ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
Everything posted by ஏராளன்
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழக வெற்றி கழக மாநாடு - வெற்றிக் கொள்கை திருவிழா தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் - தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஒன்றி தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி எனும் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை எனும் கிராமத்தில் வெற்றி கொள்கை திருவிழா எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு மாலை நான்கு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொண்டர்கள் காலை 7:00 மணியில் இருந்து மாநாட்டு திடலில் திரண்ட ஆரம்பித்தனர். மதியம் ஒரு மணிக்குள் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அவர்களின் பாதுகாப்பு கருதி, மாநாடு மூன்று மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான - கலை வடிவங்களான பறை இசை, ஒயிலாட்டம் ,மயிலாட்டம் ஆகியவற்றுடன் மாநாடு தொடங்கியது. ஐந்து லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டனர். மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலையிலிருந்து விழுப்புரம் வரை ஏறத்தாழ ஆறு கி. மீ. அளவிற்கு நெடுஞ்சாலை முழுவதும் தொண்டர்கள் ஆக்கிரமித்திருந்தனர். மக்களுக்கான அரசியல் முன்னிலைப்படுத்துவோம் என கூறி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநாட்டு திடலில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தமிழகத்தை சார்ந்த தியாகிகள்- அவர்களின் கட் அட்டுகள் இடம் பிடித்திருந்தன. அத்துடன் அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் - பெருந்தலைவர் காமராஜர் - வீரமங்கை வேலு நாச்சியார்- சமூக நீதி வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து தலைவர்களின் கட் அவுட்களும் இடம் பிடித்திருந்தன. இந்த ஐவரும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைக்கான தலைவர்கள் என அக்கட்சியின் தலைவரான விஜய் அறிவித்தார். திட்டமிட்டபடி மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் நான்கு மணி அளவில் வருகை தந்தார். மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் வணக்கம் தெரிவித்த அவர் தொடர்ந்து மாநாட்டு திடலில் தொண்டர்களை பார்ப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதையில் பயணித்து தொண்டர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தார். இந்தத் தருணத்தில் தொண்டர்கள் அவரைக் கண்ட உற்சாகத்தில் தோளில் கிடந்த கட்சியின் துண்டை அவர் மீது வீச அதனை அவர் லாவகமாக கையால் பிடித்து தனது தோளில் அணிந்து கொண்டார். உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதனை பின்பற்ற அவற்றில் பல துண்டுகளை தன் கைகளால் எடுத்து தோளில் அணிந்து கொண்டார். அவரது இந்த செயல் தொண்டர்களிடையே உற்சாக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் - சுதந்திரப் போராட்ட தியாகிகள் - தமிழ் மொழிக்காக உயிர்த்திறந்த வீரர்கள் ஆகியோர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ராகுகாலம் நாலரை மணிக்கு தொடங்கி விடும் என்பதாலும் அவசரம் அவசரமாக ராகு காலத்திற்கு முன் அக்கட்சியின் கொடியை தலைவரான விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்றினார். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி உயர கட்சியின் கொடியை தலைவர் விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்ற மெல்ல மெல்ல உயர்ந்து பறந்தது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளும், செயல் திட்ட வரைவு அறிக்கையும் வாசிக்கப்பட்டது. இதில் பல விடயங்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக தமிழ் ஆட்சி மொழி - வழக்காடு மொழி - வழிபாட்டு மொழி மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்கப்படும். ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல். பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வைகை நதி நாகரீகம் வெளிக்கொணர முன்னுரிமை ஆவின் பால் நிறுவனம் கருப்பட்டி பால் விற்பனை துப்புரவு தொழிலாளிகளுக்கு கைத்தறி ஆடை- அரசு ஊழியர்கள் மாதம் இருமுறை கைத்தறி ஆடை- அணிய பரிந்துரை மாவட்டம் தோறும் காமராஜர் முன்மாதிரி பள்ளி தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி. என். ஆனந்த், தலைவர் விஜய்க்கு வீரவாள் ஒன்றை பரிசாக அளித்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் தலைவர் விஜய்க்கு இந்திய அரசியல் சாசன புத்தகம் - ஸ்ரீ மத் பகவத் கீதை - திருக்குர்ஆன்- பைபிள் - ஆகியவற்றை பரிசாக வழங்கினர். பின்னர் விஜய் பேசத் தொடங்கினார். அவரது உரையில், '' நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால் அவர் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக பேரறிஞர் அண்ணா சொன்ன 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் நம் கொள்கை. நேர்மையான நிர்வாகத்தை தந்த காமராஜர் - அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் - வீராங்கனைகள் வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய ஐவர்கள் தான் நம் கொள்கை தலைவர்கள். பிளவுவாத சித்தாந்த அரசியலையும், எளிதில் கண்டறியாத புரையோடி போன ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கரப்ஷன் கபடதாரிகள்- மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றி தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க போவது பெண்கள் தான். மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள். பெண்கள் -குழந்தைகள் பாதுகாப்பு - கல்வி -மருத்துவம் - பாதுகாப்பான குடிநீர் - ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நம்மை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பார்கள். மக்கள் தங்களுடைய ஒற்றை விரலால் அழுத்தம் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும். அதே தருணத்தில் நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம்முடன் வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்'' என்றார். மாநாட்டின் சிறப்பம்சங்கள்: மாநாட்டு திடலில் மேடையில் கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் - பொருளாளர் - தலைமை நிலைய செயலாளர்- கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் - என ஐந்து இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர்களான எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருடன் திரை உலகத்தைச் சார்ந்த நடிகர் ஸ்ரீமன் மற்றும் நடிகர் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவருடைய பேச்சு ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், உணர்ச்சி பெருக்குடனும் இருந்ததாக ரசிகர்கள்- தொண்டர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்தனர். எம்ஜிஆர் - என்டிஆர் - ஆகியோரையும் மறவாமல் தன் பேச்சில் குறிப்பிட்டார் விஜய். https://www.virakesari.lk/article/197343
-
மன்னார் மாவட்டத்தில் முதலாவது நீர் விநியோகம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் , அரசாங்க திணைக்கள அதிகாரிகள் வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது கட்டுக்கரை குளத்தில் 8.3 அடி நீர் காணப்படுகிறது.மேலும் கட்டுக்கரை குளத்திற்கு நீர்வரத்து காணப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் வினியோகமானது இன்றையதினம் இடம் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/197330
-
பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?
பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம் எழுதியவர்,ஆசிரியர் குழு பதவி,பிபிசி முண்டோ ‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக்கி இந்தாண்டு தன் பணியை தொடங்கியது. அதன் ஒரு சதவிகித பணிதான் இந்த முப்பரிணாம வரைபடத்தின் முதல் பகுதி. (ஓர் ஒளி ஆண்டு = ஓர் ஆண்டில் ஒளி கடக்ககூடிய தூரம் - அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்) ஆறு ஆண்டுகள் நீடிக்கும் இப்பணி மூலம், நுண்ணிய தகவல்களுடன் கூடிய பிரபஞ்சத்தின் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள். விண்வெளியின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த ஏராளமான தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும். எத்தனை கேலக்சிகள்? வரைபடத்தின் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒரு பகுதியில் மட்டுமே கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன, என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார் யூக்ளிட் காப்பகத்தின் பொறுப்பாளரான விஞ்ஞானி புரூனோ அல்டீரி. “பல்வேறு வகையான விண்மீன் திரள்கள் தொடர்புடைய இடங்கள், காலப்போக்கில் அவை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன, பல நூறு கோடி ஆண்டுகளாக அவை ஏன் நட்சத்திரங்களை உருவாக்கவில்லை என்பது பற்றிய புள்ளிவிவரங்களை இதன்மூலம் உருவாக்க முடியும்,” எனவும் அவர் தெரிவித்தார். விண்வெளியின் மூன்றில் ஒரு பகுதியை 2030-ஆம் ஆண்டுக்குள் வரைபடமாக்கும் தங்கள் இலக்கை அடைய முடியும் என, விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA படக்குறிப்பு, யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது பிரபஞ்சம் குறித்த மாபெரும் புதிர் தனது பணியின் முதல் படியில், யூக்ளிட் தொலைநோக்கி வானத்தின் தெற்கு அரைக்கோளத்தின் 132 சதுர டிகிரி பகுதியைப் படம்பிடித்தது. இது சந்திரனின் மேற்பரப்பை விட 500 மடங்கு அதிகம். இதன் மூலம் ‘பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் ஜிக்சா புதிரைப் போன்று’ இந்தத் தொலைநோக்கி உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் அந்த ஜிக்சா புதிரின் பகுதிகள் சேர்க்கப்படும். "இது பிரபஞ்ச வரைபடத்தின் 1% தான். ஆனால், இந்த ஒருபகுதி மட்டுமே பல்வேறு வகையான ஆதாரங்களால் நிரம்பியுள்ளது. இதன்மூலம் பிரபஞ்சத்தை விவரிக்கப் புதிய வழிகளை விஞ்ஞானிகள் கண்டறியக் கூடும்," என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் யூக்ளிட் திட்ட விஞ்ஞானி வலேரியா பெட்டோரினோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த வரைபடத்தின் மிக முக்கியமான விஷயம், அடர்த்தியான கரும்புள்ளிகளால் ஆன பிரகாசமான ‘கேலக்டிக் சிர்ரஸ் மேகங்கள்’ (galactic cirrus clouds) என்று அழைக்கப்படும் நீல ‘மேகங்கள்’. இவை, தூசி மற்றும் வாயுவின் கலவையாகும். “இவற்றிலிருந்து தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன,” என்கிறார், அல்டீரி. யூக்ளிட் தொலைநோக்கி என்ன காட்டுகிறது என்பதை 2 டிகிரி கோணத்தில் புலப்படும்படி இ.எஸ்.ஏ இந்த வரைபடத்தில் விளக்கியுள்ளது. இதனை 600 முறை பெரிதாக்குவதன் மூலம், பிரபஞ்சத்தின் சிறிய பகுதியில் இருக்கும் விண்மீன் திரள்களைக் காணலாம். பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA படக்குறிப்பு, யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம் மிக நுணுக்கமான வரைபடம் ஐரோப்பிய விண்வெளி முகமை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வரைபடம், முன்பு அரிதாகவே அடையப்பட்ட அதீதமான தெளிவுத்திறனைக் (resolution) கொண்டுள்ளது. அதாவது, 208 மெகாபிக்சல்கள் தெளிவுத்திறனை இந்த வரைபடம் கொண்டுள்ளது. இந்த வரைபடத்தை மேலும் ‘ஜூம்’ செய்ய முடிகிறது. அதன்மூலம், சுழல் விண்மீன் திரள்களின் (spiral galaxy) சிக்கலான கட்டமைப்பையோ இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதையோ உங்களால் காண முடியும். பிரபஞ்சம் குறித்த ஒரு விரிவான பார்வையை யூக்ளிட் தொலைநோக்கி வழங்குகிறது. இதன்மூலம், ஒரேயொரு படத்தின் மூலம் பிரபஞ்சத்தின் விரிவான காட்சியைக் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறுகிய பார்வையையே வழங்குகிறது. ஆனால், அதன்மூலம் விண்வெளியின் வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளைப் பார்க்க முடியும். பிரபஞ்சத்தின் மர்மம் அவிழுமா? பிரபஞ்சத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கான மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்குவது, இத்திட்டத்தின் இறுதி இலக்கு. ஆனால் அதனோடு சேர்த்து மிகப்பெரிய அறிவியல் புதிர்களில் ஒன்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறது இத்திட்டம். அது: ‘டார்க் மேட்டர்’ அல்லது ‘கரும்பொருள்’ (பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத, மர்மமான பொருள் - dark matter) மற்றும் ‘இருண்ட ஆற்றல்’. இவை பிரபஞ்சத்தின் 95%-த்தை உள்ளடக்கியுள்ளது. உண்மையில் இவைபற்றி நமக்கு எதுவும் தெரியாது. டார்க் மேட்டர் (25%) மற்றும் இருண்ட ஆற்றல் (70%) ஆகியவை எதிரெதிர் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. டார்க் மேட்டர் விண்மீன் திரள்களை ஒன்றாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில் இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறது. இந்த வரைபடம் மூலம், விண்மீன் திரள்களின் பரவல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ள முடியும். இது, அண்டத்தின் கருதுகோள் மாதிரிகளைச் செம்மைப்படுத்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c774j4rnd7xo
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக் கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும் இவர்கள்தான். ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும் சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311246
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் சான்ட்னருக்கு சி.எஸ்.கே உதவியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர்,போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற மிட்செல் சான்ட்னர் முக்கியப் பங்காற்றினார். 69 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரிக்குப் பின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் புகழ்பெற்றுள்ளார். உண்மையில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அணியில் சேர்க்கப்பட்டவர் சான்ட்னர். ஆனால், அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படவில்லை என்பதால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்கூட நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை எடுக்கவே அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மேலும், ப்ளேயிங் லெவனில் அஜாஸ் படேல், பிரேஸ்வெலுக்குதான் முக்கியத்துவம் அளிக்க முடிவுசெய்திருந்தது. ஆனால், சொந்தப்பணி காரணமாக பிரேஸ்வெல் தொடரில் இடம் பெறமுடியாததால் சான்ட்னர் ப்ளேயிங் லெவனில் நியூசிலாந்து அணிக்குள் வந்தார். யார் காரணம்? ஆசிய நாடுகளில் கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து அணி பயணம் செய்யத் தொடங்கிய பின்புதான் சான்ட்னரின் பந்துவீச்சுத் திறமை மெருகேறி, அவரைச் சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியது. சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென ஏற்பட்ட முன்னேற்றம், நுணுக்கம், துல்லியம் ஆகியவை மெருகேற இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும், ஐ.பி.எல் டி20 தொடரும், சி.எஸ்.கே அணியும்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர் புனே டெஸ்ட்: முன்பும்- பின்பும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, சான்ட்னர் டெஸ்ட் அரங்கில் ஒருமுறைகூட ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. சான்ட்னரின் அதிகபட்சமே ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள்தான். உள்நாட்டுப் போட்டிகளிலும் ஒருமுறைதான் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 42.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 91.60 ஆகவும் இருந்தது. இலங்கை சென்றிருந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துதான் இந்தியாவுடன் களமிறங்கியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்கூட சான்ட்னர் வெகு சிறப்பாக பந்து வீசவில்லை. கல்லே டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே சான்ட்னர் வீழ்த்தியிருந்தார். ஆனால், புனேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, முத்தையா முரளிதரன், மறைந்த ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக், நேதன் லயன் ஆகியோரின் சாதனைக்கு இணையாக சான்ட்னர் உள்ளார். ஆனால் புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் டெஸ்ட் வாழ்க்கையே தலைகீழாக மாறி, அவரது பந்துவீச்சுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 36.32 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 78.2 ஆகவும் மெருகேறியுள்ளது. ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத சான்ட்னர் புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் என 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு 5 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்துள்ளார். உங்களை பிரமிக்க வைக்கும் உலகின் 8 அசாதாரண ஹோட்டல் அறைகள் - புகைப்படத் தொகுப்பு24 அக்டோபர் 2024 3 நாட்களில் 'தேசிய ஹீரோ' நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் லான் ஸ்மித் வர்ணனையின்போது கூறுகையில் “புனேவில் நடந்த 3 நாட்கள் டெஸ்ட் போட்டிக்குப்பின் நியூசிலாந்தின் தேசிய ஹீரோவாக சான்ட்னர் மாறிவிட்டார்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார். கடினமான இந்திய ஆடுகளம் சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் ஐ.பி.எல் டி20 தொடரும், இந்தியப் பந்துவீச்சாளர்களும், சி.எஸ்.கே அணியும் காரணமாகியுள்ளது என்பதை சான்ட்னரே பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டவை. இங்கு வந்து வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் சாதிப்பது கடினம்தான். ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை, எவ்வாறு பந்துவீசுவது, எந்த வேகத்தில் வீசுவது, பந்துவீச்சில் எத்தகைய மாறுபாட்டை வெளிப்படுத்துவது என்பதைத் தெரிந்து பந்துவீச வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் மிகச்சில வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்தான் இந்திய மண்ணில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளனர். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்கஃபே, நேதன் லயன், ஸ்வான், சக்லைன் முஸ்தாக் என சிலர்தான் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். மற்றவகையில் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களால் இந்திய மண்ணில் சாதிப்பது கடினம். ஆனால், இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருப்பது கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்படைய வைத்துள்ளது. இந்திய ஆடுகளங்களின் தன்மையை வெகு எளிதாக சான்ட்னர் அறிந்து கொள்ள அவருக்கு ஐ.பி.எல் தொடரும், சி.எஸ்.கே அணியில் எடுத்த பயிற்சியும், ஐ.பி.எல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுடன் ஏற்பட்ட பழக்கமும் காரணமாகியுள்ளது. பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER ஐ.பி.எல், சி.எஸ்.கே எப்படி உதவின? 'கிரிக்இன்போ' இணையதளத்துக்கு சான்ட்னர் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக நான் உருமாறுவதற்கு எனக்கு ஐ.பி.எல் டி20 தொடர் வெகுவாக உதவியது. சி.எஸ்.கே அணியில் நான் இடம் பெற்றபோது அதில் இருந்த ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் நட்பும் அவர்களின் பந்துவீச்சு நுணுக்கமும் என் பந்துவீச்சை மெருகேற்ற உதவியது,” என்று தெரிவித்தார். "இந்திய ஆடுகளங்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஆடியபின் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நான் புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச்சை மாற்ற முடிந்தது. குறிப்பாக நான் கேரம்பால் பந்துவீச்சை அஸ்வின் பந்துவீச்சு முறையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார். யார் அந்த இலங்கை வீரர்? அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார். ஹேரத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹேரத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார். புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹேரத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹேரத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார். "புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹேரத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை 'ஃபுல் டாஸில்' ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெட்டோரிக்குப் பின் கிடைத்த அடையாளம் இந்தியத் தொடருக்கு சான்ட்னர் வருவதற்கு முன்புவரை பெரிதாக அறியப்படாத வீரராகவும், பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் ஒரே டெஸ்டில் உச்சத்துக்கு சென்றுவிட்டார். கடந்த 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி ஹேமில்டன் மாகாணத்தில் வைகடோ நகரில் மிட்செல் சான்ட்னர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே பந்துவீச்சு, பேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி எடுத்த சான்ட்னர், பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே வளர்ந்தார். கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 2011-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து வடக்கு மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சான்ட்னர் விளையாடி வந்தார். 2014-15 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சான்ட்னரின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டதையடுத்து, நியூசிலாந்தின் தேசிய அணிக்குள் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின், இடதுகை சுழற்பந்துவீச்சாளரை அந்த அணி தேடிக்கொண்டிருந்தபோது, சான்ட்னர் அடையாளம் காணப்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார். முதல்முறையாக 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கான நியூசிலாந்து அணியில் சான்ட்னர் அறிமுகமாகி ஆக்டோபர் 24-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். அதற்குமுன்பாக உள்நாட்டில் சோமர்செட் கவுன்டி அணிக்கு எதிராக சான்ட்னர் 94 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து நிர்வாகத்துக்கு வெகுவாக நம்பிக்கையளித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. சர்வதேசப் போட்டியில் சான்ட்னர் விளையாடுவதற்கு முன்பாக அவர் 19 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சான்ட்னர் முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். நான்காவது ஒருநாள் போட்டியில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER படக்குறிப்பு, 2018-இல் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாமல் போனது. பகலிரவு டெஸ்டில் அறிமுகம் இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதே 2015-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவுடெஸ்ட் போட்டியில் சான்ட்னர் அறிமுகமாகினார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியது இதுதான் முதல்முறையாகும். அதன்பின் நியூசிலாந்தின் நேதன் மெக்கலம், ஜீத்தன்படேல், அஜாஸ் படேல் ஆகியோருடன் சேர்ந்து சுழற்பந்துவீச்சு வீசும் வாய்ப்பும் சான்ட்னருக்கு கிடைத்தது. இருப்பினும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சான்ட்னரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை, வெற்றி நாயகனாக வலம்வர முடியாமல் பெரிதும் அறியப்படாத வீரராகவே இருந்து வந்தார். ஐ.பி.எல் அறிமுகம் இதனிடையே 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு சான்ட்னரை வாங்கியது. ஆனால் அந்த ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் போனது. அதன்பின் சிஎஸ்கே அணியில்தான் தொடர்ந்து விளையாடி வருகிறார். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணியை சான்ட்னர் வெற்றி பெறவைத்த ஆட்டமும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தியதும் அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது. சான்ட்னர் தனக்கு பேட்டிங் செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாட்லிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சான்ட்னர் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் சதத்தை எட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங், சான்ட்னர் 261 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் அதிகபட்ச 7-வது விக்கெட் ரன் குவிப்பு என்ற சாதனையைப் புரிந்தனர். இதுவரை டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 941 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1,355 ரன்களும், டி20 போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 675 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 67 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 107, டி20 போட்டியில் 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை பெரிதும் அறியப்படாத வீரராக இருந்த சான்ட்னரை உலகம் அறியச் செய்த பங்கு இந்திய வீரர்களுக்கும், ஐ.பி.எல், சி.எஸ்.கே அணியினருக்கும் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0qd0d0v471o
-
இலங்கை சுவிட்சர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்; பிரமித்த பண்டார தென்னக்கோன்
(எம்.ஆர்.எம்.வசீம்) வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருப்பதாக அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும். அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வு துறையை பலப்படுத்த வேண்டும். அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும். ஆனால் எமக்கு கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வு துறையினரின் மன நிலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். புலனாய்வு பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம். முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்த பதவிக்கு வர இருப்பவருக்கு. அவரின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள சிறிதுகாலம் அந்த பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது. தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்காெள்கிறோம். அத்துடன் எமது நாடு சுவிட்சர்லாந்து அல்ல. அதனால் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்பு பிரிவினர் பிரதமருக்கு தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நாடு சுவிட்சர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பாகவும் அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், பாதுகாப்புக்காக செல்லும் வாகனம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்கள். ஆனால் அந்த பதவிக்கு வந்த பின்னர் அந்த பாதுகாப்பு வழங்கப்படுவது நபருக்கு அல்ல, அந்த பதவிக்கு என்பதை தற்போது பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு எப்படிவேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால் ஆட்சி செய்யும்போது, பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விடுதலை முன்னணி தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197348
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
கடவுச்சீட்டுக்கான வரிசை தொடர்கிறது; நள்ளிரவு முதல் டோக்கனுக்காக மக்கள் காத்திருப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்கிறது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் “டோக்கன்” வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, நள்ளிரவு முதல் டோக்கன் பெறுவதற்காக மக்கள் குறித்த பிரதேசத்தில் காத்திருக்கிறார்கள். இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும், டோக்கன் பெறும் நபருக்கு இரண்டு வாரங்கள் கழித்தே கடவுச்சீட்டு பெறுவதற்கான “நாள்” வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311251
-
இலங்கையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள் ; மக்களே எச்சரிக்கை
இலங்கையில் அதிகளவில் வட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தின் (verification code) மூலம் வட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர். அண்மையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்பாராமல் வட்ஸ் அப் ஊடாக ஒரு தெரிந்த நபர்களிடம் இருந்து சரிபார்ப்பு குறியீட்டு இலக்கம் (verification code) அனுப்பப்படுகிறது. ஹேக்கர்கள் வட்ஸ் அப் ஊடாக தொடர்பு கொண்டு நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ தம்மை காட்டுடிக்கொண்டு சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தை கோருகின்றார்கள். அந்த இலக்கத்தை கோரும் நபருக்கு ஒரு முறை அனுப்பியதும் வட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. வட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கையில், எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மனைவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட பிறகு, அவள் தவறுதலாக ஒரு குறியீட்டை தனக்கு அனுப்பியதாகவும், அது மீண்டும் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது உண்மையானது என கருதி, குறியீட்டைப் பகிர்ந்து கொண்டேன். பின்னர் எனது வட்ஸ்அப் கணக்கு உடனடியாக ஹேக் செய்யப்பட்டது. எனது வட்ஸ் அப் கணக்கிலுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். அதாவது, தான் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி சிறிய தொகை பணத்தை கோரியுள்ளனர். இவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை பார்த்த நண்பர் ஒருவர் நான் நிதி நெருக்கடியில் உள்ளேனா என்பதை அறிய எனது மனைவியை தொடர்பு கோட்டு விசாரித்துள்ளார். இந்நிலையில், பலமுறை ஹேக் செய்யப்பட்ட வட்ஸ்அப்பை மீண்டும் நிறுவிய போதிலும், 72 மணிநேரமாகியும் என்னால் அணுகலை மீண்டும் பெற முடியவில்லை. பின்னர் பொலிஸ் நிலையத்திரல் முறைப்பாடு செய்து வட்ஸ் அப் உதவியை (WhatsApp support) நாடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், தடயவியல் சைபர் மோசடி நிபுணர்கள் ஹேக்கர்கள் பயன்படுத்தும் இரண்டு-படி முறையை விளக்கினர். அதாவது, முதலில், அவர்கள் சரிபார்ப்புக் குறியீடு மூலம் பயனரின் வட்ஸ்அப் கணக்கை அணுகுவார்கள். பின்னர் நிதி உதவிக்கான கோரிக்கைகளுடன் பயனரின் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் 50,000 முதல் 100,000 ரூபாய் வரை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறே அரசியல்வாதிகளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பசீர் சேகுதாவுத் ஆகியோரின் வட்ஸ் அப் கணக்கு இலக்கங்கள் ஹேக்கர்களால் ஹக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197324
-
ஜப்பானில் அரசியல் குழப்பநிலை -2009 ம் ஆண்டின் பின்னர் முதல்தடவையாக பெரும்பான்மையை இழந்தது லிபரல் ஜனநாயக கட்சி
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது. பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளன. 2009ம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற தவறியமை இதுவே முதல் தடவை. லிபரல் ஜனநாயக கட்சி 1955 முதல் ஜப்பானை பலதடவைகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக லிபரல் ஜனநாயக கட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆதரவின்மை உட்பட பல குழப்பத்தில் சிக்குண்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் தொடர்ந்து ஆட்சி செய்யப்போவதாக பிரதமர் சிகேரு இஸ்கிபா தெரிவித்துள்ளார். சிகேரு இஸ்கிபா இந்த மாதமே ஜப்பான் பிரதமராக பதவியேற்றார். https://www.virakesari.lk/article/197327
-
ஒக்டோபர் 28ஆம் திகதி நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கு ரயில் சேவை
யாழ் - கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்! கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான நேரடி புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 05.45 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் மதியம் 01.10 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவைகள் உள்நாட்டு யுத்தம் காரணமாக வவுனியாவுடன் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2014ஆம் ஆண்டு முதல் கொழும்பு - யாழ்ப்பாண சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடைப்பட்ட புகையிரத பாதை புனரமைப்பு பணிகளுக்காக கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் அனுராதபுரத்துடனும் , யாழில் இருந்து புறப்படும் புகையிரதம் வவுனியாவுடனும் சேவையை மட்டுப்படுத்தின. புனரமைப்பு பணிகளின் முடிவடைந்து பின்னர் மீண்டும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனுராதபுரம் மற்றும் மாகோ இடையிலான புகையிரத பாதை புனரமைப்பு பணிக்காக கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதங்கள் மகோவுடனும் , யாழில் இருந்து புறப்படும் புகையிரதம் அநுராதபுரத்துடனும் தமது சேவையை மட்டுப்படுத்தின. அநுராதபுரம் - மாகோ புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், கொழும்பு - யாழ்ப்பாண புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுத்த போதிலும், புகையிரத சமிக்ஞை விளக்குகள் சீர்த்திருத்த பணிகள் உள்ளிட்ட தொழிநுட்ப ரீதியான வேலைகள் பூர்த்தியாகவில்லை என சேவை ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் கொழும்பு கோட்டை - யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197320
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
"நாங்கள் அறுகம் குடா ஆபத்து குறித்து தகவல்களை வழங்கினோம் இலங்கை அரசாங்கம் துரிதமாக செயற்பட்டது - அமெரிக்கா பயண தடைவிதிக்கவில்லை" - ஜூலி சங் இலங்கையர்களினதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல்களிற்கு தீர்வை காண்பதில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன். அமெரிக்கா இலங்கை குறித்து போக்குவரத்து தடை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்கர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தனது கடமையை வலியுறுத்தியுள்ள அவர் நம்பகதன்மை மிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தூதரக பணியாளர்கள், அமெரிக்க பிரஜைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் நாடு ஆகிய தரப்புடன் தகவல்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் எச்சரிக்கும் கடமை கொள்கை குறித்த ஆணைபற்றியும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் எங்கள் தூதரகங்கள் எச்சரிப்பதற்கான கடமை என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்றன, அதாவது நம்பகதன்மை குறித்த எச்சரிக்கை கிடைத்தால் நாங்கள் எங்கள் பிரஜைகள் மற்றும் அந்த நாட்டின் அதிகாரிகளுடன் அந்த தகவலை பகிர்ந்துகொள்ளவேண்டும். இது அமெரிக்கா பின்பற்றும் உலகளாவிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டதும் நாங்கள் அது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தோம், இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்தது என ஜூலி சங் தெரிவித்துள்ளார். நாளாந்த அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம், இலங்கையின் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் அடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் வெளிப்படைதன்மை குறித்த இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு அதிகாரினதும் அர்ப்பணிப்பு குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மறுஅறிவித்தல் வரும் வரை அறுகம்குடாவிற்கு செல்லவேண்டாம் என அமெரிக்கர்களிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/197315
-
இலங்கையின் நிலபரப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார். கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை வரைபடம் சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் மஹியங்கனை வீதியின் இருபுறமும் வனப்பகுதியாக காணப்பட்டது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எனினும் தற்போது சில பிரதேசங்கள் குடியேற்றப்பட்டு, கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய வரைப்படம் தயாரிப்புக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக, நில அளவையாளர் நாயகம் சுதத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-new-land-space-map-2024-1730081112#google_vignette
-
லண்டனிலிருந்து உறவினரை பார்க்க வந்தவர் திடீரென உயிரிழப்பு
லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு திடீரென உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து வந்த இவர், கடந்த 17ஆம் திகதி பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, நேற்றுக் காலை (27) உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197314
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டியவராக மாறியுள்ள ஈழத்தின் பாடலாசிரியர்! தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் எழுதியுள்ளார். தமிழகத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில், குறித்த பாடலானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பன்முக திறன்கள் குறித்த பாடலாசிரியர் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரிக்கும் பாடலை எழுதியுள்ளதோடு, தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் G V பிரகாஸ் இன் தயாரிப்பில் "நாம்" பாடல் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை. குறித்த பாடலாசிரியர் இதுவரைக்கும் 300ற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். "செஞ்சோலை பாடல்கள் தொடக்கம் ஆனையிறவு நாயகனே" பாடல் தொட்டு ஈழத்தின் முதன்மையான ஆலயங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இவர் நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் திரைகதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக் கொண்டவராகவும் விளங்கி வருகின்றார். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களிலும் முன்னெடுத்துள்ளார். https://tamilwin.com/article/lyricist-eelam-become-must-celebrate-world-tamils-1730089943#google_vignette
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்காவை கிறிஸ்தவ நாடாக்க விரும்பும் இவர்கள் 'டிரம்ப் கடவுளின் பிரதிநிதி' என்று நம்புவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2017 செப்டம்பரில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் மதத் தலைவர்களுடன் டிரம்ப் எழுதியவர்,செசிலியே பேரியா பதவி,பிபிசி நியூஸ் முண்டோ இருந்துஓக்லஹோமாவிலிருந்து 28 அக்டோபர் 2024, அமெரிக்காவின் தெற்கு ஓக்லஹோமாவில் சுமார் 2,000 பேர் வசிக்கும் எல்ஜின் எனும் டவுன் பகுதி உள்ளது. அங்கு கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில், சனிக்கிழமை வழிபாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாதிரியார் டஸ்டி டெவர்ஸ் (36), பிரகாசமான முகத்துடன் பாதிரியார் உடையில் தோன்றினார். அங்கு கூடியிருந்த சுமார் 100 தேவாலய உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினத்தவர். தேவாலயத்தின் லாபியில் சில துண்டுப் பிரசுரங்கள் இருந்தன. அவற்றில் இறந்த குழந்தைகளை சித்தரிக்கும் படம் இடம் பெற்றிருந்தது. "இதைப் படிக்கும் போது, அமெரிக்காவில் மூன்று குழந்தைகள் அநியாயமாக தாயின் வயிற்றில் படுகொலை செய்யப்பட்டது நினைவுகூரப்படும்" என்று அந்த புத்தகங்களின் தலைப்பு கூறுகிறது. கருக்கலைப்பை நம் காலத்தின் "ஹோலோகாஸ்ட்" என்று அவை விவரிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதாரம் மற்றும் குடியேற்றக் கொள்கை பிரச்னைகளை போன்று கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளும் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த பழமைவாத வலதுசாரி புராட்டஸ்டண்ட் வாக்காளர்கள் இடையே அரசியலும் மதமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கான தெளிவான அடையாளமாக இந்த துண்டுப்பிரசுரங்கள் உள்ளன. படக்குறிப்பு, கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில் கருக்கலைப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன ஒரு கோடை நாளில், பலத்த மழை பெய்து கொண்டிருக்கையில், உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு பிரார்த்தனை தொடங்கியது. தேவாலயத்தின் போதகர் கிடார் வாசித்து சபை உறுப்பினர்களுடன் பாடல்களைப் பாடினார். டஸ்டி டெவர்ஸ் எல்ஜினில் பிறந்தவர். செனட்டரான அவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். மதம் தொடர்பான படிப்பு மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்தில் நற்செய்தி போதிப்பார்; ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் அவர் ஓக்லஹோமா கேபிட்டலில் முன்மொழிவுகளை முன்வைப்பார். ஓக்லஹோமாவில் அரசியல்வாதிகள் உள்ளூர் தேவாலயங்களில் அதிகாரம் செலுத்துவதும், நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் சகஜம். அமெரிக்க 'பைபிள் பெல்ட்’ என்றழைக்கப்படும் மாகாணங்களில் இல்லினாய்சும் ஒன்று. இங்கு பல ஆளுமைகள், அரசியலிலும் அதே சமயம் மதம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இரட்டை தலைமை பொறுப்பில் இருப்பது பொதுவான ஒன்று. இப்பகுதியில் மக்கள் பிரதானமாக புராட்டஸ்டண்ட் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். அமெரிக்காவில் `பைபிள் பெல்ட்’ மாகாணங்கள் எனப்படும் மாகாணங்களில் குறைந்தது 9 மாகாணங்கள் புராட்டஸ்டண்ட்கள் மற்றும் குடியரசுக் கட்சி சார்ந்த ஆதரவாளர்களை உள்ளடக்கியது. முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த தேர்தலில் இந்த மாகாணங்களில் தான் வெற்றி பெற்றார். (ஜார்ஜியா மட்டும் ஒரே விதிவிலக்கு) தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள எல்ஜின் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க பழமைவாத புராட்டஸ்டண்ட் தலைவர்களின் எழுச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது. இதில் முக்கியமான மையப் பகுதியாக ஓக்லஹோமா உள்ளது. இது ஒரு தீவிர மதம் சார்ந்த மாகாணம். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேபிடல் உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஓக்லஹோமா அரசியலில், கடவுளும் நாடும் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஏனெனில் மரபுவழி கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை தாராளவாத இடதுசாரிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்று நம்புகிறார்கள். மதம் மற்றும் அரசியலின் இணைப்பு படக்குறிப்பு, அமெரிக்காவின் அதிகார அமைப்புகள் மாற வேண்டும் என போதகர் டஸ்டி டெவர்ஸ் வாதிடுகிறார் "என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி அறிய அன்றைய திருச்சபை வழிப்பாடு எப்படி இருந்தது?" என்று என்னிடம் டெவர்ஸ் கேட்டார். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, கருக்கலைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது, ஆபாசப் படைப்புகளை நிறுத்துவது மற்றும் வருமானம், சொத்து வரிகளை வசூலிப்பதை நிறுத்துவதுதான் அவரது அரசியலின் முக்கிய நோக்கம் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் டெவர்ஸின் நீண்ட கால இலக்கு இன்னும் சுவாரஸ்யமானது. அமெரிக்காவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்றுவதே அவரது குறிக்கோள். அந்த பணியை நிறைவேற்றுவதற்கான வழிகளில் முக்கியமானது, உயர் அரசியல் பதவிகளை ஆக்கிரமிப்பது தான். "வெள்ளை மாளிகையை கடவுளின் தேசமாக மாற்ற விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை நான் அவரிடம் முன்வைத்தேன். "பூமியில் உள்ள அனைத்துமே கடவுளின் பிரதேசம் தான்” என்று பதிலளித்தார். குடியரசுக் கட்சியின் செனட்டர் டெவர்ஸ் தற்போதுள்ள கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார். டிரம்ப் தங்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று டெவர்ஸ் நினைக்கிறார். பைபிள் பெல்ட்டில் உள்ள மற்ற போதகர்களின் கருத்தும் அதே தான். டிரம்ப் குடியரசுக் கட்சியை இடதுசாரி பக்கம் சாய்ப்பதாக அவர் கூறுகிறார். 37 வயதான ஆரோன் ஹாஃப்மேன், டெவர்ஸுடன் பணிபுரிகிறார். அவர் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை. அவர் தற்போது ஓக்லஹோமாவில் உள்ள புதிய பாப்டிஸ்ட் தேவாலயத்தில் போதகராக தயாராகி வருகிறார். தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான கோடு மங்கலாக இருக்கக்கூடாது என்று அவர் நம்புகிறார். "கிறிஸ்துவத்தை அரசியலில் இருந்து பிரிக்க முடியாது. அமெரிக்க மக்கள் இயேசு கிறிஸ்துவை மறந்துவிட்டார்கள்" என்று அவர் கண்ணீருடன் என்னிடம் கூறினார். மதம் செல்வாக்கு செலுத்துகிறதா? படக்குறிப்பு, ஓக்லஹோமாவில் ஆசிரியர் பணியிலிருந்து சுஜி ஸ்டீபன்சன் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் இந்த கலாசார மோதல் சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இந்த கேள்விக்கான பதில் `ஆம் பாதிக்கும்’. இந்த ஆண்டு மட்டும், குறைந்தது மூன்று `பைபிள் பெல்ட்’ மாகாணங்களில் மத சார்பு கொண்ட முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. லூசியானாவில் அனைத்து பள்ளி வகுப்பறைகளின் சுவர்களிலும் கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அலபாமா மாகாணத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் உறைந்த கரு முட்டைகள் சிசுக்களே என்று தீர்ப்பளித்ததை அடுத்து செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதேபோல், ஓக்லஹோமாவில், உயர் கல்வி அதிகாரி ரியான் வால்டர்ஸ் எடுத்த முடிவு மிகவும் விவாதத்திற்கு உட்பட்டது. ஜூன் மாதம், மாநிலத்தின் பொதுப் பள்ளிகளில் பைபிள் கற்பித்தலைக் கட்டாயமாக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும், ஓக்லஹோமா மிகப்பெரிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாகாணமாகும். இந்த முடிவு மத சுதந்திரத்திற்கு எதிரானது என பல ஆசிரியர்கள் தெரிவித்தனர். "நாம் தேவாலயத்தையும் மாகாணத்தையும் தனித்தனியாக அணுக வேண்டும்” என்று புராட்டஸ்டன்ட் மற்றும் முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியரான 44 வயதான சுஜி ஸ்டீபன்சன் கூறுகிறார். சுஜி கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சி ஆதரவாளரான வால்டர்ஸை கடுமையாக விமர்சித்தார். வால்டர்ஸ் கடந்த மே மாதம் ஓக்லஹோமா ஆசிரியர் சங்கத்தை `பயங்கரவாத அமைப்பு’ என்று அழைத்தார். இதுதொடர்பாக வால்டர்ஸ் பிபிசியிடம் பேச மறுத்துவிட்டார். பள்ளியின் இந்த முடிவுக்கு பல பெற்றோர்களும் உடன்படவில்லை. கிறிஸ்தவரான எரிகா ரைட்டும் அதில் ஒருவர். பைபிள் போதிப்பதற்கு பதில், அவர்களின் ஏழ்மை நிலையை மாற்ற வழி செய்யலாம் என்று அவர் கருதுகிறார். ஓக்லஹோமா கிராமப்புற பள்ளிகள் கூட்டணியின் நிறுவனர் மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவாளரான ரைட், அரசுப் பள்ளிகளில் போதுமான நிதி இல்லை என்றும், பல மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் வீட்டில் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார். "ஓக்லஹோமாவின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் பேர் ஏழைகள். பல பகுதிகளில் அதிகமான வறுமை உள்ளது" என்று அவர் கூறுகிறார். ஓக்லஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் சாமுவேல் பெர்ரி அரசியல் மற்றும் மதம் பற்றிய பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பள்ளியில் பைபிள் கற்பிக்க வேண்டும் போன்ற முடிவுகள் ஒரு பெரியளவிலான செயல்திட்டத்தின் கீழ் எடுக்கப்படுகின்றன என்று அவர் நம்புகிறார். இந்த கொள்கைகள் தீவிர மத நம்பிக்கை கொண்ட தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ தேசியவாதத்தின் கொள்கைகளை பரப்பும் நபர்களால் இயக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த சித்தாந்தம் அமெரிக்க குடிமை வாழ்க்கை மற்றும் மரபுவழி ஆங்கிலோ-புராட்டஸ்டண்ட் கலாசாரத்தை ஊக்குவிக்கிறது. "கிறிஸ்தவ தேசியவாதம் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று அவர் கூறுகிறார். "டிரம்ப் கடவுளால் அனுப்பப்பட்டவர்” பட மூலாதாரம்,JACKSON LAHMEYER படக்குறிப்பு, "இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர் டிரம்ப்" என்கிறார், ஜாக்சன் லஹ்மியர் பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள இத்தகைய போதகர்கள் மிகவும் ஏழ்மையான சமூகங்கள் மத்தியில் சிறிய தேவாலயங்களை நிறுவுவதன் மூலம் அவர்களைப் பின்பற்றுபவர்கள் இடையே பெரும் செல்வாக்கு கொண்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்த குழு முன்னேற டிரம்பை தங்களுக்கான சிறந்த தேர்வாக கருதுகின்றன. ஓக்லஹோமா பாதிரியாரான ஜாக்சன் லஹ்மியர் ஒரு தீவிர டிரம்ப் விசுவாசி. "டிரம்ப் இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர்" என்று அவர் கூறுகிறார். இவர் டிரம்பிற்கான போதகர்கள் குழுவை நிறுவியவர். வரவிருக்கும் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக கிறிஸ்தவ வாக்குகளை திரட்டுவதே அவர்களின் நோக்கம். டிரம்ப் மீதான தாக்குதலில் அவர் உயிர் பிழைத்ததை 'கடவுளின் அற்புதம்' என்று லாஹ்மியர் கூறுகிறார். "எங்கள் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதற்கு மிக அருகில் இருந்தோம்" என்று ஓக்லஹோமாவின் துல்சா பகுதியை சேர்ந்த முன்னாள் செனட் வேட்பாளரான லாஹ்மியா தொலைபேசி உரையாடலில் கூறினார். இருப்பினும், புராட்டஸ்டண்ட் மத போதகரான லாஹ்மியா தன்னை ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கிறார். "கிறிஸ்தவ தேசியவாதி என்ற பட்டத்தின் மூலம் எங்களை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அது உண்மையல்ல" என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசியலில் செல்வாக்கு செலுத்தியதாக பாதிரியார் பால் பிளேயர் வாதிடுகிறார் ஓக்லஹோமா நகரத்தின் புறநகர்ப் பகுதியான எட்மண்டில் உள்ள ஃபேர்வியூ பாப்டிஸ்ட் தேவாலயத்தின் தலைவரான பாஸ்டர் பால் பிளேயரும், தன்னை அப்படி அடையாளப்படுத்துவதை எதிர்க்கிறார். "நான் ஒரு கிறிஸ்தவனா? என்றால் ஆம் என்பேன். நான் ஒரு தேசியவாதியா? என்றாலும் ஆம் என்பேன். அதற்காக சிலர் எங்களை கிறிஸ்தவ தேசியவாதியாக சித்தரிப்பதை நான் ஏற்கவில்லை. இந்த நாட்டில் ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக இருப்பது ஒரு களங்கமாக மாறி வருகிறது" என்று அவர் தெரிவித்தார். 1980களில் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருந்த போது எடுத்த படங்களையும் அவர் காட்டினார். தற்போது லிபர்ட்டி பாஸ்டர் பயிற்சி முகாமின் பொறுப்பாளராக பிளேயர் உள்ளார். புராட்டஸ்டண்ட் தலைவர்கள் அரசியலில் தங்கள் மதக் கொள்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை அங்கு கற்றுக்கொள்கிறார்கள். "இந்தப் பயிற்சி போதகர்களுக்கு வாழ்வின் அனைத்து கட்டங்களையும் பைபிள் ரீதியாக சிந்திக்க உதவுகிறது. அவர் அமெரிக்கா முழுவதும் உள்ள புராட்டஸ்டண்ட் உள்ளூர் தலைவர்களின் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். அவர்கள் தங்களை 'தேச பக்தி கொண்ட போதகர்கள்' என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களில் பலரைப் போலவே, அமெரிக்கா மீண்டும் பாரம்பரிய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிளேயர் விரும்புகிறார். 1776 இல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது இந்த மதிப்புகள் கையெழுத்திடப்பட்டன. "வரலாற்று ரீதியாக, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று அவர் கூறுகிறார். கடந்த 2020 தேர்தலில் நியாயமாக டிரம்ப் தான் வெற்றியாளர் என்றும், 2021 ஜனவரியில் தலைநகர் மீதான தாக்குதலில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 'அரசியல் கைதிகள்' என்றும் பிளேயர் நம்புகிறார். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி ஓக்லஹோமாவில் நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக வருவார் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் அரசியல் தலைவர்கள் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் நம்பிக்கைகளைப் பரப்புவதாகும். இதனை அவர்கள் 'தெய்வீக பணி' என்கின்றனர். டிரம்ப் மற்றும் கருக்கலைப்பு பிரச்னை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தன் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தார், அத்தகைய நீதிபதிகளை நியமித்தார் டிரம்பின் ஆதரவாளர்கள் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வரலாற்று நியமனங்கள் மற்றும் அவரது பதவிக்காலத்தில் பிற முடிவுகளுக்காக அவரைப் பாராட்டினர். இந்த நியமனம் பல ஆண்டுகளாக நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தது. அந்த கன்சர்வேடிவ் பெரும்பான்மை காரணமாகவே, 2022 இல் உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திய தீர்ப்பை ரத்து செய்தது. உச்சநீதிமன்றம் அந்த முடிவை மாகாணங்களின் கைகளில் விட்டு விட்டது. ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் போன்ற பைபிள் பெல்ட் மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளன. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அங்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும். இருப்பினும், அதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இத்தேர்தலில் `கருக்கலைப்பு’ பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பைபிள் பெல்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த குடியரசுக் கட்சியின் கன்சர்வேடிவ் பிரிவு, கருக்கலைப்புக்கு முழுமையான தடையைக் கொண்டுவர விரும்புகிறது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சாத்தியமாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முன்னாள் அதிபர் டிரம்புடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், டிரம்ப் தனது நிர்வாகத்தின் போது முக்கிய கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் கொடுத்தார். ஏராளமான கிறிஸ்தவ மத குருமார்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார். வெள்ளை மாளிகையில் போதகர்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2020ம் ஆண்டு தங்கள் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரி டிரம்ப் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைகளில் பைபிளுடன் தெருக்களில் இறங்கினர் டிரம்ப் பதவிக்காலத்தில், 'ஃபெயித் அண்ட் ஆப்பர்சூனிட்டி இனிஷியேட்டிவ்' (Faith and Opportunity Initiative) என்ற புதிய அரசாங்க அலுவலகத்தை உருவாக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். ஆவணத்தில் கையொப்பமிடும் போது அவர், "நம்பிக்கை என்பது அரசாங்கத்தை விட சக்தி வாய்ந்தது, கடவுளை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை" என்றார். ஓக்லஹோமா தொழிலதிபர் க்ளே கிளார்க் நிறுவிய புதிய தீவிர வலதுசாரி 'ரீவேகன் அமெரிக்கா டூர்' (ReAwaken America Tour movement) முன்னெடுப்பில் பலர் சேர்ந்தனர். இன்று இந்த இயக்கத்தில் போதகர்கள், குடியேற்ற எதிர்ப்பு, பால்புதுமையினர் (LGBTQ+) எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளனர். டிரம்ப் அவர்களை வழிநடத்துவதாக உணரும் பலர் இதில் கலந்து கொள்கின்றனர். இடதுசாரிகளுக்கு எதிராக ஆன்மீகப் போரை நடத்தும் கடவுளின் வீரர்கள் என்று இந்த இயக்கத்தினர் தங்களை சொல்கின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை ‘பிராஜக்ட் - 25’ இல் சேர்த்துள்ளதாக கருதப்படுகிறது. அமெரிக்க பெடரல் அரசையும், அமெரிக்கர்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களையும் சீர்திருத்த வேண்டும் என்று கூறும் டிரம்பின் முன்னாள் ஆலோசகர்களின் சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளை உள்ளடக்கியதே பிராஜக்ட்-25 ஆகும். டிரம்ப் இந்தத் திட்டத்தில் இருந்து விலகியிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வெள்ளை மாளிகையில் கால் பதித்தால், இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள செல்வாக்குமிக்க மதக் குழுக்கள் அந்த செயல்திட்டத்தை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c238877vrlyo
-
அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது
சனல் 4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படுபவர் யார்? விசாரணையை கோருகின்றார் உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சனல்4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார். சனல் 4இன் வீடியோ குறித்து விசாரணை செய்த விசேட குழுவின் அறிக்கையை இன்று செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். முன்னைய அரசாங்கம் நியமித்த ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் ஐ இமாம் குழுவின் அறிக்கையை உதயகம்மன்பில வெளியிட்டுள்ளார். உதயகம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது, அந்த வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுக்கின்றேன். சனல் 4இன் வீடியோவில் புலனாய்வு அதிகாரிகளையும் இராணுவத்தினரையும் குற்றம்சாட்டும் நபர் தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி என்ற தோற்றத்தை உருவாக்குகின்றார், அந்த நபர் தற்போது அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றார் - அரசாங்கம் தேசத்துரோகத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/197311
-
5 வயது பேரனின் கேள்வி
அவருக்கு ஏன் அந்த கேள்வி வந்தது என கேளுங்க ஐயா? இந்தக் கேள்வி எமது புலம்பெயர் சந்ததிகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம்!
-
அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியதாக 'செனல் 4' சுட்டிக்காட்டியிருந்தது. அரசியல்வாதிகளின் கடமை 'செனல் 4' என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த ஜக்கிய இராச்சியத்தின் ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் என்பதோடு அது இதுவரை காலமும் இலங்கைக்கு எதிரான அணுகுமுறைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இராணுவம் தவிர கோட்டாபய இராஜபக்ச மீதும் செனல் 4 பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவை இப்போது நமக்கு தேவையில்லை. கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் முன்வைத்தமைக்காக அவர் என்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் அமைச்சரவையிலிருந்து துரத்தியதோடு அவர் எழுதிய புத்தகத்திலும் எங்களை சாடியிருந்தார். ஆகவே, அவரை காப்பாற்ற நாம் முன்வர மாட்டோம். எனினும், நாட்டினுடைய உளவுத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவது அந்நாட்டினுடைய அரசியல்வாதிகளின் கடமையாகும். பொய்யான குற்றச்சாட்டு 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் ஆகியோர் புத்தளத்தில் உள்ள சஹ்ரானின் வீட்டில் வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டதாக அஸாத் மௌலானா எனப்படுபவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலேயே இந்த வீடு கட்டப்பட்டதாக தெரியவந்தது. எனவே, அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என இதிலிருந்து தெரிய வருகின்றது” எனக் கூறியுள்ளார். https://tamilwin.com/article/udaya-gammanpila-on-channel-4-easter-attack-video-1730095618#google_vignette
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
'திராவிடம், தமிழ் தேசியம், ஆட்சியில் பங்கு' - விஜய் பேச்சு பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,TVK 2 மணி நேரங்களுக்கு முன்னர் “கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு”, “திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். அவருடைய கருத்துகள் குறித்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், ““கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார். மேலும், “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார். யாரையும் தாக்கி அரசியல் செய்யப் போவதில்லை என்றும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார். “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர். விஜயின் இத்தகைய கருத்துகளுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். அவர்கள் என்ன கூறியுள்ளனர்? தமிழ்நாடு அமைச்சர் எஸ். ரகுபதி கூறியது என்ன? தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “திராவிட மாடலின் கொள்கைகளை தமிழக மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று விஜய் பேசியதில் இருந்து தெரிகிறது. அது நகல்தான். தமிழக மக்களின் இதயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கென தனி இடம் நிச்சயம் உண்டு. உழைப்பின் மற்றொரு வடிவமாக துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கிறார். அவருக்கும் மக்கள் மனதில் இடமுண்டு. இரவு, பகல் பாராமல் அரசியலில் உழைக்க வேண்டும், அது போகப்போக விஜய்க்கு தெரியும்” என்றார். பட மூலாதாரம்,REGUPATHYMLA/X படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்கிறார் அமைச்சர் எஸ். ரகுபதி மேலும் தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்றும் அவர் கூறினார். “தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ஆளுநரை எதிர்த்துப் பேசினால் தான் அரசியலில் எடுபடும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது” என்றார் அவர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விஜயின் கருத்து குறித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வரட்டும் பார்க்கலாம்” என்றார். அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து தெரிவித்த அவர், “அதிமுக தமிழகத்தில் எடுபடாது என்பது தெரிந்திருக்கிறது. அங்குள்ளவர்களை இழுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசாமல் இருந்திருக்கிறார்” என கூறினார். திமுக ஆட்சியில் எந்த தவறுக்கும்இ டம் கொடுக்கவில்லை என்றும் பெரியார், அண்ணா, திமுக குறித்துப் பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் ரகுபதி கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்து விஜயின் கட்சி மாநாட்டால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக போராட்டக் களத்தின் மறுவடிவமாகவே தவெகவை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள். மக்கள் நல சிந்தனை ஒன்றாக இருக்கிறது” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொன்னார்? “புதிய கட்சி தொடங்கியதற்காக விஜய்க்கு வாழ்த்துகள். உதயாவுக்கு ‘(உதயநிதி) எதிராக இக்கட்சி உதயமாகியிருக்கிறது. நல்ல முறையான தொண்டர்கள், எந்த வரம்பு மீறலும் இல்லை. தலைவர்களுக்கு மரியாதை, தாய், தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியிருப்பது ஆரோக்கியமானது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கருத்துகளை வரவேற்கிறேன். அம்பேத்கரை வரவேற்றதில் மகிழ்ச்சி” என்றார். “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி” என விஜய் குறிப்பிட்டது குறித்து பேசிய தமிழிசை, “பாஜகவை கொள்கை எதிரி என விஜய் சொல்வதாக பிறர் கூறுகின்றனர் பிரிவினைவாதத்தை நாங்கள் பேசவில்லை. வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவர் சொன்ன பலவற்றை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. இதை நான் அவரிடம் எடுத்துச் சொல்வேன். நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல” என்றார். படக்குறிப்பு, அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான் என கூறுகிறார், தமிழிசை மேலும், பாஜக மீது தான் முன்வைக்கும் விமர்சனங்கள் உண்மையா இல்லையா என்பதில் விஜய்க்கு தயக்கம் இருக்கலாம் என்றும் தமிழிசை தெரிவித்தார். “அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருப்பதாக நினைக்கிறேன். இதே வீரியத்துடன் திமுக எதிர்ப்பில் விஜய் இருக்க வேண்டும்” என்றார். ஆளுநர் பதவியை விஜய் எதிர்ப்பது, இருமொழி கொள்கை ஆகியவை குறித்த விஜயின் கருத்துகளை எதிர்ப்பதாக தமிழிசை கூறினார். “ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று கூறுவது ஆரோக்கியமானது. தங்களுக்கு மாற்றே இல்லை என திமுக சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாற்றத்தைக் கொடுப்பேன் என வந்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறியது வரவேற்புக்குரியது” என்று அவர் கூறினார். விஜய் பற்றி சீமான் கூறியது என்ன? திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். “இக்கருத்து தெளிவாக இல்லை. குழப்பமான மனநிலை தான் இருக்கிறது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும். எல்லோருக்குமான அரசியல் தமிழ் தேசிய அரசியல். நான் பேசுவது பாசிசமோ, பிரிவினைவாதமோ இல்லை. நாங்கள் பேசுவது தேவையான அரசியல்” என்றார. பட மூலாதாரம்,SEEMAN படக்குறிப்பு, “திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது" என்கிறார் சீமான் மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரே தராசில் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். “திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. எங்களின் ஒரே அரசியல் எதிரி திமுக” என்று சீமான் கூறினார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் கருத்து குறித்துப் பேசிய சீமான், “தனக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என நிரூபித்தால்தான் கூட்டணிக்கு வருவார்கள். 8.2 விழுக்காடு வாக்கு வங்கி வைத்திருக்கும் நானே கூட்டணிக்கு அழைக்கவில்லை. தன் வலிமையை காட்டிய பிறகு அழைப்பதுதான் முதிர்ச்சி” என்றார். கொள்கையில் ஒத்த கருத்து இல்லாமல் கூட்டணியில் இணைய முடியாது என்று அவர் கூறினார். காங்கிரஸ் எம்.பி. கருத்து காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், "சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என ஒற்றை வரியில் பதிவிட்டுள்ளார். விஜய் பேச்சு பற்றி விசிக நிர்வாகி கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய். அவருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, அதிகாரத்தில் அனைவருக்கும் சம பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை விஜய் உணர்ந்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் என்றும் தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy11ywgqe2o
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீட்டில் இலக்கத்தகடு அற்ற வாகனம் மீட்பு - எனக்கு எதுவும் தெரியாது என்கின்றார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மிரிஹானவில் இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை நிராகரித்துள்ளார். சமீபத்தில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட நபர் எனக்கு தெரியாமல் அந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எனக்கு வாகனத்தின் உரிமையாளரை தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லொகான் ரத்வத்தையின் மனைவியின் இல்லத்தில் சனிக்கிழமை பதிவு செய்யப்படடாத வாகனமொன்றை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வாகனம் குறித்து விசாரணை செய்தவேளையே அது லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீடு என்பது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/197310
-
தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண் - என்ன ஆனார்?
பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி பதவி, பிபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற போது கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். அவரை சுமார் ஏழு மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவினர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 500 கிலோ எடையுள்ள பாறையை வெளியே எடுத்த போதிலும், அப்பெண் சிக்கியிருந்த “எஸ்” வடிவிலான வளைவிலிருந்து அவரை மீட்க மேலும் பல பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. லேசான காயங்களுடன் பெண் மீட்பு “மீட்புப்பணி மருத்துவ உதவியாளராக என்னுடைய 10 ஆண்டுகால பணி வாழ்க்கையில், இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை. இப்பணி சவாலான, ஆனால் மனநிறைவு தருகிற பணியாக இருந்தது,” என நியூ சௌத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவையின் மருத்துவ உதவியாளர் பீட்டர் வாட்ஸ் தெரிவித்தார். அச்சேவையின் சமூக ஊடக பக்கங்களில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பெண் தலைகீழாக இருந்துள்ளார். அவரை மீட்பதற்கு அவரின் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆம்புலன்ஸ் சேவை பகிர்ந்துள்ள புகைப்படங்கள், அப்பெண் தலைகீழாக பாறைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்ததையும், பாறைகளுக்கு நடுவே பெரிய இடைவெளியை உண்டாக்கி, அவரை மீட்க அவசர சேவை குழுவினர் மேற்கொண்ட சிக்கலான முயற்சிகளையும் காட்டுகின்றன. பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, பாறைகளை நகர்த்த இழுவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது அப்பெண் ஒரு “குதிரைப்படை வீரர்” (trooper) என, ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகத்திற்கு வாட்ஸ் அளித்த பேட்டியில் விவரித்துள்ளார். “அங்கு எப்படி அந்த பெண் சென்றார், அவரை எப்படி மீட்கப் போகிறோம் என்பதுதான் எங்கள் எல்லோருடைய கேள்வியுமாக இருந்தது?” என்று அவர் கூறியுள்ளார். நம்ப முடியாத வகையில், அப்பெண் லேசான கீறல்கள் மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, அவசர குழுவினர் ஒன்றிணைந்து பெண்ணை மீட்க வேண்டியிருந்தது அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அவரது செல்போனை மீட்க முடியவில்லை. “என்னை காப்பாற்றிய குழுவினருக்கு நன்றி, அவர்கள் உண்மையிலேயே உயிர் காப்பாளர்கள்,” என அப்பெண் இணையம் வாயிலாக தெரிவித்துள்ளார். “ஆனால், என்னுடைய செல்போனை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது.” - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89vxw1ng3do
-
தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்; சிறீதரன்
“ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி – செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத் தேவை எழுந்துள்ளது. உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக் கடமை எமக்கு தரப்பட்டுள்ளதை உணர்ந்து, கொள்கை ரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும் உழைப்பேன்.” – என்றார். https://thinakkural.lk/article/311240
-
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டோம்; சஜித் வெற்றி பெறுவதை ரணில் விரும்பவில்லை - எஸ்.எம்.மரிக்கார்.
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்த 20 இலட்ச ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். தெஹிவளை பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை. திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டோம். நடுத்தர மக்களின் நலன் பற்றி பேசும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக கூடாது என்ற நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார். ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்து விட்டார். ராஜபக்ஷர்கள் உகண்டாவில் மறைத்து வைத்துள்ள நிதியை இலங்கைக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். உகண்டா விவகாரம் தேர்தல் மேடை பிரச்சாரம் மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதாகவும், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்கு விதித்துள்ள வெற் வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆகவே ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 20 இலட்சம் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளில் பதவி துறந்தார்.அரசியல் அனுபவமில்லாத கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற கூடாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல்வாதிகளை தண்டிப்பதாக குறிப்பிடுகிறார். இந்த கொள்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/197283
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமராட்சி, அச்சுவேலி, பலாலி பகுதி மக்கள் இரண்டு கிலோமீற்றர் பயணத்தில் சென்றடைய வேண்டிய விமான நிலையம் மற்றும் சில நிமிடத்தில் அடைய வேண்டிய யாழ். நகரத்தை 34 ஆண்டுகளாகப் பல கிலோமீற்றர் பயணித்தே தமது தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர். இதனைத் தடுக்க அச்சுவேலி – வசாவிளான் வீதியில் வெறும் 400 மீற்றர் பிரதேசத்தைத் திறப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும். கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை ஒட்டிய வீதி பாதுகாப்புக் காரணத்துக்காக 15 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதனைத் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, எமது மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு 34 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீதியையும் திறக்க உடன் உத்தரவிட வேண்டும்.” – என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311243
-
மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்) எழுதியவர், ரூஹான் அகமது பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பற்றி பேசி வருகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு மத்தியில், உலகின் மூன்று பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மோதல்களுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்? கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. காஸா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இந்த பதற்றம் இரான் வரை பரவிவிட்டது. இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், இஸ்ரேல் தனது எதிரிகளான ஹெஸ்பொலா, ஹமாஸ் மற்றும் இரான் உள்ளிட்டவற்றுக்கு எதிராக வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதைக் காண முடிந்தது. லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அமைப்பின் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவரைத் தவிர, ஹெஸ்பொலாவின் பல மூத்த தலைவர்களும் இதற்கு முன்னர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் இரான் தலைநகர் டெஹ்ரானில் இதேபோன்ற ஒரு தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் காஸாவில் மட்டுமல்ல, லெபனானிலும் போரை நிறுத்த முயற்சி செய்கின்றன. ஆனால் இந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. காஸா மற்றும் லெபனானில் நடைபெறும் போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுமைக்கும் பரவக்கூடும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் அஞ்சுகின்றன. கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `போர் சூழல் யாருக்குமே நல்லது கிடையாது’ என்று கூறினார். "இந்தப் பிரச்னைக்கு ராஜதந்திர தீர்வை எட்டுவது சாத்தியம் தான். நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி ராஜதந்திர தீர்வு எட்டுவது தான் " என்று அவர் கூறினார். ஆனால் அனைத்து ஆலோசனைகளையும் மீறி, காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் இரானைத் தாக்குவதாக அச்சுறுத்தியது. வெற்றி பெறும் நோக்கத்தில் முன்னேறும் இஸ்ரேல் ராணுவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சின் விளைவாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024 இல் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மறுபுறம், கடந்த ஆண்டு காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தரைப்படை நடவடிக்கைகளின் போது பல இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தொடர்ந்து வான் வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ஹெஸ்பொலா 8000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் வீசியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகிறார். காஸா போர் தொடங்கியதில் இருந்து ஏமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இரானின் புரட்சிகர காவலர் படையின் மூத்த தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேல்தான் இருந்தது என்பது பலர் நம்பினர். மத்திய கிழக்கில் தற்காப்புக்காக இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையின் போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் `அமைதி’ தீர்வை எட்ட தயாராக உள்ளது என்று கூறினார். "ஆனால் நம் அழிவை விரும்பும் காட்டுமிராண்டித்தனமான எதிரிகளை நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அவர்களிடமிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறினார். இரானை கடுமையாக விமர்சித்த அவர், ஏழு வெவ்வேறு முனைகளில் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்றார். அவர் தனது உரையின் முடிவில், இஸ்ரேல் இந்த போரில் வெற்றி பெறும், ஏனெனில் இந்த போரில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். இஸ்ரேல் பிரதமர் உரை பட மூலாதாரம்,GETTY IMAGES லெபனான் போர் சூடுபிடிப்பதற்கு முன்பு, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலை நிறுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. சமீப காலமாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கைகளைப் பார்க்கும் போது, மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது. கடந்த மாதம் 'எக்ஸ்' தளத்தில் இரானிய மக்களுக்கு மூன்று நிமிட வீடியோ செய்தி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். "மத்திய கிழக்கில் இஸ்ரேல் அடைய முடியாத இடம் என்று எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் மக்களையும் நாட்டையும் காக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம்" என்றார். அவர் அந்த செய்தியில், ஒவ்வொரு கணமும் இரானியஅரசாங்கம் 'மரியாதைக்குரிய இரானிய மக்களை' அழிவின் பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்று கூறினார். "இறுதியாக இரான் சுதந்திரம் அடையும்" போது, எல்லாச் சூழலும் மாறி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று நெதன்யாகு கூறினார். இஸ்ரேலிய பிரதமர் மேலும் பேசுகையில், “மதவெறி பிடித்த முல்லாக்கள் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் ஒடுக்க அனுமதிக்காதீர்கள். இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை இரானிய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான மற்றும் அமைதியான எதிர்காலத்தை ஒன்றாகக் காண்போம்." என்றார். இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் இந்த தீவிர மோதல்களை நிறுத்த, உலகின் பெரும் வல்லரசுகளால் ஏன் முடியவில்லை? இந்த மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளை சமாதானப்படுத்தி போரை நிறுத்த முடியாதது ஏன்? அமெரிக்காவைத் தவிர, ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலக வல்லரசுகளால் கூட இதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான ஒத்துழையாமை, அமெரிக்காவின் உள் அரசியல் போன்ற சில காரணங்களால் இஸ்ரேல்-இரான் இடையே சமாதான உடன்படிக்கை எட்ட முடியவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா, சீனா, ரஷ்யாவால் இதைத் தடுக்க முடியாதது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 8.7 பில்லியன் டாலர் உதவிகளைப் பெற்றுள்ளது ஒருபுறம், மத்திய கிழக்கில் ஏற்படும் மோதல்களை தடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மறுபுறம், நட்பு நாடான, இஸ்ரேலுக்கு ராணுவ வலிமையை அதிகரிக்க அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை வழங்குகிறது. கடந்த மாதம், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர அமெரிக்காவிடம் இருந்து 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவிகளைப் பெற்றதாகக் கூறியது. சீன சிந்தனைக் குழுவான `Taihe’ அமைப்பின் மூத்த அதிகாரி இன்னார் டான்சின் கூறுகையில், "ஒருபுறம், அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறது, ஆனால் மறுபுறம் அது ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவை வழங்கி பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குகிறது" என்றார். அமெரிக்கா தற்போது போரை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி பேசுகிறது. ஆனால் கடந்த காலங்களில் அது ஐக்கிய நாடுகள் சபையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை தடுத்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதிநிதி மார்கரெட் மெக்லியோட் பிபிசியிடம் கூறுகையில், "ஹமாஸ் பயங்கரவாதத்தை புறக்கணித்த தீர்மானங்களையும், இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமைகளை புறக்கணித்த முடிவுகளையும் மட்டுமே நாங்கள் எதிர்த்தோம்." என்றார். மறுபுறம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற பெரிய வல்லரசுகள் மோதல்களை தடுக்க அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகின்றன. அவை மத்தியக் கிழக்கில் பதற்றத்தை குறைக்க உதவாது. ஆனால் அந்த நாடுகள் போர் சூழலை நிறுத்த எந்த நடைமுறை நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. சீனாவின் அணுகுமுறை போரை நிறுத்த உதவுமா? சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் முயற்சியால், இரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது. இதுவே சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு சிறந்த உதாரணம். லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல மூத்த ஹெஸ்பொலா தலைவர்கள் கொல்லப்பட்ட போது, சீனா லெபனானின் சுயாட்சி மற்றும் பாதுகாப்பின் மீது நிகழ்த்தப்படும் 'அத்துமீறலை' எதிர்ப்பதாகவும், பொதுமக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும் மட்டுமே கூறியது. காஸா மோதல் காரணமாக லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து சீனா கவலைப்படுவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. "சீனா இந்த மோதலுக்கு காரணமான அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல் நிலைமையை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது." என்றார். ரஷ்யாவின் பங்கு என்ன? மத்திய கிழக்கில் ரஷ்யா இரானின் முக்கிய நட்பு நாடாக உள்ளது. மத்திய கிழக்கின் நிலைமைக்காக ரஷ்ய கண்டனம் தெரிவித்த போதிலும், இதுவரை இந்த மோதலைத் தீர்ப்பதில் எந்த பயனுள்ள பங்கையும் அது வகிக்கவில்லை. கடந்த மாதம் கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டதை ரஷ்யா கண்டிப்பதாக கூறியது. இது மத்திய கிழக்கில் ஒரு பெரியளவிலானப் போர் மூள்வதற்கான அச்சத்தை அதிகரித்துள்ளது என்றும் அது கூறியது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதலை மேலும் அதிகரிக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா கண்டிக்கிறது என்றார். கடந்த 2022 இல் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்தத் தடைகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கணிசமாக மோசமடைந்துள்ளன என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ஸ்டிம்சன் மைய அதிகாரி பார்பரா ஸ்லேவன் கூறுகிறார். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் பிரச்னை இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படியிருக்கையில், மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சீனா ஏன் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து இனார் கூறுகையில், "அமெரிக்காவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ ஆணையிடும் நிலையில் சீனா இல்லை. சீனா எப்போதுமே போரை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவுகளை ஆதரிக்கிறது. 'இருநாட்டு தீர்வு' (இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பிரச்னைக்கு) வழிவகுக்கும் பேச்சுவார்த்தைகளை ஆதரித்தது." என்றார். "பல தசாப்தங்களாக இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, ஆனால் அதை ஒருபோதும் இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை, அதேநேரத்தில் மறுக்கவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ’’ என்றும் அவர் கூறினார். இஸ்ரேலில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைய என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஸ்டிம்சன் மையத்தின் அதிகாரி பார்பரா ஸ்லேவன் கூறுகையில், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கு உண்மையான அழுத்தத்தைக் கொடுக்க ஜோ பைடன் தயக்கம் காட்டுவதை நாம் அனைவரும் அறிவோம்." என்றார். பார்பரா மேலும் கூறுகையில், "அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. இந்த சமயத்தில் பைடன் அல்லது கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான முடிவுகளை முன்மொழிவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது டிரம்ப் மீண்டும் அதிபராக வரும் சாத்தியங்களை அதிகரிக்கும்” என்றார். "கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு பல நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.” என்ற பார்பரா , "கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், காஸா மற்றும் லெபனானில் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கும். " என்று கூறினார். சர்வதேசத் தலைவர்கள் இரானையும் அதன் நட்பு நாடுகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவையும் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர். அப்படி பதிலடி கொடுக்கும் பட்சத்தில் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும். இரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒரு கூட்டு அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு இரானை வலியுறுத்தியது, ஆனால் இரான் இந்த கோரிக்கையை நிராகரித்தது. லெபனானில் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர், இரான் தனது ராணுவத்தை லெபனான் அல்லது காஸாவிற்கு அனுப்பாது என்று இரான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. லெபனான் மற்றும் பாலத்தீனத்தில் இருக்கும் படைகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனும் வலிமையும் கொண்டிருப்பதால், இரானிய பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நசீர் கனானி தெரிவித்தார். மறுபுறம், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்க நிர்வாகமும் நம்புகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதிநிதி மார்கரெட் மெக்லியோட், "போர் நிறுத்தம் ஏற்படும் வரை, அமெரிக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று நான் கூறமாட்டேன்." என்று கூறியுள்ளார். "இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு ராஜதந்திரம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறினார். இஸ்ரேல் மற்றும் லெபனானில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக அவர் விவரித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கிற்கு 11 பயணங்களை மேற்கொண்டுள்ளார், ஏனெனில் இந்த பிரச்னையை ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78ddvgyp1xo