன் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இளம்பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததும், அவர்களை உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். "இந்த விபரீத பாலியல் ஊழல் வழக்கில் ரஷ்ய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எப்ஸ்டீன் ரஷ்யாவின் 'உளவாளியாக' செயல்பட்டாரா என்பது தொடர்பில் போலந்து அரசு விரிவான விசாரணை நடத்தும்." இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரெம்ளின் மாளிகை ஊடகத் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், "எப்ஸ்டீன் ரஷ்ய உளவுத்துறையின் சொத்து என்ற வாதத்தை நகைச்சுவையாகக் கூட எடுத்துக்கொள்ள முடியாது; இது நேரத்தை வீணடிக்கும் செயல்" என விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டீன், இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2019 இல் கைது செய்யப்பட்டார். விசாரணை நிலுவையில் இருந்தபோதே நியூயோர்க் சிறையில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது நட்பு வட்டத்தில் உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் வர்த்தகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238233
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:38 PM செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (09) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும், மேலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், குறித்த இடத்தை ஆய்வு செய்த நீதவான் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் திகதி நடத்தவும், அதேநாளில் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான திகதியை நிர்ணயிக்கவும் உத்தரவிட்டார். இதேவேளை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவு மதிப்பீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். https://www.virakesari.lk/article/238231
-
பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞர் பலி!
பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:03 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/238219
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
உலகக் கிண்ண அறிமுக அணி இத்தாலியை இலகுவாக வெற்றிகொண்டது ஸ்கொட்லாந்து; இத்தாலி அணியில் இலங்கை வம்சாவளி கிரிஷான் 09 Feb, 2026 | 05:02 PM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இத்தாலியை எதிர்த்தாடிய ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. தமது அணியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்து பங்களாதேஷ் அணியை இந்த உலகக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விலக்கிக்கொண்டதை அடுத்து அவ்வணிக்கு பதிலாக ஐசிசியினால் சி குழுவில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய பிராந்திய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இத்தாலியிடம் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து அந்தத் தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ், ப்றண்டன் மெக்முலென் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் மைக்கல் லீஸ்க் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ஸ்கொட்லாந்தின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன. இதேவேளை, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் இத்தாலி அணித் தலைவர் வெய்ன் மெட்சன் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நேரிட்டது. இது இத்தாலி அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற சாதனையை ஸ்கொட்லாந்து படைத்தது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 83 பந்துகளில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோர்ஜ் மன்சே 54 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மைக்கல் ஜொன்ஸ் 37 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ப்றெண்டன் மெக்முலென், அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலபபடுத்தினர். ப்றெண்டன் மெக்முலென் 18 பந்துகளில் 4 சிக்ஸ்கள் உட்பட 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரிச்சி பெறிங்டன் 15 ஓட்டங்களைப் பெற்றார். மைக்கல் லீஸ்க் 5 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 208 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் ஜஸ்டின் மொஸ்கா (0) ஆட்டம் இழந்த பின்னர் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஆனால் மற்றையவர்கள் எல்லோரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றார். அன்தனி மொஸ்கா (13), ஜோன் - ஜோன் ட்ரவோ மட்ஸ் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (40 - 3 விக்.) தொடர்ந்து ஹெரி மனென்டி (37), பென் மனென்டி (52) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய 5 விக்கெட்கள் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. இந்தப் போட்டியில் இத்தாலி சார்பாக இலங்கை வம்சாவளி வீரரான கிரிஷான் ப்ரியன்த பெர்னாண்டோ கலுகமகே விளையாடியமை விசேட அம்சமாகும். அவர் ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238239
-
ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவான தகாய்ச்சிக்கு ட்ரம்ப் வாழ்த்து 09 Feb, 2026 | 12:22 PM “ஜப்பானில் நடந்த இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்துக்கு மிக முக்கியமான ஒன்று. தகாய்ச்சி ஏற்கெனவே வலிமையான, சக்தி படைத்தவர், அறிவாற்றல் கொண்ட தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்” என ஜப்பான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சானே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை உண்மையாக நேசிப்பவர் தகாய்ச்சி என்றும் கூறிய ட்ரம்ப், எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெள்ளை மாளிகையில் தகாய்ச்சியை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டில் நேற்று (8) நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி (Liberal Democrat Party) 316 இடங்களைப் பெற்று, அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சானே தகைச்சி (Sanae Takaichi), அதிக வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அடைந்திருக்கிறார். இந்நிலையில், தகாய்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ட்ரம்ப், அண்மையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு தகாய்ச்சியின் நிர்வாகத் திறமையையும் தலைமைப் பண்பையும் கண்டு ட்ரம்ப் பாராட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/238205
-
வானிலை: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர்
தித்வா சூறாவளி பாதிப்புகள்: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் 09 Feb, 2026 | 09:40 AM (நமது நிருபர்) தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார். அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்புத் தேவைகளுக்கான நிதி கணக்கீடு மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் இயங்கும் எட்டு உபகுழுக்களில் 'அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டுக் குழுவே' முதன்மையானது. இந்தக் குழுவின் தலைமையின் கீழ் ஏனைய குழுக்கள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், 'மீளக் கட்டியெழுப்பும் இலங்கை' திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு இந்த மதிப்பீடு மிக முக்கியமானது. தித்வா புயலால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய அதிகாரிகள் முறையாகப் பகுப்பாய்வு செய்வது அவசியம். அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நீண்டகால மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புக்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/238185
-
இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு!
இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு! 09 Feb, 2026 | 09:11 AM நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரியில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் மீதான வன்முறைகள், பலாத்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238182
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
கிளிண்டன் முதல் மஸ்க் வரை: எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்கள் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இடமிருந்து வலமாக : ஈலோன் மஸ்க், பில் கேட்ஸ், சாரா பெர்குசன் மற்றும் எஹுட் பராக் கட்டுரை தகவல் பிராண்டன் ட்ரெனான் 8 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாக கூறப்படும் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்களின் பட்டியல் தற்போது நீண்டுள்ளது. நிதியாளரான ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த விசாரணையிலிருந்து, அமெரிக்க அரசாங்கம் மில்லியன் கணக்கான புதிய கோப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இந்த ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பது, அவர் தவறான செயலில் ஈடுபட்டிருப்பார் என்பதைக் குறிக்கவில்லை. முன்பு வெளியிடப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்ற பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஈலோன் மஸ்க் இந்த ஆவணங்களில், எப்ஸ்டீன் ஏற்பாடு செய்ததாகக் கருதப்படும் பயணத் திட்டங்கள் குறித்து, அவருக்கும் தொழில்நுட்ப பில்லியனர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், தான் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று மஸ்க் கூறியுள்ளார். நவம்பர் 2012-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் மஸ்க், "உங்களது தீவில் எந்த பகல்/இரவில் கொண்டாட்டமான பார்ட்டி நடக்கும்?" என்று எழுதியுள்ளார். அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில், "செயின்ட் பார்ட்ஸ் அல்லது வேறு எங்காவது பார்ட்டிகளில் கலந்துகொண்டு உற்சாகமாக இருக்க விரும்புகிறேன்" என்று எழுதியுள்ள அவர், "அமைதியான தீவு அனுபவம்" தனக்கு வேண்டியதற்கு முற்றிலும் எதிர்மாறானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பதில்: இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனவரி மாதம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மஸ்க், இந்த மின்னஞ்சல்கள் தனது "பெயரைக் கெடுக்க" பயன்படுத்தப்படலாம் எனக் கூறினார். ஆனால், "எப்ஸ்டீனுடன் இணைந்து கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள்" தண்டிக்கப்படுவதில் தான் அதிக அக்கறை காட்டுவதாக அவர் தெரிவித்தார். பில் கேட்ஸ் 18 ஜூலை 2013 தேதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் எழுதப்பட்டது போல் உள்ளன. ஆனால் அவை உண்மையானவையா அல்லது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸிற்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதில் ஒரு மின்னஞ்சல், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து விலகும் கடிதம் போல எழுதப்பட்டுள்ளது. "ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க", கேட்ஸிற்குத் தேவையான மருந்துகளைத் திரட்ட வேண்டியிருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. என்பிஆர்-க்கு அளித்த பேட்டியில், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, வெளியான இந்த ஆவணங்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்களை நினைவூட்டியதாக கூறினார். "என்னால், என் சொந்த சோகத்தை ஒதுக்கி வைத்து, அந்த இளம் பெண்களை பார்த்து, கடவுளே, அவர்களுக்கு இப்படியெல்லாம் எப்படி நடந்தது என்று கேட்க முடிகிறது," என அவர் தெரிவித்தார். மேலும், "குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை, நான் வாழ்க்கையில் முன்னேறிச் சென்றுவிட்டேன். இப்போது பெண்களாக வளர்ந்திருக்கும் அவர்களுக்கு ஏதேனும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். பதில்: கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில்,"ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள, அதிருப்தி அடைந்த, உண்மையற்ற ஒருவரின் இந்தக் கூற்றுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முற்றிலும் தவறானவை"என்றார். டொனால்ட் டிரம்ப் புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபரின் பெயர் நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், எஃப்.பி.ஐ கடந்த ஆண்டு தயாரித்த பட்டியலும் உள்ளது. அந்த பட்டியலில், தேசிய அச்சுறுத்தல் செயல்பாட்டு மையத் தகவல் வரிசைக்கு, டிரம்ப் மீது அழைப்பாளர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல, அந்த முகமையால் பெறப்பட்ட சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும், ஆதாரங்கள் ஏதுமின்றி கூறப்பட்டவை என்றும் தெரிகிறது. டிரம்ப், எப்ஸ்டீன் மற்றும் பிற முக்கிய நபர்களுக்கு எதிரான ஏராளமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பதில்: எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். எப்ஸ்டீனுடனான தொடர்பை பல தசாப்தங்களுக்கு முன்பே துண்டித்துவிட்டதாக அவர் கூறுகிறார். மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் டிரம்ப் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில், தரையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் மேல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-கைகளையும், முழங்கால்களையும் ஊன்றி வின்ட்சர் இருப்பது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டு படங்களில், முன்னாள் இளவரசர் அடையாளம் தெரியாத மற்றும் முழுமையாக ஆடை அணிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியைத் தொடுவது போல் காணப்படுகிறார். மற்றொரு படம் அவர் கேமராவை நேரடியாக உற்று நோக்குவதைக் காட்டுகிறது. இந்தப் புகைப்படங்களுக்கான எந்தப் பின்னணித் தகவலும் வழங்கப்படவில்லை. இவை எப்போது, எங்கே எடுக்கப்பட்டன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. பதில்: பிபிசி நியூஸ் இது குறித்து கருத்து அறிய மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர் எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று பலமுறை மறுத்துள்ளார். பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் எப்போதும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். ரிச்சர்ட் பிரான்சன் ரிச்சர்ட் பிரான்சனின் பெயர் இந்த கோப்புகளில் நூற்றுக்கணக்கான முறை இடம் பெற்றுள்ளது. 2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு உரையாடலில், பிரான்சன் அளித்த விருந்தோம்பல் மற்றும் மக்கள் தொடர்பு ஆலோசனைக்காக எப்ஸ்டீன் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். அதற்குப் பதிலளித்த பிரான்சன், அவரைப் பார்த்தது "மிகவும் மகிழ்ச்சி" என்று கூறி, "நீங்கள் எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். உங்கள் பெண்கள் குழுவை அழைத்து வந்தால் போதும் " என்று குறிப்பிட்டுள்ளார். "ஹேரம்" என்ற சொல் எப்ஸ்டீன் குழுவில் இருந்த மூன்று வயது வந்த உறுப்பினர்களைக் குறிப்பதாக விர்ஜின் குரூப் விளக்கம் அளித்துள்ளது. பதில்: விர்ஜின் குரூப் பிபிசிக்கு அளித்த அறிக்கையில், எப்ஸ்டீனுடனான பிரான்சனின் தொடர்பு "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இருந்தது. மேலும் இது தொண்டு நிறுவன டென்னிஸ் போட்டி போன்ற குழு அல்லது தொழில்முறை சூழல்களுக்குள் மட்டுமே இருந்தது" என்று கூறியுள்ளது. மேலும், "எப்ஸ்டீன் ஒரு தொண்டு நன்கொடையை வழங்க முன்வந்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பிரான்சன் தங்கள் குழுவை முழுமையாக ஆய்வு செய்யச் சொன்னார். அந்த ஆய்வில் சில கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன"என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,"ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களின் விளைவாக, விர்ஜின் யுனைட் அந்த நன்கொடையைப் பெறவில்லை. மேலும் ரிச்சர்டும் ஜோனும் இனி எப்ஸ்டீனைச் சந்திக்கவோ பேசவோ வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்களுக்கு முழு விவரங்களும் தகவல்களும் தெரிந்திருந்தால், எவ்வித தொடர்பும் இருந்திருக்காது. எப்ஸ்டீனின் செயல்கள் அருவருப்பானவை என்று ரிச்சர்ட் நம்புகிறார் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைப்பதை ஆதரிக்கிறார்"என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. சாரா பெர்குசன் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரின் முன்னாள் மனைவியும் பொதுவாக "ஃபெர்கி" என அழைக்கப்படுபவருமான சாரா ஃபெர்கசனின் பெயரும் பல மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதில், எப்ஸ்டீன் வீட்டுக் காவலில் இருந்த காலகட்டத்தைச் சேர்ந்த மின்னஞ்சல்களும் உள்ளன. எப்ஸ்டீனுடையது என்று நம்பப்படும் ஒரு கணக்கிலிருந்து வந்த மின்னஞ்சலில், "இப்போது ஃபெர்கி, 'நான் ஒரு பீடோ( குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர் ) அல்ல' எனச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2009-இல் நடந்த மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், எப்ஸ்டீனை "ஒரு விரைவான தேநீர் சந்திப்பிற்கு" அழைக்கும் கோரிக்கை உள்ளது. அதில், "எனது அன்பிற்குரிய அற்புதமான மற்றும் சிறப்பான நண்பர் ஜெப்ரி. நீங்கள் ஒரு திறமைசாலி, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. பதில்: இந்த மின்னஞ்சல்கள் எந்தவொரு தவறான செயலையும் சுட்டிக்காட்டவில்லை. இது குறித்த விளக்கத்திற்காக பிபிசி பெர்குசனைத் தொடர்பு கொண்டுள்ளது. லார்ட் மண்டேல்சன் கோப்புகளில் வெளியிடப்பட்ட வங்கி அறிக்கைகளின்படி, லார்ட் மண்டேல்சன் மற்றும் அவரது துணைவராக அறியப்படும் ரினால்டோ அவிலா டா சில்வா ஆகியோருடன் தொடர்புடைய கணக்குகளுக்கு எப்ஸ்டீன் 75,000 டாலர் (55,000 யூரோ) செலுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தை தொடர்பான முக்கியத் தகவல்களை எப்ஸ்டீனுக்கு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, லார்ட் மண்டேல்சன் மீது மெட்ரோபாலிட்டன் காவல்துறை குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. மைனர் பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த குற்றத்திற்காக 2009-இல் எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, டா சில்வா "நீங்கள் எனக்கு உதவக்கூடிய ஏதாவது இருந்தால் செய்யுங்கள்" என்று கூறி ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கு எப்ஸ்டீன், "உங்கள் கடன் தொகையை உடனடியாக வங்கி மூலம் அனுப்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார். மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், மண்டேல்சன் தனது நியூயார்க் குடியிருப்புகளில் ஒன்றில் தங்குவதற்கு எப்ஸ்டீன் ஏற்பாடு செய்வது போல் தெரிகிறது. அதில் எப்ஸ்டீன், "உபசரிப்பதில் மகிழ்ச்சி, ஆனால் நான் அங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது" என்று எழுதியுள்ளார். பதில்: லார்ட் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று, "எப்ஸ்டீனை அறிந்திருந்தது" குறித்தும், அவர் தண்டிக்கப்பட்ட பிறகும் அவருடனான தொடர்பைத் தொடர்ந்தது குறித்தும் மண்டேல்சன் மீண்டும் வருத்தம் தெரிவித்தார். அவர் பிபிசியிடம் கூறுகையில், "எப்ஸ்டீனின் குற்றங்களில் நான் ஒருபோதும் குற்றவாளியோ அல்லது உடந்தையோ இல்லை. மற்றவர்களைப் போலவே நானும் அவரது மரணத்திற்குப் பிறகே அவரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டேன்" என்றார். ஆவணங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை, ஆனால் அவர் தவறாக செயல்படவில்லை என்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறுகிறார் என்பதை பிபிசி புரிந்துகொள்கிறது. 2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தேச நலன் கருதி எப்ஸ்டீனின் நிபுணத்துவத்தை தான் நாடியதாக அவர் கூறுகிறார். ஸ்டீவ் பானன் மறைந்த பாலியல் குற்றவாளிக்கும், டிரம்பின் முன்னாள் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீவ் பானனுக்கும் இடையே பரிமாறப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளும் இந்தக் கோப்புகளில் உள்ளன. இந்தக் குறுஞ்செய்திகளில் பெரும்பாலானவை 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்டுள்ளன. பானன் தனது வெள்ளை மாளிகை பதவியிலிருந்து விலகி, எப்ஸ்டீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது இவை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு குறுஞ்செய்தி உரையாடலில், எப்ஸ்டீனின் கடந்த காலக் குற்றங்கள் குறித்த பிம்பத்தை எப்படி மாற்றுவது என்று பானன் அவருடன் திட்டமிடுவது போல் தெரிகிறது. அதில், "முதலில் நாம் பொய்களை எதிர்க்க வேண்டும்" என்றும், "தொண்டு செய்பவர் என்ற உங்கள் பிம்பத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டும்" என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். பதில்: எந்தவொரு தவறான செயலும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாத பானன், இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி கேட்டதற்குப் பதிலளிக்கவில்லை. மிரோஸ்லாவ் லாஜ்சாக் அக்டோபர் 2018-இல், அப்போதைய ஸ்லோவாக்கியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த மிரோஸ்லாவ் லாஜ்சாக் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த குறுஞ்செய்தி பரிமாற்றம், பெண்கள் மற்றும் ராஜ்ஜீயம் குறித்து அவர்கள் உரையாடியதைக் காட்டுகிறது. பதிவுகளில் காண முடியாத ஒரு படத்தை எப்ஸ்டீன் அனுப்பிய பிறகு, லாஜ்சாக் அதற்குப் பதிலளிக்கையில், "இந்த விளையாட்டுகளுக்கு என்னை ஏன் அழைக்கக்கூடாது? நான் 'எம்ஐ' பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன்," என்று கூறியுள்ளார். அதற்கு எப்ஸ்டீன், "யார் தான் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீங்கள் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொள்ளலாம், நான் எதையும் சொந்தம் கொண்டாடுபவன் அல்ல. அவர்களின் சகோதரிகளையும் கூட," என்று பதிலளித்துள்ளார். பதில்: சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, லாஜ்சாக் ஸ்லோவாக்கியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் எந்த தவறும் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை. ஹோவர்ட் லட்னிக் சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள மின்னஞ்சல்களின் படி, கோடீஸ்வர தொழிலதிபரும் அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளருமான ஹோவர்ட் , தனது குடும்பத்துடன் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2012-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், அந்தப் பயணத்திற்கு முந்தைய நாளில், லட்னிக்கின் மனைவி அலிசன் எப்ஸ்டீனின் உதவியாளருக்கு மின்னஞ்சல் எழுதியுள்ளார். அதில், "உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்," மேலும், "நாங்கள் உங்களுடன் மதிய உணவில் கலந்துகொள்ள விரும்புகிறோம்"எனக் கூறப்பட்டுள்ளது. பதில்: அமெரிக்க வர்த்தகத் துறை பிபிசிக்கு அளித்த அறிக்கையில், "செயலாளர் லட்னிக், தனது மனைவி முன்னிலையில் மட்டுமே எப்ஸ்டீனுடன் குறைந்த தொடர்புகளை வைத்திருந்தார். அவர் மீது ஒருபோதும் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. லாரி சம்மர்ஸ் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் முன்னாள் நிதித்துறை செயலாளரும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவருமான லாரி சம்மர்ஸ் பெயரும் புதிதாக வெளியாகியுள்ள ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. இதில் சம்மர்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான சந்திப்புகள் மற்றும் இரவு உணவுகள் குறித்த குறிப்புகளும் உள்ளன. 2017-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்களில், சம்மர்ஸும் எப்ஸ்டீனும் டிரம்பின் முதல் பதவிக்காலத்தைப் பற்றி கேலி செய்தும் விமர்சித்தும் பேசியுள்ளனர். சம்மர்ஸிற்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் டிரம்பைப் பற்றி எப்ஸ்டீன் கூறுகையில், "அவர் உண்மையில் எவ்வளவு முட்டாள் என்பதை உங்கள் உலகம் புரிந்து கொள்ளவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார். பதில்: நவம்பர் மாதம் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளின் தொகுப்பில் சம்மர்ஸ் பெயர் குறிப்பிடப்பட்ட பிறகு, "எப்ஸ்டீனுடன் தொடர்ந்து தொடர்புகொள்வது என்ற எனது தவறான முடிவிற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும் ஓப்பன் ஏஐ ஆலோசனைக் குழு பதவி உட்பட பல பதவிகளிலிருந்து அவர் விலகினார். ஸ்டீவ் டிஷ் நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஸ்டீவ் டிஷ், எப்ஸ்டீன் வீட்டில் தான் சந்தித்த ஒரு பெண்ணைப் பற்றி விசாரிப்பது புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் தெரியவந்துள்ளது. ஒரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், அந்தப் பெண் ஒரு தொழில்ரீதியிலான பணியாளரா அல்லது " குடிமகளா" என்று டிஷ் கேட்டுள்ளார். மற்றொரு உரையாடலில், எப்ஸ்டீன் டிஷ்ஷிற்கு ஒரு "பரிசு" வைத்திருப்பதாகக் கூறி, அவருக்கு அறிமுகப்படுத்தப்போகும் ஒரு பெண்ணைப் பற்றி, "தாஹிடியன், பெரும்பாலும் பிரஞ்சு பேசுவார், கவர்ச்சியானவர்" என்று விவரித்துள்ளார். பதில்: சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தியில், எப்ஸ்டீனுக்கும் தனக்கும் "குறுகிய காலத் தொடர்பு இருந்தது" என்று டிஷ் கூறியுள்ளார். மேலும், "அவரது அழைப்புகள் எதையும் தான் ஏற்கவில்லை என்றும், அவரது தீவிற்கு ஒருபோதும் சென்றதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரட் ராட்னர் அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் குறித்த புதிய ஆவணப்படத்தின் இயக்குனர், ஒரு இளம் பெண்ணைத் தழுவியபடி இருக்கும் புகைப்படம் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது. 'ரஷ் ஹவர்' மற்றும் 'எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரட் ராட்னர், எப்ஸ்டீன் மற்றும் அடையாளம் மறைக்கப்பட்ட இரண்டு பெண்களுடன் ஒரு சோபாவில் அமர்ந்திருப்பதை அந்தப் படத்தில் காண முடிகிறது. பதில்: இந்த ஆவணங்களில் தவறான செயல்கள் ஏதும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. பிபிசி இது குறித்த கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ரட்னரின் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டுள்ளது. பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இரண்டு பெண்களுடன் பிரெட் ராட்னர் வலதுபுறத்தில் காணப்படுகிறார். பீட்டர் அட்டியா முதுமைத் தடுப்பு தொடர்பான துறையில் சமூக வலைதள பிரபலம் மற்றும் சிபிஎஸ் நியூஸ் பங்களிப்பாளரான பீட்டர் , எப்ஸ்டீனுடன் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. இதில் தரம் குறைந்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. மின்னஞ்சல்களில், எப்ஸ்டீனுடனான தனது நட்பை பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்று என்று அவர் எழுதியுள்ளார். மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிலரை அடையாளம் காட்டிய 2018-ஆம் ஆண்டின் மியாமி ஹெரால்டு கட்டுரை குறித்த விவாதமும் அதில் இடம்பெற்றுள்ளது. பெண்களின் உடல் அமைப்பு மற்றும் பாலியல் செயல்பாடுகள் குறித்து அவர் எப்ஸ்டீனுடன் நகைச்சுவையாக பேசுவது போன்ற குறிப்புகளும் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது. பதில்: பிப்ரவரி 2 அன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தான் "எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை" என்று அட்டியா மறுத்துள்ளார். மேலும், "நான் ஒருபோதும் அவரது விமானத்திலோ, அவரது தீவிலோ இருந்ததில்லை, எந்தவொரு பாலியல் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேசி வாசர்மேன் 2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியின் தலைவர், சிறையில் உள்ள எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுக்கு ஆபாசமாக மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். 2003-இல் மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பப்பட்ட கேசி வாசர்மேனின் குறுஞ்செய்திகளில், "நான் எப்போதும் உன்னைப் பற்றியே நினைக்கிறேன்... உன்னை இறுக்கமான தோலால் செய்யப்பட்ட உடையில் பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவர் கேட்டுள்ளார். எப்ஸ்டீனால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதற்கு, இளம் பெண்களைத் திரட்டியதற்காகவும் கடத்தியதற்காகவும் மேக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். பதில்: வாசர்மேன் ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். "இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கிஸ்லேன் மேக்ஸ்வெல் செய்த கொடூரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவருடன் நான் தொடர்பு கொண்டிருந்ததற்காக ஆழமாக வருந்துகிறேன்." செர்ஜி பிரின் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், எப்ஸ்டீனின் தனியார் தீவிற்குச் சென்றதுடன், நியூயார்க் நகரில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் இரவு உணவருந்தவும் திட்டமிட்டிருந்ததாக வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன. அவர் கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஏப்ரல் 2003-இல் மேக்ஸ்வெல் பிரின்னிற்கு எழுதிய கடிதத்தில், "ஜெப்ரியின் இல்லத்தில் நடக்கும் இரவு உணவுகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், சாதாரணமாகவும், நிதானமாகவும் இருக்கும்" என்றும், "உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். பதில்: பிபிசி இது குறித்த கருத்துக்களை அறிந்துகொள்ள கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களில் எந்தவொரு தவறான செயலும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. எஹுத் பராக் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் பராக் குறித்து புதிதாக வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு புளோரிடாவில் பாலியல் குற்றங்களுக்காக எப்ஸ்டீன் தண்டிக்கப்பட்ட பிறகும், அவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் தொடர்பு கொண்டிருந்ததை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன. 2017-ஆம் ஆண்டில் நியூயார்க் நகரிலுள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் தங்குவதற்கு பராக் திட்டமிட்டிருந்ததை ஒரு உரையாடல் காட்டுகிறது. பதில்: எப்ஸ்டீனுடன் தனக்கு வழக்கமான தொடர்புகள் இருந்ததை பராக் ஒப்புக்கொண்டார். ஆனால் முறையற்ற நடத்தைகள் அல்லது பார்ட்டிகளை தான் ஒருபோதும் பார்த்ததுமில்லை, அதில் பங்கேற்றதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோம் சாம்ஸ்கி புகழ்பெற்ற மொழியியலாளர் நோம் சோம்ஸ்கியின் பெயர் இரண்டு முறை வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. எப்ஸ்டீன் மீதான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பாக சோம்ஸ்கி அவருக்கு ஆலோசனை வழங்கியதாகச் சமீபத்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 2019-இல் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களில், தான் "தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமா" அல்லது "புறக்கணிக்க வேண்டுமா" என்று எப்ஸ்டீன் சோம்ஸ்கியிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக சோம்ஸ்கியிடமிருந்து வந்ததாகக் கருதப்படக்கூடிய ஒரு மின்னஞ்சலில், எப்ஸ்டீன் "மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளார்" என்றும், "பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து உருவாகியுள்ள பீதி " ஆகியவை குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இதைச் சொல்வது வேதனையாக இருக்கிறது, ஆனால் இதை அலட்சியப்படுத்துவதே முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்," என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. பதில்: கோப்புகளில் சோம்ஸ்கியின் பெயர் இடம்பெற்றிருப்பது எந்த தவறான செயலும் நடந்ததாகக் குறிக்கவில்லை. இதுகுறித்து கருத்து பெற, அவரது மனைவியும் அவரது செய்தித் தொடர்பாளருமான வலேரியாவை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது. பிராட் கார்ப் புகழ்பெற்ற சட்ட நிறுவனமான பால் வெயிஸின் தலைவர் பிராட் கார்ப், அவருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சமீபத்திய கோப்புகளில் வெளியானதைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகினார். அந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஒன்றில், பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்ஸ்டீன் முன்பே செய்துகொண்ட குற்ற ஒப்புதல் ஒப்பந்தம் குறித்து கார்ப் விவாதித்ததாக கூறப்படுகிறது. எப்ஸ்டீன் கைது செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2019-இல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், பிராட் கார்ப் என்ற பெயரில் உள்ள ஒருவர், "வரைவு மனு மிகச் சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறியுள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, இந்த விவாதம், 2008 ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுடன் எப்ஸ்டீன் செய்துகொண்ட குற்றஒப்புதல் ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுடன் தொடர்புடையதாகும். அந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆயுள் தண்டனை வரை எதிர்கொள்ள வேண்டிய ஃபெடரல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பித்திருந்தார். இருப்பினும், அந்த மின்னஞ்சல்கள் உண்மையில் அந்த ஒப்பந்தத்துடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. பதில்: புதன்கிழமை நிறுவனத்தின் அறிக்கையில் தனது ராஜினாமாவை அறிவித்த கார்ப், "சமீபத்திய செய்திகள் கவனச்சிதறலை உருவாக்கியுள்ளன, மேலும் என் மீது விழுந்துள்ள இந்த கவனம் நிறுவனத்தின் நலனுக்கு உகந்தது அல்ல" என்று கூறினார். அந்த அறிக்கை எப்ஸ்டீன் கோப்புகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை, மேலும் கார்ப் அதன் பிறகு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கூடுதல் விளக்கத்திற்காக பிபிசி பால் வெயிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. பில் கிளிண்டன் டிசம்பர் மாதம் நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின் முதல் தொகுப்பில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பல படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அவர் ஒரு நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற ஒரு படமும், மற்றொரு படத்தில் 'ஹாட் டப்' என்று கருதப்படும் இடத்தில் கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு படுத்திருப்பது போன்ற படமும் அடங்கும். எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில் எப்ஸ்டீனுடன் கிளிண்டன் பலமுறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார். பதில்: கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் உரெனா, டிசம்பர் மாதம் சமூக ஊடகங்களில் கூறுகையில், நீதித்துறை வெளியிட்ட புகைப்படங்கள் பல தசாப்தங்கள் பழமையானவை என்றார். "அவர்கள் விரும்பும் அளவிற்கு 20 ஆண்டுகளுக்கு மேலான தெளிவற்ற பழைய புகைப்படங்களை வெளியிடலாம், ஆனால் இது பில் கிளிண்டனைப் பற்றியது அல்ல. ஒருபோதும் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை," என்று அவர் கூறினார். மேலும், "இங்கு இரண்டு வகை மனிதர்கள் உள்ளனர். முதல் குழுவினர் எப்ஸ்டீனைப் பற்றி எதுவும் தெரியாமல், அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும் முன்பே அவரோடனான தொடர்பைத் துண்டித்தவர்கள். இரண்டாவது குழுவினர் அவரது குற்றங்களுக்குப் பிறகும் தொடர்பைத் தொடர்ந்தவர்கள். நாங்கள் முதல் குழுவில் இருக்கிறோம்," என்றும் அவர் கூறினார். சமூக வலைதளப் பதிவொன்றில் கிளிண்டன், தனக்குத் தெரிந்த அனைத்தையும் நாடாளுமன்றத்திடம் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். "எப்ஸ்டீன் கோப்புகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். எனக்குத் தெரிந்தவற்றை ஒரு சத்தியப் பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளேன். மேலும் இந்த வாரத்தில் தான், குழுவின் முன் நேரில் ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளேன்," என்று அவர் கூறினார். கிளிண்டன் இந்த மாத இறுதியில் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு முன் சாட்சியமளிக்க உள்ளார், மேலும் அந்த விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தீபக் சோப்ரா 2008 ஆம் ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பின்னர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் எழுத்தாளர் தீபக் சோப்ரா இடையே பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்புகள் இருந்ததாக இந்த கோப்புகள் வெளிப்படுத்துகின்றன. பிப்ரவரி 2017-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், சோப்ரா தன்னோடும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு குழுவோடும் இஸ்ரேலுக்கு வருமாறு எப்ஸ்டீனை அழைக்கிறார். "எங்களுடன் இஸ்ரேலுக்கு வாருங்கள்," என்று சோப்ரா கூறுகிறார். "சுவாரஸ்யமான மனிதர்களுடன் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். நீங்கள் விரும்பினால் போலிப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெண்களை அழைத்து வாருங்கள். நீங்கள் எங்களுடன் இருப்பது வேடிக்கையாக இருக்கும். உங்களுக்கு அன்புடன் எழுதிக்கொள்கிறேன்"என்கிறது ஒரு செய்தி. ஒரு மாதம் கழித்து நடந்த மற்றொரு உரையாடலில், இருவரும் கடவுள் மற்றும் மனித உடலின் செல்கள் பற்றிப் பேசியுள்ளார்கள். அப்போது சோப்ரா, "செல்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அப்படி எதுவும் இல்லை. பிரபஞ்சம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அப்படி எதுவும் இல்லை. அழகான பெண்கள் சத்தம் எழுப்பும்போது விழிப்புடன் இருக்கிறார்கள்," என்று கூறியுள்ளார். அந்த விவாதத்தின் தொடர்ச்சியாக சோப்ரா மேலும் கூறுகையில், "கடவுள் என்பது ஒரு கற்பனை. அழகான பெண்கள் தான் உண்மையானவர்கள்," என்கிறார். மாற்று மருத்துவ ஆதரவாளரான சோப்ராவிடம் எப்ஸ்டீன், "எனக்காக ஒரு அழகான இஸ்ரேலியப் பெண்ணைக் கண்டுபிடித்தீர்களா?" என்றும் கேட்கிறார். பதில்: இந்த மின்னஞ்சல்கள் வெளியானதிலிருந்து, சோப்ரா இணையத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் கண்டு ஆழ்ந்த வருத்தம் அடைவதாக" கூறியுள்ளார். மேலும் "எந்தவொரு குற்றவியல் அல்லது சுரண்டல் நடத்தையிலும்" தனக்குத் தொடர்பில்லை என்று மறுத்துள்ளார். "நான் குறைவாக தொடர்பு கொண்டிருந்தேன், மேலும் அவை அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பானவை அல்ல. கடந்த கால மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சில தற்போது வெளிவந்துள்ளன, அவை மோசமான தொனியில் இருந்தன. அதற்காக நான் வருந்துகிறேன், அக்காலகட்டத்தில் பொதுவாகத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் அவை இன்று எப்படிப் பார்க்கப்படும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். பொறுப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஆதரிப்பதில் எனது கவனம் தொடர்கிறது," என்று கூறியுள்ளார். எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகளில், ஏதேனும் தவறான செயல்கள் குறித்து அவர் அறிந்திருந்தாரா என்பதை பிபிசி, சோப்ராவிடம் கேட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j3jknlynpo
-
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 09 Feb, 2026 | 12:28 AM (செ.சுபதர்ஷனி) நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. அதேநேரம், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்களை ஏற்கனவே நீக்கியுள்ளோம். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம் சென்றிருந்தனர். எனினும், குறித்த ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை என்றும், சாதாரண பெரும்பான்மை வாக்களிப்பின் மூலமே அதனைச் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. சபாநாயகரால் வெள்ளிக்கிழமை (6) பாராளுமன்றத்துக்க அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் பிரகாரம், எம்.பி களின் ஓய்வூதியத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும். மக்கள் பணத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்த்து அதனை மீண்டும் மக்களுக்கே சென்றடையச் செய்வதே எமது இலக்காகும். ஹொரண வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்கான மனித வள வெற்றிடங்கள் இதுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அதற்கமைய, அத்தியாவசிய சுகாதார நிறுவனங்களுக்கான பணியாளர்களைத் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஹொரண வைத்தியசாலைக்குத் தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதம் முகாமைத்துவ திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்படும். அத்துடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்வரும் பத்தாண்டுகளுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்து வருகின்றது. தேசியக் கொள்கையின் அடிப்படையில் சுகாதாரத் துறையின் சவால்களைக் கண்டறிந்து, அதனை மேலும் வலுப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும். மேலும், நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலையின் ஆறு மாடி கட்டடத் தொகுதியின் பணிகளை மீள ஆரம்பிக்க அமைச்சின் ஊடாக புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளோம். இதன் மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதளவில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியும். இதற்காக இவ்வருடம் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238170
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,PCB கட்டுரை தகவல் மேத்யூ ஹென்றி பிபிசி செய்தியாளர் 9 பிப்ரவரி 2026, 02:35 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் பதில் தேடும் கேள்வி இதுதான். இதற்குக் காரணம், ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருப்பதுதான். லாகூரில் நேற்று (பிப்ரவரி 8, ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் சந்தித்தனர். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது பற்றி விவாதிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்தேறியது. ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமும் உடனிருந்தார். இந்த சந்திப்பில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக, பாகிஸ்தான் வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி சல்மான் நசீர் வரவேற்றதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசிபி தெரிவித்திருந்தது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், "ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜாவை லாகூர் விமான நிலையத்தில் பிசிபி தலைவரின் ஆலோசகர் அமீர் மிர் வரவேற்றார்." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருந்தது. டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணியின் பாதுகாப்பு கருதி தாங்கள் விளையாடும் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கை ஐசிசியால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் என, பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீஃப், வங்கதேசத்தை "ஆதரிப்பதற்காக" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணி அப்போட்டியை புறக்கணித்தால், அந்த அணி புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும். அத்துடன், ஐசிசியின் தற்போதைய உரிம ஒப்பந்தங்கள் குறித்த சர்ச்சைக்கும் அது வழிவகுக்கும். தற்போதைய தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் 2027 உலகக் கோப்பைக்குப் பிறகு காலாவதியாவதால், தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை எதிர்கால ஒப்பந்தங்களைப் பாதிக்கலாம். பட மூலாதாரம்,X/PCB என்ன சர்ச்சை? டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக முடிவெடுத்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரித்திருந்தது. 'சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக' ஐசிசி தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் முடிவு 'பெரும் விளைவுகளை' ஏற்படுத்தும் எனவும் ஐசிசி தெரிவித்திருந்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கால அட்டவணைப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற வேண்டும். பிப்ரவரி ஒன்றாம் தேதி பாகிஸ்தான் அரசாங்கம் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,Screen Grab படக்குறிப்பு,இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற தனது முடிவு குறித்து விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும், இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்பதை பாகிஸ்தான் அரசு கூறவில்லை. டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது. இதையடுத்து, வங்கதேச அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை இத்தொடரில் ஐசிசி சேர்த்தது. இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. "பாதுகாப்பு காரணங்களுக்காக எந்தவொரு அணியும் எந்தவொரு நாட்டிலும் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்றால், அந்த உரிமை வங்கதேசத்திற்கும் இருக்க வேண்டும்." என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. கடந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட்அணி மறுப்பு தெரிவித்தது, இதையடுத்து இந்திய அணியின் போட்டிகள் துபையில் நடைபெற்றன. இதைத்தான் பாகிஸ்தான் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது. ஐசிசி கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேசத்தின் கோரிக்கைகளை ஐசிசி ஏற்காததால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அதை விமர்சித்தனர் (ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் கோப்புப்படம்) பாகிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்ட சில மணிநேரத்திலேயே, ஐசிசி இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், பிசிபியிடமிருந்து தங்களுக்கு எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், பாகிஸ்தானின் முடிவு உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது தொடர்பாக தங்கள் அணிக்கு உத்தரவிட்டுள்ள பாகிஸ்தான் அரசின் முடிவை ஐசிசி கருத்தில் கொண்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பிசிபியிடமிருந்து ஐசிசிக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்ற அணுகுமுறை உலகளாவிய நிகழ்வின் விளையாட்டு உணர்வுக்கு முரணானது, தகுதி பெறும் அனைத்து அணிகளும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. "விளையாட்டு ஒருமைப்பாடு, போட்டி, நிலைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஐசிசி கிரிக்கெட் தொடர்கள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்பது விளையாட்டு உணர்வு மற்றும் இத்தொடர்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக அமையும்." என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. "தேசிய கொள்கை தொடர்பான விவகாரங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐசிசி மதிக்கும் அதே வேளையில், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் அல்லது பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லை." "இந்த முடிவின் தீவிரமான மற்றும் நீண்டகால தாக்கங்களை பிசிபி பரிசீலிக்கும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது, ஏனெனில், இது பிசிபி உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பை பாதிக்கலாம்." என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நியாயமான தீர்வு கண்டறியப்படும் என தெரிவித்துள்ள ஐசிசி, "ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முன்னுரிமை. இந்த பொறுப்பு பிசிபி உட்பட அனைத்து உறுப்பினர் வாரியங்களுக்கும் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறியும் என ஐசிசி நம்புகிறது." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8g2gepd2yo