Everything posted by ஏராளன்
-
தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் - சிறிதரன்
09 JAN, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த தரப்பினருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. இதனால் நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நலன்புரி திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். மீன் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி இன்று வரை கிடைக்கப் பெறவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீன் குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26209 பேருக்கு இன்றும் அந்த தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு - வாகரை, வவுனியா - வடக்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மடு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மீன் குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியை செலவு செய்துள்ளார்கள். ஆகவே இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது. இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வு திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள். அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற பெண் மிக கொடூரமான முறையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன. லன்டனில் உள்ள ஒருவர் தன்னை தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அப்பகுதிகளுக்கு குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை. 1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல் 1983ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்து 2000 எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/203434
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
ஞானசார தேரர் வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314542
-
HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் தேஷம் பி.ஆர். பதவி, பிபிசிக்காக ரங்கா ராவுக்கு பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. அவர் முறையான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த மாதம் சீதாப்பழத்தைப் பார்த்ததும் ரங்கா ராவுக்கு அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே ஒரு கூடை நிறைய சீதாப்பழங்களை வாங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிட்டார். கடைசியாக நீரிழிவு சோதனை செய்து 8 மாதங்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தவுடன், அவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க முடிவு செய்தார். ஆனால், இவ்வளவு சீதாப்பழங்களை சாப்பிட்டதற்கு மருத்துவர் தன்னைக் கடிந்துகொள்வார் என்று அவர் அஞ்சினார். எனவே, அவர் 2-3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க முடிவு செய்தார். மருத்துவரிடம் செல்வதற்கு முந்தைய மதியம் மற்றும் இரவு வேளையில் ஒரு சிறுதானிய ரொட்டியும் ஒரு முட்டையும் மட்டுமே அவர் சாப்பிட்டார். அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, வழக்கமாக அவரை பரிசோதனை செய்யும் மருத்துவருக்குப் பதிலாக புதிதாக ஒரு மருத்துவர் இருப்பதை அவர் கண்டார். அவரது மருத்துவர் பத்து நாள் விடுப்பில் சென்றிருப்பதால், வேறு ஒரு புதிய மருத்துவர் அங்கு இருந்தார். இதனால் ரங்கா ராவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. ரங்கா ராவுக்கு வழக்கமான ஃபாஸ்டிங் சுகர் டெஸ்ட் (உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் பரிசோதனை) மற்றும் உணவு உண்ட பிறகு எடுக்கும் பரிசோதனைக்குப் பதிலாக, புதிய ஒரு பரிசோதனை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. ரங்கா ராவுக்கு இந்த பரிசோதனை செய்துகொள்வதில் விருப்பமில்லை. இருப்பினும், மருத்துவர் பரிந்துரைத்ததால் அவர் அதைச் செய்தார். ரங்கா ராவின் பரிசோதனை முடிவுகள் வந்தன. உணவுக்கு முன்பு எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவரது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு 150 mg/dl என இருந்தது. ஆனால், சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்டில் குளுக்கோஸ் அளவு 270 mg/dl என இருந்தது. மருத்துவர் செய்த புதிய பரிசோதனையில் குளுக்கோஸ் அளவு 9 சதவிகிதம் என்று இருந்தது. ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி? தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்? சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம் இதற்கு முன்பு இருந்த மருத்துவர், பரிசோதனை முடிந்த பிறகு சாதாரணமாகப் பேசி ஆலோசனை வழங்கி மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால், இந்த புதிய மருத்துவர் சற்று கண்டிப்பானவராக இருந்தார். "உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏன் இவ்வளவு அதிகரித்தது?" என்று புதிய மருத்துவர் கேட்டார். ரங்கா ராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாகவில்லை தானே டாக்டர்?" என்று ரங்காராவ் தயக்கத்துடன் பதிலளித்தார். அதற்கு அந்த புதிய மருத்துவர், "நான் டாக்டரா அல்லது நீங்கள் டாக்டரா?" என்று கேட்டார். ரங்காராவ் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். புதிய மருத்துவர் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து அதில் சில எண்களை எழுதத் தொடங்கினார். "வழக்கமான சர்க்கரைப் பரிசோதனையில், சோதனை செய்வதற்கு முந்தைய நாள் நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணக்கிடப்படும். ஆனால் இந்த புதிய சோதனையில், கடந்த 3 மாதங்களாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவு கணக்கிடப்படும். இது ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது," என்றார் புதிய மருத்துவர். "இந்த பரிசோதனையில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது", என்று அவர் ரங்கா ராவிடம் கூறினார். "உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது குறிக்கிறது. ஒருவர் அதிக இனிப்புகளை உட்கொள்வதால் இது நடக்கிறது", என்று அவர் ரங்கா ராவிடம் விளக்கினார். HbA1C பரிசோதனை என்றால் என்ன? HbA1C பரிசோதனை, A1C பரிசோதனை அல்லது 'கிளைகேட்டட் ஹீமோகுளோபின்' பரிசோதனை அல்லது ஹீமோகுளோபின் ஏ1சி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள புரதத்துடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸின் அளவைக் கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. கடந்த 3 மாதங்களில் (8 முதல் 12 வாரங்கள்) ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை இந்த HbA1C அளவிடுகிறது. இந்த பரிசோதனையின் முடிவுகள் பரிசோதனைக்கு ஒரு நாள் முன்பு சாப்பிட்ட உணவை அடிப்படையாகக் கொண்டிருக்காது. மாறாக, மூன்று மாதங்களாக நாம் உண்ட உணவை அடிப்படையாகக் கொண்டு ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை இந்த பரிசோதனை காட்டுகிறது. இந்த பரிசோதனை நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவு நோய்க்கு முந்தையை நிலையை கண்டறியவும் (pre diabetic) தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த பரிசோதனைக்காக உணவு உண்ணாமல் இருப்பது போன்றவை தேவையில்லை. நீங்கள் என்ன உணவை எப்போது உட்கொண்டீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு நாளின் எந்த நேரத்திலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள முடியும். இறந்துவிட்டதாக ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டவருக்கு மீண்டும் 'உயிர்' கொடுத்த வேகத்தடை6 ஜனவரி 2025 விண்வெளியில் ரோபோ மூலம் தட்டைப்பயறு விதையை இஸ்ரோ முளைக்கச் செய்தது எப்படி?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது HbA1C முடிவுகளை வைத்து பிரச்னைகளை அறிந்துகொள்வது எப்படி? நீரிழிவு நோய் பாதிக்கப்படாதவர்களுக்கு HBA1C அளவு பொதுவாக 4% முதல் 5.6% வரை இருக்கும். HbA1c அளவு 5.7% முதல் 6.4% வரை இருந்தால், அந்த நபர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார். அதாவது, அந்த நபருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த அளவு 6.5% மற்றும் அதற்கு மேல் இருந்தால், அந்நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதைக் குறிக்கிறது. அவர்கள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த அளவு 9% க்கு மேல் இருந்தால், அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். இதனால் உடலில் உள்ள சில உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் ஏற்படலாம். இந்த பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்? 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வயது வித்தியாசமின்றி ஆண்டுதோறும் HbA1C பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 30-45 வயதுக்குட்பட்டவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கை சாப்பிடும் புழுக்கள் – நெகிழி மாசுபாட்டை தடுக்க உதவுமா?5 ஜனவரி 2025 சீனாவில் கொரோனா போன்ற அறிகுறிகளுடன் வேகமாக பரவும் புதிய வைரஸ் - இந்தியா என்ன செய்கிறது?6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன? ப்ரீ-டயாபடீஸ் என்றால், உடலால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலையை குறிக்கிறது. இந்த நிலை ஏற்பட்டால் சில வருடங்களில் உறுப்புகள் சரியாகச் செயல்படாமல் போகலாம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் போகலாம். உங்கள் அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு நோயிலிருந்து விலகி இருக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனை மீண்டும் பெறலாம். HbA1c பரிசோதனையில் உங்களுக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது? HbA1c பரிசோதனை என்பது மற்ற ரத்தப் பரிசோதனைகளைப் போலவேதான் இருக்கும். அங்கீகாரம் பெற்ற எந்த ஆய்வகத்திலும் இதை செய்துகொள்ளலாம். 5 நிமிடங்களுக்குள் உடலில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அன்றே வழங்கப்படும். இந்த பரிசோதனையின் மூலம் கடந்த 3 மாதங்களில் உடலில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவை அறிந்துகொள்ள முடியும். எனவே, சோதனைக்கு முன் நீங்கள் என்ன உண்ணும் உணவோ அல்லது நீராகாரங்கள் அருந்தினாலோ இந்த பரிசோதனையின் முடிவுகளை மாற்றாது. இருப்பினும், HbA1C பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களால் மருந்து பரிந்துரைக்க முடியாது. உணவுக்கு முன்பும் அதன் பிறகும் எடுக்கும் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே சர்க்கரையை கட்டுப்படுத்த சரியான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். HbA1C அளவுகளை எவ்வாறு குறைக்கலாம்? HbA1C என்பது மூன்று மாத காலத்திற்கான சராசரியான ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாக இருப்பதால், உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவோ அல்லது மருந்துகளை உட்கொள்வதன் மூலமோ இரண்டு அல்லது மூன்று நாட்களில் சர்க்கரை அளவை குறைக்க முடியாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்வது போன்றவற்றினால் மட்டுமே HbA1C அளவைக் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், தினமும் தவறாமல் மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே, HbA1C-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணம் - காரணம் என்ன?5 ஜனவரி 2025 மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த HbA1C பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் HbA1C என்றால் என்ன? நாம் உண்ணும் உணவைப் பொறுத்து, செரிமான மண்டலத்திலிருந்து ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடப்படுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் நகரும். ரத்தத்தில் பல்வேறு புரதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹீமோகுளோபின் ஆகும், இது ரத்த சிவப்பணுக்களில் காணப்படுகின்றது மற்றும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இந்த ஹீமோகுளோபின் புரதம் உடல் முழுவதும் சுற்றும் குளுக்கோஸ் மூலக்கூறுடன் இணைக்கப்படும். இந்த செயல்முறை கிளைகேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் புரதம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸ் 'கிளைகேட்டட் ஹீமோகுளோபின்' என்று அழைக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் என்பதால், கடந்த மூன்று மாதங்களில் அவற்றில் எவ்வளவு குளுக்கோஸ் (சர்க்கரை) சேர்ந்துள்ளது என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். ரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தால், அது அதிகமான ஹீமோகுளோபினுடன் இணைக்கப்படும் என்பதையே இந்த பரிசோதனை காட்டுகிறது. இந்த பரிசோதனை அனைவருக்கும் அவசியமா? குளுக்கோஸ் ஹீமோகுளோபின் புரதத்துடன் மட்டும் சேர்வதில்லை. கூடுதலாக அல்புமின், ஃபெரிடின் மற்றும் ஃபைப்ரினோஜென் போன்ற புரதங்களுடனும் சேர்க்கிறது. ஆனால், அனைவருக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடுமையான ரத்த சோகை (ரத்தத்தில் மிகக் குறைவான அளவில் ஹீமோகுளோபின் இருப்பது), சிறுநீரகப் பிரச்னைகள் இருப்பவர்கள், உடலில் போதுமான ரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாதவர்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த HbA1c பரிசோதனையால் அதிகம் பயனடைய மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு மட்டுமே ஹீமோகுளோபினைத் தவிர மற்ற புரதங்களுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸை தீர்மானிக்கும் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. (குறிப்பு: கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ரீதியாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn9gr52pvj1o
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள்; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ Published By: RAJEEBAN 09 JAN, 2025 | 12:04 PM லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதேவேளை காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் நிம்மதியடைந்துள்ள போதிலும் ஆபத்து இன்னமும் முடிவிற்கு வரவில்லை. ஹொலிவூட் ஹில்ஸ் பகுதியில் புதிதாக காட்டுதீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் லொஸ் ஏஞ்சல்ஸின் சன்டா மொனிகாவில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆயிரம் கட்டிடங்கள் அனேகமாக வீடுகள் முற்றாகதீக்கிரையாகியுள்ளன. நகரப்பகுதியிலிருந்து 13000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பசுபிக் கரை முதல் பசெடானா வரையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நாங்கள் இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து விடுபடவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்துள்ளார். பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டு தீ ஆபத்து செல்வாய்கிழமையே உருவானது. ஒரு சக்திவாய்ந்த காற்று புயல் இயற்கை எழில் கொஞ்சும் பசுபிக்கின் பாலிசோட்ஸ் சுற்றுப்புறத்தில் தீப்பிழப்புகளை மூண்டெழச்செய்த போது ஆயிரக்கணக்காணவர்கள் அங்கிருந்து தப்பி விரைவாக வெளியேறவேண்டிய நிலை உருவானது. கடும் காற்றுகாரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் திணறியதால் இரவில் அவசரநிலைமை தீவிரமடைந்தது. அந்த இரவை நகரின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான திகிலூட்டும் இரவு என அதிகாரியொருவர் வர்ணித்துள்ளார். அந்த பகுதியை சுற்றிவளைத்திருந்த நான்கு காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக மறுநாள் காலை கலிபோர்னியாவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். காட்டுதீ காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்களிற்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. நான்கு பகுதிகளில் இவ்வளவு ஆக்ரோசமாக பரவிவரும் காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்தார். நாங்கள் இரண்டு மூன்று காட்டுதீ பரவலிற்குதான் தயாராகயிருந்தோம் நான்கு ஐந்தை எதிர்பார்க்கவில்லை,அன்று மாலை அது ஆறாக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டார். பாலிசேட்ஸ் காட்டுதீயே லொஸ்ஏஞ்சல்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒன்று என அதிகாரிகள் கருதுகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 50 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். தீயினால் அந்த பகுதியின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன. அதிகரித்த தேவை காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில இடங்களில் நீரை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களை நீரை சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் காட்டுதீ மிகவேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள் தாங்கள் கார்களை விட்டுவிட்டு இறங்கி ஓடவேண்டிய நிலைக்கும் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். ஹெலிக்கொப்டரிலிருந்து காட்டுதீயை அணைப்பதற்காக நீர் வீசப்பட்டவேளையே எனக்கு எங்கள் பகுதியில் காட்டுதீ மூண்டுள்ளமை தெரியும் என அந்த பகுதியை சேர்ந்த ஷெரீஸ் வலஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார். எனது சகோதரி என்னை அழைத்து அதனை தெரிவித்தார் என்கின்றார் அவர். நான் மழை பெய்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் அவர் எனது சகோதரி இல்லை உங்கள் பகுதியில் காட்டு தீ மூண்டுள்ளது அதனை அணைக்க முயல்கின்றனர் நீங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என தெரிவித்தார் என வலஸ் தெரிவித்துள்ளார். நான் வீட்டு கதவை திறந்ததும் காட்டுதீக்கு எதிரே நின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203378
-
ஜெய் ஷாவின் 'ஈரடுக்கு டெஸ்ட் முறை' - லாபம் ஈட்டும் பேராசைத் திட்டம் என சர்ச்சை எழுவதன் பின்னணி
பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி விவரித்தது. மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டி 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? புதிய இரண்டு அடுக்கு முறை 2027 முதல் நடைமுறைக்கு வருகிறதா? 'இரண்டு அடுக்கு' முறை செயல்படுத்தப்பட்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் வரிசையில் (Tier-1) இருக்கக்கூடும். மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இரண்டாம் வரிசையில் (Tier-2) இடம்பெறக்கூடும். தற்போது நடைமுறையில் இருக்கும் கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டம் 2027இல் முடிவடைய உள்ளதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் சில காலம் ஆகலாம். கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த அணிகள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இதை மாற்றவே, 'இரண்டு அடுக்கு' என்ற புதிய முறையைக் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இந்தப் புதிய முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 'டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால், சிறந்த அணிகள்தான் ஒன்றோடொன்று விளையாட வேண்டும்' என்று கூறியுள்ளார். கன்னியாகுமரியில் கடல் மீது அமைந்த இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் - வடிவமைத்தவர் கூறும் தகவல்கள்2 ஜனவரி 2025 யுக்ரேன் வழியே ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தம் - யாருக்கு பாதிப்பு?1 ஜனவரி 2025 ரசிகர்களை ஈர்த்த பார்டர்-கவாஸ்கர் தொடர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்தத் தொடரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டனர். செய்திகளின்படி ஆஸ்திரேலியாவில் இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகமான பார்வையாளர்கள் எண்ணிக்கையுடன் இந்தத் தொடர் நான்காவது இடத்தில் உள்ளது. இது தவிர, இன்று வரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராகவும் இது அமைந்தது. எனவே, சிறந்த டெஸ்ட் அணிகள் மோதும் போட்டிகளை மட்டுமே மக்கள் அதிகம் ரசிப்பதாக ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?9 ஜனவரி 2025 10 நாள் விடுமுறை, 10 படங்கள்: பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்களும் அவற்றின் கதையும்8 ஜனவரி 2025 முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், முடிந்த வரை முன்னணியில் இருக்கும் அணிகளை மோதவிடுவதே ஒரே வழி என்று தான் நம்புவதாக ரவி சாஸ்திரி கூறுகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போட்டிகளைப் பிரபலமாக்குவதோடு, வணிக ரீதியாகவும் பலனளிக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஐபிஎல், பிபிஎல், தி ஹன்ட்ரட் போன்ற லீக்குகளின் மீது பார்வையாளர்கள் மிகுந்த அன்பைப் பொழிகிறார்கள், இது இந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு லாபம் தருகிறது. ``டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், முடிந்த வரை முன்னணியில் இருக்கும் அணிகளை மோதவிடுவதே ஒரே வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் ரவி சாஸ்திரியின் கருத்தை ஆமோதிக்கிறார். டெலிகிராஃப் தளத்தில் அவர் எழுதிய கட்டுரையில், "டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கு நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஓவர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஒரு தொடரில் குறைந்தது மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்க வேண்டும். டெஸ்ட் அணிகளின் இரண்டு குழுக்கள் இருக்க வேண்டும்." "டெஸ்ட் கிரிக்கெட்டில், 2027ஆம் ஆண்டு இரண்டு அடுக்கு முறையை ஐசிசி பரிசீலித்து வருவதைப் படித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் பொருள் இனி நாம் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை ஆஷஸ் தொடரைப் பார்க்கலாம்" என்று அவர் எழுதியுள்ளார். துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம்: புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு ஏன்?9 ஜனவரி 2025 திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்9 ஜனவரி 2025 லாபம் ஈட்டும் என்ணம் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முன்மொழியப்பட்ட இரண்டு-அடுக்கு டெஸ்ட் முறை குறித்து கிளைவ் லாயிட் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். `எனக்கு பொருளாதாரம் தெரியும்' என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்துள்ளார். "இது மூன்று வாரியங்களுக்குப் பயனளிக்கும். ஆனால் விளையாட்டு என்பது பவுண்டுகள், டாலர்கள் மற்றும் ரூபாய்களைப் பற்றியது அல்ல. இந்த விளையாட்டில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக அதன் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும்" என்று அவர் விமர்சித்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் `பிபிசி ரேடியோ 5' உடன் பேசுகையில் இதுபற்றிக் கருத்து தெரிவித்தார். அப்போது, "இந்தப் புதிய முறை சரியானதல்ல. இது கிரிக்கெட்டின் சிறந்த நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதில் நம்பிக்கை இல்லை. இது பேராசை என்று நான் நினைக்கிறேன். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்ற விளையாட்டை அழிக்கப் போகிறது" என்றார். கடந்த 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணிக்கு தலைமை தாங்கிய கிளைவ் லாயிட், இந்தத் புதிய டெஸ்ட் தொடர் முறையுடன் உடன்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த முடிவை இப்போதே நிறுத்த வேண்டும். டெஸ்ட் நாடுகள் அந்தஸ்தை பெற கடுமையாக உழைத்த நாடுகளுக்கு இது மிகவும் மோசமான முடிவு. இப்போது அவர்கள் பலவீனமான அணிகளுடன் தங்களுக்குள் விளையாடுவார்கள்" என்பது அவரின் கருத்து. "அது எப்படி பலவீனமான அணிகள் முன்னேற உதவப் போகிறது? உங்களைவிடச் சிறந்த அணிகளுடன் நீங்கள் விளையாடும்போது, உங்கள் ஆட்டம் மேம்படும். நீங்கள் உண்மையில் எவ்வளவு சிறப்பாக விளையாடுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நான் இதை நினைத்து வருத்தப்படுகிறேன்" என்று லாயிட் கூறினார். அதோடு, "அனைத்து அணிகளுக்கும் சமமான பணம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். இதனால் அவர்கள் தொடர்ந்து தங்கள் விளையாட்டை மேம்படுத்துவதில் பணியாற்ற முடியும்" என்றும் அவர் கூறினார். மேற்கிந்திய தீவுகள் ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 முதல் 1995 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்ல முடியாத அணியாக இருந்தனர். ஆனால் அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி திணறி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் ஐயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றன. அதன் பின்னர், பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக சில போட்டிகள் நடந்தன, ஆனால் அதன் முடிவுகள் பெரியளவில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre7e1evz95o
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
US-ஐ சோதிக்கும் இயற்கை: பற்றி எரியும் California; பனியில் உறைந்த Texas - என்ன நடக்குது? அமெரிக்காவின் ஒருபகுதியில் கடும் பனி மக்களை வாட்டி வதைக்க, மற்றொரு பகுதியில் காட்டுத் தீ கடும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அங்குள்ள வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் வீடுகளில் இருந்து குறைந்தது 30 ஆயிரம் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் செங்கொடி எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். அதாவது தீ விபத்துக்கான அதிகப்படியான ஆபத்தில் அவர்கள் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலசேட்ஸில் 10 ஏக்கரில் இருந்த காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 2,900 ஏக்கருக்கும் பரவியதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் தீப்பற்றும் ஆபத்து இருப்பதால் வேறு வழியின்றி வெளியேறியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். Strong winds fuelled a massive fire in southern California, flattening homes, overtaking roads and and forcing at least 30,000 to evacuate. The fire in Pacific Palisades exploded from 10 acres to more than 2,900 acres in mere hours. Los Angeles declares a state of emergency. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
ராஜஸ்தான்: திடீரென தோன்றிய நீரூற்று சரஸ்வதி நதியா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது திடீரென வேகமாக நீர் வெளியேறியது. கட்டுரை தகவல் எழுதியவர், திரிபுவன் பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்த ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரை சேர்ந்த விக்ரம் சிங் பதி என்பவரின் பண்ணையில் பாசன வசதி இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டத் தொடங்கினார். 800 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வராததால், மேலும் ஆழமாகத் தோண்ட முடிவு செய்தார். இதற்குப் பிறகு, அதிகாலையில் பூமியில் இருந்து பெரியளவில் நீர் வெளியேறியது, ஆனால் அது மூன்றாவது நாளில் நின்றுவிட்டது. வயல்களைச் சுற்றிலும் ஏழடி தண்ணீர் நிரம்பி அதில் இருந்த சீரகப் பயிர்கள் நாசமாயின. தமிழ்நாட்டின் நிலத்தடி நீரில் அதிகரிக்கும் நைட்ரேட் - அந்த நீரை குடித்தால் என்ன பிரச்னை வரும்? நிலத்தடி வெப்பநிலை மாற்றம்: சென்னை போன்ற நகரங்களில் கட்டடங்களுக்கு என்ன ஆபத்து? ஜமாஜாமா: 'நிலத்தடியில் 3 மாதம், ஒரு தளத்தில் எலும்புகள்' - தங்கச் சுரங்கத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற கும்பல் படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரந்த தார் பாலைவனத்தில், பூமிக்குள் இருந்து இவ்வளவு தண்ணீர் வெளிவரும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. "நிலத்தைத் தோண்டியபோது, பூமியில் இருந்து ஒரு நீரோடையைப் போன்று தண்ணீர் வெளியேறியது. 22 டன் இயந்திரமும் தண்ணீரில் மூழ்கியது" என்கிறார் விக்ரம் சிங் பதி. "போர்வெல் இயந்திரத்துடன் லாரியும் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீரின் ஓட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், நிலத்தின் மேல் அடுக்கு பத்து அடி ஆழத்திற்கு மூழ்கியது" என்று விளக்கினார். வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?4 ஜனவரி 2025 பூமிக்குள் இருந்து இவ்வளவு தண்ணீர் வந்தது எப்படி? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் தனது பயிர்கள் அழிந்துவிட்டதாக விக்ரம் சிங் பதி கூறுகிறார் மூத்த நிலத்தடி நீர் விஞ்ஞானியும், ராஜஸ்தான் நிலத்தடி நீர் வாரியத்தின் பொறுப்பாளருமான முனைவர் .நாராயணதாஸ் இன்கையா தலைமையில், நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து, தொடர்ந்து மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. வழக்கமாக 300 முதல் 600 அடி ஆழத்தில் தண்ணீர் வெளியேறும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஆனால், "850 அடி வரை தோண்டியதால் பாறைகள் உடைந்து நீர் ஊற்று வெடித்தது. இவை களிமண் பாறைகள் என்பதால் அதன் அடுக்கு மிகவும் வலுவானது. அந்த அடுக்கு உடைந்தபோதுதான் தண்ணீர் இவ்வளவு ஆற்றலுடன் அதிவேகமாக வெளியேறியுள்ளது" என்று இன்கையா விளக்கினார். இப்படி நடப்பது முதல் முறையா? "பூமிக்குள் 850 அடி ஆழத்தில் பலமான களிமண் அடுக்குகள் உள்ளன. அவற்றுக்கிடையே நிறைய தண்ணீர் தேங்கியிருக்கும். பாறைகள் உடைந்தால் தண்ணீர் முழு வீச்சில் வெளியேறத் தொடங்கும்" என்று இன்கையா விளக்குகிறார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானின் நாச்சனாவிலுள்ள ஜலுவாலா என்னும் பகுதியில் இதேபோல் தண்ணீர் வெளியேறியது. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ஜெய்சல்மரின் இந்தப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதுபற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (CAZRI) முனைவர் வினோத் சங்கர், சுரேஷ் குமார் என்ற இரு மூத்த விஞ்ஞானிகள் 1982இல் அதுகுறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். அதில் மோகன்கர் பகுதியில் நிலத்தடி நீர் அதிகம் இருப்பதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டன. முனைவர். சுரேஷ் குமார் இப்போது கஜரியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், அவர் இதுபற்றி விவரித்தார். இந்தப் பகுதியில், "176 முதல் 250 மி.மீ மழை மட்டுமே பெய்யும், சில குறிப்பிட்ட இடங்களில் முட்கள் நிறைந்த லானா புதர்கள் அதிகமாகக் காணப்படுகின்றன, சில இடங்களில் அதுகூட இல்லை" என்று விளக்கினார் அவர். மேலும், "இங்கு நாங்கள் பார்த்த விஷயங்கள் எங்களை ஆச்சர்யப்படுத்தின. நாங்கள் நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை தோண்டியபோது, இந்தப் புதர்களின் வேர்கள் மிகவும் ஆழமாகச் செல்வதைக் கண்டோம், அதேநேரம் மழைநீர் மூன்று முதல் நான்கு அடி வரை மட்டுமே செல்லும். சில நிலத்தடி நீர் ஆதாரங்கள் இருந்ததால் மட்டுமே, இந்தப் புதர்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது என்பதை இது குறிக்கிறது" என்றார். ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஒரு விரிவான அலசல்7 ஜனவரி 2025 சரஸ்வதி நதியின் சுவடுகளா? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,கடந்த 2006ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அதிகபட்சமாக 12 மணிநேரத்திற்கு 550 மி.மீ. மழை மட்டுமே பதிவானது தார் பகுதியில் காணப்படும் ஒரு பொதுவான தாவரம் `லானா' (Lana) என்றழைக்கப்படுகிறது. இது பாலைவனப் பகுதிகளில், ஆடு மற்றும் ஒட்டகங்களின் உயிர் காக்கும் தாவரம். இது வறண்ட மற்றும் தரிசுப் பகுதிகளில் வளரும் ஒரு புதர்த் தாவரம். ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மற்றும் மத்திய ஆசியாவின் பாலைவனப் பகுதிகளில் இந்த லானா வளர்கிறது. இதன் அறிவியல் பெயர் ஹலோக்சின் சாலிகோர்னியம் (Haloxylon salicornicum). இது அமரன்தேசி (Amaranthaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தச் செடி மணல் மற்றும் தரிசு மண்ணில் வளரும், அப்பகுதிகளில் பொதுவாக ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவும். மேலும் இந்தச் செடி உப்புத்தன்மை மற்றும் உரம் குறைந்த மண்ணிலும் நன்றாக வளரும். 16 அடி ஆழம் வரை செல்லும் இதன் வேர்கள் மிகவும் ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கும். லானா தாவரம் வறண்ட பகுதிகளின் வாழ்க்கைச் சுழற்சியின் முக்கியப் பகுதியாக உள்ளது மற்றும் தரிசு நிலங்களைத் தக்கவைக்க உதவுகிறது. முனைவர் சுரேஷ் குமார் இதை புராணங்களில் கூறப்பட்ட ஒரு நதியுடன் தொடர்புப்படுத்துகிறார். "தொன்ம நூல்களைப் படித்து, ரிமோட் சென்சிங் தரவுகளுடன் பொருத்திப் பார்த்த பிறகு, அழிந்துபோன சரஸ்வதி நதியின் பகுதி இது என்பதை உணர்ந்தோம்" என்றார். சுற்றியுள்ள தாவரங்களை ஒப்பிடும்போது, லானா செடி மற்ற இடங்களில் காணப்படவில்லை. பின்னர், ராணுவம் இந்தப் பகுதிகளில் ஆழமாகத் தோண்டியபோது, நீரோடை இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. சரஸ்வதி நதியின் விளக்கம் முக்கியமாக ரிக்வேதத்தில் காணப்படுகிறது, அதில் சரஸ்வதி "நதிகளின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர, மகாபாரதம், புராணங்கள் (மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம்) மற்றும் பல நூல்களிலும் இதன் குறிப்புகள் உள்ளன. தொல்பொருள் மற்றும் நிலவியல் ஆய்வுகளின்படி, சரஸ்வதி நதி ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகள் வழியாகப் பாய்ந்ததாகவும் தற்போது அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் வெளியீடு திரைப்படங்கள் சொல்லும் கதை என்ன? இறுதிப் பட்டியலில் எத்தனை படங்கள்?8 ஜனவரி 2025 ஓயோ: மீரட்டில் திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அறை கிடைக்காதா? - புதிய விதி கூறுவது என்ன?8 ஜனவரி 2025 இந்த நீரூற்று சரஸ்வதி நதியை சேர்ந்தது என்பது உண்மையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கஜ்ரி ஜோத்பூர் விஞ்ஞானிகள் மற்றும் நிலத்தடி நீர் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளை ஆய்வு செய்தால், ஜெய்சல்மரில் உள்ள மோகன்கர் வயல்களில் வெளியான நீரோடை உண்மையில் அழிந்துபோன சரஸ்வதி நதியின் ஓடை என்று சொல்ல முடியாது. இருப்பினும், பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதிக்கான தேடல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது, இப்போது அது மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து நிலத்தடி நீர் விஞ்ஞானி நாராயணதாஸ் இன்கையா விளக்கமளிக்கையில், "சரஸ்வதி நதியின் ஓடை அறுபது மீட்டர் கீழே மட்டுமே இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இப்போது வெடித்த நீரோடை 360 மீட்டருக்கும் மேலான ஆழத்தில் இருந்து வந்துள்ளது." இருப்பினும், மூத்த நிலவியலாளர்கள், சுரங்க வல்லுநர்கள் மற்றும் சரஸ்வதி நதி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நாங்கள் அறிய முயன்றபோது, ஜெய்சல்மரில் நடந்த சமீபத்திய சம்பவம் பற்றி எதுவும் கூற முடியாது என்று பெரும்பாலான நிபுணர்கள் தெரிவித்தனர். நீர், மண் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே இப்போது சில உறுதியான கூற்றுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சரஸ்வதி நதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த குழுவின் தலைவருமான முனைவர்.ஜே.ஆர்.சர்மா, "ஜெய்சல்மரில் இப்போது வந்த தண்ணீர் சரஸ்வதி நதியில் இருந்து வந்ததா இல்லையா என்பது அந்த நீரை கார்பன்டேட்டிங் மூலம் காலக் கண்டக்கிடல் செய்த பிறகுதான் தெரிய வரும்" என்றார். "கார்பன்டேட்டிங் இந்த நீரின் வயதை வெளிப்படுத்தும். இது சரஸ்வதி நதியின் நீர் என்றால், குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்" என்று விவரித்தார். "இந்தத் தண்ணீர் பழைமையானதாக இருந்தால், இந்த பாலைவனத்திற்கு முன்பு இங்கிருந்த கடல் நீராக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நீரின் கார்பன்டேட்டிங் மும்பையிலுள்ள பாபா ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆய்வகத்தில் இருந்து செய்யப்படலாம்" என்றார் ஜே.ஆர்.சர்மா. ஹெச்.எம்.பி.வி: கொரோனா போன்றதா? பயப்பட வேண்டுமா? 7 முக்கிய கேள்விகளும் பதில்களும்8 ஜனவரி 2025 'கைதான நபர் திமுக அனுதாபி' - அண்ணா பல்லைகக்கழக மாணவி வன்கொடுமை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?8 ஜனவரி 2025 சரஸ்வதி நதியைக் கண்டறியும் முயற்சி பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,இந்தப் பகுதியில் நிலத்தடியில் சரஸ்வதி நதி புதைந்திருக்கலாம் எனப் பல அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஜூன் 15, 2002 முதல், சரஸ்வதி நதியின் வழித்தடத்தைக் கண்டறிய அகழாய்வு நடத்த அப்போதைய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜக்மோகன் அறிவித்திருந்தார். இந்தப் பணிக்காக அவர் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO), ஆமதாபாத்தின் பல்தேவ் சஹாய், தொல்பொருள் ஆய்வாளர் எஸ் கல்யாண் ராமன், பனிப்பாறை நிபுணர் ஒய்.கே. பூரி, நீர் ஆலோசகர் மாதவ் சித்தலே ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தனர். ஹரியாணா மாநிலம் அதிபத்ரியில் இருந்து பகவான்புரா வரை முதல் கட்ட அகழாய்வு முடிவடையும் என்றும், அதன் பிறகு ராஜஸ்தான் எல்லையில் உள்ள பகவான்புரா முதல் கலிபங்கா வரை இரண்டாம் கட்ட அகழாய்வு முடிவடையும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, எல்லையோர மாநிலங்களிலும் இந்தக் குழுவினர் சென்று தகவல்களைச் சேகரித்தனர். இந்த முதல்கட்ட தகவலின் அடிப்படையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு சரஸ்வதி நதி குறித்த அறிக்கையை நவம்பர் 28, 2015 அன்று வெளியிட்டது. மூத்த விஞ்ஞானிகளான முனைவர் ஜே.ஆர் சர்மா, முனைவர். பிசி பத்ரா, முனைவர். ஏகே குப்தா, முனைவர். ஜி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் அறிக்கை 'சரஸ்வதி நதி: ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த ஆய்வு' என்ற தலைப்பில் வெளியானது. இஸ்ரோவின் விண்வெளித் துறையின் ஜோத்பூரைச் சேர்ந்த பிராந்திய தொலை உணர் மையத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் பல பெரிய ஆறுகள் ஓடியதாக இந்த அறிக்கை கூறுகிறது. தற்போதைய சிந்து நதி அமைப்பைப் போலவே, வேத இலக்கியங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிக்கு இணையான நதி அமைப்பு இருந்தது, இது கிமு ஆறாயிரம் (அதாவது சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) ஒரு பெரிய நதியாக ஓடியது. சரஸ்வதி நதி அமைப்பு இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாகச் சென்று இறுதியாக குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்சில் கலந்தது. இமயமலைப் பகுதியில் தட்பவெப்ப நிலை மற்றும் கண்டத்தட்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, கி.மு.3000 வாக்கிலேயே, இந்த நதி வறண்டு முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78689z2n66o
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்! Published By: VISHNU 09 JAN, 2025 | 09:56 PM பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (9) காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 16,000 பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள் 5, கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். 4 முறை தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார். https://www.virakesari.lk/article/203442
-
பாகிஸ்தானில் 6 சகோதரர்கள் 6 சகோதரிகளை திருமணம் செய்த அதிசயம்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். அவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுடன் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திருமணம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர். https://thinakkural.lk/article/314475
-
மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்
இந்தியாவின் முதல் முயற்சி: Chennai-ல் Matsya 6000 Submarine எப்படி தயாராகிறது? |Samudrayaan சமுத்ரயான் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கருத்துரு மற்றும் வடிவமைப்பில், அதன் வளாகத்திலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியை பிபிசி தமிழ் குழுவினர் பார்வையிட்டோம். இந்த நீர்மூழ்கியை சென்னை கடல் பகுதியில் விரைவில் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக 2026இல் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்ஸயா 6000 குழுவினரை சந்தித்தோம். For the past three years, a team of scientists from the National Institute of Ocean Technology has been designing a submarine called Matsaya 6000 under the Samudrayan project. The BBC Tamil team visited the submarine, which is being developed on the premises of the National Institute of Ocean Technology, Pallikaranai, Chennai, based on the concept and design of scientists. Scientists will soon be testing the submarine in the Chennai sea area. We met the Matsaya 6000 team at the National Institute of Ocean Technology to learn more about this project, which will send humans to the deep sea for the first time in India by 2026. Producer: Subagunam Shoot and Edit: Wilfred Thomas
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
டக்கென்று ஞாபகத்தில் வந்தது உங்கள் இருவரையும் தான், அத்துடன் இருவரின் வட்சப் இருந்தபடியால் படுத்திருந்து கொண்டே செய்திகளை அனுப்பினேன். யாழிணையம் முகந்தெரியாத பல புதிய உறவுகளை வழங்கி இருக்கிறது. யாழுக்கும் அதை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்.
-
இங்கிவனை யான் பெறவே
மகாபாரதம் சிறுவயதில் வாசித்தும், அம்மப்பாவிடமும்(அப்பு) செவி வழி கேட்டும் வளர்ந்தாலும் மேலுள்ள ஆக்கம் அளவிற்கு பல்வேறு கோணங்களைக் காட்டியதில்லை! நன்றி பகிர்விற்கு கிருபன் அண்ணை.
-
குளிர்ந்த நீரில் நீச்சல்: பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி?
குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி? "கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது." என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா. ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். "எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்." என கூறுகிறார் அவர். அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எப்படி என்பதை அவரே விளக்குகிறார். "அப்படி நீச்சலடிப்பவர்களை நான் பார்த்துள்ளேன். தண்ணீரில் இருந்து ஹீரோ போன்று வெளியே வருவார்கள். குளிர்ந்த நீரில் நீச்சலடிக்க தைரியம் வேண்டும். ஒருநாள் நாங்கள் கடற்கரை சென்றோம். நீச்சல் உடையை அணிந்துகொண்டு கடலில் இறங்கினேன். இறங்கியதும் ஆச்சர்யமாக இருந்தது. என் உடலில் வலி இருந்தது, ஆனால் கடலில் இறங்கியதும் இதமாக இருந்தது." குறுகிய நேரம் குளிர்ந்த நீரில் மூழ்குவது உடல், மன நலனை மேம்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்களை விடுவிப்பதுடன் இது தொடர்புடையது என நிபுணர்கள் கூறுகின்றனர். "இது மன நலனை மேம்படுத்தியது, நம்பிக்கையும் தந்தது. எப்படி என தெரியவில்லை, ஆனால் இது வேலை செய்கிறது," என்கிறார் ஸ்விட்லானா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e3e42g4jjo காணொளிக்கு பிபிசி இணைப்பை அழுத்தவும்.
-
அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகள் - யாழ். சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்!
09 JAN, 2025 | 03:24 PM இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றிரவு 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன. தற்போது மீன்பிடி பருவ காலம். இந்திய இழுவைப் படகுகளின் இதுபோன்ற செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன். புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கிறார். அதுபோல இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/203406
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சமஷ்டிக்கு உதவ வேண்டும்; தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்தல் உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அரசியல் தீர்வாக பார்க்கப்படும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுக்காகவே தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. எனவே புதிய ஆட்சியாளர்கள் ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவரும்பொழுது அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி சந்திப்பில் பேசும்போதே தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி விடயத்தை ஒரே குரலில் எடுத்துக் கூறியுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தினக்குரலுக்கு கருத்து தெரிவிக்கையில்; புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கப்போவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அவ்வாறு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அதிகாரப்பகிர்வு இந்த சமஷ்டி முறைமையாகும். ஆகவே,ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக; இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலப்பட்டு சுதந்திரமாக அனைத்து இன மக்களும் வாழவேண்டுமாகவிருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமாகும். அந்த அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்று நாட்டில் உருவாகும்பொழுது மேற்படி தீர்வொன்றுக்கு அரசாங்கம் நகர்வதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டுமென எடுத்துக்கூறினோம். அதேபோல்,பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அமெரிக்காதான் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஆனால்,அத்தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பின்னடைவாக.எனவே ஜெனீவா தீர்மானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு அமெரிக்கா கூடியளவில் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தூதுவரிடம் எடுத்துக்கூறினோம். 70 வருடங்களாக மாறி மாறி வந்த அரசுகளினால் துன்பங்களை அனுபவித்த இனமாக தமிழர்கள் இருக்கிறார்கள். நாங்கள் (தமிழர்கள்) தான் பசியோடு இருக்கின்றோம்.ஏற்கனவே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் பேசி – பேசி தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். ஆகவே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதேபோல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட கூடாததாக இருக்கவேண்டும். அவ்வாறானதொரு தீர்வு ஏற்படும்பொழுதுதான் இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக-சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும்.இதற்கு பல நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன என்பதனையும் தூதுவரிடத்தில் சுட்டிக்காட்டினோம். அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய அரசியல் தீர்வு என்பது உலகத்தில் சமஷ்டி அடிப்படையில்தான் பகிரப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அந்த அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதற்கு அமெரிக்காவும் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம் என சிறீரீதரன் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314504
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு, கொந்தளித்த தி.க.வினர் - பாஜகவின் பி டீம் என குற்றச்சாட்டு பட மூலாதாரம்,@NAAMTAMILARORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குறித்து பெரியார் பேசியதாக, அவமதிக்கும் வகையிலான கருத்துகளை சீமான் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரின் சர்ச்சை கருத்து குறித்து வியாழக்கிழமை அன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சீமான். பெண்களை அவமதிக்கும் வகையில் பெரியார் பேசினார் என்று கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேள்வி எழுப்பியபோது, "அரசு மற்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது போன்று பெரியாரின் புத்தகத்தை நாட்டுடமையாக்குங்கள். அதில் உள்ளது ஆதாரங்கள்," என்று குறிப்பிட்டார். சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன பிரச்னை? முழு பின்னணி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? பெரியார் தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பல கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டி பேசிய சீமான், "பெரியார் தமிழ் மொழியை இப்படிப் பேசிவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தியலை இதே மொழியில்தான் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்," என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேற்கொண்டு பேசிய அவர், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார். பிறகு அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாகப் பேசுவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். முன்பு பெரியாரை தன்னுடைய தாத்தா என்று கூறியது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் கேட்ட போது, "முன்பு பெரியார் பற்றிய தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தற்போது தொடர்ச்சியாகப் படித்து வரும்போது எனக்கு அந்தத் தெளிவு கிடைத்துள்ளது" என்றும் கூறியுள்ளார் சீமான். திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்9 மணி நேரங்களுக்கு முன்னர் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம்: புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை (ஜனவரி 9), தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கூட்டமாக வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதுவையிலும் நாம் தமிழர் கட்சியின் கொடியைப் பறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் பேச்சைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புதுவை காவல்துறை கைது செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூறியதாக பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பியதற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் தெரிவித்தனர். சென்னை மட்டுமின்றி, தஞ்சாவூர், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 'சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, விஜய் கட்சி தொடங்கிய பிறகு, சீமானின் பேச்சுகள் அதிதீவிரமாக இருப்பதை உணர முடிவதாக சுபகுணராஜன் தெரிவித்தார் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய திராவிடர் கழக வட்டாரங்கள், "சீமானின் கருத்து குறித்து அதிகம் விவாதிக்க ஒன்றும் இல்லை. அவரின் பேச்சுகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இந்த வழக்குகளை எதிர்கொள்ளட்டும்," என்றும் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன், "தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. முன்பு திராவிடம் குறித்து அதிகமாக அவர் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் அவரின் சமீபத்திய பேச்சுகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கின்றன," என்றார். ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர், தங்களால் இயன்ற அளவு பெரியாருக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்ற காரணத்தால் தற்போது சீமானை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கொண்டு பேசிய அவர், "விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிமுகமான பிறகு, சீமானின் ஆதரவும், வாக்கு வங்கியில் சரிவும் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால், இங்கு அரசியல்மயமாக்கப்படாத வாக்காளர்களைத் தன்னுடைய கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்," என்று கூறினார். "சீமானின் கருத்துகள் அனைத்தும், சமூகத்திற்கு எதிரானது. அவருடைய பாணியில் அவருக்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் இதற்கு சட்டரீதியாக நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றும் சுபகுணராஜன் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சீமானின் பேச்சுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதியன்று வெளியிட்ட அந்தப் பதிவில், பேசாத ஒன்றைப் பேசியதாக சீமான் சொல்வது கண்டிக்கத்தக்கது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீமான் அவர்கள் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "பொதுவெளியில் பேசும்போது சிந்தித்துப் பேசுங்கள். வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியாரை இழிவுப்படுத்தும் விதத்தில் சீமான் பேசிய பேச்சு அநாகரிகமானது. முகம் சுளிக்கும் வகையில் பேசி இருப்பது வேதனையளிக்கிறது," என்று லயோலா மணி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ygy52n899o
-
மின்கலம் திருடனை தேடி 4 கிலோ மீற்றர் பயணித்த ஜோனி என்ற மோப்ப நாய்
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர். ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார். நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து மின்கலங்களுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203412
-
தொலைபேசிகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்திருக்கும் அறிவிப்பு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது என்று அவர் தெரிவித்தார். “முறையான தரநிலைகள் இல்லாமல் சட்டவிரோத தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டில் உள்ள நுகர்வோருக்கு இதுபோன்ற சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எமது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும். இதற்காக, இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இறுதியில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். “இந்த அமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த கையடக்க தொலைபேசிகளையும் பாதிக்காது என்பதுடன், வெளிநாட்டினர் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்கும் எந்த தடையும் ஏற்படுத்தாது என்றார். https://thinakkural.lk/article/314510
-
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்று
“தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும் தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அமைந்தது. தனது பத்தொன்பது வயதில் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் பண்டிதர், சைவப்புலவர் போன்ற பயிற்சி அனுபவத்தையும் பெற்றவராகவும் விளங்கிய இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் அவதரித்து தனது முயற்சியினாலும் கடின உழைப்பினாலும், ஆழ்ந்த அறிவினாலும். பக்தியினாலும், தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவியாக மிளிர்ந்தார். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்து இறக்கும் வரை தனது உடல்இ பொருள், ஆவி அனைத்தையும் ஆலயத்துக்கே அர்ப்பணமாக்கி ஆலயத்தினூடாகப் பல அறப்பணிகளை ஆற்ற முடியுமென நிரூபித்துக் காட்டினார். அம்மையாரின் பன்னூல், அறிவு, சொல்லாற்றல், ஆழ்ந்த பக்தி, நிர்வாகத்திறன், தலைமைத்துவப் பண்பு, பண்டைத்தமிழ், இலக்கியப்புலமை, சைவசித்தாந்த சாஸ்திர அறிவு, பன்னிரு திருமுறைப்பாராயணம், வேத ஆகம விளக்கம், இதிகாச புராண அறிவு போன்ற பன்முக ஆளுமை கொண்டவராக இவர் விளங்கினார். “சொந்த சுகதுக்கங்களையும் எல்லாவித இச்சைகளையும் மூட்டை கட்டிக் கடலில் எறிந்துவிட்ட பின்னரே தொண்டில் நாட்டங்கொள்ள வேண்டும்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்று இவ்விடத்தில் அம்மையாருக்குப் பொருந்தும். இத்தகைய தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் என்னும் உருவாக்க ஆளுமையில் அம்மாவின் பங்கு மிகவும் காத்திரமானது. அவரது வழிகாட்டலும் ஆளுமைத்திறனும் சமூகம் சார் சிந்தனையில் உலக வரலாற்றில் பேசப்படும் ஆலயமாக உயர்த்தியது. ஒரு சைவப் பெண்மணியாக ஆலயத்தை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நல்ல முகாமையாளராக இவர் பணியாற்றியுள்ளார். ஆலயத்தை மக்கள் நேசிக்கும் இடமாக, அருளை வழங்கும் இடமாக, நம்பிக்கைக்குரிய இடமாக மாற்றியவர் இவர். சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆலயத்தை இணைத்து ஒப்பற்ற சமூகக் கருவியாக்கி வழிநடத்தி ஆலயமும் வளர்ச்சி கண்டது. இதனைச் சார்ந்த மக்களும் வளர்ச்சி அடைய வழிகாட்டியவர் அன்னை. பக்தியை வளர்க்கும் மூலமாகவும் கல்வியை வழங்கும் கல்விச்சாலையாகவும், மருத்துவத்தை வழங்கும் மருத்துவச் சாலையாகவும், அல்லற்பட்டோரை வாழ்விக்கும் சமுதாய நிலையமாகவும், கலைகளை வளர்க்கும் கலைக்கோயிலாகவும், தமிழை வளர்க்கும் சங்கமாகவும், இவ்வாலயம் அம்மையாரால் மாற்றப்பட்டது என்பதே உண்மை ஆகும். அம்மையாரின் சொற்பொழிவுகள், எழுத்துக்கள், என்பன இதற்குக் காரணமாகின. அவரின் நாவசைவின் மூலம் ஆயிரமாயிரம் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி ஈர்த்து சமூகப்பணிகளுக்கு வேண்டிய உதவிகளை அம்மா அவர்கள் பெற்றார். இவ் ஈர்ப்பு என்பது மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக மாறியமையே இவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததென்றால் மிகையில்லை. இதன் விளைவே இன்று “துர்க்காபுரம்” என்னும் ஒரு கிராமம் விரிவாகவும் துர்க்காபுரம் மகளிர் இல்லம், அன்னையர் இல்லம், சைவத்தமிழ் ஆய்வு நூலகம், திருமகள் அழுத்தகம், ஆயுள்வேத வைத்தியசாலை, நூல்வெளியீடுகள், பதிப்புக்கள், சமூக உதவிகள் என விரிவடைந்து தனித்துவமான ஆலயமாக உருவாகுவதற்கு வழிசமைத்த வகையில் அம்மாவின் பங்களிப்பு காத்திரமானது. ஏனைய சைவ ஆலயங்களுக்கும், இந்து நிறுவனங்களுக்கும் வழிகாட்டியதன் பெயரில் சைவத்தமிழ் வரலாற்றில் அம்மையாருக்கென்று அழிக்கமுடியாத ஒரு பதிவாகிறது. “ஒரு சமூகத்தில் ஒரு பெண்மணி வேலையை மனிதாபிமான ஊழியமாக மாற்றிக் கொண்டுள்ளமை பெருத்த ஆச்சரியத்தை விளைவித்தது.” என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. மேலைத்தேயத்தவர்களின் வருகையினால் வீழ்ச்சி அடைந்த இந்துப் பண்பாட்டு மரபுகள் ஆறுமுகநாவலரினால் மறுமலர்ச்சி பெற்றது என்பதும் இது அன்னையினால் துர்க்காதேவி ஆலயத்தோடு இணைந்து சைவத்தமிழ்ப் பண்பாடு மேலும் ஒருபடி வளர்ச்சியடைந்தது என்றால் மிகையில்லை. துர்க்கையம்மன் ஆலயம் பண்பாட்டு வளர்ச்சியின் இருப்பிடம் என்னும் அளவிற்கு இங்கு நடைபெறும் ஆலய விழாக்கள், கலைகள், சொற்பொழிவுகள் நூலாக்கங்கள், நூலகம், வைத்தியசாலை, பெண்கள் கல்வி, பழக்கவழக்கங்கள், திருமணம், முத்தமிழ் வளர்ச்சி, சரியைத் தொண்டு, கூட்டுவழிபாடுகள் என்ற அனைத்தும் பண்பாடு சார்ந்ததாக அமைய வழிகாட்டியவர் அம்மா. இத்தகைய பண்பாட்டு நிலைக்கழத்தின் உச்சமாக விளங்கிய ஆலயத்தின் உன்னத பணியாக அம்மாவால் ஆரம்பிக்கப்பட்டதே திக்கற்ற பெண்பிள்ளைகளுக்கான துர்க்காபுரம் மகளிர் இல்லமாகும். வறுமை, யுத்தம், பெற்றோர் இழப்பு, நோய் போன்ற பல்வேறு காரணிகளினால் பாதிக்கப்பட்ட பெண்குழந்தைகளை வளர்த்து கல்வி அளித்து கலை கலாசாரம் பண்பாடு விழுமியம் போன்றவற்றைக் கற்பித்து சமூகத்தில் அவர்களும் தலைநிமிர்ந்து வாழக்கூடியதாக அமைத்த பெருமை அம்மாவுக்கே உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் இவ்வில்லத்தில் இருந்து வளர்ந்து பல்வேறுபட்ட பதவிகளிலும் பணிகளிலும் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். இன்னும் இவ்வில்லம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் தலைமையில் தர்மகர்த்தா சபை. நிர்வாக சபையினரின் ஒத்துழைப்பில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வியிலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் இவர்கள் பெருவெற்றியைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வில்லம் ஆரம்பித்த காலம் முதல் அம்மா இறக்கும் வரை பேச்சும் மூச்சும் பிள்ளைகளாகவே இருந்தது. பிள்ளைகளின் கல்வி, உடை, உணவு ஏனைய செயற்பாடுகள் யாவற்றையும் சிந்தித்து செயல்திறன் கொண்ட பணிகளை அம்மையார் தொடர்ந்தார். இதனால் பிள்ளைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் கலைகளிலும் சிறப்புற்றனர். கல்வி, இசை, யோகாசனம், தொழிற்பயிற்சி, ஆன்மீக நாட்டம், கலையுணர்வு, பிரசங்கமென எவ்வெவ் துறைகளில் அவர்களுக்கு ஈடுபாடு உள்ளதோ அந்தவகையில் அவர்களைப் பயிற்றுவித்தார். நோயுற்ற காலத்தில் தாயாகவும், கல்வியளிப்பதில் குருவாகவும், கண்டிப்பில் தந்தையாகவும், சமயத்தில் ஆன்மீகவாதியாகவும், தன்னுடைய சகல ஆளுமைத் திறன்களையும் பிள்ளைகளும் பின்பற்றி நடந்ததற்கான கடமை, நேர்மை, நேரமுகாமைத்துவம் என அனைத்து விடயங்களிலும் அவரைப் பின்பற்றக் கூடியதான ஒழுங்குமுறையுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யாத்திரைகள், கூட்டுவழிபாடுகள், குருபூசைகள், ஆண்டு விழாக்கள், பரிசில் வழங்கல், போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், மாணவர் மன்றமென அவர் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் பிள்ளைகளை வழிப்படுத்தினார். இவ்வாறு இல்லப்பிள்ளைகளை இருபத்துநான்கு மணி நேரமும் அவரது கண்காணிப்பும், வழிகாட்டலும் இடம்பெறுவது வழமையாகும். இடம்பெயர்ந்து இராமநாதன்கல்லூரி, கைதடி சைவச்சிறுவர் இல்லம், உசன்கந்தசாமி ஆலய வளாகம் எனத் தங்கியிருந்த போதும் கோழிகள் தன் குஞ்சுகளைக் காவிக் கொண்டு திரிவது போல அம்மையார் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாது. தாய் தன் பிள்ளைகளில் எவ்வாறு அன்பு வைப்பாரோ அதற்குச் சற்றும் குறைவுபடாது நோய் வந்த காலத்திலும் சரி, அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுப்பதிலும் சரி அவர்காட்டும் ஈடுபாடும், அன்பும் முன்மாதிரியான செயற்பாடுகள் ஆகும். அவர்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் அன்புத்தாயாகவும், பெரியம்மாவாகவும், அநாதைகளின் இரட்சகியாகவும், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவராகவும் விளங்கினார். “கோயில் என்பது நவீன சமூக அமைப்பிலே மானசீக உணர்வுகளைத் தக்கபடி நெறிப்படுத்தும் குறியீடாகவும் அமையும் எனலாம். சமூக மக்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆற்றலையும், ஆக்க சக்தியையும் பூரணமாக வெளிக்கொணர உதவும் வகையில் சமுதாயத்தில் கோயிலின் இடம் அமைகின்றது.” என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றை மெய்ப்பித்தவர் அம்மா. தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம், பெண்கள் தொண்டர் சபையினர், மகளிர் இல்லம், அன்னையர் இல்லம் போன்றவற்றினூடாக சமூகத்தை ஆலயத்தோடு இணைத்து வழிநடத்தியவர் அம்மா. அம்மாவின் வழிநடத்தலில் பத்தொன்பது ஆண்டுகள் வளர்ந்து பல்கலைக்கழகம் சென்று ஆசிரியையாகி இன்று புலம் பெயர் தேசத்தில் கடமையாற்றும் என்னைப் போன்ற எத்தனையோ பெண் குழந்கைகளை வளர்த்து ஆளாக்கிய எம் தாயை என்றும் எம் உள்ளத்தில் இருத்தி வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும். நூற்றாண்டு காணும் இந்நாளில் அம்மா அவர்களின் பணிகளில் ஒரு சிறு பகுதியை நினைவு கூர்ந்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகின்றோம். தவனேஸ்வரி சிவகுமார் (BA (u;ons) Dip.in.Edu,MA) https://www.virakesari.lk/article/202776
-
இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
வி.நாராயணன்: இஸ்ரோ தலைவராக மீண்டும் ஒரு தமிழர் - அரசுப் பள்ளியில் பயின்று சாதித்த பின்னணி பட மூலாதாரம்,ISRO 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை வல்லுநரான முனைவர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் ஏற்கனவே இஸ்ரோ தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராகிறார். சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம், ககன்யான் திட்டம் என இந்தியாவின் விண்வெளித் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு அடுத்ததாக அவர் பதவியேற்கவுள்ளார். முனைவர் நாராயணன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக இருந்து வருகிறார். சந்திரயான் 1, 2, 3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, ககன்யான் திட்டம் ஆகிய முக்கியத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார். இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத் தகவல்களின்படி, இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் நாராயணனின் பங்கு மிகவும் முக்கியமானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக உயர்ந்தது எப்படி? அவர் செய்த சாதனைகள் யாவை? முழு பின்னணியைப் பார்க்கலாம். புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி? மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள் பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல் விண்வெளியில் இஸ்ரோ நிறுவும் ஆய்வு மையம் என்ன செய்யப் போகிறது? விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவம் முனைவர் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, இஸ்ரோவில் உதவியாளர் நிலையில் பணிக்குச் சேர்ந்து, இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். இதற்குப் பின்னால் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை," என்று பாராட்டியுள்ளார். மேலும், "அவரது பயணம், பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்," என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உறுப்பினராக இணைந்த போது நாராயணனின் இஸ்ரோ பயணம் தொடங்கியது. அவரது ஆரம்பக்கால ஆண்டுகளில், சவுண்டிங் ராக்கெட்டுகள், ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஆகியவற்றுக்கான திட உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் பணியாற்றினார். சதீஷ் தவன்: ராக்கெட் தொழில்நுட்பத்தை அடித்தட்டு மக்களுக்காக பயன்படுத்த நினைத்த விஞ்ஞானி25 செப்டெம்பர் 2024 நாசா கைவிட்ட நிலா ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்குமா? ரூ.3,767 கோடி ரோவர் என்ன ஆகும்?29 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1989ஆம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் எம்.டெக் கிரையோஜெனிக் பொறியியல் பாடப்பிரிவில் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தச் சாதனை, கிரையோஜெனிக் உந்துவிசையில் அவரது பணியின் தொடக்கமாக அமைந்தது. பிற்காலத்தில் அந்தத் துறையில் தவிர்க்க முடியாத வல்லுநராக உயர்ந்தார் முனைவர் நாராயணன். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் பணியாற்றி வரும் அவர், ராக்கெட் உந்துவிசை, கிரையோஜெனிக் அமைப்புகள், செயற்கைக்கோள் உந்துவிசை ஆகிய துறைகளில் அற்புதமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததாக எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. சந்திரயான், மங்கள்யான் உள்பட இஸ்ரோவின் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கடந்த 40 ஆண்டு அனுபவம் மற்றும் அவரது நிபுணத்துவம் இஸ்ரோவின் மேம்பட்ட உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் தயார் - இஸ்ரோ அனுப்பும் விண்கலம் நிலவில் என்ன செய்யும்?21 செப்டெம்பர் 2024 ஸ்பேடெக்ஸ் என்பது என்ன? இதன் மூலம் விண்வெளியில் இஸ்ரோ என்ன சாதிக்க நினைக்கிறது?31 டிசம்பர் 2024 இஸ்ரோவில் அவரது பங்களிப்பு பட மூலாதாரம்,ISRO இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். "அவரது பங்களிப்புகள் சிக்கலான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்தியது. 2017-2037 வரையிலான 20 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் உந்துவிசை திட்டங்களுக்கான பாதையை அவர் இப்போதே இறுதி செய்துவிட்டார்," என்று எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. விண்வெளிப் பொறியியலில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் ஐஐடி காரக்பூரில் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கி முனைவர் நாராயணன் கௌரவிக்கப்பட்டார். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள் தமிழ்நாட்டிலும் கிடைப்பது எப்படி? புதிய ஆய்வு சொல்வதென்ன?8 ஜனவரி 2025 மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,ISRO முனைவர் நாராயணனின் தலைமை இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் எதிர்காலத்தை வடிவமைத்துள்ளதாகவும் அவரது பங்களிப்பு இஸ்ரோ முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதாகவும் எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் இயக்குநராக, 41 ராக்கெட் மற்றும் 31 விண்கலப் பயணங்களுக்கான 164 திரவ உந்துவிசை அமைப்புகளை வழங்குவதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார். 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு முனைவர் நாராயணன் அளித்துள்ள பேட்டியில், இஸ்ரோ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது "ஒரு மிகப்பெரிய பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவை வழிநடத்தப் போகும் அவரது தலைமையில், அதன் எதிராகல்த் திட்டங்களான ககன்யான், சந்திரயான்-4, இந்திய விண்வெளி நிலையம், மங்கள்யான்-2, சுக்ரயான் ஆகிய முக்கியத் திட்டங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mvm0j7m2zo
-
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
Published By: VISHNU 08 JAN, 2025 | 09:23 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து குறித்த கிராம அலுவலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203354
-
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவிற்கு கல்லறையில் அஞ்சலி
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவோம் - நீதியமைச்சர் Published By: DIGITAL DESK 7 08 JAN, 2025 | 07:35 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் உட்பட பல ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் லசந்த விக்கிரதுங்கவின் மரணம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதியமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பிலும் அந்த சம்பவம் தொடர்பில் நீதி, நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார். லசந்த விக்கிரமதுங்கவின் விவகாரத்துக்கு நீதியை நிலைநாட்டுவோம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் வழக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/203329
-
முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்துவீச்சால் 72 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. போட்டியை பொறுத்தவரையில் முதலிரண்டு இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 157 மற்றும் 363 ஓட்டங்களும், ஜிம்பாப்வே அணி 243 மற்றும் 205 ஓட்டங்களும் அடித்தன. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரசீத் கான், 7/66 என ஒரு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளராக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் 1-0 என தொடரை வென்று அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி. தங்களுடைய முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரையே வென்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்துள்ளது. சிறந்த பந்துவீச்சு: ஒரு ஆப்கனிஸ்தான் பந்து வீச்சாளராக சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவுசெய்த ரஷீத் கான், 7/66. 2வது சிறந்த அணி: முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று இரண்டாவது சிறந்த அணியாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது. முதலிடத்தில் 6 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா உள்ளது. ரஷீத் கான் சாதனை: ஒரு பந்து வீச்சாளர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 ஓட்டங்களுக்கு மேல் அடித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 10வது முறையாகும். இதில் இரண்டுமுறை இந்த சாதனையை படைத்த முதல் வீரராக ரசீத் கான் சாதனை. 45 விக்கெட்டுகள்: 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரஷீத் கான், 19ம் நூற்றாண்டில் கிரிக்கெட் விளையாடிய ஆஸ்திரேலியா பவுலர் சார்லி டர்னருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த சாதனையை தென்னாப்பிரிக்கா பவுலர் பிலேண்டருடன் சமன்செய்துள்ளார் ரஷீத் கான். https://thinakkural.lk/article/314481
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி
திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பம் - 450 பேர் உயிருடன் மீட்பு 08 JAN, 2025 | 02:47 PM திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொலைதூர பகுதிகளில் உயிருடன் இருக்ககூடியவர்கள் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது. 450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடும் குளிர் நிலவுகின்றது இதனால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள சீனஊடகங்கள் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான சீனாவின் துணை பிரதமர் திபெத் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளன. இந்த பகுதி ஒரு பெரிய பிழைக்கோட்டில் அமைந்துள்ளதால் இங்கு பூகம்பங்கள் என்பது பரவலான விடயம். எனினும் செவ்வாய்கிழமை பூகம்பம் சமீபத்தைய சீன வரலாற்றில் மிக மோசமான ஒன்று. ரிச்டர் அளவையில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் நேபாளம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திபெத்தினை சீனா கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . இங்கு இணையசேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு;ள்ளன, அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்தியாளர்கள் செயற்பட முடியாது. இதன் காரணமாக பூகம்பம் குறித்து சீன ஊடகங்களின் மூலமே அறிந்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் பகுதிகளில் மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணியாளர்களிற்கு உதவுவதற்காக சீன விமானப்படையின் விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். 30,000 மக்கள் அந்த பகுதியில் இடம்பெயர்ந்துள்ளனர் என சீன அரசாங்கத்தின் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. பூகம்பம் மையம் கொண்டிருந்த டிங்கிரி கன்ரியில்; தொலைபேசி இணையசேவைகளை சரி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 35000 கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/203310
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு? பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 8 ஜனவரி 2025, 04:25 GMT தென்னிந்தியாவில் கிடைக்கும் குறியீடுகளுடன், சிந்து சமவெளியில் கிடைக்கும் குறியீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 90 சதவீதம் அளவுக்கு ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறது புதிய ஆய்வு ஒன்று. சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சிந்துவெளிப் பண்பாட்டைக் கண்டுபிடித்து அறிவித்த பிரிட்டிஷ் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ஓர் ஆய்வின் முடிவு பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது. 'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' என்ற இந்த ஆய்வை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே. ராஜனும் ஆர். சிவானந்தமும் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகளின்படி, சிந்துவெளி நாகரீகத்தில் கிடைக்கும் எழுத்துகள் மற்றும் குறியீடுகளுக்கும் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் கிடைத்த பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் பெருமளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளியில் வளர்ச்சியடைந்த ஒரு எழுத்து முறை இருந்தது பல ஆதாரங்களின் மூலம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள், முத்திரைகள், மட்பாண்ட ஓடுகள், உலோகப் பொருட்கள் ஆகிவற்றில் இருந்து கிடைத்தன. இம்மாதிரி கிடைத்த 4,000 பொருட்களில் இருந்து சுமார் 450 தரப்படுத்தப்பட்ட குறியீடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிந்து சமவெளி: சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் வாழ்வியலை கொண்ட பண்டைய நாகரிகம் 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளின் ரகசியம் என்ன? முத்திரைகளில் மத அடையாளமா? தோலாவிரா: ஆரியர் படையெடுப்பால் அழிந்து போனதா இந்த சிந்து சமவெளி நகரம்? மிக நீளமான வாக்கியம் பொதுவாக எழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் சித்திர எழுத்துகள், பிறகு ஒரு கருத்தை வெளிப்படுத்துவதைப் போன்ற சித்திரங்கள், அதன் பின் ஒரு வார்த்தையை குறிக்கும் வகையிலான முத்திரைகள் இறுதியாக ஒரு ஒலியைக் குறிப்பிடும் எழுத்துகள் என வளர்ச்சியடைகின்றன. சிந்துவெளியில் கிடைத்த தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பொறுத்தவரை, அவை சித்திரங்களை எழுத்தாகப் (Logo-syllabic) பயன்படுத்தும் எழுத்து முறையை சார்ந்தவை என்றே பலரும் கருதுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. சிந்து சமவெளியில் கிடைத்த வாக்கியங்கள் 4-5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட வாக்கியங்களில் பத்து குறியீடுகள் இருந்தன. தோலாவிராவில் கிடைத்த ஒரு பலகையில் 10 எழுத்துகள் இருந்தன. இதுவரை கிடைத்தவற்றிலேயே மிக நீளமான வாக்கியத்தில் 26 எழுத்துகள் இருந்தன. ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஓர் அலசல்7 ஜனவரி 2025 பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்துவெளி எழுத்துகள் பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகவில்லை என்பது சிந்துவெளி குறியீடுகளில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம் என்கிறது இந்த ஆய்வு. அந்த பரிணாம வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே அவை தரப்படுத்தப்பட்டுவிட்டன. மேலும், பிராந்திய ரீதியான வேறுபாடுகளும் அக்குறியீடுகளில் இல்லை. கமில் ஸ்வலபில், அஸ்கோ பர்போலா, சுனிதி குமார் சாட்டர்ஜி ஆகியோர் சிந்துவெளி குறியீடுகள் தொல் திராவிட மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். ஆனால், வேறு சில ஆய்வாளர்கள் அவை இந்தோ - ஐரோப்பிய மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். மைக்கல் மிட்சல், ஸ்டீவ் ஃபார்மர் போன்றவர்கள் அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, வெறும் குறியீடுகள் மட்டுமே என்கிறார்கள். பகதா அன்சுமாலி முகோபத்யாய், இந்தக் குறியீடுகள் பொருளியல் சார்ந்த வடிவவியலைக் கொண்டவை என்றும் அவற்றுக்கு ஒலி கிடையாது என்றும் சொல்கிறார்கள். வங்கிக் கடன் - கிரெடிட் ஸ்கோர் என்ன தொடர்பு? சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி? 5 முக்கிய விஷயங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை7 ஜனவரி 2025 திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்ச்சி பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN இந்த சிந்துவெளி எழுத்துகளைப் புரிந்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐராவதம் மகாதேவன், பகதா அன்சுமாலி முகோபத்யாய் ஆகியோர் இதில் சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம், சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்வதிலும் பல ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே சிந்துவெளி குறியீடுகளையும் தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த குறியீடுகளையும் இந்த ஆய்வு ஆராய்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 140 தொல்லியல் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 15,184 பானை ஓடுகளில் இருந்து, 14,165 பானை ஓடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2,107 குறியீடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிலிருந்து 42 குறியீடுகள் அடிப்படைக் குறியீடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 544 குறியீடுகள் அவற்றின் வேறுபாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN இப்படி தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிடைத்த பல குறியீடுகள் சிந்து வெளி எழுத்துகளுக்கு இணையாக விளங்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்ட 42 குறியீடுகள் மற்றும் அவற்றை ஒத்த குறியீடுகளில் 60 சதவீத குறியீடுகளுக்கு இணை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளில் கிடைத்துள்ளன. இவை தற்செயலாக நடந்திருக்க முடியாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும், சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் எவ்வித தடயங்களும் இல்லாமல் மறைந்திருக்காது என்ற அடிப்படையில் அவை வெவ்வேறு வடிவங்களாக மாறியிருக்கும் அல்லது பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கும் என நம்புகிறார்கள். கோவை: பிறந்த நாளன்று ஆடியோ பதிவிட்டு இறந்த மாணவர் - கல்லூரிகளில் உளவியல் ஆலோசனை தீர்வாகுமா?7 ஜனவரி 2025 அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்7 ஜனவரி 2025 வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN தென்னிந்தியாவில் ஒரே வகையான குறியீடுகள் கிடைப்பது, தென்னிந்தியாவுக்கும் சிந்துவெளி நாகரீகத்துக்கும் இடையில் இருந்த ஒருவித பண்பாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால், இதை உறுதிசெய்யக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்பதையும் இந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிந்துவெளி பண்பாடு செப்புக் காலத்தில் இருந்தபோது, தென்னிந்தியா இரும்புக் காலத்தில் இருந்தது. ஆகவே, இரு பகுதிகளுக்கும் இடையில் நேரடியாகவோ இடைநிலை மண்டலங்கள் வழியாகவோ பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம். தென்னிந்தியாவில் உள்ள இரும்புக் கால கல்லறைகளில் கிடைக்கும் சூது பவளம், அகேட் மணிகள், செப்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் ஆகியவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்திருக்கலாம் என்கிறது ஆய்வு. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்து சமவெளி நாகரீகம் முடிவுக்கு வந்ததற்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, அவர்கள் தங்களுடன் தங்கள் மொழி, கலாசாரம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வை மொழியியல் ரீதியான ஒப்பீட்டு ஆய்வு என்பதைவிட வடிவரீதியிலான ஒப்பீட்டு ஆய்வு என்று சொல்வதே சரி என்கிறார்கள் ஆய்வாளர்கள். பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள் அல்லது எழுத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழியைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து சிந்துவெளிப் பண்பாடு குறித்தான ஆராய்ச்சிக்கு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கும் பொருட்டு இரண்டு கோடி ரூபாய் நிதி நல்கை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0r5de2pqvo